All over india news


free talk news

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன்! #maduranthakam #byeelection #byeelection2026 #dmk #paranthanaman

1 day ago | [YT] | 7

free talk news

நியாய விலைக் கடைகளில் பற்றாக்குறைவாக உள்ள விற்பனையாளர்கள் விரைவில் புதிய விற்பனையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் பேட்டி




செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அரிசி. சர்க்கரை கோதுமை துவரம் பருப்பு.உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சேமிப்பு கிடங்கு ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 1. கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டது ஏற்கனவே உள்ள சேமிப்பு கிடங்கு பழுது காரணமாக வரும் காலம் மழை காலம் என்பதால் அரிசி சர்க்கரை கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வைப்பதற்காக கட்டி முடிக்கப்பட்டு இருந்த சேமிப்பு கிடங்கை உணவு பாதுகாப்பு துறை. குடிமை பொருள் துறை அமைச்சர் வெங்கட்ராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் உடன் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் மண்டல மேலாளர் துறை சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன் இந்த அரசு பொறுப்பு ஏற்றவுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவது ஆய்வு செய்து விரைந்து கட்டி முடிக்க உத்தரவிட்டத்தின் பேரில் பல்வேறு திட்டங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளது பற்றாக்குறை போக்குவதற்காக புதிய விற்பனையாளர்கள் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார் என தெரிவித்தார்.

#tvkgovermant #tvk #DMK #Cheyyur #chennai #chengalpattu

2 weeks ago | [YT] | 3

free talk news

காஞ்சி தெற்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவர் அவர்களின் தாயார் படம் திறப்பு விழா நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கினார் கிராமத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவரும் கிணார் ஊராட்சி மன்ற தலைவருமான அரசு அவர்களின் தாயார் அஞ்சா அவர்களின் திருஉருவப்பட திறப்பு நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் பொன் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் MLA., அவர்கள், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அம்மையாரது திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
#DMK #dmkwink #dmknews #dmkmla #dmkhort #tvnews

2 weeks ago | [YT] | 5

free talk news

கிழக்கு கடற்கரை சாலை
விரிவாக்க பணி
கால்நடைகள் சாலை கடக்க
பாதைகள் அமைக்க வேண்டும்
செய்யூர், ஆக. 20-
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் தற்போது சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது இந்த பணியில் கிழக்கு கடற்கரை சாலையில் கால்நடைகள் சாலையை கடக்க பாதைகள் அமைத்து தர வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலை என்பது கடலோர மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாகும். இதன் வழியாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு தினசரி இருசக்கர வாகனம், கார், பேருந்து,லாரி, என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து.இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான கிராமப் பகுதியில் உள்ளதால் அப்பகுதியில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் தற்போது அமைத்து வரும் கிழக்கு கடற்கரை நான்கு வழி சாலையை கடந்து செல்ல முடியாத வழியில் சாலைகள் அமைத்து வரப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரையிலான செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை தற்போது அமைத்து வரும் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது



கிழக்கு கடற்கரை சாலையில் அமைத்து வரும் சாலை பணியில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை சாலைகளை கடக்க ஆங்காங்கே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


இந்நிலையில் கிராம மக்களின் கருத்துக்களை ஏற்காமல் கால்நடைகள் கிழக்கு கடற்கரை சாலை கடக்க முடியாத அளவுக்கு தற்போது சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளின் போது கால்நடைகள் கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் வண்ணம் ஆங்காங்கே சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது


இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக் குழுவின் சார்பில் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் செய்யூர் வட்டக்குழு உறுப்பினர் கே.முத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோரிக்கைகளை விலக்கி கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், செய்யூர் வட்ட குழு செயலாளர் க.புருஷோத்தமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ச.ஜீவானந்தம், சித்தாமூர் ஒன்றிய செயலாளர் மு.பிரதாப், லத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கோதண்டராமன், கட்சியின் வட்டக் குழு உறுப்பினர்கள் வரதராஜன், முருகன், கிளைச் செயலாளர் நைனார் குப்பம்
சதீஷ் உள்ளிட்ட பலர் பேசினர்

இதனைத் தொடர்ந்து செய்யூர் வட்ட துணை வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
#ecr #cheyyur #tvkgovermant #arpattam #check

3 weeks ago | [YT] | 2

free talk news

மதுராந்தகம் நகரில் உள்ள ஜேஜே அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் உள்ள ஜேஜே அறக்கட்டளை சார்பில் ஜேஜே அறக்கட்டளையின் 14 ஆம் ஆண்டு விழா 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நலிவடைந்த குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா என ஐம்பெரும் விழா அறக்கட்டளையின் நிறுவனர் ஜெர்லின் ஜோஸ் மற்றும் அறக்கட்டளை செயலாளர் ஞானசாந்தி ஆகிய தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக தமிழக வெற்றிக்கழக மாநில துணை பொது செயலாளர் மரகதம் குமரவேல் தமிழக வெற்றி கழக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஜேஜே அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

3 weeks ago | [YT] | 4

free talk news

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது இதில் மருத்துவக் கல்லூரியின் செயலாளர் டாக்டர் மதுமலர் குழந்தைகள் நலத்துறை துணை பேராசிரியர் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கல்லூரி அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் காசோலை வழங்கப்பட்டது மேலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் லிங்கநாதன், மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் கண்ணன், மருத்துவக் கல்லூரி உயிர் வேதியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் மருத்துவர் சக்தி தாசன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3 weeks ago | [YT] | 2

free talk news

ஒம்சக்தி இன்று 11.08.2026 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் மு.வீரப்பன் IAS அவர்களை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் 55ஆம் ஆண்டு ஆடிப்பூர விழாவிற்கு அழைத்த போது.
#mkmmaduranthakam
#melmaruvathur
#chennai
#chengalpattu
#colouter
#massage

4 weeks ago | [YT] | 8

free talk news

இடைக்கழிநாடு பேரூராட்சியில் திமுக சார்பில் முப்பெரும் விழா காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி பேரூராட்சி 11 வார்டு மன்ற உறுப்பினர் அருண்பாபு, பேரூராட்சி தொண்டர் அணி அமைப்பாளர் கலாசெல்வம் ஆகியோர் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், திமுக மற்றும் பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு விருது மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழாவாக திமுக சார்பில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர், பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுத்தஅய்யனார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள், பொதுமக்கள்,
எழுத்து மேசை, நோட்டுப், புத்தகம், மழை குடை, டார்ச் லைட், பக்கெட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் முன்னதாக
கட்சியில் சிறப்பாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு கலைஞர் விருதும் பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 month ago | [YT] | 10

free talk news

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாம்பாக்கம் பகுதியில் கேசவன் என்பவர் வீட்டின் அருகே உள்ள தென்னை மரங்கள் தென்னங்கீற்று வெட்டுவதற்காக இலத்தூர் ஒன்றியம் பேக்கரணை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்லமுத்து என்பவர் தென்னங்கீற்று வெட்டுவதற்காக வந்துள்ளார் செல்லமுத்து தென்னை மரம் ஏரி தென்னங்கீற்று வெட்டிக் கொண்டிருந்தபோது அருகில் சென்ற மின் ஒயரில் கத்தி பட்டதில் மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டார் காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் பிரேத த்தை உடனே கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Coolie
#farmerdeath #tamilnadu #maduranthakam #eb

1 month ago | [YT] | 0