Zoom in Zone - Tamil Maalai

WELCOME TO ZOOM IN ZONE!
The ancient treasure of Tamil Sangam Literature & Bhakti Literature. Tamil Bhakti Literature is a divine treasure that has shone as a spiritual lamp for thousands of years.
On our channel, we beautifully bring Sangam-era poems to you in the form of modern narrations, stories, music, and visuals.

On this channel, you will find:
✨ Saiva Bhakti Songs – Thiruvasagam, Thevaram, Thirukovaiyar, Periyapuranam
✨ Vaishnava Bhakti Songs – Thiruppavai, Nalayira Divya Prabandham
✨ Murugan Devotional Songs – Thiruppugazh, Kandar Anuboothi, Shasti Kavasam
✨ Amman Devotional Songs – Abirami Andhadhi, Mangala Songs of the Goddess
✨ Special Songs for Festivals

🎶 A colorful world of songs and stories!
🐾 Zoom In Zone – !Treasure of Tamil Sangam Literature

👉 Subscribe now 🔔
New Tamil Devotional Songs, Bhakti Padalgal, Tamil Spiritual Stories, Bhakti Literature Songs are uploaded every day.


Zoom in Zone - Tamil Maalai

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

4 months ago | [YT] | 0

Zoom in Zone - Tamil Maalai

அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

4 months ago | [YT] | 1

Zoom in Zone - Tamil Maalai

மார்கழி 26 ஆம் நாள் பாடல் | #thiruvempavai #margazhi

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

4 months ago | [YT] | 0

Zoom in Zone - Tamil Maalai

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

மார்கழி 25 ஆம் நாள் பாடல்| Thiruvempavai Pasuram25 #thiruvempavai #margazhi

4 months ago | [YT] | 2

Zoom in Zone - Tamil Maalai

மார்கழி 20 ஆம் நாள் பாடல்| Thiruvempavai Pasuram20 #thiruvempavai #margazhi

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

4 months ago | [YT] | 1

Zoom in Zone - Tamil Maalai

மார்கழி 23 ஆம் நாள் பாடல்| Thiruvempavai Pasuram23 #thiruvempavai #margazhi

கூவின பூங்குயில்; கூவின கோழி;
      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
      ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

5 months ago | [YT] | 1

Zoom in Zone - Tamil Maalai

மார்கழி 22 ஆம் நாள் பாடல்| Thiruvempavai Pasuram22 #thiruvempavai #margazhi

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

5 months ago | [YT] | 1

Zoom in Zone - Tamil Maalai

போற்றி ! என் வாழ்முதலாகிய | திருப்பள்ளியெழுச்சி 21 ஆம் நாள் பாடல் | #thirupalliyezhuchi #thiruvempavai #margazhi

போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
      புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
      எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

5 months ago (edited) | [YT] | 1

Zoom in Zone - Tamil Maalai

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

6 months ago | [YT] | 2