ஏழை, மக்களுடையவும் - பாமர மக்களுடையவும் - தாழ்த்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுடையவும் நன்மைக்கும் - சமத்துவத்துக்கும் சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணம் என்று இருந்தாலும், இப்போது எல்லா மக்களுடைய சாந்திக்கும் - கவலையற்ற தன்மைக்கும் பாடுபட வேண்டுமென்ற லட்சியத்தைக் கொண்டிருக்கிறது.
- தந்தை பெரியார் (பொன்மொழிகள்)
திராவிட இயக்கம் நிலப்பரப்பை சார்ந்த இயக்கம் கிடையாது. திராவிட இயக்க கொள்கையாளன் நிலப்பரப்பில் சுருங்கிக்கொள்பவனும் கிடையாது. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நமக்கான இலட்சியங்கள் இருக்கின்றன. ஆனால், நமது சிந்தனைகளும் கருத்துக்களும் உலகளாவியவை. பெரியாரையும் திராவிட இயக்க கருத்துக்களையும் பன்மொழியில் எடுத்துச்செல்ல வேண்டிய தேவை நிச்சயம் இருக்கின்றது!
இந்தியா என்றால் ஆரியம்; ஆரியம் என்றால் பாரதம். பாரதம் என்றாலே இந்துமதம் என்பது ஆரியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கானல் நீர் தோற்றம். இந்து மதம் என்பது ஓர் இறைக் கொள்கைவழிப்பட்ட மதம் அல்ல. இந்து மதம் என்னும் பெயர், இந்தியாவில் வாழும் அனைத்து இனமக்களின், பல்வேறு வகைப்பட்ட மத நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் உள்ளடக்கிய மதமாகக் கூறப்படுகிறது.
நம்முடன் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள், எந்தக் காளியை, துர்க்கையை, காடனை, வேடனைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்களோ, அதுவும் சேர்ந்ததுதான் இந்து மதம் ஆகும். இந்து மதம் என்னும் பெயரைக் கொண்டு, மதத்தின் பேரால் அனைத்து மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்திப் புரோகிதராகத் தாம் பிழைப்பதற்காக உருவாக்கிக் கொண்டதே அது. இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி வாழ்வு பெற்றவர்கள் பார்ப்பனர்களே! இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இந்துக்கள்தான் அவர்களுடைய எண்ணத்தின்படி. பவுத்தர், சீக்கியர் முதலா னோரையும் இந்து மதப் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தனர் முன்னர். பின்னரே அவர்கள் தமது தனித்தன்மையை எடுத்துக்கூறி, தனி மதமாக அறிவித்துக் கொண்டனர்.
- பேராசிரியர் க. அன்பழகன் (நூல்: திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் தேவையும்)
எதிர்த்து அழிப்பது, உள்வாங்கி செரிப்பது இரண்டுமே எதிரிகளின் வரலாற்று உத்தி. திராவிடர் இயக்கத்தை இன்று வரை எதிர்த்தும் அழிக்கமுடியவில்லை, உள்வாங்கியும் செரிக்க முடியவில்லை. நாமும் கொள்கையில் விழிப்புடன் இருப்போம்.
வெற்றி என்பது ஒரு நாளில் கிடைத்துவிடாது. அதற்கு பின்னால் பல நாள் உழைப்பு இருக்கின்றது. இன்னும் ஆழமாக பார்த்தால், வெற்றி தோல்வியை எண்ணி நம் தலைவர்கள் உழைக்கவில்லை. அவர்களது உழைப்பு ஒரு இலட்சியத்தை ஒட்டி இருந்தது. அதனால் தான் அவர்கள் தோல்வியிலும் துவழாமல் தங்கள் இலட்சிய பயணத்தை தொடர்ந்தார்கள். ஒவ்வொரு தனி மனிதர்களையும் ஏதோ ஒரு இலட்சிய உணர்வே உந்திச்செல்கிறது. இயக்கிக்கொண்டிருக்கிறது!
தத்துவங்களாலும், பரப்புரைகளாலும் செய்ய முடியாத சில சாதனைகளை அறிவியல் கண்டுபிடிப்புகள் எளிமையாக செய்திருக்கின்றன. “மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே.” என்னும் கலைவானர் என்.எஸ்.கே அவர்களின் புகழ்பெற்ற வரிகள் இதை எளிமையாக உணர்த்தும். படிப்பு என்பது எல்லோருக்குமானதில்லை என்று “மறை”த்து வைத்திருந்த காலத்தில் இருந்து, இன்று நம் குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிவும் விரல்நுனியில் கிடைக்கும் காலத்தில் இருக்கிறோம். இயந்திரமயமாக்கல் இன்னமும் வேண்டும். மனிதனின் உழைப்பை சுரண்டும், சுயமரியாதையை தடுக்கும் அனைத்து வேலைகளும் அறிவியலால் களையப்பட வேண்டும்!
ஒரு மாதம், திராவிட வாசிப்பு மின்னிதழை, அறிவியல் சிறப்பிதழாக கொண்டு வரலாம் என்று மருத்துவர் Sen Balan பல நாட்களாக சொல்லி வந்தார். அரசியல் கட்டுரைகள் என்றால், உடனே கேட்டு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அறிவியல் குறித்து யார் எழுதுவார்கள் என்கிற சின்ன அய்யம் மனதில் இருந்தது. ஆனால், இம்முறை அவர் சொன்னதும், செய்து விடலாம் என குதித்தாயிற்று. நண்பர்களையே முதலில் அனுகினோம். எல்லாருமே ஏதோ ஒரு வகையில் அறிவியல் சார்ந்த துறைகளில் வேலைப்பார்ப்பவர்களோ அல்லது ஈடுபாடு கொண்டவர்களாகவோ இருந்தார்கள் என்பதால் இது சுலபமாயிற்று. குறிப்பாக, இந்த இதழுக்கு முதல் கட்டுரையை தந்தவர் குரு Mariano Anto Bruno. அறிவியலையும் கலையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அற்புதமான கட்டுரை அது. ஒரு பள்ளி மாணவனுக்கும் புரியும் வண்ணம் அவர் பாணியில் எழுதி இருப்பது சிறப்பு. அடுத்ததாக, மருத்துவர் சென் பாலன், பெரியாரின் அறிவியல் பார்வை என்ற கட்டுரையை தந்தார். அவர் பெரியார் வாசகர் வட்டத்தில் இதே தலைப்பில் பேசிக் கேட்டு இருக்கிறேன். அதையே சற்று விரிவாக அழகாக எழுதிதந்திருக்கிறார். முகநூலில் அறிமுகம் ஆனாலும், தொடர்ச்சியாக மிகநல்ல பதிவுகளை எழுதிவரும் மருத்துவர் அரவிந்த ராஜ் அவர்களை கேட்டவுடன், நிச்சயம் தருகிறேன் என ஒத்துக்கொண்டு, திருமணத்திற்கு தடையாக இருக்கும் சில மூடநம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாக விளக்கி இருக்கிறார். இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் நுண்ணியர்கள் குறித்து ஒரு எளிய அறிமுகத்தை Pushpalatha Poongodi எழுதித்தந்தார். மருத்துவர் Raiz Raiz அவர்களிடம் இருந்து இரண்டு பதிவுகள். முதலாவது அவர் அனுப்பி இருந்தார். இரண்டாவது அவர் எழுதிய சிறுகதை “தகுதி”, அதை வாசித்த உடனேயே அவரிடம் அனுமதி பெற்று அதையும் சேர்த்தாயிற்று. எனது பள்ளித்தோழரும் எழுத்தாளருமான Aruna Subramanian, தான் வாசித்த அறிவியல் புத்தகத்தில் இருந்து உணர்ந்தை, கவிதைகளாக மாற்றித்தந்தார். சுடச்சுட அதை வாசிக்க அத்தனை அருமையாக இருந்தது. அவரது, அறிமுகம் தான் எழுத்தாளர் ராம்பிரசாத். அவரின் “கடவுளை தேடி” சிறுகதையையும் இந்த இதழில் சேர்த்திருக்கிறோம். மிக அருமையான அறிவியல் புனைவு அது. MRI குறித்த விரிவான ஒரு கட்டுரையை தந்தார் முனைவர் அன்புச்செல்வன். வாசகர்களிடம் எழுதக்கேட்டு இருந்தோம். அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அனுப்பி இருந்தார்கள். அதையும் சேர்த்திருக்கிறோம். ஆச்சரியமாக Nithyanandam Vms அவர்கள் ஒரு அருமையான சிறு கட்டுரையை அனுப்பி இருந்தார். நான் மதிக்கும் திராவிட பற்றாளர்களில் ஒருவரான ஆசிப் நியாஜ் அவர்கள் குரான் குறித்தும் இஸ்லாம் குறித்தும் ஓர் நெடிய ஆய்வுக்கட்டுரையை எழுதித்தந்திருக்கிறார். அய்யா.பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் உரைகளில் மிக முக்கியமானது, அவரின் “ஆன்மிகமா, அறிவியலா?” சொற்பொழிவு. அதிலிருந்து முக்கிய பகுதிகளை இந்த இதழில் தந்திருக்கிறோம். திராவிட வாசிப்பை தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் Thamarai Selvi அவர்களிடம், கேட்டவுடனேயே “அறிவியல் - அரசியல் - பகுத்தறிவு” என்று அருமையான ஒரு கட்டுரையை தந்தார். அன்றாடம் வாழ்வில் பெரியாரியம் என்று எழுதிவரும் தொடரில், Kanimozhi MV அவர்கள் பெரியாரின் அறிவியல் சிந்தனைகளை தொட்டு எழுதி இருக்கிறார். குழந்தைகளும் நானும் தொடரில், குழந்தைகளும் கடிதங்களும் என்கிற அழகான உணர்வை பிரதிபலிக்கும் கட்டுரையை Eniyan Ramamoorthy தந்திருக்கிறார். தேர்தல் அரசியலும், இயக்க அரசியலும் என்கிற Bilal Aliyar அவர்களின் கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
மொத்தத்தில், இந்த இதழ் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என நிச்சயம் சொல்லலாம்.
இதழை சிறப்பாக வெளிவர உழைத்த திராவிட வாசிப்பு Editorial team ற்கு எத்தனை நன்றிகளை சொன்னாலும் தகும். அனைவருக்கும் நன்றிகள்.
Dravida Vaasippu - திராவிட வாசிப்பு
ஏழை, மக்களுடையவும் - பாமர மக்களுடையவும் - தாழ்த்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுடையவும் நன்மைக்கும் - சமத்துவத்துக்கும் சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணம் என்று இருந்தாலும், இப்போது எல்லா மக்களுடைய சாந்திக்கும் - கவலையற்ற தன்மைக்கும் பாடுபட வேண்டுமென்ற லட்சியத்தைக் கொண்டிருக்கிறது.
- தந்தை பெரியார் (பொன்மொழிகள்)
திராவிட இயக்கம் நிலப்பரப்பை சார்ந்த இயக்கம் கிடையாது. திராவிட இயக்க கொள்கையாளன் நிலப்பரப்பில் சுருங்கிக்கொள்பவனும் கிடையாது. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நமக்கான இலட்சியங்கள் இருக்கின்றன. ஆனால், நமது சிந்தனைகளும் கருத்துக்களும் உலகளாவியவை. பெரியாரையும் திராவிட இயக்க கருத்துக்களையும் பன்மொழியில் எடுத்துச்செல்ல வேண்டிய தேவை நிச்சயம் இருக்கின்றது!
#TheDailyDravidam
March 31, 2023
3 years ago | [YT] | 0
View 0 replies
Dravida Vaasippu - திராவிட வாசிப்பு
இந்தியா என்றால் ஆரியம்; ஆரியம் என்றால் பாரதம். பாரதம் என்றாலே இந்துமதம் என்பது ஆரியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கானல் நீர் தோற்றம். இந்து மதம் என்பது ஓர் இறைக் கொள்கைவழிப்பட்ட மதம் அல்ல. இந்து மதம் என்னும் பெயர், இந்தியாவில் வாழும் அனைத்து இனமக்களின், பல்வேறு வகைப்பட்ட மத நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் உள்ளடக்கிய மதமாகக் கூறப்படுகிறது.
நம்முடன் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள், எந்தக் காளியை, துர்க்கையை, காடனை, வேடனைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்களோ, அதுவும் சேர்ந்ததுதான் இந்து மதம் ஆகும். இந்து மதம் என்னும் பெயரைக் கொண்டு, மதத்தின் பேரால் அனைத்து மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்திப் புரோகிதராகத் தாம் பிழைப்பதற்காக உருவாக்கிக் கொண்டதே அது. இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி வாழ்வு பெற்றவர்கள் பார்ப்பனர்களே! இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இந்துக்கள்தான் அவர்களுடைய எண்ணத்தின்படி. பவுத்தர், சீக்கியர் முதலா னோரையும் இந்து மதப் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தனர் முன்னர். பின்னரே அவர்கள் தமது தனித்தன்மையை எடுத்துக்கூறி, தனி மதமாக அறிவித்துக் கொண்டனர்.
- பேராசிரியர் க. அன்பழகன் (நூல்: திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் தேவையும்)
எதிர்த்து அழிப்பது, உள்வாங்கி செரிப்பது இரண்டுமே எதிரிகளின் வரலாற்று உத்தி. திராவிடர் இயக்கத்தை இன்று வரை எதிர்த்தும் அழிக்கமுடியவில்லை, உள்வாங்கியும் செரிக்க முடியவில்லை. நாமும் கொள்கையில் விழிப்புடன் இருப்போம்.
#TheDailyDravidam
March 29, 2023
3 years ago | [YT] | 1
View 0 replies
Dravida Vaasippu - திராவிட வாசிப்பு
வெற்றி என்பது ஒரு நாளில் கிடைத்துவிடாது. அதற்கு பின்னால் பல நாள் உழைப்பு இருக்கின்றது. இன்னும் ஆழமாக பார்த்தால், வெற்றி தோல்வியை எண்ணி நம் தலைவர்கள் உழைக்கவில்லை. அவர்களது உழைப்பு ஒரு இலட்சியத்தை ஒட்டி இருந்தது. அதனால் தான் அவர்கள் தோல்வியிலும் துவழாமல் தங்கள் இலட்சிய பயணத்தை தொடர்ந்தார்கள். ஒவ்வொரு தனி மனிதர்களையும் ஏதோ ஒரு இலட்சிய உணர்வே உந்திச்செல்கிறது. இயக்கிக்கொண்டிருக்கிறது!
#TheDailyDravidam
August 03, 2022
4 years ago | [YT] | 0
View 0 replies
Dravida Vaasippu - திராவிட வாசிப்பு
தத்துவங்களாலும், பரப்புரைகளாலும் செய்ய முடியாத சில சாதனைகளை அறிவியல் கண்டுபிடிப்புகள் எளிமையாக செய்திருக்கின்றன. “மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே.” என்னும் கலைவானர் என்.எஸ்.கே அவர்களின் புகழ்பெற்ற வரிகள் இதை எளிமையாக உணர்த்தும். படிப்பு என்பது எல்லோருக்குமானதில்லை என்று “மறை”த்து வைத்திருந்த காலத்தில் இருந்து, இன்று நம் குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிவும் விரல்நுனியில் கிடைக்கும் காலத்தில் இருக்கிறோம். இயந்திரமயமாக்கல் இன்னமும் வேண்டும். மனிதனின் உழைப்பை சுரண்டும், சுயமரியாதையை தடுக்கும் அனைத்து வேலைகளும் அறிவியலால் களையப்பட வேண்டும்!
#TheDailyDravidam
- August 2, 2022
4 years ago | [YT] | 0
View 0 replies
Dravida Vaasippu - திராவிட வாசிப்பு
ஒரு மாதம், திராவிட வாசிப்பு மின்னிதழை, அறிவியல் சிறப்பிதழாக கொண்டு வரலாம் என்று மருத்துவர் Sen Balan பல நாட்களாக சொல்லி வந்தார். அரசியல் கட்டுரைகள் என்றால், உடனே கேட்டு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அறிவியல் குறித்து யார் எழுதுவார்கள் என்கிற சின்ன அய்யம் மனதில் இருந்தது. ஆனால், இம்முறை அவர் சொன்னதும், செய்து விடலாம் என குதித்தாயிற்று. நண்பர்களையே முதலில் அனுகினோம். எல்லாருமே ஏதோ ஒரு வகையில் அறிவியல் சார்ந்த துறைகளில் வேலைப்பார்ப்பவர்களோ அல்லது ஈடுபாடு கொண்டவர்களாகவோ இருந்தார்கள் என்பதால் இது சுலபமாயிற்று. குறிப்பாக, இந்த இதழுக்கு முதல் கட்டுரையை தந்தவர் குரு Mariano Anto Bruno. அறிவியலையும் கலையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அற்புதமான கட்டுரை அது. ஒரு பள்ளி மாணவனுக்கும் புரியும் வண்ணம் அவர் பாணியில் எழுதி இருப்பது சிறப்பு. அடுத்ததாக, மருத்துவர் சென் பாலன், பெரியாரின் அறிவியல் பார்வை என்ற கட்டுரையை தந்தார். அவர் பெரியார் வாசகர் வட்டத்தில் இதே தலைப்பில் பேசிக் கேட்டு இருக்கிறேன். அதையே சற்று விரிவாக அழகாக எழுதிதந்திருக்கிறார். முகநூலில் அறிமுகம் ஆனாலும், தொடர்ச்சியாக மிகநல்ல பதிவுகளை எழுதிவரும் மருத்துவர் அரவிந்த ராஜ் அவர்களை கேட்டவுடன், நிச்சயம் தருகிறேன் என ஒத்துக்கொண்டு, திருமணத்திற்கு தடையாக இருக்கும் சில மூடநம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாக விளக்கி இருக்கிறார். இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் நுண்ணியர்கள் குறித்து ஒரு எளிய அறிமுகத்தை Pushpalatha Poongodi எழுதித்தந்தார். மருத்துவர் Raiz Raiz அவர்களிடம் இருந்து இரண்டு பதிவுகள். முதலாவது அவர் அனுப்பி இருந்தார். இரண்டாவது அவர் எழுதிய சிறுகதை “தகுதி”, அதை வாசித்த உடனேயே அவரிடம் அனுமதி பெற்று அதையும் சேர்த்தாயிற்று. எனது பள்ளித்தோழரும் எழுத்தாளருமான Aruna Subramanian, தான் வாசித்த அறிவியல் புத்தகத்தில் இருந்து உணர்ந்தை, கவிதைகளாக மாற்றித்தந்தார். சுடச்சுட அதை வாசிக்க அத்தனை அருமையாக இருந்தது. அவரது, அறிமுகம் தான் எழுத்தாளர் ராம்பிரசாத். அவரின் “கடவுளை தேடி” சிறுகதையையும் இந்த இதழில் சேர்த்திருக்கிறோம். மிக அருமையான அறிவியல் புனைவு அது. MRI குறித்த விரிவான ஒரு கட்டுரையை தந்தார் முனைவர் அன்புச்செல்வன். வாசகர்களிடம் எழுதக்கேட்டு இருந்தோம். அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அனுப்பி இருந்தார்கள். அதையும் சேர்த்திருக்கிறோம். ஆச்சரியமாக Nithyanandam Vms அவர்கள் ஒரு அருமையான சிறு கட்டுரையை அனுப்பி இருந்தார். நான் மதிக்கும் திராவிட பற்றாளர்களில் ஒருவரான ஆசிப் நியாஜ் அவர்கள் குரான் குறித்தும் இஸ்லாம் குறித்தும் ஓர் நெடிய ஆய்வுக்கட்டுரையை எழுதித்தந்திருக்கிறார். அய்யா.பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் உரைகளில் மிக முக்கியமானது, அவரின் “ஆன்மிகமா, அறிவியலா?” சொற்பொழிவு. அதிலிருந்து முக்கிய பகுதிகளை இந்த இதழில் தந்திருக்கிறோம். திராவிட வாசிப்பை தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் Thamarai Selvi அவர்களிடம், கேட்டவுடனேயே “அறிவியல் - அரசியல் - பகுத்தறிவு” என்று அருமையான ஒரு கட்டுரையை தந்தார். அன்றாடம் வாழ்வில் பெரியாரியம் என்று எழுதிவரும் தொடரில், Kanimozhi MV அவர்கள் பெரியாரின் அறிவியல் சிந்தனைகளை தொட்டு எழுதி இருக்கிறார். குழந்தைகளும் நானும் தொடரில், குழந்தைகளும் கடிதங்களும் என்கிற அழகான உணர்வை பிரதிபலிக்கும் கட்டுரையை Eniyan Ramamoorthy தந்திருக்கிறார். தேர்தல் அரசியலும், இயக்க அரசியலும் என்கிற Bilal Aliyar அவர்களின் கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
மொத்தத்தில், இந்த இதழ் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என நிச்சயம் சொல்லலாம்.
இதழை சிறப்பாக வெளிவர உழைத்த திராவிட வாசிப்பு Editorial team ற்கு எத்தனை நன்றிகளை சொன்னாலும் தகும். அனைவருக்கும் நன்றிகள்.
இதழை படிக்க: blog.dravidiansearch.com/2020/10/blog-post.html?m=…
5 years ago | [YT] | 2
View 1 reply