Hi, I am collecting ₹10,000 each from 100 well-wishers to help poor students who passed SSLC/12th. Your help can change their life. Full details and proof will be given. Can you support or forward this to others?
+917373423331 or +6598619926 My phone paye number
youtube.com/@velunaciyar thanks for your support.
Singapore Ragupathi
My future
4 months ago | [YT] | 2
View 0 replies
Singapore Ragupathi
🌍 One Day, The World Will Know My Name 💥
I'm not here to compete.
I'm here to create my own path.
From small beginnings to big dreams
Every step I take is for my family, my future, and my name.
Stay tuned… this is just the beginning. 🙏🔥
📸 #RaguOnTheRise
🛠️ #WorkInProgress
🌟 #OneDayWorldFamous
#BelieveInYourself #TamilPasanga #SingaporeToWorld #FamilyFirst #LegacyMoves #RiseWithPurpose
5 months ago | [YT] | 1
View 0 replies
Singapore Ragupathi
யார் எழுதியது என்று தெரியவில்லை 👇🏻
பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’ பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.
அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.
அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.
அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.
ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.
பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் தன் விழிகளை பதிக்காமல் பாதையை கடப்பாது கடினம்,
ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது. ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.
சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது. கதை👇
நடுத்தர குடும்ப பெண்ணுக்கு, வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.
மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.
மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள், நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார், வலியால் துடிக்கிறாள்,
இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.
பின் பெண்ணின் மார்பை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.
அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.
காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.
இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.
மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.
இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.
ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.
ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.
ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.
“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.
அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.
இப்படியாகக் கதை முடிகிறது.
இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது.
அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.
அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.
நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.
யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.
அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.
என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.
ஒருவேளை இக்கதையைப் படித்தால்
“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.
அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.
பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.
#Nature #History #Wildlife #AncientCivilizations #HistoricPlaces #NaturalWonders #ExploreThePast #DiscoverNature #EarthBeauty #LegendsAndMysteries #Adventure #HistoricalFacts #NatureLover #TimeTravel #LostWorlds
Nature & Wildlife 🌿🌍
#NaturePhotography #WildlifeExploration #UntouchedNature #BeautifulLandscapes #NatureDocumentary #ForestsOfTheWorld #OceanMysteries #RareAnimals #NationalParks #EarthWonders
History & Ancient Civilizations 🏺📜
#AncientHistory #ForgottenCivilizations #LostEmpires #HistoricalMysteries #ArchaeologyDiscoveries #MedievalLegends #HistoricSites #TimeCapsule #AncientArtifacts #MythAndHistory
Travel & Exploration ✈️🏕️
#HiddenHistory #TravelBackInTime #AdventureAwaits #MysticalPlaces #AbandonedPlaces #HistoricLandmarks #TimelessBeauty #WorldHeritageSites
Legends & Myths 🔥👑
#LostCities #MythologicalHistory #EpicLegends #FolkTales #HistoricalFigures #SecretsOfThePast #EnigmaticPlaces
🌿 Nature & Wildlife (Specific Environments & Creatures)
#AmazonRainforest #DeepSeaMysteries #RareBirdsOfTheWorld #DesertWildlife #FrozenWorlds #CoralReefExploration #MountainEcosystems #WildlifeConservation #EndangeredSpecies #SecretsofNature
🏺 Ancient Civilizations (Focused on Specific Cultures & Periods)
#AncientEgypt #LostCityOfAtlantis #MayanRuins #RomanEmpireHistory #GreekMythology #MedievalEurope #VikingHistory #SamuraiLegends #IndianHeritage #ChineseDynasties
🏰 Historic Events & Mysteries (Famous Eras & Untold Stories)
#WorldWarHistory #RenaissanceEra #DarkAges #VictorianLondon #SpartanWarriors #HistoricalBattles #AncientWarfare #LegendsOfThePast #ForgottenKings #HauntedHistory
📍 Travel & Exploration (Famous Landmarks & Unexplored Places)
#MachuPicchuSecrets #PetraJordan #PyramidsOfGiza #StonehengeMystery #GreatWallChina #EasterIslandMoai #AbandonedCastles #SacredSites #HistoricalMonuments #AncientTemples
🔮 Legends, Myths & Folklore (Mysterious & Mythological Themes)
#BermudaTriangleMystery #KingArthurLegend #AtlantisMyth #EgyptianGods #LostTreasure #NativeAmericanLegends #CelticMythology #HauntedCastles #SupernaturalHistory #LegendaryWarriors
8 months ago (edited) | [YT] | 1
View 0 replies
Singapore Ragupathi
Happy deepawali to all family members and friends
1 year ago | [YT] | 2
View 0 replies
Singapore Ragupathi
ஆண்கள் அதிகம் விரும்புவது மதுவா ?? மாதுவா? சூதுவா???
ஆண்கள் அதிகம் விரும்புவது நிம்மதியான தூக்கத்தை தான்.
சண்டை இல்லாத வீடு
சமைக்க தெரிந்த மனைவி
பொறுப்பான குழந்தைகள்
முடிவுகளில் மூக்கை நுழைக்காத பெற்றோர்/ உறவினர்கள்
நிம்மதியான தூக்கம்.
இந்த ஐந்தும் தான் ஆண் மகனின் விருப்பமாக இருக்கிறது. இந்த ஐந்தாவதை பெற வேண்டுமானால் மேற்சொன்ன நான்கும் கிடைத்திருக்க வேண்டும்.
முதல் நான்கில் முக்கால்வாசியேனும் பூர்த்தியடைய நல்ல புரிதல் உள்ள இல்லாள் அவசியம் தேவை.
எனவே கூட்டி கழித்து பார்த்தால் ஆண்கள் அதிகம் விரும்புவது மதுவையும் அல்ல மாதுவையும் அல்ல சூதுவையும் அல்ல நல்ல மனைவியை தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.......
1 year ago | [YT] | 0
View 0 replies
Singapore Ragupathi
திருமணமே வேண்டாம் என்று சொல்பவர்கள்...
ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் செய்யாமல் கொஞ்ச நாளைக்கு நல்ல வாழலாம்....
ஆனால் கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள யாருமே இருக்க மாட்டாங்க. உங்களிடம் பேசுவதற்கு கூட விரும்பமாட்டார்கள். ரொம்ப கொடுமையா இருக்கும்.
உங்கள் கணவன் அல்லது மனைவி மட்டுமே இருப்பார். இதுக்காகவா திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்காதீர்கள். ஆனால் இதுக்காகவாது திருமணம் செய்து கொள்ளுங்கள். உடம்பில் ஆரோக்கியம் இருக்கிறவரைக்கும் தான் இந்த தனிமையில் வாழறதுக்கு தைரியம் இருக்கும்.
முதுமை வந்து நடைகள் தளரும் போது தான் யோசிப்பிங்க நமக்கென்று ஒருவள்/ ஒருவன் தாங்கி செல்ல இருந்திருக்கலாமோ என்று. அப்போ தேடினாலும் யாரும் வர மாட்டாங்க.
இப்படி புலம்புபவர்கள் நிறைய பேரை பார்த்துவிட்டேன்.
தவிச்ச வாய்க்கு தண்ணி தர யாரும் இருக்க மாட்டாங்க....
ஒருவேளை சோற்றுக்கு கூட உறவுக்காரர்களை நம்பித்தான் இருக்க வேண்டும்....
எவ்ளோ தான் நீங்க காசு வச்சிருந்தாலும் பார்க்க வருகிறவர்கள் உங்க காசுக்காக மட்டுமே வருவார்கள்.
உங்களிடம் காசு இல்லை என்றால் அவர்களும் வருவதை நிறுத்தி விடுவார்கள்...
கடைசி காலத்தில் நீங்கள் இறக்கும் போது உங்களிடம் பணம் இருந்தால் உங்களை நல்லடக்கம் செய்வார்கள்..
உங்களிடம் பணம் இல்லை என்றால் நீங்கள் ஒரு அனாதை பிணம் தான்.
அதனால் நல்ல துணையை தேடி திருமணம் செய்து கொள்ளுங்கள். குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
1 year ago | [YT] | 1
View 0 replies
Singapore Ragupathi
ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.
முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.
இப்படிதான் ஒருநாள்.
ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.
இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்
இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.
மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார்
மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.
தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.
காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.
இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
1 year ago | [YT] | 1
View 0 replies
Singapore Ragupathi
❤️ஒரு கணவன் தன் பொறுப்பற்ற மனைவிக்கு எழுதிய அழகான கடிதம்...
( Wife)
அன்புள்ள மனைவியே நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் அதற்கு சாட்சியாக நமக்கு இரண்டு அழகான குழந்தைகள் அரசால ஆண் ஒன்றும் வீட்டிற்கு மகாலட்சுமி ஒன்றும் என நம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்...
நான் காலையில் சென்றால் மாலையில் திரும்புகிறேன் வெளியில் சென்றாலும் நீ மற்றும் நம் குழந்தைகளுடைய நினைவுகளுடன் தான் நான் வாழ்கிறேன்... நீ வீட்டில் தனியாக இருக்கிறாய் என்பதற்காக உனக்கு என் தகுதிக்கு மீறி அழகிய விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்துள்ளேன்....
அதேபோல நீ தேவைப்படுவதையும் உடனடியாகவும் வாங்கிக் கொடுக்கிறேன்... உன்னை ராணியாக பார்த்துக் கொள்கிறேன் ... ஆனால் உன் மனம் ஏனோ என்னை தேடி வருவதில்லை ... எப்பொழுதும் உன் நினைவுகளில் சிந்தனைகளில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்னவென்று என்னால் அறிய முடியவில்லை....
நீ எனக்காக செய்யும் வேலைகள் அனைத்தும் கடமைக்காக செய்வது போல் உள்ளது பல நேரங்களில் நானும் கவனித்துள்ளேன்... நீ போனும் கையுமாகவே இருக்கின்றாய் இது நல்லதல்ல என்பது என் கருத்து ஆனாலும் அதை சொன்னால் நம் இருவருக்குள்ளும் சண்டைதான் மிஞ்சும்...
இன்று பல வீடுகளில் கணவன்கள் வெளியில் சென்றவுடன் ஆண்ட்ராய்டு போன்களில் முகநூல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் telegram என பல வலைதளங்கள் உள்ளது... அவைகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் தவறில்லை பெண்கள் எப்பொழுதும் அடிமையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல...
ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வலைதளங்களில் உங்கள் நட்பு வட்டாரங்களில் உள்ள அனைவரும் நல்லவர்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு... 40 வயதிற்கு மேல் ஆனால் ஆண்களின் முழு கவனமும் தொழிலின் மேலும் அடுத்த வளர்ச்சியின் மேலும் சென்று விடுகிறது ...
வீட்டிற்கு வந்தால் சலிப்புடன் குளித்து உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விடுகிறோம்... ஆனால் நீங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உங்கள் மொபைலில் மூழ்கி இருக்கின்றீர்கள் ... நீங்கள் பயன்படுத்தும் ஆப்புகளில் உள்ள அனைவரும் நல்லவர்கள் அல்ல..
அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவும் பொழுதுபோக்குகாக மட்டுமே இங்கு வருகின்றார்கள்... வலைத்தளங்களில் 40 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களை வலை வீசி பிடிப்பதே இங்கு பலரது வேலை... நமது பெண்கள் எவ்வளவு பட்டாலும் திருந்துவதில்லை முகம் தெரிய முகநூலில் எந்நேரமும் சேட் வீடியோ கால் என வாழ்கின்றீர்கள்...
உங்களது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ள உங்கள் பிள்ளைகள் உறவுகள் அம்மா அப்பா கணவன் என இத்தனை பேர் இருந்தாலும் யார் என்றே தெரியாத சில கயவர்களிடம் உங்களை நீங்கள் இழக்கின்றீர்கள்... இதனால் நீங்கள் மட்டும் அசிங்கப்படவில்லை நமது குடும்பமும் கலாச்சாரமும் கெட்டுப் போகின்றது...
ஒரு நாள் ஒருவரிடம் மனவிட்டுப் பேசுவதாலோ வீடியோ கால் பண்ணுவதாலோ நேரில் சந்திப்பதாலோ சில மணித்துணிகள் அவர்களுடன் தனிமையில் இருப்பதாலோ நமக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை... நீங்கள் நல்லவர் என்றும் நம்பும் அந்தக் கயவர்கள் உங்களது பதிவுகளை பத்திரப்படுத்தி வீடியோ கால்களை ரெக்கார்ட் பண்ணி உங்களை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்....
கணவர்கள் ஆகிய எங்களுக்கு எப்பொழுதும் எங்களைப் பற்றி எந்த சுயநலமான எண்ணமும் இல்லை ... எங்கள் எண்ணங்களில் நீங்களும் நமது குழந்தைகளை மட்டுமே உள்ளனர் ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் கணவர் அன்பாக இல்லை அரவணைக்கவில்லை என்பதால் தவறான வழிகளில் செல்கின்றீர்கள் ...
இது மிகவும் தவறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் கணவர் வெளியில் சென்றவுடன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சின்ன சின்ன கைவேலைகளை செய்யுங்கள் துணி தைங்கள் பொடி தயாரிங்கள் சோப்பு தயாரிங்கள் வீட்டில் இருந்து கொண்டே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....
பெண்களால் முடியாதது எதுவுமில்லை... சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் சாதனை பெண்ணாக மாறலாம்... ஆனால் முகநூலில் முகம் தெரிய ஆன இடம் அன்பை தேடி உங்களது வாழ்க்கை வீணடித்துக் கொள்ளாதீர்கள் .... இதனால் பாதிக்கப்படுவது எங்களது மனமும் கவுரவமும் குடும்பமும் தான் இதை கவனத்தில் கொள்ளுங்கள் ...
இன்று 90 சதவீதம் வீட்டில் ஆணோ பெண்ணோ அமர்ந்து பேசிக்கொள்ள நேரமில்லை ... அதனால் நாங்கள் உங்கள் மீது அன்பாக இல்லை என்று அர்த்தம் இல்லை எங்கள் உயிர் எப்பொழுதும் உங்களுடன் தான் இருக்கும் தயவு செய்து முகம் தெரிய மனிதர்களுடன் பழகும் பொழுது உங்களது சுய விவரங்களை கொடுக்காதீர்கள் ...
தனிமையில் சந்திக்காதீர்கள் இந்தக் காலத்தில் வயது வித்தியாசமே இல்லாமல் ஆண் பெண் பழகிக் கொண்டுள்ளார்கள் .... நாகரீகம் என்ற போர்வையில் குடும்ப பந்த பாசத்திற்கு ஒதுக்கும் நேரத்தை விட முகநூலில் முகம் தெரிய ஆணுக்கு ஒதுக்கும் நேரம் அதிகம்...
இனி மேலும் இது போல தவறு செய்யாதீர்கள் எல்லா பெண்களையும் நான் கூறவில்லை... தவறான வழியில் செல்லும் பெண்களுக்கான பதிவு இது உங்களது அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் மிகவும் நம்பும் நபர் சேமித்துக் கொண்டிருப்பார் ....
அது ஒரு நாள் விஸ்வரூபமாக வெளியில் வரும் பொழுது நமக்கு அவமானம் மட்டும்தான் மிஞ்சும் ... அப்பொழுது நாம் செய்ய வேண்டியது இறந்து போவது மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை .... தயவு செய்து தவறான எண்ணங்களிலோ வழிகளிலோ செல்லாமல் நல்ல வழிகளில் மிகவும் சந்தோசமாக கணவர்களுடன் வாழுங்கள்...
ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள் இன்று பல குடும்பங்களில் கட்டிய கணவனை விட்டுச் செல்லும்போது எவனே தெரியாத ஒருவன் உங்களை கால முழுவதும் பார்த்துக் கொள்வான் என்று நீங்கள் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் .... இன்னைக்கு நீங்க நாளைக்கு வேற ஒருத்தங்க நாளானைக்கு ஒரு தங்க இதுதான் பல ஆண்களுடைய,மற்றும் பெண்களுடைய சாதனைகள்.... இது தொடர்ந்து கொண்டே இருக்குமே தவிர நிற்காதது...
ஆண்களையே மிஞ்சும் வகையில் பெண்களும் முகநூலில் ஆண்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.... அதனால் தயவுசெய்து முகநூலை பயன்படுத்தும் பொழுது மிகவும் பாதுகாப்பாகவும் கண்ணியமான முறையிலையும் பயன்படுத்துங்கள்... இந்த வாழ்க்கை ஒருமுறைதான் வாழப் போகிறோம் அதை மிகவும் சந்தோசமாக நமது குடும்பத்துடனும் நம் குழந்தைகளுடனும் வாழ வேண்டும்...
நாகரீகம் என்ற போர்வையில் நாம் எந்தத் தவறும் செய்து விடக்கூடாது நமக்காக காத்திருப்பது நம் உறவுகள் மட்டுமே முகநூல் உறவுகள் கானல் நீரை போன்றது... நீங்கள் எவ்வளவுதான் அவர்களிடம் பிரியமாக பழகினாலும் அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது அறிமுகப்படுத்த முடியாது...
இவர்கள் யார் எப்படி தெரியும் என்ன தெரியும் இவர்களைப் பற்றி என்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல திணற வேண்டி இருக்கும். நான் என்ன சொல்ல வர்றேன்னா கட்டின புருஷன் கிட்ட பொண்டாட்டி கிட்ட கிடைக்காத அன்பு எவனே தெரியாத ஒருத்தன் ஒருத்தி கிட்ட கிடைக்கும்னு தேடுறீங்களே இதெல்லாம் வந்து எங்க போய் முடியும் தெரியுமா..
பண்பாடு என்றால் என்ன கணவனுக்காக மட்டுமே மனைவி வாழ்வது மனைவிக்காக மட்டுமே கணவன் வாழ்வது இவர்கள் இருவருமே சரியில்லை என்றால் அவர்கள் வளர்க்கும் குழந்தைகளின் வளர்ப்பு எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.
நகை நட்டு பணமோ புகழோ நம் வாழ்க்கையை சந்தோசமாக வைத்திருக்காது ... கட்டின கணவன் மட்டுமே மனைவி மட்டுமே நினைத்தால் தான் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் இந்த முகநூலில் ஆடம்பரத்திற்காகவும் அன்புக்காகவும் ஆட்களை தேடாதீர்கள்...
அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உங்களை விட பெஸ்டாக வேறொருவர் கிடைத்தால் கண்டிப்பாக சென்று விடுவார்கள்... நீங்கள் எத்தனை கண்ணீர் விட்டு கதறினாலும் திரும்ப வரமாட்டார்கள் அதனால் நீங்கள் உங்கள் குடும்பம் குழந்தைகள் உறவுகள் சொந்தங்கள் பந்தங்கள் என அன்பினில் வாழுங்கள்...
இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் நம் உறவுகளை நம்புங்கள்... ஆனால் முகநூல் அன்பு பழகும் வரை மட்டுமே பழகிய பின்பு அவர்களது தேவைகள் நிறைவேறும் வரை மட்டுமே.. அதனால் இவைகளை தூக்கிப் போட்டுவிட்டு உங்கள் குழந்தைகளுக்காகவும் கணவருக்காகவும் காத்திருந்து பணிவிடை செய்யுங்கள்...
அதேபோல மனைவிகளும் உங்கள் கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் முகநூலில் வாழும் ஜீவன்களுக்காக நமது ஆசாபாசங்களை கொட்டாதீர்கள்... நமது வீக்னஸ் தெரிந்து கொண்டால் நம்மை பயன்படுத்தாமல் விட மாட்டார்கள் ...
அதற்கு அன்பு என்று ஒரு பெயர் வைத்து அடிமையாக்கி அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு உங்களை யார் என்றே தெரியாது என தூக்கி எறிந்து விட்டு சென்று விடுவார்கள்... ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெண்களோ ஆண்களோ இருவருக்கும் நான் சொல்லுவது உங்கள் குடும்பத்தாருடன் மட்டும் உங்களது நேரங்களை செலவிடுங்கள்...
முகநூல் பொழுதுபோக்கு தளம் வந்தமா பதிவு போட்டமா நாலு கமெண்ட் போட்டமா போயிட்டே இருக்கணும். அத விட்டு சாட் பண்ணிக்கிட்டு நம்பர் குடுத்துட்டு யாருனே தெரியாதவன் கிட்ட சிக்கிக்கிட்டு சீரழியாதீங்க நான் ஒரு கணவனாக என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
இதில் ஆண் பெண் இரண்டு பேருக்குமே எழுதியுள்ளேன்... யாரும் யாருடைய குடும்பத்தையும் கெடுக்க வேண்டாம்... வாழும் வரை சந்தோசங்களை மட்டுமே கொடுங்கள்... நல்லது செய்யாவிட்டால் கூட பரவாயில்லை தயவு செய்து கெடுதல்கள் யாருக்கும் செய்யாதீர்கள்...
தயவு செய்து இந்த பதிவு புடிச்சிருந்தா படிங்க புடிக்காட்டி கடந்து போங்க ரொம்ப புடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க உண்மைய சொன்னா யாருக்குமே பிடிக்கிறது இல்லை.. எதார்த்தமாக வாழும் வாழ்க்கையே இறைவன் கொடுத்த வாழ்க்கை.. அதை நல்ல முறையில் வாழுங்கள் ஒருமுறை பெயர் கெட்டுவிட்டால் காலத்திற்கும் அழியாது கெட்ட பெயர்... வாழ்வது ஒரு முறை நல்லவர்களாக வாழ்வோம் நல்லதையே செய்வோம்... நன்றிகள் வாழ்க வளமுடன்!
படித்ததில் பிடித்தது
1 year ago | [YT] | 1
View 0 replies
Singapore Ragupathi
40 வருடங்களுக்கு முன்
80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்.
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.
20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.
21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.
22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.
23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.
24. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.
காலம் மாறினால் நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.
1 year ago | [YT] | 3
View 2 replies
Singapore Ragupathi
நம்முடைய வாழ்க்கைல சந்தோஷம் வரும் போது
நல்லா வாழணும்'னு தோணும்....
ஆனா
கஷ்டங்கள் வரும் போது மட்டும் தான், 'எப்படி வாழணும்'னு தோணும்.....
இன்பமும் துன்பமும் நம்முடைய கண்களுக்கு தெரியாத ஒன்று
ஒன்றை உணர்வதற்குள் மற்றொன்று வந்துவிடும்....
வாழ்க்கை எதையாவது ஒன்றை உணர்த்திக்கொண்டே தான் இருக்கும்....
நான் தான் அவருக்கு தகுந்தவாறு நம் மனதை மாற்றிக்கொண்டு வாழ்க்கையை நல்வழிப்படுத்த வேண்டும்....
இதுவும் எதுவும் கடந்து போக வேண்டும்....
1 year ago | [YT] | 5
View 0 replies
Load more