இயற்கையை நேசிப்போம் உயிருள்ளவரை சுவாசிப்போம் .இந்த இயற்கை இருக்கறதுனால மட்டுமே தான் நம்மளால உயிர் வாழ முடியும். நம்ம அன்றாட வாழ்வில் தினந்தோறும் இயற்கையை பயன்படுத்துகிறோம் இந்த இயற்கை இயற்கையாகவே படைத்து தந்த இந்த நீரை நம்ம குடிக்கிறதுனால தான் உயிர் வாழ்கிறோம். நிலம் இல்லன்னா நம்மளால வீடு கட்டி இருக்கவே முடியாது. காற்று இல்லனா நம்மளால சுவாசிக்கவும் முடியாது. நெருப்பு இல்லன்னா நம்ம ஒரு பொருளை சமைத்து சாப்பிடவும் முடியாது. இந்த வானம் என்று ஒன்னு இருக்கிறதுனால தான் அந்த ஆகாயத்தை நம்மளால பார்க்க முடியுது.
நாம் பண்றது என்னன்னா தங்கம் வெள்ளி இந்த மாதிரி பொருள்களுக்கு எல்லாம் நம்ம குடுக்குற மரியாதையை விட நம்ம இயற்கைக்கு மரியாதை கொடுத்தால் இன்னும் நம்ம உலகத்துல 100 வயசு என்னங்க 200 வயசு வரைக்கும் ஆரோக்கியமா வாழலாம். இயற்கை அமுதம் குடும்பத்தினராக இருந்தாலும் சரி மற்றவர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் இயற்கையில் விளைந்த உணவுகளை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன்