பைந்தமிழ்-paindhamizh

Tamils ​​traveling on the path of Tamil nationalism


பைந்தமிழ்-paindhamizh

தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்!

பொதுவுடைமைக் கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் விதைத்த பெருங்கலைஞர்!

இனமான இயக்குநர்
அப்பா மணிவண்ணன் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!

‪@paindhamizh‬

3 weeks ago | [YT] | 795

பைந்தமிழ்-paindhamizh

அது சரிதானே இதே ஊடகங்கள் அவர் கிளம்பிவிட்டார் ,இறங்கிவிட்டார்,தானாக சாப்பிடுகிறார், என்றெல்லாம் வலாட்டிக்கொண்டு திரும்பியவர்கள் தானே ...

என்னமோ அண்ணா உன் அளவுக்கு சகிப்புதன்மை எனக்கு இல்லை...

3 weeks ago | [YT] | 365

பைந்தமிழ்-paindhamizh

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே களத்தில் வேட்பாளருக்கு துணையாக கிட்டத்தட்ட 50 நாட்கள் களப்பணியாற்றிய அன்பு இளவல் தமிழ்திரு.சதீஷ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!

‪@paindhamizh‬

3 weeks ago | [YT] | 116

பைந்தமிழ்-paindhamizh

*அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!*

கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.

‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

‪@paindhamizh‬

3 weeks ago | [YT] | 106

பைந்தமிழ்-paindhamizh

இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
#புகழ்போற்றி

‪@paindhamizh‬

1 month ago | [YT] | 558

பைந்தமிழ்-paindhamizh

வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி பர்கூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள்

2 months ago | [YT] | 1,009

பைந்தமிழ்-paindhamizh

மண்ணோடும் மக்களோடும் கலந்து வாழுகின்ற நாங்கள் உங்களுக்காக உங்களில் இருந்து வந்தவர்கள்
‪@paindhamizh‬

2 months ago | [YT] | 596

பைந்தமிழ்-paindhamizh

உலகத்தமிழர்கள் அத்துனை சொந்தங்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!!

‪@paindhamizh‬

2 months ago | [YT] | 871

பைந்தமிழ்-paindhamizh

*பேரன்பும் நன்றியும்*
🌿✨🌿✨

*நாம் தமிழர் கட்சியின் பர்கூர் தொகுதி வேட்பாளராக கவின் குமார் செ எனும் நான் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரை எனக்கு தோளோடு துணையாக நின்ற பர்கூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சொந்தங்களும், அயலக நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது உளமாற அன்பையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கிறேன்.*

இம்மாபெரும் தேர்தல் களத்தில் சொல்ல இயலா துயரங்கள் நெருக்கடிகள் என அத்தனையையும் கடந்து களத்தில் பக்கபலமாக என்னை வழிநடத்திச் சென்ற அத்தனை நபர்களுக்கும் பேரன்பும் நன்றியும் நிகர்.

*காலை 6:00 மணி தொடங்கி இரவு 10.00 வரை பரப்புரை நேரம் இதில் நேர்த்தியாக வழி நடத்திய நாம் தமிழர் சொந்தங்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது*,

தேர்தல் ஆணையம், காவல்துறை உளவுத்துறை என அத்தனை ஆணையத்தையும் கையாண்ட சொந்தங்களின் களப்பணி அளப்பரியது

இறுதியாக இனமாகவும் பணமாகவும் இருந்து உதவிய தாய் தமிழ் சொந்தங்கள் உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் மேன்மையானது அப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்கு இணையான *தமிழர் பாதுகாப்பு, தமிழ் தேசியம், தமிழர் உரிமை* எனும் இலக்கை வெகு விரைவில் அடைய இருக்கிறோம்,

தேர்தல் களத்தில் முதல் முதலில் நான் தொடங்கும் பொழுது உறவுகளிடம் அண்ணன் சீமான் அவர்கள் சொல்வது போல்

*நம்மால் ஓட முடிந்தால் ஓடுவோம்,*

*நடக்க முடிந்தால் நடப்போம்,*

*தவழ்ந்து செல்ல முடிந்தால் தவழ்ந்து செல்வோம்*

✨எப்படியேனும் இலக்கை எட்டி விட வேண்டும் ✨

என்று அண்ணன் சொல்லியதுண்டு *தேர்தலுக்கு முன்பும் அதையே ஊக்கமாக எண்ணி தொடங்கினோம்* தேர்தலுக்குப் பின்பு *இன்றும் அதையே நமது ஊக்கமாக, மூலதனமாக ஏற்று தொடங்குவோம்*, தமிழ் தேசிய பாதுகாப்பு எனும் இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராடுவோம்.

*நன்றி வணக்கம்*

*நாம் தமிழர்*
✊🏻💪🏻🌿✨

*நன்றியுடன்:*
கவின் குமார் செ,
பர்கூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்,
நாம் தமிழர் கட்சி,
7904466310

‪@paindhamizh‬

2 months ago (edited) | [YT] | 974

பைந்தமிழ்-paindhamizh

இதயத்தில் இருந்து என் தலைவனையும் என் அண்ணனையும் நேசித்து தான் களத்தில் நிற்கிறேன் மக்களை நம்பி நின்றிருக்கிறோம் நேரம் செல்லவில்லை நாட்கள் நகரவில்லை பயம் தொற்றிக்கொண்டது சமுதாய நலனை மட்டுமே பார்த்து பார்த்து மக்கள் நம்மை பற்றி சிந்திக்காமல் வைத்துவிட்ட திராவிட பணநாயகம்...

#வெல்லட்டும்_விவசாயி

‪@paindhamizh‬

2 months ago | [YT] | 812