அனைவருக்கும் வணக்கம் 🙏🏽 என் பெயர் சரோ.... நான் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறேன்...தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே காளி, பிடாரி இது போன்ற காவல் தெய்வங்கள், கிராம தேவதைகள், தொன்மை வரலாறு கொண்ட தெய்வங்கள், யாரும் அறிந்திடாத கோவில்கள் மீது ஆர்வமும் தீராத பக்தியும் கொண்டவள்...அனைவரும் சமீபத்திய பல நாகரிகங்களால் மறந்த கிராம தெய்வங்கள் பற்றியும் சக்திகள் மற்றும் வரலாறும் மறைந்து வருவதையொட்டி நான் கண்ட தெய்வங்கள் அனைத்தும் ஆன்மிக பக்தர்கள் அறிய வேண்டும் என்ற ஆவலில் Kotravai Selvi என்ற வலையொளியில் நான் படம் செய்த காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.என்னுடைய Kotravai Selvi சேனல்க்கு அன்பர்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என்பதை அன்பாக கேட்டுக்கொள்கிறேன் 🙏🏽
நீங்கள் என்னுடைய வலையொளியில் காணொளியை கண்டு கருத்துக்கள் தெரிவிக்கும் படியுங்கள் உங்கள் சரோ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏽
udhayaxx@gmail.com
Support and Subscribe
My Channel Link 👉 youtube.com/channel/UC_xL7DMDdVfutzevpdtskEA
my email id : udhayaxx@gmail.com


Kotravai Selvi

மீடியாக்கள் காட்டாத ஏகாம்பரேஸ்வர் கோவிலின் மறைக்கப்பட்ட பக்கங்கள்!
பல கோடி செலவு செய்தும் சீரமைக்காத மேற்கு கோபுரம். வெறும் சுவரில் சுண்ணாம்பு சாந்து மற்றும் வெள்ளை அடித்து கோவில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் 40% வேலைகள் மட்டுமே நிறைவு செய்து நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று உள்ளது. எதற்கு இவ்வளவு அவசரமாக செய்தது இந்த தமிழ் நாடு அரசாங்கம்? ஊடகங்களும் இந்த மறைக்கப்பட்ட பகுதிகளை காட்டவில்லை . பேய் கோபுரம் என்று அழைக்கப்படும் இந்த கோபுரம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்!

1 month ago | [YT] | 4

Kotravai Selvi

செங்கல்பட்டு மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த போது, நத்தம் செங்கல்பட்டு நகரத்தின் ஊர் பிடாரி...அருள்மிகு சேப்பாட்டி அம்மனுக்கு நில தானம் அளித்த்தை குறிக்கும் எல்லைக்கல்லை காணும் வாய்ப்பு கிடைத்தது. 1000 வருட வரலாறை சுமக்கும் தமிழரின் வரலாற்று ஆவணம். இன்றும் தொன்று தொட்டு வரும் வழிபாடு... ஒன்றல்ல இரண்டல்ல... 1000 வருடத்திற்கும் மேல்... செங்கல்பட்டு எனும் செஞ்கழுனீர்பட்டின் வரலாற்று தடயம்... இது போன்று 34 சந்திக்கற்கள் இக்கோவிலுக்கு அளித்த நிலதானத்தின் சந்திகல்கள் உள்ளன... இதில் தற்போது 9 கற்கள் விண்ணமான கற்களுக்கு மட்டுமே சமீபத்தில் நடப்பட்டன. மீதம் உள்ளவை பல்லவர் காலத்தில் நடப்பட்ட கற்கள்.
இன்றும் வருடத்திற்கு ஒரு முறை பலி செய்த படையல்கள் இந்த சந்தி கற்களுக்கு படைக்கப்பட்டு, மறுநாள் பிடாரி சேப்பாட்டி அம்மனுக்கு திருதேர் வடம்பிடித்து வீதி ஊர்வலம் முடித்து நகரின் தெரு மத்தியில் அசைவ கும்பம் படைக்கப்படுகிறது... இதில் சிறப்பு அம்மனுக்கு தாய் வீட்டு சீரில் இரண்டு பானை மதுகலயம் கொண்டு வருவது...

5 months ago | [YT] | 1

Kotravai Selvi

*அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்,*

*கீழ்கொடுங்கலூர்,*

*வந்தவாசி,*

*திருவண்ணாமலை மாவட்டம்.*

*மூலவர் : முத்துமாரியம்மன்.*

*புராண பெயர் : கீழ்கொடுங்கலூர்.*

*ஊர் : வந்தவாசி.*

*மாவட்டம் : திருவண்ணாமலை.*

*மாநிலம் : தமிழ்நாடு.*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*+91-4183-242 406.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═••⊱ •═•╗*
*❀·.:::::::·:பகிர்வு:·::::::.·❀*
*சோழ.அர.வானவரம்பன்*
*╚•═•-•═•⊰❉❉⊱•═••⊰❉•⊱ •═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*தல சிறப்பு : பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று.*

*பொது தகவல் :*

*உலகம் தோன்றிய காலத்திலிருந்து சக்தி வழிபாடு இருந்துவருகிறது. ஆரம்பகாலத்தில் மனிதன் இலைகளால் ஆன உடையையே உடுத்தினான். அந்த பழக்கத்தின் அடிப்படையில்தானோ என்னவோ இப்போதும் கூடசக்தியின் அம்சமாக கருதப்படும் மாரியம்மன் கோயிலில் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் செய்யும் வழக்கம் இருக்கிறது.*

*தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் இப்படி நேர்த்திக்கடன் செய்யும் பழக்கம் உள்ள திருத்தலத்தில் ஒன்று தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கொடுங்கலூர் முத்துமாரியம்மன் கோயில், இதற்கு புராணக் கதை ஒன்று உள்ளது.*

*பிரார்த்தனை : இத்தல முத்து மாரியம்மனை வேண்டிக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.*

*அத்துடன் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், திருமணத்தில் தடை உள்ளவர்களும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன் : தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தல வரலாறு :*

*ஜமதக்னிமுனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் கடைசிமகன் பரசுராமன் கற்பில் சிறந்தவளான ரேணுகாதேவி பச்சைமண்ணால் செய்யப்பட்ட குடத்தில் தண்ணீர் ஏந்தி தனது ஆசிரமத்திற்கு கொண்டு வருவாள். அவளது கற்பின் சக்தியால் இது சாத்தியமாயிற்று.*

*ஒருமுறை வானத்தில் கந்தர்வன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவனது நிழல் ஆற்றில் தெரிந்தது. அதைப்பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவளது மனம் சலனப்பட்டது. ஆயினும் மனதில் விரசம் எதுவும் இல்லாமல். "இப்படியும் ஆணழகர்கள் உலகத்தில் இருக்கிறார்களா?" என்று மட்டுமே எண்ணினாள். அந்த மாத்திரத்திலேயே அவள் கையிலிருந்த குடம் உடைந்துவிட்டது.*

*ஜமதக்னி முனிவரின் ஞானத்திற்கு இது புரிந்துவிட்டது. இனி தன் மனைவியின் கற்பை பிறர் குறை கூறுவார்களே என்ற அச்சத்தில் மகன்களை அழைத்து தாயை வெட்டிவிடும்படி சொன்னார் மற்ற மகன்கள் மறுக்க, பரசுராமன் அந்தக் காரியத்தை செய்துமுடித்தார். அவரை ஜமதக்னி பாராட்டினார். என்ன வரம் வேண்டுமென கேட்டார். தன் தாயின் உயிரே திரும்பவும் வேண்டுமென பரசுராமர் கேட்டார்.*

*உடலில் உன் தாயின் தலையை பொருத்தி உயிர்பெறச் செய்," என ஜமதக்னி கூறிவிட்டார் பதட்டத்தில் வேறு ஒரு பெண்ணின் உடலில் தலையை பொருத்திவிட்டார் பரசுராமர். அப்பெண் உயிர் பெற்று எழுந்தாள்.*

*இதையெல்லாம் அந்த கந்தர்வன் கவனித்தான் தன்னைப் பார்த்தாள் என்ற ஒரே காரணத்துக்காக சற்றுகூட இரக்க மில்லாமல் தன் மனைவியை கொலைசெய்த ஜமதக்னி முனிவரை அவன் கொன்றுவிட்டான். உயிர் பெற்று எழுந்த ரேணுகா கணவரின் சிதையில் விழுந்தாள்.*

*இரண்டு புண்ணிய ஆத்மாக்கள் நியாயமற்ற முறையில் இறந்து எரிந்ததால் தேவலோகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலைமை உருவானது. எனவே இந்திரன் வருணனை வரவழைத்து மழைபெய்து சிதை தீயை அணைக்கும்படி கூறினான் வருணனும் அவ்வாறே செய்ய, பாதி எரிந்த நிலையில் அப்பெண் எழுந்தாள் அவளது உடலில் ஆடைகள் இல்லை. அனைத்தும் எரிந்துபோயிருந்தன.*

*பதட்டத்துடன் அங்கு நின்ற வேப்பமர இலைகளை பறித்து, அவற்றால் உடலை மறைத்துக் கொண்டாள். உடலைத் தீப்புண் சுட்டதால் மஞ்சள் நீரை வாரி ஊற்றிக் கொண்டாள். உடலெங்கும் முத்து முத்தாக பொரிந்திருந்தது. முகம் மட்டும் பொலிவாக இருந்தது.*

*அந்நிலையில் தன் ஆற்றலால் உயிர் பெற்று எழுந்த ஜமதக்னி முனிவர் அவளை 'மாரி' என்ற பெயரில் மழைதரும் தெய்வமாக இவ்வுலகில் அருளும்படிசொன்னார். அதன்படியே இன்றும் வேப்பிலை கட்டுதல், மஞ்சள் நீராட்டு ஆகியவை அம்மன் கோயில்களில் நடக்கிறது. உடலில் முத்து முத்தாக அம்மை ஏற்பட்டால் வேப்பிலை பூசுகிறோம்.*
*🌹★★★அன்புடன்★★★🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
*திருவிழா : ஆடிவெள்ளி, நவராத்திரி.*

*இருப்பிடம் : மேல்மருவத்தூரிலிருந்து 15 கி.மீ. வந்தவாசியிலிருந்து12 கி.மீ. தூரத்தில் உள்ள கீழ்கொடுங்காலூர் திருத்தலத்திற்கு பஸ் வசதி உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம்.*

*அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை.*

*தங்கும் வசதி : விழுப்புரம்.*

5 months ago | [YT] | 5

Kotravai Selvi

கணவனுக்காக எரியும் தீயில் இறங்கிய பெண்... தெய்வமாய் மாறிய வரலாறு👇
youtube.com/shorts/JxI4hB3ElD...

7 months ago | [YT] | 3

Kotravai Selvi

எருமை பலி ஏற்றுக்கொண்ட காஞ்சிபுரம் ஆதி காமாட்சியம்மன்... பத்திர காளியாக இருந்தவள் காமாட்சியாக மாற்றப்பட்ட வரலாறு... காமாட்சிக்கு முன்னரே காளியாக அருள் பாலித்தவள்...
நாளை மாலை 7.30 மணிக்கு காணாதவறாதீர்கள்....

1 year ago | [YT] | 1

Kotravai Selvi

Full Video 👉 https://youtu.be/WWLU_RlAZ8s?si=4TCno...

செஞ்சி வட்டம், மேலச்சேரி கிராமம் அருள்மிகு ஆதி திரௌபதி அம்மன் திருக்கோவில்..... 2000 வருடத்திற்கு முன் கட்டப்பட்ட தமிழ் நாட்டின் முதல் திரௌபதி அம்மன் கோவில்... இங்கு இருந்து பிடிமண் கொண்டு பல இடங்களில் கோவில் எழுப்பப்பட்டுள்ளன... குந்தி தேவி, திரௌபதி, சுபத்திரை, கொற்றவை வன தேவதை என அனைவரும் ஒரே கருவறையில் காட்சி அற்புதமான கோவில்...

1 year ago (edited) | [YT] | 5

Kotravai Selvi

நாம் காணா உலகை நமக்கு முன் கண்ட 3 தலைமுறை பழமையான காமாட்சி விளக்கு 👉 https://youtu.be/WYBpa72WN50?si=0mgdx...

1 year ago | [YT] | 1

Kotravai Selvi

எடுத்த காரியம் கைக்கூட, நடக்க இதை செய்யுங்க...👍 https://youtu.be/Un_oR0G0lNA?si=zc3e0...

1 year ago | [YT] | 4