English bayans & Arabic bayans translated & subtitled into tamil language to help tamil speaking people all over the world.
The videos will be obliged to Quran & Sunnah as much as possible.
We are open to any criticisms & feel free to suggest any mistakes, jazakallahu khair.
May Allah accept all our deeds.
Ameen.
Allah knows best.


Tamil Bayan 2.0

*அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்கிறேன்*

ஒரு பழ வியாபாரியிடம் வந்த ஒருவர் பழங்கள் என்ன விலை? என்று கேட்டார்.
வியாபாரி, வாழைப்பழம் கிலோ 20 ரூபாய், ஆப்பிள் 30 ரூபாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண்மணி வந்தார்

அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க,

வியாபாரி வாழைப்பழம் கிலோ 5 ரூபாய் ஆப்பிள் கிலோ 10 ரூபாய் என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்னார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் தன்னிடம் விலை அதிகமாக சொல்லிவிட்டாரே என கோபப்பட்டு வியாபாரிடம் பேசத் தொடங்கினார்.

'எதுவும் பேசவேண்டாம்' என கண்களால் வியாபாரி சைகை செய்தார்.

அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொகையைக் கொடுத்து பழங்களைப் பெற்றுக்கொண்டு கருணை மிக்க அல்லாஹ்வுக்கு நன்றி. என்னுடைய குடும்பத்திற்கு இது போதுமானதாக இருக்கும் என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

அப்பெண்மணி சென்ற பின்னர், வியாபாரி அந்த மனிதனைப் பார்த்து:

சகோதரரே! கோபித்துக் கொள்ளாதீர். உங்களை ஏமாற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. நான் அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்கிறேன்.

அந்தப் பெண்மணி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தை, வைத்து ஆதரவற்ற நான்கு குழந்தைகளை பராமரித்து வருகிறார்.

"அவர் யாரிடத்திலும் உதவி கேட்க விரும்பவில்லை. நானும் பலமுறை அவருக்கு உதவி செய்ய விரும்பினேன். ஆனாலும் அவர் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, எனவே, நான் யோசனை செய்து அவரின் தன்மானத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் மறைமுகமாக அவருக்கு உதவ நான்கு மடங்கு விலையைக் குறைத்து விற்பனை செய்கிறேன்" என்றவர்,

வணக்கத்திற்குரிய அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன், இந்த பெண்மணி வாரத்துக்கு ஒருமுறைதான் என்னிடத்தில் வியாபாரம் செய்வார் ஆனால் அவர் என்னிடம், வியாபாரம் செய்யும் நாட்களில் எனக்கு நான்கு மடங்கு லாபம் கிடைக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்." என்றார்

இதைக் கேட்ட அந்த மனிதரின் கண்களில் இருந்து, நீர் தாரைத் தாரையாக வழிந்தது. அவர் அந்த வியாபாரியின் தலையில் முத்தமிட்டார்,

*"பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள் வானத்தில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள்மீது கருணை காட்டுவான்*" என்பது நபிமொழி.

உண்மையில் பிரதிபலனை எதிர்பாராமல் அல்லாஹ்விற்காக ஒருவரின் தேவைகளை நிறைவேற்றும் போது உள்ளத்தில் ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

இதை அனுபவித்தவர்களால்தான் அதை உணர முடியும்.

சகோதர்களே! தேவையுடையவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத வகையில், நீங்கள் உதவி செய்து பாருங்கள். அப்பொழுது அவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி உங்கள் உள்ளத்திலும் ஏற்படுவதை அனுபவபூர்வமாக நீங்கள் உணர்வீர்கள்.

- அரபியிலிருந்து *அபூ ஆரா*

5 months ago | [YT] | 0

Tamil Bayan 2.0

ஏன் நான் ஒரு முஸ்லிம் அல்லாத இளைஞனை திருமணம் செய்ய முடியாது?

நான் ஒரு முஸ்லிம் அல்லாத இளைஞனை காதலிக்கிறேன்; இப்படியிருக்க நான் ஏன் அவனை திருமணம் செய்ய முடியாது? என்று அவள் கேட்டாள்.

அதற்கு நான், “திருமணம் என்பது காதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பல விடயங்கள் உள்ளன, அவற்றில் காதலும் ஒன்று” என்று கூறினேன்.

“இருப்பினும், நான் அந்த இளைஞனை காதலிக்கிறேன்” என்று அவள் கூறினாள்.

அதற்கு நான், “அந்த இளைஞனுக்கு ஒரு தொற்றுநோய் உள்ளது என்று நான் கூறினால், அவனைத் திருமணம் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டேன்.

“இல்லை” என்று அவள் பதிலளித்தாள்.

அப்படியென்றால், உங்களது காதல் எங்கே?” என்று நான் கேட்டேன்.

அவள் அமைதியாக இருந்தாள்.

பிறகு, நான் தொடர்ந்தேன். “அந்த இளைஞன் மலட்டுத்தன்மை கொண்டவன்; ஆனால் நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புகிறீர்கள் என்றால், அவனைத் திருமணம் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டேன்.

“இல்லை, அல்லது நான் யோசிப்பேன், ஆனால் நான் தயங்குவேன்” என்று அவள் பதிலளித்தாள்.

“எனவே, காதல்தான் திருமணத்திற்கான ஒரே காரணம் அல்ல” என்று நான் கூறினேன்.

“இருந்தாலும் நான் அவனை காதலிக்கிறேன்” என்று அவள் மீண்டும் கூறினாள்.

நான், “உங்கள் ஆரோக்கியத்திற்கும் காதலுக்கும் இடையே ஒரு தேர்வு செய்யும்படி நான் உங்களிடம் கேட்டபோது, உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். உங்களது தாய்மைக்கும் காதலுக்கும் இடையே தேர்வை மேற்கொள்ளுமாறு நான் உங்களிடம் கேட்டபோது, நீங்கள் தயங்கினீர்கள்; உங்களது தாய்மையைத் தேர்ந்தெடுத்தீர்கள். ஆக, உங்களது பதில் உணர்ச்சிகரமானது அல்ல; அறிவார்ந்தது. இதுவே சரியான பதில். ஏனெனில், நீங்கள் உங்கள் மகிழ்ச்சியையும் உங்கள் உறவின் எதிர்காலத்தையும் பார்த்தீர்கள்; காதலை மட்டும் பார்க்கவில்லை. இஸ்லாம் திருமணத்தை இப்படித்தான் பார்க்கிறது; அது இந்த உலகத்திலும் மறுமையிலும் மகிழ்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது; இந்த உலகில் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது அதனது நோக்கமல்ல. மேலும், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் மீதான நம் அன்பு மற்ற எல்லா அன்பையும் விட பெரியதாக இருக்க வேண்டும்; அவர்களுக்குக் கீழ்ப்படிவது மற்ற எந்தக் கீழ்ப்படிதலையும் விட முக்கியமானதாகும்” என்று கூறினேன்.

“இருப்பினும் என் கேள்விக்கு என்ன பதில்?” என்று அவள் கேட்டாள்.

“பதில் மிகவும் எளிதானது. நீங்கள் இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகிறீர்கள். ஆனால் அவ்விளைஞன் தூதரையும் உங்களது மதத்தையும் நம்பவில்லை. இயல்பாகவே, ஒரு மனிதன் வீட்டில் தன் வார்த்தைக்கு மதிப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்; மேலும் தன் மனைவியும் குழந்தைகளும் தன்னைப்போல் நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறான். பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் யோசிக்கிறார்கள்; மற்றும் விரும்புகிறார்கள். குடும்பம் சிதைந்துபோகாமல் பாதுகாக்க அல்லாஹ் இவ்வாறான திருமணத்தை தடை செய்துள்ளான். இது ஒரு பெண்ணுக்கு அருள்தான். ஏனென்றால், அவளுடைய கணவன், அவளுடைய நம்பிக்கைக்கு எதிரான ஒரு நம்பிக்கையையோ, எண்ணத்தையோ அல்லது நடத்தையையோ அவளுக்கு கட்டாயப்படுத்தமாட்டான். அதனால் அவள் தன் அடையாளத்தையும், மதத்தையும், குழந்தைகளின் வளர்ப்பையும் பாதுகாக்கிறாள்.” என்று நான் கூறினேன்.

“ஆனால் சில ஆண்கள் குடும்பத்தை நிர்வகிப்பதிலோ அல்லது குழந்தைகளை வளர்ப்பதிலோ அக்கறை காட்டுவதில்லை” என்று அவள் கூறினாள்.

நான், “நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் நீங்கள் அரிதான நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறீர்கள். பொதுவான விதி அப்படி இல்லை. இஸ்லாம் ஓர் ஒழுங்குமுறையை உருவாக்கும்போது, அதனை அனைவருக்கும் பொதுவானதாகவே உருவாக்குகிறது. அது விதிவிலக்குகளைப் பார்ப்பதில்லை. பொதுவாக, எல்லா சட்டங்களும் அப்படித்தான். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு மருந்தை வாங்கி, அதனுடன் வரும் விளக்கத்தைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“ஆம்” என்று அவள் கூறினாள்.

“மருந்தின் பக்க விளைவுகளைப் படித்துவிட்டு, நீங்கள் அந்த மருந்தை உட்கொண்டீர்களா?” என்று கேட்டேன்.

“ஆம்” என்று அவள் பதிலளித்தாள்.

“சில சமயங்களில் ஆபத்தான பக்க விளைவுகளை அவர்கள் எழுதுவதைப் பார்த்தும், அந்த பக்க விளைவுகளுக்காக நீங்கள் ஏன் மருந்தை நிறுத்திவிடவில்லை?” என்று கேட்டேன்.

“ஏனென்றால், அந்த மருந்து பயனுள்ளது மற்றும் குணப்படுத்துகிறது. பக்க விளைவுகள் ஒரு விதிவிலக்கு, ஒவ்வொரு நோயாளிக்கும் அது வர வேண்டிய அவசியமில்லை” என்று அவள் கூறினாள்.

நான் அவளிடம், “இதுதான் இஸ்லாம். இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் நலனுக்காகவும் மனிதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டங்களில் சிலருக்கு வலி மற்றும் துக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகள் இருக்கலாம். ஆனால் அவற்றை புறக்கணிக்க முடியாது.”

“எடுத்துக்காட்டாக?” என்று அவள் கேட்டாள்.

நான், “விவாகரத்து குடும்பத்தை சிதைக்கிறது; மற்றும் குழந்தைகளைப் பாதிக்கிறது. ஆனால் அது இல்லாமல் வாழ்க்கை தொடராது. அதேபோல், பலதார மணம். அது இல்லாமல் வாழ்க்கை தொடராது. முஸ்லிம் அல்லாத ஒருவரைத் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. காதலனை விட்டு விலகுவது வலியை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அது இல்லாமல் வாழ்க்கை தொடராது. ஏனெனில், அவனுடைய நம்பிக்கை உங்கள் நம்பிக்கையிலிருந்து வேறுபட்டது, அவனுடைய பழக்கவழக்கங்கள் உங்களது பழக்கவழக்கங்களிலிருந்து வேறுபட்டவை. அவனுடைய கலாச்சாரம் உங்களது கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. அவனுடைய மதம் உங்களது மதத்திலிருந்து வேறுபட்டது, உங்களிடம் அனுமதிக்கப்பட்டது அவனிடம் தடைசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் உடலை மறைப்பது அவனுக்கு சிக்கலாக உள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

“நீங்கள் எனக்கு விடயங்களை கடினமாக்கிவிட்டீர்கள்” என்று அவள் கூறினாள்.

நான், “உங்கள் மகனின் மரணம் அல்லது அவனுடைய காலை வெட்டுவது என்ற இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி ஒரு மருத்துவர் உங்களிடம் கூறினால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்டேன்.

“காலை வெட்டுவது” என்று அவள் பதிலளித்தாள்.

“காலை வெட்டுவது வேதனையானது, ஆனால் அது இல்லாமல் வாழ்க்கை தொடராது. அந்த மனிதனுடனான உங்கள் உறவை முறிப்பது வேதனையானது, ஆனால் இந்த முடிவு இந்த உலகத்திலும் மறுமையிலும் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்” என்று கூறினேன்.

(அரபு மூலம்: கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ)

5 months ago | [YT] | 1

Tamil Bayan 2.0

உங்கள் துவாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், அவர் துஆ செய்ய உங்களுக்கு முதலில் வழிகாட்ட மாட்டார்.

இப்ன் கய்யூம்

5 months ago | [YT] | 0

Tamil Bayan 2.0

6 months ago | [YT] | 0

Tamil Bayan 2.0

#Nodesign
எரிமலை நத்தைகள். அவற்றின் ஓடுகள் இரும்பு சல்பைடுகளால் ஆனவை, அவை 750 ⁰F எட்டக்கூடிய நீர் வெப்ப துவாரங்களைச் சுற்றி வாழ்கின்றன.

6 months ago | [YT] | 0