🕌 Islamic Tamil Motivational Video – Heart Touching Bayan
இந்த சேனல் இல் நீங்கள் மிக சக்தியான Tamil Islamic Reminder,
Quran & Hadith Message, மற்றும் Islamic Motivation காண்பீர்கள்.
இந்த Bayan covers:
✔ Islamic Motivation (Tamil)
✔ Quran & Sunnah Based Advice
✔ Heart-Softening Islamic Reminder
✔ Life-Changing Message for Youth & Families
✔ Islamic Lifestyle & Sunnah Practices
✔ Real Islamic Guidance for Daily Life
This video will remind you about Allah, increase your Imaan, and help you walk on the path to Jannah.
Every Muslim must listen and share. 🌙
---
⭐ CHANNEL CONTENT (For SEO Ranking)
Our channel uploads daily:
📌 Tamil Islamic Bayan
📌 Islamic Motivational Videos
📌 Quran – Hadith Lessons (Simple Tamil)
📌 Tamil Islamic Short Videos
📌 Islamic Reminder for All Ages
📌 Sunnah Lifestyle Tips
📌 Muslim Youth Motivation
📌 Heart Touching Islamic Messages
Islam is the Way to Jannah.
Subscribe and share
---
⭐ FOLLOW US
YouTube: @islamistheway-i8z
Instagram: @Riz_rashi
Islam is the way to go to jannah
🍀 இறுதி பத்து நாட்களில்... ஒரு ஆபத்தான நோய் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்! அது அருட்கொடைகளின் சுவையையும், லைலத்துல் கத்ர் இரவின் இனிமையையும் உங்களை விட்டுப் பறித்துவிடக்கூடும்! 😲
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்கள் சாதாரணமானவை அல்ல...
இவை கருணையின் கதவுகள் திறக்கப்படும் நாட்கள்,
நரக விடுதலை அளிக்கப்படும் நாட்கள்,
அமைதி (ஸகீனா) இறங்கும் நாட்கள்,
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு மறைந்திருக்கும் நாட்கள்! 🌙🤍
🔴 ஆனால், இந்த மாபெரும் அருட்கொடைகளுக்கு மத்தியில்...
ஓர் அமைதியான நோய் இதயத்திற்குள் ஊடுருவி, அதன் உணர்வுகளை அழித்துவிடுகிறது.
💔 அது ஒவ்வொரு நாளும் அருட்கொடைகளைப் பார்க்கச் செய்யும்... ஆனால் இதயம் அதற்காக நெகிழாது.
💔 அது கொடைகளை அனுபவிக்கச் செய்யும்... ஆனால் இதயம் அதற்கு நன்றி கூறாது.
💔 அது ரமலானை அடையச் செய்யும்... ஆனால் அதன் மகத்துவத்தை உணரச் செய்யாது!
💔 அது ஒரு ஆபத்தான நோய்...
அதற்கு மருந்தகங்களில் மருந்து இல்லை; ரத்தப் பரிசோதனைகளில் அதன் அறிகுறிகள் தெரியாது.
ஆனால், உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒரு அருட்கொடை நீங்குவதற்கு முன்பே, உங்கள் இதயத்தில் அதன் மதிப்பைக் கொன்றுவிடும். 😔
🩺 அதன் பெயர்: அருட்கொடைகளுக்கு பழகிப்போதல் (التعوّد على النعمة)
- நன்மைகளோடு பழகிப்போவதால், அதை ஒரு நன்மையாகவே காணத் தவறுவது...
- ஆரோக்கியமாக வாழ்வதால், அது ஒரு சாதாரண விஷயம் என எண்ணுவது...
- அச்சமின்றி உறங்குவது, வயிறு முட்ட உண்பது, குடும்பத்தோடு அமர்ந்திருப்பது...இவையெல்லாம் நன்றிக்கே உரியவை என்று உணராமல், ஏதோ "இயல்பாக நடப்பது" என்று கடந்து போவது!
- இங்குதான் ஆபத்து தொடங்குகிறது...
ஏனெனில், ஓர் அருட்கொடையை இதயம் நன்றியின்றி பழகிக்கொண்டால்,
முதலில் அதன் "சுவை" நீங்கும்... பிறகு அந்த "அருட்கொடையே" உங்களை விட்டு நீங்கிவிடும்.
💡 இந்த நோயின் மிக ஆபத்தான வடிவங்கள்:
1️⃣ ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்தோடு கண் விழிப்பது... ஏதோ அது உறுதி செய்யப்பட்டது போல படுக்கையை விட்டு எழுவது. இதயம் கனிந்து: "எங்களை மரிக்கச் செய்த பின் உயிர் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும், அவனிடமே நாம் மீள வேண்டியுள்ளது" என்று கூறத் தவறுவது. 🤲
2️⃣ வீட்டிற்குத் திரும்பும்போது உங்கள் குடும்பத்தினர் நலமுடன் இருப்பதையும், பிள்ளைகளின் சிரிப்பையும், அமைதியையும் காண்பது... ஆனால், எத்தனையோ வீடுகளில் துக்கம் நுழைந்திருப்பதையும், பிரியமானவர்கள் பிரிந்து சென்றிருப்பதையும், எத்தனையோ மக்கள் வலியிலும் அச்சத்திலும் உறங்குவதையும் மறந்துவிடுவது. 💔
3️⃣ சந்தைக்குச் சென்று விரும்பியதை வாங்கி நிம்மதியாகத் திரும்புவது... ஆனால், ஒரு துண்டு ரொட்டிக்காகவோ, ஒரு மருந்திற்காகவோ அல்லது ஒரு சிறு தேவைக்காகவோ ஏங்கும் ஏழைகளைப் பற்றி எண்ணாமல் இருப்பது. 🍞💊
4️⃣ ரமலானை அடைந்து... இறுதி பத்து நாட்களைப் பெற்று... நின்று வணங்கவும், துஆ செய்யவும், ஸஜ்தா செய்யவும் இறைவனுக்கு நெருக்கமாகவும் வாய்ப்பு வழங்கப்படுவது... இதயம் உணர்ந்தால் நன்றியால் கண்ணீர் வடிக்க வேண்டிய மிகப் பெரிய அருட்கொடை இது என்பதை உணரத் தவறுவது! 🌙
யா அல்லாஹ்... கடந்த ரமலானில் நம்மோடு இருந்த எத்தனையோ மனிதர்கள் இன்று மண்ணுக்குள் இருக்கிறார்கள்.
- எத்தனையோ பேர் லைலத்துல் கத்ரை அடையத் திட்டமிட்டார்கள், ஆனால் அது அவர்களுக்கு எழுதப்படவில்லை.
- எத்தனையோ நோயாளிகள் இரண்டு ரக்அத்கள் தொழ ஏங்குகிறார்கள், ஆனால் உங்களால் முடிகிறது.
- எத்தனையோ பேர் ஸஜ்தாவில் ஒரு துளி கண்ணீருக்காக ஏங்குகிறார்கள், ஆனால் நீங்கள் இப்போது இறைவனின் முன்னிலையில் இருக்கிறீர்கள்.
⚠️ பேரிடர் என்பது அருட்கொடைகளை இழப்பது மட்டுமல்ல... அவற்றை ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டே, அதன் மதிப்பை உணராமல் வாழ்வதுதான்.
இந்த இறுதி பத்து நாட்களில், உங்கள் கவலை இவை மட்டுமாக இருக்க கூடாது:
- எத்தனை முறை குர்ஆனை முடித்தேன்?
- எத்தனை ரக்அத்கள் தொழுதேன்?
- எத்தனை மணிநேரம் விழித்திருந்தேன்?
மாறாக, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
- என் இதயம் உணர்கிறதா?
- நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேனா?
- இந்த இரவுகள் வரை இறைவன் என்னை உயிரோடு வைத்திருப்பதைக் கண்டு நான் வியப்படைகிறேனா?
- லைலத்துல் கத்ரை அடைவது என்பது பலருக்கு மறுக்கப்பட்ட ஒரு பெரும் பாக்கியம் என்பதை நான் உணர்ந்துள்ளேனா?
🌸 அருட்கொடைகளுக்குப் பழகிப்போக நாட்களை அனுமதிக்காதீர்கள்...
மாறாக, உங்கள் நாவையும் இதயத்தையும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்வதற்குப் பழக்குங்கள்.
🌹 நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்... அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள்.
🌹 உங்கள் பெற்றோர், பிள்ளைகள் நலமாக இருந்தால்... அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள்.
🌹 வுளூச் செய்து தொழுகையில் நின்றால்... அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள்.
🌹 இரவின் கடைசிப் பகுதியில் இறைவன் உங்களை எழுப்பினால்... ஏதோ ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியதைப் போல அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள்! 🤍
🌙 ஒருவேளை லைலத்துல் கத்ர் நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு மிக நெருக்கத்தில் இருக்கலாம்...
ஆனால் அதில் உண்மையிலேயே வெற்றி பெறுபவர் கால்களால் நின்று வணங்குபவர் மட்டுமல்ல...
உயிருள்ள இதயத்தோடும், நன்றியுள்ள உள்ளத்தோடும், தான் அனுபவிக்கும் அருட்கொடைகளின் மதிப்பை அறிந்தவராகவும் அந்த இரவுக்குள் நுழைபவரே ஆவார்.
இன்று இரவு உங்கள் இதயத்திலிருந்து இதைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்:
"யா அல்லாஹ்! உனது அருட்கொடைகளை உணராத பராமுகமானவர்களில் எங்களை ஆக்கிவிடாதே. யா அல்லாஹ்! உனக்கு நன்றி செலுத்தவும், உன்னை அழகிய முறையில் வணங்கவும் எங்களுக்கு அருள் புரிவாயாக. யா அல்லாஹ்! லைலத்துல் கத்ரை அடையச் செய்து, அதில் உன்னை நினைவுகூரவும் (திக்ர்), நன்றி செலுத்தவும் (ஷுக்ர்), அழகிய முறையில் வணங்கவும் எங்களுக்கு உதவி செய்வாயாக." ✨
🤍 நினைவில் இருக்கட்டும்:
- எத்தனையோ ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளாகி விட்டனர்...
- எத்தனையோ அச்சமற்றவர்கள் பயத்தில் இருக்கின்றனர்...
- எத்தனையோ செல்வந்தர்கள் தேவையுள்ளவர்களாகி விட்டனர்...
- ஆனால், நீங்கள் இன்னும் அருளப்படுகிறீர்கள், அவகாசம் வழங்கப்படுகிறீர்கள், ஒவ்வொரு இரவும் இறைவனின் கதவுக்கு அழைக்கப்படுகிறீர்கள்...
எனவே, இந்த அருட்கொடைகள் உங்களைக் கடந்து போகும் சாதாரண விஷயங்களாக இருக்க வேண்டாம்!!
- தமிழ் வடிவம்: கலாநிதி ஏ. பீ. எம். அப்பாஸ் -
2 days ago | [YT] | 347
View 9 replies
Islam is the way to go to jannah
2 days ago | [YT] | 454
View 1 reply
Islam is the way to go to jannah
Insha Allah recite as much as you can...
4 days ago | [YT] | 607
View 3 replies
Islam is the way to go to jannah
Thikr....
6 days ago | [YT] | 353
View 0 replies
Islam is the way to go to jannah
🌹#பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்
ஷுஹதாக்களின் மகத்துவம்:
🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹
وَلَا تحسبن الذين قتلوا فى سبيل الله اموانا بل احيآء عند ربهم يرزقون
‘அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில் உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன்)
ஸெய்யதினா அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு தாலா அன்ஹு அவர்களிடம் மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம் கேட்ட போது நபிகள் நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அறிவித்ததாக க் கீழ்காணும் ஹதீதைக் குறிப்பிட்டார்கள்:
‘ஷுஹதாக்களுடைய உயிர்களானது சுவர்க்கத்தில் உள்ள பச்சை நிறப் பறவையின் வயிற்றில் வைக்கப்பட்டு, சுவர்க்கத்தில் நினைத்த இடங்களை சுற்றி வரும். பிறகு இறைவனின் சிம்மாசனத்தில் தொங்க விடப்பட்ட தங்கக் கூண்டில் தஞ்சமடையும் என்று கூறினார்கள். இத்தகைய மாபெரும் பாக்கியம் பத்ரு ஸஹாபாக்களுக்கும் கிடைத்தது.
நூல்: புகாரி, முஸ்லிம்.
மேலும் ஷுஹதாக்களைப் பற்றி நம்பெருமானார் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அருளியதாவது, ‘ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களைக் கொண்டு கண்ணியம் செய்திருக்கிறான். அது போன்ற சிறப்பை நான் உட்பட எந்த நபிமாரும் பெறவில்லை. அவையாவன’,
1. எல்லா நபிமார்களின் உயிர்களையும் மௌத்தின் அதிபதி இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் கைப்பற்றுவார்கள். ஆனால் ஷுஹதாக்களின் உயிர்களை அல்லாஹ்வே கைப்பற்றுவான்.
2. அனைத்து நபிமார்களும் மரணமான பின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும் குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள் குளிப்பாட்டப்பட மாட்டார்கள். வெட்டுண்ட காயங்களுடன் அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர் பக்கம் அவர்கள் தேவையாக மாட்டார்கள்.
3. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு கஃபனிடப்படுவார்கள். நானும் கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள். அவர்கள் போரில் அணிந்திருந்த உடைகளுடனே அடக்கம் செய்யப்படுவார்கள்.
4. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு அவர்களை மரணித்தவர்கள் என்று கூறப்படும். நானும் ஸெய்யதினா முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள் மரணித்து விட்டால் அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என்று ஒரு திருமறைவசனத்திலும், மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள் என்று மேற்கூறிய வசனத்திலும் இறைவனே கூறுகிறான்.
5. எல்லா நபிமார்களுக்கும் மறுமைநாளில் சிபாரிசு செய்யும் உரிமை வழங்கப்படும். ஆனால் ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும் சிபாரிசு செய்து கொண்டு இருக்கிறார்கள் என நபி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தFபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அருளினார்கள்.
சிறிது நேரமாயினும் இறைவன் பாதையில் சண்டை செய்வது 50 தடவை நபிலான ஹஜ்ஜு செய்வதை விடச் சிறந்தது.
-நூல்:- தப்ஸீர் குர்துபி 1518-3-
🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹
ஸல்லல்லாஹ் அலா முஹம்மது ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம்
1 week ago | [YT] | 264
View 0 replies
Islam is the way to go to jannah
Hmm.....
1 week ago | [YT] | 184
View 1 reply
Islam is the way to go to jannah
இன்ஷா அல்லாஹ்...
1 week ago | [YT] | 785
View 4 replies
Islam is the way to go to jannah
வெளிநாட்டில் வேலை..
1 week ago | [YT] | 419
View 2 replies
Islam is the way to go to jannah
ஒருமுறை மூசா நபியவர்களை
ஏற்றுக் கொண்ட மக்கள்
ஒன்று திரண்டு வருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
பல மாதங்களாக எமது ஊரில்
மழை இல்லை!!! அதனால் விளைச்சல் நிலங்கள் வீணாகி விட்டன.
பஞ்சம் எங்களை வாட்டுகிறது!!!
எமது கால்நடைகள் குடிக்க
நீரின்றி இறந்து போகின்றன!!!
நீங்கள் தான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து, மழையை
பொழிவித்து, எங்கள் சிரமங்களை
நீக்கித்தரவேண்டும். என மக்கள் கேட்க, மூஸா நபியும் சம்மதிக்கிறார்.
அதன் பின் மூஸா நபியவர்கள்
தன்னை ஏற்றுக் கொண்ட
மக்களனைவரையும் ஒரே
மைதானத்தில் திரட்டுகிறார்கள்.
கால்நடைகளும் அந்த மைதானத்தில் ஒன்று சேர்க்கப்படுகின்றன.
அந்த மக்களுக்கு முன்னால்
வந்து நின்ற மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தினார்கள்!
"யா அல்லாஹ்! இங்கு கூடியிருக்கும்
இந்த மக்களுக்காக, இந்த குழந்தைச் செல்வங்களுக்காக, வாய் பேச முடியாத கால்நடைகளுக்காக உன் தூதர் நான்
கரம் ஏந்துகிறேன்! உன் அருள்
மழையை பொழியச் செய்வாயாக!!!"
இந்த பிரார்த்தனைக்கு பின்
அல்லாஹ் வஹி அறிவிக்கிறான்.
"மூஸாவே! இந்த கூட்டத்தில் 40 வருடங்களாக தொடர்ச்சியாக பாவங்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு பெரும்
பாவி ஒளிந்து கொண்டிருக்கிறான்!!!
அவன் காரணமாகவே
மழையைத் தடுத்து விட்டேன்!!!
அவன் இந்த கூட்டத்தை விட்டு வெளியேறாத வரை, மழையை பொழிவிக்க முடியாது!!!"
பின்பு மூசா நபி தன் கூட்டத்தாரை
நோக்கி உரத்த குரலில்,
"40 வருடங்கள் தொடர்ச்சியாக
பாவம் செய்யும் ஒரு பெரும்
பாவியினால் அல்லாஹ் மழையை பொழிவிக்க மறுக்கிறான்!
அந்தப் பாவி உடனே இந்த
கூட்டத்திலிருந்து இதே நிமிடம் வெளியேறி விட வேண்டும்!"என்றார்!
அங்கிருந்த மக்களனைவரும்
ஒருவருக்கொருவர் முகத்தை
பார்த்துக் கொள்கிறார்கள்!
மூசா நபியின் இந்த அறிவிப்பு முழுமையாக நிறைவு பெறவுமில்லை! அங்கிருந்த மக்களில் யாரும் வெளியேறவுமில்லை!!!
அதற்குள் அல்லாஹ்வின் அருள்
மழை பொழிந்து அந்த மக்களை
நனைத்து விடுகிறது!
மூஸா நபிக்கோ அதிர்ச்சி!!!
மக்களனைவரும் அதிர்ச்சியோடு
மூஸா நபியை பார்க்கிறார்கள்!
மூஸா நபி அல்லாஹ்விடம் கேட்டார்,
"நீ கூறியது போல் நான் அறிவித்து விட்டேன், ஆனால் யாரும் வெளியேறவில்லை, மழை
பொழிகிறதே? என்ன காரணம் ???
அல்லாஹ் வஹி அறிவித்தான்!
மூஸாவே! உமக்கு முன்னால்
வெளிவராத அந்த மனிதன்,
எனக்கு முன்னால் அவன்
இரு கரங்களை உயர்த்தி விட்டான்!!!
" யா அல்லாஹ்! இந்த பெரும்
பாவியை மக்களுக்கு முன்னால் வெளிப்படுத்தி, கேவலப்படுத்தி விடாதே.
என்னை மன்னித்துவிடு" என்று
மனம் நொந்து, கண்கலங்கி விட்டார்!!!
🥹🥹🥹
" என் அடியானை நான்
மன்னித்து விட்டேன்!!!!
❤️❤️❤️
40 வருட பெரும்பாவி, கலங்கி
நின்ற அந்த ஒரு நொடி
கண்ணீருக்காக, சில நொடிகளிலே
மன்னிக்கப்பட்டுவிட்டான்!!!
மூஸா நபி விட்டு விடுவாரா???
மூஸா நபி அல்லாஹ்விடம் கேட்டார்,
" யா அல்லாஹ்! உன்னுடைய மன்னிப்பைப் பெற்ற அந்த அடியானை எனக்கு மட்டுமாவது நீ காட்டித்தா!!!"
அல்லாஹ் பதிலளிக்கிறான்!
"மூசாவே! அந்த மனிதன் 40 வருடமாக, எனக்கு மாற்றமான பாவங்களை
செய்து கொண்டிருக்கும்போதே
அவன் யாரென்று மக்களுக்கு முன்னால் தெரியப்படுத்தாத நான், அவன்
இன்றைய தினம் என் பக்கம் தவ்பா செய்து மீண்டு வந்துவிட்டான்!!!
அவனை உமக்கு முன்னால் வெளிப்படுத்தி காட்டி விடுவேனா???!"
❤️❤️❤️
சுபஹானல்லாஹ்!!!!
மூசா நபியவர்கள் அல்லாஹ்வை
பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து கேட்டபோது, தன்னை காண்பிப்பதற்கே முன்வந்த அல்லாஹ்,
அந்த அடியான் யார்? என்று கேட்டதும் அதே மூஸா நபி தான்!!!
ஆனால் அல்லாஹ் மூஸா நபிக்கு முன்னால் கூட அந்த அடியானை
காட்டிக் கொடுக்கவில்லை!!!
❤️❤️❤️
அல்லாஹ்வின் முன்னால்
வடிக்கப்பட்ட அந்த ஒரு சொட்டு கண்ணீர்,அந்த 40 வருட பாவியை மன்னிக்க செய்துவிட்டது!!!
❤️❤️❤️
அல்லாஹ்வின் முன்னால்
வடிக்கப்பட்ட ஒரு சொட்டு கண்ணீர்
மூசா நபிக்குக்கூட தெரியாமல்,
ஒரு பெரும் பாவியை மறைத்து வைத்திருக்கிறதென்றால்,......
அதே ஒரு சொட்டுக் கண்ணீர்🥹
எங்கள் தேவைகளை
நிறைவேற்றித் தராதா????
❤️❤️❤️
அதே ஒரு சொட்டுக் கண்ணீர்🥹
எங்கள் நோய்களை
குணப்படுத்தித் தராதா???
❤️❤️❤️
ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர்🥹
எங்கள் கவலைகளை, கஷ்டங்களை துன்பங்களை துடைத்தெரியாதா???
❤️❤️❤️
2 weeks ago | [YT] | 491
View 3 replies
Islam is the way to go to jannah
பிலால் (ரலி) அவர்கள் தனது மரணப் படுக்கையில் இருந்தபோது, அவரது மனைவி அழுதுகொண்டே,
"என்ன ஒரு பெரும் துயரம்!" என்று கூறி அழுதார்கள்.
அப்போது,
பிலால் (ரலி) தனது கண்களைத் திறந்து"வருத்தப்படாதே..! என்ன ஒரு பெரும் மகிழ்ச்சி! எனக்கு, நாளை நான் எனது நேசர்களைச் சந்திக்கப் போகிறேன்...
முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவரது தோழர்களையும் சந்திக்கப் போகிறேன்!" என்று புன்னகையுடன் கூறினார்கள்.
இது சாதாரண வார்த்தை அல்ல.
இது ஈமானின் உச்சம்.
இது அன்பின் சாட்சி.
இது மரணத்தை வென்ற நம்பிக்கை.
மரணம் என்பது அவருக்குத் துயரமாகத் தெரியவில்லை, தனது நேசரை மீண்டும் சந்திப்பதற்கான ஒரு பாலமாகவே தெரிந்தது.
அல்லாஹ் நம்மையும் அந்த மகிழ்ச்சியான சந்திப்பிற்கு தகுதியானவர்களாக ஆக்குவானாக..
#இஸ்லாம் #வரலாறு
2 weeks ago | [YT] | 370
View 9 replies
Load more