"அஸ்ஸலாமு" என்ற இஸ்லாமியக் கருப்பொருள் சேனலுக்கான YouTube சேனல் விளக்கம் இதோ:


---

அஸ்ஸலாமுவுக்கு வரவேற்கிறோம் - இஸ்லாமிய அறிவு மற்றும் உத்வேகத்திற்கான உங்கள் ஆதாரம்!

அஸ்ஸலாமு இஸ்லாமிய போதனைகள் மூலம் அமைதி, அறிவு மற்றும் ஆன்மீகத்தை பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எங்கள் உள்ளடக்கத்தில் பின்வருவன அடங்கும்:

✅ குர்ஆன் ஓதுதல் & தஃப்சீர்
✅ இஸ்லாமிய விரிவுரைகள் & நினைவூட்டல்கள்
✅ ஹதீஸ் & சுன்னா விளக்கங்கள்
✅ இஸ்லாமிய வரலாறு மற்றும் நபிமார்களின் கதைகள்
✅ தினசரி துவாக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவும், இஸ்லாம் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்தவும் எங்களுடன் சேருங்கள். வழக்கமான புதுப்பிப்புகளுக்கு குழுசேர மற்றும் அறிவிப்புகளை இயக்க மறக்காதீர்கள்!

மேலும் அறிய எங்களைப் பின்தொடரவும்:
[உங்கள் சமூக ஊடக இணைப்புகள்]

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக! அஸ்ஸலாமு அலைக்கும்.


---

நீங்கள் ஏதேனும் மாற்றங்களை விரும்பினால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்!


JABAR FAIZY

7 வயதில் தொழுகையை முறைப்படி கற்றுக்கொடுத்து ஏவ வேண்டும்.10 வயதில் தொழுகையை அலட்சியப்படுத்தினால் லேசான அடி கொடுக்கலாம் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில்.
படுக்கை பிரிப்பு 10 வயதில் ஆண், பெண் குழந்தைகளைத் தனித்தனி படுக்கைகளில் தூங்க வைக்க வேண்டும்.

"குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழுகையை ஏவுங்கள், பத்து வயதாகியும் தொழாவிட்டால் (அதற்காக) அடியுங்கள், மேலும் படுக்கைகளைத் தனித்தனியாக்கி விடுங்கள்" என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அபூதாவூத் ஹதீஸ் எண் 495,

5 days ago | [YT] | 53

JABAR FAIZY

NDTV conclave நிகழ்வில் H.Raja வுக்கு முடியாமல் போனது யாவருக்கும் தெரியும். லோ ஷுகரா அல்லது stroke எதுவுமா என்று அறுதியிட்டு சொல்லமுடியாத சூழல்.

ராஜாவும் அவரது உதவியாளர்களும் ராஜாவின் சொந்த Carலேயே Apollo சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தபோது அங்கிருந்த திமுகவின் Dr. S A S Hafeezullah அதை கடிந்து கொண்டு, Hotel ல் காரிலேயே அங்கிருந்த அருகாமை மருத்துவமனைக்கு முதலில் சென்று பின்பு அங்கிருந்து ஆம்புலன்ஸில் அபோலோ சென்றால் தான் ட்ராஃபிக் கடந்து நேரத்திற்கும் செல்லமுடியும் என்று அறிவுறுத்தியதாக தகவல்.

Golden hour ட்ரீட்மெண்ட் என்பது உடலுக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த முதல் சில மணி நிமிடங்கள் கொடுக்கும் அதிதீவிர சிகிச்சை. அதை ராஜாவுக்கு கிடைக்க வேண்டும் என்று போராடியவ ஹஃபீஸ் ஒரு மருத்துவர்.
ராஜா காலமெல்லாம் எதிர்க்கும் முஸ்லிம். அவரது நிலைப்பாட்டுக்கு முழுமையான எதிர்நிலைப்பாடு கொண்ட திமுக ஆள்.

எச்.ராஜா நல்லபடியாக உடல்தேறி வந்தபின் இனியாவது முஸ்லிம்களை கிருஸ்தவர்களை ஏதோ குற்றாவாளிகள் போல் சித்தரித்துப் பேசுவதை நிறுத்தவேண்டும்.

மேலும் கட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மாற்றுகட்சிக்காரருக்கும் நேயம்காட்டும் மாண்புகொண்ட மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் உணரவேண்டும்.

2 weeks ago | [YT] | 32

JABAR FAIZY

இரண்டாவது கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் (கி.பி. 634–644) நீதிக்கும் நேர்மைக்கும் உலகப்புகழ் பெற்றது.

அவர் வழங்கிய பல அதிரடித் தீர்ப்புகளில் மிகவும் பிரபலமான ஒன்று, எகிப்து ஆளுநரின் மகனுக்கும் ஒரு சாதாரண குடிமகனுக்கும் இடையிலான வழக்காகும்.
இந்த தீர்ப்பு "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பதற்கு இன்றுவரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
வழக்கின் பின்னணி

எகிப்தின் ஆளுநராக அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இருந்தபோது, அங்கே ஒரு குதிரைப் பந்தயம் நடைபெற்றது. அந்தப் பந்தயத்தில் ஆளுநரின் மகனுடைய குதிரையும், ஒரு சாதாரண எகிப்தியக் குடிமகனின் (கிப்தி இனத்தைச் சேர்ந்தவர்) குதிரையும் போட்டியிட்டன.

பந்தயத்தின் முடிவில், அந்தச் சாதாரண மனிதரின் குதிரை வெற்றி பெற்றது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆளுநரின் மகன், "நானோ கண்ணியமிக்கவர்களின் மகன்!" என்று கூறிக்கொண்டு, அந்த மனிதரைச் சாட்டையால் அடித்தார்.

உமர் (ரலி) அவர்களின் அதிரடி நடவடிக்கை
பாதிக்கப்பட்ட அந்த மனிதர் நீதியைத் தேடி எகிப்திலிருந்து மதீனாவிற்குப் பயணம் செய்து கலீஃபா உமரிடம் முறையிட்டார். புகாரைக் கேட்ட உமர் (ரலி), உடனடியாக ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸையும் அவரது மகனையும் மதீனாவிற்கு நேரில் வருமாறு உத்தரவிட்டார்.
வழங்கப்பட்ட தீர்ப்பு

இரு தரப்பு விசாரணையும் முடிந்த பிறகு, உமர் (ரலி) பின்வரும் அதிரடித் தீர்ப்பை வழங்கினார்:

* பழிக்குப் பழி: பாதிக்கப்பட்ட எகிப்தியரிடம் ஒரு சாட்டையைக் கொடுத்து, ஆளுநரின் மகனை எல்லோர் முன்னிலையிலும் திருப்பி அடிக்கச் சொன்னார். அந்த மனிதரும் தன்னை அடித்தது போலவே ஆளுநரின் மகனை அடித்தார்.

* ஆளுநருக்கு எச்சரிக்கை: பிறகு உமர் (ரலி), "அந்த ஆளுநரின் தலையிலும் ஒரு அடி கொடுங்கள், ஏனெனில் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அவரது மகன் உங்களை அடித்தார்" என்றார். ஆனால், அந்த மனிதர் "என்னை அடித்தவரை நான் அடித்துவிட்டேன், அது போதும்" என்று கூறி மறுத்துவிட்டார்

உமர் (ரலி) உதிர்த்த வரலாற்றுப் பொன்மொழி
இந்த வழக்கின் முடிவில் உமர் (ரலி) தனது ஆளுநரைப் பார்த்துப் பேசிய அந்த வரிகள் மனித உரிமை வரலாற்றில் மிக

முக்கியமானவை:

> "மக்களை அவர்களது தாய்கள் சுதந்திரமானவர்களாகவே பெற்றெடுத்தனர். அவ்வாறிருக்க, எப்போது முதல் அவர்களை நீங்கள் அடிமைகளாக மாற்றினீர்கள்?"
>
இந்த தீர்ப்பின் சிறப்பம்சங்கள்

* சமத்துவம்: ஒரு ஆளுநரின் மகனாக இருந்தாலும், தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதை உறுதிப்படுத்தினார்.

* துணிச்சல்: தனது நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளையும் தண்டிப்பதில் அவர் தயக்கம் காட்டவில்லை.

* மனித உரிமை: அடிமைத்தனம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்...

2 weeks ago | [YT] | 14

JABAR FAIZY

பெண்களே சமூகத்தின் முதுகெலும்பு ,
"பெண் பலவீனமாக இருக்கும்போது, வீடும் பலவீனமாகிறது.

வீடு பலவீனமாக இருக்கும்போது, குழந்தைகளும் பலவீனமாகிறார்கள்.

குழந்தைகள் பலவீனமாக இருக்கும்போது, சமூகமும் பலவீனமாகிறது."

அல்லாஹ் நம் பெண்களை பாதுகாப்பானாக. ஆமீன்!

2 weeks ago | [YT] | 53

JABAR FAIZY

அது கி.பி. 930 ஆம் ஆண்டு. சன்னி முஸ்லிம் அப்பாஸியக் கலிஃபாக்களின் சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல ஆட்டம் காணத் தொடங்கியிருந்த காலம் அது. பாக்தாத் நகரம் ஒருபுறம் கலிஃபாக்களின் கட்டுப்பாட்டில் இருக்க, மறுபுறம் அரேபியத் தீபகற்பத்தின் கிழக்கே (இன்றைய பஹ்ரைன் பகுதி) ஒரு பயங்கரமான புயல் மையங்கொண்டிருந்தது. அந்தப் புயலின் பெயர் 'கரமதியாக்கள்' (Qarmatians).

இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணான, தீவிரவாத சிந்தனை கொண்ட ஒரு குழு அது. அவர்களின் தலைவன் அபு தாஹிர் அல்-ஜன்னபி. இவன் சாதாரணமானவன் அல்ல. "ஹஜ் செய்வது என்பது சிலைகளை வணங்கும் செயல், அது அறியாமைக் காலத்து மூடநம்பிக்கை" என்று பகிரங்கமாகவே அறிவித்தவன். இவனது இந்த விபரீதக் கொள்கையை அமுல்படுத்த ஒரு கொடூரமானத் திட்டத்தைத் தீட்டினான்.

ஹஜ்ஜுப் பெருநாளின் முதல் நாள் (யவ்முத் தர்வியா). உலகம் முழுவதிலுமிருந்து வந்து குவிந்திருந்த ஹாஜிகள், வெள்ளை ஆடை அணிந்து, "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்" என்று இறைவனை தியானித்துக் கொண்டிருந்தனர். திடீரென மின்னல் வேகத்தில் புகுந்தது அபு தாஹிரின் குதிரைப்படை.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லை. புனிதத் தலம் என்ற மரியாதையும் இல்லை. கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள் கரமதியாக்கள். தொழுகையில் இருந்தவர்கள், தவாஃப் செய்து கொண்டிருந்தவர்கள் என சுமார் 10000 லிருந்து 30,000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்கள். புனிதக் கஅபாவின் தரை முழுவதும் ரத்த ஆறு ஓடியது.

வரலாறு காணாத அந்தச் செயலைச் செய்ததோடு அபு தாஹிர் நிற்கவில்லை. கஅபாவின் வாசலில் நின்றுகொண்டு, "நான்தான் இறைவன், அவனே படைக்கிறான், நானே அவர்களை அழிக்கிறேன்" என்று ஆணவத்தோடு கத்தினான். புனித குர்ஆன் வசனங்களை ஏளனமாக ஓடிக்கொண்டே, "நீங்கள் வணங்கும் இந்த ஆலயம் புனிதமானது என்றால், ஆப்ரஹாவிற்கு எதிராக அனுப்பிய அபாபீல் பறவைகளை இறைவன் என் மீது அனுப்பச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்று சவால் விட்டான்.

அத்தோடு முடியவில்லை அந்தக் கொடுமை. தாகம் தீர்க்கும் புனித ஸம்ஸம் கிணற்றில், கொல்லப்பட்ட ஹாஜிகளின் உடல்களைத் தூக்கி வீசி அந்தக் கிணற்றை பிணங்களால் நிரப்பினான். புனிதப் பள்ளிவாசலின் கதவுகளை உடைத்தெறிந்தான்.

இறுதியாக, இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியமாக மதிக்கும் அந்த 'ஹஜருல் அஸ்வத்' கல்லை நோக்கிச் சென்றான். தனது சம்மட்டியால் ஓங்கி அடித்து, அந்தக் கல்லைப் பெயர்த்து எடுத்தான். "இனி ஹஜ் செய்ய விரும்புபவர்கள் எங்கள் ஊரான பஹ்ரைனுக்கு வாருங்கள்" என்று கூறிவிட்டு, அந்தக் கல்லைத் தனது நாட்டிற்குக் கடத்திச் சென்றான்.

நம்ப முடிகிறதா? சுமார் 22 ஆண்டுகள் புனித கஅபா அந்த ஹஜருல் அஸ்வத் கல் இல்லாமலே வெறிச்சோடிப் போயிருந்தது. ஹஜ் கடமையும் சில காலம் நிறுத்தப்பட்டது. அப்பாஸியக் கலிஃபாக்களால் கூட இவர்களின் வேகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. கதை அத்துடன் முடியவில்லை. ஹஜருல் அஸ்வத் கல்லை அவர்கள் எடுத்துச் சென்ற பிறகு நடந்தவை இன்னும் சுவாரஸ்யமானவை...

புனித கஅபாவில் அந்த கருப்புக் கல் இருந்த இடம் 22 ஆண்டுகளாக வெறுமையாகவே இருந்தது. அப்பாஸிய கலிஃபாக்கள் கெஞ்சிக் கேட்டார்கள், மிரட்டிப் பார்த்தார்கள், பெரும் தொகையைத் தருவதாக ஆசை காட்டினார்கள். ஆனால், கரமதியாக்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

இறுதியில், எகிப்தை ஆண்ட ஃபாத்திமீத் ஷீயா வம்ச கலிஃபா 'அல்-மன்சூர்', கரமதியாக்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பினார். "நீங்கள் செய்தது இஸ்லாத்திற்கு விரோதமானது, உடனடியாக கல்லைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் உங்கள் மீது போர் தொடுப்பேன்" என்று மிரட்டல் விடுத்தார். கரமதியாக்கள் கொள்கையளவில் ஷீஆக்களின் ஒரு பிரிவினர் என்பதால், ஃபாத்திமீத் கலிஃபாவின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. (கொள்கை அளவில் இவர்கள் ஷீயாக்களாக இருந்தாலும் கவாரிஜ் கொள்கை தாக்கமும் அதிகளவில் இருந்தது. இதனால் பாத்திமி ஆட்சியாளர்களையும் இவர்கள் எதிரிகளாக தான் பார்த்தனர்.)

ஒரு வெள்ளிக்கிழமை காலை, ஈராக்கின் கூஃபா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு மூட்டை தூக்கி வீசப்பட்டது. மக்கள் பதறியடித்துச் சென்று பார்த்தபோது, அதற்குள் அந்தப் புனிதமான 'ஹஜருல் அஸ்வத்' கல் இருந்தது! அந்தக் கல்லுடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் திமிராக இப்படி எழுதப்பட்டிருந்தது: "எந்தக் கட்டளையின் பேரில் இதை எடுத்தோமோ, அதே கட்டளையின் பேரில் இதைத் திருப்பிக் கொடுக்கிறோம்."

அவர்கள் கல்லைத் திருப்பிக் கொடுத்தாலும், அதைச் சிதைத்திருந்தார்கள். மக்காவிலிருந்து பஹ்ரைனுக்குக் கொண்டு சென்றபோதும், அங்கிருந்து மீண்டும் ஈராக்கிற்குக் கொண்டு வந்தபோதும், அந்தக் கல் உடைந்து பல துண்டுகளாகச் சிதறியிருந்தது (சுமார் 7 துண்டுகள்). இன்று நாம் மக்காவில் பார்க்கும் ஹஜருல் அஸ்வத் கல்லைச் சுற்றி இருக்கும் அந்த 'வெள்ளி உறை' , அந்த உடைந்த துண்டுகளை ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. கரமதியாக்கள் செய்த அட்டூழியத்தின் வடு இன்றும் அந்தக் கல்லில் உள்ளது.

இவ்வளவு அக்கிரமம் செய்த அபு தாஹிர் நிம்மதியாக இறந்தானா? இல்லை. வரலாற்றுக் குறிப்புகளின்படி, அவன் ஒரு கொடூரமான நோயால் (Smallpox அல்லது Gangrene போன்ற நோய்) பாதிக்கப்பட்டு, உடல் அழுகி, புழுக்கள் அரித்து மிகக் கேவலமான முறையில் கி.பி 944-ல் மரணமடைந்தான். அவனுக்குப் பிறகு கரமதியாக்களின் சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல வலுவிழந்தது. அவர்கள் செய்த கொடுமைகளால் மக்களிடையேயும் வெறுப்பு உண்டானது. சுற்றியிருந்த கோத்திரங்கள் மற்றும் செல்ஜுக் துருக்கியர்களின் தாக்குதல்களால், கி.பி 1077-ல் கரமதியாக்களின் ஆட்சி அடியோடு அழிக்கப்பட்டது. இன்று வரலாற்றில் அவர்கள் ஒரு 'கரும்புள்ளி'யாக மட்டுமே எஞ்சி நிற்கிறார்கள்.

புனித கஅபாவை இடிக்க வந்த அப்ரஹாவும் அழிந்தான், கல்லைத் திருடிய கரமதியாக்களும் அழிந்தார்கள், மசூதியைக் கைப்பற்றிய ஜுஹைமானும் அழிந்தான். வரலாறு உணர்த்தும் பாடம் இதுதான்.

(சிலர் சம்பந்தமில்லாமல் இந்த பதிவையும் ஈரானையும் முடிச்சு போடுவார்கள் அவர்களுக்கான பதிவு அல்ல இது)

2 weeks ago | [YT] | 21

JABAR FAIZY

உங்கள் வாழ்க்கை என்பது ஒரு காதல் கதையைத் தவிர வேறொன்றுமில்லை.
உங்களுக்கும் இறைவனுக்கும் இடையிலான ஒரு காதல் கதை,

ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு அனுபவமும், ஒவ்வொரு வரமும், ஒவ்வொரு இழப்பும், ஒவ்வொரு வலியும் ஒரே ஒரு காரணத்திற்காகவே உங்கள் பாதையில் அனுப்பப்படுகின்றன: அது உங்களை அவனிடமே மீண்டும் கொண்டு சேர்ப்பதற்காகத்தான்.

2 weeks ago | [YT] | 47

JABAR FAIZY

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு முஸ்லிம் என் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டிருக்கும் காலமெல்லாம்,

மலக்குகள் அவர் மீது ரஹ்மத்துக்களைப் பொழிந்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்போது அதிகமாக கூறுவதும், குறைவாக கூறுவதும் அடியானின் விருப்பமாகும்.

நூல் : இப்னுமாஜா 907

2 weeks ago | [YT] | 12

JABAR FAIZY

ஒரு முறை ஒரு மாணவர் மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் வந்து சொன்னார் :

“நான் அல்லாஹ்வை அடைய விரும்புகிறேன்… ஆனால் இந்த உலகம் எனக்கு தடையாக இருக்கிறது.”

மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்த மாணவனை ஒரு நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.

பின்னர் கூறினார்கள்:

“நீருக்குள்ளே நீ இறங்கு” என்று

மாணவர் நீரில் இறங்கியவுடன்،

மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவரின் தலையை நீரில் அழுத்த ஆரம்பித்தார்கள்.

அவர் கைகளையும், கால்களையும்
அசைக்க ஆரம்பித்தார்!

சிறிது நேரம் கழித்து தலைையை வெளியே எடுக்க، மாணவன் மூச்சு விட கஷ்டப்பட்டார்.

மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் கேட்டார்கள் :

“நீரில் இருந்த போது உனக்கு என்ன ஆசை தோன்றியது?”

மாணவன் பதிலளித்தார் :

“மூச்சு… மூச்சு மட்டுமே!”

அப்போது மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் ;

“அல்லாஹ்வை அடைய வேண்டுமென்றால் இப்படித் தான் தேட்டம் இருக்க வேண்டும்…

மூச்சைப் போலத்தான் அல்லாஹ்விற்கான தாகமும், தாபமும் இருக்க வேண்டும்…

அப்போது அல்லாஹ் உன் முன்னே தன்னை வெளிப்படுத்துவான்.”

وَٱلَّذِینَ ءَامَنُوۤا۟ أَشَدُّ حُبࣰّا لِّلَّهِۗ

ஆனால், நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை மிகவும் கடுமையாக நேசிப்பார்கள்.

அல் குர்ஆன் 2:165.

2 weeks ago | [YT] | 14

JABAR FAIZY

உஹுத் யுத்தத்தின் போது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி மதீனா மாநகரை எட்டியது. இதைக் கேட்ட அன்சாரிப் பெண்மணி ஒருவர், பதறியடித்துக் கொண்டு மதீனாவிலிருந்து உஹுத் களத்தை நோக்கி விரைந்தார்.

வழியில் அவருக்கு தனது கணவர், மகன், தந்தை மற்றும் சகோதரர் என அனைவரும் அந்த யுத்தத்தில் ஷஹீதாகி விட்டார்கள் என்ற செய்தி சொல்லப்பட்டது. ஆனால், அந்தத் துயரமான செய்திகளைக் கேட்டு அவர் கலங்கிவிடவில்லை. அவரது ஒரே கேள்வியாக இருந்தது "அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்?" என்பது மட்டுமே. ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டதும், அவர் உஹுத் போர்க்களத்தில் தேடிச் சென்று அண்ணல் நபிகளாரைக் கண்டார். "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை, எனக்கு நேர்ந்த மற்ற எந்த இழப்பையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும். நீங்கள் நலமாக இருந்தால் ஒவ்வொரு கஷ்டமும் எனக்கு எளிதானதே..." என்று உருக்கமாகக் கூறினார்.

உலகெங்கிலும் கொலைகளும், குழப்பங்களும், சோதனைகளும் மலிந்த ஒரு காலம் இறுதி நேரத்தில் வரும் என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அத்தகைய காலங்களில் குர்ஆன், சுன்னத் மற்றும் தனது கண்ணியமிக்க குடும்பத்தினர் (அஹ்லுல்பைத்) மூலம் தீனைப் பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருபோதும் நஷ்டமடைய மாட்டார்கள் என்றும் அவர்கள் வாக்களித்துள்ளார்கள். சஹாபாக்களின் அந்த அளவற்ற அன்பு, விசுவாசம் மற்றும் தைரியத்தில் ஒரு துளியையேனும் அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக.

3 weeks ago | [YT] | 18

JABAR FAIZY

"ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்"
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. முதுமைக்கு முன் வாலிபத்தை,
2. நோய்க்கு முன் ஆரோக்கியத்தை,
3. வறுமைக்கு முன் செல்வத்தை,
4. வேலைப்பளுவுக்கு முன் ஓய்வை,
5. மரணத்திற்கு முன் வாழ்க்கையை."

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டது.

(ஆதாரம்: முஸ்தத்ரக் அல்-ஹாகிம்: 7846 - அல்-பைஹகீ: ஷுஅபுல் ஈமான் 10248)

வாலிபம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் ஒருவர் தனது உடல் மற்றும் மன வலிமையைப் பயன்படுத்தி நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். முதுமை அடைந்த பிறகு, உடல் மற்றும் மன வலிமை குறைந்துவிடும், எனவே வாலிபத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாலிபத்தை வீணாக்காமல், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

3 weeks ago | [YT] | 54