All news


AP tv

பண்டைய தமிழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு நம் முன்னோர்களை வீழ்த்தி நமது நிலத்தை கைபற்றிய ஒரு கும்பல், கால ஓட்டத்தில் நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிடாதபடி, வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிடாதபடி பார்த்துக்கொண்டதோடு, பின்னாளில் வணிகத்தின் பெயரில் நுழைந்து அதிகாரத்தை கைபற்றிய ஐரோப்பியர்களோடு கைகோர்த்துக் கொண்டு இன்றுவரை அவர்களுக்கு விசுவாசமான ஏஜெண்டுகளாக, நம்பகமான அடியாளாக, அவர்கள் அமைத்துக் கொடுத்த ஆரிய திராவிட கருத்தியலை கேடயமாக பயன்படுத்தி நம்மையும் நமது தாய் நிலத்தையும் நயவஞ்சகமாக ஆண்டு வருவதோடு, நாம் எந்த காலத்திலும் மீண்டுவிடாதபடி நமக்குள் இருக்கும் தனித்துவமான சில அடையாளங்களை முரண்களாக கட்டமைத்து, கூர் தீட்டி, மோதல்களை உருவாக்கி சமூகத்தில் ஒரு நிரந்தர பிரிவினையையும் உருவாக்கி நம்மை ஆண்டு வருவதோடு நாம் எந்த காலத்திலும் அவர்களுக்கு எதிராக திரும்பிவிடாதவாறு சமூக அரசியல் சூழலையும் கட்டமைத்திருக்கிற நிலையில்,

அதையெல்லாம் தகர்த்து, இன்று அவர்களில் பிரதான அடியாளான திராவிடத்தின் அடிப்படையே ஆட்டம் காணும் அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, இந்த ஆரிய, திராவிட, தலீத்திய, ஆரியதிராவிட கம்யூனிஸ்ட் கும்பல் உருவாக்கிய முரண்களையும் தாண்டி தமிழர்கள் தங்கள் தனித்துவத்தோடு ஒன்றினைந்து செயல்பட முடியும் என்கிற புரிதலையும் உருவாக்கி, அதற்கு அடிப்படையாக "தமிழர் தேசியம்" என்கிற கருத்தியலையும் தத்துவார்த்த ரீதியாக, அதுவும் நமது பண்டைய வரலாற்றிலிருந்து மீட்டு எடுத்து தந்து இன்று உலகத் தமிழர்களுக்கு எல்லாம் புதிய நம்பிக்கையை தந்திருக்கும் தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் அவர்களின் பிறந்த நாளை உலகத் தமிழர் யாவரும் "தமிழர் தேசிய எழுச்சி நாள்" விழாவாகக் கொண்டாடுவோம் உலகத் தமிழர்களே....!

தமிழர்களை வீழ்த்த வந்த கருத்தியல்களையும் அதன் தள கர்த்தாக்களையும் இதுநாள் வரை கொண்டாடிய நமக்கு, நமக்கான அதிகார அரசியலை, நமது தாய் நிலத்தை நாமே ஆளும் சூத்திரத்தை நமக்கு கட்டமைத்து கற்றுத் தந்த தந்தையை கொண்டாட கசக்கவா போகிறது....????

இதுநாள் வரை இந்த ஆரிய திராவிட நயவஞ்சக கூட்டம் கை காட்டிய நபர்களையெல்லாம் ஆளுமையாக ஏற்றுக்கொண்டு, அடையாளமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்த நமக்கு, நமக்கான அரசியலை, அதிகாரத்தை, நாளைய உலகை கனவு கண்ட தீர்க்கதரிசியை, அவதாரத் தந்தையை கொண்டாட தெரியாதா என்ன.......!!!!

ஊர்கள் தோறும் வேர்கள் தோறும் தமிழர் தேசிய எழுச்சி நாளை உற்சாகத்தோடு கொண்டாடுவோம், அதுதான் நமது தாய் நிலத்தின் மீது நாம் வைத்திருக்கும் மரியாதைக்கு, பற்றுக்கும் உகந்ததாக இருக்கும் உறவுகளே....!

நீங்கள் ஆரியம் திராவிடம் பேசும்போதும், தலீத்தியம், திராவிட கம்யூனிசம் பேசும்போதும் உங்களை ஊக்கப்படுத்திய கூட்டம் உங்களுக்கான அதிகார அரசியலை பேசும்போதும், உங்கள் நிலத்தின் மீதான உங்கள் ஆளும் உரிமையை பேசும்போதும் பதற்றமாகிறது என்றால், அவர்கள் எப்படி நமக்கான பிரதிநிதிகளாக, அவர்களின் கருத்தியல் எப்படி நமக்கான தத்துவமாக, அவர்களின் குரல் எப்படி நமக்கான குரலாக இருக்க முடியும் என்கிற கேள்வி வருகிறதல்லவா..... ???

ஆனால் அதைத்தான் இவ்வளவு காலம் நாம் செய்துகொண்டிருந்தோம், அதனால்தான் கூப்பிடும் தொலைவில் இருக்கும் நமது தொப்புள்கொடி உறவுகளை இழந்தோம், இன்று இங்கேயே நம்மை ஒடுக்கத் துணிந்திருக்கிறார்கள், அதனால்தான் இன்று நமது விளை நிலங்கள் எல்லாம் பாலை நிலங்களாக மாறிக்கொண்டு இருக்கிறது, தூத்துக்குடியில் நம்மை தனிமைப் படுத்தி துப்பாக்கி பிரயோகம் செய்ய முடிகிறது, நீர் தேக்கங்கள் வரண்டு கிடக்கிறது, ஒரு தலைமுறையே கஞ்சாவுக்கும் டாஸ்மார்க் சாராயத்திற்கும் அடிமையாக்கப்பட்டு எதிர்காலமே கேள்வி குறியாகிக் கிடக்கிறது, திராவிட கும்பலோ சாராய ஆலை பதிபர்களாக, கஞ்சா புரோக்கர்களாக, கூலிப்படை தலைவர்களாக வளம் வருகிறார்கள், வடக்கிலிருந்து வருகிறவர்களை குடியேற்றுவதில் இருக்கும் தீவிரம் குடி நோயால் எதிர்காலத்தை இழக்கும் தமிழ் சமூகத்தின் மீது இல்லை, எவ்வளவு தெளிவாக நம்மை ஒடுக்குகிறார்கள் என்பது புரிகிறது தானே....!!!?

எதிரிகள் எவ்வளவு தெளிவாக இருந்தால் நம்மை இவ்வாறு திட்டமிட்டு வீழ்த்தியிருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறதா உங்களுக்கு.....???

இவ்வளவு காலமும் தமிழ் இனத்தின் நண்பன் யார், எதிரி யார், துரோகி யார் என்கிற புரிதல் இல்லாமல் எதிரிகளின் தலைமையிலேயே விடுதலையை தேடித்திரிந்த இனத்திற்கு இன்று நாம் யார், நமது வரலாறு என்ன என்கிற புரிதல் வந்திருக்கிறது என்றால், அந்த புரிதலை நமக்கு தந்த தலைவனை நாம் எப்படி கொண்டாட வேண்டும்.....???

தமிழர்களின் தலையெழுத்தை திருத்தி எழுதிய தலைவனின் பிறந்த நாளை, அந்த தீர்க்க தரிசியின் அவதாரத் திருநாளை "தமிழர் தேசிய எழுச்சி நாள்" விழாவாகக் கொண்டாடுவோம் உறவுகளே, உலகத் தமிழர்களே.......!!!!

வெல்க தமிழர்....!
வாழ்க தமிழரினம்....!!

#தமிழர்_தேசிய_எழுச்சி_நாள்
#நவம்பர்_07
#செல்வா_பாண்டியர்
#தமிழர்_நடுவம்

#நவம்பர்7
#தமிழர்தேசியஎழுச்சிநாள்
#செல்வாபாண்டியர்
#தமிழர்நடுவம்

2 years ago | [YT] | 3