AZAGAPPAN KARUPPAIAH

Every song was a picture seen by the poet in his heart, thus this channel 'tries' to bring those pictures through videos, to help us feel the song better, understanding them and appreciating them by seeing them from the place of the poet.
Thus, every devotional song becomes more devotional here.

azagappan111@gmail.com


AZAGAPPAN KARUPPAIAH

அருமையான பதிவு !!! அரோகரா !!!

3 years ago | [YT] | 2

AZAGAPPAN KARUPPAIAH

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!!

நாடு சுதந்திரம் பெற தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்களுக்கும்,

சுதந்திரம் பெற்ற பிறகு நாடு முன்னேற்றம் பெற உழைத்தவர்களுக்கும்,

நம்முடைய சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு,

உலகம் வியக்கும் உன்னத பாரதமாய் நாடு உருவெடுப்பதற்கு உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!

🇮🇳🎉🎊

https://youtu.be/Hyp1W9_P_RI

3 years ago | [YT] | 33

AZAGAPPAN KARUPPAIAH

சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் நாயனார் குருபூஜை தினம் இன்று- ஆடி சுவாதித் திருநாள். (04/08/2022)

சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.

தம்பிரான் தோழர்' என ஈசனுக்கே தோழராக இருந்து பேறுபெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார். `திருத்தொண்டத் தொகை' என்ற அற்புத நூலை எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை உலகறியச் செய்த அற்புதப் பெருமகனார். தேவார மூவரில் இவர் பாடிய பாடல்கள், ஏழாம் திருமுறையாக உள்ளன. கயிலாயத்தில் ஈசனுக்குத் தொண்டராக இருந்து, பெருகிவந்த ஆலகால விஷத்தைத் திரட்டிக்கொடுத்து `ஆலால சுந்தரர்' என்ற பெயரைப் பெற்றவரே பூலோகத்தில் `சுந்தரமூர்த்தி' என்ற பெயரில் பிறந்தார். திருநாவலூரில் சடையனார்-இசை ஞானியார் தம்பதியின் மகனாகப் பிறந்து, திருமுனைப்பாடி நாட்டு அரசரான நரசிங்க முனையரையருக்கு வளர்ப்பு மகனாக வளர்ந்து, திருமண வேளையில் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டவர் சுந்தரர்.

அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.

சேரமான் பெருமாள் நாயனார் என வழங்கப்பட்டார். இவர் சிவ பூசையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் கழறிற்று அறிவார் எனப் போற்றப்பட்டார் என்றும் பெரியபுராணம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

இப்படி இருக்கையில் ஒருநாள் பூஜை முடிவில் சிவனது சிலம்பொலி கேட்கவில்லை! உடனே சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வருத்தம்! இனி இவ்வுடல் இருந்து என்ன பயன்? என்று வாளை எடுத்துத் தன்னை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.

மறு நொடி சிவபெருமான் சிலம்பை ஒலிக்கச் செய்து, “அன்பனே! அவசரப்பட்டுப் பிராணத் தியாகம் செய்து விடாதே. சுந்தர மூர்த்தியின் பாடலில் சற்று ஆடி அமிழ்ந்து விட்டோம். அதனால் வரத் தாமதமாகிவிட்டது!” என்று கூறி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமையை வெளிப்படுத்தினார்.

சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பெரும் வியப்பு. சிவபெருமானின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட அந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளை நேரில் சென்று தரிசித்திட வேண்டும் என்று நினைத்து உடனே திருவாரூருக்குச் சென்று சுவாமிகளை வணங்கி நின்றான்.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் மீது மிகவும் நட்பு பாராட்டிய சேரமான் பெருமான் நாயனார் அவரைத் தம்மோடு கொடுங்காளூருக்கு அழைத்துச் சென்று உபசரித்து மகிழ்ந்தார். பின்னர் சுந்தரர் ஆரூர் சென்றார். இருவரும் மாற்றி மாற்றி இவர் அங்கு சென்று தங்குவதும் அவர் இங்கு வந்து தங்குவதுமாய் இருவரின் நட்பும் மிகப் பலப்பட்டு விட்டது.


 
ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களம் சென்று சிவபெருமானைத் தரிசித்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். சிவபெருமான் ஒரு வெள்ளையானையை அனுப்பிச் சுந்தரரை அதில் ஏறிவரும்படி பணித்தார். சுந்தரரும் சிவனால் அனுப்பப்பட்ட அந்த வெள்ளை யானை மீது ஏறி அமர்ந்து திருக்கயிலாயம் நோக்கிச் செல்கையில், தன் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரை நினைத்து “”அடடா! அவரும் நம்மோடு இருந்தால் மிகச் சிறப்பாக இருக்குமே” என்று எண்ணினார்.

அப்போது கொடுங்காளூரில் அரண்மனையில் நீராடிக் கொண்டிருந்தார் சேரமான் பெருமாள். அந்த நிலையிலேயே தன்னைப்பற்றி சுந்தரர் நினைப்பது பளிச்சென்று அவருக்குப் புலப்பட்டது! உடனே, அப்படியே அருகிலிருந்த குதிரை மீது தாவி ஏறி திருவஞ்சைக்களம் சென்றார். இவர் சென்று அடைவதற்குள் சுந்தரர் ஐராவதத்தின்மீது ஏறி விண்ணில் சென்று கொண்டிருந்தார்.

அதைக் கண்ட சேரமான் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்தை (#நமசிவாய) ஓதினார். உடனே அக்குதிரை விருட்டென்று துள்ளித்தாவி விண்ணில் பாய்ந்து விரைவாகப் பறந்து சுந்தரமூர்த்தி நயனாரின் யானையை அடைந்து அதனை வலம் வந்து அதற்கு முன்னால் சென்றது! அதில் அமர்ந்தபடியே சேரமான் சுந்தரரை வணங்கிய படியே இருந்தார்.

இருவரும் கயிலாயத்தை அடைந்து கீழே இறங்கி பல வாயில்களைக் கடந்து பெருமாள் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தனர். அதன் வாயிலில் சேரமான் பெருமாள் நாயினார் தடுத்து நிறுத்தப்பட்டார். சுந்தரர் மட்டும் உள்ளே சென்று சிவபெருமான் முன் விழுந்து வணங்கித் துதித்துச் சேரர் கோன் வாயிலில் நிற்பதைக் கூறுகிறார். 

சிவபெருமான் புன்னகையுடன் சேரமானை உள்ளே அழைக்கிறார். “”இங்கே உம்மை நாம் அழையாதிருக்க எப்படி வந்தீர்?” என்று வினவ சேரமான் சிவனைப் பன்முறை விழுந்து வணங்கி, “”எனையாளும் எம் பெருமானே!

சுந்தர மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிச் சென்ற வெள்ளையானைக்கு முன் அவரைச் சேவித்துக் கொண்டே இங்கே வந்து விட்டேன். தேவரீரின் ஐந்தெழுத்து மந்திரமே யான் ஏறிய புரவிக்கு அந்த மாயசக்தியைத் தந்து இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்ந்தது. தேவரீர் பொழியும் கருணை வெள்ளம் அடியேனை இங்கே கொண்டு வந்து ஒதுக்கியதால் இப்பேறு பெற்றேன். மலைமகள் நாயகனே! ஒரு விண்ணப்பம். அடியேன் தேவரீரது திருவருள் துணை கொண்டு திருவுலா ஒன்று பாடியுள்ளேன். அதனைக் கேட்டருள வேண்டும்!” என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

அப்பொழுது சிவபெருமான் இளம் புன்னகையுடன் “”அப்படியா… சரி… அதனைச் சொல்!” என்று திருவாய் மலர்ந்தருள, சேரமான் பெருமாள் நாயனார், உடனே திருக்கயிலாய ஞானவுலாவை ஆசுகவியாகப் பாடிப் பெருமானைக் கேட்கும்படி செய்தார்.

அதனைச் செவிமடுத்த சிவன் அகமகிழ்ந்து அருள் செய்து, “”நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு!” என்று பணித்தார். சேரமான் பெருமாள் நாயனாரும் சிவகண நாதராகிச் சிவமூர்த்திக்குத் தொண்டரானார்.

 அழகுத் தமிழால் ஆண்டவனையே வசப்படுத்திய சுந்தரர் மற்றும் சேரமான் நாயனார் குருபூஜை தினம் இன்று- ஆடி சுவாதித் திருநாள்.

3 years ago (edited) | [YT] | 80

AZAGAPPAN KARUPPAIAH

மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 03/07/2022

4 years ago | [YT] | 85

AZAGAPPAN KARUPPAIAH

ஞாயிறு பிரதோஷம் - 26/06/2022

4 years ago | [YT] | 103

AZAGAPPAN KARUPPAIAH

திருஞானசம்பந்தர் நாயனார் திருநல்லூர்ப் பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில் சுற்றத்தாரோடு சிவசோதியில் ஐக்கியமான முக்கிய திருநாள் - வைகாசி மூலம் - 19/05/2022

4 years ago | [YT] | 116

AZAGAPPAN KARUPPAIAH

வருதினி ஏகாதசி - 26/04/2022

4 years ago | [YT] | 113

AZAGAPPAN KARUPPAIAH

சித்திரை திருவோணம் - நடராஜர் அபிஷேகம் - 24/04/2022

4 years ago (edited) | [YT] | 103

AZAGAPPAN KARUPPAIAH

இன்று பிரதோஷம் - 14/04/2022

சிவாய நம...

அனைவருக்கும் இனிய சுபகிருது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

4 years ago | [YT] | 116

AZAGAPPAN KARUPPAIAH

08/04/2022 கணநாத நாயனார் குருபூஜை !

கணநாத நாயனார்:

சோழ மண்டலத்தில் சீர்காழியில் பிராமண குலத்தில் பிறந்தவர்தான் கணநாத நாயனார். அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் திருத்தோணியப்பரை மூன்று பொழுதும் போற்றித் துதித்து... உள்ளம் உருக... வழிபாடு செய்து வந்தார். குலத்திற்கு ஏற்ப சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார்.


சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்யும் பணியை உயர்ந்த அறமாக கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார். இறைவனுக்கு தேவையான திருநந்தனவனம் வைத்தல்,
பூக்கொய்தல்,
திருமாலைக்கட்டல்,
திருமஞ்சனமெடுத்தல்,
திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றல், திருமுறையெழுதல், திருமுறைவாசித்தல்
முதலாகிய திருத்தொண்டுகளையும், மேலும் அடியார்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வந்தார்.


திருத்தலம் தொடர்பான பணிகளில் விருப்பம் கொண்டவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு திருத்தொண்டினைத் தேர்ந்தெடுக்கச் செய்து, பின் அதனை முறையே பயிற்றுவிப்பார். பின் நியாயம் தவறாது அத்தொண்டினையும், அந்த தொண்டினை செய்யக்கூடியவரையும் ஊக்கப்படுத்துவார்.


சமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைத் தினந்தோறும் மூன்று பொழுதிலும் விதிப்படி பூஜை செய்து கொண்டு வந்தார். இறைவழிபாட்டின் இனிமையையும், தனிமையையும் உணர்ந்திருந்த இவர் இல்லத்தின் இனிமையையும் நன்கு உணர்ந்திருந்தார். பொய்யில் புலவர் வகுத்த இல்லறத்தின் இனிமையையும், இல்லற நெறியையும் நன்கு உணர்ந்து மனையாளோடு கருத்து ஒருமித்து வாழ்ந்து வந்தார்.


கணநாதரின் திருத்தொண்டினையும், பக்தியின் மேன்மையையும் கண்டு அவருக்குப் பேரின்ப நிலையை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருத்தோணியப்பர். இந்த மண்ணுலகில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த அடியார், இறைவனின் அருளால் பேரின்ப வீடு பெற்றுச் சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி பெற்றுத் திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார்.

4 years ago | [YT] | 60