"திருக்காரணி" சேனலில் இன்பம் தரும் ஆன்மிக வீடியோக்கள்,
கோயிலின் புகழ், நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக வாழ்க்கை முறைகள் குறித்து புது பார்வையில் காணலாம்�.தமிழ்நாட்டு கோவில்களின் தொன்மை மற்றும் முற்பட்ட கட்டிடக் கலையை அழகாக வெளியிடும் நவீன வடிவத்தில் வீடியோ தொகுப்புகள்.கோவில் வரலாறு, சுவாரஸ்ய தகவல்கள், திருவிழா நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்புகள்,ஆன்மிக பாடல்கள், பிரார்த்தனைகள்பண்டிகை சிறப்புக்கள் மற்றும் கட்டுரை தொகுப்பு வீடியோக்கள்.
பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் சப்ஸ்க்ரைப் செய்து பக்கத்திலிருக்கும் பெல் ஐகானை அழுத்துங்கள் உங்கள் கருத்துகளை கீழே கமென்ட் செய்ய மறக்கவேண்டாம்!
THIRUKARANI BHAKTHI
“2025 உங்களுக்கு எப்படி போச்சு?”
👇
1 month ago | [YT] | 2
View 0 replies
THIRUKARANI BHAKTHI
“ஐயப்பன் அருள் எப்போது அதிகமாக உணர்கிறீர்கள்?”
1 month ago | [YT] | 6
View 0 replies
THIRUKARANI BHAKTHI
🌅 நீங்கள் எந்த நேரத்தில் ஆன்மீக Shorts பார்க்க விரும்புவீர்கள்?
1 month ago | [YT] | 3
View 0 replies
THIRUKARANI BHAKTHI
பக்தி உங்களுள் எப்போ வந்தது?
1 month ago | [YT] | 3
View 0 replies
THIRUKARANI BHAKTHI
காலை எழுந்ததும் நீங்கள் சொல்லும் முதல் ஸ்லோகம்?
நல்ல நாள் நல்ல மந்திரத்திலிருந்து தொடங்கட்டும் ✨
👉 கமெண்ட்ஸ்ல கூட சொல்லுங்க 🙏
1 month ago | [YT] | 8
View 1 reply
THIRUKARANI BHAKTHI
உங்களுக்கு பிடிச்ச சிவன் வடிவம்?
1 month ago | [YT] | 7
View 2 replies
THIRUKARANI BHAKTHI
எந்த மந்திரம் உங்களுக்கு
மன நிம்மதி தருகிறது.
2 months ago | [YT] | 5
View 6 replies
THIRUKARANI BHAKTHI
இன்றைய 12 ராசி பலன் 🌞 | 13 நவம்பர் 2025 | இன்று உங்கள் நாள் எப்படி? 🔮
இன்றைய நாள் உங்கள் ராசிக்கென்ன பலன் சொல்லுது பாருங்க! 🌟
நம்பிக்கையுடன் நாளை தொடங்குங்கள் 💫
🙏 உங்கள் ராசி எது என்று கமெண்ட்ல சொல்லுங்க!
#இன்றையராசிபலன் #RasiPalan #TamilAstrology #DailyRasiPalan #TodayRasiPalan #TamilHoroscope #ZodiacSigns
2 months ago | [YT] | 3
View 1 reply
THIRUKARANI BHAKTHI
சிவ குடும்பத்தில் உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்? 🙏❤️
இப்போதே Vote பண்ணுங்க 🗳️✨
#சிவகுடும்பம் #LordShiva #Murugan #Vinayagar #Parvathi #Ayyappan #DevotionalPost #TamilDevotional #HinduGods #SpiritualVibes
3 months ago | [YT] | 9
View 3 replies
THIRUKARANI BHAKTHI
#என்ன #ஆட்டம் #ஆடுகிறாய் #மனிதா!
#நீ #மரணித்த பின் நடப்பவைகளை
பற்றி தெரிந்து கொள்.
இறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்...
1. அறிவியலில் மரணம்
2. மரணித்த அடுத்த வினாடி
3. உடல் குளிர்ச்சியடைகின்றது
4. உடல் கனக்கின்றது
5. பாக்டீரியாக்களின் பணி ஆரம்பம்
6. துர்நாற்றம் வீசத் தொடங்கும்
7. மோப்பம் பிடிக்கும் ஈக்கள்
8. உப்பிப்போகும் உடல்
அழகு, கண்ணியம், பட்டம், பதவி எல்லாம் உயிர் உள்ளவரைதான். உயிர் பிரிந்ததும் அவை அனைத்தும் செல்லாக் காசாகின்றன. உயிர் பிரிந்ததும் யாரும் பெயர், பட்டம், பதவிகளைக் கூறி அழைப்பதில்லை. ஒரு நாளைக்குமேல் வீட்டில் வைத்திருப்பதுமில்லை. வைத்துக்கொள்ள விரும்புவதுமில்லை. வைத்திருந்தாலும் நேரம் செல்லச் செல்ல உடற் பாகங்கள் அழுகி, பழுதடைந்து துர் நாற்றம் வீச ஆரம்பிக்கின்றது. எதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள் இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத்தம். உணவு இரைப்பையில் இருக்கும் வரை சுத்தம் வாந்தியாகவோ, மலமாகவோ வெளியேறினால் அசிங்கம். நீர் உள்ளிருக்கும் வரை சுத்தம். சிறுநீராகவோ, வியர்வையாகவோ, இரத்தமாகவோ வெளியேறினால் அசுத்தம்தான். அதேபோன்று உடலினுள் சுவாசமும் , உயிரும் இருக்கும்வர உடல் சுத்தம்தான். ஆனால் அவை பிரிந்துவிட்டால் அந்த உடல் அசுத்தமாகி அழுக்குற்று பழுதடைய ஆரம்பிக்கின்றது. மூச்சு உடலை விட்டுப் பிரிந்ததும் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அவை உருக்குலைய ஆரம்பிக்கின்றன.
அறிவியலில் மரணம்:
இதயம் துடிப்பது நின்றுவிட்டால் அதைத்தான் மரணம் என்று பொதுவாக நாம் நம்புகின்றோம். ஆனால் மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது “உடலிலுள்ள உயிர்க் கலங்களின் இயக்கமின்மை” என்று வரையறுக்கப்படுகின்றது. மருத்துவ அறிவியல் மரணத்தை இரு வகையாகப் பிரித்து நோக்குகின்றது. அவை "மூளைச் சாவு" (Cerebral death) மற்றும் "மருத்துவச் சாவு" (Clinical death) என்பனவாகும்.
மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்றுவிடுவதாகும். அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன. இதயம் நின்று போய்விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை நமது மூளை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். அந்த சில நிமிடங்களுக்குப் பின்பு இருந்த ஆக்சிஜன் வாயுவும் தீர்ந்துபோவதால் மூளைக் கலங்களும் இறந்து மூளை இயக்கமற்று செயலிழந்து விடுகிறது. இதுவே மூளைச் சாவு எனப்படுகின்றது.
மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான இறப்பாகும். இதயம் நின்றாலும் அழுத்தங்கள் கொடுத்து அல்லது வேறு செயற்கை இயந்திர இதயங்களின் துணையோடு இயங்க வைக்கலாம். ஆனால் மூளை இறந்துவிட்டால் அதன் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது. இப்போதுதான் ஒருவர் உண்மையிலேயே மரணம் அடைந்ததாக கருதப்படுகிறார். எனவே அறிவியலின்படி மூளையும், இதயமும் தங்களது இயக்கத்தை நிறுத்துவதே மரணமாகும்.
மரணித்த அடுத்த வினாடி…?
இதயத்தின் துடிப்பு நின்று அதன் காரணமாக மூளையும் இறந்துவிட்டால் உடலின் எப்பகுதியாலும் இரத்தத்தையோ சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் வாயுவையோ பெற்றுக்கொள்ள முடியாதுபோகின்றது. எனவே உடலில் உள்ள இலட்சக்கணக்கான கலங்களும் மூச்சுத் திணறி இறக்க ஆரம்பிக்கின்றன. சிலருக்கு உடலிலிருந்து மலமும், சிறு நீரும்கூட வெளியேறுகின்றது. முகத்தின் தோல்கள் இறுக்கமடைந்து முக சுருக்கங்கள் மறைந்துவிடும்.
அவர் கடைசியாக சுவாசித்த மூச்சும் அவரது நுரையீரலில் ஏற்கனவே இருந்த காற்றும் அப்படியே அவரது உடலில் தங்கியிருப்பதால் இறந்தவரின் உடலை வேகமாக அழுத்தினாலோ அல்லது புரட்டினாலோ அவர்களிடம் இருந்து முனங்கள் சப்தம் கேட்கும். மூச்சு விடுவதுபோன்று நெஞ்சு ஏரி இறங்கும். சிலர் இதைதான் அவர்கள் இறந்த பிறகும் பேசினார்கள், மூச்சு விட்டார்கள் என்று கூறுவார்கள். நாம் இறந்த உடனே நமது உடல் உறுப்புகளும் இறந்துவிடுவதில்லை. நமது இதயம், கண்கள், சிறுநீரகம் போன்ற சில உடல் உறுப்புகள் செயல்படும் திறனோடுதான் இருக்கும். எனவே, இறந்த அடுத்த சில வினாடிகளிலேயே உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் மூலம் அதை வேறு ஒருவருக்கு பொறுத்த முடியும் என்கிறது மருத்துவம்.
உடல் குளிர்ச்சியடைகின்றது:
ஆக்சிஜன் இன்றி கலங்கள் மூச்சிறைத்து மூர்ச்சையாவதால் படிப்படியாக உடலின் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கின்றது. இதனை அல்கோர் மோர்டிஸ் (Algor mortis) என்பர். நிமிடத்திற்கு 1.5 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெப்பம் வெளியேறி உடல் குளிர்ச்சியடையும். இந்நேரம் இறந்த ஒருவரின் உடலைத் தொட்டுப்பார்த்தால் அவ்வுடல் குளிர்ச்சியடைந்திருக்கும்.
உடலின் நிறம் மாறுகின்றது.
இரத்த ஓட்டம் நின்றிருப்பதாலும் புவியின் ஈர்ப்பு விசையாலும் உடலில் இருக்கும் மொத்த இரத்தமும் இரத்தக் குழாய்களிலிருந்து வடிந்து உடலின் கீழ்ப் பகுதியில் வந்துசேரும். இதனால் உடலின் மேல் பகுதி மங்கலான வெளிர் நிறத்திலும் இரத்தம் திரட்சியடைந்திருக்கும் அடிப்பகுதி ஊதா நிறத்திற்கும் மாறும். ஊதா நிறத்தில் புள்ளிகளும் தோன்றியிருக்கும். இது லிவர் மார்டிஸ் (livor mortis)
என்று கூறப்படுகின்றது. இதனை வைத்துத்தான் உடலிலிருந்து எப்போது உயிர் பிரிந்துள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
உடல் கனக்கின்றது:
சிலபோது பாரமான பொருட்களைத் தூக்கும் பொழுது நாம் விளையாட்டுக்காக “பொனப் பாரம் - பிணப் பாரம்” என்று கூறுவோம். இதில் உண்மை இருக்கின்றது. இறந்ததன் பின்னர் நமது உடலின் பாரம் கூடுகின்றது. அல்லது உடல் கனக்கின்றது. இது எப்படி நடக்கின்றதென்றால்… நுரையீரல் சுவாசத்தை நிறுத்தியதும் ஆக்சிஜன் நிறுத்தப்படுகின்றது. என்றாலும் உடனடியாக கலங்கள் தமது பணிகளை நிறுத்தாமல் வெறுமையாக சுவாசிக்கின்றன. இதற்கு காற்றில்லா சுவாசம் என்பர்.
ஆக்சிஜனை சுவாசித்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும். காற்றின்றி வெறுமையாகச் சுவாசித்தால் உடற்பாகங்களில் இலக்ட்ரிக் ஆசிட் என்ற ஒரு வகை அமிலம்தான் உருவாகும். இந்த அமிலத்தால் உடலின் உறுப்புகளின் மென்மைத் தன்மை நீங்கி உடல் உறுப்புகள் கடினத்தன்மை பெறும். இறுகி கெட்டியாகிவிடும். இதனை ரீகர் மார்டிஸ் (Rigor Mortis) என்பர். ஒருவர் மரணித்து ஆறு மணி நேரங்களில் இச்செயற்பாடுகள் ஆரம்பமாகி 48 மணி நேரம் வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். நாம் உயிருடன் இருக்கையில் வேகமாக நீண்ட தூரம் ஓடினாலும் இந்த அமிலம் சுரக்கின்றது. ஆனால் அப்போது வேக வேகமாக மூச்சிரைப்பதால் இரத்த ஓட்டத்துடன் இந்த அமிலம் கலந்து வீரியம் குறைந்து பாதிப்பிலாமல் செல்கின்றது. சிலவேளை தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
பாக்டீரியாக்களின் பணி ஆரம்பம்:
இரண்டு நாட்களோடு இந்த அமிலம் உடல் முழுக்கப் பரவி உடல் கெட்டியாகி இருப்பதனால் இனியும் பாக்டீரியா மற்றும் ஏனைய கிருமிகளை எதிர்த்துப் போராடத் திராணியற்ற நிலைக்கு உடல் மாறியிருக்கும். தற்போது இரத்தத்தில் உள்ள கார்பன் அணுக்கள் விரிவடைய ஆரம்பிக்கின்றன. இதனால் கலங்களும், திசுக்களும் பருத்து ஊதி வெடித்து, அதன் என்சைம்ஸ்களை வெளியேற்றும். கணையமும் தனக்குள் உள்ள என்சைம்களை வெளியேற்றிவிடும். எனவே மீண்டும் உடல் கடினத் தன்மை இழந்து, மென்மையாகிவிடும்.
இனி குடல், மலப் பை போன்ற இடங்களிலில் வாழும் பக்டீரியாக்களும் இதர கிருமிகளும் குடல்களை கொஞ்ஞம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும். குறுகிய நேரத்தில் அவை இன்னும் இனத்தைப் பெருக்கிக்கொண்டு உடலின் ஏனைய அங்கங்களுக்குள்ளும் நுழைந்து பெரும் பகுதியைத் தின்று தீர்த்துவிடும்.
துர்நாற்றம் வீசத் தொடங்கும்:
உடலில் சேர்ந்திருந்த திரவங்கள் இரத்தம், சிறுநீர், அமிலங்கள், நொதியங்கள் இன்னும் இதுபோன்ற திரவங்கள் எல்லாம் அதனதன் பகுதிகளிலிருந்து கசிந்து உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் வழிந்தோட ஆரம்பிக்கும். இது கிருமிகளுக்கு இன்னும் இலகுவாக உடலைத் தின்பபதற்கு உதவி புரியும். இத்திரவங்கள் புழுத்து வடிந்துகொண்டிருக்கும் தசைப் பகுதிகளில் பட்டு, ஊரி காற்றுடன் கலந்து குறிப்பிட்ட தூரத்திற்கு சகிக்க முடியாத துர் நாற்றத்தைக் கிளப்பிவிடும். உடல் அழுகும் போது பியுட்ரஸைன் (putrescine), கெடாவரைன் (cadaverine) காலரா நுண்ணுயிர் நச்சு போன்ற இரசாயனங்கள் வெளியேறும். இதன் காரணத்தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
மோப்பம் பிடிக்கும் ஈக்கள்:
இறந்த பிணங்களில் ஈக்கள் வந்து மூடுவதை நாம் கண்டிருப்போம். உடலிலிருந்து ஆன்மா பிரிந்தால் அது ஈக்களுக்குத் தெரிந்துவிடும். எனவே ஒருவர் மரணித்து ஒரு மணி நேரம் கழிந்ததிலிருந்து அச்சடலத்தின் மேல் ஈக்கள் வந்து மொய்த்து முட்டையிட ஆரம்பிக்கின்றன. அனேகமாக அவை வாய், மூக்குத் துவாரம், கண்கள் திறந்திருப்பின் அதில், அக்குள் போன்ற இடங்களில் முட்டைகளை இடுகின்றன. 24 மணிநேரங்களில் முட்டைகள் பொரிக்கப்படும். முட்டையிலிருந்து குடம்பிப் புழுக்கள் (லாவாக்கள்) வெளிவருகின்றன.
பின்னர் அவை உடற் தசைகளைத் தின்று தின்று அரை அங்குல நீளப் புழுக்களாக வளர்கின்றன. அதே நிலையில் இருந்துகொண்டு தொடர்ந்து 12 நாட்களுக்கு அவை சடலத்தை உண்ணுகின்றன. புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் தின்று செரித்துவிடும். அதன் பின் அப்புழுக்கள் ஈக்களாக வளர்கின்றன. குறித்த சடலம் புதைக்கப்படாமல் வெளியிலேயே வைக்கப்பட்டிருந்தால் வளர்ச்சியடைந்த அதே ஈக்கள் இனப் பெருக்கம் செய்து மீண்டும் அச்சடலத்தின் மீதே முட்டையிடுகின்றன. இவ்வாறு ஒரு சடலத்தைச் சுற்றியே அது மனிதனாகவோ, விலங்கினங்களாகவோ இருக்கலாம் ஆயிரக்கணக்கான ஈக்களின் வாழ்க்கை வட்டம் ஆரம்பிக்கின்றன.
உப்பிப்போகும் உடல்:
ஆக இத்தகைய பல்வேறு நிலைகளின் பின்பு படிப்படியாக உடலை நுண் கிருமிகளும், புழுக்களும் தின்று உடல் மக்கிப்போகும். நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசைகளும் அழுகி, வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும். எழும்புப் பகுதிகள் மாத்திரம் பல வருடங்கள் வரை அப்படியே எஞ்சியிருக்கும். அதுவும் மிக மெதுவாக உப்பிக்கொண்டிருக்கும்.
அழகானதோற்றத்தில் படைக்கப்பட்டிருக்கும் உயிரினங்கள் அனைத்தினதும் இறுதி நிலை இதுதான். மனிதன் தனது அழகை வைத்து, கம்பீரமான தோற்றத்தை வைத்து, பட்டம், பதவி, அதிகாரம் என்பவற்றை வைத்தெல்லாம் உலகில் பெருமையடித்துத் திரிகின்றான். ஆனால் அவனது உடல் எத்தகைய அவலட்சனமானதொரு நிலைக்கு இறுதியில் தள்ளப்படுகின்றது என்று அவன் பார்க்க மாட்டானா? உப்பி மண்ணோடு மண்ணாகி போகும் என்பதை மனிதன் உணர்வானா?
திருச்சிற்றம்பலம்.
4 months ago (edited) | [YT] | 2
View 0 replies