🌷"வினை தீர்க்கும் பதிகம் | விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் | மஹா சிவராத்திரி வழிபாடு சிறப்பு பதிவு"🌷
—
#திருமாகறல் : இத்தலம் எலும்பு தொடர்பான அத்தனை கோளாறையும், குளறுபடிகளையும் நீக்கும் பரிகராத் தலமாக விளங்குகிறது. இது தவிர பக்கவாதம், ரத்தம் தொடர்பான நோய்கள் போன்றவற்றிக்கும் பரிகாரத் தலமாக திகழ்கிறது.
—
திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கிச் சிவத்திற்கூட்டியருளிய சண்பை வேந்தர், பல பதிகளைப் போற்றியபின், மங்கைபாகர் அமர்ந்தருளும் மாகறலை வணங்கிப் பாடியது இத்திருப்பதிகம். இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
—
🌺"விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல் விளையாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறல் உளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணல் அடிசேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே."🌺
——(சம்பந்தர் தேவாரம் : 03.072.01)
—
பொருளுரை : நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும்.
—
பதிக குரலிசைக்கு : https://youtu.be/5JqvucdmXnw —
சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரண குணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.
—
ஆலய முகவரி : அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில், மாகறல் கிராமம் அஞ்சல், உத்திரமேரூர் வட்டம், வழி காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம், PIN - 631603. காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்லும் பாதையில் 16 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.
—
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
—
🌷"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌷
Shaivamum Thamizhum
07.056 திருநீடூர் | ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/WVrXNBxl_sw
—
21 hours ago | [YT] | 47
View 1 reply
Shaivamum Thamizhum
07.055 திருப்புன்கூர் | அந்தணாளன் உன் அடைக்கலம் | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/4w_CbtPSaw8
—
1 day ago | [YT] | 67
View 1 reply
Shaivamum Thamizhum
01.098 #திருச்சிராப்பள்ளி | சுகப்பிரசவம் நல்கும் திருப்பதிகம் | நன்று உடையானை தீயது இலானை | திருஞானசம்பந்தர் தேவாரம் | https://youtu.be/pviG1W6-Km4
—
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
2 days ago | [YT] | 44
View 1 reply
Shaivamum Thamizhum
07.054 திருவொற்றியூர் | அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன் | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/nWMQkD2L8o0
—
2 days ago | [YT] | 50
View 1 reply
Shaivamum Thamizhum
07.053 திருக்கடவூர் மயானம்(திருமெய்ஞானம்) | மருவார் கொன்றை | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/L3Y7gVhIxIA
—
3 days ago | [YT] | 60
View 1 reply
Shaivamum Thamizhum
07.052 திருஆலங்காடு | முத்தா முத்தி தரவல்ல | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/FDDpxQucva0
—
4 days ago | [YT] | 75
View 2 replies
Shaivamum Thamizhum
07.051 திருவாரூர் | பத்திமையும் அடிமையையும் | சுந்தரர் தேவாரம் | https://youtu.be/6Y71WfZblgE
—
5 days ago | [YT] | 60
View 1 reply
Shaivamum Thamizhum
02.021 #திருக்கழிப்பாலை | புனலாடிய புன்சடையாய் அரணம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | https://youtu.be/dbYNUVVEuIQ
—
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
6 days ago | [YT] | 60
View 2 replies
Shaivamum Thamizhum
🌷"வினை தீர்க்கும் பதிகம் | விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் | மஹா சிவராத்திரி வழிபாடு சிறப்பு பதிவு"🌷
—
#திருமாகறல் : இத்தலம் எலும்பு தொடர்பான அத்தனை கோளாறையும், குளறுபடிகளையும் நீக்கும் பரிகராத் தலமாக விளங்குகிறது. இது தவிர பக்கவாதம், ரத்தம் தொடர்பான நோய்கள் போன்றவற்றிக்கும் பரிகாரத் தலமாக திகழ்கிறது.
—
திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கிச் சிவத்திற்கூட்டியருளிய சண்பை வேந்தர், பல பதிகளைப் போற்றியபின், மங்கைபாகர் அமர்ந்தருளும் மாகறலை வணங்கிப் பாடியது இத்திருப்பதிகம். இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
—
🌺"விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல் விளையாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறல் உளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணல் அடிசேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே."🌺
——(சம்பந்தர் தேவாரம் : 03.072.01)
—
பொருளுரை : நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும்.
—
பதிக குரலிசைக்கு : https://youtu.be/5JqvucdmXnw
—
சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரண குணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.
—
ஆலய முகவரி : அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில், மாகறல் கிராமம் அஞ்சல், உத்திரமேரூர் வட்டம், வழி காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம், PIN - 631603. காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்லும் பாதையில் 16 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.
—
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
—
🌷"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌷
1 week ago | [YT] | 74
View 2 replies
Shaivamum Thamizhum
02.026 திருநெல்வாயில்(சிவபுரி) | புடையினார் புள்ளி கால் பொருந்திய | திருஞானசம்பந்தர் தேவாரம் | https://youtu.be/rc0gkU9qx9A
—
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
1 week ago | [YT] | 66
View 2 replies
Load more