Gnana Selvam Novels

Gnana Selvam Novels

மௌனம் பேசியதே
சுவீட் சுந்தரி குரலில்...
பன்னிரெண்டே வயதான பல்லவி.இதுவரை தன் வாழ்வின் ஆதாரமாய் இருந்த தாயை இழந்து முன்பின் பழக்கமில்லாத தூரத்து உறவுகாரரான பாண்டியோடு கிராமத்துக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவள்படும் துன்பங்களும் அந்த துன்பத்தில் அவளுக்கு தோள் கொடுக்கும் அனாதை சிறுவனுக்குமான கதை.
கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://youtu.be/yFSyVJftGdo

1 day ago | [YT] | 14

Gnana Selvam Novels

என்னில் பூத்த நிலவொன்று
வசதியான வீட்டு இளவரசி பவித்ரா. ஏழை வீட்டு இளவரசன் கதிர். இருவருக்குமான காதலும் மோதலும் கதையின் சுவாரஸியம் என்றால் இருவரின் பிரிவும் அந்த பிரிவால் பழையவற்றை மறக்கும் பவித்ராவின் செயலும் வலியின் உச்சம்
நாவலை கேட்ட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://youtu.be/ZAvcvhAwrsI

1 day ago | [YT] | 26

Gnana Selvam Novels

என்னுடைய நாவலில் உங்களை அதிகம் கவர்ந்த நாவல் எதுவென்று கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

6 days ago | [YT] | 24

Gnana Selvam Novels

‪@gnanaselvamnovels‬
நாவலின் சிறு பகுதி

தன் முன்னால் வந்து மார்புக்கு குறுக்கே கைகட்டி கொண்டு கண்ணில் குறும்போடு நின்ற கதிரை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது பவித்ராவுக்கு…
"இவன் தோழிகள் முன்னால அசிங்கப்படுத்தாம போக மாட்டான் போல…" என எண்ணியவள்.
"ஐயோ கடவுளே மானம் போக போகுது.பக்கத்து சீற்றுல ஒரு ஜென்டில்மேனா கொண்டு இருந்துணு வழி நெடுக்க பிரேயர் பண்ணிட்டு வந்தா…இந்த முட்டை கண்ணனை கொண்டு இருத்தி இப்படி பழிவாங்கிட்டியே சாமி. சின்ன வயசுல இருந்தே இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிச்சதால தமிழ் தத்தாம் பித்தான்தானு உனக்கும் தெரியுமே. அதுல வேற லேட் ஆக்கி மனசை பதற வச்சிட்டா . படிச்ச கொஞ்சமும் எழுத வராம மல்லு கட்டிட்டு நின்னுச்சு. முருகா எனக்கு உதவ வாணு உன்னை கூப்பிட்டா இப்படி ஒரு சண்டியரை அனுப்பி வச்சி என் மானத்தை வாங்கிட்டியே…"
"இப்ப இந்த குரங்கு என்ன சொல்ல போகுதோ? போச்சு.. என் மானம் மரியாதை எல்லாம் போச்சு."
மனதுக்குள் குமைந்து கொண்டு அவனை பயத்தோடு நிமிர்ந்து பார்க்க… அவளை எகத்தாளமாக நிமிர்ந்து பார்த்தவன்.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் பொங்கும் சிரிப்போடு அவளை நோக்கி நிற்க…
பயத்தோடு அவனை ஏற்றிட்டு நோக்கியவள்.
"என்ன?"
என கேட்க…
"உனட்ட கொஞ்சம் பேசணும்."
அவளை மேல் இருந்து கீழ் பார்த்து கொண்டே அவன் சொல்ல… பயத்தில் நெளிந்தவள்…
"எனட்ட பேச என்ன இருக்கு."
என்றாள் தயக்கமாக…
"தனியா பேசணும்…"'என்றான் ஒரு மார்க்கமாக…
"தனியாவா? தனியா எல்லாம் பேச முடியாது. என்ன பேசுறதா இருந்தாலும் இங்கேயே பேசுங்க."
படபடப்போடு சொன்னவளை ஆழமாக பார்த்தவன்.
"நான் சொல்லிடுவேன். அப்புறம் உனக்கு தான் கஷ்டமா போயிடும்."
என உதட்டுக்குள் ஏதோ மர்மத்தை வைத்து கொண்டு பேச… சுற்றி தோழிகளை கண்களால் நோக்கியவள்.
"'எப்படியும் தேர்வு பற்றி பேசி மானத்தை வாங்க தான் போறான். பேசாம தனியா கூட்டிட்டு போயிட்டா தான் என்ன?..."
யோசித்தவள் சட்டென அவன் கையை பிடித்து தனி இடத்திற்கு அழைத்து செல்ல…
கூட்டமே விழி விரித்து பார்த்தது. "என்ன இவா தெரியாத மாணவனோட தனியா போறா?"
கூட்டத்தில் ஒருத்தி மனதுக்குள் நினைப்பதாக வாய்விட்டே புலம்ப…
"தெரியாதவன்ணு யார் சொன்னா. தெரியாதவனா இவ்வளவு கெடுபிடிக்க இடையில தன்னுடைய மொத்த ஆன்சர் சீட்டையும் கொடுத்து தேர்வை எழுத வச்சிருப்பான்."
அவர்களின் பின்னால் தேர்வு எழுதி கொண்டிருந்தவள் வயிற்றெரிச்சலில் சொல்ல…
"என்னடி சொல்லுறா? நம்ம அறையில இருந்த வாத்திச்சி கண்ணுல எண்ணெய் ஊத்திட்டு அலாட்டா நின்னது போல நின்னா. தலையை திருப்ப கூட முடியல. இந்த இடையில சீற்றை எப்படி மாத்திகிட்டாங்க."
"எல்லாம் அவன் தான். வாத்துச்சி அந்த பக்கம் திரும்புற நேரம் நைஸா அவளோட பேப்பர் கூட கலந்து வச்சிட்டான். இவா பதமா பாத்து எழுதுறா" .
"ஒ!… நீ வயிற்றெரிச்சல்ல வெந்து செத்திருக்கா…"
"பின்ன வயிறு எரியாம என்ன செய்யும். நம்ம பக்கத்துலயும் கடவுள் ஒரு குரங்கை கொண்டு இருத்தியிருந்தாரே…அவன் என்னை போட்டு குடையுறான். இங்க நாலு கேள்விக்கு ஒழுங்கா பதில் தெரியாது. இந்த லட்சணத்துல அவனுக்கு எதை சொல்லி கொடுக்கிறது."
என வள்ளி குறைபட்டு கொண்டிருந்த நேரம் முகம் எல்லாம் பூரிப்போடு வந்தாள் பவித்ரா. அவளின் முக மலர்ச்சியை பார்த்தவர்கள்…
கோரஸாக …
"ஓ…ஹோ…." என கிண்டலாக குரல் கொடுக்க…
"இப்போ எதுக்கு இந்த கோரஸ் பாட்டு…"
"எல்லாம் காரணமா தான்."
"என்ன காரணம்."
"ஆமா மச்சான் தனியா கூட்டிட்டு போனாரே…. என்ன கொடுத்தாரு."
"அவன் என்ன கொடுத்தான்." மனதுள் எண்ணியவள் அவர்கள் ஊமை சிரிப்பை பார்த்தவாறு…
"ஒண்ணும் கொடுக்கலிலே…"
அவள் யோசனையோடு சொல்ல…
"ஏய்… கொடுக்கலியாண்டீ. பவிக்கு வருத்தத்தை பாரு. அடுத்த முறை இப்படி தனியா கூப்பிடும் போது நீ கொடுத்து அனுப்பிடு…"
வள்ளி அவள் தோள்ப்பட்டையை இடித்து கொண்டு சொல்ல.. புரியாமல் விழித்தவள்.
"என்னடி மொக்கை போடுறீங்க. சொல்ல வருகிறதை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க."
"இதை விட தெளிவா எப்படி சொல்லுறது. வள்ளிக்கும் வெட்கமா இருக்குமா இல்லயா?"
சொல்லி கொண்டு கவிதா வெட்கப்பட…
"என்னடி இது. இப்படி நெளியுறீங்க. அப்படி அவன் எனக்கு என்ன கொடுத்தானானு கேட்கிறீங்க. இல்லனா நான் எதை அவனுக்கு கொடுக்கணம்னு சொல்லுறீங்க. எனக்கு எதுவும் புரியல…"
"பாருடி. பாப்பாவுக்கு புரியலியாம். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க…" புவனா குடைபிடித்து கொண்டு முன்னால் வர…
"விளக்கிடுவோம்…" என தாளத்தோடு அவள் அருகில் சென்ற வள்ளி…
"மறைவா கூட்டிட்டு போனாரே… கன்னத்துல கொடுத்தாரா? இல்ல உதட்டுல கொடுத்தாரா?"
கண் சிமிட்டி கேட்க..
"அட சீ… நீங்க இப்படியா பேசிட்டிருந்தீங்க. கண்டிராவி கண்டிராவி. அவன் போய் எனக்கு முத்தம் கொடுக்கிறதா? சே…ஏண்டீ உங்க புத்தி எல்லாம் இப்படி போகுது."
'எங்க புத்தி தப்பா போகுது. அப்படினா எதுவும் நடக்கலனு சொல்ல வறியா…"
"அப்புறம் தனியா போனா அது தான் நடக்கும்னு விவாதிச்சிருக்கீங்களே. உங்க புத்தியில நல்ல எண்ணமே ஓடாதா…"
"எங்க புத்தி தப்பா போகுதுணே வச்சிக்கலாம். அப்போ மறைவா அவன் எதுக்கு உன்னை கூட்டிட்டு போகணும். நீயும் எதுக்கு அவனை தொடர்ந்து போகணும். சொல்லு சொல்லு…"
கவிதா ஆர்வமாக கேட்க…
"நாளைக்கு உள்ள தேர்வையாவது நல்லா படிச்சிட்டுவாணு சொல்ல தான்."
"பார்டீ….பார்ட்டி அட்வைஸா அள்ளி தெளிச்சிருக்காரு. அக்கறை… பவி மேல ஐயாவுக்கு அக்கறை. இந்த அக்கறை எதனால வந்துச்சி. அதையும் சொல்லிடு.'
"நல்லா படிச்சிட்டுவாணு சொல்லுறது தப்பாடி?…"
"அது தப்பில்ல. ஆனா கூட்டிட்டு போய் அதை சொன்ன ஆள் ஆணாச்சே. அவனுக்குள்ள தப்பான எண்ணம் இல்லணா உன்னை தனியா கூட்டிட்டு போய் தான் அதை சொல்லணுமா?..."
வள்ளி கிண்டலோடு கேட்க….
"பவி. எனக்கெல்லாம் பத்து மாசத்துலயே காது குத்தியாச்சு…"
அவள் காதை பிடித்து ருக்கு காட்ட…
"அப்போ நம்பலியா?..."
"நம்புறதா?..சரி.நம்புறோம்மா நம்புறோம். ஆனா அங்க எதுவும் நடக்கலனு நீ சொல்லுறதை நம்ப முடியாது. இனி எதுவும் நடக்காதுணும் நம்ப மாட்டோம்…"
சொன்னவர்கள் எழுந்து நடக்க தொடங்க…
"நம்புங்கட்டீ… அதுமாதிரி எதுவும் இல்ல…"
என சொல்லி கொண்டே பின்னால் ஓடினாள் பவித்ரா.

1 week ago | [YT] | 23

Gnana Selvam Novels

அன்பார்ந்த வாசக நெஞ்சங்களுக்கு,
நமது ஞான செல்வம் ஆடியோ நாவல் சேனலில் செவ்வாய் கிழமை நாவலாசிரியர் ஞான செல்வம் அவர்கள் எழுதிய புத்தம் புது நாவலான என்னில் பூத்த நிலவொன்று நாவல் பதிவிடப்படுகிறது. வாசக உள்ளங்கள் கதையை கேட்டு மறக்காம கருத்தை பதிவிடுங்கள்.

1 week ago | [YT] | 28

Gnana Selvam Novels

Gnana Selvam Novels

4 weeks ago | [YT] | 3

Gnana Selvam Novels

@Gnana Selvam Novels

4 weeks ago | [YT] | 4

Gnana Selvam Novels

@Gnanasevamnovels

4 weeks ago | [YT] | 2

Gnana Selvam Novels

@Gnanasevamnovels

4 weeks ago | [YT] | 1