Welcome to our Entertainment and Technology channel! Here, we bring you the perfect blend of captivating entertainment and cutting-edge technology. From movie reviews and celebrity interviews to the latest gadgets and innovations, we've got it all covered. Join our community of tech enthusiasts and entertainment buffs by subscribing to our channel. Stay updated, be entertained, and never miss out on the hottest trends. Subscribe now!
STR TECH TAMIL
5 months ago | [YT] | 1
View 0 replies
STR TECH TAMIL
நபியவர்கள் காட்டிய கருணை
இயற்கையாகவே மனிதனுக்கு அல்லாஹ் இரக்க குணத்தை வளர்த்திருக்கின்றான். அந்த இரக்க குணத்தை பிற மனிதர்களிடம் காட்டுவதும் ஒரு வகையான வணக்கமாக கருதப்படும். இறைத்தூதர் அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்த போதும் கூட இதே கருணையால் தான் கண்ணீர் விட்டதாக இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்.
دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ القَيْنِ، وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، فَقَبَّلَهُ، وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «يَا
ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ»، ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ»
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு
நபி (ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்’ என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்’ என்றார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
5 months ago | [YT] | 3
View 0 replies
STR TECH TAMIL
நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.
(ஒரு முறை) உமர் (ரலி) ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) தம் (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக ‘அராக்’ மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள்.
அவர்கள், தம் தேவையை முடித்துக் கொண்டு வரும் வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களின் துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிக் செயல்பட்ட இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவும், ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்’ என்று பதிலளித்தார்கள்.
உடனே நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்களின் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை’ என்று சொன்னேன். அப்போது (இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்’ என்று கூறிய உமர் (ரலி), பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள்.
‘அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)
(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, ‘நீங்கள் இப்படிச் செய்யலாமே’ என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் என்னிடம், ‘கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க இறைத்தூதர் கோபமாக இருந்தார்கள்’ என்று கூறினார்.
உடனே நான் எழுந்து, அதே இடத்தில் என்னுடைய மேலங்கியை எடுத்துக் கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, ‘என் அருமை மகளே! நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)’ என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு’ என்றார். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை அதாவது ஆயிஷாவைப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!’ என்று (அறிவுரை) சொன்னேன்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி(ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு ஸலமாவிடம் (அறிவுரை கூறச் சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு ஸலமா, ‘கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்’ என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு ஸலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். எனவே, நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து) விட்டேன்.
மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களின் அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) ‘ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது.
அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால், அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். ‘திறங்கள், திறங்கள்’ என்று கூறினார். (கதவைத் திறந்த) நான், ‘ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரைவிட்டு விலகிவிட்டார்கள்’ என்றார்.
உடனே நான், ‘ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!’ என்று கூறிவிட்டு, என்னுடைய உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார்.
அவரிடம் நான், ‘இந்த உமர் இப்னு கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!’ என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களின் துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன்.
உம்மு ஸலமாவின் பேச்சு வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்றார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
5 months ago | [YT] | 1
View 0 replies
STR TECH TAMIL
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது மனம்அர்த்தா சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என்னுடைய இந்த STR TECH TAMIL YOUTUBE CHANNEL ஆனது 12k SUBSCRIBERறை கடந்து விட்டது உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நான் இடும் வீடியோக்களை பார்த்து நீங்களும் பயனடைந்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிர்ந்து எனது சனலை இன்னும் நிறைய சப்ஸ்கிரைபர்களை அடைகின்ற வாய்ப்பையும் உங்கள் ஆதரவையும் எனது STR TECH TAMIL சேனலுக்கு தாருங்கள் நன்றி
1 year ago | [YT] | 2
View 0 replies
STR TECH TAMIL
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது மனம்அர்த்தா சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என்னுடைய இந்த STR TECH TAMIL YOUTUBE CHANNEL ஆனது 12k MORE SUBSCRIBERறை கடந்து விட்டது உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நான் இடும் வீடியோக்களை பார்த்து நீங்களும் பயனடைந்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிர்ந்து எனது சனலை இன்னும் நிறைய சப்ஸ்கிரைபர்களை அடைகின்ற வாய்ப்பையும் உங்கள் ஆதரவையும் எனது STR TECH TAMIL சேனலுக்கு தாருங்கள் நன்றி
1 year ago | [YT] | 2
View 0 replies
STR TECH TAMIL
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எனது அன்புக்குரிய YouTube நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் சலாமும் உங்கள் மீது உண்டாவதாக என்னுடைய இந்த youtube சேனலை ஆதரித்து எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நம்முடைய இந்த YouTube channel ஆனது இப்போது 10,000 சப்ஸ்கிரைபர்களை கடந்து உள்ளது ஆகவே மேலும் எனது சனலை ஆதரித்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேனலை பகிர்ந்து மேலும் வளர உதவி செய்யுங்கள் இப்படிக்கு உங்கள் நண்பன் STR TECH TAMIL
1 year ago | [YT] | 6
View 0 replies
STR TECH TAMIL
👉எனது அன்புக்குரிய நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் உங்களிடம் பணிவான வேண்டுகோள் எனது youtube சேனலை உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து அதனுடைய பயனை அடைய உதவுங்கள் நம்முடைய மார்க்கத்தை நாம் மட்டும் படித்தால் போதாது அதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் ஆகையால் என்னுடைய youtube சேனலில் இடும் அனைத்து வீடியோக்களையும் அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து அவர்களும் பயனடைய உதவி செய்யுங்கள் இப்படிக்கு உங்கள் நண்பன்
STR TECH TAMIL
bit.ly/4ajDgD3
1 year ago | [YT] | 11
View 0 replies
STR TECH TAMIL
👉உங்கள் ஒவ்வொரு #Subscribe 🤗 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் 🤗
👉எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் மற்றும் உங்கள் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் தொடர்ந்தும் எனக்கு ஆதரவு தாருங்கள் 😍
👉Subscribe and Like and Share and Hit the Bell to See New Videos
👉CLICK THIS Link FOR WATCH MORE VIDEOS
👉 bit.ly/4ajDgD3
https://youtu.be/O1EPWOuEudo
1 year ago | [YT] | 1
View 0 replies
STR TECH TAMIL
👉எனது அன்புக்குரிய நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் உங்களிடம் பணிவான வேண்டுகோள் எனது youtube சேனலை உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து அதனுடைய பயனை அடைய உதவுங்கள் நம்முடைய மார்க்கத்தை நாம் மட்டும் படித்தால் போதாது அதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் ஆகையால் என்னுடைய youtube சேனலில் இடும் அனைத்து வீடியோக்களையும் அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து அவர்களும் பயனடைய உதவி செய்யுங்கள் இப்படிக்கு உங்கள் நண்பன்
STR TECH TAMIL
bit.ly/4ajDgD3
1 year ago | [YT] | 4
View 1 reply
STR TECH TAMIL
1 year ago | [YT] | 17
View 0 replies
Load more