ஆதரவற்ற 241வது உடல் நல்லடக்கம் – தாராபுரம் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் மனிதநேய சேவை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மனிதநேய சேவையாக இறுதி சடங்குகள் தொடர்ந்து செய்து வரப்படுகிறது.
தாராபுரம் உட்கோட்டம், குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 14ஆம் தேதி சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிரேதம் வாய்க்காலில் மிதந்து வந்தது. இச்சம்பவம் தொடர்பாக குண்டடம் காவல் நிலையத்தில் குற்ற எண் 69/2026 u/s 194 என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த உடலை இன்று அறக்கட்டளை நிர்வாகிகள் மீட்டு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். இதன் மூலம் அறக்கட்டளை சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்ட 241வது ஆதரவற்ற உடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதிச் சடங்கில் அறக்கட்டளை தலைவர் அபுதாஹிர்,செயலாளர் சண்முகம், சமூக ஆர்வலர் தாஜ் பிரியாணி ஜாபர் சாதிக், நிர்வாகிகள் அழகர், திருமரகு, பத்திரிகையாளர் நூர் முகமது,அக்கீம், உள்ளிட்டோர் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
Taj briyani dharapuram
ஆதரவற்ற 241வது உடல் நல்லடக்கம் – தாராபுரம் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் மனிதநேய சேவை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மனிதநேய சேவையாக இறுதி சடங்குகள் தொடர்ந்து செய்து வரப்படுகிறது.
தாராபுரம் உட்கோட்டம், குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 14ஆம் தேதி சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிரேதம் வாய்க்காலில் மிதந்து வந்தது. இச்சம்பவம் தொடர்பாக குண்டடம் காவல் நிலையத்தில் குற்ற எண் 69/2026 u/s 194 என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த உடலை இன்று அறக்கட்டளை நிர்வாகிகள் மீட்டு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். இதன் மூலம் அறக்கட்டளை சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்ட 241வது ஆதரவற்ற உடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதிச் சடங்கில் அறக்கட்டளை தலைவர் அபுதாஹிர்,செயலாளர் சண்முகம், சமூக ஆர்வலர் தாஜ் பிரியாணி ஜாபர் சாதிக், நிர்வாகிகள் அழகர், திருமரகு, பத்திரிகையாளர் நூர் முகமது,அக்கீம், உள்ளிட்டோர் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஆதரவற்றவர்களுக்கும் மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய நோக்கில் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருவதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். #Dharapuram
#TamilNews
#Humanity
#SocialService
#UnclaimedBody
#FuneralService
#HelpingHands
#Respect
#Emotional
#HeartTouching
#RealHeroes
#TamilViral
3 weeks ago | [YT] | 6
View 0 replies