கேடகம்

Leading digital media .youtube channel tamil language, based in Chennai, caters to tamil community, kedagam covered tamilnadu and india ,tamil cinema and political, tamil poltics, tamil political interview, tamil political and cinema celebrity interview,
indian cinema, tamil cinema, tamil current affairs, social awareness, tamil movie review, tamil cinema viral video, actor and actress viral video, breaking news, tamil actor news, serial actor news, tamil actress interview, public opinion, Tamil journalist interview, political news,.

rajini #kamal #vijayakanth #vijay #tvkflag #tvkanthem #vidamuyarchi #ajith #ajithfans #str #sivakarthikeyan #dhanush #suriya
#seeman #seemanlatestspeech #vijaylatestspeech #todayviralvideo #todaytamilnews #tamilbreakingnews
#tamilnadu #tamilpolitics #tamilcinema #tamilstatus #tamilvideos #tamilnewsheadlines

உண்மை பேசும் கேடகம் ஊடகம்

Subscribe to kedagam / youtube.com/@kedagam?si=Cli0TXEiBBOnkFGF

Advertisement contact : Ph : 9092892589



கேடகம்

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு N.ஆனந்த் MLA* அவர்கள் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்.

மேலும் 5 மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, 8 நபர்களுக்கு தையல் இயந்திரம், 20 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 மாற்றுத் திறனாளிகளுக்கான கையால் இயக்கும் மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.!

இந்நிகழ்வில் மாண்புமிகு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.ரேவந்த் சரண்* அவர்கள் தலைமை வகிக்க, மாண்புமிகு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.பாலமுருகன் அவர்கள், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.VS.பாபு அவர்கள், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.VK.ராம்குமார் அவர்கள், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமார் அவர்கள், மாண்புமிகு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் திரு.டாக்டர்.MS.ரவி அவர்கள், மாநில வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.அறிவழகன் அவர்கள், சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.A.S. பழனி (எ) பழனியப்பன், சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சிவா, சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.G.வேலு, மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

19 hours ago | [YT] | 14

கேடகம்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகி திரு.S. கிஷோர் அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் K.ஸ்டீவாக், T.டைஷ்னி அவர்களை வாழ்த்தினார்.

1 day ago | [YT] | 7

கேடகம்

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,

சென்னை, மகாபலிபுரத்தில் (OMR) உள்ள Four Points by Sheraton Resort & Convention Center-ல் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர்கள் திரு.C.விஜயபாஸ்கர் மற்றும் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள் மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுடன் 10,000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இணைந்து கொண்டனர்.

4 days ago | [YT] | 11

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை OMR சாலையில் அமைந்துள்ள, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மேலும் அங்கிருந்த
பொதுமக்களுக்கு உணவும் பரிமாறினார்.

அதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் 198-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.லியோ N.சுந்தரம்* அவர்களது ஏற்பாட்டில் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, உத்தண்டி, குடிமியாண்டி தோப்பு ஆகிய 3 அரசு பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்வில் *மாண்புமிகு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ECR.P.சரவணன் அவர்கள் தலைமை வகிக்க, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.அருள் பிரகாசம் மற்றும் சென்னை புறநகர் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

4 days ago | [YT] | 16

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,

சென்னை தெற்கு (வடக்கு) மாவட்ட தியாகராய நகர் மேற்கு பகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, பகுதி கழகச் செயலாளர் திரு.மகி (எ) வினோத் குமார் அவர்களின் ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் MLA அவர்கள் போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு நேரில் சென்று வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து விளையாட்டில் பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.!

இந்நிகழ்வில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.க.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்.

1 week ago | [YT] | 30

கேடகம்

தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் முன்னிட்டு,

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்* நடைபெற்று வரும் நிலையில், மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை தியாகராய நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.

மேலும் அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் பொம்மைகளை வழங்கி மகிழ்ந்தார்.

இந்த நிகழ்வில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் உடன் இருந்தார்.

1 week ago | [YT] | 18

கேடகம்

சென்னை, தியாகராய நகரில், தமிழ்நாடு அரசின் சார்பில், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 121-வது பிறந்தநாளையொட்டி, அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் MLA அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.!

இந்நிகழ்வில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், *மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.அருள் பிரகாசம் அவர்கள், *மாண்புமிகு கீழ்வைத்தினன்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.E.தென்றல் குமார்* அவர்கள், மாண்புமிகு முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு.M.விக்னேஷ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர்(பொ) திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப.மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 week ago | [YT] | 31

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில்,
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS' என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தில் கலந்து கொண்டு 6 கிலோமீட்டர் தூர இலக்கை நிறைவு செய்தார்.!

மாரத்தான் முழுவதும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பதக்கம் மற்றும் உணவுகளை வழங்கினார். பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடி போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்கள் கலந்து கொண்டனர்.

1 week ago | [YT] | 21

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay‌

1 week ago | [YT] | 11

கேடகம்

இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிவு

1 week ago | [YT] | 22