கேடகம்

Leading digital media .youtube channel tamil language, based in Chennai, caters to tamil community, kedagam covered tamilnadu and india ,tamil cinema and political, tamil poltics, tamil political interview, tamil political and cinema celebrity interview,
indian cinema, tamil cinema, tamil current affairs, social awareness, tamil movie review, tamil cinema viral video, actor and actress viral video, breaking news, tamil actor news, serial actor news, tamil actress interview, public opinion, Tamil journalist interview, political news,.

rajini #kamal #vijayakanth #vijay #tvkflag #tvkanthem #vidamuyarchi #ajith #ajithfans #str #sivakarthikeyan #dhanush #suriya
#seeman #seemanlatestspeech #vijaylatestspeech #todayviralvideo #todaytamilnews #tamilbreakingnews
#tamilnadu #tamilpolitics #tamilcinema #tamilstatus #tamilvideos #tamilnewsheadlines

உண்மை பேசும் கேடகம் ஊடகம்

Subscribe to kedagam / youtube.com/@kedagam?si=Cli0TXEiBBOnkFGF

Advertisement contact : Ph : 9092892589



கேடகம்

chat.whatsapp.com/Cdqfvi9rkIB2Hqvy5cqjcX?s=cl&p=a&…

Hello sir and madam plz join kedagam YouTube channel whats app group

அன்பார்ந்த கேடகம் youtube சேனல் நேயர்களே உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வணக்கம் 🙏

இப்போது துவங்கபட்டுள்ள கேடகம் youtube சேனல் வாட்ஸ் அப் குரூப் என்பது நம்முடைய சேனல் அடுத்த கட்ட வளர்ச்சியில் நமது subscribers உடன் கலந்துரையாடி நமது சேனல் தொடர்பாக முன்னெடுக்கும் விழாக்கள் மற்றும் முயற்சி அனைத்திற்கும் உங்கள் அழைப்பு விடுக்கவும் மேலும் உங்கள் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் அந்த கருத்துக்கள் உங்கள் விருப்பங்கள் ஆலோசனை அடிப்படையில் செயல்படுத்தவும் இந்த குரூப் துவங்கபட்டுள்ளது

அனைவரும் join செய்து ஆதரவு தாருங்கள்

நன்றி

என்றும் உங்களால் நாங்கள்
கேடகம்

3 weeks ago | [YT] | 0

கேடகம்

chat.whatsapp.com/Cdqfvi9rkIB2Hqvy5cqjcX?s=cl&p=a&…

Hello sir and madam plz join kedagam YouTube channel whats app group

அன்பார்ந்த கேடகம் youtube சேனல் நேயர்களே உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வணக்கம் 🙏

இப்போது துவங்கபட்டுள்ள கேடகம் youtube சேனல் வாட்ஸ் அப் குரூப் என்பது நம்முடைய சேனல் அடுத்த கட்ட வளர்ச்சியில் நமது subscribers உடன் கலந்துரையாடி நமது சேனல் தொடர்பாக முன்னெடுக்கும் விழாக்கள் மற்றும் முயற்சி அனைத்திற்கும் உங்கள் அழைப்பு விடுக்கவும் மேலும் உங்கள் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் அந்த கருத்துக்கள் உங்கள் விருப்பங்கள் ஆலோசனை அடிப்படையில் செயல்படுத்தவும் இந்த குரூப் துவங்கபட்டுள்ளது

அனைவரும் join செய்து ஆதரவு தாருங்கள்

நன்றி

என்றும் உங்களால் நாங்கள்
கேடகம்

3 weeks ago (edited) | [YT] | 0

கேடகம்

chat.whatsapp.com/Cdqfvi9rkIB2Hqvy5cqjcX?s=cl&p=a&…

Hello sir and madam plz join kedagam YouTube channel whats app group

இப்போது துவங்கபட்டுள்ள கேடகம் youtube சேனல் வாட்ஸ் அப் குரூப் என்பது நம்முடைய சேனல் அடுத்த கட்ட வளர்ச்சியில் நமது subscribers உடன் கலந்துரையாடி நமது சேனல் தொடர்பாக முன்னெடுக்கும் விழாக்கள் மற்றும் முயற்சி அனைத்திற்கும் உங்கள் அழைப்பு விடுக்கவும் மேலும் உங்கள் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் அந்த கருத்துக்கள் உங்கள் விருப்பங்கள் ஆலோசனை அடிப்படையில் செயல்படுத்தவும் இந்த குரூப் துவங்கபட்டுள்ளது

அனைவரும் join செய்து ஆதரவு தாருங்கள்

நன்றி

என்றும் உங்களால் நாங்கள்
கேடகம்

3 weeks ago | [YT] | 0

கேடகம்

அண்ணன் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அவர்களுக்கு அனைத்து பத்திரிகையாளர்களும் குரல் கொடுத்து ஆதரவு கொடுக்க வேண்டிய நேரம் இது

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் எத்தனையோ முறை பத்திரிகையாளர்களை அவதூறாக பேசி இருக்கிறார் மிரட்டல் விடுத்து இருக்கிறார்
காணொளி சாட்சியாக இருக்கிறது

கேள்வி கேட்பது பத்திரிகையாளர்களின் உரிமை, பதிலளிப்பது தலைவர்களின் உரிமை

சீமான் விலை போகிவிட்டார் என்று சொத்து கிரயம் பத்திரம் ஆதாரத்துடன் advocate nelson என்னும் ஒரு தம்பி youtube சேனலில் காணொளி வெளியிட்டு தேர்தலுக்கு முன்பு இருந்தே கூறி வருகிறான்
அவர் வெளியிட்ட காணொளி லட்ச கணக்கில் பார்வையில் உள்ளது

இதே போன்று tribes மற்றும் peralai என்னும் youtube சேனலில் சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்து தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் எத்தனையோ விமர்சனம்
செய்கிறார்கள்

பிஸ்மி அவர் youtube சேனல் மூலமாகவோ அல்லது நேர்காணல் கொடுக்கும் போதோ
அவர் கூறும் கருத்து தவறு அவதூறு என்றால் நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் youtube சேனலில் கூறும் கருத்து அல்லது நேர்காணலில் கொடுக்கும் கருத்து அனைத்துமே தவறு அவதூறு தான்

ஏன் தவெக தலைவரும் முதலமைச்சர் அவர்களை குறித்து தினம் தோறும் பலர் பல YouTube சேனல்களில் அவதூறு பேசி பரப்புகிறார்கள்
முதலமைச்சர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம்
அப்படி பட்ட youtube சேனல் பட்டியல் நீளும்
அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை

சிந்தித்து பாருங்கள்

#standwithbismi

4 weeks ago | [YT] | 10

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அக்கரை பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.!

அதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.M.விஜய் பாலாஜி அவர்கள் கலந்து கொள்ள, மாண்புமிகு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ECR.P.சரவணன் MLA அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

4 weeks ago | [YT] | 17

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் சிறப்புப் பணிகளின் இரண்டாம் நாளான இன்று, சென்னை மாவட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அடையாற்றை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் வட்டம், சோழிங்கநல்லூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ECR.P.சரவணன் அவர்கள், நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் திருமதி.ஜானகி, துறைப் பொறியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

4 weeks ago | [YT] | 5

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாநாட்டு கூட்டரங்கில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2026–2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள் கலந்து கொண்டு, வேளாண் துறையின் முன்னேற்றம், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, நீர்வள மேலாண்மை, பாசன வசதிகள் விரிவாக்கம் மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டத்திற்கு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் தலைமை வகிக்க, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. V. காந்திராஜ் அவர்கள், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன்ராஜா அவர்கள், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஸ்ரீநாத் அவர்கள், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள், மாண்புமிகு வனத் துறை அமைச்சர் திரு. ஆர். வீ. இரஞ்சித்குமார் அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முனைவர் வி. கே. ராஜீவ் அவர்கள்,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் - வேளாண்மை–உழவர் நலத்துறை முனைவர். பொ. சங்கர், இ.ஆ.ப., அவர்கள், வேளாண்மை இயக்குநர் முனைவர். க. வீ. முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

1 month ago | [YT] | 12

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி,

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், சோழிங்கநல்லூர் வட்டம், ஒக்கியம் துரைப்பாக்கம் கிராமத்திலுள்ள ஒக்கியம் மடுவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரி மற்றும் பராமரிப்பு பணிகளை நேரில் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள கண்ணகி நகர் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாருதல் மற்றும் நீர்நிலை பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ECR பி.சரவணன் அவர்கள், தெற்கு வட்டார துணை ஆணையர் திரு. அஃதாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 month ago | [YT] | 8

கேடகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி,

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் சிறப்புப் பணிகளை கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதிப் பகுதியில் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த சிறப்புப் பணிகளின் முதல் நாளில், நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று தொடங்கி வைத்தார். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் களத்திற்கு வந்தடைந்தார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.

பருவமழைக்கு முன்பாக அனைத்து பணிகளையும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் தரமாக நிறைவு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஏரிகள் தூர்வாரி பராமரிக்கும் பணிகள் பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாகவும், அனைத்து பணிகளும் பருவமழைக்கு முன்பாக நிறைவு செய்யப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற அரசு தலைமை கொறடா திரு. R. சபரிநாதன் அவர்கள், மாண்புமிகு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. G. பாலமுருகன் அவர்கள், மாண்புமிகு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரேவந்த் சரண் அவர்கள், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. M. அருள் பிரகாசம் அவர்கள், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்தியபிரத சாகு இ.ஆ.ப., நீர்வளத்துறை பொறியாளர்கள், பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

1 month ago | [YT] | 11

கேடகம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்களின் தலைமையில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.!

இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வரவேற்று, கழகத் துண்டுகளை வழங்கி வாழ்த்தினார்.

சேலம் மாவட்டத்தில் ஒரே மேடையில் இவ்வளவு பேர் கழகத்தில் இணைந்திருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கையும், தலைவர் மீது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் நிகழ்வாக அமைந்தது.

இந்த மாபெரும் இணைப்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் முன்னிலை வகிக்க,

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், மாண்புமிகு சேலம் (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.லட்சுமணன் அவர்கள், மாண்புமிகு வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.பழனிவேல் அவர்கள், மாண்புமிகு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.சிவகுமார் அவர்கள், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.N.வெங்கடேசன் அவர்கள், சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.R.S.மணிகண்டன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.K.செல்வம் அவர்கள், மாநில மகளிரணி இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி C. பிரியா பார்த்திபன் அவர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, வார்டு, கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

1 month ago | [YT] | 23