ஒரு எளிய ஜோதிடன்... ஜோதிடத்தை சுவாசமாக கொண்டவன்... ஜோதிடம் தவிர வேறு எதுவும் தெரியாதவன்....

Please Contact only Office hours 10AM-6PM

Cell +91 8681 99 8888, 8870 99 8888, 9107 99 8888, 9768 99 8888, 8286 99 8888,


To join Whatsapp Group send msg to -
-+91 8428 99 8888

Land lines: 044-4867 8888, 044-2435 8888

or e-mail- adhithyaguruji@gmail.com

SUNDAY HOLIDAY.


GURUJI TV

9 வருட மெமரி..

கலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..?
– ஜோதிடம் சொல்வதென்ன..? #adityaguruji #gurujiarticle

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 868 99 8888

நேற்று ரஜினியின் ஜாதக அமைப்புப்படி சினிமாவில் அவரது வெற்றிக்கும், ஆன்மீக ஈடுபாட்டுக்குமான காரணங்களைப் பார்த்த நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் அவரது அரசியல் பிரவேசம் நடக்குமா என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒருவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கவர்ச்சியாளராக இருப்பது வேறு. அனைத்து அதிகார அமைப்புகளும் அவரை வணங்கி சல்யூட் அடிக்கும் உச்ச பதவியில் இருப்பது என்பது வேறு. இரண்டிற்குமான கிரக அமைப்புகள் வேறு வேறானவை.

மிகப் பெரிய அதிகார பதவியை அடையப் போகிறவரின் ஜாதகத்தில் உன்னத ராஜயோக அமைப்புகள் இருக்கவேண்டும். அதோடு பதவி ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் பாவம் அவரது ஜாதகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் நாட்டிலோ, மாநிலத்திலோ உச்ச பதவியை அடைந்து, நீடித்தும் இருக்க முடியும்.

தமிழ்நாட்டின் முதன்மைப் பதவியில் நீண்டகாலம் இருந்த, முக்கியமாக சினிமாத் துறையைச் சார்ந்த, முந்தைய மூவரின் ஜாதகங்களைப் பார்க்கப் போவோமேயானால், கலைஞரின் ஜாதகத்தில் அவரது கடக லக்னத்திற்குரிய பத்திற்குடைய செவ்வாயும், ராசிக்கு பத்திற்குடைய சனியும் உச்சம்.

எம்ஜிஆருக்கு லக்னத்திற்கு பத்திற்குடைய புதன் பரிவர்த்தனையின் மூலம் ஆட்சி, ராசிக்குப் பத்திற்குடைய குருபகவானும் நேர்நிலையில் ஆட்சி. தனது குருவும், கட்சியின் பிதாமகருமான எம்ஜிஆரை விட சாதனைகளைச் செய்து மறைந்த ஜெயலலிதாவின் ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்திற்குடைய குரு ஆட்சியை விட மேம்பட்ட மூலத்திரிகோண வலுவில் இருக்கிறார். ராசிக்குப் பத்துக்குடைய சுக்கிரன் உச்சம்.

ஆனால் ரஜினியின் ஜாதகத்திலோ பதவியைக் குறிக்கும் கிரகமான ராசிக்கும், லக்னத்திற்கும் பத்திற்குடைய சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ இல்லாமல் பகைவர் வீட்டில் அமர்ந்த நிலையில், லக்னத்திற்கு ஐந்திலும், ராசிக்குப் பனிரெண்டிலும் இருக்கிறார்.

கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற சுக்கிரன் தனது கேந்திர வீட்டிற்கு எட்டில் மறைந்து, சுபத்துவம் பெற்ற ராகு,கேதுக்களுக்கு பத்தாமிடத்தில் இருக்கும் காரணத்தினால் ரஜினி சுக்கிரனின் துறையான சினிமாவில் உச்ச நிலையில் இருக்கிறார். ஆனால் இதே விதி அரசியலின் உயர்நிலையான முதல்வர் பதவிக்குப் பொருந்தாது.

அரசனுக்கு நிகரான முதல்வர் பதவியில் அமரப் போகிறவரின் ஜாதகத்தில் வேத ஜோதிடத்தில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் குறிப்பிட்டுச் சொல்லும் ராஜயோகங்களும் இன்னும் சில முன்னிலை யோகங்களும் இருக்க வேண்டும்.

எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதக யோகங்களை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருப்பினும் இப்போது எடுத்துக் கொண்ட தலைப்பிற்காக அவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

கலைஞரும், ஜெயலலிதாவும் ஒரு மேம்பட்ட பிறவி அரச நிலையைக் கொண்ட உன்னத ஜாதக அமைப்பைக் கொண்டவர்கள். இவர்கள் இருவரின் ஜாதகத்தை ஒப்பு நோக்கும்போது எம்ஜிஆரின் ஜாதகம் ஒரு மாற்றுக் குறைந்ததுதான்.

வேதஜோதிடத்தில் ஓரளவுக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு இப்போது நான் சொல்லப் போகும் இந்த வித்தியாசங்கள் புரியும். இம்மூவரின் வாழ்க்கை அமைப்புகளும் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்த்தும்.

தனது நாற்பத்தி ஐந்து வயதில் முதல்வரானவர் கலைஞர். நாற்பத்தி மூன்று வயதில் அந்தப் பதவியில் அமர்ந்தவர் ஜெயலலிதா. கலைஞரை விட வயதில் மூத்தவரான எம்ஜிஆர், இவர்கள் பதவியில் அமர்ந்த வயதுகளில் தொழில் போராட்டங்களில் இருந்தார், அறுபத்தியொரு வயதில்தான் அவரால் முதல்வராக முடிந்தது.

கலைஞரின் ஜாதகம் ராஜயோகங்களில் முதன்மையானது. ஒருவரை முதல்நிலை தலைவனாக்கும் சிவராஜ யோகம் அவரது ஜாதகத்தில் இருக்கிறது. தலைமை தாங்க வைக்கும் கிரகமான சூரியனை வலுப் பெற்ற குரு நேருக்கு நேர் பார்ப்பதால் உண்டாகும் ராஜயோகம் இது.

இது தவிர பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான கேந்திரங்களில் செவ்வாய் உச்சமடைவதால் உண்டாகும் ருசக யோகம், பங்கமடைந்த சனி உச்ச சச யோகம், ஒன்பது பத்துக்குடையவர்கள் பூரண வலுப் பெற்றதால் உண்டான மிக உன்னத தர்ம,கர்மாதிபதி யோகம் என ஒரு யோகக் குவியல் அவருடைய ஜாதகம். இதுபோதாதென்று அவரது லக்னம், ராசி, லக்னாதிபதி சந்திரன் மூன்றும் வலுப் பெற்ற குருவால் பார்க்கப்பட்டு, லக்ன நாயகனும் உச்சத்திற்கு அருகில் இருக்கிறார்.

ஜெயலலிதாவின் ஜாதகமும் கலைஞரின் ஜாதகத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. “மகம் ஜெகத்தை ஆளும்” என்ற ஜோதிடமொழிப்படி மாசி மகம் அன்று பூரணச் சந்திரனாகி, குருவால் பார்க்கப்பட்ட பவுர்ணமி யோகத்தோடு உண்டான முதன்மை ராஜயோகம் அமைந்த ஜாதகம் அவருடையது.

இதுவன்றி இயற்கைச் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் இருவரும் வலுவுடன் கேந்திரங்களில் அமர்ந்ததால் உண்டான ஹம்ச யோகமும், மாளவ்ய யோகமும் அவருக்கு இருந்தது. கலைஞரைப் போலவே லக்னத்தையும், ராசியையும் வலுப் பெற்ற குரு பார்க்கிறார்,

எம்ஜிஆரின் ஜாதகப்படியும் குருபகவான் ஆட்சி பெற்றதால் உண்டான ஹம்ச யோகமும், சுக்கிரனும், புதனும் இணைந்ததால் உண்டாகும் தர்ம கர்மாதிபதி யோகமும் இருக்கின்றன. லக்னாதிபதி பரிவர்த்தனையின் மூலம் ஆட்சி பெற்ற நிலையுண்டாகிறார். எல்லாவற்றையும் விட மேலாக ஒன்பது, பத்துக் குடையவர்களுடன் இணைந்த ராஜயோக மகர ராகுவின் தசை எம்ஜிஆருக்கு முதல்வர் பதவியை பெற்றுத் தந்து முதல்வராகவே மண்ணுலகை விட்டு மறையச் செய்தது.

ஆனால் இது போன்ற ராஜயோகங்கள் எதுவுமே இல்லாத சாதாரண ஜாதகம் ரஜினியுடையது. ஜாதகப்படி அவருக்கு சிம்மலக்னம், மகர ராசியாகி ராஜகிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய சூரியனும், சந்திரனும் நான்கு மற்றும் ஆறாமிடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சூரியன் திக்பலம் இழந்து சனியால் பார்க்கப்படுகிறார். எம்ஜிஆருக்கும் இந்த அமைப்பு இருந்தது. ஆனால் வலுப்பெற்ற லக்னாதிபதியும், ராஜ யோக ராகு தசையும் அதனை ஈடுகட்டியது.

அதிகாரத்தைக் குறிக்கும் செவ்வாய் உச்சம் பெற்று, வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்திருப்பதை வேண்டுமானால் ரஜினியின் ஜாதகத்தில் சினிமாவைத் தாண்டிய சிறப்பாகச் சொல்லலாம். ஆனால் அதுவும் ருசக யோகம் போன்று கேந்திரங்களில் இல்லாமல் ஆறில் மறைந்துதான் உண்டாகிறது. இந்த அமைப்பு பூமியை வாங்க வேண்டுமானால் உபயோகப்படுமே தவிர பூமியை ஆள அல்ல.

ஒருவர் முதல்வர், பிரதமர் போன்ற பதவியை அடைய வேண்டுமானால் சூரியனோ, சந்திரனோ தங்களுக்கு கேந்திரமாகவோ அல்லது லக்ன கேந்திரமாகவோ இருக்க வேண்டும் என்பது முக்கிய ஜோதிடவிதி. இந்த அமைப்பு இல்லாவிடில் வலுப்பெற்ற ராஜயோகங்கள் இருக்கவேண்டும்.

இதுவன்றி சிம்மம் மட்டும் வலுப் பெற்றிருந்தால் அவர் ஒரு மறைமுகமான அதிகாரத்துடன் அதாவது அரசாங்கத்தில் அவர் சொல்லும் எதுவும் நடக்கும் என்கிற தோரணையில், மகனை அரியணையில் அமர்த்தி பின்னால் இருந்து ஆலோசனைகளை சொல்லி நிர்வாகத்தை நடத்தும் ஒரு முதிய அரசனைப் போலத்தான் இருக்க முடியும். நேரடி பதவியில் இருக்க முடியாது.

இன்னொரு நிலையாக ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் தசா,புக்திகளும், அவ்வப்போது மாறும் கோட்சார அமைப்புகளும், அவனது வாழ்க்கை அமைவுக்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப் போனால் ஜாதகம் யோகமாக இருந்தாலும் தசா, புக்தி அமைப்புகளே ஒரு மனிதனை ஒரு உயர்வுக்கோ, அல்லது தாழ்வுக்கோ கொண்டு செல்கின்றன.

ராகு தசையில் கண்டக்டராக இருந்த ரஜினி, தனது ஜாதகப்படி ராசிக்கும், லக்னத்திற்கும் பத்தாம் அதிபதி சுக்கிரனின் துறையான சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்து திரைப்படத் துறையில் நுழைந்தார். அதன் பிறகு லக்னத்திற்கு கேந்திரத்தில் அமர்ந்த ராகு சாரம் பெற்ற குருவின் தசையில் உச்ச நட்சத்திரமானார். லக்னாதிபதியின் சாரமும், சூட்சும வலுவும் பெற்ற ராசிநாதன் சனியின் தசையில் சிகரம் தொட்டார்.

அடுத்து இரண்டாம் அதிபதியான புதனின் தசை ரஜினிக்கு நடக்க இருக்கிறது. சிம்ம லக்னத்திற்கு புதன் யோகர் அல்ல. அவர் ராசிக்கு ஆறாம் அதிபதியாகி ராசியின் ஆறாம் வீட்டையே பார்க்கிறார். இன்னும் சொல்லப் போனால் இந்த தசை ரஜினிக்கு மாரக தசையாகவே செயல்படும்.

மேலும் மிக முக்கியமான இந்த காலகட்டத்தில் ரஜினியின் மகர ராசிக்கு வருகின்ற சனிப்பெயர்ச்சி முதல் ஏழரைச்சனி ஆரம்பிக்க இருக்கிறது. அறுபது வயதை அவர் கடந்து விட்டதால் இந்த ஏழரைச்சனி அவரை ஒன்றும் செய்யாது என்று சொல்லலாம். ஆனாலும் சனி, சனிதான் என்பதை நான் அடிக்கடி கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் ஜாதகத்தை பற்றி எழுதும் போது 1996-ல் அவருக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்த போதும், 2006 ல் ஏழரைச்சனி நடந்தபோதும் அவர் ஆட்சியை இழந்ததை குறிப்பிட்டிருக்கிறேன். அதேபோல 2001-ல் கலைஞர் ஆட்சியை இழந்த போது அவருக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தது.

எனவே ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களில் ராஜயோக ஜாதகமாயினும் இருக்கும் ஆட்சியை இழக்கத்தான் வைக்குமே தவிர ஆட்சியைப் பிடிக்கச் செய்யாது. எனவே இனிமேல் நடைபெறப் போகும் கோட்சார அமைப்புகளும் ரஜினிக்கு சாதகமாக இல்லை.

நேற்று ரஜினி பேசும்போது போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். யுத்தம் என்னவோ ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் “மன்னன்” தான் அதைச் சந்திக்க ஆயுளுக்கும் தயாராக இல்லை.

(20-5-2017 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள் செல்: +91 8286 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

10 hours ago | [YT] | 36

GURUJI TV

உச்சமும், நீச்சமும். அதி உயர்நிலை சூட்சுமம்.#adityaguruji #gurujitvvideos
https://youtu.be/hMmgHEre9JQ

11 hours ago | [YT] | 3

GURUJI TV

5 years memory...

RAHU-THAT MAKES ONE LOSE CHASTITY IN THE NAME OF LOVE...(EA-53) #adityaguruji #adityagurujienglisharticle

Astrologer Aditya Guruji

Cell : +91 8286 99 8888

A subtle point is that when Rahu is placed along with the planet owning the house good results cannot be expected, even if it happens to be the 3rd or 11th houses.

That is because, if you are residing in your own house strongly and you have an aggressor in the same house. What will you do…?

Would you also not resist the aggression ….?

What if the enemy is also powerful…? Both of you would be tiring with war, with he unable to win over you, you unable to chase him out and stay in the same house exchanging stiff glances at each other…

It is something similar to that….

As the owner of the house occupied by Rahu is powerfully seated in the same house and is resisting his presence, Rahu would be unable to deliver favourable results. Due to the invasion of the shadow planets the owner of the house would also be restrained from giving good results.

But, when a debilitated planet gets associated with Rahu, as he is already fragile, he would surrender completely to Rahu, who would grab the functionalities of the planet, without having anyone to resist and bestow the effects as per the house in which they are placed.

Amongst the nine planets, Rahu alone poses extreme difficulties to astrologers in judging and assessing his status.

When placed in certain configurations, it would be really challenging for astrologers to predict whether the dasa of Rahu would be beneficial or not. It adds up further, when Rahu and Kethu are placed in their own star. Prediction becomes next to impossible. We could see further in the forthcoming Chapters, on how to predict the significations of Rahu and Kethu, when they are seated in their own stars.

Another significant aspect of Rahu is that if in a family more than one person is running the dasa of Rahu, then separation, sorrow, death and poverty would be inevitable in the family.

Since Rahu is darkness, when a majority of the family members are running the dasa of Rahu, it means that the family by itself is in the darkness. The exceptions to this theory are when Rahu is placed in Mesha, Rishaba, Kataka, Kanya and Makara.

If Rahu or Kethu dasa runs concurrently for more than one in the family and they are not placed in one of the houses as mentioned above, then there would be more misfortunes in the family.

If any native is suffering in Rahu dasa, inspite of Rahu being placed in favourable positions as indicated in our scriptures, then an analysis of the horoscopes of the other members of the family would reveal one of them also undergoing the same Rahu dasa concurrently…

In my experience I have seen the entire family disintegrating due to poverty and other issues, when Rahu dasa or bhukti is operational to mother, father and children.

In match making, I am particular that Rahu dasa is never operational at the same time to both of them in the future.

The other subtlety indicated in our scriptures is that most often it is Rahu and Kethu that functionalise the theory of significator when occupying the functional house, “Karako Bhava Nasti (significator placed in the functional house would destroy the functionality)” .

For example, Mangal is the significator of siblings. When he is placed powerfully in the 3rd house devoid of aspect of a benefic, then during his dasa separation or loss of siblings and problems from siblings could be resulted.

As Mangal dasa is operational for 7 years, it is very difficult to estimate the exact time period wherein he would give the negative results with respect to siblings, during these 7 years.

In such situations, if Rahu or Kethu occupies the house of Mangal or is aspected by Mangal or associated with Mangal in any form, then severe effects like loss of siblings could happen during their bhuktis.

Additionally, if Rahu or Kethu are connected to 6th or 8th houses, then they would cause the demise of siblings and would facilitate the “Karako Bhava Nasti((significator placed in the functional house would destroy the functionality)” with full vigour.

It must also be noted that just like Sukra dasa, Rahu dasa too does not give favourable results when operational at a very young age. That too, Rahu dasa in school going age would remove the desire for learning in the youngster.

With this configuration, the student is likely to skip education and show more interest in sports and entertainment. In certain situations, Rahu dasa operating at a younger age would cause obstacles to education.

You must have heard of the proverbs like, “Kutty Sukran kudiyai kedukkum”(Sukra(dasa) at an young age would ruin the family) and “Kutty Sukran kotti kavizhkkum”(Sukra(dasa) at an young age would spoil)…

Why means….

Sukra is responsible for lust. Sukra dasa at an age that is not physically conducive enough for lust/love, would only lead to mental disturbances through unexplainable sexual drives.

As Sukra dasa that is operational at a very young age, when the body is not ready to cope up the lust and the mind is also immature, would constantly keep triggering the native with thoughts of lust and love and force him seek through illegitimate means, our scriptures strongly advocate the running of Sukra dasa only at around the middle age when one can really enjoy the lust and love.

In the same context, Rahu is a planet for indulgence in one sense and a smart thief in another perspective. Rahu would give the capability to cheat people, who would voluntarily get trapped and return happily without realising that they have got cheated.

As the two states as mentioned above, indulgence and cheating is not possible for anyone in their young ages, Rahu dasa that is operational at an young age is useless.

As in the young age, we do not have any other challenge other than schooling, operation of a contradicting dasa of Rahu, the bestower of indulgence, would lead to effects like hurdles in education, lack of education etc..

Another important contribution of Rahu and Kethu is towards introduction of romance at a very young age to the extent of driving her to lose her chastity in the name of love.

Parents of children in the final school leaving or college going ages, with Rahu or Kethu seated in the houses of Sukra with Rahu or Kethu dasa or bhukti operational or the dasas or bhuktis of 6th or 8th house lords associated with Sukra should be extremely careful.

In such configurations, the serpentine planets would divert the girls towards adolescent emotions. It is during this period that a man is understood. Also, the dasa or bhukti of Rahu or Kethu seated in the 6th or 8th house or the dasa or bhukti of Rahu or Kethu that gets associated with the 8th lord would certainly lead to cheating of a girl during romantic encounters.

It is the evil game of Rahu and Kethu for a young girl to choose an inappropriate partner, who is not suitable and is inferior in all possible ways only to offer her body, soul to him and to elope with him to ultimately lose her life.

Is a very well-educated girl in love with a poorly educated mechanic or auto driver or a vagabond …? Seek the horoscope of the girl. It would certainly have Rahu and Kethu connected to the 8th house or its lord.

Office Time: 10:00 AM - 6:00 PM

Contact Us: +91 8286 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 442435 8888, +91 44 4867 8888

To get Guruji's Articles and Weekly Predictions in WhatsApp +91 8428 99 8888

12 hours ago | [YT] | 5

GURUJI TV

ராகு எப்போது கெடுப்பார்.. வளர்ப்பார்? #adityaguruji #shorts #ராகு #rahu
youtube.com/shorts/khjNcIjnzA0

12 hours ago | [YT] | 1

GURUJI TV

WILL MARRIAGE HAPPEN?HOW TO PREDICT?-திருமணம் நடக்குமா?கணிப்பது எப்படி?#adityaguruji #gurujitvvideos
https://youtu.be/niRoxZw_hcU

13 hours ago | [YT] | 2

GURUJI TV

15 வருட மெமரி..

ருத்ரனைப் போல் மாற்றும் ருசக யோகம்..! (B-012) #adityaguruji #gurujiarticle

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 868 99 8888

பஞ்ச மஹா புருஷ யோகங்களில் நான்காவதாக செவ்வாயால் உண்டாகும் ருசக யோகத்தைப் பற்றித் தற்போது காண்போம்.

ஏற்கனவே நாம் பார்த்த மூன்று யோகங்களும் இயற்கைச் சுப கிரகங்களால் தரப்படுபவை. தற்போது பார்க்க இருக்கும் ருசக யோகம் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாயால் உண்டாகப் பெறுவது.

ஜோதிட ஆர்வம் உள்ள அல்லது ஜோதிடத்தை அறிந்திருக்கும் சிலருக்கு இந்த ருசக யோகத்தை பற்றியும், இதனையடுத்து சனியால் உண்டாகப் பெறும் சச யோகத்தைப் பற்றியும் நான் தரப்போகும் விளக்கங்கள் இதுவரை படித்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும், வேறுபட்டதாகவும் இருக்கலாம்.

நீண்ட ஆய்வுக்குப் பின் எனக்கேற்பட்ட அனுபவக் கருத்தின்படி எந்த ஒரு ஜாதகத்திலும் இயற்கைப் பாபக் கிரகங்களாகிய சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய நால்வரும் நேரடியாக வலுப் பெறவே கூடாது. சூட்சும வலு தான் பெற வேண்டும். (சூரியன் அரைப் பாபர்தான். முழுப் பாபர் அல்ல )

இதனை "பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி" என ஒரு அமைப்பாகவே நான் சொல்லியிருக்கிறேன்,

அதிகாரம், ஆணவம், அசட்டுத் துணிச்சல், முன்கோபம், சகோதரர், விவேகமற்ற வீரம், பூமி, குன்றுகள், மலைகள், சுரங்க உலோகங்கள், எதிரிகள், கூர்மையான ஆயுதம், சுப்ரமணியக் கடவுள், ரத்தம், சிகப்பு நிறமுடைய பொருட்கள், ஆண் சமையல் செய்தல், விளையாட்டு, உடற்பயிற்சி, மிருகத்தனம், தலைமைக்கான இரக்கமற்ற தகுதி,

சுதந்திர எண்ணம், நெருப்பு, வழக்கு, காவல்துறை, ராணுவம், ஆளுமை, விபத்து மற்றும் அடிதடி, கலவரம், வெட்டுக் காயம், முறையற்ற வேறுபட்ட காமம், கற்பழிப்பு, அறுவைச் சிகிச்சை நிபுணர், சிறைத் தண்டனை, கொடுமையான பேச்சு, மூர்க்கத்தனம், கடினமான மனம், வீண் விவகாரங்கள், உணர்ச்சி வசப்படுதல் போன்ற நிலைகளுக்கு செவ்வாய் காரணமானவர் ஆவார்.

சர, ஸ்திர லக்னங்கள் எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய எட்டு லக்னங்களுக்கு மட்டும் செவ்வாய் கேந்திரங்களில் வலுப் பெற்று ருசக யோகத்தை அளிப்பார். அவர் இவ்வாறு பலம் பெறும் நிலையில், அவரது தசையில் மேலே சொன்ன அவரின் காரகத்துவங்கள் நடக்கும்.

செவ்வாயின் முக்கியமான காரகத்துவங்களில் ஒன்று வீரம்....

இந்த வீரத்தை நாம் இரு வேறு கால கட்டங்களில் இரு வேறுவிதமான அர்த்தங்களாகத்தான் புரிந்துக்கொள்ள முடியும்.

அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன், சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையில் ஒரு தனி மனிதன் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ள, வேறொரு நபரை அல்லது குழுக்களை ஆயுதங்களால் வெட்டுவது, கொல்வது, முரட்டுத்தனமாக அழிப்பது, வீரம் எனப்பட்டது.

ஆனால் காலமும், சமுதாயச் சூழலும் மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் ஒரு தனி மனிதன் மேற்கண்டவைகளை தன்னைப் பாதுகாப்பதன் பொருட்டு செய்ய நேரிட்டாலும் இன்று அது வீரம் எனப்படுவதற்கு பதிலாக குற்றம் என்றுதான் சொல்லப்படும்.

ஆகையால் இன்றைய சூழலில் வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் ஒரு ஜாதகத்தில் வலுப் பெற்றால் வீரனை உருவாக்குவாரா? அல்லது குற்றவாளியை உருவாக்குவாரா?

செவ்வாய் நேரடியாக வலுப் பெற்றால் ஜாதகர் அசட்டுத் துணிச்சல் உள்ளவராகவும் முன் கோபக்காரராகவும் இருப்பார். மூர்க்கத்தனம் ஜாதகரின் பிறவிக் குணமாக இருக்கும்.

வலுப் பெற்ற செவ்வாய் கிரிமினல்தனத்தை உருவாக்கி தைரியமாகக் குற்றங்களைச் செய்ய வைப்பார், ரவுடி ஆக்குவார். ஜாதகருக்கு அடிப்பதிலும், தண்டிப்பதிலும் ஆர்வம் இருக்குமாதலால் காவல்துறை அல்லது ராணுவத்தில் பணி புரிய வைப்பார்.

செவ்வாய் பலமாக இருந்தும் மேற்கண்ட குணங்களின் தாக்கத்திலிருந்து ஜாதகர் தப்பிக்கிறார் என்றால் அது அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தவிர்த்து பலமாக உள்ள மற்ற கிரகங்களின் அதிர்ஷ்ட விளைவுகளால்தான் இருக்க முடியும்.

இன்னொன்றையும் நான் உறுதிபடக் கூறுவேன்....

நமது மூல நூல்கள் ஜாதகத்தில் செவ்வாய் வலுப் பெற்றவனை மாபெரும் வீரன், ஆயிரம் தலைகளைக் கொய்பவன், சேனாதிபதி, மஹா தைரியசாலி, பூமியை வெல்பவன் என்றுதான் புகழ்கின்றனவே தவிர இவன் நல்லவன், கருணை உள்ளவன், மகா கோடீஸ்வரன், அரண்மனையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவன், வேகமாகச் செல்லும் ரதங்களில் கட்டிளம் மங்கையரை அருகில் வைத்துக் கொண்டு இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பவன் என்றோ, அல்லது வேதாந்தம் பேசிக் கொண்டு கடவுளுக்கு அருகிலேயே இருந்து அவருக்கு சேவை செய்து அவரின் திருவடிகளைப் போற்றும் அவ்வுலக இன்பத்தை அனுபவிப்பவனாகவோ ஒரு போதும் குறிப்பிடவில்லை.

சரி...

அப்படியானால் பாபக் கிரகங்கள் வலுப் பெறவே கூடாதா? அவர்களின் உச்சம், ஆட்சி போன்ற நிலைகள் வீண்தானா? அவர்களும் வலுப் பெறுவது எதற்காக என்று கேட்பீர்களேயானால் சில நிலைகளில், சில விளைவுகளுக்காக அவர்கள் வலுப் பெற்றுத்தான் ஆக வேண்டும். அப்படி அமைவதுதான் சூட்சும நிலை. அதுதான் படைப்பின் நியதி.

பாபக் கிரகங்கள் உள்ளிட்ட எந்தக் கிரகம் வலுப் பெற்றாலும் ஜாதகத்தில் அவர்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியவர்களோ அந்த இடங்கள் நிச்சயம் வலுப் பெறும். அந்தக் கிரகங்கள் சுப காரகத்துவங்களைப் பெற்ற இயற்கைச் சுபர் என்றால் இரட்டிப்பு நல்ல பலன் கிடைக்கும். இந்த அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவர் கொடுத்து வைத்த யோகசாலி.

ஆனால் தீய காரகத்துவங்களை உடைய பாபக் கிரகங்கள் ஜாதகத்தில் நல்ல ஆதிபத்தியங்களுக்கு உரியவர்களாயினும் நேர்வலு பெறுமாயின் தனது தீய செயல்பாடுகளின் வழியே தான் அந்த ஆதிபத்தியப் பலன்களைத் தரும்.

மற்றொரு உண்மையாக, சில நிலைகளில் சனியும், செவ்வாயும் தங்களின் சர ராசிகளில் ராகு, கேதுக்களுக்கு இடமளிக்கும் போது, அதாவது மகரத்திலும் மேஷத்திலும் ராகு இருக்கும் நிலையில், ராகு தசையில் மறைமுக அபரிமிதமான தன லாபம் கிடைப்பதற்காக சனியும், செவ்வாயும் (ராகு இருக்கும் ராசிநாதன்) வலுப் பெற்றே ஆக வேண்டும்.

அப்போது கூட எனது சூட்சும வலு தியரிப் படி அவர்கள் மறைவிடங்களில்தான் உச்சம் பெறுவார்கள்.

(இந்த விஷயத்தை நேரம் கிடைக்கும் போது பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்குகிறேன். இப்போது இதையும் சொல்ல ஆரம்பித்தால் எடுத்துக் கொண்ட தலைப்பான ருசக யோகத்தை விட்டு விட்டு வேறெங்கோ கிளைகளில் பயணிக்க வேண்டியிருக்கும்.)

அதே நேரத்தில் நீ என்ன நமது ஞானிகளால் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்ட ருசக யோகத்தை விமர்சிக்கிறாய்? என்று என்னைக் கேட்டால் அதுவும் தவறுதான் என்பேன்.

இந்த தொடர் கட்டுரைகளின் ஆரம்பக் கட்டுரையான "உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா..?" கட்டுரையின் முதல் வரியிலேயே நான் குறிப்பிட்டதைப் போல் யோகம் என்றால் ஒரு சேர்க்கை, ஒரு அமைப்பு அவ்வளவுதான். அதை அதிர்ஷ்ட நிலைகளோடு நம் ஞானிகள் தொடர்பு படுத்தவில்லை.

வழி வழியாகத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டபடி யோகம் என்றால் அதிர்ஷ்டம் எனவும், அனைவரும் எழுதுவதைப் போல் ருசக யோகமும், சச யோகமும் மகா அதிர்ஷ்டத்தைத் தரும் என்று தவறாக வழிகாட்டும் ஆளில்லை நான்.

என்னுடைய முடிவான கருத்தின்படி ருசக யோகமும், சச யோகமும் எந்த ஒரு நிலையிலும் அதிர்ஷ்டத்தினை ஜாதகருக்குத் தராது. அதற்குப் பதிலாக சில நிலைகளை, அமைப்புகளை ஜாதகருக்குத் தரும். அதிலும் சச யோகம் எந்த ஒரு ஜாதகத்திலும் இல்லாமலிருப்பது மிகவும் நல்லது.

இயற்கைப் பாபரான செவ்வாய், தான் இருக்கும் இடத்தையும், தான் லக்ன பாபராகவும் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகளையும் பலம் இழக்க வைப்பார்.

நம் இந்திய ஜோதிடத்தில் இவரால் ஏற்படும் செவ்வாய் தோஷம் பல பெற்றோர்களின் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியது. ஒருவருடைய ஜாதகத்தில் இவர் 2,4,7,8,12 இடங்களில் அமர்ந்தால் செவ்வாய் தோஷம் எனப்படுகிறது. அதற்கும் பலப் பல விதிவிலக்குகள் உள்ளன.

குடும்பம் எனும் இரண்டு

ஒழுக்கம் எனும் நான்கு

வாழ்க்கைத் துணை எனும் ஏழு

மாங்கல்யம் அல்லது வாழ்க்கைத் துணையின் ஆயுள் எனும் எட்டு,

தாம்பத்ய சுகம் எனும் பனிரெண்டு.

ஆகிய இடங்களில் இயற்கைப் பாபரான செவ்வாய் அமர்ந்து அந்த இடங்களின் நல்ல தன்மைகளைக் கெடுப்பதால்தான் இந்த இடங்களில் இருக்கும் செவ்வாயைப் பற்றிய பயம் வந்தது.

பலம் பெற்ற செவ்வாய் ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தையும், வலுவான உடலையும், உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தையும் தருவார். விளையாட்டு, மருத்துவம், போன்ற துறைகளில் அவரால் ஒருவருக்கு ஈடுபாடு வரும்.

அதேநேரத்தில் செவ்வாயும், சனியும் நேருக்கு நேரோ, சனிக்கு பத்தாமிடத்தில் செவ்வாய் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ இருந்தால் இருவரும் வலிமை இழப்பார்கள். இருவரும் சேர்ந்து ஒரு பாவத்தில் இருந்தால் அதைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது முற்றிலும் கெடும்.

குரு மற்றும் சந்திரனுடன் செவ்வாய் இணைவது, அவர்களின் பார்வையைப் பெறுவது போன்றவை அவரின் குரூரத்தைச் சற்றுக் குறைக்கும். குருவின் இணைவு மற்றும் பார்வையை விட வளர்பிறைச் சந்திரன் அல்லது பவுர்ணமிச் சந்திரனின் சேர்க்கை மற்றும் பார்வையைப் பெற்ற செவ்வாய் ஒரு மனிதருக்கு நல்ல பலன்களைச் செய்வார்.அதேபோல அவரது இன்னொரு நண்பரான சூரியனுடன் இணையும் போதும் வலுப் பெறுவார்.

இவருக்கு எதிர் அணியினரான சுக்கிரன் மற்றும் புதனுடன் இணைந்தால் அவர்களின் சுபத்துவத்தை இவர் கெடுப்பார். சுக்கிரனும், செவ்வாயும் இணைவது பிருகு மங்கள யோகம் என்ற ஒரு நல்ல அமைப்பாக நமது மூல நூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும் இந்த இணைவினால் சுக்கிரனின் சுப பலன்கள் ஜாதகருக்கு குறையும் என்பதால் இந்த அமைப்பு குறைபாடுகளைக் கொண்டது.

அதேநேரத்தில் சுக்கிரனை லக்ன பாபியாகக் கொண்ட தனுசு, மீனம், கடகம், சிம்மம் போன்ற லக்னங்களுக்கு இந்த யோகம் சில நன்மைகளை செவ்வாய் தசையில் செய்யும்.

சர மற்றும் ஸ்திர லக்னங்களுக்கு செவ்வாய் அளிக்கும் ருசக யோகத்தை தனித் தனியாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

( நவ 30-06, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள் செல்: +91 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

14 hours ago | [YT] | 43

GURUJI TV

சஸ்டாஷ்டக தோஷம் எப்போது நிவர்த்தி? ஜெயலலிதா ஜாதகம்.#adityaguruji #shorts
youtube.com/shorts/sK2o6ZeA4KU

15 hours ago | [YT] | 1

GURUJI TV

Good Horoscope? நல்ல ஜாதகமா? GURUJI'S PHONE LIVE (22.11..2024) #adityaguruji #gurujilive
youtube.com/live/ktk74k3rh2c

16 hours ago | [YT] | 2

GURUJI TV

8 வருட மெமரி..

மறுபடி அந்தப் பெண் கிடைப்பாளா? #adityaguruji #gurujiarticle

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எஸ். ஆறுமுகசாமி, திருப்பூர்.

கேள்வி.

அன்பும் ஆதரவும் காட்டி வழிகாட்டும் குருஜி அவர்களுக்கு வணக்கம். முதல் வாழ்க்கை கோணலாகிப் போன நான் சில வருடங்களுக்கு முன் உங்களிடம் கேள்வி கேட்டிருந்தேன். அப்பொழுது தாங்கள் கூறியபடி ஒரு வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணின் தொடர்பு கிடைத்தது. சென்ற ஜனவரியில் அந்தப் பெண்ணின் தந்தை இறந்தபோது, அந்தப் பெண் உங்களிடம் மாலைமலரில் கேள்வி கேட்டு அதற்கு நீங்கள் ஒரு தந்தையாகவே பதில் கொடுத்திருந்தீர்கள். அதன்பிறகு அந்தப் பெண் என் தொடர்பை விட்டு விட்டார். நானும் அவருக்கு எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. இப்பொழுது தனியாக தொழில் தொடங்கி நல்ல நிலைமையில் இருக்கிறேன். கடந்த சில வாரங்களாக அவரின் நினைவுகள் என்னை பாடாய்ப்படுத்தி எடுக்கின்றன. அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று எதுவும் எனக்குத் தெரியாது. 20 மாதங்களாக கட்டுப்படுத்தி வைத்த உணர்வுகள் எல்லாம் இப்பொழுது திடீரென ஏன் வெளியே வருகிறது என்றும் தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை. நாங்கள் என்றாவது ஒருநாள் மீண்டும் சேர முடியுமா அல்லது இனி அந்தப் பெண் என் வாழ்க்கையில் இல்லையா என்பதை தயவுசெய்து கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் உங்களுடைய எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். இந்த கேள்வி மாலைமலரில் வெளியானால் நிச்சயம் அவள் படிப்பாள். இறைவனிடம் நான் எதிர்பார்ப்பது எனக்காக ஒரு மனைவி, ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை மட்டுமே. இது கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று தாங்கள் கூறுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

பதில்.

(விருச்சிக லக்னம், கடக ராசி. 1ல் செவ், 2ல் சூரி, புத, சனி. 3ல் சுக், 5ல் குரு, ராகு, 9ல் சந், 11ல் கேது. 6-1-1988 அதிகாலை 3-21 சாத்தூர்)

காதலுக்கு தூது போகும் அளவிற்கு மாலைமலர் கேள்வி-பதில் பகுதி உபயோகப்பட போகிறது என்று தெரிந்திருந்தால், இதன் தலைமை நிர்வாகி இந்தப் பகுதிக்கு அனுமதி கொடுத்திருக்கவே மாட்டார்.

கடவுள் காரணமின்றி யாரையும், எதற்காகவும் அறிமுகப்படுத்துவதில்லை. எல்லா சம்பவங்களுக்கும் காரணங்கள் கண்டிப்பாக இருந்தே தீருகின்றன. கிரகங்களின் சுழற்சியால்தான் நம்முடைய வாழ்க்கைச் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில நிரந்தரமானதாகவும் சில தற்காலிகமானதாகவும் இருக்கிறது.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் மற்றும் புதனின் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் நன்மையை செய்வதில்லை. அப்படிச் செய்ய வேண்டுமாயின் ஒரு சிக்கலான, சூட்சும அமைப்பில் புதன் இருக்கவேண்டும். உங்களுக்கு கடந்த ஆறு வருட காலமாக புதனின் வீட்டில் அமர்ந்த, குரு பார்த்த கேதுவின் தசை நடப்பதால் இஸ்லாமியப் பெண்ணின் தொடர்பு கிடைக்கும் என்று பதில் கொடுத்திருப்பேன். அது நீடிக்க வழி இல்லை.

தற்போது கேது தசையில், புதன் புக்தி நடப்பதால் உங்களுக்கு மன உளைச்சல் தரும் விதமாக அந்தப் பெண்ணின் நினைவு அதிகமாக இருக்கிறது. இனி உங்கள் வாழ்க்கையில் அந்நிய மத பெண்ணிற்கு இடமில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சுக்கிரதசை ஆரம்பிக்க இருப்பதாலும், சுக்கிரன் லக்னாதிபதி செவ்வாயின் சாரத்தில் அமர்ந்து, பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் பார்வையை பெற்றிருப்பதாலும், சுயபுக்தியிலேயே உங்களுக்கு இரண்டாவது நல்ல வாழ்க்கை அமையும். தொழில் முன்னேற்றங்களும் இருக்கும். அந்தப் பெண்ணையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம்.

நான் என்னதான் சொன்னாலும் அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை அந்தப் பெண்ணின் நினைவுகளால் மன உளைச்சல் அடையத்தான் செய்வீர்கள். ஒரு செவ்வாய்க் கிழமை காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று ஒரு அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். அந்தப் பெண்ணின் நினைப்பு குறையும்.

(25.12.2018 மாலை மலரில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

17 hours ago | [YT] | 25

GURUJI TV

Raasi Palan - 27 Jan 2026 | இன்றைய பலன்களை | ஜோதிடர் ஆதித்ய குருஜி | Daily Horoscope #adityaguruji #dailyrasipalan #இன்றையராசிபலன் #todayrasipalan #suntvrasipalan #sunliferasipalan
https://youtu.be/a-9u3lsO7mo?si=FkayG...

18 hours ago | [YT] | 2