ஒரு எளிய ஜோதிடன்... ஜோதிடத்தை சுவாசமாக கொண்டவன்... ஜோதிடம் தவிர வேறு எதுவும் தெரியாதவன்....

Please Contact only Office hours 10AM-6PM

Cell +91 8681 99 8888, 8870 99 8888, 9107 99 8888, 9768 99 8888, 8286 99 8888,


To join Whatsapp Group send msg to -
-+91 8428 99 8888

Land lines: 044-4867 8888, 044-2435 8888

or e-mail- adhithyaguruji@gmail.com

SUNDAY HOLIDAY.


GURUJI TV

🍂எப்போது தொழிலில் நஷ்டம் வரும்? ONLINE CLASS TRAILER - 177🍂
#adityaguruji
#venus
#onlineclass
#தொழில்
#நஷ்டம்
#கிரக சேர்க்கை
#சுபத்துவம்
#பாபத்துவம்
#vedicastrologyintamil
https://youtu.be/VcgqC8_xYEI?si=LqZkX...

10 hours ago | [YT] | 0

GURUJI TV

சுக்கிரனும், சுக்கிர தசையும் எப்போது நன்மை செய்யாது?
#adityaguruji
#shorts
#sukkiran
#காமம்
#sani
#sevvai
# சுக்கிரன்
#பெண்கிரகம்
#செவ்வாய்
#சனி
#ராகு
#gurujitvvideos
youtube.com/shorts/KrsGnW8aPsQ

11 hours ago | [YT] | 0

GURUJI TV

🍂உதயநிதி முதல்வர் ஆவாரா? உதயநிதி ஸ்டாலின் ஜாதகம்.குருஜியின் பொது வீடியோ. 🍂
#adityaguruji
#uthayanithistalin
#uthayanithi
#dmk
#திமுக
#திராவிடமுன்னேற்றகழகம்
#முதல்வர்
#உதயநிதிஸ்டாலின்
#உதயநிதி
#chiefminister
#chiefministertamilnadu
https://youtu.be/JesgackrAI8

12 hours ago | [YT] | 1

GURUJI TV

✨நீச்சபங்கம், அஸ்தங்கம், பாவகம், ராசி பற்றிய குருஜியின் சூட்சும விளக்கங்கள்.✨
#adityaguruji
#நீச்சபங்கம்
#அஸ்தங்கம்
#neetchabangam
#பாவகம்
#raasi
#astangam
#ராசி
#jothidam
https://youtu.be/Nu0kExZfnz0

14 hours ago | [YT] | 5

GURUJI TV

குருஜியின் அனைத்து ராசிபலன்கள்,வீடியோக்கள் மற்றும் 'லைவ் ' அறிவிப்புகளை பெற ஆதித்யகுருஜி @இன்ஸ்டாகிராம் ஐடியில்@ இணையலாம்..#adityaguruji #jothidam
www.instagram.com/aditya_guruji?igsh=MXA1YzU4M2xxc…

15 hours ago | [YT] | 15

GURUJI TV

2 வருட மெமரி..

ராஜயோகம் தரும் ராகு தசை. எம்ஜிஆர் ஜாதகம்.

#adityaguruji
#ராஜயோகம்
#TamilArticle
#ராகுதசை
#ராகு
#எம்ஜிஆர்
#எம்ஜிஆர்_ஜாதகம்

🍂ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888🍂

சென்ற வாரம் உயர்வையும் தாழ்வையும் ஒருசேரத் தரும் ராகுதசையினைப் பற்றி நான் விளக்கியிருந்த நிலையில் இப்போது வாழ்வின் உச்சநிலைக்கு ஒருவரைக் கொண்டு செல்லும் ராஜயோக ராகுவின் தசையைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒருவரை அரசனுக்கு நிகரானவராக மாற்றும் ராஜயோகத்தை ராகு தனது தசையில் செய்ய வேண்டுமெனில் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகளில் அவர் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

மேலும் இந்த வீடுகள் லக்னத்திற்கோ ராசிக்கோ மூன்று ஆறு பத்து பதினொன்றாமிடங்கள் என்று சொல்லப்படுகின்ற உபசய வீடுகளாகவும் அமையவேண்டும் என்றும் நமது மூலநூல்கள் வலியுறுத்திச் சொல்கின்றன.

எனது முதன்மைக் குருநாதரும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைய தலைமுறை ஜோதிடர்களை உருவாக்கியவரும் இந்த நூற்றாண்டில் தமிழ் ஜோதிட உலகிற்கு கிடைத்த ஒப்பற்ற மாமணியுமான ஜோதிஷ வாசஸ்பதி தெய்வக்ஞசிரோன்மணி ஆத்தூர் மு.மாதேஸ்வரன் அய்யா அவர்கள் மறைவு ஸ்தானங்களின் இறுதிவீடான பனிரெண்டாமிடத்தில் அமரும் ராகுவும் ராஜயோகத்தைத் தருவதாக தனது மேலான ஆய்வுநூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எனவே நான் மேலே சொன்ன மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகள் ஒருவரின் லக்னத்திற்கோ ராசிக்கோ மூன்று ஆறு பத்து பதினொன்று பனிரெண்டாமிடங்களாக அமைந்து அங்கு ராகு அமரும்போது சுயமாக ராஜயோகத்தைத் தருவார்.

மேற்சொன்ன வீடுகளில் ஏதேனுமொன்றில் ராகு அமர்ந்து ராகுவுக்கு வீடு கொடுத்தவன் சுபவலு அடைந்து ராகு சுபருடன் குறிப்பிட்ட டிகிரியில் இணைந்து சுபரின் பார்வை பெற்று நல்ல சார அமைப்புடனும் நவாம்சத்தில் சுபவலுவும் பெற்றிருக்கும் நிலையில் ஒருவரை அரச நிலைக்கு உயர்த்துவார்.

மேலும் ராகுபகவான் தன்னோடு இணைந்த கிரகங்களின் வலுவைக் கவர்ந்து தனது தசையில் செய்பவர் என்பதால் சுபர்களோடு இணையும் பட்சத்தில் சேர்ந்த கிரகங்களின் முழு ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களை தானே வலுவுடன் தருவார்.

வலுப்பெற்ற ராகுவின் தசையில் ஒருவருக்கு ஆயிரம் யானைகளின் பலம் உண்டாகும். எவராலும் எதிர்க்க முடியாத வெல்ல முடியாத அமைப்பில் ஜாதகர் இருப்பார். இதுபோன்ற பலம் வாய்ந்த ராகுதசை ஒருவரை சமுதாயத்தில் மிகவும் பிரபலமாக்கி உச்சத்தில் கொண்டு சென்று வைக்கும்.

இந்த அம்சத்தை மனதில் கொண்டுதான் ராகுவைப் பற்றிய ஆரம்பக் கட்டுரையில் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாகாந்தியாக மாற்றியதும், ஆட்சிக்கு ஆசைப்படாமலிருந்த ஒருவரை மக்கள் தலைவராக்கி, பத்துவருடங்கள் நீடித்த மன்னனாக்கி இன்றும் இறவாதவராக இருக்கும் வகையில் அழியாப் புகழைக் கொடுத்தவரும் இந்த ராகுதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

கீழே ஒரு உன்னதமான ராஜயோக ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.

மிகவும் எளிமையான ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய இளமைக்காலத்தில் பசியின் கொடுமையை நன்கு உணர்ந்ததால் தனது இல்லத்துக்கு வந்த ஒருவரைக் கூட சாப்பிடாமல் அனுப்பாத ஒரு பொன்மனம் கொண்டவரின் உண்மையான ஜாதகம் இது.

அரசனாக இருந்த போது வீட்டிலிருந்து ஆட்சி மாளிகைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் தனக்குப் பின்னால் வந்த கார்களில் இருக்கும் ஒருவர் சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் காரை வீட்டுக்குத் திருப்பு என்று கட்டளையிட்ட மன்னாதி மன்னன் இவர்.

தனது வாழ்வின் முற்பகுதியில் நாடோடியாகவும் பிற்பகுதி முழுவதும் மன்னனாகவும் வாழ்ந்து தமிழ் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இந்தப் பேரழகன் ஐநூறு வருடங்களுக்கு முன் பிறந்திருந்தால் நமது ஆலயங்களில் அருள்பாலிக்கும் தெய்வங்களுள் ஒன்றாக்கப்பட்டு நம்மால் வழிபடப் பட்டிருப்பார். .

வெளியுலகில் இவரது பிறந்ததேதி ஜனவரி 17, வருடம் 1917 என்று அறியப்பட்டாலும் இவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு மட்டும் இவரது உண்மையான பிறந்ததேதி ஜனவரி 11, வருடம் 1916 என்பது தெரியும்.

இந்த மன்னனின் ஜாதகப்படி இவருக்கு கன்னிலக்னம் மீனராசி ரேவதி நட்சத்திரமாகி லக்னாதிபதி புதனும் சுக்கிரனும் தர்மகர்மாதிபதி யோகத்துடன் நட்பு நிலையில் ஐந்தாமிடத்தில் இணைந்து வலுப்பெற்று இருக்கிறார்கள். இவர்களுடன் ராகுவும் இணைந்திருக்கிறார்.

ஒருவர் திரைத்துறையில் அதிஉச்சப் புகழ் பெற வேண்டுமானால் மக்களை மயக்கும் வசீகரத்தை அடைய வேண்டுமானால் சுக்கிரனும் ராகுவும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விதியின்படி இவரது ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் மிகவும் நெருங்காமல் எட்டு டிகிரியை விட்டு விலகியிருக்கிறார்.

புதன்தசை ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் மீதியிருக்கும் நிலையில் பிறந்த இவருக்கு லக்னாதிபதி புதன் ஐந்தாமிடத்தில் நட்பு நிலையில் இருந்தாலும் ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் நெருங்கியிருந்ததால் பள்ளிக்கல்வியை முடிக்கும் அமைப்பு ஏற்படவில்லை என்பதோடு இளமைக்காலம் மிகவும் வறுமையுடன் கழிந்தது.

அதேநேரத்தில் புதன் ராகுவுடன் நெருங்கி வலுவிழந்தாலும் பத்தாமிடத்து சனியுடன் பரிவர்த்தனை பெற்றதால் ஆட்சிபெற்ற நிலையுண்டாகி பலம் பெற்றார் என்பதோடு லக்னத்தை இயற்கைச்சுபரான குருபகவான் வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்து ஆட்சி பெற்றுப் பார்த்ததால் லக்னமும் லக்னாதிபதியும் வலுப் பெற்று ராஜயோகத்தைத் தந்தது.

ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடர்கட்டுரைகளின் ஆரம்பத்தில் சூரியனின் சூட்சுமங்களில் ஒருவர் நாடாள வேண்டுமென்றால் அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென்றால் சூரியன் ராசிக்கோ லக்னத்திற்கோ பத்தாமிடத்தில் அமர்ந்து சந்திரனுக்குக் கேந்திரத்தில் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.

இவரது ஜாதகத்திலும் இந்த அமைப்பு உண்டாகி ராசிக்குப் பத்தில் சூரியன் அமர்ந்து லக்னத்திற்குப் பத்தாமிடத்தைப் பார்த்ததால் இவருக்கு ஆரம்ப காலத்திலேயே அரசியல் தொடர்பு ஏற்பட்டு இவரால் தர்மகர்மாதிபதிகளின் தொடர்பைப் பெற்ற ராகுதசையில் அரசனாகவும் முடிந்தது.

மேலும் இந்த ராகு நமது ஞானிகள் வகுத்த விதிப்படி மகர ராகுவாகவும் அமைந்து லக்னத்திற்கு ஐந்தில் அவர் இருந்தாலும் ராசிக்குப் பதினொன்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி எனப்படும் புகழைக் குறிக்கும் மூன்றாமிடத்தின் அதிபதியான செவ்வாய் அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் அமர்ந்து தனது மூன்றாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்தி குருபகவானும் தனது சுபப்பார்வையால் மூன்றாம் வீட்டைப் பார்த்ததால் இவர் அழியாப் புகழ் பெற்றார்.

புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகு அமர்ந்து அந்த வீட்டிற்கு அதிபதியான சனி அந்த பாவத்திற்கு ஆறில் மறைந்து புத்திரகாரகன் குருவும் இன்னொரு சுபரான சந்திரனுடன் இணைந்து பாதகாதிபத்தியமும் கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றதால் இவருக்கு வாரிசு தோஷம் ஏற்பட்டது.

இளம் வயதில் ஏறத்தாழ இருபது வயது வரை கஷ்டங்களை அனுபவித்த இவர் சுக்கிரதசை சுயபுக்தி முடிந்ததும் 1936 ல் சினிமா வாய்ப்பினைப் பெற்றார். சுக்கிரதசையில் அவர் அறிமுகமானாலும் 1952 ல் சுக்கிரதசை முடியும் வரை ஏறத்தாழ இருபது வருடங்கள் திரைத்துறையில் நிலை கொள்ள முடியவில்லை. அதற்கு சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றதும் ஒரு காரணம்.

லக்னாதிபதி புதனின் நெருங்கிய நண்பரான சூரியனின் தசையில்தான் 1952 க்குப் பிறகு இவர் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது. ஒரு தசாநாதன் நற்பலன்களைச் செய்ய வேண்டுமெனில் அவருக்கு வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெறவேண்டும் என்று நான் அடிக்கடி எழுதுவதை நினைவில் கொள்ளுங்கள்.

அடுத்து ஆட்சி பெற்ற குருவின் வீட்டில் இருந்து லக்னாதிபதி புதனின் சாரத்தில் அமர்ந்த சந்திரனின் தசையில்தான் (1958 - 1968) இவர் திரைத்துறையிலும் தமிழ்நாட்டிலும் அசைக்க முடியாத சக்தியானார்.

குருவுடன் இணைந்து சுபத்துவம் பெற்ற ஒளிமிகு வளர்பிறைச் சந்திரன் லக்னத்தைப் பார்த்து ஒளிப்படுத்தி தசை நடத்திய இந்தப் பத்து வருடங்களில்தான் தமிழ்நாடே இவரிடம் மயங்கிக் கிடந்தது. ஒளி பொருந்திய இவர் முகத்தை திரையிலும் நேரிலும் பார்க்க தமிழகமே தவம் இருந்தது.

இவரின் கட்சித்தலைவர் “தம்பி.. தேர்தலில் உன் நிதியுதவியை விட உன் திருமுகத்தைக் காட்டு அதுவே நம் கட்சிக்குப் பலம்.” என்று சொன்னதும் இந்த காலகட்டத்தில்தான்.

1968 முதல் 1975 வரை நடந்த செவ்வாய் தசையில் காட்சிகள் மாறின. செவ்வாய் அஷ்டமாதிபதி என்பதால் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்தன. எட்டுக்குடையவன் வெளிதேசத்தைக் குறிக்கும் பனிரெண்டாம் வீட்டில் இருந்ததால் வெளிநாடு சென்றார். உலகம் சுற்றும் வாலிபன் ஆனார்.

செவ்வாய் விரையத்தில் இருந்ததால் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்காக சொத்துக்களை விரயம் செய்தார். செவ்வாய் தசை முடியும் வரை கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டன.

1974 இறுதியில் ராஜயோக ராகுதசை ஆரம்பித்ததும் சாதகக் காற்று வீச ஆரம்பித்தது. மகரத்தில் தர்மகர்மாதிபதிகளுடன் இணைந்து சந்திரனின் சாரம் பெற்ற ராகு சந்திரதசையை விட உச்சத்தில் கொண்டு செல்லும் வேலையை ஆரம்பித்தார்.

தன்னுடன் இணையும் கிரகங்களின் பலத்தைக் கவர்ந்து தனது தசையில் ராகு செய்வார் என்று நான் எழுதியுள்ளபடி லக்னாதிபதி புதனை மூன்று டிகிரிக்குள் கிரகணமாக்கிய ராகு லக்னாதிபதியாகவும் தர்மகர்மாதிபதிகளாகவும் மாறி இவரை அரசபதவியை நோக்கிக் கொண்டு சென்றார்.

ராகுதசை சுயபுக்தி முடிவில் 1977 ல் மக்களின் பேராதரவுடன் இவர் அரசனானார். அடுத்து 1980 ல் ஆரம்பித்த ஆறுக்குடைய சனிபுக்தியில் சிறு சறுக்கல் ஏற்பட்டு மீண்டும் பலத்த ஆதரவுடன் மன்னன் ஆனார். ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் நெருங்கி பலவீனமான லக்னாதிபதி புக்தியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தமிழ் உலகமே இவருக்காக பிரார்த்தனை செய்தது.

சரராசியில் ராகுவுடன் இணைந்த லக்னாதிபதி புக்தி என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்தபடியே மீண்டும் ராஜயோக ராகுவால் அரசபதவியைப் பெற்றார்.

ஆனால் உபசெய ஸ்தானங்களைத் தவிர்த்து கேந்திர கோணங்களில் அமரும் ராகுகேதுக்கள் ராஜயோகத்துடன் மாரகத்தையும் செய்வார்கள் எனும் விதிப்படி லக்னத்திற்கு இரண்டிற்கும் ராசிக்கு மூன்று எட்டிற்கும் உடைய மாரகாதிபதி சுக்கிரனின் புக்தியில் (அம்சத்தில் நீசம்) அழியாப் புகழுடன் அரசனாகவே இந்தப் பெருமகன் புகழுடல் எய்தினார்.

மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை மக்களால் மறக்கப்படாமல் இன்னும் நூறு நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் ஒரு மக்கள் தலைவனின் ராஜயோக ராகுதசையின் விளக்கம் இது.

மீண்டும் அடுத்த வியாழன் ராகுவைப் பின் தொடர்வோம்

(மார்ச் 3 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்த குருஜியின் கட்டுரை)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

🍂தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888,044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.🍂

17 hours ago | [YT] | 73

GURUJI TV

Life abroad, Saturn's profession, Sun dasa. வெளிநாடு வாழ்க்கை, சனியின் தொழில், சூரிய தசை. GURUJI'S PHONE LIVE(02.05.2025)7PM..
#adityaguruji
#saturn
#சனி
#profession
#வெளிநாடு
#life
#வாழ்க்கை
#abroad
#jothidam
youtube.com/live/Tlm8Q8BjLrI

18 hours ago | [YT] | 2

GURUJI TV

⚜️சனி, செவ்வாயின் சுபத்துவ, சூட்சும வலு...D-056⚜️

#adityaguruji
#சூட்சும வலு
#TamilArticle
#சனி
#செவ்வாய்
#சுபத்துவம்

🍂ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888🍂

பாபக் கிரகங்களான சனி, செவ்வாயின் சுபத்துவ சூட்சும நிலைகளைப் பற்றி ஏற்கனவே “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.
ஒரு கிரகத்தின் “” என்பது அந்தக் கிரகம் மனிதனுக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பது என்று பொருள்படும். சுப ஒளி பொருந்திய கிரகங்களே மனிதனுக்கு தேவைப்படும் நன்மைகளைத் தரும் தகுதிகளை பெறுகின்றன.

சுபக் கதிர்கள் இல்லாத கிரகங்கள், பாபர்கள் எனவும், மனிதனுக்கு நன்மை செய்ய இயலாத தீய செயல்பாடுகளை கொண்டவைகளாகவும் ஜோதிடத்தில் நமக்கு பிரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒளியிழந்த நிலையில் இருக்கும் பாபக் கிரகங்கள், சுபக் கோள்களிடம் இருந்து ஒளியைப் பெறும் போது மட்டும் மனிதனுக்கு நன்மை தரக்கூடிய சுபத்துவம் எனும் நிலையை அடைகின்றன. அதாவது பாபர்கள் சுபரின் பார்வையைப் பெறும் போதும், அவர்களுடன் சேரும் போதும் சுபத்துவமடைந்து தங்களின் இயல்பு நிலை மாறி மனிதனுக்கு நன்மைகளைச் செய்கின்றன.

இந்த சுபத்துவ நிலையிலும் ஒரு நுணுக்கமான சூட்சும நிலையாக, பாபர்கள் தங்களின் அருகில் இருக்கும் சுபரிடம் இருந்து ஒளியைப் பெறும் போது மட்டுமே அதிக நன்மைகளைத் தரும்.

செவ்வாய் தனக்கு அருகில் இருக்கும் ஒளி பொருந்திய கிரகமான சந்திரனின் தொடர்பை பெறும்போது மட்டுமே அதிக நன்மைகளைச் செய்வார். தன்னிடமிருந்து அதிக தூரத்தில் இருக்கும் குருவின் பார்வையை விட அருகே இருக்கும் சந்திரனின் பார்வை மற்றும் இணைவு மட்டுமே செவ்வாயை அதிக சுபத்துவம் அடையச் செய்யும்..

அதேநேரத்தில் இந்த சுபத்துவம் என்பது சந்திரனின் வலுவைப் பொருத்தது. அதாவது சந்திரன், பவுர்ணமி தினத்தை நெருங்கி அதிக ஒளியுடன் வளர்பிறைச் சந்திரனாக, சூரியனுக்குக் கேந்திரங்களில் இருந்து செவ்வாயைப் பார்க்கும் போதோ, அல்லது இணையும் போதோ செவ்வாய் அதிக சுபத்துவம் அடைவார். பூரண பவுர்ணமிச் சந்திரனின் தொடர்பைப் பெறும் செவ்வாய் முழுச் சுபராகும் தகுதி படைத்தவர்.

சந்திரன் மற்றும் குருவுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய், சுபத்துவம் அடைந்து தனது சுப காரகத்துவங்களை, அதாவது மனிதனுக்குத் தேவையான நல்ல செயல்பாடுகளைச் செய்வார். இதில் பூரணச் சந்திரனாக பவுர்ணமிக்கு அருகில் அல்லது பவுர்ணமியாக இருந்து செவ்வாயை நிலவு பார்க்கும் நிலையில், இன்னொரு சுபரான குருவின் தொடர்பும் கிடைக்கப் பிறந்தவர் மிக உயர் நிலைக்குச் செல்வார்.

இதுவே சுபத்துவத்தின் சூட்சுமம்.

இந்த சுபத்துவ நிலைகளில் சனியைப் பற்றி பார்ப்போமேயானால், சனி, சந்திரன் மற்றும் தனது நண்பரான சுக்கிரனின் பார்வையைப் பெறுவதை விட தனக்கு அருகில் இருக்கும் குருவின் பார்வை எனும் ஒளி வீச்சினை பெறும் போது மட்டுமே, அந்த மனிதனுக்கு நன்மைகளைத் தரும் தகுதியை பெறுவார்.

குருவுக்கு அடுத்து அவர் சுக்கிரனின் பார்வையாலும், சேர்க்கையாலும், அதனையடுத்து வளர்பிறைச் சந்திரனின் பார்வையாலும், சேர்க்கையாலும், அதனையடுத்து தனித்த புதனின் சேர்க்கை, பார்வையாலும், பாபத் தன்மை நீங்கி சுபத்துவம் எனப்படும் நன்மை தரும் அமைப்பைப் பெறுவார்.

இதில் ஒரு முக்கிய சூட்சுமமாக சனியை சுபத்துவப் படுத்தும் சுப கிரகம் முழுப்பார்வைத் திறனுடனும், வலிமையுடனும் இருக்கும் பட்சத்தில் சனி பூரண நன்மைகளைச் செய்வார். இல்லையெனில் சம்பந்தப்படும் சுபக் கோளின் வலுவுக்கேற்ப சனியின் சுபத்துவம் இருக்கும்.

அதாவது சனியுடன் தொடர்பு கொள்ளும் சுபக் கோள் தனது முழுத் திறனுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, விருச்சிகத்திலோ அல்லது சிம்மத்திலோ அசுபத் தன்மையுடன் இருக்கும் சனியை குரு, தனுசிலோ, மீனத்திலோ ஆட்சி பெற்று தனது ஒன்பதாம் பார்வையாக திறனுடன் பார்க்கும் போது சனி நன்மைகளைத் தரக்கூடிய சுபத் தன்மை பெறுவார்.

ஆனால் பார்வை தரும் குரு தனித்திராமல், அவருக்கு எதிரான வேறு கிரகங்களுடன் இணைந்தோ, சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகியோ, ராகுவுடன் சேர்ந்து பலவீனம் பெற்றோ அல்லது இது போன்ற வேறு சில பலவீனமான அமைப்புகளில் இருந்தோ, சனியைப் பார்த்தாரானால் சனி சுபத்துவம் அடைய மாட்டார். சனியால் நன்மைகள் இருக்காது. சனி கொடூரமான பலன்களை செய்வார்.

மேற்கண்ட ஏதாவது ஒரு நிலையில் குரு வலுவிழந்திருக்கும் போது, மேம்போக்காக அந்த ஜாதகத்தில் குரு ஒன்பதாம் பார்வையாக சனியைப் பார்க்கிறார் என்று தோன்றினாலும், குருவுக்கே பார்வை இல்லாத நிலையில் நமது கணிப்பு தவறும்.

எனவே ஒரு பாபக் கிரகம் சுபத்துவம் அடைந்திருக்கிறதா என்று கணிப்பதற்கு முன்பு அதனை சுபத்துவப் படுத்தும் அந்த சுபக் கோள் வலிமையுடன் இருக்கிறதா என்று ஆராய வேண்டியது அவசியம்.

பலன் சொல்வதில் முழுமையாக்குவது மற்றும் துல்லியமாக்குவது கிரகங்களின் சுபத்துவமும், சூட்சும வலுவும் தான்.

மேலே சொன்னபடி குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோரின் பார்வையைப் பெறும் சனி புனிதமடைந்து, அந்த ஜாதகருக்கு ஆதிபத்திய சுபராக இருக்கும் பட்சத்தில் தனது தீய செயல்பாடுகளில், அதாவது தனது காரகத்துவங்கள் எனப்படும் தீய செயல்பாடுகளின் வழியே ஒரு மனிதனுக்கு நன்மைகளைத் தருவார்.

தன்னுடைய நேர்வலு மூலம் ஒரு மனிதனுக்கு தேவையற்றவைகளை மட்டுமே தர விதிக்கப்பட்டிருக்கும் சனி, சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெறும் நிலைகளில் தனது இயல்பு நிலை மாறி அந்த ஜாதகருக்கு நன்மைகளைச் செய்வார்.

மேற்கண்ட இரு நிலைகளில் சனியின் சுபத்துவப் படிநிலைகளை தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒரு ஜாதகத்தில் சனி நன்மைகளைத் தருவாரா அல்லது தீய பலன்களைச் செய்வாரா என்பதை துல்லியமாகச் சொல்ல முடியும்.

சனியின் சுபத்துவப் படிநிலைகளை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

1. வலிமை பெற்ற குரு சனியைப் பார்ப்பது,

2. குருவுடன் சனி இணைவது,

3. குருவின் வீட்டில் இருப்பது,

4. சுக்கிரன் சனியைப் பார்ப்பது,

5. சுக்கிரனுடன் சனி இணைவது,

6. பூரண அல்லது வளர்பிறைச் சந்திரன் பார்ப்பது,

7. வளர்பிறைச் சந்திரனுடன் இணைவது,

8. தனித்த புதன் பார்ப்பது,

9. புதனுடன் இணைவது,

10. சுக்கிரன் மற்றும் புதனின் வீட்டில் சனி இருப்பது.

மேற்கண்ட அமைப்புகளில் சனி திரிகோணங்களில் இல்லாமல், கேந்திரங்கள் மற்றும் 3, 6, 11 போன்ற உபசய ஸ்தானங்களில் இருக்கும் போது உச்சபட்ச சுபத்துவம் அடைந்து ஜாதகருக்கு முதல் தர நன்மைகளைச் செய்வார்.

இதில் குருவின் வீட்டில் இருக்கும் சனிக்கு மூன்றாவது நிலையைத் தந்து, சுக்கிரனின் வீட்டில் இருக்கும் சனிக்கு பத்தாவது நிலையைத் தந்திருக்கிறீர்களே.... சுக்கிரனின் வீடான, துலாத்தில்தானே சனி உச்சம் பெறுகிறார் என்ற சந்தேகம் ஒருவருக்கு வருமானால், அவர் இன்னும் சனியைப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

உச்சத்தில் இருக்கும் சனி நேர் வலு மட்டுமே அடைவார். ஆனால் குருவின் வீட்டில் இருக்கும் சனி சுப வலு அடைவார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

சனி என்பவர் ஒரு சுப ஒளியற்ற கிரகம். எனவே மனிதனுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்ய வேண்டும் என்றால் அவர் தன்னுடைய தீய ஒளிக் கதிர்களை இழந்து வடிகட்டப்பட்டு, சுபக் கிரகங்களின் ஒளியைப் பெறவேண்டும். இதில் தன்னுடைய தீய ஒளியை எவ்வளவுக்கு எவ்வளவு இழந்து, அடுத்த சுப கிரகத்தின் ஒளியைப் பெறுகிறாரோ, அந்த அளவுக்கு சனியிடமிருந்து ஒரு மனிதனுக்கு நற்பலன்கள் இருக்கும்.

மிக முக்கியமாக சனிக்கு ஒளி தரும் கிரகமும் வலுவான நிலையில் இருக்க வேண்டும். எனவேதான் இங்கே சந்திரனின் நிலையைக் குறிப்பிடும்போது பூரணச் சந்திரன் மற்றும் வளர்பிறைச் சந்திரன் என்று வேறுபடுத்திக் காட்டியிருக்கிறேன்.

இயற்கைச் சுப கிரகங்களில் குருவை விட, சுக்கிரனே சனிக்கு நண்பர் என்றாலும் சுக்கிரன், சனியிடமிருந்து அதிக தூரத்தில் இருப்பதாலும், குரு, சனிக்கு மிக அருகில் இருப்பதாலும், குருவின் தொடர்பே சனியைச் சுபராக்கும். அதிலும் குருவின் இணைவை விட, பார்வையே சனியைப் புனிதப்படுத்தும்.

சுபத்துவத்தோடு, சூட்சும வலுவும் இணைகையில் சனி, முழுக்க முழுக்க ஒருவருக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் அதிகாரம் பெறுவார். இன்னொரு முரண்பட்ட நிலையாக, சனியைப் புனிதப் படுத்தும் சுபக் கோள் சனியோடு இணைந்தோ, அல்லது சனியை சம சப்தமமாக பார்க்கும் நிலைகளில், தான் அந்த ஜாதகருக்கு தனது சுப நிலைகளைத் தரும் தன்மைகளை இழக்கும்.

இதுபோன்ற நிலையில் அந்த சுபக் கோளின் வலிமையிழப்பு என்பது சம்பந்தப்பட்ட லக்னத்திற்கு அந்த சுப கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உட்பட்டது மற்றும் அந்த சுபர் எந்த வீட்டில், எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தது.

சூட்சும வலு என்று நான் குறிப்பிடுவது பாபக் கிரகங்களுக்கு மட்டுமே உரித்தானது. சனியும், செவ்வாயும் கேதுவுடன் சேரும் நிலையில் அவர்களின் பாபத் தன்மை நீங்கி இயல்புக்கு மாறான நல்ல பலன்களைத் தருவதை அனேக ஜாதகங்களில் நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் தெளிவாக சொல்லப் போனால் ஆட்சி, உச்சம் அடைந்த பாப கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் இருப்பதே ஒரு மிகப் பெரிய சூட்சும வலுதான். ரிஷப லக்னத்திற்கு அனைத்தையும் தர வேண்டிய ஒன்பது, பத்திற்குடைய சனி, ஆறில் மறைந்து உச்சமாவதன் தாத்பர்யம் அதுதான்.

அதேபோல காலம் காலமாக இங்கே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, அல்லது புரிந்து கொள்ளப்படாத ஷட்பலத்தின் ஒரு பகுதியான, திக்பலத்தை, நான் சூட்சும வலுவில் சேர்க்கிறேன். இதுவும் ஒரு மிக முக்கியமான ஒன்றாகும்.

ஜோதிடத்தில் கிரகங்களின் ஆட்சி, உச்சம் எனப்படும் ஸ்தான பலத்திற்கு அடுத்த அல்லது அதற்கு இணையான ஒரு நிலையாக திக்பலம் சொல்லப்படுகிறது. ஷட்பலத்தில் கிரகங்களின் பார்வை பலத்தை விட மேலானதாக, ஆட்சி, உச்சத்திற்கு இணையானதாக சொல்லப்படும் இந்த திக்பலத்தை இதுவரை சரிவர புரிந்து கொள்ளாமலேயே இருந்திருப்பதால்தான், இப்போது இதை நான் தனித்துக் குறிப்பிடுவது பெரிதாகத் தெரிகிறது.

திக்பலத்தின் மிக முக்கிய நிலை என்னவெனில், ஒரு கிரகம் ஸ்தான பலத்தை இழந்திருந்தாலும், அது திக்பலத்தை அடைந்திருந்தால் வலுவாகவே இருக்கிறது என்பதுதான். அதாவது நீச்சமான ஒரு கிரகம் திக்பலத்தை பெற்றிருந்தால், அது வலிமையாக இருக்கிறது என்றுதான் பொருள்.

ஆட்சி, உச்சம் போன்ற ஸ்தான பலத்தை அடையாமல், முற்றிலும் நீச்சமடைந்து, திக்பலம் பெற்ற பாப கிரகங்கள் மிகவும் நல்ல பலன்களை தருகின்றன. இதுவே பாப கிரகங்களுக்கும், சுப கிரகங்களுக்கும் உள்ள மிக நுண்ணிய வித்தியாசத்தை நமக்கு உணர்த்தும்.

பாபக் கோள்கள், மனிதருக்கு அதனுடைய பாப அளவிற்கேற்ப துன்பங்களை மட்டுமே தர கடமைப்பட்டவை. அவை சுபத்துவ, சூட்சுமவலு நிலையினை அடையும்போது மட்டுமே தன்னுடைய இயல்புநிலை மாறி மனிதருக்கு நன்மையைத் தர விதிக்கப்படுகின்றன. இந்த நுணுக்கமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு, நான் சொல்லும் சூட்சும வலுவையும் புரிந்து கொள்ள முடியாது.

பரிணாம வளர்ச்சிக்கு ஜோதிடமும் அப்பாற்பட்டது அல்ல. பாரம்பரிய ஜோதிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவராலும் செதுக்கப்பட்டே வந்திருக்கிறது. தற்போது நான் சொல்லும் “சுபத்துவ, சூட்சும வலு கோட்பாடு” நூறு சதவிகிதம் பேருக்கு புரியாது போனாலும், என் காலத்திற்கு பிறகு இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்தக் கோட்பாடு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

🍂தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888,044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.🍂

1 day ago | [YT] | 56