Hi friends! In this channel i will post useful information regarding anmeegam, jothidam,parikaram and poojai,health and common tips related videos in tamil.

Hope you all will get more benefits to subscribe our channel and watching our videos.
Keep watching keep on watching watching kindly support and encourage me ⚘️

Like
Share
Subscribe..👈

I heartly thankful to all my subscribers...Thank you🙏💐

Disclaimer:
The information provided in this channel and videos are for general purpose only.Viewers should not considered as professional advice.


Sree Meenakshi

சந்தனமா, சாக்கடையா...

குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்றார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்டான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்." என்று கூறினார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள். மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன. "இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களை கேட்டார் குரு. ”இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவைதான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?"மாணவர்களை கேட்டார்."தெரியவில்லை.” ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார்.

அதிலிருந்து தேன் வெளியேவந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார். அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது. "ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.” இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும்போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது." "நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்"
என்றார்.
"கெட்டவர்களுக்கும், சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில
சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவிசாய்ப்பதில்லை. இறைவன் நம்மை
சோதிப்பதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல.
அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா, சாக்கடையா என்று தெரியுமே.

2 years ago | [YT] | 4

Sree Meenakshi

#2024 இந்த ஆண்டு சிவனுக்கும் விநாயகருக்கும் உகந்த நக்ஷத்ரமான ஸ்வாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.
பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் - ஆயுசுடனும் - ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் - திருமணம் கைகூடி வரவும் - குழந்தை பாக்கியம் கிட்டவும் - நல்ல வேலை கிடைக்கவும் - வெளிநாடு பயணம் இனிதே பெறவும் - வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை வழிபட்டு அருளைப் பெறுவோம்.

2 years ago | [YT] | 23

Sree Meenakshi

Wishing You All Happy Karthigai deepam #karthigaideepam🪔

2 years ago | [YT] | 16

Sree Meenakshi

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥🧨#Happydiwaliwishes

2 years ago | [YT] | 14

Sree Meenakshi

அனைவருக்கும் இனிய #சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துக்கள்🌺📚💻

2 years ago | [YT] | 18

Sree Meenakshi

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🌺 #Happy vinayagar chaturthi 2023

2 years ago | [YT] | 13

Sree Meenakshi

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்..

2 years ago | [YT] | 5

Sree Meenakshi

மாத சதுர்த்தி விரதம்: ஸ்லோகம்-1 🌺 ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே🙏🙏

2 years ago | [YT] | 15

Sree Meenakshi

இன்று வளர்பிறை சஷ்டி..குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் அனுஷ்டிக்க உகந்த நாள்..சஷ்டி விரதமுறை:

இந்த விரதத்தை முதன்முதலாக தொடங்கும்போது வளர்பிறை சஷ்டி திதியில் தொடங்க வேண்டும்.உங்கள் வீட்டில் முருகப்பெருமானுடைய படம் கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் வள்ளி தெய்வானையுடன், முருகன் மயில் வாகனத்தில் இருப்பது போன்ற படம் இருந்தால் மிகவும் நல்லது. முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற அரளிப்பூவை வைத்து, ஒரு டம்ளர் பால், வாழைப்பழம், கற்கண்டு இவைகளை முருகருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

இதோடு சேர்த்து குழந்தைகளுக்கு பாலூட்டும் சங்கு அதாவது சிலபேர் பாலாடை என்று சொல்வார்கள். அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த பால் சங்கையும் பூஜை அறையிலேயே வைத்து அந்த சங்கில் பாலை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பு நெய்வேதியம், பாலாடை, ஒரு தீபம், இவைகள் அனைத்தையும் தயாராக வைத்து விட்டு முருகப் பெருமானை மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.

பூஜை முடிந்தவுடன் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்திருக்கும் சங்குடன் சேர்ந்த பாலை, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கை குழந்தைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அதாவது அந்த குழந்தையின் பெற்றோரிடம், உங்களின் குழந்தை இல்லாத கஷ்டத்தை சொல்லி, சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த பரிகாரத்தை செய்கிறோம் என்று சொல்லியே தானமாகக் கொடுக்கலாம். கந்தசஷ்டி விரதத்தை உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் வரை தொடர்ந்து செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. பாலாடை கலந்த பாலை ஒவ்வொரு சஷ்டிக்கும் தானமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு சஷ்டி தினத்தில் மட்டும் தானம் செய்தால் போதும். இறைவனுக்கு நைவேதியமாக படைத்த பிரசாதம், பால் பழங்களை உங்கள் வீட்டு அருகில் இருக்கும் பெரிய வயது குழந்தைகளுக்குக்கூட தானமாக கொடுக்கலாம்.
முருகப்பெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.முருகா சரணம் 🦚🙏

2 years ago | [YT] | 9