My channel is about cooking,tips, crafts and rangoli.


Lifestyle360

இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு தமிழராக நாமும்.. இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்... அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த் மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்.. இச்சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு. #gukeshdommaraju #WorldChessChampion

1 year ago | [YT] | 2

Lifestyle360

😍🥰சிறுதானியத்தை வைத்து என்ன சமைப்பது என்று தெரியாமல் இருப்பவர்கள் அரிசி மாவு இட்லி, தோசைக்கு பதிலாக இனி சிறுதானிய இட்லி, தோசை செய்யலாம்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை காலை இரவு உணவு நேரங்களில் எடுத்து கொள்ளலாம்.
சிலர் சிறுதானியத்தை வைத்து இட்லி செய்யும்போது இட்லி புளித்து விடும் இல்லை என்றால் கல்லு மாதிரி ஆகிவிடும் என்பதால்தான் நிறைய பேர் செய்ய தயங்குகிறார்கள். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் பஞ்சு போல இட்லி, தோசைக்கு ஏற்ப சிறுதானியம் வைத்து மாவு எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கம்பு
கேழ்வரகு
வெள்ளைச்சோளம்
கருப்பு கவுணி அரிசி
உளுந்து
வெந்தயம்
இட்லி அரிசி
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை:

கம்பு, கேழ்வரகு, வெள்ளைச்சோளம், கருப்பு கவுனி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஊற வைக்க வேண்டும். சிறுதானியங்களை நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
பின்னர் உளுந்தை தனியாக கழுவி ஊற வைத்து பிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெந்தயத்தை தனியாக ஊற வைக்க வேண்டும்.
நான்கு முதல் ஐந்து மணி நேரம் இவை அனைத்தும் நன்றாக உரியதும் ஒரு கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை மைய அரைத்து பிறகு உளுந்து சேர்த்து அரைக்கவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சிறுதானியங்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும். அரைத்த உளுந்து மற்றும் சிறுதானிய மாவை நன்கு கரைத்து ஒரு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து பின்னர் இட்லி, தோசை ஊற்றி சாப்பிடலாம்.

1 year ago | [YT] | 1

Lifestyle360

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மிருதுவான பால் கொழுக்கட்டை!

விசேஷ நாட்களில் நம் வீட்டில் செய்யும் தனித்துவமான இனிப்பு வகைகள் என்றும் சிறப்புதான். அதில் ஒன்றுதான் பால் கொழுக்கட்டை. இந்த பால் கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு தித்திப்பாகவும், மிருதுவாகவும் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்திலும் அமைந்திருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும் இந்த பால் கொழுக்கட்டை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ….
பால் கொழுக்கட்டை செய்வதற்கு ஒரு கப் அரிசி மாவை முதலில் இட்லி பாத்திரத்தில் வெறுமையாக சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி ஆவியில் வேக வைக்கும் பொழுது அரிசி மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உதிரியாக இருக்கும் மாவை அப்படியே இட்லி தட்டில் சேர்த்து நான்கு நிமிடம் நீராவியில் வேக வைத்தால் போதுமானது.
அதன் பின் அந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி அதில் கட்டிகள் இல்லாத வண்ணம் பிரித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீர் கொண்டு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீரை மொத்தமாக சேர்த்து பிசையாமல் சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மொத்தமாக தண்ணீர் சேர்க்கும் பொழுது சில நேரங்களில் மாவு கெட்டியாக மாற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தண்ணீர் நன்கு கொதிக்கும் பக்குவத்தில் இருக்க வேண்டும். சூடு குறைவாக உள்ள தண்ணீரில் நாம் மாவு பிணைந்தால் பால் கொழுக்கட்டை மிருதுவாக இருக்காது.

சப்பாத்தி மாவு பதத்திற்கு அரிசி மாவை நன்கு பிணைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கப் வெல்லத்திற்கு அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நாம் உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். அதன் பின் சிறிது நேரம் கழித்து வெல்ல பாகை அரிசி மாவு உருண்டைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் பால் கொழுக்கட்டை கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக அரை கப் தேங்காய் பால் சேர்த்து கலக்க வேண்டும்.
மேலும் வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக இவை அனைத்தையும் ஒரு சேர கலந்து இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார். செய்வதற்கு எளிமையாக இருக்கும் இந்த பால் கொழுக்கட்டை உடலில் எளிதில் ஜீரணம் ஆகி உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.

1 year ago | [YT] | 2

Lifestyle360

துளசி இலைகள் - சிறிதளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கிராம்பு 2-3
பச்சை ஏலக்காய் 2-3
கருப்பு மிளகு 5-6
தண்ணீர் - 2 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்
மேற்கூறிய பொருட்கள் எல்லாவற்றையும் கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
7-8 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
கஷாயம் நன்கு கொதித்த பிறகு வடிகட்டி கொள்ளவும்.
நீங்கள் விரும்பினால் இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் இலவங்க பட்டை பொடி சேர்த்து சூடாக குடிக்கலாம்.

2 years ago | [YT] | 0

Lifestyle360

https://youtu.be/g0-UsLpypno?si=I13WW...
Link ☝️
Crispy Fried Shrimp Recipe | Quick and Easy Prawns Popcorn Recipe

2 years ago | [YT] | 0

Lifestyle360

SQUID MASALA | Squid Cooking In 5 minutes| Tasty Calamari Recipe | Kanava Meen Cuttlefish Gravy
கனவா மீன் கிரேவி || Kanava gravy || Squid gravy in tamil || kadamba fish ...

2 years ago | [YT] | 0

Lifestyle360

Amazing 12 useful cooking tips
https://youtu.be/7iMGRpE7mno
Full video link ☝️

2 years ago | [YT] | 1

Lifestyle360

Mullai poo veni
Full video link 👉 https://youtu.be/GFEg7UnU358

2 years ago (edited) | [YT] | 10

Lifestyle360

கோடையை புத்துணர்ச்சியாக மாற்ற 8 வகையான பானங்கள்..! Summer drinks recipe link 👉 https://youtu.be/LykMrwy-Gnk

2 years ago | [YT] | 2