Indian Histropedia

Let's Explore the Unexplored!!!

We all know that Tamil History dates back to a very long time. Our past is full of fascinating stories, especially the reign of Cheras, Cholas, Pandyas, and Pallavas.

Curious to know about our history and rich cultural heritage?
Check out our videos.

Give yourself a chance to explore the unexplored through our lenses!

Get to know more about #Heritage #History #Purana and age-old kingdoms of #Chera #Chola #Pandya #Pallava

Catch me in
FB : www.facebook.com/siva.raman.7
Instagram : sivaraman.natarajan
twitter: @siva131187


Indian Histropedia

Book No: 03 #2026

"புளிக்க வைத்த அப்பம்" - இந்தச் சிறுகதை அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதியது.

"இது ஒரு சாதாரண சிறுகதைதானே" என்று இதனை அப்படியே கடந்து போய்விட முடியாது. ஏனெனில், ஒரு விருந்தில் ஆரம்பித்து, ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றியும், அந்த அநீதி நடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றியும் இக்கதை பேசுகிறது. அத்தனைப் பிரச்சினைகளையும் தாண்டி வெளியே வந்த ஒரு பெண், தனக்குக் கிடைத்த சமையல் வாய்ப்பைப் பயன்படுத்தி, எப்படித் தன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொள்கிறாள் என்பதை எழுத்தாளர் மிக அழகாகக் கூறியுள்ளார்.

இன்னும் இந்தக் கதைக்குள் நிறைய விஷயங்கள் இருக்கின்றன; வாசித்துப் பாருங்கள்!

- சிரா

#தமிழ்நாவல் #புத்தகவிமர்சனம் #தமிழ் #TamilNovels #TamilBooks #BookstagramTamil #TamilLiterature #MustRead #ChennaiBookFair #historyenthusiastic #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #sivanathapuram #சிவநாதபுரம் #சிலை_திருட்டு #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன்

5 days ago | [YT] | 7

Indian Histropedia

சுவாமிமலையும் சிவநாதபுரம்!!!

சிவநாதபுரத்திற்குள் இருக்கும் சுவாமிமலையை பற்றியும் சுவாமி மலைக்குள் இருக்கும் சிவநாதபுரத்தை பற்றியும் தெரிந்து கொள்ள, "சிவநாதபுரம்" நாவலை வாசியுங்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சி - சுவாசம் அரங்கம் எண்- 536 மற்றும் 537.

Call/WhatsApp order's - 8148066645

#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #sivanathapuram #சிவநாதபுரம் #சிலை_திருட்டு #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன்

3 weeks ago | [YT] | 7

Indian Histropedia

வணக்கம் நண்பர்களே,
என் "சோழ சூரியன்" தொகுப்பின் அனைத்து புத்தகங்களும் சோழமண்டலத்தின் தஞ்சை தரணியில் உங்களுக்காக... "அப்பர் புத்தகக் கடையில்" கிடைக்கும்.

#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #bookno_07 #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன்

2 months ago | [YT] | 4

Indian Histropedia

Book no:09/2025

நீண்ட நாட்களுக்குப் பிறகு, வரலாற்றுப் புதினங்களில் இருந்து மாறுபட்டு, இல்லை இல்லை, முற்றிலும் மாறுபட்ட ஒரு நாவலை வாசித்தேன். அதன் பெயர் "ஆரச்சாலை". இதை எழுத்தாளர் சென் பாலன் எழுதியுள்ளார்.

எங்கள் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் தற்சமயம் மிகவும் பரபரப்பாக இருக்கும் சாலைகளில் ஒன்றான ரேடியல் ரோடு என்று எனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது. இது ஒரு விசாரணைக் கதை.

விசாரணைக் கதை என்று சொன்னால் நமக்கு நிறைய காவல்துறை பற்றிய திரைப்படங்கள்தான் நினைவுக்கு வரும். வரட்டுமே! ஒரு புத்தகத்தில் ஒரு எழுத்தாளர் விசாரணையைக் கையாண்ட விதம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அது திரைப்படத்தில் நாம் பார்க்கும் நிழல் உருவங்கள் இல்லாமல், உங்கள் மனதில் ஒரு நிஜ கற்பனை உருவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி பயணப்பட வைக்கும். அதை இந்த எழுத்தாளர் அழகாகக் கையாண்டிருக்கிறார்.

இதில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் நாம் பார்த்திருப்போம், கடந்து சென்றிருப்போம். கோபமானவன், அசட்டையானவன், காவலர்கள், காவல் துறை மேலதிகாரிகள், அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடிய தொழில்முறை அரசியல், சாமியார் மேடை என அனைத்தையும் கடந்து சென்றிருப்போம். திரைப்படத்தில் வரும்போது அதைப் பார்த்து கைதட்டிவிட்டு வந்திருப்போம். ஆனால் புத்தகமாகப் படிக்கும்போது அது கொடுக்கும் அதிர்வு வேறு விதமாக இருந்தது.

இக்கதையில் ஒரு ஆங்கில வசனம் வரும்: "common sequence are more common than uncommon sequences". இந்த வசனமே கதையின் ஓட்டத்தையும் ஆழத்தையும் நமக்கு வெளிப்படுத்தும்.

அனைவரும் வாசித்து அனுபவம் பெறவேண்டிய புத்தகம் இது.


-சிரா.

புத்தகத்தின் பெயர்:   ஆரச்சாலை
எழுத்தாளர்: சென் பாலன்
பதிப்பாளர்: கேலக்ஸி புக் செல்லர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ்
விலை: 180/- ரூபாய்.

#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_4 #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன் #ஆரச்சாலை #சென்பாலன்

6 months ago | [YT] | 12

Indian Histropedia

Book no:08/2025

ஏற்கனவே எழுத்தாளர் தம்பி "சேரன் செங்குட்டுவன்" எழுதிய "சோணாடு கொண்டான்" என்ற நாவலின் முதல் பாகமான "மணிமுடி"-யின் முதல் படலமான "ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்" என்ற புத்தகத்தை படித்துவிட்டு அதைப் பற்றிய என்னுடைய எண்ண ஓட்டத்தை எழுதியிருந்தேன்.

இப்போது அந்த பாகம் ஒன்றின் இரண்டாவது படலமான "கட்டளை எழுந்தருளிய படலம்" என்ற புத்தகத்தை வாசித்து முடித்தேன். முதல் படலம் முடியும் போது இலங்கையில் நடந்த போரைப்பற்றி பேசி அதை நம் கண் முன்னே நிறுத்தி முடித்திருப்பார் எழுத்தாளர் சேரன் செங்குட்டுவன். 

இந்தப் படலம் துவங்குவது அந்த இலங்கை போருக்கு பின்பு பாண்டியநாடு எப்படி இருக்கிறது என்பதை விவரித்து கூறியிருப்பார். அதுவும் பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய மன்னருக்கும் அந்நாட்டின் இளவரசனுக்கும் அந்தப் போர் எந்த விதமான அதிர்வை கொடுத்திருக்கிறது என்பதை நேர்த்தியாக நமக்கு கடத்தியிருப்பார் எழுத்தாளர்.

ஒவ்வொரு பக்கங்களுக்கும் ஏதோ ஒரு புது தகவல் இவருடைய எழுத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு படையெடுப்பு நிகழ்வையும் அழகாகவும் உக்கிரமாகவும் நம் கண் முன் படைத்திருப்பது நேர்த்தி. 

இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடம் எது என்றால் "வளரி" பெண்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஆயுதம் என்று கூறி, அதற்கு உண்டான விளக்கத்தை எழுத்தாளர் கொடுத்திருப்பார் -அது மிகவும் முக்கியமான ஒன்று என்று என் மனதில் பட்டது. அதுவே இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமாகவும் மாறியது.

இந்த “சோணாடு கொண்டான்” புதினத்தில் மிக முக்கியமாக நான் கருதுவது எது எனில் கதாபாத்திரங்களின் நகர்வும் அவர்களின் தனிப்பட்ட குணங்களும் வரையப்பட்ட விதம் தான். அதை எழுத்தாளர் அம்சமாக கையாண்டு இருக்கிறார்.

பின்பு, என்னவென்றா யோசிக்கிறீர்கள்! இப்புத்தகத்தை நீங்களும் வாங்கி படித்து இதில் இருக்கக்கூடிய கதை மாந்தர்களுடன் வாழ்ந்து மகிழுங்கள். கண்டிப்பாக இப்புத்தகம் உங்களை மகிழ்விக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன். மூன்றாவது படலத்துடன் உங்களை சந்திக்கிறேன்.


-சிரா

புத்தகத்தின் பெயர்:  சோணாடு கொண்டான், பாகம் 1 - மணிமுடி.
"கட்டளை எழுந்தருளிய படலம்"
எழுத்தாளர்: சேரன் செங்குட்டுவன்
பதிப்பாளர்: பர்ப்பிள் புக் ஹவுஸ்
விலை: 250/- ரூபாய்.

#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_4 #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன் #சோணாடுகொண்டான்  #சேரன்செங்குட்டுவன் #பர்ப்பிள்புக்ஹவுஸ்

6 months ago | [YT] | 13