Let's Explore the Unexplored!!!
We all know that Tamil History dates back to a very long time. Our past is full of fascinating stories, especially the reign of Cheras, Cholas, Pandyas, and Pallavas.
Curious to know about our history and rich cultural heritage?
Check out our videos.
Give yourself a chance to explore the unexplored through our lenses!
Get to know more about #Heritage #History #Purana and age-old kingdoms of #Chera #Chola #Pandya #Pallava
Catch me in
FB : www.facebook.com/siva.raman.7
Instagram : sivaraman.natarajan
twitter: @siva131187
Indian Histropedia
அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்
2 weeks ago | [YT] | 6
View 0 replies
Indian Histropedia
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்
3 weeks ago | [YT] | 8
View 1 reply
Indian Histropedia
Swasam is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Siraa's Books Introduction - Swasam Publications
Time: Feb 18, 2025, Tuesday, 06:30 PM India
Join Zoom Meeting
us04web.zoom.us/j/6160049993?pwd=QRGnC7yaZxhjDzLMt…
Meeting ID: 616 004 9993
Passcode: swasam
2 months ago | [YT] | 5
View 0 replies
Indian Histropedia
Book no:02/ year 2025
யானை இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு பேருயிர். யானையை பார்த்தாலே நாம் அனைவருக்கும் ஒரு ஆனந்தம் உள்ள எழத்தான் செய்யும்! முகம் மலரும்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை "அங்க பார் யானை என்று நம்மை மீறி சொல்லி சந்தோஷப்படுவோம்".
அப்படிப்பட்ட அந்த பேருயிர், மனிதர்கள் மனிதர்களாக மாறிய பின் என்னென்ன துன்பங்கள் படுகிறது என்பதை பற்றி மிகத் தெளிவாக எழுதப்பட்ட ஒரு முக்கியமான படைப்பு.
சங்க இலக்கியத்தில் இருந்து சமகால தினசரி நாளிதழ் செய்தி வரை சேகரித்து அதில் யானைகளைப் பற்றி இருக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களை நம் கையில் கொடுத்திருக்கிறார் இந்த எழுத்தாளர் "கோவை சதாசிவம்".
"எல்லா உயிர்களும் இன்பம் எய்துக" என்று பாரதி கூறியது போல், மனிதர்களால் இந்த உலகில் வாழ முடியவில்லை என்பது வருத்தம் தான். ஏனெனில் மனிதன் சக மனிதன் வாழ்ந்தாலே வசை பாடிக் கொண்டிருக்கக் கூடியவன். அவனா யானைகளைப் பற்றியும், சக உயிர்களைப் பற்றியும் சிந்திப்பான் என்று இந்த நூல் ஆசிரியர் ஒரு பத்தியில் மனம் நொந்து எழுதி இருக்கிறார்.
மனிதர்களிலும் அனைத்து உயிரையும் நேசிக்க கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் ஏதோ இயற்கை அடுத்த தலைமுறைக்காக மீதம் இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் பணத்தை மட்டும் நேசிக்க கூடிய மனிதர்கள் அதிகம் இருப்பதால் யானைகளை பார்க்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாக மாறி விடுவோமோ என்று எனக்கு பல நாள் பயம் எழும். அதே பயத்துடன் தான் இந்த கோவை சதாசிவம் அவர்களும் இந்த நூலை முடித்திருக்கிறார்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. நீங்கள் படிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள். நாம் எங்கு இருக்கிறோம் என்று யோசிக்கச் சொல்லுங்கள். படித்த நீங்களும் யோசியுங்கள். "யானை யானையாக இருப்பதால்தான் நாம் மனிதத்தை மீறி வாழ முடிகிறது".
-சிரா.
புத்தகத்தின் பெயர்: ஆதியில் யானைகள் இருந்தன
எழுத்தாளர்: கோவை சதாசிவம்
பதிப்பாளர்: குறிஞ்சி பதிப்பகம்
விலை: 60/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025 #ஆதியில்யானைகள்இருந்தன #கோவைசதாசிவம் #குறிஞ்சிபதிப்பகம்
2 months ago | [YT] | 11
View 0 replies
Indian Histropedia
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
Happy pongal to all
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025
2 months ago | [YT] | 14
View 0 replies
Indian Histropedia
யாருமே யோசிக்காத அளவிற்க்கு ஆகச்சிறந்த மன வலிமையும், ஆட்சித்திரணும் கொண்டவர்களே "பெண்கள்". அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் ஆளுமை பற்றி பேசுகிறாள் மகாராணி "செம்பியன் கிழாலடிகள்". இது என் சோழ சூரியனின் பாகம் 3. ஒரு பெண்ணின் எழுச்சியை பற்றி உரக்க பேசுகிறாள் "செம்பியன் கிழாலடிகள்".
இன்னும் இரண்டு நாட்கள் தான் சென்னை புத்தகக் கண்காட்சியில் மகாராணி "செம்பியன் கிழாலடிகள்" இருப்பார்கள். அதன் பின் அவருடன் பேசி பழக கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அழையுங்கள் (to order book over phone: 8148066645). மகாராணி "செம்பியன் கிழாலடிகள்" உங்கள் இல்லம் தேடி வருவாள்.
தற்சமயம் சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் பதிப்பகத்தில் அரங்கம் என் 165,166 மற்றும் 395, 396 - உங்களைக் காண மகாராணி "செம்பியன் கிழாலடிகள்", மித்ரனுடனும் மகாரதனுடனும் சேர்ந்து சோழன் தலை கொண்ட வீரபாண்டியனுக்காக சோழ எல்லையில் காத்திருக்கும் போது நம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து உங்களுடன் பழக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்கள் இங்கு இருப்பாள். அனைவரும் வந்து "செம்பியன் கிழாலடிகள்" பார்த்து உணர்ந்து உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025
2 months ago | [YT] | 16
View 0 replies
Indian Histropedia
Book no:01/ year 2025
எழுத்தாளர் வில்லரசன் எழுதிய "பொற்கயல்" என்ற நாவலின் முதல் பாகமான "மீன்கொடி வெல்க" என்ற புத்தகத்தை படித்து முடித்தேன்.
மிக எளிமையான எழுத்து நடை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுத்தாளர் அணுகியது அழகு. காதலனுக்காக காத்திருக்கக்கூடிய காதலியாகட்டும், வீரர்களுக்காக காத்திருக்கும் மன்னர்களை காட்டும் போதும் கூட ஒரு லயமுடன் சென்றது கதை.
கதை என்னவோ குலசேகர பாண்டியனின் காலகட்டத்தில் நடக்கக்கூடியது. ஆனால் கதாநாயகனோ - ஒன்றல்ல... அனைத்து கதாபாத்திரங்களுமே!!!
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய கடிகாரம் போல் இந்த கதையில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைத்தும் கால வெள்ளத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த கதாபாத்திரங்களின் ஓட்டம் தான் கதையில் நம்மை இணைத்து வாசகன் என்பதை மறக்கச் செய்து இந்தக் கதையுடன் சேர்த்து நம்மையும் ஓட வைக்கிறது.
கதையில் நிறைய இடங்களில் தந்தைக்கும் மகனுக்கும் இருக்கக்கூடிய உறவு, இறந்த தந்தையை மகன் உணரும் இடம், காதலன் காதலியை நினைத்து நிலவை பார்க்கும் நேரம், வயது முதிர்ந்த ஜோடிகளின் அன்பின் வெளிப்பாடு, நான்கு சகோதரர்களும் சேர்ந்து போர்க்களத்தில் வீறு கொண்டு எழும் இடம், சதி ஆலோசனைக் கூட்டம் நடக்கும் நேரம், ஒற்றர்களின் ஒற்று செய்தி என எழுத்தாளரின் கற்பனை அருமை. ஒரு கட்டத்தில் இந்த எழுத்தாளர் கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக அணுகி இருப்பார் அதுவும் அருமையாக இருந்தது.
இவ்வளவுதான் இந்த புத்தகத்தில் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டீர்கள் எனில், "இல்லை" என்றுதான் என்னிடத்திலிருந்து பதில் வரும். ஏனெனில் அனைத்தையும் இந்த ஒரு கருத்துரைப் பகுதியில் நான் சொல்லி விட்டேன் என்றால், வாசகர்களாகிய உங்களின் எண்ண ஓட்டத்தில் இந்த புத்தகம் உதிக்காது. அதனால் நீங்களே உங்கள் விரல் கொண்டு இந்த புத்தகத்தின் தாள்களை நகர்த்தி பொற்காயலுடன் பயணித்து மீன் கொடியை வெற்றி பெற செய்யுங்கள். கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
-சிரா.
புத்தகத்தின் பெயர்: பொற்காயல் (பாகம் 1- மீன்கொடி வெல்க)
எழுத்தாளர்: வில்லரசன்
பதிப்பாளர்: அன்னை புத்தகாலயம்
விலை: 750/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025 #பொற்கயல் #மீன்கொடிவெல்க #அன்னைபுத்தகாலயம்
4 months ago | [YT] | 13
View 0 replies
Indian Histropedia
Get my all books as combo with attractive offers and discounts in chennai book fair 2025.
Stall : swasam
Stall no: 165,166 and 395,396
My dear readers make use of it and grab your combo pack.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025 #newyear
#happynewyear
4 months ago | [YT] | 12
View 0 replies
Indian Histropedia
Let's welcome the new year
2025 together!!!
Happy New Year!!!
4 months ago | [YT] | 8
View 0 replies
Indian Histropedia
Book no:20/ year 2024
ஒரு பெயரைச் சொன்னால், உலகம் முழுக்க தமிழகத்தின் வரலாற்றை தொடர்ந்து பேசிக் கொண்டும், இப்படி ஒரு மன்னன் வாழ்ந்தான் என்று அனைத்து வரலாற்று அறிஞர்களும் ஆர்வலர்களும் பேசக்கூடிய ஒரு பெயர் "இராஜேந்திர சோழன்".
அந்த ராஜேந்திர சோழனை மையமாக வைத்து புனையப்பட்டது இந்த நாவல் "ராஜேந்திரன்". வரலாற்று நாவல் உலகின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் 76 வயது இளைஞர் ஐயா உதயணன் அவர்கள் எழுதிய புத்தகம் இது.
இவருடைய புத்தகத்தை வாசிக்கும் போது என் மனதில் பட்டது ஒரு ஆங்கில சொல்லாடல்தான் "Age is just a number". அதன்படி இவருடைய புத்தகம் அதை நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும்!!!
சரி இந்த ராஜேந்திரன் நாவல் யாருமே சொல்லாத சில விஷயங்களை சொல்லி இருக்கிறது...
அது என்ன என்று தானே கேட்கிறீர்கள். நம் வீட்டில் அப்பாவோ அல்லது அம்மாவோ வேலையிலிருந்து ரிட்டயர் ஆவார்கள். அவர்கள் இல்லாமல் நம் சொந்தங்களும் ஏன் நாமும் கூட வேலையில் இருந்து ரிட்டயர் ஆவோம். ஆனால் இந்த எழுத்தாளரோ மாமன்னன் ராஜேந்திர சோழன் - சோழ சிம்மாசனத்தில் இருந்து ரிட்டயர் ஆனால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இருக்கிறார். இதுவே இந்த புத்தகத்தின் முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன். ஏனெனில் மன்னர்களை எப்பொழுதும் அரசவையிலும், போர்க்களத்திலும், கவிஞர்களுக்கு நடுவே, காதலிகளைக் காணவும் என தொடர்ந்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்க கூடிய வரலாற்று நாவல்களுக்கு நடுவே ராஜேந்திர சோழன் ரிட்டயர் ஆனால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தது கற்பனையின் உச்சம்!
பின்பு ராஜேந்திர சோழனுக்கும் பறவைக்கும் நடுவே இருக்கக்கூடிய சம்பாஷனைகள் - அடடா... அற்புதம்!!! காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசத்தை நமக்கு கண்ணெதிரே காட்டியிருக்கிறார் இந்த எழுத்தாளர்.
இந்த நாவலில் உளவியல் ரீதியான அணுகுமுறையை மிக எளிதாகவும் அழகாகவும் கையாண்டு இருக்கிறார் எழுத்தாளர் திரு. உதயணன் சார்.
இன்னும் இந்த புத்தகத்தில் நிறைய நிறைய நிறைய நிறைய அற்புதமான விஷயங்கள் இருக்கிறது. அதை அனைத்தையும் நான் இந்த சிறு பதிவில் சொல்லிவிட முடியாது. நீங்கள் இதை கையில் எடுத்து உங்கள் விரல் எனும் திறவுகோல் வழியே புத்தகத்தின் அட்டைப்படம் எனும் பூட்டை நகர்த்தி ஒவ்வொரு தாள்களாக நகர்த்தும்போது இந்த புத்தகத்துக்குள் இருக்கக்கூடிய பொக்கிஷம் உங்களுக்கு புரியும்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது.
"ராஜேந்திரன்" கௌரா பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கிறது. இவருடைய அனைத்து புத்தகங்களும் கௌரா பதிப்பகத்தில் கிடைக்கும்.
-சிரா.
புத்தகத்தின் பெயர்: இராஜேந்திரன்
எழுத்தாளர்: உதயணன்
பதிப்பாளர்: கௌரா பதிப்பகம்
விலை: 750/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025 #ராஜேந்திரன் #கௌராபதிப்பகம்
4 months ago | [YT] | 9
View 2 replies
Load more