Let's Explore the Unexplored!!!
We all know that Tamil History dates back to a very long time. Our past is full of fascinating stories, especially the reign of Cheras, Cholas, Pandyas, and Pallavas.
Curious to know about our history and rich cultural heritage?
Check out our videos.
Give yourself a chance to explore the unexplored through our lenses!
Get to know more about #Heritage #History #Purana and age-old kingdoms of #Chera #Chola #Pandya #Pallava
Catch me in
FB : www.facebook.com/siva.raman.7
Instagram : sivaraman.natarajan
twitter: @siva131187
Indian Histropedia
நான் கண்ட நடுகற்கள் 🪨✨
அத்தியாயம் - 5
1300 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் ‘வெளிச்சாமிகள்’! ⚔️ப்பசுக்கள் காத்துப் பலியான மறவர்கள் 🐂🏹
சுற்றுலாத் தலமாக நாம் அறியும் ஏலகிரி மலையின் நிலாவூர் பகுதியில், பல்லவர் காலத்து வரலாற்றுச் சான்றுகள் இன்றும் உயிர்ப்போடு காத்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? 🏔️✨
நிலாவூர் கதவ நாச்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 3 பல்லவர் கால நடுகற்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
1. யார் இந்த 'வெளிச்சாமிகள்'? 👑 நடுகல்லில் இருக்கும் வீரர்கள் கோயிலின் முதன்மைச் சந்நிதிக்கு வெளியே, திறந்தவெளியில் நடப்பட்டிருப்பதால், மக்கள் இவற்றை அன்போடு 'வெளிச்சாமிகள்' என்று அழைக்கிறார்கள். ஊரைக் காக்க உயிர்நீத்த இந்த மறவர்களை, அப்பகுதி மக்கள் இன்றளவும் தங்கள் குலதெய்வமாகவும் எல்லைக் காவல் தெய்வமாகவும் பூஜித்து வருகின்றனர்.
2. ஆநிரை கவர்தலும் தன்னுயிர் ஈதலும் 🐂⚔️ பழந்தமிழர் போர்மரபில் ஊரின் தலையாயச் செல்வமாக விளங்கியவை ஆநிரைகள் (மாடுகள்). பகைவர்கள் ஊருக்குள் புகுந்து மாடுகளைக் கவர்ந்து செல்ல முயன்றபோது (வெட்சித் திணை), தன் ஊரின் ஆநிரைகளைக் காப்பாற்ற எதிரிகளை எதிர்த்துத் துணிச்சலாகப் போரிட்டு வீரமரணமடைந்த மாவீரர்களின் நினைவாகவே இவை நடப்பட்டுள்ளன!
3. பல்லவர் காலக் கலைப்பாணி 🏛️ கி.பி. 7 - 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (மகேந்திரவர்ம அல்லது நரசிம்மவர்ம பல்லவன் காலம்) இந்நடுகற்களில், வீரன் கையில் வில்-அம்பு ஏந்தி, தலையில் பல்லவர் காலத்து உயரமான மகுடக் கொண்டையுடனும் இடையில் குறுவாளுடனும் போர்க்களக் கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறான்.
அடுத்த முறை ஏலகிரி பக்கம் போனா, வெறும் இயற்கையை மட்டும் ரசிச்சுட்டு வரமா, நம்ம பழந்தமிழர் வீரத்தின் அடையாளமான இந்த 'வெளிச்சாமிகளையும்' பார்த்துட்டு வாங்க! 📍✨
சிரா
நன்றி: ஸ்ரீநிவாஸ்
#ஏலகிரி #Yelagiri #Nilavoor #வெளிச்சாமிகள் #ஆநிரைகவர்தல் #வெட்சித்திணை #நடுகல் #HeroStone #பல்லவர்வரலாறு #PallavaDynasty #TamilHistory #AncientTamil #SangamAge #TamilHeritage #TamilCulture #HistoryOfTamilNadu #ExploreTamilNadu #indianhistropedia #siraa #writersiraa
3 days ago | [YT] | 37
View 1 reply
Indian Histropedia
📜 சோழர் கால வணிகமும் "நகரம்" அமைப்பும்! 🏛️
சோழப் பேரரசு அதன் நிர்வாகத் திறமைக்கு மட்டுமல்ல, வணிக மற்றும் பொருளாதார வளத்திற்கும் பெயர் பெற்றது. பிற்கால சோழர் காலத்தில் வணிகர்கள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றிருந்தனர் தெரியுமா? ஒரு சுவாரஸ்யமான பார்வை இதோ! 👇
🌟 சோழர் கால வணிகத்தின் முக்கிய அம்சங்கள்:
• நகரம் (Nagaram): சோழர் காலத்தில் வணிகர்கள் வாழ்ந்த மற்றும் வணிக நடவடிக்கைகள் நடைபெற்ற ஊர்கள் 'நகரம்' என்று அழைக்கப்பட்டன. வணிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பெயரிடும்போது 'புரம்' (Puram) என்ற பின்னொட்டு பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
• நிர்வாக அமைப்பு: கிராமங்களுக்கு 'சபை'யும், நாடுகளுக்கு 'நாட்டார்' அமைப்பும் இருந்தது போல, நகரங்களை வணிகர்களே தன்னாட்சியுடன் நிர்வகிக்க 'நகரம்' (Nagara) என்ற தொழில்முறை அமைப்பு செயல்பட்டது.
• ஐந்நூற்றுவர் (Ainnurruvar): இத்தகைய வணிகக் கூட்டமைப்புகள் உள்ளூர் நிர்வாகம், வணிகப் பாதுகாப்பு மற்றும் கோவிலைப் பாதுகாக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
• கைக்கோளர் (Kaikkolar): வணிக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உரிமைகளைப் பெற்றிருந்த இவர்கள், சில பகுதிகளில் விற்கப்படும் பண்டங்கள் மீதான தரகுக் கூலியை (Brokerage) வசூலிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருந்தனர்.
• வணிக மையங்களின் விரிவாக்கம்: சாதாரண கிராமங்களை சோழ மன்னர்கள் வணிக நகரங்களாக (Nagaram) உயர்த்தினர். உதாரணமாக, 'வெண்மணிப்பாடி' கிராமம் 'தாயிலுநல்லபுரம்' என்ற நகரமாக மாற்றப்பட்டது.
• தனியூர்களில் வணிகம்: மன்னார்குடி போன்ற பெரிய பிரம்மதேய மற்றும் தனியூர்களில் 'சாரிகைக்கோட்டை' போன்ற தனித்துவமான வணிகப் பகுதிகள் (Nagara) இயங்கி வந்தன.
சோழர் காலத்தில் வணிகர்கள் 'நகரம்' என்ற அமைப்பு மூலம் பொருளாதாரத்தைத் தாங்கியதுடன், சமூகப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகித்தனர்! ⚖️🤝
- சிரா
#CholaEmpire #TamilHistory #CholaTrade #AncientTamilNadu #Nagaram #Ainnurruvar #TamilHeritage #HistoryOfTamilNadu #CholaDynasty #HistoricalFacts #indianhistropedia #writersiraa
5 days ago | [YT] | 9
View 0 replies
Indian Histropedia
இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள்! எனக்குக் கல்வெட்டுப் படிக்கக் கற்றுக் கொடுத்த ஆசானான மறைந்த திரு. ராஜகோபால் ஐயாவின் இறுதிப் பதிப்பு நூலான "ஆவணம் இதழ் 36"-ல் என் கண்ணில் பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாத திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கல்வெட்டு ஒன்று என் பெயரில் வெளிவந்திருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு அய்யாவிடம் சென்று காட்டி மகிழ முடியவில்லையே என்று இன்று மனம் குமுறுகிறது.
வரலாற்றுத் துறையில் இருப்பவர்களுக்கும் வரலாறு மாணவர்களுக்கும் வரலாற்றை விருப்பமாகப் பயின்று வரலாற்றை வெளிக் கொணர்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களுக்கும் "என்னடா, இது ஒரு கல்வெட்டுதானே!" என்று தோன்றலாம். ஆனால், எனக்கு இது மிகப்பெரிய விஷயம். இதுபோல விடயங்களைக் கண்டறிய எனக்கு வரலாறு கற்பித்த என் குருமார்களுக்கு நன்றி!
திருவிடைமருதூர் பத்ம சக்கரக் கல்வெட்டு
• இடம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில், கிழக்கு கோபுரம் உட்பகுதி அருகில்.
• காலம்: ஈசுவர, தை; கலி 4910; பொ.ஆ 1809
• செய்தி: நடுவில் சிறு குழியும் எட்டு விரிந்த இதழ்களுடனான தாமரை தரையில் பதியப்பட்டு, இதழ்களை ஒட்டி பதினாறு ஆரங்கள் அடுத்தடுத்த இரு நிறங்களில் உள்ளன. மையப் பகுதியிலுள்ள எட்டு இதழ்களில் கிரந்த எழுத்துக்கள் மந்திர எழுத்துக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஆரங்களின் மீது உள்ளிருந்து வெளிவரும் சுருள் வட்டமாகக் கல்வெட்டு உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தரையில் இருப்பதால் பல எழுத்துக்கள் சிதைந்துள்ளன. மூத்த பக்தர்கள் கோயில் யானையின் நினைவிடம் என்பதாகக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டை மேலும் ஊகித்துத் தெளிவாகப் படித்தறிய வேண்டும்.
அ
இதழ்களில் உள்ள தெளிவற்ற மந்திரக் கிரந்த எழுத்துக்கள்:
◦ ப்பணி - - ஸ்வா ஹ
ஆ
கலியுபுத்த: சதகூாய் . . . ல் செல்லா நின்ற ஈசுவரளு தையி . . . ஸ்ரீமகாலிங்க சுவாமி கோவில் கட்டளையில் திருவலூர் யிருக்கும் சிவலோகம் நடராஜ அய்யர் ராமசுவாமி சாஸ்திரி மகன் சாம்பசிவன் கூட நித மங்கள சேருவை
- சிரா
#HistoricalInscriptions #TamilNaduHistory #Epigraphy #Thiruvidaimarudur #CholaTemples #TamilHistory #Aavanam #HistoricalResearch #AncientInscriptions #TempleHistory
1 week ago | [YT] | 28
View 3 replies
Indian Histropedia
சங்க காலத்து வேலன் வழிபாடும் வெறியாடலும்! 🌿🔥
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேலன் வழிபாட்டு முறைகளும் வெறியாடல் சடங்குகளும் நம் தமிழர்களின் மிகத் தொன்மையான மரபாகும். அவற்றின் முக்கிய அம்சங்கள் இதோ:
• வேலனின் பங்கு: சங்க காலத்தில் முருகனின் பூசாரியாகவும், தெய்வீக ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் 'வேலன்' (இவருக்கு 'படிமத்தன்' என்ற பெயரும் உண்டு). இவரின் பங்கும் சடங்கு முறைகளும் மிக சுவாரஸ்யமானவை.
• முருகனின் அருள்நிலை: வேலன் என்பவன் சாதாரண மனிதன் அல்ல; முருகன் மீது தீவிர பக்தி கொண்டு, அந்தத் தெய்வத்தின் அருளைத் தன் உடலில் தாங்கும் ஆற்றல் பெற்றவராகக் கருதப்பட்டார்.
• தலைவியின் துயர் கண்டறிதல்: சங்க இலக்கியத் தலைவிகள் காதல் நோய் அல்லது பிரிவுத் துயரால் மெலிந்து போகும்போது, அவர்களின் உடல் மெலிவிற்கான காரணம் இயற்கையான நோயால் வந்ததா அல்லது முருகன் அவளை 'அணங்கினது' (அதாவது முருகன் தன் அருளாலோ அல்லது பிடியாலோ பற்றியது) தானா என்பதை ஆராய்ந்து சொல்வது வேலனின் முக்கியப் பணியாகும்.
• கழங்கு கொண்டு குறி பார்த்தல்: இந்த உண்மையை அறிய வேலன் 'கழங்கு' (கழற்சிக்காய் - Guilandina bonduc seeds) என்னும் இயற்கை விதைகளைக் கொண்டு குறி பார்த்துச் சொல்வார். இந்த கழற்சிக் காய்களைக் கொண்டு தெய்வம் எதை விரும்புகிறது என்பதைத் துல்லியமாகக் கணிப்பார்கள்.
• களம் அமைத்தல்: வழிபாடு நடத்த வீட்டின் முன் வெண்மணல் பரப்பப்பட்டு 'களம்' அமைக்கப்படும்.
• அலங்காரமும் ஆடையும்: வேலன் செந்நிற ஆடை அணிந்து, செந்நிற நூலால் ஆன காப்பு நாண் தரிப்பார். மேலும், வெட்சி அல்லது செச்சை மலர் மாலை சூடி, உடலில் சந்தனம் மற்றும் வெண்கடுகு (ஐயவி) பூசிக்கொள்வார்.
• வெறியாடல் சடங்கு: வாத்தியங்கள் முழங்க வேலன் ஆவேசமாக ஆடும் நிலையே 'வெறியாடல்' எனப்படும். வழிபாட்டின் போது களத்தில் மலர்களையும் வெண்பொரியையும் தூவுவார்.
• பலி மற்றும் குரிசி: முருகனைச் சாந்தி செய்ய ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு, அதன் குருதியுடன் தினைமாவு, மலர்கள் கலந்து 'குரிசி' என்ற கலவையை உருவாக்குவர். இதைக் களத்தில் தெளித்து மந்திரம் ஓதுவர்.
• தோற்றம்: வெறியாடலின் போது வேலன் பல்வேறு தெய்வங்களைப் புகழ்ந்து பாடி வாழ்த்துவது 'தோற்றம்' எனப்படும்; இதன் மூலம் தலைவியின் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்தத் தொன்மச் சடங்குகள் இன்றும் வட மலையாளப் பகுதிகளில் சில மாற்றங்களுடன் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது! ✨
சங்க இலக்கிய ஆதாரங்கள் & பாடல் எண்கள்:
• ஐங்குறுநூறு: பாடல்கள் 241 - 250 (முழுவதும் 'வெறிப்பத்து')
• நற்றிணை: பாடல்கள் 34, 47, 51, 173, 268, 273, 282, 288, 322, 342, 376
• குறுந்தொகை: பாடல்கள் 53, 105, 111, 263, 318, 360, 362, 366
• அகநானூறு: பாடல்கள் 22, 98, 114, 138, 182, 195, 232, 242, 292, 370, 382, 388
• புறநானூறு: பாடல்கள் 259, 366
• தொல்காப்பியம்: பொருளதிகாரம் - நூற்பா 115
• நற்றிணை (பாடல் 34, 173): வேலன் கழங்கு கொண்டு குறி பார்த்து, தலைவியின் நோய் தீர்க்கும் முறைகளைப் பேசுகின்றன.
• குறுந்தொகை (பாடல் 105, 362): தலைவியின் மெலிவுக்கான காரணத்தை வேலன் வெறியாடிக்கொண்டே கண்டறியும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.
- சிரா
#TamilHistory #SangamLiterature #AncientTamil #VelanVeriyaadal #TamilTradition #AncientCulture #TamilLiterature #Murugan #HistoricalFacts #TamilHeritage #SangamEra #indianhistropedia #writersiraa
1 week ago | [YT] | 17
View 0 replies
Indian Histropedia
வெள்ளலூர்: 2,000 ஆண்டுகால வணிகத் தடம்! தமிழரின் உலகப் பெருமையைச் சொல்லும் கொங்கு மாநகரம். 🏺🌍
கோவை மாவட்டம் வெள்ளலூர். இன்றைய வரைபடத்தில் இது ஒரு சிறிய ஊராகத் தெரியலாம். ஆனால், காலத்தின் சுவடுகளைத் தோண்டிப் பார்த்தால், இது சங்ககாலத்தின் பிரம்மாண்டமான 'சர்வதேச வணிக மையம்'!
2,000 ஆண்டுகளுக்கு முன்பே, நொய்யல் ஆற்றங்கரையில் தமிழர்கள் உலக நாடுகளுடன் கைகோர்த்திருந்தனர் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இங்கே புதைந்துள்ளன.
🔎 ஏன் வெள்ளலூர் வரலாறு முக்கியமானது?
• ரோமானியத் தொடர்பு: அகஸ்டஸ், டைபீரியஸ் போன்ற ரோமானிய மன்னர்களின் தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டதே, நம் முன்னோர்களின் கடல் கடந்த வணிகத் திறனுக்கு மிகப்பெரிய சான்று.
• பொருளாதார மையப்புள்ளி: அன்றைய கொங்கு மண்டலத்தின் செல்வச் செழிப்புக்கு வெள்ளலூர் ஒரு முக்கியக் காரணம். இங்கிருந்துதான் மிளகு, நவரத்தினங்கள், மற்றும் உயர்தர நெசவுத் துணிகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
• கைவினைத் திறன்: இங்கே கிடைத்த சங்கு வளையல்கள், மணிகள் மற்றும் இரும்புப் பொருட்கள், அன்றைய காலத்திலேயே நாம் எவ்வளவு நுணுக்கமான தொழில்நுட்பத்துடன் வாழ்ந்தோம் என்பதைக் காட்டுகின்றன.
வரலாற்றின் மடி:
வெள்ளலூர் வெறும் ஊரல்ல; அது ஒரு கால இயந்திரம். நாம் மண்ணைத் தோண்டும்போதெல்லாம், ஒரு பழங்கால வணிகக் குழு பாலக்காட்டுக் கணவாய் வழியாக நகருக்குள் நுழையும் சத்தமும், சந்தையில் உலவும் ரோமானிய வணிகர்களின் பேச்சும் நம் காதுகளில் ஒலிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 🏛️✨
வெள்ளலூர் மீண்டும் பேசுகிறது! 🏺🔥
நம் வரலாறு வெறும் செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் மட்டுமல்ல; நம் மண்ணுக்குள்ளும் உயிர்ப்போடு இருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே உலக வர்த்தக வரைபடத்தில் தடம் பதித்த நம் முன்னோர்களின் பெருமை இதோ!
இந்த வரலாற்றின் ரகசியங்களை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
- சிரா.
#Vellalore #Coimbatore #TamilHistory #Archaeology #SangamAge #RomanTrade #AncientTamil #IndianHistropedia #Siraa #KonguNadu #NoyyalRiver #HistoryUncovered #தமிழர்வரலாறு #தொல்லியல் #வெள்ளலூர் #கொங்குமண்டலம் #writersiraa
1 week ago | [YT] | 34
View 0 replies
Indian Histropedia
நான் கண்ட நடுகற்கள் 🪨✨
அத்தியாயம் - 4
500 ஆண்டுகால ஜல்லிக்கட்டு வரலாறு: காளையை அடக்கித் தெய்வமான மாவீரன்! 🐂🩸
தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது நம் நிலத்தின் பண்பாடு, முல்லைத் திணை வாழ்வியலின் அசைக்க முடியாத அடையாளம்! ஏறுதழுவுதல் களத்தில் திமிறி வந்த காளையை அடக்க முயன்று, தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒரு மாவீரனின் நினைவாக எடுக்கப்பட்ட அரிய நடுகல் பற்றியதுதான் இந்த அத்தியாயம். 👇
📍 அமைவிடம்:
திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அம்மணாங்கோயில் கிராமம். அங்குள்ள இரட்டைப் பனை மரத்தடியில், தற்போதைய நிலவரப்படி 1 அடி ஆழத்தில் புதைந்த நிலையில் இந்த வரலாற்றுப் பொக்கிஷம் அமைந்துள்ளது.
👑 காலமும் பின்னணியும்:
இக்கல்லில் உள்ள எழுத்துக்கள் காலப்போக்கில் சிதைந்துவிட்டாலும், இதன் சிற்ப அமைப்பைக் கொண்டு இது கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர் காலத்து நடுகல்லாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. திருப்பத்தூர் பகுதி பழங்காலத்தில் முல்லை நிலமாக இருந்ததால், அப்போதே இங்கு மாடுபிடி வீர விளையாட்டு எவ்வளவு பெருவழக்காக இருந்துள்ளது என்பதற்கு இந்த நடுகல்லே சாட்சி!
🎨 ஏறுதழுவுதலின் உச்சக்கட்ட சிற்ப வடிவம்:
சுமார் 4 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட இந்த நடுகல், காளைக்கும் வீரனுக்கும் இடையே நடந்த அந்தப் போராட்டத்தின் உச்சக்கட்ட தருணத்தை அப்படியே கண்முன்னே நிறுத்துகிறது:
வீரத் தோற்றம்: மாவீரன் தலையில் கம்பீரமாகக் கொண்டையிட்டு, கழுத்தில் ஆபரணமும், கைகளில் கடகமும் (காப்பு) அணிந்து ஒரு மதிப்பிற்குரிய உயர்குடி வீரனாகக் காட்சியளிக்கிறான்.
போராட்டக் களம்: தன் ஒரு காலை காளையின் மீது உறுதியாக ஊன்றி, அதை அடக்கும் அதிரடித் தருணத்தில் வீரன் செதுக்கப்பட்டுள்ளார்.
அசாத்தியத் துணிச்சல்: இடது கையால் சீறிப்பாயும் காளையின் கூர்மையான கொம்புகளைப் பற்றியபடியும், வலது கையில் அதைக் கட்டுப்படுத்த சாட்டை போன்றதொரு பொருளை ஏந்தியபடியும் உள்ளார். கைக்குக் கீழே வீரத்தின் அடையாளமாக உறைவாள் உள்ளது.
காளையின் வடிவம்: திமிறி நிற்கும் காளையின் உருவமும் இதில் மிக நுட்பமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🙏 'போத்தராஜா' வழிபாடு:
வரலாறு இவனுடைய உண்மையான பெயரை நமக்குக் கடத்தத் தவறினாலும், மக்கள் இவனை மறக்கவில்லை. உள்ளூர் மக்கள் இந்த வீரனை 'போத்தராஜா' என்ற பெயரில் தெய்வமாக ஏற்று வணங்கி வருகின்றனர். கிராமத்து அம்மனுக்குக் கூழ் வார்க்கும் திருவிழாவின் போது, இந்த நடுகல்லுக்கு ஆடு, கோழிகளைப் பலியிட்டுத் தங்கள் நன்றியைக் காணிக்கையாக்கும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது!
கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் இத்தகைய அரிய ஏறுதழுவுதல் நடுகற்கள், நம் முன்னோர்களின் அறத்திற்கும் வீரத்திற்கும் காலத்தால் அழியாத சாட்சிகள்! 🌾🏛️
ஜல்லிக்கட்டு காளையை அடக்கித் தெய்வமான இந்த மாவீரனைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்! 👇
சிரா
நன்றி: ஸ்ரீநிவாஸ்
#நான்கண்டநடுகற்கள் #NaanKandaNadukarkal #Eruthazhuvuthal #Jallikattu #HeroStones #TamilHistory #Tirupattur #VijayanagaraEmpire #TamilCulture #MullaiLand #AncientTamilNadu #HeritageTamilNadu #Nadukal #WriterSiraa #Archaeology #HistoryOfTamilNadu #IndianHistropedia
1 week ago | [YT] | 26
View 1 reply
Indian Histropedia
தலைப்பு: கூத்து, அத்தியாயம் 3: இலக்கியங்களில் பதிவான கூத்துக்கலை! 🎭✨
கூத்து என்பது ஏதோ ஒரு காலத்தின் வெளிப்பாடு அல்ல; அது நம் முன்னோர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களே சாட்சி! பண்டையத் தமிழ் இலக்கியங்கள், கூத்துக்கலைக்கு அளித்த முக்கியத்துவத்தைப் பார்ப்போம்!
📖 இலக்கியப் பதிவுகள்:
தொல்காப்பியம்: "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்" என இலக்கணத்திலேயே நாடகப் பாங்கினைப் பதிவு செய்து, கூத்தின் கலைத்துவத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்தது.
மலைபடுகடாம்: கூத்தர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் கையாண்ட இசைக்கருவிகள் மற்றும் அவர்களின் உன்னத கலைத்திறனை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
சிலப்பதிகாரம்: மாதவியின் பதினொன்று வகை ஆடல்கள் (அல்லியம், பாண்டரங்கம் போன்றவை) மற்றும் அடியார்க்கு நல்லாரின் உரை, கூத்துக்கலையின் நுணுக்கங்களை இன்றுவரை நமக்கு ஆவணமாகக் கடத்துகின்றன.
👥 கலைஞர்களின் வாழ்வியல்:
கூத்தர்: ஆடல் கலைஞர்கள்.
பாணர்: இசை பாடுபவர்கள்.
விறலியர்: ஆடல் மகளிர்.
🏛 வகைப்பாடுகள்:
வேத்தியல் & பொதுவியல்: அரசவை கலை மற்றும் பொதுமக்களின் கலை என இரு பிரிவுகளாகப் பகுத்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்தது இக்கலை.
அகக்கூத்து & புறக்கூத்து: வாழ்வியலின் உணர்ச்சிகளை (காதல் மற்றும் வீரம்) வெளிப்படுத்தும் கண்ணாடியாக விளங்கியது.
💡 கூடுதல் தகவல்:
பண்டைய இலக்கியங்களில் கூத்து என்பது வெறும் காட்சி ஊடகமாக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு ஊரின் 'சமூக ஒழுங்கமைப்பை' (Social Order) நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. திருவிழாக் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படுவது என்பது, அந்த ஊரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் சடங்காகவே கருதப்பட்டது. மன்னர்களின் கொடைத் திறனைப் புகழ்வதற்கும், போர்க்கள வெற்றிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் கூத்து மிகச்சிறந்த தகவல் தொடர்புச் சாதனமாகப் பயன்பட்டது.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் நாடகத்திற்கு இணையாகக் கூத்து திகழ்ந்ததே தமிழரின் பண்பாட்டுப் பெருமிதம்!
- சிரா
#TamilLiterature #Koothu #AncientTamilNadu #TamilHeritage #SangamLiterature #கலை #கூத்து #தமிழர்அடையாளம் #தொல்காப்பியம் #சிலப்பதிகாரம் #Siraa
#IndianHistropedia #writersiraa
1 week ago | [YT] | 11
View 1 reply
Indian Histropedia
கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2026
சுவாசம் அரங்கு 347 (பென்பேர்ட்)
17.07.2026 to 26.07.2026
Timing: 10 AM to 08 PM
Venue: CODISSIA Trade Fair Complex, Coimbatore
#writersiraa #swasam
1 week ago | [YT] | 4
View 0 replies
Indian Histropedia
1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செய்த வியக்க வைக்கும் நீர் மேலாண்மை! 💧🌾
பண்டைய காலத்துல நம்ம ஊரு ஏரிகள் எப்படி நிர்வகிக்கப்பட்டதுன்னு தெரிஞ்சா கண்டிப்பா ஆச்சரியப்படுவீங்க! ஒரு சின்ன ஏரியை கூட எவ்வளவு நேர்த்தியாகவும், அறிவியல் பூர்வமாகவும் நம்ம முன்னோர்கள் பாதுகாத்தாங்க தெரியுமா? இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்:
🏛️ 1. ஏரி வாரியம் (Tank Committee)
இப்போ இருக்கிற பொதுப்பணித்துறை (PWD) மாதிரி அப்போ கிராம சபைக்கு கீழ் 'ஏரி வாரியம்' செயல்பட்டது! கலிங்கு வாரியம், பஞ்சவார வாரியம்னு தனித்தனி குழுக்கள் ஏரியை பார்த்துக்கிட்டாங்க. கரிகால சோழனின் கல்லணையும், பல்லவ மன்னர்களின் மகேந்திர தடாகமும் நம்ம அரசர்களின் தொலைநோக்கு பார்வைக்கு சிறந்த சான்று!
🛠️ 2. ஸ்மார்ட்டான பராமரிப்பு & நிதியாதாரம்
மழைக்காலத்துக்கு முன்னாடியே ஏரியை ஆழப்படுத்த வண்டல் மண்ணை அள்ளுவாங்க (இதுக்கு பேரு 'கல்லுவித்தல்'). இந்த பராமரிப்பு செலவுக்கு 'ஏரிஆயம்' என்ற வரியும், ஏரியில மீன் பிடிக்க விடுறது மூலமா கிடைக்கிற 'பாசிப்பட்டம்' என்ற வருவாயும் பயன்படுத்தப்பட்டது.
⚙️ 3. உலகத்தையே வியக்க வைக்கும் 'குமிழி' தொழில்நுட்பம்
இது தமிழர்களின் மாபெரும் இன்ஜினியரிங் சாதனை! 🤯 ஏரியின் அடியில மதகுகள் அமைக்கப்பட்டிருக்கும். இதுல நீரை வெளியேற்ற ஒரு துளையும், வண்டல் மண்ணை வெளியேற்ற 'சேரோடி' என்ற இன்னொரு துளையும் இருக்கும். இதனால ஏரியில மண் சேராமல் பல வருஷங்களுக்கு பாதுகாக்க முடிஞ்சது!
⚖️ 4. டைம் வெச்சு தண்ணீர் பங்கீடு
தண்ணீரை இஷ்டத்துக்கு திறக்க முடியாது! 'நாழிகை' (1 நாழிகை = 24 நிமிடம்) கணக்குல தான் ஒவ்வொரு நிலத்துக்கும் தண்ணீர் பிரிச்சு கொடுக்கப்படும். திருட்டுத்தனமா வாய்க்கால் வெட்டி தண்ணீர் எடுத்தா கடுமையான தடைச்சட்டங்களும் தண்டனையும் இருந்துச்சு. 🚫
தண்ணீரை வெறும் வளமாக மட்டும் பார்க்காமல், அதைப் புனிதமான பொதுச் சொத்தாகப் பாதுகாத்த நம்ம முன்னோர்களின் அறிவு எந்த அளவுக்கு சிறந்து விளங்கியிருக்குன்னு பார்த்தீங்களா? 🌍💙
👇 உங்க ஊர்ல இப்படிப்பட்ட பழமையான ஏரி ஏதாச்சும் இருக்கா? அதோட பேரை கமெண்ட்ல சொல்லுங்க!
- சிரா
#TamilHistory #AncientEngineering #WaterManagement #TamilNadu #Cholas #Pallavas #ProudTamilan #TamilFacts #HistoryOfTamil #SaveWater #AncientTamilNadu #IndianHistropedia #writersiraa
2 weeks ago | [YT] | 15
View 1 reply
Indian Histropedia
🔱 முருகனும் சோமாஸ்கந்தரும் ஒன்றா? – ஒரு வரலாற்று மற்றும் ஆகமப் பார்வை
"முருகனும் சோமாஸ்கந்தரும் ஒன்றே" என்ற கருத்து பரவலாகக் கூறப்பட்டாலும், வரலாறு, ஆகமம் மற்றும் சிற்பக்கலை (Iconography) ஆகியவற்றின் அடிப்படையில் அது முழுமையாகச் சரியல்ல.
முருகப்பெருமான் தனித்தெய்வமாக வழிபடப்படுபவர். சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல், புறநானூறு போன்ற நூல்கள் அவரைக் குறிஞ்சி நிலத்தின் கடவுளாகவும், வீரமும் ஞானமும் நிறைந்த தெய்வமாகவும் போற்றுகின்றன.
மறுபுறம், சோமாஸ்கந்தர் என்பது "ச + உமா + ஸ்கந்தர்" (Sa + Uma + Skanda) என்ற கூட்டுப்பெயரிலிருந்து உருவான திருவுருவ அமைப்பாகும். இதில் சிவபெருமான், உமாதேவி மற்றும் அவர்களுக்கிடையே குழந்தை வடிவில் ஸ்கந்தன் (முருகன்) காட்சியளிக்கிறார். இது ஒரு தனித்தெய்வம் அல்ல; குடும்பத் திருவுருவமாகும்.
இந்தச் சோமாஸ்கந்தர் வழிபாடு பல்லவர் காலத்தில் (கி.பி. 6–8 ஆம் நூற்றாண்டுகள்) தமிழ்நாட்டில் சிறப்பாக வளர்ச்சி பெற்று, கோயில் சிற்பக்கலையில் முக்கிய இடம் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் இதன் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
சோமாஸ்கந்தர் சிற்பங்களில் முருகன் எப்போதும் புதிதாகப் பிறந்த குழந்தையாக மட்டுமே இருப்பதில்லை. கோயிலும் காலகட்டமும் சார்ந்து அவர் நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ அல்லது குழந்தை வடிவிலோ காட்சியளிக்கலாம்.
தத்துவ ரீதியாக, சில சைவ அறிஞர்கள் சிவனை இச்சா சக்தி, உமையை கிரியா சக்தி, முருகனை ஞான சக்தி என விளக்குகின்றனர். ஆனால் இது அனைத்து ஆகமங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்படும் விளக்கம் அல்ல.
சுருக்கமாக:
• 🔸 முருகன் – தனித்தெய்வம்.
• 🔸 சோமாஸ்கந்தர் – சிவன், உமை, முருகன் இணைந்த குடும்பத் திருவுருவம்.
• 🔸 சோமாஸ்கந்தர் வடிவத்தின் முக்கிய அங்கம் முருகன் என்றாலும், முருகனும் சோமாஸ்கந்தரும் ஒன்றல்ல.
வரலாறும், ஆகமங்களும், சிற்பக்கலையும் இதையே தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
- சிரா
#Murugan #Somaskandar #LordShiva #HinduIconography #PallavaArchitecture #முருகன் #சோமாஸ்கந்தர் #சிவன் #உமையாள் #சைவம் #தமிழ்வரலாறு #பல்லவர்காலம் #காஞ்சிபுரம் #சிற்பக்கலை #ஆகமம் #ஆன்மீகம் #முருகப்பெருமான் #தமிழ் #வரலாறு #Murugan #Somaskandar #LordShiva #HinduIconography #PallavaArchitecture #TamilHistory #Saivism #KanchipuramTemples #HinduTheology #TamilNaduTemples #IndianHistory #Agamas #LordKartikeya #IndianHistropedia #writersiraa #templearchitecture #kailasanathartemple #SangamLiterature #tamilliterature
2 weeks ago | [YT] | 17
View 0 replies
Load more