நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
join.naamtamilar.org/

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
thuli.naamtamilar.org

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
donate.naamtamilar.org

வலைதளம்:
www.naamtamilar.org/

வலையொளி:
youtube.com/NaamThamizharKatchi/
youtube.com/SeemanOfficial
youtube.com/NaamTamilarTV

முகநூல்:
www.facebook.com/NaamTamilarKatchiOffl/
www.facebook.com/SenthamizhanSeeman/

சுட்டுரை:
x.com/NaamTamilarOrg
x.com/seeman4tn/

Telegram: t.me/NaamTamilarKatchiOffl


நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

இயற்றமிழ் மூலம்
இசைத் தமிழ் தந்த
தமிழ்ப் பெருங்கவி!

சங்கத்தமிழ் சாறெடுத்து
தங்கத்திரை தட்டில் வைத்து
கவித்தமிழ் அமுதூட்டிய
ஆண் அன்னை!

செந்தமிழ் சொல்லெடுத்து
தேன்மொழி வார்த்த
தென்மொழிப் பாவலன்!

காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால்,
ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால்,
இறவா இலக்கியம் படைத்து
சிகரங்களைத் தொட்டு
கள்ளிக்காட்டு இதிகாசம் கண்டு,
கருவாச்சி காவியம் வடித்து,
மூன்றாம் உலகப்போர் தொடுத்து,
தண்ணீர் தேசம் நிறைத்து,
தமிழாற்றுப்படை கண்ட
எங்கள் கவியாற்றுப்படை!

கவி உலகின் தமிழ் அடையாளம்!

மகாகவிதையாய் வீசி மனங்களை வருடிய வடுகப்பட்டியின் தமிழ்த் தென்றல்!

வையம் உள்ளவரை ஐயா வைரமுத்துவின் வைரத் தமிழ் உலகில் உலவும்!

ஞாலத்து விருதுகளையெல்லாம் தம் ஞானத்துச் செறிவால் தமிழ் அன்னையின் காலடியில் சேர்ப்பித்த
ஈடு இணையற்ற என் மண்ணின் கவிஞன்!

முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

1 day ago | [YT] | 110

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

அசல் மனிதர்களின் வாழ்வியலை திரைமொழியில் மிகையில்லாது காட்சிப்படுத்தி, உயிரோட்டமானப் பாத்திரங்களைப் படைத்து, மாந்த உணர்வுகளை வலிமையாகக் கடத்தி, காலங்கடந்து நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி!

அப்பா பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்று, நடிப்பு, திரைமொழி எல்லாவற்றுக்குமானப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் தன்னிகரற்ற கலை ஆளுமை!

தனது திரைப்படங்களின் மூலம் அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தலைசிறந்த படைப்புகளின் மூலம் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச் செய்யும் பெருமைக்குரிய திரைக்கலைஞர்!

தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் பெருமித அடையாளங்களை ஏற்று, தாய் நிலத்தின் மீது பற்றோடும், தமிழ்த்தேசிய இன உணர்வோடும் திகழும் மண்ணின் மகன்!

தமிழ்த்திரையுலகின் பெருமிதத்திற்குரிய கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது ஆருயிர் இளவல் பாலா அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

#HBDBala

3 days ago | [YT] | 144

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

தாத்தா மயிலை பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று!

தமிழ்நாட்டின் வடக்கெல்லை காக்க அரசியல் அறப்போர் புரிந்த வீரர்..!

திருப்பதி கேட்டு, திருத்தணி மீட்டு தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்..!

முதன் முதலில் மாநில தன்னாட்சி முழக்கமிட்ட தனிப்பெருந்தலைவர்!

தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகு சுதந்திர அரசியல் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டென உரைத்து, தமிழ்த்தேசிய அரசியல் காக்க தமிழரசு கழகம் கண்ட தன்மானத்தமிழர்..!

தன்னிகரில்லா தமிழ்ப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை தம் எழுத்தாலும், சொல்லாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெலாம் கொண்டு சேர்த்ததோடு, ஆண்டுதோறும் 'சிலப்பதிகார விழா' எடுத்தும் பெருமை சேர்த்த பெருந்தகை..!

சிலப்பதிகாரம் குறித்து 13 நூல்கள், பாட்டன் பாரதி பற்றி 10 நூல்கள், தாத்தா வ.உ.சி பற்றி 3 நூல்கள் என இன்னும் பற்பல நூல்கள் இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி சேர்த்த இலக்கியப் பேரறிஞர்..!

வடக்கெல்லை காத்த வீரர்!
பெருந்தமிழர்!

நம்முடைய தாத்தா ம.பொ.சி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

#நாம்தமிழர்!

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

#மபொசி | #MaPoSI

2 weeks ago | [YT] | 153

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!

@CMOTamilnadu @TVKVijayHQ

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.

கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.

தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.

காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.

ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

3 weeks ago | [YT] | 85

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

தான் பார்க்காத உலத்தையும், தன்னை பார்க்காத உலகத்தையும் தம் குழந்தைகள் கண்டுவிட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சிய வேட்கையுடன் பெற்ற பிள்ளையை தம் தோளில் தூக்கி உயர்த்தி உலகை காட்டும் உன்னத வழிகாட்டிகள்..!

தம் குழந்தைகள் நிம்மதியாக நிமிர்ந்து நடக்க,
தான் படும் துயரங்கள் தம் குழந்தைகள் பட்டுவிடக் கூடாதென்று, கைகளில் காயங்களுடனும் கண்களில் சிரிப்புடனும்
தான் குனிந்து, வளைந்து உழைத்து
நம் கண் முன்னே நடமாடும் ஒப்பற்ற தெய்வங்கள்..!

கண்டிக்கும் நேரத்தில் காவலனாய்..
கற்பிக்கும் நேரத்தில் ஆசானாய்..
அரவணைக்கும் நேரத்தில் அன்னையாய்..
தவிக்கும் நேரத்தில் தோழனாய்.. ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையை கற்றுத்தரும் உலகின் முதல் நாயகர்கள்..!

'கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் அவரின் முகம் ..
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் அவரின் முகம் ..
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே ..!
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் ..
தந்தை அன்பின் பின்னே ..!'

என்ற என்னுயிர்த் தம்பி நா.முத்துக்குமாரின் உள்ளத்தை நெகிழச்செய்யும் பாடல் வரிகளுக்கு ஏற்ப
தம் குழந்தைகளின் வெற்றியையே தன்னுடைய வெற்றியாக கருதி வாழும் நாள் வரை குழந்தைகளை உள்ளத்தில் சுமந்து, குடும்பத்தின் உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேயும் உன்னத அப்பாக்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த தந்தையர் நாள் நல்வாழ்த்துகள்!

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

3 weeks ago | [YT] | 182

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

#BreakingNews

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பாக இன்று ஆனி 07ஆம் நாள் (21-06-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து கும்மிடிப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

https://youtu.be/dDz1QuZOzbY

#TVK #Vijay #Gummidipoondi #StopChildAbuse #StopViolenceAgainstWomen #EnsureWomenSafety #TNGovt #NTKWomenWing #Thiruvallur

3 weeks ago | [YT] | 2

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது! - சீமான் வலியுறுத்தல்

@CMOTamilnadu | @TVKVijayHQ

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது.

காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும். தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

4 weeks ago | [YT] | 75

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்!

பொதுவுடைமைக் கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் விதைத்த பெருங்கலைஞர்!

இனமான இயக்குநர்
அப்பா மணிவண்ணன் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

4 weeks ago | [YT] | 101

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!

நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.

கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!

தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.

தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!

மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!

“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”

என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

#WorldBloodDonorDay | #worldblooddonorday2026

1 month ago | [YT] | 58

நாம் தமிழர் செய்திகள் | NTK Live News

குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!

திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!

திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!

உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!

குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!

இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..!

தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

1 month ago | [YT] | 57