ஹாய் டியர் பிரண்ட்ஸ்
எல்லாரும் எப்படி இருக்கீங்க..?
நான் உங்கள் தீரன் தீரா
காதல் ஊடல், நட்பு என பல வகையான அறுசுவை விருந்துகளை என்னுடைய எழுத்து மூலம் உங்களுக்கு இதுவரை வழங்கியிருக்கிறேன்.
எனது எழுத்து பயணம் பிரதிலிபிலியில் தொடங்கி அமேசான் மற்றும் அழகிய தமிழ் மகள் தளத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
என் வாழ்க்கைப் பயணத்தை சந்தோசமாக மாற்றியமைத்ததில் என்னுடைய நாவல்களுக்கு பெரும் பங்கு உண்டு .
இது வரை விழிகளால் என்னுடைய கதைகளைப் படித்து மகிழ்ந்த உங்களுக்கு செவி நாதமாக கதைகளை கேட்க தீரன் தீரா youtube நாவல்ஸ் விரைவில் வரவிருக்கின்றது.
அட ஆமாங்க..
நானும் யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.
இனி என்னுடைய காதல் கதைகளை youtube சேனலிலும் கேட்டு மகிழலாம் பிரண்ட்ஸ்.
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/kwRR7g8yXHo
பரிதி நிலவன் தனது குடும்பத்திற்காக திருமணத்தைத் தவிர்த்து வாழ்ந்து வரும் நிலையில், தங்கையின் துரோகமான திருமணம் முறிந்த பிறகு நிலாஷினியை திருமணம் செய்து கொள்கிறான். ஏற்கனவே திருமண வாழ்க்கையில் காயமடைந்த நிலாஷினி, பரிதியின் அன்பையும் பொறுமையையும் புரிந்துகொண்டு அவனுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறாள். ஆனால் பரிதியின் கடந்தகால காதலான மிதுனா மீண்டும் வந்து பிரச்சனையை ஏற்படுத்த, பரிதி தன் மனைவி நிலாஷினி மீதான காதலில் உறுதியாக நிற்கிறான். பூமிகாவின் வாழ்க்கையிலும் மீண்டும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலர, குடும்பத்தில் இருந்த காயங்கள் மெல்ல ஆறுகின்றன. இறுதியில் மோகத்தைத் தாண்டி உண்மையான அன்பையும் துணையின் மதிப்பையும் கற்றுக்கொள்ளும் பரிதி–நிலாஷினியின் காதல் வாழ்க்கையே கதையின் மைய நிறைவாக அமைகிறது.
2 weeks ago | [YT] | 157
View 1 reply
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/zhMjfIfALtQ
செந்தூரனின் மௌனக் காதலும், முல்லையின் தைரியமான இதயமும் ஒன்றாக இணையும் அழகான பயணம்.
தவறான புரிதலில் தொடங்கிய சந்திப்பு, ஆழமான நேசமாக மலர்கிறது.
காதலைப் பிரிக்க பழைய பகையும் புதிய சதிகளும் நிழலாய் தொடர்கின்றன.
ஆனால் உண்மையான அன்பு எல்லா தடைகளையும் தாண்டி இதயங்களை ஒன்றிணைக்கிறது.
கண்ணீரையும், பாசத்தையும், தியாகத்தையும் தாங்கிய அவர்களின் காதல் இறுதியில் வெற்றிபெறுகிறது.
மனதை வருடும் இனிய நிறைவுடன் முடியும் ஒரு மறக்க முடியாத காதல் காவியம்.
2 weeks ago | [YT] | 19
View 0 replies
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/Vo5QDZ1mB_A
நிழலுலகைச் சேர்ந்த சூர்யா, காதல் நாவல்களை அதிகம் வாசிக்கும் அப்பாவிப் பெண்ணான ரதியைப் பார்த்ததும் அவளைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆரம்பத்தில் சூர்யாவை ஒரு ஹீரோவாக நினைத்து அவனைக் காதலிக்கும் ரதி, ஒரு கட்டத்தில் அவனது மிகக் கடுமையான கோபத்தைக் கண்டு பயந்துபோய் அவனை விட்டு விலக நினைக்கிறாள். ஆனால், ரதியின் பிரிவைச் சிறிதும் ஏற்க முடியாத சூர்யா, அவளைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள ஒரு தனித் தீவுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்கிறான். ரதியின் பயம் மற்றும் கோபத்துக்கு இடையே, அந்தத் தீவில் நிலவும் கடும் குளிரால் ஏற்படும் எதிர்பாராத நெருக்கம், அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை ஒரு வித்தியாசமான காதல் போராட்டமாக மாற்றுகிறது
3 weeks ago | [YT] | 198
View 0 replies
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/Lbq5vPQ7ZO8
மாநிறத்தில் லட்சணமான முகம், காற்றில் கலைந்த அடர்ந்த கூந்தல், கோபத்தில் சிவந்திருந்த அவளது பெரிய விழிகள் அவளை இன்னும் ஆ*பத்தான அழகியாக காட்டியது. கருப்பு ஜீன்ஸும், அடர் சிவப்பு குர்த்தியும் அணிந்திருந்தவள், பயந்து நிற்கும் பெண்ணைப் போல அல்ல... வேட்டைக்காரர்களின் நடுவே சிக்கிய பெண் சிங்கம் போலவே நின்றாள்.
ராஜதேவா மெல்ல அவளருகே வந்தான். அவளது அஞ்சாத பார்வை அவனுக்கு புதிதாய் தோன்றியது. இதுவரை அவனைக் கண்டு நடுங்காதவர்கள் அந்த ஏரியாவில் எவரும் இல்லை. ஆனால் இந்த சின்னப் பெண் மட்டும், அவன் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அசராமல் நின்ற விதம், அவனுள் இதுவரை அறியாத ஒரு உணர்வை கிளறியது.
1 month ago | [YT] | 102
View 2 replies
Theeran Theera Tamil Audio Novels
youtube.com/@ssaudionovelstamil?si=cVRnpgnrletXHny…
சூர்யா சரவணன் நாவல்களை கேட்க சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். விரைவில் புதுக் கதை வரவிருக்கிறது
1 month ago | [YT] | 72
View 2 replies
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/SOrCc1AlTgU
1 month ago | [YT] | 5
View 0 replies
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/SOrCc1AlTgU
அவள் தன் நீளக்கூந்தலை மருதாணி வைத்து சிவந்த இருந்த கைகளால் அவிழ்த்து கெண்டு இருக்க ரிச்சர்ட்டின் கண்கள் முதலில் அவள் நீளக்கூந்தலில் தான் படர்ந்தது அதன் பின் அவளின் மாசுமருவற்ற முகத்தை பார்த்தவனின் கண்கள் இன்னும் கீழே சென்று அவனின் இளமை கனிகளில் மையலுடன் படிந்தது அவளின் வெந்நிற இடை அதிலிருந்த சிறிய மச்சம் அவளின் கூர் நாசியில் மின்னிய வைர மூக்குத்தி அவளின் தடித்த செவ்விதழ்களை பார்த்தவன் அவளை தன் பழுப்பு நிற கண்களால் வருடிக் கொண்டே அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான் இதுவரை எந்த பெண்ணாலும் அசைக்க முடியாத இரும்பை போன்ற இதயத்தை அவளின் பெண்மையின் முன்பு நிற்க முடியாமல் சலனப்படுத்த தான் செய்தது அது ஆசையா இல்லை அவள் மேல் இருந்த உரிமை உணர்வா என்று அவனுக்கே தெரியவில்லை ஒரு நொடி கூட கண் இமைக்காமல் அவளை பார்த்தவன் தன் மனதில் ‘ஏன்ஜல்' என்று அவளை வர்ணித்தான்.
1 month ago | [YT] | 131
View 0 replies
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/SOrCc1AlTgU
1940களின் தமிழ்நாட்டில், அழகிய ஜமீன்தார் மகள் மீனாட்சியை இளம் பிரிட்டிஷ் கலெக்டர் ரிச்சர்ட் காதலிக்கிறார்.
அவரின் திருமணக் கோரிக்கையை ஜமீன்தார் குடும்பம் உறுதியாக நிராகரிக்கிறது.
இதனால் குடும்பம் முழுவதும் பயமும் பதற்றமும் சூழ, மீனாட்சி மனவே*தனையில் த*ற்கொ*லைக்கு முயற்சிக்கிறாள்.
குடும்பத்தினர் அவளை காப்பாற்றி, ரிச்சர்டிடமிருந்து பாதுகா*க்க ரகசியமாக தப்பிக்கத் திட்டமிடுகிறார்கள்.
நள்ளிரவில் வேடமணிந்து மாளிகையை விட்டு தப்பிச் செல்லும் மீனாட்சியுடன் கதையின் அடுத்த பரபரப்பான அத்தியாயம் தொடங்குகிறது
1 month ago | [YT] | 124
View 0 replies
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/1Hkp5D26sE8
எழுத்தாளர் தீரன் தீராவின் மன்னவன் பார்வையிலே முழு நாவலை கவி பாலா குரலில் கேட்டு மகிழுங்கள்.
நந்தினியை தாத்தா பாட்டி அன்பாக வளர்க்கிறார்கள்.
கோபக்கார போலீஸ் அதிகாரியான வீராவை பார்த்தாலே நந்தினிக்கு பயம் அதிகம்.
அருணின் நட்பில் சந்தோஷமாக வாழும் நந்தினியின் வாழ்க்கை, வீரா ஊருக்கு வந்ததும் மாறுகிறது.
வீராவின் கடுமையான கட்டுப்பாடுகள் நந்தினியை அடிக்கடி சிரமத்தில் தள்ளுகின்றன.
குடும்ப உறவுகள், பாசம் மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் நிறைந்த உணர்ச்சிப்பூர்வமான கதை இது.
1 month ago | [YT] | 39
View 0 replies
Theeran Theera Tamil Audio Novels
https://youtu.be/Qeq_RcOIvmE
Paper Space FM Presents Katren Kadhalai
அடுத்த நாள் நேரத்திலேயே குலத்தெய்வ கோவிலுக்கு புதுமணத் தம்பதிகள் பொங்கல் வைக்க போக வேண்டும் என்று வடிவுக்கரசி சொல்லியிருந்தார். எனவே படம் முடிந்து வந்ததும் ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் முறுவலித்தவாறு படுத்து உறங்கினர்.
அடுத்த நாள் காலையில் எழுந்த வெற்றி சுஜாதாவை எழுப்பி விடலாம் என்றுத் திரும்பிய பொழுது அவள் அவளது படுக்கையில் இல்லாதிருப்பதைக் கண்டான். அதே நேரத்தில் குளியலறையில் இருந்து நீர் விழும் சத்தம் கேட்கவும், புன்னகைத்தவனாய், அவனது போர்வையை மட்டுமில்லாது அவளோடதையும் வழக்கம் போல் மடித்துவிட்டு கீழே சென்றான். கீழே அனைவருமே கிளம்புவதற்காக ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். வடிவுக்கரசி குலத்தெய்வ பூஜைக்கு தேவையான பொருட்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் தாயைப் பற்றி நன்கு அறிந்த வெற்றி வேண்டுமென்றே, அவருக்கு உதவி செய்கிறேன் என்று அந்த பொருட்களைத் தொடப் போகவும், "குளித்துவிட்டு வா.." என்று அவனை அனுப்பி வைத்தார். முகத்தில் சிரிப்புடன் தன் அறைக்கு வந்த வெற்றி, அங்கு சுஜாதாவைக் கண்டதும் மேலும் சிரிப்பு மலர்ந்தது.
பட்டுப்புடவை கட்டிக் கொண்டு தயாராகி நின்றாள். அவன் உள்ளே நுழைந்ததும், "இன்னும் நீங்க ரெடியாகலையா..! நான் எப்போவோ குளிச்சுட்டு வந்துட்டேன். சீக்கிரம் போங்க.." என்று அதட்டினாள். வெற்றிக்கு எனோ சிரிப்பு தான் வந்தது.
2 months ago | [YT] | 22
View 0 replies
Load more