விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! _________________________________
பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான பேரா.சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தொண்ணூறு வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றாலும் அவர் இன்று நம்மிடையே இல்லை என்பது கவலையளிக்கிறது. காலமான அய்யாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
பேரா.சாலமன் பாப்பையா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கியங்களில் அவருக்கு ஏற்பட்ட மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்நூல்களை எளிய நடையிலும், நகைச்சுவையோடும் மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளார்.
திருக்குறள்,புறநானூறு,அகநானூறு மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரைநடைகள் எழுதி உள்ளார்.
ஒரு காலத்தில் பட்டிமன்றம் என்றாலே இராமாயணம், மகாபாரதம் போன்ற தலைப்புகளில் மட்டுமே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நடைபெற்று வந்தன. அதனை உடைத்தெறிந்து ஆண் - பெண், குடும்பம், கல்வி, பொருளாதாரம் போன்ற சமூகம் சார்ந்த ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வட்டார வழக்கு மொழியில் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களை வழி நடத்தி வந்துள்ளார். ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் பட்டிமன்றங்களில் அவர் பங்கேற்றுள்ளார் என்பது அளப்பரிய சாதனையாகும்.
பட்டிமன்றத்தை தொடங்கும் போது அன்பு பெரியோர்களே!, அருமைத் தாய்மார்களே!, இனிய குழந்தைகளே; என்று விளிக்கும் வழக்கத்தை அவருக்கென தனித்த அடையாளமாக வைத்துக் கொண்டார்.
பல்வேறு நாடுகளுக்கு தமிழ்ச் சங்கங்களால் அழைக்கப்பட்டு உரையாற்றும் வாய்ப்புகளை பெற்றவர். அவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி பல்வேறு இயக்கங்கள், இலக்கிய அமைப்புகள் அவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. அத்துடன்,தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
எளிய மக்களின் தமிழ்ச் சொல்லாடல்களை பட்டிமன்றத்தின் வாயிலாக தமிழுலகிற்கு கொண்டு சேர்த்த பெருமை கொண்டவர். அத்தகைய தமிழ்ப் பெருந்தகை பேரா.சாலமன் பாப்பையா மறைவென்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
ஆகவே,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட ஊமைகளில் குரலாய் ஒலிக்கின்ற ஒப்பற்ற தலைவர் எழுச்சித் தமிழர் தொல்காப்பியர். திருமாவளவன். 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️👍🏻👍🏻👍🏻👍🏻
VCK TAMILNADU
17 hours ago | [YT] | 599
View 15 replies
VCK TAMILNADU
1 day ago | [YT] | 852
View 20 replies
VCK TAMILNADU
youtube.com/shorts/RBPiNeNBPs...
2 days ago | [YT] | 762
View 9 replies
VCK TAMILNADU
2 days ago | [YT] | 1,039
View 7 replies
VCK TAMILNADU
3 days ago | [YT] | 1,583
View 23 replies
VCK TAMILNADU
பேரா.சாலமன் பாப்பையா மறைவு:
___________________________
தமிழ் கூறும் நல்லுலகிற்கு நேர்ந்த பேரிழப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
_________________________________
பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான பேரா.சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தொண்ணூறு வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றாலும் அவர் இன்று நம்மிடையே இல்லை என்பது கவலையளிக்கிறது. காலமான அய்யாவுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
பேரா.சாலமன் பாப்பையா அவர்கள்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கியங்களில் அவருக்கு ஏற்பட்ட மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்நூல்களை எளிய நடையிலும், நகைச்சுவையோடும் மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளார்.
திருக்குறள்,புறநானூறு,அகநானூறு மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரைநடைகள் எழுதி உள்ளார்.
ஒரு காலத்தில் பட்டிமன்றம் என்றாலே இராமாயணம், மகாபாரதம் போன்ற தலைப்புகளில் மட்டுமே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நடைபெற்று வந்தன. அதனை உடைத்தெறிந்து ஆண் - பெண், குடும்பம், கல்வி, பொருளாதாரம் போன்ற சமூகம் சார்ந்த ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வட்டார வழக்கு மொழியில் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களை வழி நடத்தி வந்துள்ளார். ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் பட்டிமன்றங்களில் அவர் பங்கேற்றுள்ளார் என்பது அளப்பரிய சாதனையாகும்.
பட்டிமன்றத்தை தொடங்கும் போது அன்பு பெரியோர்களே!, அருமைத் தாய்மார்களே!, இனிய குழந்தைகளே; என்று விளிக்கும் வழக்கத்தை அவருக்கென தனித்த அடையாளமாக வைத்துக் கொண்டார்.
பல்வேறு நாடுகளுக்கு தமிழ்ச் சங்கங்களால் அழைக்கப்பட்டு உரையாற்றும் வாய்ப்புகளை பெற்றவர். அவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி பல்வேறு இயக்கங்கள், இலக்கிய அமைப்புகள் அவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. அத்துடன்,தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
எளிய மக்களின் தமிழ்ச் சொல்லாடல்களை பட்டிமன்றத்தின் வாயிலாக தமிழுலகிற்கு கொண்டு சேர்த்த பெருமை கொண்டவர். அத்தகைய தமிழ்ப் பெருந்தகை பேரா.சாலமன் பாப்பையா மறைவென்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
ஆகவே,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
11-9-20
5 days ago | [YT] | 568
View 10 replies
VCK TAMILNADU
5 days ago | [YT] | 738
View 9 replies
VCK TAMILNADU
5 days ago | [YT] | 1,227
View 3 replies
VCK TAMILNADU
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட ஊமைகளில் குரலாய் ஒலிக்கின்ற ஒப்பற்ற தலைவர் எழுச்சித் தமிழர் தொல்காப்பியர். திருமாவளவன்.
💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️👍🏻👍🏻👍🏻👍🏻
5 days ago | [YT] | 1,216
View 9 replies
VCK TAMILNADU
6 days ago | [YT] | 1,974
View 14 replies
Load more