நான் போராளியாக இணைந்ததோடே தலை முடியை வெட்டிவிட்டேன்.அதிகமான போராளிகள் இருக்கும் இடங்களில் தலைமுடி வெட்டுவதற்கு வெளியில் இருந்து முடிவெட்டும் நபர்கள் அழைத்துவரப்படுவார்கள்
களமுனைகளில் நிற்போருக்கும் களமுனைகளோடு பணி செய்வோருக்கும் வெளியில் இருந்து நம்பிக்கையானவர்கள் ஓரிடத்துக்கு அழைத்து வரப்படுவர்.அவ்வாறு வரும் நாட்களில் அந்த பிரத்தியேக இடத்துக்குச் சென்றுதான் நாம் முடிவெட்டிக்கொள்வோம்
குறைவான போராளிகள் இருக்கும் இடங்களிலும் நிர்வாக பகுதிகளில் நிற்போரும் வெளிக்கடைகளில் சென்று முடிவெட்டிக்கொள்வர்.களமுனைகளில் முடிவெட்டுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்காத பொழுதுகளில் போராளிகள் ஒருவருக்கொருவர் கத்தரிக்கோலினால் முடிவெட்டிக்கொள்வதும் உண்டு
நாம் முகாமில் இருந்து வெளிக்கடையில் முடிவெட்ட போகும்போது பதிவு செய்த சிட்டை ஒன்றினை கொண்டு சென்று முடிவெட்டும் கடையில் கொடுத்து முடியை வெட்டுவோம்.காசாக எல்லாம் வெளிக்கடைகளில் கொடுக்கமாட்டோம்.
நாம் கொடுக்கும் பதிவு சிட்டையை முடிவெட்டுபவர்கள் தங்கள் சங்கம் ஊடாக கொடுத்து பணமாக பெற்றுக்கொள்வார்கள்
2005 ஆம் ஆண்டு மாதம் சரியான நினைவில் இல்லை.நானும் அழகுநிலாவும் முடிவெட்டுவதற்காக புதுக்குடியிருப்பு ரவுணுக்கு சென்றோம்.
அழகுநிலா என்னைப்போல கறுப்பாக இருந்தாலும் அழகான கறுப்பியாக இருந்தாள்.ஆனால் என்னைவிட கட்டையானவள்.சுகன்யா 01 இல் அடிப்படை பயிற்சி எடுத்திருந்ததோடு,அறிக்கை வேலையும் செய்துகொண்டிருந்தாள்
அழகுநிலாவை நான் அழகு என்றுதான் சுருக்கமாக கூப்பிடுவேன்.அவள் என்னை மாமா என்று கூப்பிடுவாள்.அவள் என்னை மாமா என்று அழைப்பதற்குக் காரணம் கணேஸ் மாமாவைப்போல நான் அதிகமாக கொமடி(comedy) யாக கதைக்கிறேன் என்றுதான் கணேஸ் மாமா என்று கூப்பிட்டாள்.ஆனால் மற்றையவர்களும் தன்னைப்போல் என்னை கணேஸ் மாமா என்று கூப்பிடக்கூடாதென்று கூறியவள் தனியாக மாமா என்றே கூப்பிடத் தொடங்கினாள்
கணேஸ் மாமா பல ஈழத்து குறுப்படங்களில் நடித்தவர்.வயிறு குலுங்க மக்களை சிரிக்க வைத்த ஒருவர்.தலைசிறந்த நடிகன் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார் என்பதும் ஒரு வேதனையான விடயமே
இப்போது எனது தலைமுடி நன்றாக வளர்ந்திருந்ததால் அழகையும் கூட்டிக்கொண்டு முடிவெட்டுவதற்காக சைக்கிளில் புறப்பட்டேன்.போகும்போது இருவரும் பலதும் பத்தும் கதைத்திட்டு போயிருந்தாலும் முடிவெட்டுவதற்கு முன்பு போட்டோ எடுத்துவிட்டு முடியை வெட்டுவோம் என்று கதைத்துக்கொண்டே சென்றோம்.
போட்டோ எடுக்க வேண்டும் என்று இருவரும் முகாமிலேயே திட்டமிட்ட ஒன்றுதான்.போகும்போது 200 ரூபா காசோடு சென்றோம்.
ஒரு போட்டோ கழுவி எடுப்புதற்கு எப்படியும் 40 ரூபா அல்லது 50 ரூபாதான் எடுப்பார்கள் என்று கூறியவள் வீட்டிற்கு லீவில் சென்ற சமயம் தாயார் கொடுத்த பணத்தை வைத்திருந்து இப்போது கொண்டுவந்திருந்தாள்
அப்படியே இருவரும் சென்று ஸ்ரூடியோவில் போட்டோ எடுத்துக்கொண்டோம்.இருக்கும் காசுக்கு அளவாக மூன்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.மிகுதிக்கு ஐஸ் கிறீம் குடிப்பதே எமது ஐடியாவாக இருந்தது
இருவரும் தனித்தனியே ஒவ்வொரு போட்டோவும் எடுத்து சேர்ந்து நின்று ஒரு போட்டோவுமாக மூன்று போட்டோக்களை எடுத்துவிட்டு போட்டோவை இரண்டு நாட்களின் பின்னர் வந்து வாங்குவதாக கூறிவிட்டு தலைமுடி வெட்டுவதற்காகச் சென்றோம்
அங்கு பல ஆண்கள் சிறுவர்கள் முடிவெட்டுவதற்கு காத்திருந்தார்கள்.இரண்டு நபர்கள் கடையில் தொழிலாளர்களாக முடிவெட்டுவதற்கு நின்றபோதும் அதிகமானோர் முடி வெட்டுவதற்காக காத்திருந்தனர்
கடையில் நின்றோர் நாங்கள் சென்றதும் எங்களை கூப்பிட்டு தலை முடியை வெட்டி விட்டார்கள்.அதன் பின்னர் அப்படியே சந்தை பக்கமாகச் சென்று எமது இன்னொரு தோழி தாமரையின் அம்மா மரக்கறி விற்பவர்.அவரோடும் கதைத்துவிட்டு ஐஸ்கிறீம் வாங்கி குடித்துவிட்டு முகாம் வந்தோம்
நாம் இருவரும் முகாம் வந்ததும் பொறுப்பாளர் எம்மை வரும்படி ஆள் அனுப்பியிருந்தார்.நாம் சென்றதும் "எத்தனை போட்டோ எடுத்தீர்கள்"என்று கேட்டார்
நாம் யாருக்கும் தெரியாமல் சென்று களவாக எடுத்த போட்டோ விடயத்தை யாரோ எமது பொறுப்பாளருக்கு போட்டுக்கொடுத்துவிட்டார்கள் என்று தெரிந்தது.
யாரோ ஒரு கடும் விசுவாசி நமது போதாக்காலத்துக்கு இருவருக்கும் தகடு வைத்துவிட்டார்.அதன் பின்பு நடந்த சம்பவங்கள் பல பல ......
இவ்வாறு எடுத்த போட்டோக்களில் ஒன்றுதான் இப்புகைப்படம்.அதுவும் வேறொருவர் கைகளில் இருந்தபடியால் தப்பித்துக்கொண்டது.நானும் அழகும் நின்று எடுத்த போட்டோ வட்டுவாகலோடு போய்விட்டது
எங்கட அழகுநிலா இறுதி யுத்தத்தில் களமுனையில் இராணுவத்தினருடனான,நேரடி மோதலின்போது வீரகாவியமாகிவிட்டாள்.அவளின் பணத்தில் எடுத்த இந்த ஒற்றைப் போட்டோ மட்டும் என்னிடம் பத்திரமாக உள்ளது.
எனது இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் எங்கட அழகுநிலாதான் என் கண் முன்பாக வந்துபோவாள்
துடிப்பான ஒருத்தி,ஆளுமையான ஒருத்தி,அன்பான ஒருத்தி,கறுப்பழகி.என்னை மாமா என்று அன்போடு அழைத்தவள் இன்று தனக்காக வாழாது எமக்காக விழிமூடி துயில்கொள்கின்றாள்
என்றும் எம் தோழியின் நினைவுகள் எம் மனதைவிட்டு அகலாது.என்றென்றும் அவளின் நினைவு சுமந்தவர்களாக....
யாழ்ப்பாணம் 1996 நத்தார்…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்தோத்திரம் சுவாமி கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து நான் செய்யும் இரவுப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளும்.
இவ்வருடம் நீர் பிறந்தபோது எங்கள் தேவாலயங்கள் அடைக்கப்பட்டிருந்தன. நம்முடைய வருகையின் அறிவிப்பாய் வரும் நள்ளிரவு மணியோசை கைது செய்யப்பட்டிருந்தது.
மறுதலிக்கப்பட்ட புனித இரவில் மத்தலோனா தன் தலைமுறைகளுக்காக அழுதாள். புலம்பினாள்; மன்றாடினாள்.
தீனமான தாயின் குரலின் கீழ் குருதி சிதறிக் கிடந்தது. பரிசுத்தமான அவளது கண்ணீர் விளக்கற்ற கரியதெருக்களை கழுவியோடியது.
ஊரடங்கிய இரவில் பிதாவே நீர் பிறந்தபோது எங்கள் நகரில் நாங்கள் அன்னியராய் இருந்தோம். எங்கள் முற்றங்களில் நாங்கள் மந்தைகளாக நடத்தப்பட்டோம்.
எங்களுடைய கிராமங்கள் திருடப்பட்டன; வரலாற்றின் பூளோகப்பரப்பிலிருந்து துடைத்தெறியப்பட்டன. வெற்றிப் பிரகடனக் கூச்சல்களால் என்பட்டினம் அவமானப்படுத்தப்பட்டது.
பிதாவே. உம்முடைய சனங்களெல்லாம் சிதறிப்போனார்கள். அவர்களது வீடுகள் வெறிச்சோடிப்போயுள்ளன.
அவர்களது குரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உம்முடைய தேவாலயத்தின் வழிகளெல்லாம் அவர்களது உதாசீனம் செய்யப்பட்ட துயரங்கள் குடியிருக்கின்றன.
சேவல் கூவுவதற்கு முன்பாக பேதுரு எல்லாவற்றையும் பன்முறை மறுதலித்தான்.
பிதாவே சிறைபிடிக்கப்பட்ட நகருக்குப் பாடல் இல்லை; பண்டிகை இல்லை; மகிழ்ச்சியும் இல்லை.
எனினும், நீர் பிறந்துள்ளீர் குருதியாறாத நிலத்தில் நித்யமோனத்தில் என்பதை நான் அறிவேன்.
பா. அகிலன்
It's not just human bone pieces emerge from five floors of the north. It's an undocumented evidence of the adventurous criminal history that has been trying to hide under this earth for decades.
Excavations of the third phase of the Chemmany Mass Coffin are currently underway. As of yesterday (June 12), the total number of bone parts that they recovered rose to 341, and 327 of them completely recovered. The most shocking and painful truth is that there is bone parts of infants and infants too.
But when evidence of this mass murder emerges newly, the political and social world in the South follows the extreme deadly silence. This silence is not just ignorance. It's a drinking mirror on how far the entire Sri Lankan social body has been liquidized.
The moral collapse of a liquidized society
The “humanity” of a society can be measured by the ability to understand the pain and aspirations of “others” that are not belonged to, without any connection with their communal or religious identity. When a bone part of a small child emerges from Chemmany, it cannot be labeled by political ideology or racial divisions. A child is a child.
However, the emergence of a child's skull from a coffin in the north is not enough to wake up to traditional media or public social dialogue in the South is a bitter truth. We live in a morally dead society, divided humanitarian empathy and sympathy on a racial foundation. The silence of the South proves that extremely dangerous and tribal mentality that “it’s not our people buried in the North”.
Structural criminal culture and shape of state
These mass coffin pits are not isolated events. They are the visible results of the structural criminal culture that has been rooted in the Sri Lankan state structure for decades. Whichever lands of Chemmani, Suriyakanda, Mannarama or Matale, the reaction of how the state has operated everywhere is the same.
We remember how Gotabhaya Rajapaksha's "City Decoration" project, the only public memorial established in Colombo city to remember the missing and the people who were murdered. But the most uplifting and saddening situation is that the worst victims of those crime times then, the People's Liberation Front (National People's Force) which is now governing the country has now forgotten those past memories and responsibilities.
Exposing the truth to the world about criminals who committed such daring crimes, can we call ourselves a civilized society until justice is served?
The Echchilampattu massacre - a targeted attack and destruction of Tamil civilian properties & displacement of residents in May 1985. It was part of the broader 1985 Trincomalee massacres, a campaign of state-sponsored terror and land clearances aimed at driving the local Tamils!
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக 1956.06.05 அன்று தந்தை செல்வா தலைமையில் ஶ்ரீலங்காவின் பாராளுமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் சிங்கள பேரினவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் சிங்கள அரசின் ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அந்த வகையிலே, 1956.06.11 அன்று அம்பாறை மாவட்டம், கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்குப பகுதியில் அமையப் பெற்றிருந்த இங்கினியாகல கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்த 150க்கும் மேற்பட்ட தமிழர்கள்....... கல்லோயா அபிவிருத்தி அதிகார சபையின் சிங்கள ஊழியர்கள் மற்றும் கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தினூடாக குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்களினால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவமே இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக வரலாறு பதிவு செய்கிறது.
இந்த இனப்படுகொலை இடம்பெறும் போது தலைவர் பிர பாகரனுக்கு வெறும் ஒன்றரை வயது தான் ஆகியிருந்தது. தலைவர் ஆயுதம் ஏந்தியதால் தான் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் அறிவிலிகள் அறிந்து தெளிந்து கொள்ளுங்கள். ▶️▶️▶️▶️ முதலாவது தமிழ் இனப்படுகொ*லையின் 70 ஆம் ஆண்டு நினைவு நாள் 11.06.2026, இன்றாகும்.!
இலங்கை சுதந்திரமடைந்த பிறகு சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச இயந்திரத்தின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட முதலாவது பாரிய இனப்படுகொ*லையின் 70 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
ஒரு இனத்தின் வரலாறு அந்த இனத்தினரால் (மக்களால்) ஆழமாக அறியப்பட வேண்டும்; வரலாற்றை மறந்தவன் தன் வாழ்வையும் அடையாளத்தையும் இழந்தவன் ஆகிறான் என்ற உண்மையை உணர்த்தும் வரலாற்றுப் பின்னணி இது.
1949 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் D.S.சேனநாயக்கவினால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் (அம்பாறை கிராமத்தில்) 'கல்லோயா அபிவிருத்தித் திட்டம்' முன்னெடுக்கப்பட்டு, அது இங்கினியாகலை அணைக்கட்டு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளாக மாற்றப்பட்டது.
1948 முதல் 1961 வரை 'அம்பாறை' என்ற தனி நிர்வாக மாவட்டம் இருக்கவில்லை; அது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் 1960 மார்ச் 19 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 'அம்பாறை' என்ற புதிய தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, 1961 ஏப்ரல் 10 அன்றுதான் அது தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, 1978 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பதுளைக்குரிய "தெகியத்த கண்டி" பிரதேசமும் இதனுடன் இணைக்கப்பட்டு, அம்பாறை மாவட்டம் "திகாமடுல்ல" தேர்தல் மாவட்டம் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த வரலாற்றுத் துரோகம் நிகழ்ந்தபோது எந்தவொரு தமிழ் அல்லது இசுலாமிய நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
S.W.R D.. பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்த காலப்பகுதியில், 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 05 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து, கொழும்பு நாடாளுமன்றத்திற்கு முன்னாலுள்ள காலிமுகத்திடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. இதன் மீது சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையே, உரிமைப் போராட்டக் களத்தில் தமிழர்கள் சிந்திய முதல் இரத்தமாக வரலாற்றில் பதிவானது.
காலிமுகத்திடல் வன்முறையைத் தொடர்ந்து, தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான தமிழ் மக்களின் அமைதிப் போராட்டங்களை நசுக்க, கிழக்கு மாகாணத்தின் கல்லோயா மற்றும் இங்கினியாகலை பகுதிகளில் திட்டமிட்ட இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. 1956 யூன் 11 திங்கள்கிழமை தொடங்கிய இந்த வன்முறை, யூன் 16 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நீடித்தது. சிங்களக் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்க, சிங்களக் காடையர்கள் அரச வண்டிகளில் ஏறி தமிழ் மக்களின் குடியேற்றங்களை நோக்கிச் சென்று கொடூரத் தாக்குதல்களை நடத்தினர். குறிப்பாக, இங்கினியாகலை குடியேற்றத் திட்டப் பகுதியிலும், அதனைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர்கள் வன்முறைகளை எதிர்கொண்ட வேளையில், தற்காப்புக்காகத் திருப்பி அடித்த வரலாற்று நிகழ்வும் இதே காலப்பகுதியில் நிகழ்ந்தது. 1956 யூன் 13 புதன்கிழமை அன்று துறைநீலாவணை கிராமத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற சிங்களக் காடையர்கள் மற்றும் இராணுவத்தினரை நோக்கி, அக்கிராமத்துத் தமிழ் மக்கள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் வன்முறையாளர்கள் தரப்பில் இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதுவே, தாயக மண்ணில் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் நிகழ்த்திய முதலாவது தற்காப்புத் தாக்குதலாகும்.
1956 யூன் 11 இல் கல்லோயாவில் தொடங்கிய இந்த இனவழிப்பு, 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை தொடர்ந்தது. 2009 இறுதிப் போரின்போது மட்டும் 1,46,679 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்கள் வழியே வெளிப்படுத்திய போதிலும், இன்றுவரை சர்வதேசத்தினால் இக்கொலைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
ஆயுதப்போர் மௌனித்த கடந்த 17 ஆண்டுகாலமாக, நேரடிப் படுகொலைகள் நிகழாவிட்டாலும், தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பண்பாட்டுச் சிதைப்பு என *கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide)* இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எழுபது ஆண்டுகளைக் கடந்தும் நீதிக்காகத் தொடரும் இந்த வரலாற்றுப் பதிவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நமது கடமையாகும்.
1991 ஜூன் 12 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான படுகொலை நிகழ்வே கொக்கட்சிச்சோலை படுகொலைகள் ஆகும்
இலங்கையில் சிங்கள இனவாத அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர சம்பவத்தின் முழு விவரமாவது
மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் கூலித் தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர்
1991 ஜூன் 12 அன்று கொக்கட்டிச்சோலை பகுதியில் அத்துமீறி சென்ற இலங்கை இராணுவத்தினர் மீது புலிகள் நிலக்கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர் இந்தத் தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மேலும் இருவர் காயமடைந்தனர்
இராணுத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் அருகில் உள்ள முகாம்களில் இருந்து இராணுவத்தினர் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகிழடித்தீவு போன்ற கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்தனர் அங்கு தப்பியோட முடியாதபடி தமிழ் பொதுமக்களை வளைத்து பிடித்து கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடங்கினர்
ஆண்கள் பெண்கள் முதியவர்கள் எனப் பார்க்காமல் இயந்திரத் துப்பாக்கிகள் கத்திகள் மற்றும் கோடாரிகளால் மக்கள் கொடூரமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்
மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையின் படி பல தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்
மக்களின் வீடுகள் நெற்களஞ்சியங்கள் மற்றும் உடமைதள் தீக்கிரையாக்கப்பட்டன சுமார் 67 வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலும் எரிக்கப்பட்டன
இந்த கொடூரத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 152 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களின் கடக்கெடுப்பின்படி பலி எண்ணிக்கை 152 ஆக இருந்த போதிலும் அப்போதைய சிங்கள பெரும்பான்மை காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெறும் 32 மரணங்கள் மட்டுமே பதிவு செய்து உண்மைகளை மறைக்க முயன்றது
சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா இப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார் ஆணைக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் தனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த தவறியதாக அந்தப் பிரிவின் கட்டளை அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரை பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது
இந்த ஒட்டுமொத்த படுகொலை மற்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் என்று 19 இலங்கை இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் உடமைகளை இழந்தவர்களுக்கும் சுமார் 5.25 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணைக்குழு பரிந்துரைத்தது
ஜனாதிபதி ஆணைக்குழு 19 இராணுவ வீரர்களை குற்றவாளிகள் என அடையாளம் காட்டிய போதிலும் அவர்களுக்கு இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது கொழும்பில் நடைபெற்ற இந்த இராணுவ விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட 19 இராணுத்தினரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்
இதன் காரணமாக இந்த படுகொலைக்கு இன்றுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை
கொக்கட்டிச்சோலையில் இதற்கு முன்னதாகவே 1987 ஆம் ஆண்டும் ஒரு பெரிய இறால் பண்ணைப் படுகொலை நிகழ்ந்திருந்தது அதில் 87 பேர் படுகொலை செய்யப்பட்டனர் இந்த இரண்டு பெரிய படுகொலைகளையும் உயிரிழந்த அப்பாவிகளையும் நினைவு கூரும் வகையில் கொக்கட்டிச்சோலையில் ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு ஆண்டு தோறும் ஜூன் 12 அன்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
1956 ம் ஆண்டு யூன் 11 இதே நாள் - அதாவது பிரபாகரன் என்ற குழந்தைக்கு இரண்டு வயதாக இருக்கும் போது சிங்களவர்கள் தமிழர்கள் மீது முதல் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட 'கல்லோயாப் படுகொலைகளின்' எழுபதாவது நினைவு நாள் இன்று.
சிங்கள காவல்துறையோ, இராணுவமோ தலையிடாமல் முழுக்க முழுக்க சிங்கள மக்களே இந்த இனப்படுகொலையை நிகழ்த்தினார்கள்.
சிங்கள மக்கள் யோக்கியர்கள் - புலிகள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று இன்றும் அறளை பெயர்ந்து போய்க் கதைக்கும் நம்மவர்கள் மறந்து போன வரலாறு இது.
83 யூலை இன அழிப்பின் போதும் வெளியிலும், சிறைச்சாலையிலும் இன அழிப்பு அரசு பாதுக்காப்புக் கொடுக்க சாதாரண சிங்கள மக்கள்தான் படுகொலைகளை நிகழ்த்தினார்கள்.
இதை ஏன் இப்போது அழுத்தமாக நினைவூட்ட வேண்டியிருக்கிறதென்றால் கிட்டத்தட்ட புலிகளின் எழுச்சியின் விளைவாக ( இதன் கோட்பாட்டுப் பின்னணி குறித்து முன்பே எழுதியிருக்கிறேன்) 25 வருடங்கள் அடங்கி, அமைதியாக இருந்த சிங்கள மக்கள் 2009 இற்குப் பிறகு தற்போது மீண்டும் இரத்த வெறி கொண்டு அலைகிறார்கள். எந்த நேரமும் ஒரு கல்லோயா, கறுப்பு யூலை தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் பேரபாயம் கண்முன் தெரிகிறது.
இதன் சமீபத்திய உதாரணம் சமூகவலைத் தளங்களில் இலட்சக்கணக்கில் ஒன்று திரண்டு வந்து தமிழர்கள் மீது வன்முறையக் கக்கும் சிங்கள கூட்டு உளவியல்.
வடக்கு கிழக்கில் இந்த வன்முறைக்கான வாய்ப்புக் குறைவு. சுயநலம் கருதி சிங்களத்திற்கு ஒத்தூதி, காலிமுகத்திடலில் திரண்ட தென் இலங்கை தமிழ் மேட்டுக்குடி கனவான் மன நிலை கொண்ட தமிழர்கள்தான் அனேகமாக இதன் இலக்காக இருப்பார்கள். அவர்கள் சிங்கள இனவாதத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர்கள் உயிர் பிடுங்கப்பட்டு இருக்கும்.
மறுவளமாக பிரிந்து சென்று சுய ஆட்சியமைக்கும் எமது போராட்டத்தின் கடைசி இரத்தப் பலியாகவும் இதுதான் இருக்கும் என்பது இதன் துயரமான பேருண்மையும் கூட. Copy
Tamils mark 70 years since the Gal Oya massacre in Amparai
A commemoration marking the 70th anniversary of the first massacre of Tamils in Amparai was held on Thursday at the American Mission Hall in Batticaloa, with participants paying tribute to the victims through candle lighting, floral tributes and a two-minute silence.
The event was organised by Sivayogan, an activist of the civil society collective, and brought together former Member of Parliament P. Ariyanendran, former Batticaloa Municipal Council Mayor T. Saravanabavan, a pastor from the American Mission Church and members of the public. Attendees reaffirmed the importance of remembrance for historical justice and accountability.
The massacre being commemorated took place in June 1956 in the Gal Oya valley of the Amparai district, and is widely regarded as the first organised anti-Tamil pogrom in the history of independent Ceylon. It unfolded against the backdrop of one of the most consequential pieces of legislation in the island's post-independence history.
உருத்தெரியாத சடலங்கள் ******************************* அவரா இவர் ? **************** இலங்கையில் இன்று அதிகம் பேசப்படும் நபர்களுள் ஒருவராக அரச புலனாய்வுச் சேவை ( SIS ) இன் முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஷ் சாலே உள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இவர் மீதும் பாய்ந்துள்ளது. உள்ளே சித்திரவதை செய்கின்றனர் என்று கூறி அதற்கெதிராக உண்ணாவிரதம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். அவர் நல்லவர் & அப்பாவி என்று சிலர் முழங்கியபடி கொழும்பில் போராட்டம் செய்து அவரை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.
யாருக்காவது உதவக்கூடும் என்பதால் இத்தருணத்தில் என் அனுபவம் ஒன்றைப் பொதுவில் பகிர்கிறேன்.
2008 ஜூன் மாதம் 14 இல் கொழும்பில் வெள்ளைவான் மூலம் நான் கடத்தப்பட்டு இரகசிய இடமொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டேன். நான்கு நாள் கழித்து ஜூன் 18 இல் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.
இரத்த வாடை கலந்து துர்நாற்றம் வீசும் உடையுடன் தரையில் இருந்த என்னை கதிரையில் இருக்கச் சொன்னார். வன்முறையற்ற வார்த்தைகளுடன் மிகவும் மென்மையாக ஒரு மணிநேரம் என்னுடன் உரையாடினார். இனவாதமற்ற இலங்கை பற்றியும் பேசினார். உரையாடலின் இறுதிக் கட்டம் வந்தது.
அவர் சொன்னார். " என்னைக் கடத்திய செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் வந்துவிட்டது. இனிமேல் என்னைச் சும்மா விட முடியாது. அதனால் தற்கொலை அங்கியுடன் தொடர்பான ஏதேனும் ஒரு சம்பவத்தைக் கூறிக் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால் உயிருடன் விடமுடியும். இல்லையென்றால் இன்றிரவு அவிசாவளையில் மதகு ஒன்றின் கீழ் உருத்தெரியாத சடலமாக்கி வீசிவிடுவார்கள். நம்மாட்கள் குடிபோதையில் அதற்குத் தயாராகிவிட்டனர். இன்னும் ஒரு மணிநேரம் தருகிறேன். நன்றாக யோசித்து முடிவைச் சொல். "
அந்த நாள்களில் உருத்தெரியாத சடலங்கள் அவிசாவளையில் வீசப்படுவது அடிக்கடி ஊடகச் செய்தியாக வந்ததை அப்பொழுது நான் அறிந்திருந்தேன். ▶️
குறிப்பிட்ட காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டு வாக்கில்) இலங்கையின் முக்கிய புலனாய்வுத் துறையான **மாநில உளவுச் சேவை (State Intelligence Service - SIS)** இன் பணிப்பாளராக (Director) இருந்தவர் இவர்தான். இவருடைய பெயர் **திரு. துவான் சுரேஷ் சாலி (Tuan Suresh Sallay)**. இவர் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் (Brigadier) அந்தஸ்தில் இருந்த ஒரு சிரேஷ்ட அதிகாரி ஆவார், பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவிலும் (Directorate of Military Intelligence - DMI) மற்றும் மாநில உளவுச் சேவையிலும் (SIS) முக்கிய தலைவராகப் பணியாற்றினார்.
Is this him? ******************** One of the most talked about figures in Sri Lanka today is the former Director of the State Intelligence Service (SIS). The Prevention of Terrorism Act has also been invoked against him. He was hospitalized after going on a hunger strike, claiming that he was being tortured inside. Some people are protesting in Colombo, saying that he is good and innocent and demanding his release.
I am sharing my experience publicly at this time because it may help someone.
On June 14, 2008, I was abducted in a white van in Colombo, locked up in a secret location and tortured. Four days later, on June 18, the Director of the State Intelligence Service came to meet me.
I was on the ground with the smell of blood and bad smelling clothes, and he asked me to lie down in the sun. He talked to me for about an hour with non-violent words. He also talked about a non-racist Sri Lanka. The final stage of the conversation came.
He said. "The news of my kidnapping has been broadcast on television. I cannot be left alone any longer. So if I confess to the crime by mentioning some incident related to the suicide vest, I can be released alive. Otherwise, they will throw me as an unidentified dead body under a dam in Avissawella tonight. Our people are drunk and ready for it. I will give you another hour. Think carefully and decide."
I knew that unidentified dead bodies were often thrown in Avissawella, as reported by the media in those days.
ஈழத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை உருவாக்குவோம் என்ற முழக்கத்தொடு தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தமித் திரையுலகம் இன்று நடத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகத்தினர் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மிகப் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு பிரிவினர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்யும் மகிந்த ராஜபக்சவே தமிழ்நாட்டுக்கு கைது செய்து சிறையில் அடைக்கும் காலமும் வரும்-
தமீழத் தமிழர்களுக்கான தனி நாட்டை உருவாக்குவோம் என்றும் அறைகூவல் விடுத்தனர்.
தமிழ்த் திரையுலக பிரமுகர்களான இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், சீமான், அமீர் மற்றும் இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. ராஜேந்தர் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் இன உணர்வுப்பூர்வமாக உரையாற்றினர். -2008
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️ 2008-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது.
அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து,
"எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்று பகிர்ந்த பாரதிராஜா, பிரபாகரனுக்கு தன் மீதிருந்த அன்பு குறித்து... மண்வாசனை’ படம் வெளியானபோது மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போதே உங்களைச் சந்திக்க முயற்சித்தேன். பின்னொரு முறை வீரமணி அண்ணனிடம் சொல்லி சந்திக்க முயற்சித்தேன். முடியாமல் போய்விட்டது. நான் உங்கள் ரசிகன். நீங்கள் வருகிறீர்கள் என்றதும் உங்களிடம் பேசுவதற்காக ‘கண்களால் கைது செய்’ படம் வரை அத்தனைப் படங்களையும் போட்டுப் பார்த்தேன்’ என்றார் பிரபாகரன்" என்று கூறியிருக்கிறார்.
"அது அமைதிக்காலம். திருமாவளவனும் அப்போது அங்குதான் இருக்கிறார் என்று சொன்னார்கள். ரெண்டு நாள் இளைஞர்களுக்கு நான் சினிமா குறித்து வகுப்பெடுத்தேன். ‘எங்கள் பிள்ளைகளுக்கு முழுமையான வகுப்பெடுக்க வேணும்’னார். நான், ‘எங்கெங்கோ ஷூட்டிங்கில இருப்பேன்’னேன். ‘நீங்கள் இடத்தைச் சொல்லுங்கள். விசா இல்லாமல் எங்கள் பிள்ளைகள் அங்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்’ என்றார். ‘நான் ஒரு சராசரி மனிதன். எனக்கு சில குடும்பக் கடமைகள் இருக்கு. அதை முடிச்சுட்டு கண்டிப்பா வர்றேன். இங்கேயே வந்து தங்கி இருந்து வகுப்பெடுக்கிறேன். படமும் எடுக்கிறேன்’னேன்" என்று விவரித்தவர், பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து தொடர்கிறார்... எனக்கு அப்போது அந்தத் தீவிர உணர்வு இருந்தது. என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டது. காலங்கள் ஓடிவிட்டன. எவ்வளவு பெரிய வீரர்கள் அந்த இளைஞர்கள். பெண் புலிகளைப் பார்த்து வியந்துபோயிருக்கிறேன். அவர்களைப்போல் போராளிகளைப் பார்ப்பது அரிது. இங்கிருந்துகொண்டு, நாம் தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுகிறோம். ஆனால், இனம், மொழி, நிலம், குறித்துப் பேச கூடுதல் உரிமை கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள்தான். ஈழப்பிரச்னை குறித்து படம் ஒன்றை இயக்கித் தரச் சொல்லி பிரபாகரன் கேட்டிருந்தார். உண்மையில், பிரபாகரனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது" என்று முடித்தார்.
single reel
அழகுநிலாவும் நானும்....
நான் போராளியாக இணைந்ததோடே தலை முடியை வெட்டிவிட்டேன்.அதிகமான போராளிகள் இருக்கும் இடங்களில் தலைமுடி வெட்டுவதற்கு வெளியில் இருந்து முடிவெட்டும் நபர்கள் அழைத்துவரப்படுவார்கள்
களமுனைகளில் நிற்போருக்கும் களமுனைகளோடு பணி செய்வோருக்கும் வெளியில் இருந்து நம்பிக்கையானவர்கள் ஓரிடத்துக்கு அழைத்து வரப்படுவர்.அவ்வாறு வரும் நாட்களில் அந்த பிரத்தியேக இடத்துக்குச் சென்றுதான் நாம் முடிவெட்டிக்கொள்வோம்
குறைவான போராளிகள் இருக்கும் இடங்களிலும் நிர்வாக பகுதிகளில் நிற்போரும் வெளிக்கடைகளில் சென்று முடிவெட்டிக்கொள்வர்.களமுனைகளில் முடிவெட்டுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்காத பொழுதுகளில் போராளிகள் ஒருவருக்கொருவர் கத்தரிக்கோலினால் முடிவெட்டிக்கொள்வதும் உண்டு
நாம் முகாமில் இருந்து வெளிக்கடையில் முடிவெட்ட போகும்போது பதிவு செய்த சிட்டை ஒன்றினை கொண்டு சென்று முடிவெட்டும் கடையில் கொடுத்து முடியை வெட்டுவோம்.காசாக எல்லாம் வெளிக்கடைகளில் கொடுக்கமாட்டோம்.
நாம் கொடுக்கும் பதிவு சிட்டையை முடிவெட்டுபவர்கள் தங்கள் சங்கம் ஊடாக கொடுத்து பணமாக பெற்றுக்கொள்வார்கள்
2005 ஆம் ஆண்டு மாதம் சரியான நினைவில் இல்லை.நானும் அழகுநிலாவும் முடிவெட்டுவதற்காக புதுக்குடியிருப்பு ரவுணுக்கு சென்றோம்.
அழகுநிலா என்னைப்போல கறுப்பாக இருந்தாலும் அழகான கறுப்பியாக இருந்தாள்.ஆனால் என்னைவிட கட்டையானவள்.சுகன்யா 01 இல் அடிப்படை பயிற்சி எடுத்திருந்ததோடு,அறிக்கை வேலையும் செய்துகொண்டிருந்தாள்
அழகுநிலாவை நான் அழகு என்றுதான் சுருக்கமாக கூப்பிடுவேன்.அவள் என்னை மாமா என்று கூப்பிடுவாள்.அவள் என்னை மாமா என்று அழைப்பதற்குக் காரணம் கணேஸ் மாமாவைப்போல நான் அதிகமாக கொமடி(comedy) யாக கதைக்கிறேன் என்றுதான் கணேஸ் மாமா என்று கூப்பிட்டாள்.ஆனால் மற்றையவர்களும் தன்னைப்போல் என்னை கணேஸ் மாமா என்று கூப்பிடக்கூடாதென்று கூறியவள் தனியாக மாமா என்றே கூப்பிடத் தொடங்கினாள்
கணேஸ் மாமா பல ஈழத்து குறுப்படங்களில் நடித்தவர்.வயிறு குலுங்க மக்களை சிரிக்க வைத்த ஒருவர்.தலைசிறந்த நடிகன் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார் என்பதும் ஒரு வேதனையான விடயமே
இப்போது எனது தலைமுடி நன்றாக வளர்ந்திருந்ததால் அழகையும் கூட்டிக்கொண்டு முடிவெட்டுவதற்காக சைக்கிளில் புறப்பட்டேன்.போகும்போது இருவரும் பலதும் பத்தும் கதைத்திட்டு போயிருந்தாலும் முடிவெட்டுவதற்கு முன்பு போட்டோ எடுத்துவிட்டு முடியை வெட்டுவோம் என்று கதைத்துக்கொண்டே சென்றோம்.
போட்டோ எடுக்க வேண்டும் என்று இருவரும் முகாமிலேயே திட்டமிட்ட ஒன்றுதான்.போகும்போது 200 ரூபா காசோடு சென்றோம்.
ஒரு போட்டோ கழுவி எடுப்புதற்கு எப்படியும் 40 ரூபா அல்லது 50 ரூபாதான் எடுப்பார்கள் என்று கூறியவள் வீட்டிற்கு லீவில் சென்ற சமயம் தாயார் கொடுத்த பணத்தை வைத்திருந்து இப்போது கொண்டுவந்திருந்தாள்
அப்படியே இருவரும் சென்று ஸ்ரூடியோவில் போட்டோ எடுத்துக்கொண்டோம்.இருக்கும் காசுக்கு அளவாக மூன்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.மிகுதிக்கு ஐஸ் கிறீம் குடிப்பதே எமது ஐடியாவாக இருந்தது
இருவரும் தனித்தனியே ஒவ்வொரு போட்டோவும் எடுத்து சேர்ந்து நின்று ஒரு போட்டோவுமாக மூன்று போட்டோக்களை எடுத்துவிட்டு போட்டோவை இரண்டு நாட்களின் பின்னர் வந்து வாங்குவதாக கூறிவிட்டு தலைமுடி வெட்டுவதற்காகச் சென்றோம்
அங்கு பல ஆண்கள் சிறுவர்கள் முடிவெட்டுவதற்கு காத்திருந்தார்கள்.இரண்டு நபர்கள் கடையில் தொழிலாளர்களாக முடிவெட்டுவதற்கு நின்றபோதும் அதிகமானோர் முடி வெட்டுவதற்காக காத்திருந்தனர்
கடையில் நின்றோர் நாங்கள் சென்றதும் எங்களை கூப்பிட்டு தலை முடியை வெட்டி விட்டார்கள்.அதன் பின்னர் அப்படியே சந்தை பக்கமாகச் சென்று எமது இன்னொரு தோழி தாமரையின் அம்மா மரக்கறி விற்பவர்.அவரோடும் கதைத்துவிட்டு ஐஸ்கிறீம் வாங்கி குடித்துவிட்டு முகாம் வந்தோம்
நாம் இருவரும் முகாம் வந்ததும் பொறுப்பாளர் எம்மை வரும்படி ஆள் அனுப்பியிருந்தார்.நாம் சென்றதும் "எத்தனை போட்டோ எடுத்தீர்கள்"என்று கேட்டார்
நாம் யாருக்கும் தெரியாமல் சென்று களவாக எடுத்த போட்டோ விடயத்தை யாரோ எமது பொறுப்பாளருக்கு போட்டுக்கொடுத்துவிட்டார்கள் என்று தெரிந்தது.
யாரோ ஒரு கடும் விசுவாசி நமது போதாக்காலத்துக்கு இருவருக்கும் தகடு வைத்துவிட்டார்.அதன் பின்பு நடந்த சம்பவங்கள் பல பல ......
இவ்வாறு எடுத்த போட்டோக்களில் ஒன்றுதான் இப்புகைப்படம்.அதுவும் வேறொருவர் கைகளில் இருந்தபடியால் தப்பித்துக்கொண்டது.நானும் அழகும் நின்று எடுத்த போட்டோ வட்டுவாகலோடு போய்விட்டது
எங்கட அழகுநிலா இறுதி யுத்தத்தில் களமுனையில் இராணுவத்தினருடனான,நேரடி மோதலின்போது வீரகாவியமாகிவிட்டாள்.அவளின் பணத்தில் எடுத்த இந்த ஒற்றைப் போட்டோ மட்டும் என்னிடம் பத்திரமாக உள்ளது.
எனது இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் எங்கட அழகுநிலாதான் என் கண் முன்பாக வந்துபோவாள்
துடிப்பான ஒருத்தி,ஆளுமையான ஒருத்தி,அன்பான ஒருத்தி,கறுப்பழகி.என்னை மாமா என்று அன்போடு அழைத்தவள் இன்று தனக்காக வாழாது எமக்காக விழிமூடி துயில்கொள்கின்றாள்
என்றும் எம் தோழியின் நினைவுகள் எம் மனதைவிட்டு அகலாது.என்றென்றும் அவளின் நினைவு சுமந்தவர்களாக....
#பிரபா அன்பு
தமிழேந்தி
அகநங்கை
கலையரசி
12 hours ago | [YT] | 21
View 2 replies
single reel
யாழ்ப்பாணம் 1996 நத்தார்…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்தோத்திரம் சுவாமி கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து நான் செய்யும் இரவுப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளும்.
இவ்வருடம் நீர் பிறந்தபோது எங்கள் தேவாலயங்கள் அடைக்கப்பட்டிருந்தன. நம்முடைய வருகையின் அறிவிப்பாய் வரும் நள்ளிரவு மணியோசை கைது செய்யப்பட்டிருந்தது.
மறுதலிக்கப்பட்ட புனித இரவில் மத்தலோனா தன் தலைமுறைகளுக்காக அழுதாள். புலம்பினாள்; மன்றாடினாள்.
தீனமான தாயின் குரலின் கீழ் குருதி சிதறிக் கிடந்தது. பரிசுத்தமான அவளது கண்ணீர் விளக்கற்ற கரியதெருக்களை கழுவியோடியது.
ஊரடங்கிய இரவில் பிதாவே நீர் பிறந்தபோது எங்கள் நகரில் நாங்கள் அன்னியராய் இருந்தோம். எங்கள் முற்றங்களில் நாங்கள் மந்தைகளாக நடத்தப்பட்டோம்.
எங்களுடைய கிராமங்கள் திருடப்பட்டன; வரலாற்றின் பூளோகப்பரப்பிலிருந்து துடைத்தெறியப்பட்டன. வெற்றிப் பிரகடனக் கூச்சல்களால் என்பட்டினம் அவமானப்படுத்தப்பட்டது.
பிதாவே. உம்முடைய சனங்களெல்லாம் சிதறிப்போனார்கள். அவர்களது வீடுகள் வெறிச்சோடிப்போயுள்ளன.
அவர்களது குரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உம்முடைய தேவாலயத்தின் வழிகளெல்லாம் அவர்களது உதாசீனம் செய்யப்பட்ட துயரங்கள் குடியிருக்கின்றன.
சேவல் கூவுவதற்கு முன்பாக பேதுரு எல்லாவற்றையும் பன்முறை மறுதலித்தான்.
பிதாவே சிறைபிடிக்கப்பட்ட நகருக்குப் பாடல் இல்லை; பண்டிகை இல்லை; மகிழ்ச்சியும் இல்லை.
எனினும், நீர் பிறந்துள்ளீர் குருதியாறாத நிலத்தில் நித்யமோனத்தில் என்பதை நான் அறிவேன்.
பா. அகிலன்
1 week ago | [YT] | 7
View 0 replies
single reel
උතුරේ පස් තට්ටු අතරින් යළි යළිත් මතු වන්නේ හුදු මිනිස් අස්ථි කැබලි පමණක් නොවේ. එය දශක ගණනාවක් තිස්සේ මේ පොළොව යට සඟවා තැබීමට උත්සාහ කළ සාහසික අපරාධමය ඉතිහාසයක ලේඛනගත නොවුණු සාක්ෂි සමුදායයි.
චෙම්මනී සමූහ මිනී වළේ තෙවන අදියරේ කැණීම් මේ වන විට ක්රියාත්මක වෙමින් පවතී. ඊයේ (ජූනි 12) වන විට ඉන් ගොඩගත් සමස්ත අස්ථි කොටස් සංඛ්යාව 341ක් දක්වා ඉහළ ගොස් ඇති අතර, ඉන් 327ක්ම සම්පූර්ණයෙන් ගොඩගෙන අවසන්ය. වඩාත්ම කම්පනකාරී සහ වේදනාත්මක සත්යය නම්, ඒ අතර කුඩා දරුවන්ගේ සහ බිළිඳුන්ගේ ද අස්ථි කොටස් තිබීමයි.
නමුත් මේ මහා මනුෂ්ය ඝාතනයේ සාක්ෂි අලුතින් මතුවෙද්දී, දකුණේ දේශපාලන හා සමාජීය ලෝකය පසුවන්නේ අතිශය මාරාන්තික නිහඬතාවයකය. මෙම නිහඬතාවය හුදු නොදැනුවත්කමක් නොවේ. එය සමස්ත ලාංකීය සමාජ දේහය කෙතරම් දුරට ද්රවීකරණය වී ඇත්දැයි කියා පාන කැඩපතකි.
ද්රවීකරණය වූ සමාජයක සදාචාරාත්මක බිඳවැටීම
යම් සමාජයක “මනුෂ්යත්වය” මැනිය හැක්කේ තමන්ට අයිති නැති, තමන්ගේ වාර්ගික හෝ ආගමික අනන්යතාවයට කිසිදු අන්දමකින් හෝ නෑකම් නොකියන “අනෙකාගේ” වේදනාව සහ අභිලාෂයන් තේරුම් ගැනීමට ඇති හැකියාව මතය. චෙම්මනී වෙතින් කුඩා බිළිඳකුගේ අස්ථි කොටසක් මතු වන විට, එය කිසිසේත්ම දේශපාලන ප්රවාදයන්ගෙන් හෝ වාර්ගික බෙදීම්වලින් ලේබල් කළ නොහැක. දරුවෙකු යනු දරුවෙකි.
එහෙත්, උතුරේ මිනී වළකින් බිළිඳකුගේ හිස්කබලක් මතුවීම දකුණේ සාම්ප්රදායික මාධ්යවලට හෝ පොදු සමාජ සංවාදයට අවදි වීමට තරම් හේතුවක් නොවීම තුළ පැහැදිලි වන්නේ එක් කටුක ඇත්තකි. අප ජීවත් වන්නේ මානුෂීය සංවේදනය සහ සහකම්පනය වාර්ගික පදනම මත බෙදා වෙන් කළ, සදාචාරාත්මකව මියගිය සමාජයකය. දකුණේ නිහඬතාවය විසින් වක්රව සනාථ කරන්නේ “උතුරේ වැළලී ඇත්තේ අපේ මිනිසුන් නොවේ” යන ඒ අතිශය අන්තරායකර සහ ගෝත්රික මානසිකත්වයයි.
ව්යුහගත අපරාධමය සංස්කෘතිය සහ රාජ්යයේ හැඩය
මෙම සමූහ මිනී වළවල් හුදෙකලා සිදුවීම් නොවේ. ඒවා ශ්රී ලාංකීය රාජ්ය ව්යුහය තුළ දශක ගණනාවක් තිස්සේ මුල් බැසගෙන ඇති ව්යුහාත්මක අපරාධමය සංස්කෘතියේ දෘශ්යමාන ප්රතිඵලයන්ය. චෙම්මනී, සූරියකන්ද, මන්නාරම හෝ මාතලේ මේ කුමන භූමියකින් අස්ථි මතු වුවද, ඒ හැම තැනකදීම රාජ්යය ක්රියා කර ඇති ආකාරය සහ දක්වා ඇති ප්රතිචාරය සමානය.
අතුරුදහන් වූවන් සහ මරා දැමූ මිනිසුන් සිහි කිරීම සඳහා කොළඹ නගරයේ පිහිටුවා තිබූ එකම පොදු ස්මාරකය වූ ‘අහිංසකයින්ගේ ආරාමය’ ගෝඨාබය රාජපක්ෂගේ “නගර අලංකරණ” ව්යාපෘතිය විසින් ඩෝසර් කර විනාශ කර දැමූ ආකාරය අපට මතකය. එහෙත් වඩාත්ම උත්ප්රාසාත්මක සහ කණගාටුදායක තත්ත්වය නම්, එදා එම අපරාධ කාලයන් හී දී දරුණුතම වින්දිතයන් වූ, අද වන විට රටේ ආණ්ඩුකරණය මෙහෙයවන ජනතා විමුක්ති පෙරමුණට (ජාතික ජන බලවේගය) ද දැන් ඒ අතීත මතකයන් සහ වගවීම් අමතක වී ගොස් තිබීමයි.
මෙවන් සාහසික අපරාධ කළ අපරාධකරුවන් පිළිබඳ සත්යය ලොවට හෙළි කරමින්, ඒ සඳහා යුක්තිය ඉටු නොවන තාක් අප ශිෂ්ටසම්පන්න සමාජයක් යැයි අපටම කියාගත හැකිද?
අමතක කිරීමට එරෙහිව මතකය අවදි කිරීම
(සම්පූර්ණ ලිපිය සදහා පළමු කොමෙන්ටුවට පිවිසෙන්න)
#ChammaniMassGrave
It's not just human bone pieces emerge from five floors of the north. It's an undocumented evidence of the adventurous criminal history that has been trying to hide under this earth for decades.
Excavations of the third phase of the Chemmany Mass Coffin are currently underway. As of yesterday (June 12), the total number of bone parts that they recovered rose to 341, and 327 of them completely recovered. The most shocking and painful truth is that there is bone parts of infants and infants too.
But when evidence of this mass murder emerges newly, the political and social world in the South follows the extreme deadly silence. This silence is not just ignorance. It's a drinking mirror on how far the entire Sri Lankan social body has been liquidized.
The moral collapse of a liquidized society
The “humanity” of a society can be measured by the ability to understand the pain and aspirations of “others” that are not belonged to, without any connection with their communal or religious identity. When a bone part of a small child emerges from Chemmany, it cannot be labeled by political ideology or racial divisions. A child is a child.
However, the emergence of a child's skull from a coffin in the north is not enough to wake up to traditional media or public social dialogue in the South is a bitter truth. We live in a morally dead society, divided humanitarian empathy and sympathy on a racial foundation. The silence of the South proves that extremely dangerous and tribal mentality that “it’s not our people buried in the North”.
Structural criminal culture and shape of state
These mass coffin pits are not isolated events. They are the visible results of the structural criminal culture that has been rooted in the Sri Lankan state structure for decades. Whichever lands of Chemmani, Suriyakanda, Mannarama or Matale, the reaction of how the state has operated everywhere is the same.
We remember how Gotabhaya Rajapaksha's "City Decoration" project, the only public memorial established in Colombo city to remember the missing and the people who were murdered. But the most uplifting and saddening situation is that the worst victims of those crime times then, the People's Liberation Front (National People's Force) which is now governing the country has now forgotten those past memories and responsibilities.
Exposing the truth to the world about criminals who committed such daring crimes, can we call ourselves a civilized society until justice is served?
Forgetting vs awakening memory
(For the full article, visit the first comment)
#ChammaniMassGrave
2 weeks ago | [YT] | 8
View 0 replies
single reel
The Echchilampattu massacre - a targeted attack and destruction of Tamil civilian properties & displacement of residents in May 1985. It was part of the broader 1985 Trincomalee massacres, a campaign of state-sponsored terror and land clearances aimed at driving the local Tamils!
2 weeks ago | [YT] | 15
View 0 replies
single reel
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக 1956.06.05 அன்று தந்தை செல்வா தலைமையில் ஶ்ரீலங்காவின் பாராளுமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் சிங்கள பேரினவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் சிங்கள அரசின் ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அந்த வகையிலே, 1956.06.11 அன்று அம்பாறை மாவட்டம், கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்குப பகுதியில் அமையப் பெற்றிருந்த இங்கினியாகல கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்த 150க்கும் மேற்பட்ட தமிழர்கள்....... கல்லோயா அபிவிருத்தி அதிகார சபையின் சிங்கள ஊழியர்கள் மற்றும் கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தினூடாக குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்களினால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவமே இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக வரலாறு பதிவு செய்கிறது.
இந்த இனப்படுகொலை இடம்பெறும் போது தலைவர் பிர பாகரனுக்கு வெறும் ஒன்றரை வயது தான் ஆகியிருந்தது.
தலைவர் ஆயுதம் ஏந்தியதால் தான் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் அறிவிலிகள் அறிந்து தெளிந்து கொள்ளுங்கள்.
▶️▶️▶️▶️
முதலாவது தமிழ் இனப்படுகொ*லையின் 70 ஆம் ஆண்டு நினைவு நாள் 11.06.2026, இன்றாகும்.!
இலங்கை சுதந்திரமடைந்த பிறகு சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச இயந்திரத்தின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட முதலாவது பாரிய இனப்படுகொ*லையின் 70 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
ஒரு இனத்தின் வரலாறு அந்த இனத்தினரால் (மக்களால்) ஆழமாக அறியப்பட வேண்டும்; வரலாற்றை மறந்தவன் தன் வாழ்வையும் அடையாளத்தையும் இழந்தவன் ஆகிறான் என்ற உண்மையை உணர்த்தும் வரலாற்றுப் பின்னணி இது.
1949 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் D.S.சேனநாயக்கவினால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் (அம்பாறை கிராமத்தில்) 'கல்லோயா அபிவிருத்தித் திட்டம்' முன்னெடுக்கப்பட்டு, அது இங்கினியாகலை அணைக்கட்டு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளாக மாற்றப்பட்டது.
1948 முதல் 1961 வரை 'அம்பாறை' என்ற தனி நிர்வாக மாவட்டம் இருக்கவில்லை; அது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் 1960 மார்ச் 19 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 'அம்பாறை' என்ற புதிய தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, 1961 ஏப்ரல் 10 அன்றுதான் அது தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, 1978 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பதுளைக்குரிய "தெகியத்த கண்டி" பிரதேசமும் இதனுடன் இணைக்கப்பட்டு, அம்பாறை மாவட்டம் "திகாமடுல்ல" தேர்தல் மாவட்டம் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த வரலாற்றுத் துரோகம் நிகழ்ந்தபோது எந்தவொரு தமிழ் அல்லது இசுலாமிய நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
S.W.R D.. பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்த காலப்பகுதியில், 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 05 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து, கொழும்பு நாடாளுமன்றத்திற்கு முன்னாலுள்ள காலிமுகத்திடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. இதன் மீது சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையே, உரிமைப் போராட்டக் களத்தில் தமிழர்கள் சிந்திய முதல் இரத்தமாக வரலாற்றில் பதிவானது.
காலிமுகத்திடல் வன்முறையைத் தொடர்ந்து, தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான தமிழ் மக்களின் அமைதிப் போராட்டங்களை நசுக்க, கிழக்கு மாகாணத்தின் கல்லோயா மற்றும் இங்கினியாகலை பகுதிகளில் திட்டமிட்ட இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. 1956 யூன் 11 திங்கள்கிழமை தொடங்கிய இந்த வன்முறை, யூன் 16 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நீடித்தது. சிங்களக் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்க, சிங்களக் காடையர்கள் அரச வண்டிகளில் ஏறி தமிழ் மக்களின் குடியேற்றங்களை நோக்கிச் சென்று கொடூரத் தாக்குதல்களை நடத்தினர். குறிப்பாக, இங்கினியாகலை குடியேற்றத் திட்டப் பகுதியிலும், அதனைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர்கள் வன்முறைகளை எதிர்கொண்ட வேளையில், தற்காப்புக்காகத் திருப்பி அடித்த வரலாற்று நிகழ்வும் இதே காலப்பகுதியில் நிகழ்ந்தது. 1956 யூன் 13 புதன்கிழமை அன்று துறைநீலாவணை கிராமத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற சிங்களக் காடையர்கள் மற்றும் இராணுவத்தினரை நோக்கி, அக்கிராமத்துத் தமிழ் மக்கள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் வன்முறையாளர்கள் தரப்பில் இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதுவே, தாயக மண்ணில் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் நிகழ்த்திய முதலாவது தற்காப்புத் தாக்குதலாகும்.
1956 யூன் 11 இல் கல்லோயாவில் தொடங்கிய இந்த இனவழிப்பு, 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை தொடர்ந்தது. 2009 இறுதிப் போரின்போது மட்டும் 1,46,679 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்கள் வழியே வெளிப்படுத்திய போதிலும், இன்றுவரை சர்வதேசத்தினால் இக்கொலைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
ஆயுதப்போர் மௌனித்த கடந்த 17 ஆண்டுகாலமாக, நேரடிப் படுகொலைகள் நிகழாவிட்டாலும், தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பண்பாட்டுச் சிதைப்பு என *கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide)* இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எழுபது ஆண்டுகளைக் கடந்தும் நீதிக்காகத் தொடரும் இந்த வரலாற்றுப் பதிவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நமது கடமையாகும்.
#Genocide #TamilGenocide #Eelam #History #Documentary
2 weeks ago (edited) | [YT] | 7
View 0 replies
single reel
கொக்கட்டிச்சோலை படுகொலை நாள் இன்றாகும்
12.06.1991
1991 ஜூன் 12 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான படுகொலை நிகழ்வே கொக்கட்சிச்சோலை படுகொலைகள் ஆகும்
இலங்கையில் சிங்கள இனவாத அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர சம்பவத்தின் முழு விவரமாவது
மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் கூலித் தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர்
1991 ஜூன் 12 அன்று கொக்கட்டிச்சோலை பகுதியில் அத்துமீறி சென்ற இலங்கை இராணுவத்தினர் மீது புலிகள் நிலக்கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர் இந்தத் தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மேலும் இருவர் காயமடைந்தனர்
இராணுத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் அருகில் உள்ள முகாம்களில் இருந்து இராணுவத்தினர் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகிழடித்தீவு போன்ற கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்தனர் அங்கு தப்பியோட முடியாதபடி தமிழ் பொதுமக்களை வளைத்து பிடித்து கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடங்கினர்
ஆண்கள் பெண்கள் முதியவர்கள் எனப் பார்க்காமல் இயந்திரத் துப்பாக்கிகள் கத்திகள் மற்றும் கோடாரிகளால் மக்கள் கொடூரமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்
மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையின் படி பல தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்
மக்களின் வீடுகள் நெற்களஞ்சியங்கள் மற்றும் உடமைதள் தீக்கிரையாக்கப்பட்டன சுமார் 67 வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலும் எரிக்கப்பட்டன
இந்த கொடூரத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 152 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களின் கடக்கெடுப்பின்படி பலி எண்ணிக்கை 152 ஆக இருந்த போதிலும் அப்போதைய சிங்கள பெரும்பான்மை காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெறும் 32 மரணங்கள் மட்டுமே பதிவு செய்து உண்மைகளை மறைக்க முயன்றது
சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா இப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார் ஆணைக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் தனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த தவறியதாக அந்தப் பிரிவின் கட்டளை அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரை பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது
இந்த ஒட்டுமொத்த படுகொலை மற்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் என்று 19 இலங்கை இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் உடமைகளை இழந்தவர்களுக்கும் சுமார் 5.25 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணைக்குழு பரிந்துரைத்தது
ஜனாதிபதி ஆணைக்குழு 19 இராணுவ வீரர்களை குற்றவாளிகள் என அடையாளம் காட்டிய போதிலும் அவர்களுக்கு இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது கொழும்பில் நடைபெற்ற இந்த இராணுவ விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட 19 இராணுத்தினரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்
இதன் காரணமாக இந்த படுகொலைக்கு இன்றுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை
கொக்கட்டிச்சோலையில் இதற்கு முன்னதாகவே 1987 ஆம் ஆண்டும் ஒரு பெரிய இறால் பண்ணைப் படுகொலை நிகழ்ந்திருந்தது அதில் 87 பேர் படுகொலை செய்யப்பட்டனர் இந்த இரண்டு பெரிய படுகொலைகளையும் உயிரிழந்த அப்பாவிகளையும் நினைவு கூரும் வகையில் கொக்கட்டிச்சோலையில் ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு ஆண்டு தோறும் ஜூன் 12 அன்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
2 weeks ago | [YT] | 17
View 2 replies
single reel
1956 ம் ஆண்டு யூன் 11 இதே நாள் - அதாவது பிரபாகரன் என்ற குழந்தைக்கு இரண்டு வயதாக இருக்கும் போது சிங்களவர்கள் தமிழர்கள் மீது முதல் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட 'கல்லோயாப் படுகொலைகளின்' எழுபதாவது நினைவு நாள் இன்று.
சிங்கள காவல்துறையோ, இராணுவமோ தலையிடாமல் முழுக்க முழுக்க சிங்கள மக்களே இந்த இனப்படுகொலையை நிகழ்த்தினார்கள்.
சிங்கள மக்கள் யோக்கியர்கள் - புலிகள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று இன்றும் அறளை பெயர்ந்து போய்க் கதைக்கும் நம்மவர்கள் மறந்து போன வரலாறு இது.
83 யூலை இன அழிப்பின் போதும் வெளியிலும், சிறைச்சாலையிலும் இன அழிப்பு அரசு பாதுக்காப்புக் கொடுக்க சாதாரண சிங்கள மக்கள்தான் படுகொலைகளை நிகழ்த்தினார்கள்.
இதை ஏன் இப்போது அழுத்தமாக நினைவூட்ட வேண்டியிருக்கிறதென்றால் கிட்டத்தட்ட புலிகளின் எழுச்சியின் விளைவாக ( இதன் கோட்பாட்டுப் பின்னணி குறித்து முன்பே எழுதியிருக்கிறேன்) 25 வருடங்கள் அடங்கி, அமைதியாக இருந்த சிங்கள மக்கள் 2009 இற்குப் பிறகு தற்போது மீண்டும் இரத்த வெறி கொண்டு அலைகிறார்கள். எந்த நேரமும் ஒரு கல்லோயா, கறுப்பு யூலை தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் பேரபாயம் கண்முன் தெரிகிறது.
இதன் சமீபத்திய உதாரணம் சமூகவலைத் தளங்களில் இலட்சக்கணக்கில் ஒன்று திரண்டு வந்து தமிழர்கள் மீது வன்முறையக் கக்கும் சிங்கள கூட்டு உளவியல்.
வடக்கு கிழக்கில் இந்த வன்முறைக்கான வாய்ப்புக் குறைவு. சுயநலம் கருதி சிங்களத்திற்கு ஒத்தூதி, காலிமுகத்திடலில் திரண்ட தென் இலங்கை தமிழ் மேட்டுக்குடி கனவான் மன நிலை கொண்ட தமிழர்கள்தான் அனேகமாக இதன் இலக்காக இருப்பார்கள். அவர்கள் சிங்கள இனவாதத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர்கள் உயிர் பிடுங்கப்பட்டு இருக்கும்.
மறுவளமாக பிரிந்து சென்று சுய ஆட்சியமைக்கும் எமது போராட்டத்தின் கடைசி இரத்தப் பலியாகவும் இதுதான் இருக்கும் என்பது இதன் துயரமான பேருண்மையும் கூட.
Copy
Tamils mark 70 years since the Gal Oya massacre in Amparai
A commemoration marking the 70th anniversary of the first massacre of Tamils in Amparai was held on Thursday at the American Mission Hall in Batticaloa, with participants paying tribute to the victims through candle lighting, floral tributes and a two-minute silence.
The event was organised by Sivayogan, an activist of the civil society collective, and brought together former Member of Parliament P. Ariyanendran, former Batticaloa Municipal Council Mayor T. Saravanabavan, a pastor from the American Mission Church and members of the public. Attendees reaffirmed the importance of remembrance for historical justice and accountability.
The massacre being commemorated took place in June 1956 in the Gal Oya valley of the Amparai district, and is widely regarded as the first organised anti-Tamil pogrom in the history of independent Ceylon. It unfolded against the backdrop of one of the most consequential pieces of legislation in the island's post-independence history.
2 weeks ago (edited) | [YT] | 20
View 2 replies
single reel
உருத்தெரியாத சடலங்கள்
*******************************
அவரா இவர் ?
****************
இலங்கையில் இன்று அதிகம் பேசப்படும் நபர்களுள் ஒருவராக அரச புலனாய்வுச் சேவை ( SIS ) இன் முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஷ் சாலே உள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இவர் மீதும் பாய்ந்துள்ளது. உள்ளே சித்திரவதை செய்கின்றனர் என்று கூறி அதற்கெதிராக உண்ணாவிரதம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். அவர் நல்லவர் & அப்பாவி என்று சிலர் முழங்கியபடி கொழும்பில் போராட்டம் செய்து அவரை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.
யாருக்காவது உதவக்கூடும் என்பதால் இத்தருணத்தில் என் அனுபவம் ஒன்றைப் பொதுவில் பகிர்கிறேன்.
2008 ஜூன் மாதம் 14 இல் கொழும்பில் வெள்ளைவான் மூலம் நான் கடத்தப்பட்டு இரகசிய இடமொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டேன். நான்கு நாள் கழித்து ஜூன் 18 இல் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.
இரத்த வாடை கலந்து துர்நாற்றம் வீசும் உடையுடன் தரையில் இருந்த என்னை கதிரையில் இருக்கச் சொன்னார். வன்முறையற்ற வார்த்தைகளுடன் மிகவும் மென்மையாக ஒரு மணிநேரம் என்னுடன் உரையாடினார். இனவாதமற்ற இலங்கை பற்றியும் பேசினார். உரையாடலின் இறுதிக் கட்டம் வந்தது.
அவர் சொன்னார்.
" என்னைக் கடத்திய செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் வந்துவிட்டது. இனிமேல் என்னைச் சும்மா விட முடியாது. அதனால் தற்கொலை அங்கியுடன் தொடர்பான ஏதேனும் ஒரு சம்பவத்தைக் கூறிக் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால் உயிருடன் விடமுடியும். இல்லையென்றால் இன்றிரவு அவிசாவளையில் மதகு ஒன்றின் கீழ் உருத்தெரியாத சடலமாக்கி வீசிவிடுவார்கள். நம்மாட்கள் குடிபோதையில் அதற்குத் தயாராகிவிட்டனர். இன்னும் ஒரு மணிநேரம் தருகிறேன். நன்றாக யோசித்து முடிவைச் சொல். "
அந்த நாள்களில் உருத்தெரியாத சடலங்கள் அவிசாவளையில் வீசப்படுவது அடிக்கடி ஊடகச் செய்தியாக வந்ததை அப்பொழுது நான் அறிந்திருந்தேன்.
▶️
குறிப்பிட்ட காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டு வாக்கில்) இலங்கையின் முக்கிய புலனாய்வுத் துறையான **மாநில உளவுச் சேவை (State Intelligence Service - SIS)** இன் பணிப்பாளராக (Director) இருந்தவர் இவர்தான்.
இவருடைய பெயர் **திரு. துவான் சுரேஷ் சாலி (Tuan Suresh Sallay)**.
இவர் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் (Brigadier) அந்தஸ்தில் இருந்த ஒரு சிரேஷ்ட அதிகாரி ஆவார், பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவிலும் (Directorate of Military Intelligence - DMI) மற்றும் மாநில உளவுச் சேவையிலும் (SIS) முக்கிய தலைவராகப் பணியாற்றினார்.
Unidentified bodies
***********************************
Is this him?
********************
One of the most talked about figures in Sri Lanka today is the former Director of the State Intelligence Service (SIS). The Prevention of Terrorism Act has also been invoked against him. He was hospitalized after going on a hunger strike, claiming that he was being tortured inside. Some people are protesting in Colombo, saying that he is good and innocent and demanding his release.
I am sharing my experience publicly at this time because it may help someone.
On June 14, 2008, I was abducted in a white van in Colombo, locked up in a secret location and tortured. Four days later, on June 18, the Director of the State Intelligence Service came to meet me.
I was on the ground with the smell of blood and bad smelling clothes, and he asked me to lie down in the sun. He talked to me for about an hour with non-violent words. He also talked about a non-racist Sri Lanka. The final stage of the conversation came.
He said.
"The news of my kidnapping has been broadcast on television. I cannot be left alone any longer. So if I confess to the crime by mentioning some incident related to the suicide vest, I can be released alive. Otherwise, they will throw me as an unidentified dead body under a dam in Avissawella tonight. Our people are drunk and ready for it. I will give you another hour. Think carefully and decide."
I knew that unidentified dead bodies were often thrown in Avissawella, as reported by the media in those days.
By
தேவதாசன் கனகசபை
2 weeks ago | [YT] | 2
View 0 replies
single reel
ஈழத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை உருவாக்குவோம் என்ற முழக்கத்தொடு தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தமித் திரையுலகம் இன்று நடத்தியுள்ளது.
தமிழ்த் திரையுலகத்தினர் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மிகப் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு பிரிவினர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்யும் மகிந்த ராஜபக்சவே தமிழ்நாட்டுக்கு கைது செய்து சிறையில் அடைக்கும் காலமும் வரும்-
தமீழத் தமிழர்களுக்கான தனி நாட்டை உருவாக்குவோம் என்றும் அறைகூவல் விடுத்தனர்.
தமிழ்த் திரையுலக பிரமுகர்களான இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், சீமான், அமீர் மற்றும் இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. ராஜேந்தர் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் இன உணர்வுப்பூர்வமாக உரையாற்றினர்.
-2008
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
2008-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது.
அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து,
"எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம்.
அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்று பகிர்ந்த பாரதிராஜா, பிரபாகரனுக்கு தன் மீதிருந்த அன்பு குறித்து...
மண்வாசனை’ படம் வெளியானபோது மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போதே உங்களைச் சந்திக்க முயற்சித்தேன். பின்னொரு முறை வீரமணி அண்ணனிடம் சொல்லி சந்திக்க முயற்சித்தேன்.
முடியாமல் போய்விட்டது. நான் உங்கள் ரசிகன். நீங்கள் வருகிறீர்கள் என்றதும் உங்களிடம் பேசுவதற்காக ‘கண்களால் கைது செய்’ படம் வரை அத்தனைப் படங்களையும் போட்டுப் பார்த்தேன்’ என்றார் பிரபாகரன்" என்று கூறியிருக்கிறார்.
"அது அமைதிக்காலம். திருமாவளவனும் அப்போது அங்குதான் இருக்கிறார் என்று சொன்னார்கள். ரெண்டு நாள் இளைஞர்களுக்கு நான் சினிமா குறித்து வகுப்பெடுத்தேன். ‘எங்கள் பிள்ளைகளுக்கு முழுமையான வகுப்பெடுக்க வேணும்’னார்.
நான், ‘எங்கெங்கோ ஷூட்டிங்கில இருப்பேன்’னேன். ‘நீங்கள் இடத்தைச் சொல்லுங்கள். விசா இல்லாமல் எங்கள் பிள்ளைகள் அங்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்’ என்றார். ‘நான் ஒரு சராசரி மனிதன். எனக்கு சில குடும்பக் கடமைகள் இருக்கு.
அதை முடிச்சுட்டு கண்டிப்பா வர்றேன். இங்கேயே வந்து தங்கி இருந்து வகுப்பெடுக்கிறேன். படமும் எடுக்கிறேன்’னேன்" என்று விவரித்தவர், பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து தொடர்கிறார்...
எனக்கு அப்போது அந்தத் தீவிர உணர்வு இருந்தது. என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டது. காலங்கள் ஓடிவிட்டன. எவ்வளவு பெரிய வீரர்கள் அந்த இளைஞர்கள். பெண் புலிகளைப் பார்த்து வியந்துபோயிருக்கிறேன். அவர்களைப்போல் போராளிகளைப் பார்ப்பது அரிது.
இங்கிருந்துகொண்டு, நாம் தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுகிறோம். ஆனால், இனம், மொழி, நிலம், குறித்துப் பேச கூடுதல் உரிமை கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள்தான்.
ஈழப்பிரச்னை குறித்து படம் ஒன்றை இயக்கித் தரச் சொல்லி பிரபாகரன் கேட்டிருந்தார். உண்மையில், பிரபாகரனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது" என்று முடித்தார்.
2 weeks ago | [YT] | 9
View 0 replies
single reel
இயக்குனர் இமயம்.
புலிகளை இயக்குனர் இதயத்தில் ஏற்றிவைத்தார்.
புலிகள் இயக்குனரை தம் அன்பெனும் பெரும் ஆயுதம் கொண்டு அரவணைத்து மகிழ்ந்தார்கள்.
உங்கள் சினிமாக்களில் நீங்கள் வாழ்வீர்கள்.
இனத்தின் இதயங்களில் என்றென்றும் நீங்கள் இருப்பீர்கள் ஐயா..
2 weeks ago | [YT] | 19
View 1 reply
Load more