சிங்களவெறியன் சிரிச்சு போனா பல் இளிக்காத!


single reel

"அம்மான்" இலட்சிய நாயகன்🔥
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செல்லக்கிளி :

அம்மான்:

சந்திரன் :

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினண்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூட தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத்தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்திலிருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக்கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான். காட்டுப் பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி, தனது வாழ்க்கையை, தான் வாழ்ந்த சூழ்நிலையை ஒரு கெரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக் கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டு குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றை கோடரியால் வெட்டிக் கொன்றான். மற்றக் கரடி கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.

ஓய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்குக் கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். ஆரம்ப காலங்களில் காடுகளில் இயக்கத்துக்கான முகாம்களை அமைக்கும் வேலை நடை பெறும்போதெல்லாம் தேவையான அமைப்புக்களைக் கொண்ட மரங்களை முகாம்களுக்குத்
தேடிக் கண்டு பிடித்து வெட்டுவது, கொட்டில் போடுவது. கூரை வேய்வது போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில்தான் நடைபெறுவது வழக்கம்.

சிறுவயதிலிருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும், பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு கொதித்த செல்லக்கிளி அவனை அண்ணனென்றும் பாராது, "அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்" என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்த வில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்துக்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக -முழுமையாக தன் உயிரையே தருகிற அளவுக்குச் செயலாற்றினான் செல்லக் கிளி. "செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்துக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரிது" இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த வார்த்தைகள்.

இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவனது பணி இயக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன் செல்லக்கிளி. முதல் முதலில் இயக்கம் உளவுப்படை போலீஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி, போலீஸ் உளவுப்படை தலைமையகத்தைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான தாக்குதல், உமையாள் புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல். பருத்தித்துறை போலீஸ் நிலையப் பொறுப் பதிகாரி மீதான தாக்குதல். கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன் தனிமுத்திரையைப் பதித்தான் செல்லக்கிளி.

பருத்தித்துறைப் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் சுட்டு விட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குண்டும் குழியுமாயிருந்த வீதிகளினூடாக 15 மைல் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்கவீரர்களை இராணுவ முற்றுகைகுட்படாது வெளிக் கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத் துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் போலீஸ் அதிகாரி பஸ்தியாம் பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.

7.4.78 அன்று அதிகாலை 5.30 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட உளவுப்படை போலீஸ் அதிகாரி பஸ்தியாம் பிள்ளை குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர். இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வேட்டைத் துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்த போலீசாரிடம் பேச்சுக் கொடுத்து தன் புத்தி சாதுரியத்தால் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகிறான் செல்லக்கிளி. போலீசார் சற்று ஏமாந்திருந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அனைவரும் ஒன்றாகப் பாய்கிறார்கள் போலீஸாரின் மேல். அடுத்த கணம் போலீஸாரிடமிருந்த சில ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைகளுக்கு மாறுகின்றன. முதன்முதலாக அன்றுதான் கையிலெடுத்த எஸ்.எம்.ஜி. செல்லக்கிளியின் கைகளில் வேகமாக இயங்குகிறது. சில நிமிடங்கள் வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன. புலிகளை வேட்டையாடவென வந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சப் இன்ஸ் பெக்டர் பேரம்பலம், சார்ஜன்ட் பால சிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்த்தனா என ஒவ் வொருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இறுதியாக போலீஸார் கொண்டு வந்த ஆயுதங்களாலேயே அவர்கள் சுடப்பட்டதுடன் அவர்கள் வந்த காரையே எடுத்துக் கொண்டு விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின்னர்தான் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினரின் முடிவு பற்றிய செய்தி வெளியே தெரிய வந்தது. செல்லக்கிளி தலைமையிலான இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியானது தமிழ்ப் போராளிகள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆபத்து வரும் வேளைகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்குக் கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக் கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை சென்றபோது செல்லக்கிளியின் வீட்டுக்கு அண்மையில் செல்லக்கிளியிடமே செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது "வாங்கோ ஐயா செல்லக் கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது, கூட்டிக் கொண்டு போய்க் காட்டுறன்" என்று தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்டரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்து விட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்டர், செல்லக்கிளி தன்னை ஏமாற்றி விட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.

தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்குக் கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி "ஆறு ஆண்டுகளாக நாம் காடுமேடு என்று அலைகிறோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?" என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந் தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்துக்குச் சென்று தேர்தலை புறக்கணிக்குமாறு வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் புறக்கணித்ததன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர்.

1983ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் நாள் வடமாகாணத்தின் மிகப்பெரிய இராணுவ முகாமான பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் வீதியில் திருநெல்வேலி என்ற இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இரண்டின்மீது செல்லக்கிளி தலைமையிலான பதினான்கு விடுதலைப் புலிகளை கொண்ட கெரில்லா அணுகி தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றது. வேகமாக முன்னால் வந்த ஜீப்வண்டி, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணி வெடி சரியான நேரத்தில் வெடித்ததால் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே வந்து விழுகிறது. அதில் வந்த சிங்கள இராணுவத்தினர் கீழே குதித்து தாம் வைத்திருந்த துப்பாக்கிகளைத் தூக்கியபடி ஓட முயல்கின்றனர். பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினர் பீதியினால் ட்ரக் வண்டிக்குள்ளேயே பதுங்குகின்றனர். விடுதலைப் புலிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் ட்ரக்கை விட்டு எழமுயன்ற இராணுவத்தினரின் உடல்களைச் சல்லடையாக்குகின்றன. தமிழீழத்தில் முதல் தடவையாக அதிக அளவு சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதைக் கண்டு உற்சாக மிகுதியினால் வெற்றிக் களிப்புடன் மறைவிடத்திலிருந்து தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியை இராணுவ வண்டியை நோக்கி இயக்கியபடியே எழுந்து நின்று சுடத் தொடங்குகிறான் செல்லக்கிளி. அதே நேரம் ஜீப் வண்டிக்குள் இருந்து சிங்களச் சிப்பாய் ஒருவன் சுட்ட குண்டு நேராகச் செல்லக்கிளியின் இதயத்தை ஊடுருவிச் செல்கிறது. சப்தமெதுவுமின்றிக் கீழே விழுகிறான் செல்லக்கிளி.

13 இராணுவத்தினரை வீழ்த்தி ஏராளமான ஆயுதங்களை எடுத்த உற்சாகத்தில் திளைத்த விடுதலைப்புலிகள் செல்லக்கிளியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்கின்றனர். முதல் வாரத்தில் இரண்டு முன்னோடி வீரர்களை இழந்த விடுதலைப்புலிகள் களத்தில் செல்லக்கிளியையும் இழந்ததால் வெற்றிக்கான எக்களிப்பு சிறிதுமின்றி சோகமே உருவாகத் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். இயக்கம் வளர்ந்து வரும் நிலையில் இயக்க முன்னோடி வீரர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவப் பயிற்சியைக் கொடுக்கும் வகையில் அந்தத் தாக்குதலுக் கான தலைமையைச் செல்லக்கிளியிடம் ஒப்படைத்துவிட்டுத் தானும் ஒரு வீரனாகத் தாக்குதலில் கலந்து கொண்ட இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு செல்லக் கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம் ! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும், அவனின் ஆற்றலைப் பற்றியும் பிரபாகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.

இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி ரவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன் பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது, இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்க முடியாத சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சுட்டுப்பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக் கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.

படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள் அவனை 'அம்மான்' என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல, விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். அவனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை. ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டமானது ஆணி வேரோடு பிடுங்கி எறியப்பட்டு ஆயுதப் போராட்ட சகாப்தம் உருவான நாள்.
23/6/1983.

-விடுதலைப்புலிகளின் வீரவரலாறு.

தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

58 minutes ago | [YT] | 0

single reel

1989ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அன்று புதன் கிழமை. நாலு இளைஞர்கள் ஒரு நீல நிற ஃபோர்ட் காரில் வந்து வீட்டுக் கதவை தட்டினார்கள். அந்த இளைஞர்களில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருந்ததை கவனித்த வீட்டுக்காரர் �கடைசியில் வீட்டுக்கே வந்துவிட்டார்கள்� என்று நினைத்தார். துவக்குடன் ஒருவரும் விவாதம் செய்யமுடியாது என்பது அவருக்கு தெரியும். அவர் பின் கதவு வழியாகப் பாய்ந்து வேறு வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்டார்.

அவருடைய மகன் அகிலன் நடப்பது தெரியாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் 19வது பிறந்த நாளைக் கொண்டாடி 5 நாட்கள் கடந்திருந்தன. அடுத்தநாள் நடக்கப் போகும் வேதியியல் பரீட்சைக்காக படித்துவிட்டு அதிகாலை இரண்டு மணிக்குத்தான் தூங்கப் போயிருக்கிறார். சத்தம் கேட்டு வெளியே வந்து இளைஞர்களிடம் என்னவென்று கேட்டபோது அவர்கள் அவரை பலவந்தமாக தூக்கி காருக்குள் திணித்துக்கொண்டு புறப்பட்டார்கள். சில நிமிடங்களில் தலையில் குண்டு துளைத்த அகிலனின் சடலம் வீதியிலே வீசப்பட்டுக் கிடந்தது.

துப்பாக்கி ஒருநாள் தன்னை தேடிவரும் என்பது அகிலனின் அப்பா திருச்செல்வத்துக்கு தெரியும். ஆனால் அகிலனுக்கு தெரிய வாய்ப்பிலையே ! இப் படுகொலையைப் புரிந்தது ஈ.பி.ஆ.எல்.எப் தான் என்பது யாவரும் அறிந்த உண்மை. அந்தக் காலங்களில் யாழ்ப்பாணம் இந்திய அமைதிப் படையின் ஆட்சியின் கீழ் இயங்கியது. யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பிரபல தினப்பத்திரிகையான முரசொலியின் பிரதம ஆசிரியர் திருச்செல்வம். அவரைக் கொல்வதற்கு ஏற்கனவே பல முயற்சிகள் நடந்திருந்தன. இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பத்திரிகை அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அவர் உயிர் தப்பினார். 82 நாட்கள் அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள். அவர் திருந்துவதாயில்லை. கடைசி முயற்சியாக மகனின் கொலை நடந்து முடிந்திருந்தது.

திருச்செல்வம் செய்த குற்றம் என்னவென்றால் நேர்மையான ஒரு பத்திரிகை நடத்தியது. சுதந்திரமான கருத்துக்களை எழுதி வெளியிட்டது. செய்திகளை வெளியிட முன்னர் ராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பது கட்டளை. மரண அறிவித்தல் செய்தி அல்ல, ஆகவே அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை என்பது பிரதம ஆசிரியரின் வாதம்.

13 hours ago (edited) | [YT] | 8

single reel

குமாரபுரம் படுகொலைக்கு 30 வருடங்கள் | சாட்சியங்கள் பேசுகின்றன

குமாரபுரத்திலுள்ள தங்களது வீடுகளை துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் நெருங்கி வருவதை கிராமவாசிகள் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி கேட்கும்போது நேரமானது மாலை சுமார் 5 மணியாக இருந்திருக்கும்.

“ஆரம்பத்தில் நாம் பயப்படவில்லை. ஏனெனில், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டால் பயப்பட வேண்டாம் என்றும், பறவைகளை நோக்கி அவர்கள் சுடுவார்கள் என்றும் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தினருடன் நடைபெற்ற கூட்டமொன்றின்போது எம்மிடம் தெரிவித்திருந்தார்கள். ஆகவே, இயல்பாக இருக்குமாறும் எங்களுக்கு எந்தத் தீங்கும் வராது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்”என்று கந்தப்பொடி பிரபாராணி (36 வயது) தெரிவித்தார்
துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் நெருங்கி வர ஆரம்பித்ததும் அவரது தயார் அவரை வீட்டுக்குள் ஓடுமாறு சத்தமிட்டுள்ளார். அந்த வீட்டினுள் ஏனைய கிராமவாசிகளும் அடைக்கலம் புகுந்திருந்தனர். வீட்டு சுவர் வெடிப்பொன்றின் ஊடாக அவர்கள் எட்டிப்பார்த்தபோது சீருடையில் இருந்த பெரும் இராணுவ அணியொன்று அவர்களது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்ததைக் கண்டனர். வெளியில் வருமாறு அவர்களது வீட்டுக்கு வெளியில் இருந்து இராணுவத்தினர் கத்தியதும் தமது பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பிரபாராணியின் தாயார் வீட்டை விட்டு வெளியில் ஓடினார். இராணுவத்தினர் அவரது தாயாரை கொன்றதன் பின்னர் வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீட்டினுள் இருந்த பெரும்பாலானோர் காயமடைந்தனர். இதில் ஒரு வயதேயான குழந்தையொன்றும் அடங்கும்.

“எனது கணவர் அப்போதுதான் வேலை முடித்து வீட்டுக்கு வந்திருந்தார். நான் அவருக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அருகிலுள்ள முகாமைச் சேர்ந்த கோப்ரல் கபில எனும் நன்கறிந்த இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவரும் அவருடன் வந்திருந்த இன்னுமொருவரும் எமது வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து எனது கணவரை அழைத்தனர். எனது கணவர் தச்சு வேலைகள் செய்பவர் என்பதால் அவரிடம் பொருட்களை பழுது பார்த்துக்கொள்வதற்கோ அல்லது புதிய பொருட்களை செய்துகொள்வதற்கோ கபில அடிக்கடி வருவார். அந்த வகையில், அவரை எமக்கு நன்கு தெரியும்” என்று தங்கவேல் மருதாயி (71 வயது) தெரிவித்தார். மருதாயி வெளியில் சென்று தமது கணவரை எதற்காக அழைக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் அவரை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அச்சந்தர்ப்பத்தில் வீட்டினுள் இருந்த அவரது கணவர் காயமடைந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் உயிரிழந்தார். தங்கவேல் மருதாயியின் வீட்டில் மறைந்திருந்த ஏனைய பலரும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அதேநேரம், தந்தையொருவரும் 10 வயது பிள்ளையொன்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

நாட்கூலித் தொழிலாளியான அரசரட்னம் நாகராசா வேலையை முடித்து வீடு திரும்பியிருந்ததுடன், 58ஆவது மைல்கல்லுக்கு அருகில் குளிக்கச் சென்றிருந்தபோது அவரது கிராமத்தின் பக்கமாகவிருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தங்களைக் கேட்டார். அதனையடுத்து உடனடியாக அவர் வீட்டுக்கு ஓடிச் சென்று பார்த்தபோது அவரது வீடு ஏனைய கிராமவாசிகளால் நிரம்பியிருந்ததைக் கண்டார். சுமார் 18 கிராமவாசிகள் அவரது வீட்டில் அடைக்கலம் புகுந்திருப்பதாக பின்னர் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

“மழை போன்று சோவென துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுவதை நாம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆகையால், வீட்டில் இருந்து வெளியில் வருவதற்கு நாம் மிகவும் அஞ்சினோம். எமது வீட்டை நோக்கி 4 இராணுவத்தினர் வருவதை சுவரிலிருந்த வெடிப்பொன்றின் ஊடாக நாம் கண்டோம். எமது வீட்டை அடைந்ததும், “பர தெமழு, எலியட்ட வரெங்!” (பர தமிழனே, வெளியியே வா!) என்று வீட்டுக்கு வெளியில் இருந்து அவர்கள் கோசமிட்டார்கள். யாரும் வெளியில் செல்லாததை அடுத்து தகரங்களினால் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் சுவர் பகுதி மீது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிக் குண்டொன்று எனது இடக்கண்ணினூடாக சென்று மறுபுறமாக வெளியில் வந்தது. எனது அயலவர்கள் என்னை அருகிலிருந்த மருத்துவ நிலையத்திற்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர். எனினும், செல்லும் இடைவழியில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து அருகிலிருந்த இன்னுமொரு வீட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்துகொண்டோம். எனது மனைவியும் மகனும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததை நான் அங்கு கேட்கக் கூடியதாக இருந்தது. எனினும், அந்த நேரத்தில் நான் உணர்வற்ற நிலையில் இருந்தமையால் அவர்கள் என்னிடம் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னால் முழுமையாக தெரிந்துகொள்ள முடிந்திருக்கவில்லை”என்று அவர் நடந்த சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தார்.

“சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை நான் கேட்டேன். எனினும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை நாம் அடிக்கடி கேட்பதுண்டு என்பதால் நான் அதை அந்த நேரத்தில் அவ்வளவாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் நெருங்கி வருவதைப் போன்று தெரிந்ததும் அருகில் இருந்த வீடொன்றுக்கு நான் ஓடினேன். அந்த வீட்டின் அருகில் வந்த இராணுவத்தினர் எம்மை வெளியில் வருமாறு கத்தினார்கள். நாங்கள் அவர்கள் சொன்னதை செய்யாததால் வீட்டின் கதவை உதைத்துத் திறந்த அவர்கள் எம்மை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார். எனது கணவரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு பட்டதுடன், இன்னுமொருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அதையடுத்து எம்மை சோதித்துப் பார்க்க அவர்கள் மீண்டும் வந்தனர். நாம் அனைவரும் நிலத்தில் அசைவற்று படுத்து கிடந்தோம். ஆகவே, நாங்களும் உயிரிழந்துவிட்டோம் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.”
– என்று நடராசா தவமணி (50 வயது) அவரது பயங்கரமான அனுபத்தை விபரித்தார்.
தவமணியின் சகோதரர் வீதிக்கருகில் கடையொன்றை நடத்திவந்தார். அந்தக் கடையில் இருந்த மக்களை ஓடுமாறு கூறியதை அடுத்து, தவமணியின் சகோதரர் அவரது பிள்ளைகளுடன் தவமணியின் வீட்டுக்கு ஓடினார்.

“தரையில் கிடந்த எனது கணவரின் வயிற்றுப் பகுதியில் இருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. தம்மை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று காப்பாற்றுமாறு அவர் எனது சகோதரரிடம் மன்றாடினார். எனினும், வெளியில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தமையால் எனது சகோதரரால் கணவரை கொண்டுசெல்ல முடிந்திருக்கவில்லை. 2 மணித்தியாலங்களின் பின்னர் எனது கணவர் இறந்துவிட்டார்.”
என்று அவர் தமது அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.

அருமைத்துரை புவேந்தினி (96 ஆம் ஆண்டில் அவருக்கு வெறும் 3 வயது மட்டுமே) மற்றும் அவரது சகோதரி பிரியா (அப்போது 7 வயது) ஆகிய இருவரும் தங்களது கர்ப்பிணித் தாய் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற பேரதிர்ச்சிமிக்க கதையைப் பகிர்ந்துகொண்டனர். படையினர் அவர்களது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியபோது அவர்களது தாயார் புவேந்தினியை தமது கைகளில் ஏந்தியவாறு எழுந்தார்.

“எங்களது அம்மா அந்த நேரத்தில் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி ரவை துளைத்து அவர் கொல்லப்பட்டார். அம்மாவின் கைகளில் இருந்த எனது சகோதரியின் இரு கால் விரல்களும் பாதத்தின் ஒரு பகுதியும் சிதறிவிட்டன. நாம் ஒளிந்திருந்த அறையில் 7 கிராமவாசிகள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியாக இருந்த எமது அம்மா, அவரது சகோதரி, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயார் மற்றும் இன்னுமொரு சிறுவன் ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். எனது சகோதரியும், சகோதரனும் நானும் மட்டுமே உயிர்தப்பினோம். எனினும், இந்தத் துப்பாக்கிச் சூடானது எமது சகோதரியின் பாதத்தையும் எனது சகோதரரின் காலையும் நிரந்தரமாக முடமாக்கியிருந்தது. எனது சகோதரரின் காலானது முழங்கால் பகுதியில் இருந்து கீழாக எலும்பு வழியே பிளவடைந்திருந்தது.”
என்று பிரியா நம்பிக்கையின்றி கேள்வி எழுப்பினார்.

இன்னுமொரு இராணுவ வீரர் பெண்ணொருவரை கொலை செய்வதற்கு கத்தியொன்றை வெளியில் எடுத்த போது குமார அவரை பிடித்து பின்னால் இழுத்துள்ளார். அதன் விளைவாக அவரது கத்தி சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த கண்ணாடியொன்றில் பட்டு உடைந்தது. அச்சந்தர்ப்பத்தில் சுவரில் இருந்த துளையொன்றின் ஊடாக பாய்ந்த துப்பாக்கி குண்டொன்று பட்டதில் 11 வயது சிறுமியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன், 15 வயது சிறுமியொருவர் இராணுவ குழுவொன்றினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை தாம் பார்த்திருந்ததையும் நீதிமன்றத்தில் வைத்து குமார கிராமவாசிகளிடம் தெரிவித்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்தச் சிறுமி அரிதாகவே உயிருடன் இருந்திருந்ததாகவும், ஆகையால் அந்தச் சிறுமியை அவ்வாறானதொரு நிலையில் பார்க்க முடியாமையினால் அச்சிறுமியை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மறுநாள் காலை சிறுமியின் உடலை கிராமவாசிகள் சடலமாக மீட்டிருந்தனர்.

“அன்றைய தினம் நான் வேலைக்காக கிராமத்துக்கு வெளியில் சென்றிருந்தேன். நான் வீட்டுக்கு திரும்பிய போது இங்கு பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. எனது சகோதரரின் வீட்டில் இருந்து எனது மகன் அதுவரை வீடு திரும்பியிருக்கவில்லை. ஆகவே, நான் அவரை தேடிச் சென்றேன். நான் எனது சகோதரரின் வீட்டுக்குச் சென்ற பார்த்தபோது எனது மகனும் சகோதரரும் நிலத்தில் இறந்து கிடந்ததைக் கண்டேன். அவர்கள் இருவருமே கொல்லப்பட்டிருந்தனர். எனது மகனுக்கு வெறும் 11 வயது தான் ஆகியிருந்தது. அவரது பெயர் கமலேஸ்வரன். தயவுசெய்து எனது மகனின் பெயரை எழுதி கொள்ளுங்கள். அவரது பெயர் கமலேஸ்வரன்” என்று தெரிவித்தார்.
58ஆவது மைல்கல்லுக்கும் சேருநுவரவிற்கும் இடையிலான வீதியானது மாலை 5 மணியில் இருந்து மறுநாள் வரை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. கிராமத்திற்குள் நுழையவோ அல்லது அங்கிருந்து வெளியேறவோ யாருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. “மாலை 5 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 5 மணி வரை எமக்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது” என்று கிராமவாசிகள் பலரும் தெரிவித்தனர்

மறுநாள் (12) காலை மூதூர் பொலிஸார் வருகை தந்து அனைத்து சடலங்களையும் காயமடைந்தோரையும் பார்வையிட்டனர். அதன் பின்னர், காலை 8 மணியளவில் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், காயமடைந்த அனைவரையும் பஸ்ஸொன்றின் மூலம் சேருநுவர வைத்தியாசாலைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

அருகிலுள்ள முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைச் சேர்ந்த படையினர் பலரும் கிராமவாசிகளுக்கு பரிச்சியமானவர்களாகவே இருந்தனர். ஏனெனில், முகாம்களை சுத்தம் செய்ய உதவுவதற்கும் இராணுவத்தினருக்கு விறகுகளை வெட்டுவதற்கும் அவர்கள் வாராந்தம் செல்வது வழக்கம். “ஒவ்வொருவரும் மற்றையவரின் பெயரை கூறி அழைத்துக் கொள்வதை நாம் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம். அதன்மூலம் நாமும் அவர்களில் சிலரது பெயரை தெரிந்துகொண்டோம்” என்று அவர்கள் தெரிவித்தனர். படையினர் கடந்து செல்லும் போது கிராமவாசிகளிடம் சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்குகளை கேட்பார்கள். “நாம் அவர்கள் மீது அச்சம் கொண்டிருந்தமையால் அவர்களுக்கு எது தேவையென்றாலும் நாம் அதை வழங்குவோம்” என்று கிராமவாசிகள் தெரிவித்தனர்.

https://x.com/maatramsl/status/2021496611503997413?s=46

1 day ago (edited) | [YT] | 1

single reel

New UN report details sexual violence against Tamils and Sri Lankan impunity Jan 13, 2026

A new report issued by the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) has laid bare the widespread and systematic use of conflict-related sexual violence by Sri Lankan state forces, alongside decades of entrenched impunity that continue to deny justice to Tamil survivors.

Titled “We Lost Everything – Even Hope for Justice: Accountability for Conflict-Related Sexual Violence in Sri Lanka”, the report builds on more than a decade of UN investigations and survivor consultations, documenting how sexual violence was used by the Sri Lankan state as a deliberate tool of torture, intimidation and social control during and after the armed conflict.

The OHCHR concludes that these violations were not isolated acts but formed part of a “widespread and systemic pattern”. The report states that sexual violence was employed “as a strategic tool to extract information, assert dominance, intimidate individuals and communities, and instill a pervasive climate of fear and humiliation”.

“Such violations were institutionally enabled,” it added.

Despite the extensive documentation of these crimes, successive Sri Lankan governments have failed to investigate or prosecute perpetrators. The report notes that official denial and minimisation of violations have reinforced a culture of impunity, leaving survivors without justice, reparations or meaningful acknowledgment.

It also notes that "sexual violence is prohibited under different and complementary legal frameworks: international human rights law (IHRL),53 international humanitarian law (IHL), and international criminal law (ICL). It constitutes a grave violation of international law and may amount to war crimes, crimes against humanity, or acts of genocide".

Survivors consulted by OHCHR described enduring trauma, stigma and fear, compounded by continued militarisation of the Tamil homeland. One survivor told OHCHR that the ongoing presence of military camps and monuments in civilian areas “remind them of the crimes they endured, symbols of pain, not justice”.

The report documents sexual violence committed by Sri Lankan security forces, including the army, navy, air force, Criminal Investigation Department, Terrorism Investigation Division, Special Task Force and affiliated paramilitary groups such as the Eelam People’s Democratic Party (EPDP). Victims were overwhelmingly targeted because of their Tamil identity or alleged links to Tamil resistance.

“The cruelty of the abuses inflicted – including mutilation, exposure, public degradation - was often described by the survivors as being intended to cause lasting trauma and dismantle entire communities,” the report noted. Many survivors believed that the abuses were designed not only to harm the individual, but to terrorize the entire Tamil nation with the intent of destroying their social fabric.

One survivor stated: “They cut off the genitals of men to put them in women’s mouths... chopped one woman into pieces.”

A former LTTE cadre described: “The women cadres were already dead. Their bodies had been hanging in the trees naked... The soldiers inserted sharp blades and rods. Metal parts were coming out of the body.”

A female survivor testified: “I was no longer treated as a human being, as a woman - but worse than an animal.”

Survivors testified that these acts were intended to dismantle the community’s dignity and collectively dehumanize them: “Such violent acts were carried out to take out the dignity of the Tamil community. These are crimes against the community. The community needs to hear the truth and to receive an acknowledgment of the crimes. They need to hear what allowed Sri Lanka to commit these crimes and dehumanize an entire community”

OHCHR highlights that men were as likely as women to be victims, yet male survivors remain particularly silenced due to stigma and discriminatory laws that fail to recognise male rape. Survivors recounted rape, gang rape, sexual torture, forced nudity, genital mutilation and sexual humiliation, often carried out in detention centres, checkpoints and homes.

One survivor stated, “It gives the message that nothing really happened. It keeps the crime alive.”

Another warned against treating these cases as isolated, saying, “The world heard about Isaipriya but there are thousands of Isaipriya… There are so many stories that are still untold.”

The report also details the profound failures of Sri Lanka’s domestic justice system. Survivors described being humiliated by police, pressured not to file complaints, subjected to language barriers in court, and retraumatised during proceedings. One survivor’s representative recalled a woman being asked in open court to display torn undergarments, describing the experience as “like raping her again”.

Prosecutions remain exceedingly rare. Of dozens of documented cases involving security forces, most suspects were discharged, acquitted or released on bail. In emblematic cases such as Kumarapuram and Vishvamadu, convictions were later overturned, while command responsibility was never pursued. The Attorney General’s unchecked discretion has allowed politically sensitive cases to be quietly dropped.

The report further highlights Sri Lanka’s failure to provide reparations. None of the survivors consulted had received compensation, rehabilitation or official acknowledgment. One survivor told OHCHR, “We lost everything, our husbands, kids, and dignity. No one can give that back. All we have is this suffering.”

While the current government has made public commitments to justice reform, OHCHR states that “tangible progress remains to be seen”. Sixteen years after the end of the armed conflict, impunity for conflict-related sexual violence remains firmly entrenched in the Tamil homeland.

The report calls for survivor-centred accountability mechanisms, independent investigations, reparations and guarantees of non-recurrence.

It also urges the international community to move beyond expressions of concern and support concrete pathways to justice, including the use of universal jurisdiction and international accountability processes.

3 days ago | [YT] | 1

single reel

லெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகளின்  21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.
சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவியஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது

“………this was the most unkindest cut of all ”

எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.பதமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்தசிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலைசெய்துள்ளனர்.

அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள்எம் கண்முன்னே விரிகின்றன.

ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ்தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதேஇன்றைய யதார்த்தமாகும்.

* சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான

.”…………ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்து

விலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து

சுட்டெரித்த சாம்பலின் , பீனிக்ஸ் பறவையென

வெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து

சஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன்.

அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன்

வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன்

நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க

விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும்

அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை

மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……”

என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ?

ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி 

சேக்ஸ்பியர் கூறியதுபோல் …. .

”….He lives, he wakes, ’tis death is dead, not he..”

கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.

5 days ago | [YT] | 23

single reel

1992 ஆடி 12ஆம் திகதி, நள்ளிரவு 1.00 மணி.

இடம்: கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்.

தம்பி டேய்!

நீ கோப்பாய்த் தவராசா வாத்தியின்ரை

தம்பியல்லே.......

எங்கை பயணம் கனடாவோ?

அடிசக்கை......

போங்கோ...போய்த்திரும்பிப்

பிறகெல்லாம் முடிஞ்ச பின்னர்

வாங்கோ, கிழடுகள் நாம்

வரவேற்கக் காத்திருப்பம்.

1992 ஆடி 20 ஆம் திகதி, மு. ப. 10,00 மணி.

இடம் : கோண்டாவில் தோட்டவெளி.

நெருப்புக்குள் நின்றும் நிமிர்ந்தோம்.

சிரிக்கின்றோம்.

இருப்பிழந்து போகாமல் இன்னும் இருக்கின்றோம்.

பெருமைப்படு,

தேகம் புல்லரிக்க நின்றாடு,

தொழுதெம் மண்மீது தொடு.

கண்ணில் வை.

புழுதி மண்ணானாலும் புரண்டு. விழுந்தெழும்பு.

தாயை நிகரெங்கள் தாயகத்தைக் காதல் செய்.

இம்மண்ணில்,

வாயால் புகழ்ந்தேற்றி வாழ்த்து.

வீரம் விளைக்கின்ற வீரர்களை மனத்தெண்ணு, பாரம் சுமக்கின்ற பாலகரைக் கட்டியணை.

நேற்றுவரை தூங்கி நினைவிழந்து,

எதிரியெனும்,

கூற்றுவனுக் கிலக்காகிக் குலைந்தழிந்த தமிழினத்தை ஆற்றுப்படுத்தவந்த அத்தலைவன் பெயரைச்சொல்.

மாரியெனக் குண்டுமழைபொழியும்,

எறிகணைகள்

கூவிவரும்,

வீதிகுழியாகும். நாங்களிங்கு

நாறிப்போய் விட்டோமா?

நடைப்பிணங்களானோமா?

இதற்குள்ளே இருக்கப் பழகி விட்டோம்.

புல்லும் நிமிர்ந்து போர்க்கோலம் பூண்டது போல் வெல்வோம், எனும் உறுதி

வீச்சோடு வாழ்கின்றோம்.

ஆனை வந்தெங்கள் அழகான வயலுக்குள்,

சேனை, புலவுக்குள்.

தின்கிறது.

போய் வாற பேரைப் பிடித்து மிதிக்கிறது.

'காய் கூய், என்றாரும்

கத்தித் தொலைத்தாலும்

வாய் நோகுதன்றி "வாரணங்கள்" போகுதில்லை.

வெடிகொளுத்திப் போட்டால் வெருண்டோடும்.

அதற்கிங்கே

பொடியள் சிலபேர்கள் போதுமா? கனபேர்கள் வேண்டும் என்செய்வோம்?

விருத்தெரிந்த இளசெல்லாம்

கூண்டு திறந்து ... குருவிகள்போல் ......

கடற்பரப்பைத்

தாண்டி,

தங்களது,

தனிச்சுகமே சுகமென்று

திக்கொன்றாய்ப் பறந்து திசைமாறிப் போயினவே.

தக்க தருணத்தில் தாய்மண் துணையின்றித் துக்கித் திருக்கிறது.

தொப்புள் கொடியுறவு

எல்லாம் பொய்யாகி, இல்லாததொன்றாகிப்

பல்தேச மெங்கும் பறந்து சிதறினவா?

என்றாலும் நாங்கள் இருப்பை இழக்கவில்லை.

தென்னை இள நீரும்

செவ்வலரிச் சிறுபூவும்

கண்மலர்த்தி வேம்பு காய்பழமும் தருகிறது.

கத்தரியும்,

வெண்டிக்கன்றும்,

பூக்கிறது.

சட்டிக்கரணை தழைக்கிறது.

ஆதலினால்,

இந்தமண் அழகோடு இன்றும்தான் இருக்கிறது -

எந்தத்துயர்வரினும் இனிக்கலக்கம் கொள்ளாது.

ஆழக்கிணறு,

ஆடுகால்ப் பூவரசு,

நீளக்கிடக்கின்ற நெல்வயல்கள்

உள்ளமட்டும்.

காலில் விழுந்தெவர்க்கும் கைகட்டி நிற்காது.

நேற்றென் பேரன் நேர்வந்தான்.

எனைக்கட்டி

காற்றில் மிதந்தான், களித்தான்,

முத்தமிட்டான்,

வரம்பில் இருந்தான், வாய்க்காலின் தண்ணீரை

விரும்பிக் குடித்தான், வெளிக்கிட்டான்.

"எங்கயடா போகின்றாய்?”

என்றேன்,

நின்றான்.

“சண்டைக்கு” என்று சத்தமிட்டுச் சொல்லிவிட்டுச்

சென்றான்.

இனியெங்கள் தேசம் பணியாது.

தாய்மண்ணைக் காதலிக்கும் தளிர்கள் இருக்குமட்டும்

பாய்விரித்தெம் தேசம் படுக்காது,

போர் செய்யும்!.

-புதுவை இரத்தினதுரை அண்ணை.

1 week ago | [YT] | 10

single reel

உலக வரைபடத்தில் ஒரு சிறிய நிலப்பரப்பை மீட்டெடுக்கப் போராடிய விடுதலைப் பு*லிகள் இயக்கம், ஏன் ஒட்டுமொத்த உலக நாடுகளாலும் வளைத்து வளைத்துத் தாக்கிக் குறி வைக்கப்பட்டது?

அதற்கான விடை 'தமிழீழ வைப்பகத்திலும்,அதன் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையிலும் (Bank of Tamil Eelam) ஒளிந்திருந்தது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒரு தனி தேசத்திற்கே உரிய (De-facto-state) அனைத்துக் கட்டமைப்புகளையும் கொண்டிருந்தனர்.

குறிப்பாக, அவர்கள் உருவாக்கிய 'தமிழீழ வைப்பகம்' (Bank of Tamil Eelam) மற்றும் அவர்களின் தன்னாட்சிப் பொருளாதாரம் உலக வங்கியியல் ஒழுங்கிற்குப் (Central Banking System) பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.

இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வங்கியியல் முறையின் கீழேயே (Central Banking System) இயங்குகின்றன. உலக வர்த்தகம் என்பது Petro-Dollar எனப்படும் அமெரிக்க டாலரிலேயே நடக்க வேண்டும் .

யாராவது ஒரு தலைவர் தனது நாட்டு வளங்களை டொலருக்கு மாற்றாகத் தங்கம் (Gold Standard) அல்லது வேறு ஒரு பொது நாணயத்தில் வர்த்தகம் செய்ய முயன்றால், அவர் உலக வங்கியியல் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்.

அவர்கள் உடனடியாக 'மனிதகுல எதிரியாக' ஊடகங்கள் மூலமாக சித்தரிக்கப்படுவார்கள்.
டொலருக்கு மிரட்டலாகவும் அல்லது தடையாக யாராவது இருந்தாலும் அவர்கள் 'சர்வாதிகாரிகள்' என்றும் 'பயங்கரவாதிகள்' என்றும் முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்படுவார்கள்.

ஈராக்கிய எண்ணெயை டாலருக்குப் பதிலாக 'யுரோ' (Euro) நாணயத்தில் விற்பனை செய்யத் துணிந்தார் சதாம் , விளைவு? பேரழிவு ஆயுதங்கள் (WMD) வைத்திருப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு ஈராக் தரைமட்டமாக்கப்பட்டது.

ஆபிரிக்கக் கண்டம் முழுமைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட Gold Dinar என்ற பொது நாணயத்தைக் கொண்டுவர முயன்றார் கடாபி. இது டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்குச் சவப்பெட்டியில் போட்டு ஆணியடிக்கும் செயல் என்பதால், லிபியா சிதைக்கப்பட்டு அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்களை அமெரிக்க டாலர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, 'பெட்ரோ' (Petro) போன்ற மாற்று வழிகளைத் தேடுவதால், இன்று மாதுரோ குறிவைக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் தூக்கிலிடப்படலாம் அல்லது மின்சாரக்கதிரையில் ஏற்றப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ வைப்பகம்(Bank of TamilEelam)உலக வங்கியின் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கியது.

டாலரின் ஆதிக்கத்தைப் புறக்கணித்துத் தமக்கென ஒரு நாணய முறையையோ அல்லது பண்டமாற்று முறையையோ புலிகள் முன்னெடுத்தால், அது ஆசியாவில் ஒரு 'பொருளாதார முன்னுதாரணமாக' மாறிவிடும் எனச் சர்வதேச சக்திகள் அஞ்சின.

குறிப்பாக, மத்திய வங்கிகளின் (Central Banks) வட்டி மற்றும் கடன் பிடிக்குள் சிக்காத ஒரு நிர்வாகம் உருவாவதை டொலர் ஏகாதிபத்தியம் ஒருபோதும் விரும்பாது.

டாலருக்கு அச்சுறுத்தலாக வளரும் எந்த ஒரு 'நிழல் பொருளாதாரத்தையும்' முளையிலேயே கிள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.

சிங்கள ராணுவம் மட்டும் புலிகளை அழித்தது என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமே. உண்மை என்னவென்றால் Rothschilds வங்கியியல் முறையை மீறிச் செயல்பட்ட ஒரு அமைப்பை வேரோடு பிடுங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.

அதனாலேயே அமெரிக்காவின் உத்தரவின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியுடன், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஆயுதம் தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி விடுதலை புலிகள் மீது மானுடநேயமற்ற போரை நடத்தியதோடு அப்பாவித் தமிழர்களையும் அழித்தொழித்தனர்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் அவர்களின் இராணுவ பலவீனம் அல்ல, அவர்களின் பொருளாதாரத் தன்னுரிமை. 'தமிழீழ வைப்பகம்' என்ற அமைப்பு, சர்வதேச வங்கி மேலாதிக்கத்திற்கு (Rothschilds Control) எதிராக தமிழீழ வைப்பகம் டொலர் கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியதே புலிகளின் பின்னணைவுக்கு முக்கியகாரணியாக அமைந்தது.

யாரெல்லாம் டொலரின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களோ, அவர்கள் அனைவரும் அழித்து ஒழிக்கப்படுவார்கள் என்பதே தற்போதைய கசப்பான உலக நியதி.

மதுரோவின் தற்போதைய நிலைமையும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

அமெரிக்கா எப்போதுமே தங்களின் 'டொலரி'ன் நிலைத் தன்மைக்காக எந்தவொரு இனத்தையும் காவு கொடுக்கத் தயங்காது.

எங்கள் இனத்தின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காததற்குக் காரணம், நீதிபதிகளே குற்றவாளிகளுடன் கைகோர்த்திருப்பதுதான்.

வி*டுதலைப் பு*லிகளின் 'தமி*ழீழ வைப்பகம்' முதல் மதுரோவின் 'பெட்ரோ' வர்த்தகம் வரை அனைத்தும் இந்த அதிகாரப் போட்டிக்கு இரையானவையே.
இது போல் நாளை இந்தியா போன்ற நாடுகளுக்கும் இந்தநிலை வரும் என்பதில் சந்தேகமில்லை.டாலருக்குப் பதிலான இந்திய ரூபாவின் உலகப் பயன்பாடு என்பது அமெரிக்காவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அண்மைக்காலமாக இந்தியாமீது அமெரிக்காவின் குற்றச சாட்டுகளும் கட்டுமீறிய வரி விதிப்புகளும் கோடிட்டுக் காட்டுகின்றன.

3 weeks ago | [YT] | 28

single reel

கேணல் கிட்டுவும் சீப்பியோவும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமப் பேரரசில் சீப்பியோ (Scipio) என்ற புகழ்பெற்ற படைத்தளபதி இருந்தார். அவர் பயணித்த கப்பல் காற்று சாதகமாக வீசாததால் எதிரிகளின் கரைப்பக்கம் ஒதுங்கியது, உடனே எந்த கலக்கமும் இல்லாமல் தனது வாளை எடுத்து தனது உடலில் பாய்ச்சினார். எதிரிகள் கப்பலில் புகுந்து உங்கள் தளபதி எங்கே என்று கேட்டனர். அதற்கு சீப்பியோ "தளபதி மிக நல்ல நிலையில் இருக்கிறார்" ( All is well with the commander ) என்று கூறி வீரமரணம் அடைந்தார். இந்நிகழ்வை அன்றைய புகழ்பெற்ற தத்துவமேதை செனக்கா (Seneca) இவ்வாறு புகழ்கிறார். "சீப்பியொவின் தந்தை வீழ்த்த முடியாது என நினைத்த எதிரி நாடான கார்தேசை (Carthage) வீழ்த்தினார். ஆனால் அவரின் மகன் அதைவிட பெரிய சாதனையை செய்திருக்கிறான். ஒரு நாட்டைக் கைப்பற்றுவது எளிது, ஆனால் இறப்பைக் கைப்பற்றுவதுதான் மிகக்கடினமானது. ஒரு தளபதிக்கு இதைவிட சிறந்த இறப்பு இருக்க முடியாது" என்கிறார்.

செனக்கா சாதரன மனிதர் இல்லை. அவர் நம்மூர் வள்ளுவர் போன்று அறம் சார்ந்த மேதை, பல புகழ்பெற்ற தத்துவ நூல்களை எழுதி இருக்கிறார். . அவர் இன்றும் மேற்குலகில் உயர்ந்த தத்துவமேதையாகப் பார்க்கப்படுகிறார். ஏன் அவ்வறான இறப்பு உயர்ந்தது என்பதற்கு ஆழமான அறம் சார்ந்த கருத்துக்களை வைக்கிறார். அது மிகபெரிய விளக்கம் என்பதால் அதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

தளபதி கிட்டுவின் இறப்பும் சீப்பியோ போன்றதுதான். சொல்லப்போனால் கிட்டுவைப் போல இறப்பை வென்ற போராளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். செனக்காவின் கருத்திலிருந்து நாம் உணரவேண்டியது இதுதான். இராசராசன் போர் புரிந்து கங்கை கடாரம் என பல வெற்றிகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் கிட்டு பெற்ற வெற்றி அதைவிட மிகப்பெரியது.

சீப்பியோவின் வெற்றியை செனக்கா புகழ்கிறார், அதுபோல கிட்டுவின் வெற்றியும் புகழப்படவேண்டியது. ஆனால் கிட்டுவின் அறத்தை புரிந்து கொள்ளும் நிலையில் தமிழ் சமூகம் இல்லை. ஊழல்வாதிகள், சாமியார்கள்தான் உயர்ந்த அறம் கொண்டவர்கள் போல பார்க்கப் படுகிறார்கள். தமிழ் சமூகம் அறத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இல்லை, அறம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் இருக்கிறது. இன்று திருவள்ளுவர் இருந்திருந்தால் கிட்டுவிற்கென்றே தனி அதிகாரம் எழுதி இருப்பார்.

It was a great deed to conquer Carthage, but a greater deed to conquer death. "All is well with the commander!" Ought a general to die otherwise, especially one of Cato's generals?

- Seneca in "Moral Letters to Lucilius"

கலாநிதி.சு. சேதுராமலிங்கம்

3 weeks ago | [YT] | 30

single reel

-காத்தான்குடி முஸ்லிம்கள் படுகொலையானது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட சதி-

தமிழீழ விடுதலைப்புலிகள் 1990.08.05 இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டாக ஈழநாதம் மக்கள் நாளிதழ் வெளியிட்டிருந்தது.

அதில் தெரிவிக்கப்பட்டது என்னவெனில்….

அண்மையில் முஸ்லிம் நாடுகளுக்கு ஆயுதம் வாங்க சிறிலங்கா அரசு தனது பாதுகாப்பு அமைச்சரை அனுப்பியது.

அதேவேளை தமிழீழத்திலும் இலங்கைத்தீவின் தென்பகுதியிலும் அரசின் மனித உரிமைமீறல்கள் தொடர்கின்றன.
இதனால் பல நாடுகள் சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்க மறுத்து வருகின்றன என விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியால் நேற்று விடுத்த அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும் அவ்வறிக்கையில் அரபு நாடுகளிடம் நிதியும் ஆயுதமும் பெற சிங்கள அரசு பல நாடகங்களை ஆடுகின்றது. முதலில் இலங்கையிலிருந்து இஸ்ரேலிய நலன்புரி அமைப்பை மூடியது. இப்போது முஸ்லிம் மக்களைக் கொலை செய்து விட்டு பழியைத் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சுமத்துகின்றது.

விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை கொல்கின்றார்கள் அவர்களை எதிர்த்துப்போராடவேண்டும் என அரபு நாடுகளில் ஆயுதங்களைப்பெறலாம் என சிங்கள அரசு திட்டமிட்டு செயல்படுத்துகின்றது.

சிங்கள அரசின் இத்திட்டத்திற்கு முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என தம்மைக் கூறிக்கொண்டு பதவிக்காக அற்ப சலுகைக்காகவும் சிங்கள அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிலர் துணை போகின்றனர்.

இஸ்ரேலின் மொசாட் அமைப்மை சிறிலங்காவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி அழைத்தபோது 1981 தை 21 ஆம் திகதி மொசாட்டின் முகவர் தி அவ்ர கூ காம் ஜோசப் உடன் பேச்சு வார்த்தை நடாத்தியவர் இன்றைய பாராளுமன்ற சபாநாயகர் எம்.எச்.முகமது. அவர் இன்று விடுதலைப்புலிகளுக்கு இஸ்ரேல் உதவி செய்து வருகின்றது என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்கள் திட்டமிட்டு சிங்கள மக்களால் கொல்லப்பட்டுவருகிறார்கள். அவர்கள் மண்ணில் இருந்து விரட்டப்படுகின்றார்கள். இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப்போ அல்லது அரசில் இருக்கும் எந்த முஸ்லிம் அமைச்சர்களோ குரல் கொடுத்தது கிடையாது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தை சிங்கள அரசு சிங்கள மாவட்டமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அத்துடன் அங்கு பெருமளவில் சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது. அங்குள்ள அரசாங்க அதிபர் கூட ஒரு சிங்களவர்.
இப்படிச் செயற்படும் அரசு இன்று தாம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடாத்தும் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் குழுவுக்கு தலைவராக ஒரு சிங்களவரை அனுப்பாது முஸ்லிமாக எம். எச். முகமதுவை அனுப்புகிறது.

சிங்கள அரசானது முஸ்லிம் ஊர்காவல்படையைக்கொண்டு தமிழர்களைக் கொல்கின்றது. தனது கூலிப்படைகளைக்கொண்டு முஸ்லிம்களைக்கொல்கின்றது. இதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்தழிக்க முயல்கின்றது.

முஸ்லிம்களின் கொலையை விடுதலைப்புலிகள் மேல் சுமத்துவதன் மூலம் தனது இனப்படுகொலையை சில துரோகிகளின் துணையோடு நியாயப்படுத்துவதன் மூலம் அரபு நாடுகளிடம் இருந்து நிதியையும் ஆயுதங்களையும் பெற நினைக்கின்றது.

சிங்கள அரசின் இத்திட்டமிட்ட சதியைத் தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளல் வேண்டும். எமக்கும் காத்தான்குடியில் நடைபெற்ற கொலைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்: முஸ்லிம்கள் ஆயுதங்களை ஒப்படைக்கும் காட்சிகள்.
Copy

1 month ago | [YT] | 12

single reel

“சல்லியர்கள்”

“சல்லியர்கள்” படம் எமக்காக எம்மீது நேசம் கொண்ட தமிழகம் பெற்றெடுத்த பிள்ளைகள் உருவாக்கியுள்ள திரைப்படம். உலகத்தால் தடுக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் ஆணிவேராக இருக்கும் உன்னதமானவர்களின் கதையை சொல்லி இருப்பது எம் மனங்களுக்கு மிக ஆறுதலாக உள்ளது.

இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? யார் இந்த சல்லியர்கள்? அவர்கள் பற்றி எதற்காக படம் எடுக்க வேண்டும்? என்று பல ஆயிரம் வினாக்கள் பலருக்கு எழலாம். ஆனால் அது அனைத்துக்கும் ஒரே விடை “அவர்கள் எம் தேசத்து சல்லியர்கள்” என்பது மட்டுமே.

“தமிழீழ மருத்துவப்பிரிவு” தமிழீழத்தின் ஒவ்வொரு அடி நிலத்திலும் போராளிகளுக்காகவும் மக்களுக்காகவும் முக்கிய பங்காற்றிய விடுதலைப்புலிகளின் படைப்பிரிவு. தமிழீழ மருத்துவக்கல்லூரியில், தமிழீழத் தாதியர் கல்லூரியில், மக்களுக்கான தமிழீழ சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில் கல்விகற்றுத் தேர்ந்த போராளி மருத்துவர்களும் போராளி தாதியர்களும் பொதுமக்களில் இருந்து உருவாகிய உதவி மருத்துவர்களும் என பல நூறு உறுப்பினர்களோடு இறுதி நாள்வரை பணியாற்றிய ஒரு பிரிவு.

மருந்துத்தடை, பொருளாதாரத்தடை, மருத்துவர்கள் தடை என்று உலகம் அனைத்தும் சேர்ந்து எம் மீது தடைகளை விதித்திருந்த போது எந்த சலனமும் இன்றி, சர்வதேச மருத்துவ உலகம் அதிரக்கூடிய வகையில் பணியாற்றியவர்கள். எந்த வளங்களும் இல்லாத இறுதி நாட்களில் கூட பல ஆயிரம் உயிர்களை காத்து நின்றவர்கள். அதனால் தான் அவர்கள் எம் தேசத்தின் சல்லியர்கள் ஆனார்கள்.

களமுனைகளில் மட்டுமல்ல, சுனாமியின் சீற்றம் என்றாலும், இயற்கையின் கோரம் என்றாலும் பாம்புகளின் விசக்கடி என்றாலும் அவர்களது பணி முனைப்பானதாக இருக்கும். ஒரு காலத்தில் (1996-2004) மலேரியாவால் உயிரிழப்புக்களைக் கணக்கிட முடியாது திணறிய வன்னி மண்ணின் மருத்துவத் துறையினரின் அதீத திறனாலும், செயற்பாடுகளாலும் மலேரியா-0 என்ற நிலைக்கு வன்னியை உருவாக்கி இருந்தார்கள். சிங்கள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தடுக்கவோ, முறியடிக்கவோ முடியாது திணறிய / இன்றும் திணறிக் கொண்டிருக்கும் இந்த மலேரியா நோய், தமிழீழ அரசின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இல்லாது அழித்தொழித்து வெற்றி கண்டது மருத்துவப்பிரிவு. இறுதி நோயாளி 2004 ஆம் ஆண்டு மாசிமாதம் வன்னியில் இறுதி நோயாளி இனங்காணப்பட்டார். அத்துடன் வன்னியில் மலேரியா - 0 என்ற நிலை உருவாக்கப்பட்டது. அது 2008 ஆம் ஆண்டுவரை நீடித்தது.

உலக சுகாதார நிறுவனத்தால் மலேரியாவை அழிக்க முடியாத பகுதிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்த முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழீழ அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எம்மால் எதையும் செய்து முடிக்க முடியும் என்று உலகிற்கே சவால்விட்டு வெற்றி கண்டது எமது மருத்துவப்பிரிவு. அதனால் தான் அவர்கள் எம் “சல்லியர்கள்” ஆனார்கள்.

அது மட்டுமல்ல புத்தளம் பகுதியில் இருந்து பள்ளமடுவிற்கு ஒரு நோயாளியினூடாக பரவத் தொடங்கிய கொடுங்கொல்லி நோயான கொலரா நோயினை இனங்கண்டு, அந்த பிரதேசத்தை முழுமையாக தமது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து யாரும் உள்வரவோ அங்கிருந்து வெளியேறவோ அனுமதி மறுத்து அவர்களை அந்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் செய்து, கொலரா நோயினால் ஏற்படவிருந்த பாரிய அளவிலான சாவுகளை தடுத்தது மட்டுமல்லாது, உடனடியாக எங்கிருந்து இந்த நோய் காவப்பட்டதோ அதன் தொடர்ச்சியை இனங்கண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக சிறீலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தி சிங்கள மக்களையும் அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையைச் செய்ததும் எம் மருத்துவப்பிரிவே.

அவர்களில் பலர் பல்கலைக்கழகங்களில் மருத்துவக்கலாநிதி பட்டம் பெற்றவர்கள். பலர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்களால் தமிழீழ மருத்துவக்கல்லூரியில் வைத்து வளர்க்கப்பட்டவர்கள். பலர் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த தமிழ் மருத்துவப் பேராசிரியர்களாலும் கலாநிதிகளாலும் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். பலர் சர்வதேச நாடுகளில் இருந்து வந்த பேராசிரியர்களாலும் மருத்துவக்கலாநிதிகளாலும் கற்பிக்கப்பட்டவர்கள். சிலர் சர்வதேச நாடுகளில் கற்று மீண்டவர்கள். இன்னும் பலர் பணியில் இருந்த அரச மருத்துவக்கலாநிதிகளாலும் தமிழீழ மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்ற மருத்துவர்களாலும் வளர்க்கப்பட்டவர்கள். இவ்வாறு ஏராளமானவர்கள் சல்லியர்களாக இருந்தார்கள். மேல்தேச மற்றும் இயற்கை மட்டுமல்லாது தமிழ் மருத்துவ முறமைகளை எம் மக்களுக்காக நெறிப்படுத்தியவர்கள். அதனால் தான் இன்றும் “சல்லியர்களாக” நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

இன்றும் எம் கிளிநொச்சி முல்லைத்தீவு எல்லை கிராமம் ஒன்றில் மூலிகைக்காடு ஒன்று இருப்பதை அனைவரும் அறிவீர்கள். அதை உருவாக்கி வளர்த்தெடுத்ததும் இந்த சல்லியர்களே.

விழுப்புண்ணேற்கும் நெஞ்சுரம் கொண்டவர்கு
அவர்களின் பதுங்ககழிகள் நம்பிக்கையூட்டும்.
பெற்ற தாயாய் அவர்கள்
விடும் மூச்சுக் காற்றின் வீச்சில்
உயிர் காத்துவிடும் துடிப்பு அடங்க மறுக்கும்
அருகினில்,
குண்டு மழை பொழியும்
பதுங்ககழி மேலே வானேறிகள் போட்ட
கந்தக முட்டை வெடித்து சிதறும்
முன்னேறும் எதிரியின் துப்பாக்கிரவைகள்
அவர்கள் உடலைக் கிழிக்கும்
இருந்தும் அவர்கள் கால்கள் சோர்ந்து போனதில்லை.
அவர்களின் கரங்கள் இயங்க மறுத்ததில்லை.
துடிக்கும் அவர்களின் இதயம்
மேசையில் உயிருக்காக துடிக்கும்
அவனுக்காகவோ அவளுக்காகவோ மட்டுமே துடிக்கும்

தம் உயிர் காக்கும் துப்பாக்கியை விட
தம் பசி போக்கும் உணவுகளை விட
சகோதரர் உயிர் காக்க
மருத்துவப்பையையே அவர்கற் அதிகம் சுமந்தார்கள்
கனம் அவளின் தோழ்மூட்டை அழுத்தும்
நடக்கும் வேகத்தை குறைக்கும்
வேதனை எழுந்தாடி அவர்களை நிலைகுலைக்கும்
இன்னும் ஓரடி வேகம் எடுத்தால்
வேறொரு உயிர் காக்கப்படும் என்ற
உன்னதம் வந்து அவர்கள் மனதை நிறைக்கும்
அவர்களின் கால்கள் மீண்டும் வேகம் எடுக்கும்.
பாரம் முழுவதும் பஞ்சனையாகும். அதனால் தான் அவர்கள் சல்லியர்கள் ஆனார்கள்.

களங்களில் பதுங்ககழிகள் எதுவும் இன்றி திறந்த வெட்டை வெளியில் கூட கள மருத்துவம் செய்தவர்களும். களமுனையில் இருந்து மிக அருகிலே தமது மருத்துவ அகழிகளை அமைத்து மேலதிக சிகிச்சைகளூடாக மரணத்தை தடுத்தவர்களும் தள மருத்துவ நிலைகளில் பெரும் சத்திரசிகிச்சைகளை கூட பல பல்கலைக்கழகங்களில் கற்றும் தேர்ந்த முதுநிலை மருத்துவர்களைப் போன்று சாதாரணமாக செய்தவர்களும் எங்கும் சென்று படித்து தேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் தமிழீழத்தில் தமிழீழ தேசியத் தலைமகனால் உருவாக்கிய கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தேர்ந்தவர்கள் அந்த தமிழீழ அறிவை வைத்து அவர்கள் செய்த மேன்மையான பணிகள் என்பது வார்த்தைகளில் வரிக்க முடியாதவை. அதனால் தான் அவர்கள் எம் சல்லியர்கள் ஆனார்கள்.

அவர்களுக்கு அண்ணன் கூறி வளர்த்தது வெறும் வார்த்தைகளால் அல்ல. உணர்வுகளால் அதனால் தான் அவர்கள் தம்மிடம் கரம் தூக்கி சரண் அடைந்த எதிரியை கூட காக்க முடிந்தது. அவனுக்காக தங்கள் குருதியை கொடுக்க முடிந்தது. ஏனெனில் அண்ணன் கூறும் வார்த்தைகள் அவ்வளவு உணர்வுள்ளது. “ நீங்கள் விடுதலைப்புலிகளின் மருத்துவர்கள். நீங்கள் போராளிகளுக்கான மருத்துவத்தை மட்டும் அல்ல எம் மக்களுக்கான மருத்துவத்தையும் செய்ய வேண்டும். அதை விட எமது எதிரிப்படை வீரன் ஒருவன் உங்களிடம் சரணடைந்தாலோ அல்லது அவன் காயப்பட்ட நிலையில் அல்லது குற்றுயிரில் மீட்கப்பட்டு உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டாலோ அந்த நிமிடம் நீங்கள் ஒரு மருத்துவராக மட்டுமே பணி செய்ய வேண்டும். அவன் எதிரி என்பதை நீங்கள் நினைவுகளில் இருந்து அகற்றி அவனின் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மட்டுமே செய்யவேண்டும். நீங்கள் இதை எல்லாம் நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.” என்று தமிழீழ மருத்துவக்கல்லூரியின் நிகழ்வொன்றில் மருத்துவக்கல்லூரி மருத்துவமாணவர்களுக்கு அறுவுறுத்திய அவரது வார்த்தைகளை அவர்கள் இறுதிவரை பேணிப்பாதுகாத்தார்கள். அதனால் தான் அவர்கள் எம்முள் இன்று சல்லியர்கள் ஆனார்கள்.

தமிழீழத்தின் சல்லியர்களில் ஒருவராக வாழ்ந்து தன் எழுத்து வலிமையால் எம் வலிகளையும், உணர்வுகளையும், வலிமையையும், களநிலவரங்களையும், போராளிகளின் இன்பதுன்பகளையும், அவர்களது வாழவியலையும் உண்மையாய் உரத்து கூறிய எங்களின் அண்ணன் போராளி மருத்துவர் தூயவன் அவர்களுக்கு முதலில் மனம் நிறைந்த நன்றிகள். அவரின் உண்மைச் சம்பவங்களின் தொகுப்புக்களில் இருந்து பிறந்ததே இந்த “சல்லியர்கள்”. திரைப்படம்.

இந்த நேரத்தில் எங்களை தம் மருத்துவத்தினால் காப்பாற்றிய தமிழீழத்தின் அத்தனை சல்லியர்களுக்கும், அவர்களை வளர்த்தெடுத்த அத்தனை ஆசான்களுக்கும் பொறுப்பானவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். மிக மிக முக்கியமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள மருத்துவப்பிரிவுப் பொறுப்பாளர் ரேகா அவர்கள் என் நினைவில் எழுகிறார். அது மட்டுமன்றி மருத்துவ நிர்வாகப் பணிகளைச் செய்த மருத்துவ நிர்வாகப் போராளிகள் பொறுப்பாளர்கள் என அனைவருமே நெஞ்சில் நிறைகிறார்கள்.

“சல்லியர்கள்” திரைப்படத்தை உருவாக்கிய சகோதரன் திருமிகு கிட்டுவிற்கும், தயாரித்த திருமிகு கருணாஸ் மற்றும் திருமிகு கரிகாலனுக்கும் வெளியீடுசெய்த திருமிகு சுரேஸ் காமாட்சி அவர்களுக்கும் வரிகளால் வளமூட்டிய திருமிகு வைரமுத்து அவர்களுக்கும் இசையால் மெருகூட்டிய திருமிகு ஹென் மற்றும் திருமிகு ஈஷ்வர் அவர்களுக்கும் சல்லியர்கள் உருவாக்கத்தில் பங்கெடுத்த தாயக, தமிழக உறவுகள் அனைவருக்கும் என் நன்றிகள்.

சில சொல்லாடல்களும் சில காட்சியமைப்புக்களும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஒரு கெரில்லா போராளிகளாக இருந்து மரபுவழி இராணுவமாக மாறிய இந்த சல்லியர்கள் வெள்ளை உடையோடு பயணிப்பது கொஞ்சம் நெருடுகிறது. ஆண் போராளிகள் பெண் போராளிகளைப் போல இடுப்புப் பட்டி அணிந்திருப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது. தொடர்பாடல்களில், இடங்களின் பெயரிடல்களில் என் மனதிற்கு கொஞ்சம் நெருடல் வருகிறது. ஆனால் அதெல்லாம் பெரும் தவறுகள் அல்ல. சிறு நெருடல் மட்டுமே. இடம் சூழ்நிலை என்பவற்றுக்கேற்ப காட்சியமைக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்கிறேன்.

பல இடர்களை கடந்து வந்திருக்கும் “சல்லியர்கள்” திரைப்படத்தை நாம் நினைவேற்ற வேண்டியது கடமையாகிறது. அவர்களோடு தோழ்நிற்க வேண்டியது பொறுப்பாகிறது. திருமிகு கிட்டு தொடர்ந்தும் எம் தொடர்பான படைப்புக்களை தருவதற்கு முனைப்புடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகை செய்கிறேன். இன்னும் இன்னும் ஆழ்ந்து எம்மை பற்றி ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். “ மேதகு 1 போல சல்லியர்கள் போல தொடர்ந்தும் தமிழீழக் கதைகளை உருவாக்க வேண்டுகிறேன்.

எனக்குத் தெரிந்த தமிழீழத்துக்காக தம்முயிர் ஈந்து விதையாகிய தமிழீழத்து சல்லியர்களையும் இந்த இடத்தில் நினைவேந்துவது கட்டாயமாகிறது.

லெப்.கேணல் கமலினி,
லெப். கேணல் நீலன்
லெப்.கேணல் இசைவாணன்
லெப்.கேணல் தமிழ்நேசன்
லெப்.கேணல் காந்தன்
லெப்.கேணல் வளர்பிறை
லெப்.கேணல் சத்தியா
மேஜர் அல்லி
மேஜர் வினோதரன்
மேஜர் அபயன்
மேஜர் எஸ்தர்
மேஜர் சிந்தனைச்செல்வன்
கப்டன் கீர்த்திகா
கப்டன் யாழ்வேள்
கப்டன் அன்பானந்தன்
கபிலன் ( நிலை தெரியவில்லை)
கப்டன் நிலவரசி
லெப் இன்மதி
கப்டன் நியூமன்

எனக்குத் தெரியாமல் எத்தனையோ மருத்துவப் போராளிகள் தம் உயிர்களை ஈந்து எம் மண்ணுக்காக விதையாகி இருப்பார்கள். அவர்களை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள். அவர்களையும் இந்த நேரத்தில் நினைவேந்துவோம்.

அதுமட்டுமல்ல, இன்றும் எம்மோடு உயிர் வாழ்வோர் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என எத்தனை எத்தனை வேங்கைகள் சல்லியர்களாக எம் மண்ணில் வாழ்ந்தார்கள் என்ற பெரும் நினைவு வந்து நெஞ்சை நெருடுகிறது.

நன்றியோடு
இ.இ. கவிமகன்
11.01.2026
தி. கிட்டு Suresh Kamatchi

1 month ago | [YT] | 0