தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிரிகேடியர் துர்க்கா எழுதிய கடைசிக் கடிதம் .
“அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் தமிழீழத் தேசியத்தலைவருக்குக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்கள் எழுதிய இறுதி மடல். உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தேசியத்தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார். ஆனாலும், அந்தக் கடிதத்தில் இருந்த “மக்கள் என்கின்ற சொல் தேசியத்தலைவரை மிகவும் நெகிழச்செய்தது. அதுவே அவரை ஆனந்தபுரத்திலிருந்து வெளியேற்றியது. அந்தக் கடிதத்தைத் தேசியத்தலைவர் அவர்களுக்கு எழுதியது சோதியா படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்கா. உண்மையிலேயே அவளது தோற்றத்துக்கும் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்கவில்லை. மெலிந்த சிறிய உருவம். எப்போதும் புன்னகை மாறாத முகம். துள்ளித்துள்ளி ஓடும் மான்குட்டி போல அவள் நடையின் வேகம். முடியாது என்பது அவரது அகராதியில் எப்போதும் இருந்ததில்லை.
தெரியாது என்று எதனையும் விட்டுவிட்டு அவள் ஒதுங்கியதும் இல்லை. எல்லாப் போராளிகளையும் புதியவர், பழையவர் , பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றிப் பார்க்கும் அவரது குணம், கடுமையாகப் பேசவோ, கண்டிக்கவோ தெரியாத அன்பு நிறைந்த அவளது பேச்சு எல்லாப் போராளிகளுக்குமே அவள்மீது பிடிப்பினை ஏற்படுத்தியது. “என்னடாப்பா… நீங்கள்….” இந்த வார்த்தை அவரது வாயிலிருந்து வருகின்றது என்றால் அவர் கடுமையான கோபத்தில் இருக்கின்றார் என்பது அர்த்தம். கோபத்தில் கூட கடிந்து பேசத் தெரியாத போராளி. தேசியத்தலைவர் அவர்கள் பயிற்சியின்போது ஒவ்வொரு போராளிகளையும் நன்கு இனங்கண்டு பயிற்சி நிறைவடைந்தபோது அனைவரையும் ஒவ்வொரு பிரிவுக்குப் பிரித்துவிடுகின்றபோது துர்க்காவுக்கு வழங்கப்பட்டபணி மருத்துவப்பணி. ஒரு மருத்துவப் போராளிக்கு இருக்கவேண்டிய அனைத்துத் தகுதியுமே அவளிடம் நிறையவே இருந்தது. அதேபோல் காலப்போக்கில் புதிய போராளிகளுக்கான பயிற்சிகளை வழங்குகின்ற பாசறைகளை வழிப்படுத்துகின்ற பொறுப்பு அவளுக்கு வழங்கப்படுகின்றது. அதுவும் அவளுக்கு மிகவும் பொருத்தமான பணியாக இருந்தது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள், சோதியா படையணியை உருவாக்கி அதனுடைய சிறப்புத் தளபதியாக துர்க்காவை நியமித்தபோது உண்மையிலேயே பலரிடம் பலகேள்வி இருந்தது. ஏனெனில் இந்தப் பெரும்பணியை ஒப்படைக்கும்போது அவள் ஒன்பது பேர் கொண்ட அணிக்குத் தலைவியாக இருந்தாள். படையணிப்பொறுப்பை எடுத்தபோது உண்மையிலேயே அவளுக்குக் குறிபார்த்துச் சுடுவது என்பது சரியாக வராது. படையணிக்கான பயிற்சிகள் நடைபெறும்போது சளைக்காமல் ஓய்வு என்பதே எடுக்காது தான் அந்தப் படையணியின் சிறப்புத் தளபதி என்ற எண்ணம் ஒருதுளிகூட இன்றி, போராளிகளோடு போராளியாக நின்று, ஒவ்வொரு அணியணியாகப் பிரித்து சூட்டுப்பயிற்சிகள் வழங்கப்படும் போது, ஒவ்வொரு அணியோடும் சென்று ஓய்வோ சோர்வோ இன்றி சூட்டுப்பயிற்சியை எடுத்தார். எல்லோருக்கும் ஓய்வு வழங்கப்படும்போது கூட துப்பாக்கியை எடுத்து குறிபார்ப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எப்போது பார்த்தாலும் அவளது கை நீட்டிக் குறிபார்த்தபடியே இருக்கும். கடின உழைப்பு, விடாத முயற்சி விரைவிலேயே சிறந்த சூட்டாளராக அவளை மாற்றியது. அவளுடன் நின்ற தோழிகள், அணித்தலைவர்கள் எனப் போராளிகள் ஓர்மத்துடன் நின்று களமுனைகளை எதிர் கொண்டு நின்றனர். போரியலில் நல்ல ஆளுமையைப் போரிடும் பேராற்றலை தனக்குள்ளே வளர்த்துக் கொண்ட தளபதி துர்க்கா அவர்கள்,சமர்க்களங்களில் நாயகியாய், களமுனைகளில் போராளிகளை வழிப்படுத்தும் நல்ல தளபதியாய் வெற்றிகள் பல படைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே மீண்டும் விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கவைத்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் இறுதிவரை போராடி, எம் தேசத் தலைவனைப் பத்திரமாகக் காப்பாற்றி விட்ட மனநிறைவுடன் ஆனந்தபுர மண்ணில் வரலாறாகிப் போனாள். ஆனந்தபுர மண் என்பது வீரவரலாறு படைத்த வரலாற்றுமண். அந்த மண்ணில் சிறிலங்காப் படைகளின் பெரும் முற்றுகையைத் தடுத்து,சிங்களப் படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி ஓர்மத்துடன் போரிட்ட போராளிகளுக்குக் கட்டளை வழங்க, ஈற்றில் நேரடியாக சிங்களப் படைகளோடு போரிட்டு வீரசாதனை படைத்து வீரகாவியமானார் பிரிகேடியர் துர்க்கா
தமிழீழ மண் ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டு, கொதித்தெழுந்து தமிழ் மண் காத்திடத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார் மணிவண்ணன் அவர்கள்.இவர் பயிற்சிகளை முடித்து விடுதலைப் போராட்டப் பணிகளைத் தொடர்ந்தார்.தொடக்க காலத்திலேயே தளபதி கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பணியை தன்னகத்தே ஏற்று அர்ப்பணிப்போடு பணிகளை முன்னெடுத்தார். தொழிநுட்பத்துறை சார்ந்த பணிகளோடு ஏனைய பணிகளையும் ஆற்றிவந்தார். தளபதி கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்குப் பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாகத் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயற்பாட்டுக் காலப்பகுதியில் பல முக்கிய தாக்குதல்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதோடு, பெரும் இழப்புகளையும் சிங்களப்படைகள் சந்தித்திருந்தது.தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்த சிறிலங்கா அரச படைகள் , தம்முடைய நகர்வுகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடியது. கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் துல்லியமான தாக்குதல்கள் சிறிலங்காப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்ககது.
பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை - பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் ,சிறிலங்கா அரச படைகள் திட்டமிட்டு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கெதிரான முறியடிப்புத் தாக்குதல்கள்,வலிந்து தாக்குதல்கள் என, தளபதி பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்டவையாகும்.இக்காலப்பகுதிகளில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது மட்டுமன்றி தொடர்ந்தும் இராணுவ முகாங்களைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறியது என்பதும் உண்மையே. அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூட்டின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இராவத்தின் மனோநிலைகளை தகர்த்து போராளிகளின் மனோ வலிமையை அதிகரித்து, விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்தியம் மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான்.கேணல் கிட்டு பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் கட்டளைக்கு அமைவாக சவால்கள் நிறைந்த களமுனைகளை எதிர்கொண்டு,மிக வேகமாக ஆட்லறிகளை இடம் நகர்த்தி அவற்றைப் பாதுகாத்து வந்தமையானது நாளாந்த போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது.
தமிழீழ மண்ணை ஆக்கிரமிக்க முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் படைவலிவையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த சூழலில் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சுற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்தன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்தினரின் மீது நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு,படைகளுக்குத் திகைப்பையும் பெரும் அழிவையும் கொடுத்தன. 2009 இல் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வன்வளைப்பிற்கு உட்படுகிறது,கடுமையான தொடர் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.முன்னேறிவரும் இராணுவத்திற்கெதிராக பீரங்கிப் படையணி செறிவான சூட்டை வழங்கிக் கொண்டிருந்தது. அந்நெருக்கடியான சூழலில் உடனடியாக ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி ,சிங்களப் படைகள் சிதறி ஓடுமளவிற்கு நேரடியான தாக்குதல்களை படையினர் மீது மேற்கொள்ளப்பட்டது.தாக்குதலில் ஈடுபட்டிருந்த சிங்களப் படையணிகள் முன்னேற மறுக்கின்றன. அந்தளவிற்கு பாரிய இழப்புக்களை சிறிலங்காப் படைகள் ஆனந்தபுர மண்ணில் சந்தித்தன.களத்தில் நின்ற போராளிகளின் தீரமிகு தாக்குதல்களும் மோட்டார் பீரங்கிப் படையணிகளின் செறிவுடன் கூடிய துல்லியமான தாக்குதல்களும் பாரிய அழிவினைச் சிங்களப் படைகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் இருந்தன. பெரும் போர் நடந்து கொண்டிருந்த,அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
அந்தக் களமுனையிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகள் பலர் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.ஆட்லறிப் பீரங்கிகள் துப்பாக்கிகள் போன்று, சிங்களப் படைகளின் நிலைகளையும் முன்னேறும் படைகளையும் தாக்கியளித்துக் கொண்டிருந்தது.அவ்வாறு வரலாறு படைத்த ஆனந்தபுர மண்ணிலே கட்டளை வழங்கியபடியே, பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் உடலில் குண்டேந்தி மாவீரனாக வீரவரலாறானார். இந்த வரலாற்றுப் போரில் பல தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்கள். அவர்கள் காட்டிச்சென்ற வரலாற்றுப் பாதையில் நாமும் உறுதியுடன் பின் தொடர்வோம்.
செந்தூரன் சிலைச் சந்திக்கு அருகில் ஒரு மயானம் இருந்தது பெரும் சண்டைகளின் பின் அவ் மயானத்தின் கல்லறைகள் சிதறுண்டு கிடந்தன மாடுகள் இறந்து எழும்புகளாய் இருந்தன கைக் குண்டுகளும் ஏகே 47 ஒன்றும் பரவிக்கிடந்தது கொஞ்சம் சனநெரிசலில் துர்நாற்றம் மறந்துபோயிருந்தது தேங்காய் மாங்காய் என பறித்து பசியை போக்கிக் கொண்டிருந்தார்கள் அப்போதுதான் யார் பெத்த பிள்ளையோ தெரியல தம்பி ஒருவனின் உடல் கிடக்கிறதெனச் சொன்னார்கள் பத்துப் பதினைந்து நாட்கள் வரும் இறந்து வரியுடையில் சேட்டும் கறுத்த ஜீன்ஸூம் அணிந்த ஒரு புலி வீரன் ஓடியபடி உயிர் நீர்த்திருந்தான் போராளியொருவன் பாட்டா கூட கால்களில் இருந்து கழறவில்லை எங்களால் என்ன செய்ய முடியும் எங்களுக்கும் அதே நிலைதானே என நினைத்துக்கொண்டு சென்றோம் இப்படி களமுனைகளில் வீரமரணம் அடைந்த போராளிகள் ஏராளம் ஒரு துளி கண்ணீர் கூட சிந்த முடியாத நிலை . ஆயிரம் ஆயிரம் வரலாறுகளை எழுதிச் சென்றவர்கள் எம் வீர மறவர்கள்.🔥 Copy
செம்மணியில் 600 பொதுமக்களை கொ*ன்று புதைத்த கொ*டூர சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான கப்டன் லலித் ஹேவா (தற்போது ஓய்வு பெற்ற பிரிகேடியர்) தனது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடியிருக்கின்றார்
செல்வி கிரிசாந்தி கொ*லை வழக்கு தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சே செம்மணி புதை*குழி தொடர்பாக அடையாளம் காட்டப்பட்ட கப்டன் லலித் ஹேவா தற்போது வரை மிக சுதந்திரமாக இருக்கின்றார்
திரு அனுர குமார திசாநாயக்க அதிகாரத்திற்கு வந்த பின்னர் செம்மணி மனிதப்புதை*குழி விவகாரம் குறித்து சோமரத்தின ராஜபக்சே தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கி, இவ்விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையைக் கோரி அவரது மனைவி திரு அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய, திரு ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்
குறித்த கடிதத்திலும் 7 ஆவது காலாட்படை தலைமையகத்தின் அதிகாரியாகவிருந்த கப்டன் லலித் ஹேவா தலைமையிலான அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்டு 7 ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சி*த்திரவ*தைகளுக்கு உட்படுத்தப்பட்டு ப*டுகொ*லை செய்யப்பட்டவர்களின் உடல்கள் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு புதை*க்கப்பட்டதை பதிவு செய்திருந்தார்
விசேடமாக கப்டன் லலித் ஹேவாயின் ஆலோசனைக்கு அமைவாகவே காலை 9.00 மணி முதல் மாலை 4.00 - 6.00 மணி வரை நாளாந்தம் இந்த செம்மணி சோதனைச்சாவடியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் செம்மணி சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் சொல்லியியிருந்தார்
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாலை 4.00 மணியின் பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7 ஆவது காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பதிவு செய்திருந்தார்
அங்கு ப*லியெடுக்கப்பட்டோர் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டு பு*தைக்கபட்டதாகவும் எழுதியிருந்தார்
செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருந்ததாக விரிவாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்
யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல படு*கொ*லைகள் மற்றும் சித்*திரவ*தைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்கும் எனது கணவர் தயாராக இருப்பதாகவும் தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சேவின் மனைவி திரு அனுரா குமார திஸாநாயக்காவிற்கு எழுதிய கடிதத்தில் விரிவாக எழுதி இருந்தார்
ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் எனது கணவர் அளித்த வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுங்கள் எனவும் கேட்டு இருந்தார்
இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்
அதே போல சர்வதேச விசாரணையொன்றில் கூட சாட்சியமளிப்பதற்குத் கூட தனது கணவர் தயாராக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்
இந்த கடிதம் எழுதப்பட்டு 8 மாதங்கள் கடந்து விட்டது. எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை
குறிப்பாக கப்டன் லலித் ஹேவா உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வழக்குக்கு என்ன நடந்தது என்பது பற்றி கூட இன்று வரை எந்த தகவல்களும் இல்லை
மறுபுறம் 600 பேரை திட்டமிட்டு சித்தரவதை செய்து கொ*ன்ற பிரதான கொ*லையாளி குற்றச்செயல்கள் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின்னரும் மிக சுந்திரமாக பிறந்த நாள் கொண்டாட அனுமதித்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள்
சுடுகருவி தாங்கிய வீரர்களோடு சுடமுடியாத கருவி கொண்டு களமுனையெங்கும் உலாவந்தாவள் களப்புலிகள் வீரத்தை புகைப்படக்கருவிக்குள் சிறைப்பிடிக்க நெருப்பு மழைக்குள்ளும் நிமிர்தியவள் நின்றாள்
இவள் சிந்தனைத் தூரிகைகள் வரைந்த அந்த ஒளிஓவியங்கள் உலகத் திசையெங்கும் தாயக வீரத்தை முரசறைந்து கொண்டிருக்கும் வேதனையின் வாடுகின்ற உறவுகளின் கோலங்களை வெளியுலகொங்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பொய்தனை பரப்பும் பகைவனின் செய்தியை பொய்களாக்கும் வரிப்புலிகள் சேனைக்குள் கலைப்புலியாய் இவள் மிளிர்ந்தாள் களம் நடுவே புகைப்படக்கருவியுடன் இவள் மடிந்தாள் வரலாற்றை பதியும் வேளை வரலாறாய் வீழ்ந்தவளே நீ பதித்த காலப் பதிவுகள் போல் என்றும் நீ வாழ்வாய் எம்மோடு எங்கள் நெஞ்சில் உந்தன் தாகம் சுவட்டில் உந்தன் பாதம்
ஓயாத அலைகள்-3 நடவடிக்கையின் போது மாமுனை குடாரப்புப் பகுதியில் தரையிறங்கி கண்டி வீதியை ஊடறுத்து நிலை எடுத்திருந்த வேளை சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதலை படம்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை இவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்
“எப்படிப் பட்டவர்கள் எம் மக்கள்? " மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியே எப்பொழுதும் மேலெழுகின்றது. " சூரியப் பிரகாசம் 1 இன் போது, கட்டிய துணியோடு கைதடி தாண்டுகையில் கேட்கப்பட்ட கேள்வி இது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் விழி பிதுங்கி. வாய் மூடி மௌனித்துப் போனது சிங்கள அரசு.
இப்பொழுதும் அதே கேள்வி மேலெழுகின்றது. ஆனால், இப்பொழுது வேறுபாடு என்ன வெனில், சிங்களம் உரக்கக் கத்துகின்றது; வானுக்கும் மண்ணுக்கும் துள்ளிக் குதிக்கின்றது; யாழ்ப்பாணம் திரும்பிய மக்களைத், தனது நாளேடுகளின் தலைப்புச் செய்திகளை உருவாக்கும் மாந்தராக்குகின்றது; வண்ண வண்ண ஒளிப்படங்களின் நாயக, நாயகிகளாக்குகின்றது; எம்மக்கள் அங்கு என்ன செய்தாலும், அவர்கள் தோசை சுட்டு விற்றாலும், ஆட்டு மந்தை மேய்த்தாலும் அதனையே அதிசயச் செய்தியாக்குகின்றது.
யாழ்ப்பாணம் திரும்பும் மக்களை, வாழும் போது இறந்தோர் திரும்புகின்றனர்" என்றும், செத்த நகராகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண மண் சிங்களப் படையின் சீரிய பாதம்பட்டு அகலிகை உயர்த்தாற்போல் உயிர்க்கின்றது என்றும் வர்ணிக்கின்றது; யாழ்ப்பாண நகரைக் கட்டியெழுப்பி யாழ் மக்களை மீண்டும் கல்விக் கடலுக்குள்ளும், வேளாண்மைத் தொழிலுக்குள்ளும் முற்றிலுமாக மூழ்கடிக்கப் போவதாகவும் பெருமையடித்துக் கொள்கின்றது. எவ்வளவு பரிவு... எவ்வளவு அன்பு .. எவ்வளவு கரிசனை,,,,,,
எனவே, இப்படிப்பட்டவர் தான் தமிழ்மக்கள் என்கிறது சிங்களம். கிடுகு வேலிக்குள் அதுவே உலக மென்றும், தானுண்டு, தனது குடும்பம். தோட்டம், அரசாங்கத் தொழிலுண்டு என்றும், அடக்க ஒடுக்கமாக வாழ்ந்த மக்களிடையே, புலிகள் போன்ற பயங்கரவாதிகள் தோன்றியது ஒரு தற்செயல் விபத்து. இப்போது, எல்லாமே சரியாகி விட்டது. இம் மக்கள் இரண்டொரு வார இலவச உணவுப்பங்கீட்டினைப் பெறுவதையும், இ போ.ச. நவீன வண்டியில் இருந்து போவதையும், சதோச சலுசலாவில் சகாய விலையிற் பொருட்கள் வாங்குவதையும் இடைக்கிடை வந்து, இல்லாமலே போகும் மின்னொளியைக் காண்பதையுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாகக் கருதும் எளிமையான மக்கள். அதனால்தான், "அவர்கள் புலிகளைக் கைவிட்டு எம்பக்கம் வந்துவிட்டனர்" என்கின்றது சிங்களம். ,
"இல்லை இல்லை; இதுவல்ல உண்மை; யாழ்ப்பாணத்தார் அப் படியானவர் அல்லர். தமது உழைப்பால் தேடிய தோட்டங்களில், வீடு வாசல்களில், நிம்மதியாக, வசதியாகத் தனிமையாக வாழ விரும்பும் மத்தியதர வகுப்பு மனநிலை கொண்டவர்கள். எனவே தான் அவர்கள் வலிகாமம் திரும்பினர்." என்கிறார், த. வி. கூட்டணிக்குத் தள்ளாத வயதிலும் தலைமை தாங்கும் சிவசிதம்பரம். "புலிகளை வெறுத்தும்தான், மறுத்தும்தான்-மக்கள் வலிகாமம் வந்தார்களா?" என்ற சிங்களத்துச் செய்தியாளரின் கேள்விக்குச் சிவசிதம்பரம் மட்டுமல்ல, புலிகளை எதிர்க்கும் தமிழ்க்குழுக்கள் கூட பதில் சொல்ல மறுத்து விட்டனர். அது உண்மையல்ல என்பது மட்டுமன்றி; ''ஆம்'' எனத் தாம் அளிக்கும் பதில், தம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பேரம் பேசும் ஆற்றலையும் இழக்க வைத்து விடும் என்கிற பயமும் இவர்கட்கு மிகுதியாக உண்டு. அதனால் தான் புலிகளை அழிக்க விரும்புவோர் கூட, தாம் அரசியல் அநாதைகள் ஆகி விடாமல் தமது அரசியல் வாழ்வைத் தக்க வைக்கப் புலிகளையே நம்பியிருக்கிறார்கள். இது ஒரு விசித்திர நகை முறண் என்பது வேறு விடயம் தான். எனவே, மீண்டும் அக்கேள்வி எழுகின்றது. "இப்படிப் பட்டவர்களா எம் மக்கள்" ?
அல்லது, ஆய்வாளர், அறிஞர், அறிவுஜீவிகள் எனத் தம்மை, தாமே அழைப்போர் கூறிக்கொள்வது போல நிலவுடமைச் சமூகத்தின் அடிப்படைகளை கொண்ட இன்னமும் சாதியடிப்படையிலான ஒரு சமூக அதிகாரப் படி நிலை முறைமையைப் பின்பற்றுகிற. அதன் மூலம் தனது சமூக அதிகாரப் பேணலைக் காப்பாற்ற விரும்புகின்ற, அதற்காக ஆளும் அதிகாரமுடையோரோடு அவர் எவராயினும் சரி இணக்கமாகச் செல்லும் இயல்பு உடையவர்களா எம் மக்கள்? நாவலரிலிருந்து, மெத்தப் படித்த பொன்னம்பலம் இராமநாதன் வரை, அன்றும் சரி இன்றும் சரி - பாரம்பரியத்தைப் பேணுவதை முதன் நிலைப் படுத்தியதை இதற்கு இவர்கள் சான்றாகுகின்றனர். இன்னும் சில வரலாற்றாளரோ, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஆகியோர், தம் காலத்தில் எம் மக்கள் பற்றிய தமது மனப்பதிவுகளை எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதை விளக்குகின்றனர் " இந்த நாட்டின் நல்லாட்சிக்குத் தமிழரின் மூளைத் திறன், அவர்களின் சுறு சுறுப்பான உழைப்பு என்பன கடந்த காலங்களில் மிக்க பயனுள்ளதாக அமைந்தன. அதே போலவே, எதிர் காலத்திலும் விலைமதிக்க முடியாத பங்கை இவர்கள் ஆற்றுவர். நாட்டின் நல்லாட்சிக்கு பிரித்தானியர் எப்போதுமே தமிழரின் உதவியை நாடி நிற்பார் என, 1930 களில் ஆங்கிலேய ஆள்பதி ஒருவர் கூறியதைப் பொதுமைப்படுத்தி எம்மக்கள் இத்தகையவர்கள் என எண்ண இடமிருக்கின்றது என்கின்றனர். எனவே, எம்மக்களின் சொந்தமுகம்-உண்மை முகம் எது? அந்நியர் எவராலும் அடி முடி அறியப்படாத எப்படிப்பட்டவர்கள் எம் மக்கள் என்கிற கேள்விக்கு விடை காணவே முடியாதா?
வலிகாமத்திலிருந்து ஏன் வந்தார்கள்? பின்பு ஏன் திரும்பிப்போனார்கள்?
இக் கேள்விகளுக்கான மிகச் சரியான விடையை அண்மிப்பதற்கு, நாம் பல நூற்றாண்டு கால வரலாற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டும். அப்போது தான், அந்நியர் ஆதிக்கம் என்கிற பாரிய வரலாற்று நெருக்கடிகள் எதிர்ப்பட்ட போதெல்லாம், அதற்கு முகம் கொடுக்க எத்தகைய உத்திகளை எம்மக்கள் பயன் படுத்தினார். என்பதை நாம் அறிய முடியும்; வெளிக்காட்டப்பட முடியாத அவமானச் சின்னமாகத்-தாழ்வுச் சிக்கல் வடுவாக - தன்மானத்திற்கேற்பட்ட தழும்பாக எம் மக்களின் ஆழ்மனதிலே பதிந்து விட்ட அடிமை வாழ்வு மறுப்பின் வெளிப்பாடு, எதிர்ச் செயற்பாடு எது? என்பதை உணர முடியும்.
எத்தனை கொடியேற்ற இறக்கங்களைக் கண்டவர்கள் எம் மக்கள் ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களின் போதும் பல்வேறு உத்திகளூடான பாரம்பரியப் பேணலாக - வெளியார் ஆதிக்கத்திற்கு எதிரான முனைப்பான செயற்பாடாக இணங்கிப் போவது போல அந்நியனோடு உறவாடிப் பின்னர் தம் சொந்த வழியிற் செல்லும் தந்திரோபாயமாக எத்தனையோ வழிகளைக் கையாண்டு, தமது சுகத்தைச் சொந்த முகத்தைத் தேசியத்தின் ஆன்மாவை வேறெவரிடத்திலும் பறிகொடுக்காமல் காப்பாற்றி வருபவர் எம்மக்கள். 1621 இல் போர்த்துக்கேயரிடமும், 1658 டச்சுக்காரரிடமும், 1796 ஆங்கிலேயரிடமும் அடிமைப்பட்டதற்கும், 1948 இல் நாதியற்றுப்போனதற்கும், 1956 58.77.81. 83 இல் அடியுதை பட்டதற்கும், பலம்மிக்க தேசவிடுதலைப் படையணி இன்மையே பிரதான காரணம் என்பதை உணர்ந்தவர்கள் எம் மக்கள். இதன் வெளிப்பாடாகவே விடுதலை உணர்வென்னும் அகல் விளக்கை அணையவிடாமல் நெஞ்சக் கூட்டுக்குள் வைத்துக் காப்பாற்றியதாலேயே, 1970 களில் தமிழர் விடுதலைப் போராட்ட அணியாக முகிழ்ந்த புலிகள் இயக்கம் வளர்ச்சியடைந்த வரலாறு. பரிணமித்தது. இந்தப் புது வரலாற்றின் அடிவரலாறு சங்கிலியனில், பூதத் தம்பியில், பண்டார வன்னியனில், இன்னும்பெயர் தெரியாது, முகமறியாது.விடுதலைக்காக கழுவிலேற்றப்பட்ட மண்ணின் மைந்தரில் உள்ளது என்பதே உண்மை. இது முன்னைய கதை; அண்மைய கதை எவ்வாறுள்ளது?
1990 ஆம் ஆண்டின் போர் தொடங்கிய பின்னாலான நாட்களில், போரோசையைத் தவிர வேறோசை கேட்காத நேரங்களில், சிதறும் தசைத் துண்டங்கள், பாய்ந்திடும் பச்சைக் குருதி என எங்கும் காரிருள் சூழ்ந்த வேளையில் எவ்வாறு இருந்தனர் எம்மக்கள் ? என்றுமில்லாதவாறு தம் முன்னே தோன்றிய போர்ச் சூழலை மிக,மோசமான பொருண்மியத் தடையை எவ்விதம் தாண்டினர் எம்மக்கள் ? அசைக்க முடியாத மனவுறுதியின் வெளிப்பாடாக, உள்ளார்ந்த ஆற்றலின் எல்லையை, தமது தாங்கு சக்தியின் உச்சத்தை அப்போது அடைந்தனர் தமிழ் மக்கள். இப்படிப் பட்ட மக்களை எவரால் என்ன செய்யமுடியும்? தாமும் வாழ்ந்து, தமது போராளிகளையும், தாயகத்தையும் வாழவைத்த மாண்புடையவர்களே எம் மக்கள் !
எனவேதான், பாரிய படை யெடுப்பு எதிர் வந்தபோதும், அது சரி வராதபோது பின்பு கதையை மாற்றி எதிரி வஞ்சக உறவாடிய போதும், அந்தந்தச் சூழலுக் கேற்ப தமது பட்டறிவு சொன்ன பாதைக்கேற்ப நடந்தனர் எம் மக்கள். எம்மக்கள் கையாண்ட உத்தியின் பெறுபேறுதான் என்ன? வலிகாமத்தில், வடமராட்சியில், தென்மராட்சியில், தென் தமிழீழத் தின் எல்லைப் பரப்போடும் வன்னிப் பெருநிலத்திலும் - எங்கும் -எம் மக்கள் கால் பதித்துப் பரவி நிற்கின்றனர். எங்கெல்லாம் எம்மக்களோ அங்கெல்லாம் புலிகளும் ! இப்போது வட தமிழீழத்தின் ஆகக்கூடிய நிலப்பரப்பாக கொண்ட வன்னிப் பெருநிலம் பெருமிதம் அடைகின்றது. தமிழீழத்திற்குள் புதிய குடித்தொகைப் பரம்பலிது.
எனவே, உறுதிமிக்க தேசிய விடு தலைப் படையணியாகப் புலிகள் பூரணமாக உருவெடுக்கும்வரை, இடம்பெயர்ந்தும் இடம்சேர்ந்தும் எம்மக்கள் வகுக்கும் உத்திகளைச் சிங்களம் எவ்வாறு புரியும்? ஆழமான நுட்பமான மனப் பாங்குள்ள எம்மக்களைத் தவறாகக் கணிப்பதன் விளைவு தவிர்க்கமுடியாத பெருஞ் சங்கடத்துட் சிங்களம் சிக்குகின்றமையேயாகும்.
பாரதி பாடியதுபோல "நல்ல தோர் வீணைசெய்தே அதை நலம் கெடப் புழுதியில்" எறிபவரல்லர் எம்மக்கள்; சுடர்மிகு அறிவுடன்" உள்ள அவர்கள் "நிலச் சுமையென ஒருபோதும் வாழ்ந்திடார்" என்பதை இந்த உலகம் மிக விரைவில் அறியும்!
தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப ஒளிரத் தொடங்கிய ஒரு இளம் தளபதி லெப். கேணல் பரிபாலினி.
2/2
மணலாற்றிலிருந்து வந்த இவ்வளவு வருடங்களாகியும், இன்றும் சகபோராளிகளிடம் பரிபாலினியின் செயற்பாடுகளை குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றால், அதற்குக் காரணம் அவரின் திறமையான செயற்பாடுகள்தான்” என்றார் முன்னாள் மணலாறு மாவட்டத் துணைத் தளபதி பாண்டியன் அவர்கள்.
அடிக்கடி பதுங்கித் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என விரிந்த களம் இதயபூமி – 01 உடன் அவளுக்கு முற்றுப்பெற்றது.
‘பரி அக்கா உங்களை பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கட்டாம்’ என்றால் அந்த ஏரியாவுக்குள்ளேயே பரிபாலினியைக் காணமுடியாது. படிப்பதென்றால் பச்சைக்கள்ளி. அப்படிப்பட்டவள் கல்விப்பிரிவுக்கென அனுப்பப்படுகிறாள். அந்தக் காலப்பகுதியில்தான் மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு வீரச்சாவடைய பரிபாலினி அழுத அழுகை. அன்றுதான் அவள் அழுததை எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவரின் வித்துடலுக்குக்கூட அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்றுவரை அவளுக்கு அது அழியாத கவலை.
இவளுக்கு ஒரு அறை, ஒரு மேசை, கதிரை, அறை எப்பொழுதுமே பளிச்சென்று இருக்கும். மேசையில் ஒழுங்காக உறைகள் இட்டு அடுக்கப்பட்ட கொப்பிகள், நேரே சுவரில் நாளிதழில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அன்பண்ணையின் படம் ஒவ்வொரு நாளும் முற்றத்தில் இருந்த மல்லிகையில் பூக்கொய்து படத்துக்கு வைத்து அஞ்சலி செய்து, அவளை போரியலில் வளர்த்த ஆசான் அல்லவா லெப். கேணல் அன்பு.
இந்தக் காலங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று இவர்களுக்குக் கட்டளை. முகாமில் ஒரே ‘கஸ்புஸ்’தான். அரைவாசித்தமிழ் அரைவாசி ஆங்கிலம்.
பூச்செடிகளுக்கு தண்ணீர் உற்றும் போது யாரும் வந்து ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் பரி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து முழுசிவிட்டு, ‘பிளவர் றீ வோட்டர்’ மிகுதி சைகையில்.
கலை நிகழ்ச்சி என்றால் பரிக்கு சரியான விருப்பம். ஆனால் மேடையில் ஏறி எல்லோர் முன்னாலும் செய்வதென்றால் பயம், கூச்சம் இங்கேயோ செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்ன செய்வது? அன்று மேடை ஏறிய பரி எல்லோரையுமே வாய்பிளக்க வைத்தாள். “அதிசயத்தின்மேல் அதிசயம். பரிபாலினியா இப்படி நடித்தாள்” என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்தப் பரிக்குள் இப்படியொரு கலைத்திறன் இருக்குமென்று எவருமே நம்பவில்லை.
ஒருநாள் இவர்களின் தமிழ் ஆசிரியர் எல்லோரையும் தூய தமிழில் ஆக்கம் ஒன்று எழுதும்படி கூறினார். பரியின் பெரும் முயற்சியில் சிறுகதை ஒன்று உருப்பெற்றது.
அதை இன்னொருத்தியிடம் வாசிக்கும்படி கொடுத்தாள், அவளும் இலேசுப்பட்டவள் அல்ல நடிப்பதென்றால் அவளுக்குக் கைவந்த கலை. பரியின் சிறுகதையை ஏற்ற இறக்கங்களுடன் பெரிதாக வாசிக்கத் தொடங்கினாள்.
“அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து சிறுநீர் வழிந்தது”
எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஏனப்பாஇ ஏனப்பா என்ன எல்லோரும் சிரிக்கிறீங்கள்’ என்றவளிடம் ‘சிறுநீர் என்றால் என்னப்பா?’ ‘சிறிய நீர்இ சொட்டு நீர்’ என விளக்கியவள் தன் பிழை விளங்கவும் எல்லோருடனும் சேர்ந்து தானும் சிரித்து…… சேர்ந்து படித்து…… போராளிகளுக்கு வகுப்பெடுத்து…… புதிய போராளிகளை இணைத்து……
வெளியில் சிறுபிள்ளைத் தனத்துடன் காணப்படும் இவளிடம் முழுமையான ஒரு ஆளுமைத்தன்மையும், தன்னம்பிக்கையும் இன்னும் இன்னும் நிறையவே செய்ய வேண்டுமென்ற வெறித்தனமும் நிறையவே இருந்தது.
இவளின் உருவத்திற்கும், செயல்பாடுகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றம். இவளின் செயல்பாடுகளின் வெற்றிகளே இதற்கான சான்றுகள்.
மீண்டும் பரிபாலினியின் சண்டைக்களங்கள் விரியத்தொடங்கியது.
1996 இல் புதிதாகப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளிவந்த ஒரு அணிக்குப் பொறுப்பாளராக, அரசியல்துறை மகளிரணியாக…… அந்த அணி களம் இறங்குகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களோ எண்ணிலடங்காதவை. நீண்ட காலமாகச் சண்டைகளில் பங்குபற்றாது வெளி வேலைகளில் ஈடுபட்டிருந்த போராளிகள். இவர்களுடன் புதிய போராளிகள், இவர்கள் நல்லமுறையில் சண்டை பிடிப்பார்களா? என்ற கேள்வி ஏனைய தாக்குதல் அணிகளுக்கு எனினும் ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நின்று போரிட்டது இவர்களின் அணியும்.
பரந்தன் – ஆனையிறவு மீதான தாக்குதல் ஒன்றுக்கு பல அணிகள் பயிற்சி எடுத்தது. யார் யார் எந்தப் பகுதிகளுக்கென அவ் அணிகள் பிரிக்கப்பட்டபோது, ஒரு அணிக்கு உதவி அணியாக இவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் அணியை அவர்கள் “தமக்கு வேண்டாம்” எனக்கூறிவிட்டனர். பரிபாலினி, மேஜர் நித்தியா, கப்டன் ஜெயஜோதி உட்பட அனைத்துப் போராளிகளும் இறுகிப் போயினர். “இவங்களுக்குச் செய்து காட்டுறம்” என்ற சாவாலோடு களமிறங்கியவர்கள் சண்டையிட்டனர். காலையிலேயே விழுப்புண்ணடைந்த பரிபாலினி மாலை வரை களத்திலிருந்து வெளியேற மறுத்துவிட்டாள். பின்னரும் கட்டாயப்படுத்தியே வெளியேற்றப்பட்டாள்.
தொடர்ந்து ‘ஜெயசிக்குறுய்’ களம், முன்னர் இவர்களை மறுத்தவர்கள், சளைக்காது போரிட்ட இவர்களைக் கேட்டுப் பெறும் அளவுக்கு வளர்ச்சிகண்டு…… ஓயாத உழைப்பும், கடுமையான பயிற்சியும்…… எல்லாவற்றிற்கும் அடிநாதமாய் பரிபாலினி……
ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு தாமே தடையுடைத்து, ஏனைய அணிகளுடன் தமது அணி ஒன்றுடன் பரிபாலினியும் உள்நுழைந்து, பல இராணுவக் காவலரண்களைத் தாக்கியழித்து மீண்டபோது, கப்டன் ஜெயஜோதியுடன் இன்னும் சில போராளிகள் திரும்பவில்லை. ஆனால் இவர்களைப் பாராட்டாத தளபதிகளே இல்லை. புளியங்குளத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக நின்று புளியங்குளத்தை ‘புலிகள் புரட்சிக் குளமாக’ மாற்றியதில் இவளின் பெரும் உழைப்பும் உள்ளது என்றால் மிகையானது.
அந்தச் சமருக்குப் பொறுப்பாக நின்ற தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் கூறும்போது, “பரிபாலினியைப் பொறுத்த வரையில் குறிப்பாக நல்ல விசயங்களைப் பார்த்தனான், நல்ல ஒரு நிர்வாகி, துணிச்சலான சண்டைக்காரி மற்றது எல்லாத்திலேயும் ஒரு ஆர்வம் உள்ளவர் இந்த மூன்றையும் நான் அவளிடம் நேரடியாகப் பார்த்தனான்” என்றார்.
“ஜெயசிக்குறுய்” களமுனையில் இருந்து எடுக்கப்பட்ட அரசியல்துறை மகளிர் அணியின் போராளிகள் ஒவ்வொருவரும் அவரவரின் முன்னைய பணிகளைத் தொடரும்படி கூறிய தலைவர், பரிபாலினியை சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவுக்குத் தெரிவு செய்கின்றார்.
சண்டையில் நிற்கும் ஒவ்வொரு போராளிகளினதும் திறமைகளையும், செயல்பாடுகளையும், நிலமைகளுக்கேற்ப முடிவெடுக்கும் தன்மைகளையும், சண்டையின் வெற்றி தோல்விகளுக்கான காரணிகளையும், பகுப்பாய்வு செய்வதுமே இதன் நோக்கமாகும். ஆரம்பகாலத்தில் பரிபாலினியின் பொறுப்பில் பெண்போராளிகளே செயல்பட்டு வந்தனர். இந்தப் பணிகளில், எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்பாள் பரிபாலினி. கனவிலும் நினைவிலும் “அண்ணை எங்கள நம்பி விட்டிருக்கிறார். நாங்கள் திறமையாகச் செயற்பட வேண்டும்” என்பதே அவளின் தாரகமந்திரமாக இருந்தது.
01.02.1998 இல் ஆனையிறவு பரந்தன் சண்டையில் ஆரம்பமாகி 1999 இல் ஆண் போராளிகளையும் இணைத்து பிரிகேடியர் சொர்ணம் தலைமையில், எந்த மூலை முடுக்குகளில் நடைபெறும் சிறு சிறு தாக்குதல்கள் என்றாலும் அங்கெல்லாம் பரியும் சென்று வந்தாள். போகும் போது பாதை மாறி எதிரியின் பிரதேசங்களுக்கு முன்னால் சென்று மீண்ட சம்பவங்கள் பல.
ஓயாத அலைகள் மூன்றின் ஆரம்ப நடவடிக்கையின் போது சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவினரைக் கொண்டு களமிறங்கி மீட்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் பணியில் மணலாற்றில் ஈடுபட்டு, மீண்டும் பகுப்பாய்வு வேலைகள் செய்து…
தொடரும் ஓயாத அலைகளின் வீச்சால் எமது களமுனைகள் விரிவடைய, விரிவடைய தற்காலிகமாக சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவிலிருந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு படையணிகளுடன் இணையுமாறு பணிக்கப்பட, இவளின் பயணம் சோதியா படையணியை நோக்கித் தொடர்ந்தது.
“என்ர சண்டை அனுபவங்களைக் கொண்டு துர்க்காவுக்கு உதவியா நின்று, படையணியை நன்றாக வளர்த்து, அண்ணை பிள்ளையள எப்படியெல்லாம் வளர்க்க வேணும் என்று நினைக்கிறாரோ அதற்கெல்லாம் நாங்கள் செயலுருவம் கொடுக்க வேணும்” என்று கூறிச் சென்றவளை முதல் சமரிலேயே நாம் இழந்துவிட்டோம்.
பரிபாலினி மணலாற்றுக் காட்டின் மரவேர்களில் காவலிருந்து. காட்டுப் பறவைகளையும் விலங்குகளையும் நேசித்து, பொதிகள் பல சுமந்து, ஆழக்கிணறுகள் வெட்டி, பலம் மிக்க பாசறைகள் அமைத்து, உரமேறிய கைகளுடன் எதிரியுடன் பொருதி, பல துறைகளிலும் வளர்த்து தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப பிரகாசிக்கத் தொடங்கிய ஒரு இளம் தளபதி……
அடிக்கடி ரவைகளால் துளைக்கப்பட்டு, குண்டுச் சிதறல்களால் பிய்க்கப்பட்டு, இரத்தம் கொட்டி, வீரத் தழும்புகளால் நிறைந்த அவள் உடல்……
தனது சொத்தி வாயை நெளித்து, ‘இஞ்சேருமப்பா இஞ்சேருமப்பா…’ என்று எம்மைச் சுரண்டும் அந்த அழகான சின்ன உருவம்……
ஓ… அவள் ஓயவில்லை. இன்னும் எம்முன் நிழலுருவமாக உலாவிக் கொண்டிருக்கிறாள்.
தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப ஒளிரத் தொடங்கிய ஒரு இளம் தளபதி லெப். கேணல் பரிபாலினி. 1/2 லெப்.கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 06.07.1973 - வீரச்சாவு: 01.04.2000
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி விழிப்படைந்து எமது நகர்வுகளையே கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச ஊர்திகளையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவனின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்தியில் இருந்து ஒலித்த அந்தக் குரல் தொலைத் தொடர்புக் கருவியூடாக எல்லோர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீண்ட நெடுநேரம், அந்தத் தன்னம்பிக்கையான, உறுதியான, தெளிவான குரலை ஒலிபரப்பிக் கொண்டிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் அமைதியானது.
“பரி… பரி… பரி…”
“பரி… பரி…”
என அனைத்துக் கருவிகளும் அலற அந்தப் பெயருக்குரியவள், அந்தக் குரலுக்குரியவள் அடங்கிப் போனாள்.
1990 காலப்பகுதியில் பயிற்சிப் பாசறைகள் நோக்கி படையெடுத்த பெண்களில் இவளும் ஒருத்தி. எப்போதுமே அமைதியாகக் காணப்படும் இவள் எல்லோராலும் ‘நல்லூர் நோனா’ என அழைக்கப்பட்டவள். மணியடித்தால் சாப்பாட்டிற்கு முன்னின்று, வகுப்புக்குப் பின்நின்று, பயிற்சிக்கு முன்னின்று லெப். கேணல் மாதவியால் புடம் போடப்பட்டு, பரிபாலினியாக வெளிவந்த இவள்; 1992 முற்பகுதி வரை பலாலி, பத்தமேனி, தட்டுவன்கொட்டி என பல முன்னணிக் காவலரண்களிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகாய கடல்வெளிச் சமர், மின்னல் எனவும் பல சிறு சிறு சண்டைகளிலும் ஒரு போராளியாகவே தடம் பதித்தவள்.
1992 ஆண்டின் தொடக்க காலம், எமது இதயபூமியான மணலாற்றை எதிரியின் வல்வளைப்புக்களிலிருந்து பாதுகாக்கும் பணியில் பெண் போராளிகளையும் ஈடுபடுத்துவதற்கென புதிய அணியொன்று உருவாக்கப்படுகின்றது. பத்தே பத்துப் போராளிகளுடனும், இருநூற்றைம்பது பயிற்சி எடுக்காத புதிய போராளிகளுடனும் மணலாறு சென்றது அந்த அணி, அவர்களைப் பயிற்றுவித்தே தமது பணியைத் தொடங்க வேண்டும். பொறுப்பாகச் சென்றவருக்கு தன்னுடன் வந்த பத்துப் போராளிகளும் என்ன நிலையில் இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர்களில் பரிபாலினியும் ஒருவர்.
இவள் அங்கே பயிற்சிக்கான துணை ஆசிரியராக நியமிக்கப்படுகின்றாள். பயிற்சிக்கான ஒழுங்குகள் செய்து, பயிற்சியும் தொடங்கி ஆறே ஆறு நாட்கள்.
கொக்குத்தொடுவாய் படை முகாமிலிருந்து நாயாறு வரை மும்முனைகளில் முன்னேறி கரையோரப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், தமிழர் தாயகத்தை துண்டாடுவதுடன், வடக்கிலிருந்து கிழக்கிற்கான எமது வழங்கற் பாதையைத் துண்டிப்பதற்காகவும், மூவாயிரம் சிங்களப் படைகள் ‘கஜபார’ கட்டம் ஆறு (ஒப்பரேசன் சிக்கர் கஜபார) என்ற பெயருடன் பெரும் எடுப்பிலான நகர்வை மேற்கொண்ட போது, வழிமறித்து நடந்த சண்டைக்குக்காவும் குழுவாகச் செல்லத் தயாராகின்றனர். எல்லோருக்குமே காடு புதிது, புதிய போராளிகள் வேறு. எவருக்குமே ”கொம்பாஸ் (திசையறி கருவி)” தெரியாது. மூன்று நாட்களில் ‘கொம்பாஸ்’ பயின்று, பரிபாலினியுடன், இன்னுமொரு போராளியுடனும் புதிய போராளிகள் களம் இறங்கினர்.
சீனத்தயாரிப்பு டாங்கிகளும், கவச ஊர்திகளும், பீரங்கிகளும், குண்டு வீச்சு வானூர்திகளும், உலங்கவானூர்திகளும், பீரங்கிப்படகுகளும் குண்டு மழை பொழிய, அந்த அடர்ந்த காடுகளுக் கூடாகவும், திறமையாகத் தனது பணிகளைச் செய்து, ஆண்டாள் என்ற ஒரு புதிய போராளியை இழந்து, அவர்களின் பணிக்கு பரிசாகக் கிடைத்த ஐந்து ஏ.கே.யுடன் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜீ உடனும் முகாம் திரும்பியது அந்த அணி.
‘பாத்தீங்களா, நாங்கள் சண்டைக்குப் போகாமல் சப்பிளைக்குப் போயே அஞ்சு ஏ.கே.யும், ஒரு எல்.எம்.ஜீ.யும் எடுத்திட்டம்’ என்று சொல்லிச் சொல்லி துள்ளித் திரிந்தாள். அன்று ஆறு நாட்களே பயிற்சி எடுத்த அந்தப் போராளிகளின் முதுகெலும்பாக நின்று செயற்பட்டவளே இவள்தான்.
எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சற்றேனும் பதட்டம் இருக்காது இவளிடம். அன்றிலிருந்து இன்றுவரை இது அவளிடம் ஒன்றிவிட்ட ஒன்று. இந்தப் பழக்கம்தான் பொறுப்பாளர்களிடம் பரிபாலினியை இனங்காட்டியது.
இரண்டரை மாதப் பயிற்சிக் காலங்களில் துணைப் பயிற்சியாசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், முதல் பயிற்சியிலேயே எதிரியை எப்படிக் குறிபார்த்துச் சுடுவது என்பதைப் பயிற்றுவித்து, இடையிடையே நடக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கு அவர்களுடன் சென்று மீண்டு, மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்து… ஐந்து படையினரைத் தாக்குவது என்றாலும் அதற்கும் இவர்கள் சென்று… எண்ணிக்கையில் அடங்காத பதுங்கித்தாக்குதல்கள்.
தலைவர் அடிக்கடி சொல்லுவார், ‘ஆயிரம் முயல்களை ஒரு சிங்கம் வழி நடத்தலாம். ஆயிரம் சிங்கத்தை ஒரு முயல் வழிநடந்த ஏலாது’ என்று. அதேமாதிரி புதிய போராளிகளைக் கொண்டு செய்யிறது என்பது, அதுவும் காட்டுச் சண்டை, சண்டைச் சூழலே பிள்ளைகளுக்குத் தெரியாது. பரிபாலினியில் இருந்த நம்பிக்கையில்தான் முழுப் பிள்ளையளையும் விடுறம்” என்றார்; மணலாற்றின் ஆரம்பகால மகளிர் பொறுப்பாளர் சீத்தா அவர்கள்.
பயிற்சிகள் முடித்து இரு அணிகளாகப் பிரிக்கப்பட்ட படையணியில் ஒரு அணி பரிபாலினியின் தலைமையில் களம் இறங்குகின்றது. நூறு பேர் கொண்ட ஒரு அணிக்குப் பொறுப்பாளராகவும், அதே நேரம் இருநூறு பேரைக் கொண்ட முழு அணிக்கும் துணைப்பொறுப்பாளராகவும், நியமிக்கப்பட்ட பரியின் நிலை தர்மசங்கடமாகிப் போனது. தான் சண்டைக்கு முதலில் போகமுடியாதே என யோசித்தவள், ஐம்பது பேர் கொண்ட அணியைப் பொறுப்பெடுத்து முதலில் நகர்ந்து விட்டாள்.
ஒப்பரேசன் செவன்பவர்’ (ஏழு சக்திகள்) முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியூடாகச் செம்மலைஇ குமுழமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருக்கு உதவியாக செம்மலைஇ அளம்பில் கடல் பிரதேசங்க@டாக தரையிறக்க முனைந்த இராணுவத்தினரை, கரையோரம் நின்ற பரிபாலினியின் அணி எதிர்கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று கடல்கலங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியவாறு கரையை நோக்கி வருவதும்இ இவர்களின் துப்பாக்கிகள் சடசடக்க பின்வாங்குவதும் பின் வருவதும் போவதும், வருவதும் போவதுமாகத் திணறிய கலங்கள் இறுதியில் ஓடியேவிட்டன. மணலாற்றின் வரலாற்றுச்சமர்களில் பெரும் எதிர்ச்சமரான இந்தச் சமரில்இ எதிரியின் கடல்வழி விநியோகத்தைத் தடுத்து நிறுத்திய பெரும் பணியில் எமது இன்றைய தளபதியான இவளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே இருந்தது.
அன்றொருநாள் சண்டை முடிந்து அனைத்து அணிகளும் திரும்பிக்கொண்டிருந்தது. பரியைக் காணவில்லை. ‘எமது எதிர்காலத் தளபதியை இழந்து விட்டோமா’ என எல்லோர் மனங்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. ‘பரிபாலினி வீரச்சாவாம்’ என்ற செய்தியும் வந்துவிட்டது. ஆனால் மனங்கள் மட்டும் ஏற்க மறுத்தது. காயமடைந்தும், வீரச்சாவடைந்தும் வரும் ஒவ்வொருவரையும் ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம். மனமும் சோர்ந்து போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான்கு பேர்களின் தோள்களில் ஒரு
ஸ்ரெச்சர்’ ஒரு நப்பாசையுடன் ஓடிப்போய்ப் பார்த்தால் பரிபாலினி. சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது, உயிர் பிரியவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டோம். கால்கள், வயிறு, ஒருபக்கத் தாடை எனப்பிய்ந்து தொங்கக் கட்டுப்போட்டபடி…… பல மைல்களுக்கப்பால் உள்ள கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமை நோக்கி நடையாய் நடந்து, பல இராணுவ அரண்களை தாக்கியழித்த அந்தச் சமரில் இவள் படுகாயமடைய, சிலர், ‘வீரச்சாவு’ எனக்கூற, சிலர் ‘இல்லை’யென, ‘இவ்வளவு தூரம் கொண்டு போகிறதுக்கிடையில் ஆள் முடிஞ்சிடும்’ என்று இன்னொருவர் சொல்ல, அவள் வளர்ந்த குஞ்சுகளின் தோள்களில் மூச்சுப்பேச்சற்ற நிலையில் எதுவுமே அறியாதவளாய் வந்து சேர்ந்தாள்.
காயங்கள் ஆறி, மீண்டும் கானகம் வந்தவளை எல்லோருமே கிண்டலடிப்பார்கள்; அவளின் ஆறு பற்களையும் இழந்த வாயைப்பார்த்து. இவளுக்கும் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்க முடியாதவளாக கைகளால் மூடி சிரமப்பட்டுச் சிரிப்பாள்.
தொடர்ந்தும் கானகம் அவளைக் களம் நோக்கி அழைத்தது. கடும் பயிற்சி, கோட்டைக்கேணிக்கும் கொக்குத்தொடுவாய்க்கும் இடையில் ரோந்துவரும் இராணுவத்தினரை மறைந்திருந்து தாக்க வேண்டும். அந்த முகாமிலிருந்து இந்த முகாமுக்குக் கையசைத்தால் தெரியும். இரண்டு முகாம்களுக்கிடையில் உள்ள வெட்டை வெளியில் புல்லோடு புல்லாக இவர்கள். 8.30 மணிக்கு அவ்வழியால் வரும் இராணுவம் வரவில்லை. இவர்கள் திரும்பவும் வழியில்லை. இருட்டிய பின்னர்தான் அசையலாம். அதிகாலை 4.00 மணிக்கு நிலையெடுத்தவர்கள் ‘குளுக்கோஸ்’ பக்கற்றும், தண்ணீர் பக்கற்றும்தான் ஆளுக்கொன்று கொண்டு சென்றார்கள். அதுதான் அன்றைய சாப்பாடு. மாலை 5.00 மணி அவர்கள் காத்துக்கிடந்த இரைகள் கிடைத்தன. நல்ல சண்டை, கைப்பற்றிய ஆயுதங்களுடன் திரும்பினர்.
புலிகள் உண்மையிலேயே பாசிச புலிகள் என்றால் மாற்று இனத்தவர் ஒருவரும் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்திருக்கவே முடியாது. அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் மணலாறிலும் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுக்கும் பொருந்தும். விடுதலைப் புலிகள் ஒருபோதும் அப்பாவி பொதுமக்களை கொன்றது கிடையாது. விடுதலைப் புலிகளின் இலக்கு ஒருபோதும் முஸ்லிம்களாகவோ சிங்கள மக்களாகவோ இருந்தது கிடையாது. விடுதலைப் புலிகள் இவ்வாறான செயல்களை செய்பவர்களாக இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும். அவர்கள் இப்படிப்பட்ட செயல்களை செய்திருக்க தேவையில்லை. அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தால் அங்கு வாழ்ந்த சிங்கள முஸ்லிம் மக்கள் அந்த இடங்களை விட்டு ஓடி இருப்பார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. தமிழ் பேசுகின்ற முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பிரிவினையை உண்டாக்கி அவர்களை எதிரிகளாக்கி தங்களது காரியங்களை நிறைவேற்றிக் கொண்டவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள். அதாவது மொழியால் ஒன்றுபட்டிருந்தால் சிங்களவர்களுக்கு பாதகமாக அமையும் என்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையும் படைத்துறையும் அரசும் இணைந்து முஸ்லிம்களையும் தமிழர்களையும் விரோதிகளாக்கி குளிர் காய்ந்தார்கள். அதற்கு பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் படையினரோடு சேர்ந்து இயங்கிய முஸ்லிம் ஊர்காவல் படையினரும் முஸ்லிம் புலனாய்வு துறையினரும் சிறப்பாக இக்காரியங்களை செய்து முடித்திருந்தனர். விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத போது அதனை புலிகள் மீது இலகுவாக பழி போட்டு விட முடியும் என்பது பலரது எண்ணம். உண்மையிலேயே பல இனவிரோத காரியங்களை செய்த சிங்கள படை புலனாய்வு பிரிவினரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள்.
இலங்கை முசுலீம்கள் எப்போது இஸ்லாமிய தமிழர்களாக உணர்ந்து கொள்கிறார்களோ அன்று தான் அவர்களுக்கு விடிவு எங்களுக்கும் விடிவு. ஆனால் அவர்கள் அதனை உணரப்போவதுமில்லை அப்படி செய்யப் போவதுமில்லை.
"In my country freedom is something more than a delicate breeze of the soul, it is also a courage of skin."
- Otto René Castillo
Sri Lanka's ruling coalition, United People's Freedom Alliance (UPFA), swept into power in April 2004. Barely a month after, on the 31st of May, the veteran Tamil journalist Aiyathurai Nadesan was gunned down in the eastern coastal city of Batticaloa, by the government backed paramilitaries.
His death triggered a new war of annihilation. A war fought with a renewed vigor and an unprecedented brutality: A war against media and freedom of expression.
Within the next 6 years, at least 43 journalists and media workers were either killed or disappeared. No investigation pursued - no perpetrator brought to justice. The ruling UPFA government has outperformed all its predecessors by single-handedly wiping out at least 39 journalists and media workers so far.
The clock still ticks and the guns are still being oiled.
During the past three years , Journalists for Democracy in Sri Lanka (JDS) worked relentlessly to uncover the truth. We were determined to compile a list as comprehensive and detailed as possible. The record needed to be set straight in order to counter the allegations of 'unduly inflated numbers',
Where justice delayed, impunity flourishes. Hence, we keep on fighting, in memory of the fallen.
single reel
தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிரிகேடியர் துர்க்கா எழுதிய கடைசிக் கடிதம் .
“அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் தமிழீழத் தேசியத்தலைவருக்குக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்கள் எழுதிய இறுதி மடல்.
உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தேசியத்தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார்.
ஆனாலும், அந்தக் கடிதத்தில் இருந்த “மக்கள் என்கின்ற சொல் தேசியத்தலைவரை மிகவும் நெகிழச்செய்தது. அதுவே அவரை ஆனந்தபுரத்திலிருந்து வெளியேற்றியது. அந்தக் கடிதத்தைத் தேசியத்தலைவர் அவர்களுக்கு எழுதியது சோதியா படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்கா. உண்மையிலேயே அவளது தோற்றத்துக்கும் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்கவில்லை. மெலிந்த சிறிய உருவம். எப்போதும் புன்னகை மாறாத முகம். துள்ளித்துள்ளி ஓடும் மான்குட்டி போல அவள் நடையின் வேகம். முடியாது என்பது அவரது அகராதியில் எப்போதும் இருந்ததில்லை.
தெரியாது என்று எதனையும் விட்டுவிட்டு அவள் ஒதுங்கியதும் இல்லை. எல்லாப் போராளிகளையும் புதியவர், பழையவர் , பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றிப் பார்க்கும் அவரது குணம், கடுமையாகப் பேசவோ, கண்டிக்கவோ தெரியாத அன்பு நிறைந்த அவளது பேச்சு எல்லாப் போராளிகளுக்குமே அவள்மீது பிடிப்பினை ஏற்படுத்தியது. “என்னடாப்பா… நீங்கள்….” இந்த வார்த்தை அவரது வாயிலிருந்து வருகின்றது என்றால் அவர் கடுமையான கோபத்தில் இருக்கின்றார் என்பது அர்த்தம். கோபத்தில் கூட கடிந்து பேசத் தெரியாத போராளி. தேசியத்தலைவர் அவர்கள் பயிற்சியின்போது ஒவ்வொரு போராளிகளையும் நன்கு இனங்கண்டு பயிற்சி நிறைவடைந்தபோது அனைவரையும் ஒவ்வொரு பிரிவுக்குப் பிரித்துவிடுகின்றபோது துர்க்காவுக்கு வழங்கப்பட்டபணி மருத்துவப்பணி.
ஒரு மருத்துவப் போராளிக்கு இருக்கவேண்டிய அனைத்துத் தகுதியுமே அவளிடம் நிறையவே இருந்தது. அதேபோல் காலப்போக்கில் புதிய போராளிகளுக்கான பயிற்சிகளை வழங்குகின்ற பாசறைகளை வழிப்படுத்துகின்ற பொறுப்பு அவளுக்கு வழங்கப்படுகின்றது. அதுவும் அவளுக்கு மிகவும் பொருத்தமான பணியாக இருந்தது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள், சோதியா படையணியை உருவாக்கி அதனுடைய சிறப்புத் தளபதியாக துர்க்காவை நியமித்தபோது உண்மையிலேயே பலரிடம் பலகேள்வி இருந்தது. ஏனெனில் இந்தப் பெரும்பணியை ஒப்படைக்கும்போது அவள் ஒன்பது பேர் கொண்ட அணிக்குத் தலைவியாக இருந்தாள்.
படையணிப்பொறுப்பை எடுத்தபோது உண்மையிலேயே அவளுக்குக் குறிபார்த்துச் சுடுவது என்பது சரியாக வராது. படையணிக்கான பயிற்சிகள் நடைபெறும்போது சளைக்காமல் ஓய்வு என்பதே எடுக்காது தான் அந்தப் படையணியின் சிறப்புத் தளபதி என்ற எண்ணம் ஒருதுளிகூட இன்றி, போராளிகளோடு போராளியாக நின்று, ஒவ்வொரு அணியணியாகப் பிரித்து சூட்டுப்பயிற்சிகள் வழங்கப்படும் போது, ஒவ்வொரு அணியோடும் சென்று ஓய்வோ சோர்வோ இன்றி சூட்டுப்பயிற்சியை எடுத்தார். எல்லோருக்கும் ஓய்வு வழங்கப்படும்போது கூட துப்பாக்கியை எடுத்து குறிபார்ப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எப்போது பார்த்தாலும் அவளது கை நீட்டிக் குறிபார்த்தபடியே இருக்கும். கடின உழைப்பு, விடாத முயற்சி விரைவிலேயே சிறந்த சூட்டாளராக அவளை மாற்றியது.
அவளுடன் நின்ற தோழிகள், அணித்தலைவர்கள் எனப் போராளிகள் ஓர்மத்துடன் நின்று களமுனைகளை எதிர் கொண்டு நின்றனர். போரியலில் நல்ல ஆளுமையைப் போரிடும் பேராற்றலை தனக்குள்ளே வளர்த்துக் கொண்ட தளபதி துர்க்கா அவர்கள்,சமர்க்களங்களில் நாயகியாய், களமுனைகளில் போராளிகளை வழிப்படுத்தும் நல்ல தளபதியாய் வெற்றிகள் பல படைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே மீண்டும் விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கவைத்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் இறுதிவரை போராடி, எம் தேசத் தலைவனைப் பத்திரமாகக் காப்பாற்றி விட்ட மனநிறைவுடன் ஆனந்தபுர மண்ணில் வரலாறாகிப் போனாள்.
ஆனந்தபுர மண் என்பது வீரவரலாறு படைத்த வரலாற்றுமண். அந்த மண்ணில் சிறிலங்காப் படைகளின் பெரும் முற்றுகையைத் தடுத்து,சிங்களப் படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி ஓர்மத்துடன் போரிட்ட போராளிகளுக்குக் கட்டளை வழங்க, ஈற்றில் நேரடியாக சிங்களப் படைகளோடு போரிட்டு வீரசாதனை படைத்து வீரகாவியமானார் பிரிகேடியர் துர்க்கா
21 hours ago | [YT] | 2
View 1 reply
single reel
பீரங்கிப் படையணியால் ஆனந்தபுரத்தை அதிரவைத்த பிரிகேடியர் மணிவண்ணன்!
தமிழீழ மண் ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டு, கொதித்தெழுந்து தமிழ் மண் காத்திடத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார் மணிவண்ணன் அவர்கள்.இவர் பயிற்சிகளை முடித்து விடுதலைப் போராட்டப் பணிகளைத் தொடர்ந்தார்.தொடக்க காலத்திலேயே தளபதி கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பணியை தன்னகத்தே ஏற்று அர்ப்பணிப்போடு பணிகளை முன்னெடுத்தார். தொழிநுட்பத்துறை சார்ந்த பணிகளோடு ஏனைய பணிகளையும் ஆற்றிவந்தார்.
தளபதி கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்குப் பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாகத் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயற்பாட்டுக் காலப்பகுதியில் பல முக்கிய தாக்குதல்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதோடு, பெரும் இழப்புகளையும் சிங்களப்படைகள் சந்தித்திருந்தது.தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்த சிறிலங்கா அரச படைகள் , தம்முடைய நகர்வுகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடியது. கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் துல்லியமான தாக்குதல்கள் சிறிலங்காப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்ககது.
பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை - பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் ,சிறிலங்கா அரச படைகள் திட்டமிட்டு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கெதிரான முறியடிப்புத் தாக்குதல்கள்,வலிந்து தாக்குதல்கள் என, தளபதி பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்டவையாகும்.இக்காலப்பகுதிகளில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது மட்டுமன்றி தொடர்ந்தும் இராணுவ முகாங்களைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறியது என்பதும் உண்மையே.
அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூட்டின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இராவத்தின் மனோநிலைகளை தகர்த்து போராளிகளின் மனோ வலிமையை அதிகரித்து, விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்தியம் மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான்.கேணல் கிட்டு பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் கட்டளைக்கு அமைவாக சவால்கள் நிறைந்த களமுனைகளை எதிர்கொண்டு,மிக வேகமாக ஆட்லறிகளை இடம் நகர்த்தி அவற்றைப் பாதுகாத்து வந்தமையானது நாளாந்த போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது.
தமிழீழ மண்ணை ஆக்கிரமிக்க முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் படைவலிவையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த சூழலில் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சுற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்தன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்தினரின் மீது நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு,படைகளுக்குத் திகைப்பையும் பெரும் அழிவையும் கொடுத்தன.
2009 இல் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வன்வளைப்பிற்கு உட்படுகிறது,கடுமையான தொடர் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.முன்னேறிவரும் இராணுவத்திற்கெதிராக பீரங்கிப் படையணி செறிவான சூட்டை வழங்கிக் கொண்டிருந்தது.
அந்நெருக்கடியான சூழலில் உடனடியாக ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி ,சிங்களப் படைகள் சிதறி ஓடுமளவிற்கு நேரடியான தாக்குதல்களை படையினர் மீது மேற்கொள்ளப்பட்டது.தாக்குதலில் ஈடுபட்டிருந்த சிங்களப் படையணிகள் முன்னேற மறுக்கின்றன. அந்தளவிற்கு பாரிய இழப்புக்களை சிறிலங்காப் படைகள் ஆனந்தபுர மண்ணில் சந்தித்தன.களத்தில் நின்ற போராளிகளின் தீரமிகு தாக்குதல்களும் மோட்டார் பீரங்கிப் படையணிகளின் செறிவுடன் கூடிய துல்லியமான தாக்குதல்களும் பாரிய அழிவினைச் சிங்களப் படைகளுக்கு
ஏற்படுத்திய வண்ணம் இருந்தன.
பெரும் போர் நடந்து கொண்டிருந்த,அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
அந்தக் களமுனையிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகள் பலர் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.ஆட்லறிப் பீரங்கிகள் துப்பாக்கிகள் போன்று, சிங்களப் படைகளின் நிலைகளையும் முன்னேறும் படைகளையும் தாக்கியளித்துக் கொண்டிருந்தது.அவ்வாறு வரலாறு படைத்த ஆனந்தபுர மண்ணிலே கட்டளை வழங்கியபடியே, பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் உடலில் குண்டேந்தி மாவீரனாக வீரவரலாறானார்.
இந்த வரலாற்றுப் போரில் பல தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்கள்.
அவர்கள் காட்டிச்சென்ற வரலாற்றுப் பாதையில் நாமும் உறுதியுடன் பின் தொடர்வோம்.
1 day ago | [YT] | 6
View 1 reply
single reel
செந்தூரன் சிலைச் சந்திக்கு அருகில் ஒரு மயானம் இருந்தது பெரும் சண்டைகளின் பின் அவ் மயானத்தின் கல்லறைகள் சிதறுண்டு கிடந்தன மாடுகள் இறந்து எழும்புகளாய் இருந்தன கைக் குண்டுகளும் ஏகே 47 ஒன்றும் பரவிக்கிடந்தது கொஞ்சம் சனநெரிசலில் துர்நாற்றம் மறந்துபோயிருந்தது தேங்காய் மாங்காய் என பறித்து பசியை போக்கிக் கொண்டிருந்தார்கள் அப்போதுதான் யார் பெத்த பிள்ளையோ தெரியல தம்பி ஒருவனின் உடல் கிடக்கிறதெனச் சொன்னார்கள் பத்துப் பதினைந்து நாட்கள் வரும் இறந்து வரியுடையில் சேட்டும் கறுத்த ஜீன்ஸூம் அணிந்த ஒரு புலி வீரன் ஓடியபடி உயிர் நீர்த்திருந்தான் போராளியொருவன் பாட்டா கூட கால்களில் இருந்து கழறவில்லை எங்களால் என்ன செய்ய முடியும் எங்களுக்கும் அதே நிலைதானே என நினைத்துக்கொண்டு சென்றோம் இப்படி களமுனைகளில் வீரமரணம் அடைந்த போராளிகள் ஏராளம்
ஒரு துளி கண்ணீர் கூட சிந்த முடியாத நிலை .
ஆயிரம் ஆயிரம் வரலாறுகளை எழுதிச் சென்றவர்கள் எம் வீர மறவர்கள்.🔥
Copy
1 day ago | [YT] | 15
View 1 reply
single reel
செம்மணியில் 600 பொதுமக்களை கொ*ன்று புதைத்த கொ*டூர சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான கப்டன் லலித் ஹேவா (தற்போது ஓய்வு பெற்ற பிரிகேடியர்) தனது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடியிருக்கின்றார்
செல்வி கிரிசாந்தி கொ*லை வழக்கு தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சே செம்மணி புதை*குழி தொடர்பாக அடையாளம் காட்டப்பட்ட கப்டன் லலித் ஹேவா தற்போது வரை மிக சுதந்திரமாக இருக்கின்றார்
திரு அனுர குமார திசாநாயக்க அதிகாரத்திற்கு வந்த பின்னர் செம்மணி மனிதப்புதை*குழி விவகாரம் குறித்து சோமரத்தின ராஜபக்சே தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கி, இவ்விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையைக் கோரி அவரது மனைவி திரு அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய, திரு ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்
குறித்த கடிதத்திலும் 7 ஆவது காலாட்படை தலைமையகத்தின் அதிகாரியாகவிருந்த கப்டன் லலித் ஹேவா தலைமையிலான அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்டு 7 ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சி*த்திரவ*தைகளுக்கு உட்படுத்தப்பட்டு ப*டுகொ*லை செய்யப்பட்டவர்களின் உடல்கள் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு புதை*க்கப்பட்டதை பதிவு செய்திருந்தார்
விசேடமாக கப்டன் லலித் ஹேவாயின் ஆலோசனைக்கு அமைவாகவே காலை 9.00 மணி முதல் மாலை 4.00 - 6.00 மணி வரை நாளாந்தம் இந்த செம்மணி சோதனைச்சாவடியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் செம்மணி சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் சொல்லியியிருந்தார்
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாலை 4.00 மணியின் பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7 ஆவது காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பதிவு செய்திருந்தார்
அங்கு ப*லியெடுக்கப்பட்டோர் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டு பு*தைக்கபட்டதாகவும் எழுதியிருந்தார்
செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருந்ததாக விரிவாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்
யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல படு*கொ*லைகள் மற்றும் சித்*திரவ*தைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்கும் எனது கணவர் தயாராக இருப்பதாகவும் தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சேவின் மனைவி திரு அனுரா குமார திஸாநாயக்காவிற்கு எழுதிய கடிதத்தில் விரிவாக எழுதி இருந்தார்
ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் எனது கணவர் அளித்த வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுங்கள் எனவும் கேட்டு இருந்தார்
இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்
அதே போல சர்வதேச விசாரணையொன்றில் கூட சாட்சியமளிப்பதற்குத் கூட தனது கணவர் தயாராக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்
இந்த கடிதம் எழுதப்பட்டு 8 மாதங்கள் கடந்து விட்டது. எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை
குறிப்பாக கப்டன் லலித் ஹேவா உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வழக்குக்கு என்ன நடந்தது என்பது பற்றி கூட இன்று வரை எந்த தகவல்களும் இல்லை
மறுபுறம் 600 பேரை திட்டமிட்டு சித்தரவதை செய்து கொ*ன்ற பிரதான கொ*லையாளி குற்றச்செயல்கள் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின்னரும் மிக சுந்திரமாக பிறந்த நாள் கொண்டாட அனுமதித்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள்
-இனமொன்றின் குரல்
2 days ago | [YT] | 5
View 0 replies
single reel
களப்பிடிப்பாளர் வீரவேங்கை கிளிமொழி அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
02.04.2000
களப்பிடிப்பாளர் வீரவேங்கை கிளிமொழி (சடாச்சரம் செல்வலட்சுமி)
யாழ்ப்பாணம் மாதகல்
வீரப்பிறப்பு 03.09.1981
வீரச்சாவு 02.04.2000
சுடுகருவி தாங்கிய வீரர்களோடு சுடமுடியாத கருவி கொண்டு களமுனையெங்கும் உலாவந்தாவள் களப்புலிகள் வீரத்தை புகைப்படக்கருவிக்குள் சிறைப்பிடிக்க நெருப்பு மழைக்குள்ளும் நிமிர்தியவள் நின்றாள்
இவள் சிந்தனைத் தூரிகைகள் வரைந்த அந்த ஒளிஓவியங்கள் உலகத் திசையெங்கும் தாயக வீரத்தை முரசறைந்து கொண்டிருக்கும் வேதனையின் வாடுகின்ற உறவுகளின் கோலங்களை வெளியுலகொங்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பொய்தனை பரப்பும் பகைவனின் செய்தியை பொய்களாக்கும் வரிப்புலிகள் சேனைக்குள் கலைப்புலியாய் இவள் மிளிர்ந்தாள் களம் நடுவே புகைப்படக்கருவியுடன் இவள் மடிந்தாள் வரலாற்றை பதியும் வேளை வரலாறாய் வீழ்ந்தவளே நீ பதித்த காலப் பதிவுகள் போல் என்றும் நீ வாழ்வாய் எம்மோடு எங்கள் நெஞ்சில் உந்தன் தாகம் சுவட்டில் உந்தன் பாதம்
ஓயாத அலைகள்-3
நடவடிக்கையின் போது மாமுனை குடாரப்புப் பகுதியில் தரையிறங்கி கண்டி வீதியை ஊடறுத்து நிலை எடுத்திருந்த வேளை சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதலை படம்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை இவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்
3 days ago | [YT] | 53
View 2 replies
single reel
“எப்படிப் பட்டவர்கள் எம் மக்கள்? " மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியே எப்பொழுதும் மேலெழுகின்றது. " சூரியப் பிரகாசம் 1 இன் போது, கட்டிய துணியோடு கைதடி தாண்டுகையில் கேட்கப்பட்ட கேள்வி இது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் விழி பிதுங்கி. வாய் மூடி மௌனித்துப் போனது சிங்கள அரசு.
இப்பொழுதும் அதே கேள்வி மேலெழுகின்றது. ஆனால், இப்பொழுது வேறுபாடு என்ன வெனில், சிங்களம் உரக்கக் கத்துகின்றது; வானுக்கும் மண்ணுக்கும் துள்ளிக் குதிக்கின்றது; யாழ்ப்பாணம் திரும்பிய மக்களைத், தனது நாளேடுகளின் தலைப்புச் செய்திகளை உருவாக்கும் மாந்தராக்குகின்றது; வண்ண வண்ண ஒளிப்படங்களின் நாயக, நாயகிகளாக்குகின்றது; எம்மக்கள் அங்கு என்ன செய்தாலும், அவர்கள் தோசை சுட்டு விற்றாலும், ஆட்டு மந்தை மேய்த்தாலும் அதனையே அதிசயச் செய்தியாக்குகின்றது.
யாழ்ப்பாணம் திரும்பும் மக்களை, வாழும் போது இறந்தோர் திரும்புகின்றனர்" என்றும், செத்த நகராகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண மண் சிங்களப் படையின் சீரிய பாதம்பட்டு அகலிகை உயர்த்தாற்போல் உயிர்க்கின்றது என்றும் வர்ணிக்கின்றது; யாழ்ப்பாண நகரைக் கட்டியெழுப்பி யாழ் மக்களை மீண்டும் கல்விக் கடலுக்குள்ளும், வேளாண்மைத் தொழிலுக்குள்ளும் முற்றிலுமாக மூழ்கடிக்கப் போவதாகவும் பெருமையடித்துக் கொள்கின்றது. எவ்வளவு பரிவு... எவ்வளவு அன்பு .. எவ்வளவு கரிசனை,,,,,,
எனவே, இப்படிப்பட்டவர் தான் தமிழ்மக்கள் என்கிறது சிங்களம். கிடுகு வேலிக்குள் அதுவே உலக மென்றும், தானுண்டு, தனது குடும்பம். தோட்டம், அரசாங்கத் தொழிலுண்டு என்றும், அடக்க ஒடுக்கமாக வாழ்ந்த மக்களிடையே, புலிகள் போன்ற பயங்கரவாதிகள் தோன்றியது ஒரு தற்செயல் விபத்து. இப்போது, எல்லாமே சரியாகி விட்டது. இம் மக்கள் இரண்டொரு வார இலவச உணவுப்பங்கீட்டினைப் பெறுவதையும், இ போ.ச. நவீன வண்டியில் இருந்து போவதையும், சதோச சலுசலாவில் சகாய விலையிற் பொருட்கள் வாங்குவதையும் இடைக்கிடை வந்து, இல்லாமலே போகும் மின்னொளியைக் காண்பதையுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாகக் கருதும் எளிமையான மக்கள். அதனால்தான், "அவர்கள் புலிகளைக் கைவிட்டு எம்பக்கம் வந்துவிட்டனர்" என்கின்றது சிங்களம். ,
"இல்லை இல்லை; இதுவல்ல உண்மை; யாழ்ப்பாணத்தார் அப் படியானவர் அல்லர். தமது உழைப்பால் தேடிய தோட்டங்களில், வீடு வாசல்களில், நிம்மதியாக, வசதியாகத் தனிமையாக வாழ விரும்பும் மத்தியதர வகுப்பு மனநிலை கொண்டவர்கள். எனவே தான் அவர்கள் வலிகாமம் திரும்பினர்." என்கிறார், த. வி. கூட்டணிக்குத் தள்ளாத வயதிலும் தலைமை தாங்கும் சிவசிதம்பரம். "புலிகளை வெறுத்தும்தான், மறுத்தும்தான்-மக்கள் வலிகாமம் வந்தார்களா?" என்ற சிங்களத்துச் செய்தியாளரின் கேள்விக்குச் சிவசிதம்பரம் மட்டுமல்ல, புலிகளை எதிர்க்கும் தமிழ்க்குழுக்கள் கூட பதில் சொல்ல மறுத்து விட்டனர். அது உண்மையல்ல என்பது மட்டுமன்றி; ''ஆம்'' எனத் தாம் அளிக்கும் பதில், தம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பேரம் பேசும் ஆற்றலையும் இழக்க வைத்து விடும் என்கிற பயமும் இவர்கட்கு மிகுதியாக உண்டு. அதனால் தான் புலிகளை அழிக்க விரும்புவோர் கூட, தாம் அரசியல் அநாதைகள் ஆகி விடாமல் தமது அரசியல் வாழ்வைத் தக்க வைக்கப் புலிகளையே நம்பியிருக்கிறார்கள். இது ஒரு விசித்திர நகை முறண் என்பது வேறு விடயம் தான். எனவே, மீண்டும் அக்கேள்வி எழுகின்றது. "இப்படிப் பட்டவர்களா எம் மக்கள்" ?
அல்லது, ஆய்வாளர், அறிஞர், அறிவுஜீவிகள் எனத் தம்மை, தாமே அழைப்போர் கூறிக்கொள்வது போல நிலவுடமைச் சமூகத்தின் அடிப்படைகளை கொண்ட
இன்னமும் சாதியடிப்படையிலான ஒரு சமூக அதிகாரப் படி நிலை முறைமையைப் பின்பற்றுகிற. அதன் மூலம் தனது சமூக அதிகாரப் பேணலைக் காப்பாற்ற விரும்புகின்ற, அதற்காக ஆளும் அதிகாரமுடையோரோடு அவர் எவராயினும் சரி இணக்கமாகச் செல்லும் இயல்பு உடையவர்களா எம் மக்கள்? நாவலரிலிருந்து, மெத்தப் படித்த பொன்னம்பலம் இராமநாதன் வரை, அன்றும் சரி இன்றும் சரி - பாரம்பரியத்தைப் பேணுவதை முதன் நிலைப் படுத்தியதை இதற்கு இவர்கள் சான்றாகுகின்றனர். இன்னும் சில வரலாற்றாளரோ, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஆகியோர், தம் காலத்தில் எம் மக்கள் பற்றிய தமது மனப்பதிவுகளை எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதை விளக்குகின்றனர் " இந்த நாட்டின் நல்லாட்சிக்குத் தமிழரின் மூளைத் திறன், அவர்களின் சுறு சுறுப்பான உழைப்பு என்பன கடந்த காலங்களில் மிக்க பயனுள்ளதாக அமைந்தன. அதே போலவே, எதிர் காலத்திலும் விலைமதிக்க முடியாத பங்கை இவர்கள் ஆற்றுவர். நாட்டின் நல்லாட்சிக்கு பிரித்தானியர் எப்போதுமே தமிழரின் உதவியை நாடி நிற்பார் என, 1930 களில் ஆங்கிலேய ஆள்பதி ஒருவர் கூறியதைப் பொதுமைப்படுத்தி எம்மக்கள் இத்தகையவர்கள் என எண்ண இடமிருக்கின்றது என்கின்றனர். எனவே, எம்மக்களின் சொந்தமுகம்-உண்மை முகம் எது? அந்நியர் எவராலும் அடி முடி அறியப்படாத எப்படிப்பட்டவர்கள் எம் மக்கள் என்கிற கேள்விக்கு விடை காணவே முடியாதா?
வலிகாமத்திலிருந்து ஏன் வந்தார்கள்? பின்பு ஏன் திரும்பிப்போனார்கள்?
இக் கேள்விகளுக்கான மிகச் சரியான விடையை அண்மிப்பதற்கு, நாம் பல நூற்றாண்டு கால வரலாற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டும். அப்போது தான், அந்நியர் ஆதிக்கம் என்கிற பாரிய வரலாற்று நெருக்கடிகள் எதிர்ப்பட்ட போதெல்லாம், அதற்கு முகம் கொடுக்க எத்தகைய உத்திகளை எம்மக்கள் பயன் படுத்தினார். என்பதை நாம் அறிய முடியும்; வெளிக்காட்டப்பட முடியாத அவமானச் சின்னமாகத்-தாழ்வுச் சிக்கல் வடுவாக - தன்மானத்திற்கேற்பட்ட தழும்பாக எம் மக்களின் ஆழ்மனதிலே பதிந்து விட்ட அடிமை வாழ்வு மறுப்பின் வெளிப்பாடு, எதிர்ச் செயற்பாடு எது? என்பதை உணர முடியும்.
எத்தனை கொடியேற்ற இறக்கங்களைக் கண்டவர்கள் எம் மக்கள் ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களின் போதும் பல்வேறு உத்திகளூடான பாரம்பரியப் பேணலாக - வெளியார் ஆதிக்கத்திற்கு எதிரான முனைப்பான செயற்பாடாக இணங்கிப் போவது போல அந்நியனோடு உறவாடிப் பின்னர் தம் சொந்த வழியிற் செல்லும் தந்திரோபாயமாக எத்தனையோ வழிகளைக் கையாண்டு, தமது சுகத்தைச் சொந்த முகத்தைத் தேசியத்தின் ஆன்மாவை வேறெவரிடத்திலும் பறிகொடுக்காமல் காப்பாற்றி வருபவர் எம்மக்கள். 1621 இல் போர்த்துக்கேயரிடமும், 1658 டச்சுக்காரரிடமும், 1796 ஆங்கிலேயரிடமும் அடிமைப்பட்டதற்கும், 1948 இல் நாதியற்றுப்போனதற்கும், 1956 58.77.81. 83 இல் அடியுதை பட்டதற்கும், பலம்மிக்க தேசவிடுதலைப் படையணி இன்மையே பிரதான காரணம் என்பதை உணர்ந்தவர்கள் எம் மக்கள். இதன் வெளிப்பாடாகவே விடுதலை உணர்வென்னும் அகல் விளக்கை அணையவிடாமல் நெஞ்சக் கூட்டுக்குள் வைத்துக் காப்பாற்றியதாலேயே, 1970 களில் தமிழர் விடுதலைப் போராட்ட அணியாக முகிழ்ந்த புலிகள் இயக்கம் வளர்ச்சியடைந்த வரலாறு. பரிணமித்தது. இந்தப் புது வரலாற்றின் அடிவரலாறு சங்கிலியனில், பூதத் தம்பியில், பண்டார வன்னியனில், இன்னும்பெயர் தெரியாது, முகமறியாது.விடுதலைக்காக கழுவிலேற்றப்பட்ட மண்ணின் மைந்தரில் உள்ளது என்பதே உண்மை. இது முன்னைய கதை; அண்மைய கதை எவ்வாறுள்ளது?
1990 ஆம் ஆண்டின் போர் தொடங்கிய பின்னாலான நாட்களில், போரோசையைத் தவிர வேறோசை கேட்காத நேரங்களில், சிதறும் தசைத் துண்டங்கள், பாய்ந்திடும் பச்சைக் குருதி என எங்கும் காரிருள் சூழ்ந்த வேளையில் எவ்வாறு இருந்தனர் எம்மக்கள் ? என்றுமில்லாதவாறு தம் முன்னே தோன்றிய போர்ச் சூழலை மிக,மோசமான பொருண்மியத் தடையை எவ்விதம் தாண்டினர் எம்மக்கள் ? அசைக்க முடியாத மனவுறுதியின் வெளிப்பாடாக, உள்ளார்ந்த ஆற்றலின் எல்லையை, தமது தாங்கு சக்தியின் உச்சத்தை அப்போது அடைந்தனர் தமிழ் மக்கள். இப்படிப் பட்ட மக்களை எவரால் என்ன செய்யமுடியும்? தாமும் வாழ்ந்து, தமது போராளிகளையும், தாயகத்தையும் வாழவைத்த மாண்புடையவர்களே எம் மக்கள் !
எனவேதான், பாரிய படை யெடுப்பு எதிர் வந்தபோதும், அது சரி வராதபோது பின்பு கதையை மாற்றி எதிரி வஞ்சக உறவாடிய போதும், அந்தந்தச் சூழலுக் கேற்ப தமது பட்டறிவு சொன்ன பாதைக்கேற்ப நடந்தனர் எம் மக்கள். எம்மக்கள் கையாண்ட உத்தியின் பெறுபேறுதான் என்ன? வலிகாமத்தில், வடமராட்சியில், தென்மராட்சியில், தென் தமிழீழத் தின் எல்லைப் பரப்போடும் வன்னிப் பெருநிலத்திலும் - எங்கும் -எம் மக்கள் கால் பதித்துப் பரவி நிற்கின்றனர். எங்கெல்லாம் எம்மக்களோ அங்கெல்லாம் புலிகளும் !
இப்போது வட தமிழீழத்தின் ஆகக்கூடிய நிலப்பரப்பாக கொண்ட வன்னிப் பெருநிலம் பெருமிதம் அடைகின்றது. தமிழீழத்திற்குள் புதிய குடித்தொகைப் பரம்பலிது.
எனவே, உறுதிமிக்க தேசிய விடு தலைப் படையணியாகப் புலிகள் பூரணமாக உருவெடுக்கும்வரை, இடம்பெயர்ந்தும் இடம்சேர்ந்தும் எம்மக்கள் வகுக்கும் உத்திகளைச் சிங்களம் எவ்வாறு புரியும்? ஆழமான நுட்பமான மனப் பாங்குள்ள எம்மக்களைத் தவறாகக் கணிப்பதன் விளைவு தவிர்க்கமுடியாத பெருஞ் சங்கடத்துட் சிங்களம் சிக்குகின்றமையேயாகும்.
பாரதி பாடியதுபோல "நல்ல தோர் வீணைசெய்தே அதை நலம் கெடப் புழுதியில்" எறிபவரல்லர் எம்மக்கள்; சுடர்மிகு அறிவுடன்" உள்ள அவர்கள் "நிலச் சுமையென ஒருபோதும் வாழ்ந்திடார்" என்பதை இந்த உலகம் மிக விரைவில் அறியும்!
-க. வே. பாலகுமாரன்
விடுதலைப்புலிகள் இதழ் வைகாசி 1996.
3 days ago | [YT] | 19
View 0 replies
single reel
தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப ஒளிரத் தொடங்கிய ஒரு இளம் தளபதி லெப். கேணல் பரிபாலினி.
2/2
மணலாற்றிலிருந்து வந்த இவ்வளவு வருடங்களாகியும், இன்றும் சகபோராளிகளிடம் பரிபாலினியின் செயற்பாடுகளை குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றால், அதற்குக் காரணம் அவரின் திறமையான செயற்பாடுகள்தான்” என்றார் முன்னாள் மணலாறு மாவட்டத் துணைத் தளபதி பாண்டியன் அவர்கள்.
அடிக்கடி பதுங்கித் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என விரிந்த களம் இதயபூமி – 01 உடன் அவளுக்கு முற்றுப்பெற்றது.
‘பரி அக்கா உங்களை பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கட்டாம்’ என்றால் அந்த ஏரியாவுக்குள்ளேயே பரிபாலினியைக் காணமுடியாது. படிப்பதென்றால் பச்சைக்கள்ளி. அப்படிப்பட்டவள் கல்விப்பிரிவுக்கென அனுப்பப்படுகிறாள். அந்தக் காலப்பகுதியில்தான் மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு வீரச்சாவடைய பரிபாலினி அழுத அழுகை. அன்றுதான் அவள் அழுததை எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவரின் வித்துடலுக்குக்கூட அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்றுவரை அவளுக்கு அது அழியாத கவலை.
இவளுக்கு ஒரு அறை, ஒரு மேசை, கதிரை, அறை எப்பொழுதுமே பளிச்சென்று இருக்கும். மேசையில் ஒழுங்காக உறைகள் இட்டு அடுக்கப்பட்ட கொப்பிகள், நேரே சுவரில் நாளிதழில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அன்பண்ணையின் படம் ஒவ்வொரு நாளும் முற்றத்தில் இருந்த மல்லிகையில் பூக்கொய்து படத்துக்கு வைத்து அஞ்சலி செய்து, அவளை போரியலில் வளர்த்த ஆசான் அல்லவா லெப். கேணல் அன்பு.
இந்தக் காலங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று இவர்களுக்குக் கட்டளை. முகாமில் ஒரே ‘கஸ்புஸ்’தான். அரைவாசித்தமிழ் அரைவாசி ஆங்கிலம்.
‘சிஸ்ரர் நவணி…… வோட்டர் டாங்…..’ நிரப்பும்படி சைகையில் முடிப்பாள் பரி.
பூச்செடிகளுக்கு தண்ணீர் உற்றும் போது யாரும் வந்து ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் பரி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து முழுசிவிட்டு, ‘பிளவர் றீ வோட்டர்’ மிகுதி சைகையில்.
கலை நிகழ்ச்சி என்றால் பரிக்கு சரியான விருப்பம். ஆனால் மேடையில் ஏறி எல்லோர் முன்னாலும் செய்வதென்றால் பயம், கூச்சம் இங்கேயோ செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்ன செய்வது? அன்று மேடை ஏறிய பரி எல்லோரையுமே வாய்பிளக்க வைத்தாள். “அதிசயத்தின்மேல் அதிசயம். பரிபாலினியா இப்படி நடித்தாள்” என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்தப் பரிக்குள் இப்படியொரு கலைத்திறன் இருக்குமென்று எவருமே நம்பவில்லை.
ஒருநாள் இவர்களின் தமிழ் ஆசிரியர் எல்லோரையும் தூய தமிழில் ஆக்கம் ஒன்று எழுதும்படி கூறினார். பரியின் பெரும் முயற்சியில் சிறுகதை ஒன்று உருப்பெற்றது.
அதை இன்னொருத்தியிடம் வாசிக்கும்படி கொடுத்தாள், அவளும் இலேசுப்பட்டவள் அல்ல நடிப்பதென்றால் அவளுக்குக் கைவந்த கலை. பரியின் சிறுகதையை ஏற்ற இறக்கங்களுடன் பெரிதாக வாசிக்கத் தொடங்கினாள்.
“அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து சிறுநீர் வழிந்தது”
எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஏனப்பாஇ ஏனப்பா என்ன எல்லோரும் சிரிக்கிறீங்கள்’ என்றவளிடம் ‘சிறுநீர் என்றால் என்னப்பா?’ ‘சிறிய நீர்இ சொட்டு நீர்’ என விளக்கியவள் தன் பிழை விளங்கவும் எல்லோருடனும் சேர்ந்து தானும் சிரித்து…… சேர்ந்து படித்து…… போராளிகளுக்கு வகுப்பெடுத்து…… புதிய போராளிகளை இணைத்து……
வெளியில் சிறுபிள்ளைத் தனத்துடன் காணப்படும் இவளிடம் முழுமையான ஒரு ஆளுமைத்தன்மையும், தன்னம்பிக்கையும் இன்னும் இன்னும் நிறையவே செய்ய வேண்டுமென்ற வெறித்தனமும் நிறையவே இருந்தது.
இவளின் உருவத்திற்கும், செயல்பாடுகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றம். இவளின் செயல்பாடுகளின் வெற்றிகளே இதற்கான சான்றுகள்.
மீண்டும் பரிபாலினியின் சண்டைக்களங்கள் விரியத்தொடங்கியது.
1996 இல் புதிதாகப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளிவந்த ஒரு அணிக்குப் பொறுப்பாளராக, அரசியல்துறை மகளிரணியாக…… அந்த அணி களம் இறங்குகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களோ எண்ணிலடங்காதவை. நீண்ட காலமாகச் சண்டைகளில் பங்குபற்றாது வெளி வேலைகளில் ஈடுபட்டிருந்த போராளிகள். இவர்களுடன் புதிய போராளிகள், இவர்கள் நல்லமுறையில் சண்டை பிடிப்பார்களா? என்ற கேள்வி ஏனைய தாக்குதல் அணிகளுக்கு எனினும் ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நின்று போரிட்டது இவர்களின் அணியும்.
பரந்தன் – ஆனையிறவு மீதான தாக்குதல் ஒன்றுக்கு பல அணிகள் பயிற்சி எடுத்தது. யார் யார் எந்தப் பகுதிகளுக்கென அவ் அணிகள் பிரிக்கப்பட்டபோது, ஒரு அணிக்கு உதவி அணியாக இவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் அணியை அவர்கள் “தமக்கு வேண்டாம்” எனக்கூறிவிட்டனர். பரிபாலினி, மேஜர் நித்தியா, கப்டன் ஜெயஜோதி உட்பட அனைத்துப் போராளிகளும் இறுகிப் போயினர். “இவங்களுக்குச் செய்து காட்டுறம்” என்ற சாவாலோடு களமிறங்கியவர்கள் சண்டையிட்டனர். காலையிலேயே விழுப்புண்ணடைந்த பரிபாலினி மாலை வரை களத்திலிருந்து வெளியேற மறுத்துவிட்டாள். பின்னரும் கட்டாயப்படுத்தியே வெளியேற்றப்பட்டாள்.
தொடர்ந்து ‘ஜெயசிக்குறுய்’ களம், முன்னர் இவர்களை மறுத்தவர்கள், சளைக்காது போரிட்ட இவர்களைக் கேட்டுப் பெறும் அளவுக்கு வளர்ச்சிகண்டு…… ஓயாத உழைப்பும், கடுமையான பயிற்சியும்…… எல்லாவற்றிற்கும் அடிநாதமாய் பரிபாலினி……
ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு தாமே தடையுடைத்து, ஏனைய அணிகளுடன் தமது அணி ஒன்றுடன் பரிபாலினியும் உள்நுழைந்து, பல இராணுவக் காவலரண்களைத் தாக்கியழித்து மீண்டபோது, கப்டன் ஜெயஜோதியுடன் இன்னும் சில போராளிகள் திரும்பவில்லை. ஆனால் இவர்களைப் பாராட்டாத தளபதிகளே இல்லை. புளியங்குளத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக நின்று புளியங்குளத்தை ‘புலிகள் புரட்சிக் குளமாக’ மாற்றியதில் இவளின் பெரும் உழைப்பும் உள்ளது என்றால் மிகையானது.
அந்தச் சமருக்குப் பொறுப்பாக நின்ற தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் கூறும்போது, “பரிபாலினியைப் பொறுத்த வரையில் குறிப்பாக நல்ல விசயங்களைப் பார்த்தனான், நல்ல ஒரு நிர்வாகி, துணிச்சலான சண்டைக்காரி மற்றது எல்லாத்திலேயும் ஒரு ஆர்வம் உள்ளவர் இந்த மூன்றையும் நான் அவளிடம் நேரடியாகப் பார்த்தனான்” என்றார்.
“ஜெயசிக்குறுய்” களமுனையில் இருந்து எடுக்கப்பட்ட அரசியல்துறை மகளிர் அணியின் போராளிகள் ஒவ்வொருவரும் அவரவரின் முன்னைய பணிகளைத் தொடரும்படி கூறிய தலைவர், பரிபாலினியை சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவுக்குத் தெரிவு செய்கின்றார்.
சண்டையில் நிற்கும் ஒவ்வொரு போராளிகளினதும் திறமைகளையும், செயல்பாடுகளையும், நிலமைகளுக்கேற்ப முடிவெடுக்கும் தன்மைகளையும், சண்டையின் வெற்றி தோல்விகளுக்கான காரணிகளையும், பகுப்பாய்வு செய்வதுமே இதன் நோக்கமாகும். ஆரம்பகாலத்தில் பரிபாலினியின் பொறுப்பில் பெண்போராளிகளே செயல்பட்டு வந்தனர். இந்தப் பணிகளில், எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்பாள் பரிபாலினி. கனவிலும் நினைவிலும் “அண்ணை எங்கள நம்பி விட்டிருக்கிறார். நாங்கள் திறமையாகச் செயற்பட வேண்டும்” என்பதே அவளின் தாரகமந்திரமாக இருந்தது.
01.02.1998 இல் ஆனையிறவு பரந்தன் சண்டையில் ஆரம்பமாகி 1999 இல் ஆண் போராளிகளையும் இணைத்து பிரிகேடியர் சொர்ணம் தலைமையில், எந்த மூலை முடுக்குகளில் நடைபெறும் சிறு சிறு தாக்குதல்கள் என்றாலும் அங்கெல்லாம் பரியும் சென்று வந்தாள். போகும் போது பாதை மாறி எதிரியின் பிரதேசங்களுக்கு முன்னால் சென்று மீண்ட சம்பவங்கள் பல.
ஓயாத அலைகள் மூன்றின் ஆரம்ப நடவடிக்கையின் போது சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவினரைக் கொண்டு களமிறங்கி மீட்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் பணியில் மணலாற்றில் ஈடுபட்டு, மீண்டும் பகுப்பாய்வு வேலைகள் செய்து…
தொடரும் ஓயாத அலைகளின் வீச்சால் எமது களமுனைகள் விரிவடைய, விரிவடைய தற்காலிகமாக சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவிலிருந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு படையணிகளுடன் இணையுமாறு பணிக்கப்பட, இவளின் பயணம் சோதியா படையணியை நோக்கித் தொடர்ந்தது.
“என்ர சண்டை அனுபவங்களைக் கொண்டு துர்க்காவுக்கு உதவியா நின்று, படையணியை நன்றாக வளர்த்து, அண்ணை பிள்ளையள எப்படியெல்லாம் வளர்க்க வேணும் என்று நினைக்கிறாரோ அதற்கெல்லாம் நாங்கள் செயலுருவம் கொடுக்க வேணும்” என்று கூறிச் சென்றவளை முதல் சமரிலேயே நாம் இழந்துவிட்டோம்.
01.04.2000 நள்ளிரவு கடந்த விடிகாலை இயக்கச்சி இராணுவத்தளம் புகுந்து திரும்பாத தோழிகளுள் பரிபாலினியும் ஒருத்தியாக…
பரிபாலினி மணலாற்றுக் காட்டின் மரவேர்களில் காவலிருந்து. காட்டுப் பறவைகளையும் விலங்குகளையும் நேசித்து, பொதிகள் பல சுமந்து, ஆழக்கிணறுகள் வெட்டி, பலம் மிக்க பாசறைகள் அமைத்து, உரமேறிய கைகளுடன் எதிரியுடன் பொருதி, பல துறைகளிலும் வளர்த்து தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப பிரகாசிக்கத் தொடங்கிய ஒரு இளம் தளபதி……
அடிக்கடி ரவைகளால் துளைக்கப்பட்டு, குண்டுச் சிதறல்களால் பிய்க்கப்பட்டு, இரத்தம் கொட்டி, வீரத் தழும்புகளால் நிறைந்த அவள் உடல்……
தனது சொத்தி வாயை நெளித்து, ‘இஞ்சேருமப்பா இஞ்சேருமப்பா…’ என்று எம்மைச் சுரண்டும் அந்த அழகான சின்ன உருவம்……
ஓ… அவள் ஓயவில்லை. இன்னும் எம்முன் நிழலுருவமாக உலாவிக் கொண்டிருக்கிறாள்.
நினைவுப்பகிர்வு: உலகமங்கை.
நன்றி – களத்தில் இதழ் (31.08.2000).
4 days ago (edited) | [YT] | 7
View 1 reply
single reel
தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப ஒளிரத் தொடங்கிய ஒரு இளம் தளபதி லெப். கேணல் பரிபாலினி.
1/2
லெப்.கேணல் பரிபாலினி
சந்திரசேகரன் சுரனுலதா
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.07.1973 - வீரச்சாவு: 01.04.2000
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி விழிப்படைந்து எமது நகர்வுகளையே கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச ஊர்திகளையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவனின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்தியில் இருந்து ஒலித்த அந்தக் குரல் தொலைத் தொடர்புக் கருவியூடாக எல்லோர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீண்ட நெடுநேரம், அந்தத் தன்னம்பிக்கையான, உறுதியான, தெளிவான குரலை ஒலிபரப்பிக் கொண்டிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் அமைதியானது.
“பரி… பரி… பரி…”
“பரி… பரி…”
என அனைத்துக் கருவிகளும் அலற அந்தப் பெயருக்குரியவள், அந்தக் குரலுக்குரியவள் அடங்கிப் போனாள்.
1990 காலப்பகுதியில் பயிற்சிப் பாசறைகள் நோக்கி படையெடுத்த பெண்களில் இவளும் ஒருத்தி. எப்போதுமே அமைதியாகக் காணப்படும் இவள் எல்லோராலும் ‘நல்லூர் நோனா’ என அழைக்கப்பட்டவள். மணியடித்தால் சாப்பாட்டிற்கு முன்னின்று, வகுப்புக்குப் பின்நின்று, பயிற்சிக்கு முன்னின்று லெப். கேணல் மாதவியால் புடம் போடப்பட்டு, பரிபாலினியாக வெளிவந்த இவள்; 1992 முற்பகுதி வரை பலாலி, பத்தமேனி, தட்டுவன்கொட்டி என பல முன்னணிக் காவலரண்களிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகாய கடல்வெளிச் சமர், மின்னல் எனவும் பல சிறு சிறு சண்டைகளிலும் ஒரு போராளியாகவே தடம் பதித்தவள்.
1992 ஆண்டின் தொடக்க காலம், எமது இதயபூமியான மணலாற்றை எதிரியின் வல்வளைப்புக்களிலிருந்து பாதுகாக்கும் பணியில் பெண் போராளிகளையும் ஈடுபடுத்துவதற்கென புதிய அணியொன்று உருவாக்கப்படுகின்றது. பத்தே பத்துப் போராளிகளுடனும், இருநூற்றைம்பது பயிற்சி எடுக்காத புதிய போராளிகளுடனும் மணலாறு சென்றது அந்த அணி, அவர்களைப் பயிற்றுவித்தே தமது பணியைத் தொடங்க வேண்டும். பொறுப்பாகச் சென்றவருக்கு தன்னுடன் வந்த பத்துப் போராளிகளும் என்ன நிலையில் இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர்களில் பரிபாலினியும் ஒருவர்.
இவள் அங்கே பயிற்சிக்கான துணை ஆசிரியராக நியமிக்கப்படுகின்றாள். பயிற்சிக்கான ஒழுங்குகள் செய்து, பயிற்சியும் தொடங்கி ஆறே ஆறு நாட்கள்.
கொக்குத்தொடுவாய் படை முகாமிலிருந்து நாயாறு வரை மும்முனைகளில் முன்னேறி கரையோரப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், தமிழர் தாயகத்தை துண்டாடுவதுடன், வடக்கிலிருந்து கிழக்கிற்கான எமது வழங்கற் பாதையைத் துண்டிப்பதற்காகவும், மூவாயிரம் சிங்களப் படைகள் ‘கஜபார’ கட்டம் ஆறு (ஒப்பரேசன் சிக்கர் கஜபார) என்ற பெயருடன் பெரும் எடுப்பிலான நகர்வை மேற்கொண்ட போது, வழிமறித்து நடந்த சண்டைக்குக்காவும் குழுவாகச் செல்லத் தயாராகின்றனர். எல்லோருக்குமே காடு புதிது, புதிய போராளிகள் வேறு. எவருக்குமே ”கொம்பாஸ் (திசையறி கருவி)” தெரியாது. மூன்று நாட்களில் ‘கொம்பாஸ்’ பயின்று, பரிபாலினியுடன், இன்னுமொரு போராளியுடனும் புதிய போராளிகள் களம் இறங்கினர்.
சீனத்தயாரிப்பு டாங்கிகளும், கவச ஊர்திகளும், பீரங்கிகளும், குண்டு வீச்சு வானூர்திகளும், உலங்கவானூர்திகளும், பீரங்கிப்படகுகளும் குண்டு மழை பொழிய, அந்த அடர்ந்த காடுகளுக் கூடாகவும், திறமையாகத் தனது பணிகளைச் செய்து, ஆண்டாள் என்ற ஒரு புதிய போராளியை இழந்து, அவர்களின் பணிக்கு பரிசாகக் கிடைத்த ஐந்து ஏ.கே.யுடன் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜீ உடனும் முகாம் திரும்பியது அந்த அணி.
‘பாத்தீங்களா, நாங்கள் சண்டைக்குப் போகாமல் சப்பிளைக்குப் போயே அஞ்சு ஏ.கே.யும், ஒரு எல்.எம்.ஜீ.யும் எடுத்திட்டம்’ என்று சொல்லிச் சொல்லி துள்ளித் திரிந்தாள். அன்று ஆறு நாட்களே பயிற்சி எடுத்த அந்தப் போராளிகளின் முதுகெலும்பாக நின்று செயற்பட்டவளே இவள்தான்.
எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சற்றேனும் பதட்டம் இருக்காது இவளிடம். அன்றிலிருந்து இன்றுவரை இது அவளிடம் ஒன்றிவிட்ட ஒன்று. இந்தப் பழக்கம்தான் பொறுப்பாளர்களிடம் பரிபாலினியை இனங்காட்டியது.
இரண்டரை மாதப் பயிற்சிக் காலங்களில் துணைப் பயிற்சியாசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், முதல் பயிற்சியிலேயே எதிரியை எப்படிக் குறிபார்த்துச் சுடுவது என்பதைப் பயிற்றுவித்து, இடையிடையே நடக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கு அவர்களுடன் சென்று மீண்டு, மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்து… ஐந்து படையினரைத் தாக்குவது என்றாலும் அதற்கும் இவர்கள் சென்று… எண்ணிக்கையில் அடங்காத பதுங்கித்தாக்குதல்கள்.
தலைவர் அடிக்கடி சொல்லுவார், ‘ஆயிரம் முயல்களை ஒரு சிங்கம் வழி நடத்தலாம். ஆயிரம் சிங்கத்தை ஒரு முயல் வழிநடந்த ஏலாது’ என்று. அதேமாதிரி புதிய போராளிகளைக் கொண்டு செய்யிறது என்பது, அதுவும் காட்டுச் சண்டை, சண்டைச் சூழலே பிள்ளைகளுக்குத் தெரியாது. பரிபாலினியில் இருந்த நம்பிக்கையில்தான் முழுப் பிள்ளையளையும் விடுறம்” என்றார்; மணலாற்றின் ஆரம்பகால மகளிர் பொறுப்பாளர் சீத்தா அவர்கள்.
பயிற்சிகள் முடித்து இரு அணிகளாகப் பிரிக்கப்பட்ட படையணியில் ஒரு அணி பரிபாலினியின் தலைமையில் களம் இறங்குகின்றது. நூறு பேர் கொண்ட ஒரு அணிக்குப் பொறுப்பாளராகவும், அதே நேரம் இருநூறு பேரைக் கொண்ட முழு அணிக்கும் துணைப்பொறுப்பாளராகவும், நியமிக்கப்பட்ட பரியின் நிலை தர்மசங்கடமாகிப் போனது. தான் சண்டைக்கு முதலில் போகமுடியாதே என யோசித்தவள், ஐம்பது பேர் கொண்ட அணியைப் பொறுப்பெடுத்து முதலில் நகர்ந்து விட்டாள்.
ஒப்பரேசன் செவன்பவர்’ (ஏழு சக்திகள்) முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியூடாகச் செம்மலைஇ குமுழமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருக்கு உதவியாக செம்மலைஇ அளம்பில் கடல் பிரதேசங்க@டாக தரையிறக்க முனைந்த இராணுவத்தினரை, கரையோரம் நின்ற பரிபாலினியின் அணி எதிர்கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று கடல்கலங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியவாறு கரையை நோக்கி வருவதும்இ இவர்களின் துப்பாக்கிகள் சடசடக்க பின்வாங்குவதும் பின் வருவதும் போவதும், வருவதும் போவதுமாகத் திணறிய கலங்கள் இறுதியில் ஓடியேவிட்டன.
மணலாற்றின் வரலாற்றுச்சமர்களில் பெரும் எதிர்ச்சமரான இந்தச் சமரில்இ எதிரியின் கடல்வழி விநியோகத்தைத் தடுத்து நிறுத்திய பெரும் பணியில் எமது இன்றைய தளபதியான இவளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே இருந்தது.
அன்றொருநாள் சண்டை முடிந்து அனைத்து அணிகளும் திரும்பிக்கொண்டிருந்தது. பரியைக் காணவில்லை. ‘எமது எதிர்காலத் தளபதியை இழந்து விட்டோமா’ என எல்லோர் மனங்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. ‘பரிபாலினி வீரச்சாவாம்’ என்ற செய்தியும் வந்துவிட்டது. ஆனால் மனங்கள் மட்டும் ஏற்க மறுத்தது. காயமடைந்தும், வீரச்சாவடைந்தும் வரும் ஒவ்வொருவரையும் ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம். மனமும் சோர்ந்து போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான்கு பேர்களின் தோள்களில் ஒரு
ஸ்ரெச்சர்’ ஒரு நப்பாசையுடன் ஓடிப்போய்ப் பார்த்தால் பரிபாலினி. சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது, உயிர் பிரியவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டோம். கால்கள், வயிறு, ஒருபக்கத் தாடை எனப்பிய்ந்து தொங்கக் கட்டுப்போட்டபடி…… பல மைல்களுக்கப்பால் உள்ள கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமை நோக்கி நடையாய் நடந்து, பல இராணுவ அரண்களை தாக்கியழித்த அந்தச் சமரில் இவள் படுகாயமடைய, சிலர், ‘வீரச்சாவு’ எனக்கூற, சிலர் ‘இல்லை’யென, ‘இவ்வளவு தூரம் கொண்டு போகிறதுக்கிடையில் ஆள் முடிஞ்சிடும்’ என்று இன்னொருவர் சொல்ல, அவள் வளர்ந்த குஞ்சுகளின் தோள்களில் மூச்சுப்பேச்சற்ற நிலையில் எதுவுமே அறியாதவளாய் வந்து சேர்ந்தாள்.
காயங்கள் ஆறி, மீண்டும் கானகம் வந்தவளை எல்லோருமே கிண்டலடிப்பார்கள்; அவளின் ஆறு பற்களையும் இழந்த வாயைப்பார்த்து. இவளுக்கும் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்க முடியாதவளாக கைகளால் மூடி சிரமப்பட்டுச் சிரிப்பாள்.
தொடர்ந்தும் கானகம் அவளைக் களம் நோக்கி அழைத்தது. கடும் பயிற்சி, கோட்டைக்கேணிக்கும் கொக்குத்தொடுவாய்க்கும் இடையில் ரோந்துவரும் இராணுவத்தினரை மறைந்திருந்து தாக்க வேண்டும். அந்த முகாமிலிருந்து இந்த முகாமுக்குக் கையசைத்தால் தெரியும். இரண்டு முகாம்களுக்கிடையில் உள்ள வெட்டை வெளியில் புல்லோடு புல்லாக இவர்கள். 8.30 மணிக்கு அவ்வழியால் வரும் இராணுவம் வரவில்லை. இவர்கள் திரும்பவும் வழியில்லை. இருட்டிய பின்னர்தான் அசையலாம். அதிகாலை 4.00 மணிக்கு நிலையெடுத்தவர்கள் ‘குளுக்கோஸ்’ பக்கற்றும், தண்ணீர் பக்கற்றும்தான் ஆளுக்கொன்று கொண்டு சென்றார்கள். அதுதான் அன்றைய சாப்பாடு. மாலை 5.00 மணி அவர்கள் காத்துக்கிடந்த இரைகள் கிடைத்தன. நல்ல சண்டை, கைப்பற்றிய ஆயுதங்களுடன் திரும்பினர்.
4 days ago (edited) | [YT] | 2
View 0 replies
single reel
புலிகள் உண்மையிலேயே பாசிச புலிகள் என்றால் மாற்று இனத்தவர் ஒருவரும் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்திருக்கவே முடியாது.
அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் மணலாறிலும் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுக்கும் பொருந்தும்.
விடுதலைப் புலிகள் ஒருபோதும் அப்பாவி பொதுமக்களை கொன்றது கிடையாது.
விடுதலைப் புலிகளின் இலக்கு ஒருபோதும் முஸ்லிம்களாகவோ சிங்கள மக்களாகவோ இருந்தது கிடையாது.
விடுதலைப் புலிகள் இவ்வாறான செயல்களை செய்பவர்களாக இருந்திருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைத்திருக்கும்.
அவர்கள் இப்படிப்பட்ட செயல்களை செய்திருக்க தேவையில்லை. அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தால் அங்கு வாழ்ந்த சிங்கள முஸ்லிம் மக்கள் அந்த இடங்களை விட்டு ஓடி இருப்பார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகள் அவ்வாறு எதுவும் செய்யவில்லை.
தமிழ் பேசுகின்ற முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பிரிவினையை உண்டாக்கி அவர்களை எதிரிகளாக்கி தங்களது காரியங்களை நிறைவேற்றிக் கொண்டவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.
அதாவது மொழியால் ஒன்றுபட்டிருந்தால் சிங்களவர்களுக்கு பாதகமாக அமையும் என்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையும் படைத்துறையும் அரசும் இணைந்து முஸ்லிம்களையும் தமிழர்களையும் விரோதிகளாக்கி குளிர் காய்ந்தார்கள்.
அதற்கு பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் படையினரோடு சேர்ந்து இயங்கிய முஸ்லிம் ஊர்காவல் படையினரும் முஸ்லிம் புலனாய்வு துறையினரும் சிறப்பாக இக்காரியங்களை செய்து முடித்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத போது அதனை புலிகள் மீது இலகுவாக பழி போட்டு விட முடியும் என்பது பலரது எண்ணம்.
உண்மையிலேயே பல இனவிரோத காரியங்களை செய்த சிங்கள படை புலனாய்வு பிரிவினரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள்.
இலங்கை முசுலீம்கள் எப்போது இஸ்லாமிய தமிழர்களாக உணர்ந்து கொள்கிறார்களோ அன்று தான் அவர்களுக்கு விடிவு எங்களுக்கும் விடிவு. ஆனால் அவர்கள் அதனை உணரப்போவதுமில்லை அப்படி செய்யப் போவதுமில்லை.
4 days ago | [YT] | 5
View 0 replies
single reel
In memory of the fallen
"In my country
freedom is something more
than a delicate breeze of the soul,
it is also a courage of skin."
- Otto René Castillo
Sri Lanka's ruling coalition, United People's Freedom Alliance (UPFA), swept into power in April 2004. Barely a month after, on the 31st of May, the veteran Tamil journalist Aiyathurai Nadesan was gunned down in the eastern coastal city of Batticaloa, by the government backed paramilitaries.
His death triggered a new war of annihilation. A war fought with a renewed vigor and an unprecedented brutality: A war against media and freedom of expression.
Within the next 6 years, at least 43 journalists and media workers were either killed or disappeared. No investigation pursued - no perpetrator brought to justice. The ruling UPFA government has outperformed all its predecessors by single-handedly wiping out at least 39 journalists and media workers so far.
The clock still ticks and the guns are still being oiled.
During the past three years , Journalists for Democracy in Sri Lanka (JDS) worked relentlessly to uncover the truth. We were determined to compile a list as comprehensive and detailed as possible. The record needed to be set straight in order to counter the allegations of 'unduly inflated numbers',
Where justice delayed, impunity flourishes. Hence, we keep on fighting, in memory of the fallen.
1 week ago | [YT] | 2
View 0 replies
Load more