சிங்களவெறியன் சிரிச்சு போனா பல் இளிக்காத!


single reel

புலிகளின் குரல்
மாவீரர் #தவபாலன்
========================
அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார் என்றுமில்லாதவாறு அன்று அவருடைய முகம் இருந்தது.நானும் அம்மாவும் வெளியில் வந்தோம்.”எல்லாம் முடிஞ்சிட்டு நான் வரமாட்டன் நீங்க போங்கோ” தாளச் சோகத்தில் கதறி அழுது அப்பாவை அணைத்தேன்.இது வரை காலமும் ஒரு சொட்டு கண்ணீரையும் பாத்திராத அவருடைய கண்கள் அன்று அழுதது.இறுதியாக அப்பா விடைபெற நடைபிணங்களாக மாறிய நாங்கள் சரணடைவுக்காக வட்டுவாகல் நோக்கி நடக்க ஆரம்பித்து இடைநடுவே ஓர் இடத்தில் அன்றைய இரவு கழிக்க வேண்டிய சூழ் நிலை 60mm மோட்டார் செல்கள் சரமாரியாக வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.ஏற்கனவே வெட்டி இருந்த அந்த பதுங்குகுழிக்குள் அன்றிரவு ரணமாய் சொல்லமுடியாத அளவு சிந்தனைகளால் நிரம்பியதாய் அந்த இரவு நகர்ந்தது.”
அன்று மே 16 விடிகாலைப்பொழுது சரணடைய வேண்டும் என்பது உறுதியாக விட்ட போதிலும் எங்கே எப்படி என அறிந்திருக்கவில்லை காலை வேளையில் சரணடைவதற்காக புதுக்குடியிருப்பு பக்கமாக நகர்ந்தோம் சரமரியாக செல்வீச்சும் சன்னங்களும் வந்து கொண்டிருந்தன செல்கின்ற வழியெங்கும் பிணங்கள் ஏற்கனவே வெட்டப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் இருந்து இருந்து நகர்ந்தோம் இறுதியாக புதுக்குடியிருப்பு பக்கமாக இருந்த இறுதி எல்லையை எட்டிய பொழுது எதிர்பாராத விதமாக அப்பாவை சந்திக்க நேர்ந்தது அந்த இடம் அடுத்து ஒரு அபரிவிதமான யுத்தம் ஒன்றுக்கு தயாரன இடமாக ஏதோ ஒரு மாயம் குடிகொள்ளப்போகும் இடமென்பது உணரக்கூடியதாய் இருந்தது.

அப்பா உடனடியாக எங்களிடம் இருந்த அவரது புகைப்படங்களை எடுத்து கிளித்து எறிந்துவிட்டு உடனடியாக வட்டுவாகல் பக்கம் செல்லும் படி சொன்னார் சிறிது தூரம் தானும் வந்தார் வருகின்ற வழியில் திடீரென ஒரு ஆர்பியி எறிகணை வந்து வெடித்தது நாங்கள் சிதறி ஓட ஆரம்பித்தோம் சாரை சாரையாக ரவைகள் வர ஆரம்பித்தன ஓட ஆரம்பித்தோம். ஆனால் இன்று நான் ஒன்றை உணர்கிறேன் அப்பா தான் வரித்துக்கொண்ட சத்தியத்தின் மீது தீராத பற்றுதி கொண்டிருந்தார் அதே போல் எங்களுக்கும் அதை சரியாக தந்திருக்கிறார் அதனாலேயே என்னமோ அப்பாவை எங்களுடன் வரச் சொல்லி அம்மாவோ நானோ அழைத்து அப்பாவை தர்மசங்கடத்துக்குள் உள்ளாக்கவில்லை………

– மகன் –
=====================
மே 9,10ஆம் திகதி | வட்டுவாகல் பாலத்துக்கு கொஞ்சம் முன்னாலைதான். ஒரு 1கிமீட்டர் இருக்கும்.’
ஒரு மே 9, 10ஆம் திகதி போல ஒரு மாமரங்கள் நிறைந்த கூடலுக்கு கீழே இருத ஒரு பதுங்ககழி இவர்களின் புலிகளின்குரல் இயங்கினது. அந்த காப்பரணுக்குள்ளே ஒருநாள் பின்னேரம் போல உள்ளே சென்றனான். அதுதான் என்ர வாழ்க்கையில் புலிகளின் குரல் ஒலிபரப்பு கணத்தை நான் கண்ட முதல் நிகழ்வு.
காப்பரண் ‘ட’னாப்பட இருந்தது. முன்னுக்கு இருந்த வாசலில் ஒரு அக்கா இருந்து பாடல்களை ஒலிபரப்புச்செய்து கொண்டிருந்தவ. அவக்கு அங்காலதான் தவபாலன் மாமா இருந்தவர். அவரை அன்டைக்குத்தான் நான் முதன்முதலாகக் கண்டனான். அவர் கழுத்தில ‘headphone’ மாட்டியிருந்தவர்.
எனக்கு நல்ல ஞாபகம், நான் அந்த அக்காட்ட நீங்கள் ”கண்ணிவெடி கனவில் வருது” பாட்டுப் போடுவியளோ என்ட அந்த அக்கா சொன்னவ உந்தப் பாட்டை இப்ப போட்டா சனம் என்னை அடிக்கும் என்டு சொன்னவ. நான் ஏன்னென்டு கேக்க, ஆமி வாற நேரத்திலை உந்தப் பாட்டையோ இப்ப போடுறது என்டு என்னை ஏசினவ. இதெல்லாம் மறக்க ஏலாத தருணங்கள்!
அந்த எறிகணை விழுந்த கூடாரத்துக்கு முன்னுக்கு இருந்த கூடாரத்திலைதான் நாங்கள் முதலிலை இருந்தனாங்கள். அது திறந்த வெளிப் பதுங்ககழி. ஒரு நாள் பின்னேரம், 9ம் திகதி என்டு நினைக்கிறன், இருந்தாப்போலை ஆமி எங்களுக்கு முன்னால இருந்த அந்தக் கூடாரத்துகு செல் அடிச்சு அந்தக் கூடாரத்துக்கு முன்னால ஒரு அம்மா தன்ர குழந்தை ஒன்றிற்கு, ஒரு ஒன்று அ ஒன்றரை வயது மதிக்கத்தக்கது, குளிச்சவாத்துக்கொண்டு இருந்தவ. அந்தக் குழந்தை குளிச்சுக்கொண்டு நின்ட பேசினுக்கு மேலையே அந்த அந்த எறிகணை வீழ்ந்து வெடிச்சதில அந்த குழந்தை துகளாகிப்போட்டுது. அம்மா அப்படியே சிதறிட்டார். அதிலிருந்து வந்த சிதறுதுண்டம் ஒன்று என்ர அம்மம்மாவின்ர காது மடலிலை ஏறிற்றுது. அம்மாக்கு காலிலை மற்றொண்டு ஏறினது. நல்ல காலம் ரண்டும் சரியான சின்னன் என்டதாலை நாங்களை அதைக் கையாலையே இழுத்து எறிஞ்சு போட்டு பக்கத்து பதுங்ககழிக்குள்ள போக முதலுதவி மருந்து கட்டிவிட்டவ, அதுக்குள்ள இருந்த அம்மாக்குத் தெரிஞ்ச ஒரு நேர்ஸ் அக்கா.

அதுக்குப் பிறகுதான் அந்தக் காப்பரணுக்குள்ள போனன்னாங்கள். அதுக்குள்ள ஏற்கனவே மூண்டு குடும்பம் இருந்தது. நெருக்கம்தான். செல்லுக்கு மட்டும் உள்ளுக்குப் போறனாங்கள். மற்றும்படி வெளியிலைதான் இருந்தனாங்கள், சரியா அன்டும் அடுத்தநாள் பின்னேரம் வரைக்கும். பேந்து அந்த இடத்தை விட்டு நாங்கள் வேறொரு இடத்துக்குப் போயிற்றம். அந்த ஒற்றையடிப் பாதைக்குள்ளாலை நகர்ந்து பின்னாலை இருந்த ஒரு வடலி கூடலுக்குப் பக்கத்திலை போயிருந்தனாங்கள். இடம்பெயரேக்கிலதான் நான் ஜவான் மாமாவைவும் பாத்தனான். இடுப்பிலை பிஸ்டல் கட்டிக்கொண்டு நிண்டவர்.

பதிவு கவிப்புயல் சரண்

1 day ago | [YT] | 19

single reel

மே 15 புலிகளின் இறுதி நிலைப்பாட்டை தாத்துவார்த்தத் தளத்தில் முரசறையும் குரலாக சமராய்வு மையப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகியின் உரை 'புலிகளின் குரல்' வழியே நிகழ்ந்தது.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி 'அடிபணிவு என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று பிற்பாடு மே 17 அறிவித்தாலும் அதன் கொள்கை உரையாக - தத்துவார்த்த உரையை யோகி அண்ணையே நிகழ்த்தினார். சமாதானச் செயலகப் பொறுப்பாள புலித்தேவன் இறுதியாகப் பேசும் போது 'தலைவர் ஒரு தொகுதிப் போராளிகளுடன் நந்திக்கடல் களப்பில் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டிய செய்தியைத் தெளிவாகச் சொல்வார்' என்ற தகவலும், அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் 'சரணடைவு' என்ற சொல்லை அழுத்தமாகப் பேச மறுத்ததும் பிற்காலத்தில் வலுச் சேர்த்தாலும் தலைவரின் இறுதி நேரச் சிந்தனை 'நந்திக்கடல் கோட்பாடுகளாக' எழுதப்பட உந்துதலாகவும், ஒரு பொறியாகவும் இருந்தது யோகி அண்ணையின் இந்த உரைதான்.

அதன் சிறு பகுதி கீழே :

🟥 இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்தபின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப் படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக சிங்கள தேசம் தீர்வு குறித்துப் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாரும் இதைப்பற்றிப் பேச இனி மாட்டார்கள்.

🟨 ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலகநாடுகள் எல்லாமே இந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடவேண்டும் என நினைக்கின்றன. குறிப்பாக, தேசியத் தலைவரை அழித்துவிட வேண்டுமென நினைக்கின்றன. அவரை அழித்துவிட்டால், இந்தப் போராட்டத்தில் தாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும், எங்களை அழித்து, எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்து, தாங்கள் விரும்பியதைச் செய்யமுடியும் என நினைக்கின்றன.
அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்தப் போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

⬛எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லோரும் - ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர - எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகெங்கும் இருக்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேசவேண்டும். உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துக்களைச் சொல்லிவைப்போம். அதன்மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம்.

🟫 நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒருகாலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தை தான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம்.

#தமிழீழஎழுச்சிமாதம்2026
#நந்திக்கடல்கோட்பாடுகள் 💛
Copy

1 day ago | [YT] | 5

single reel

2009.05.15 17வது ஆண்டு நினைவேந்தல்
கேணல் கீர்த்தி அண்ணை அவர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தாயக விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து நீண்டகாலம் களப்பணி ஆற்றிய ஒரு மூத்த தளபதி

இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதி களில் ஒருவர் சண்டை களத்தில் இரண்டு கைகளில் ஒரே மாதிரியான காயங்கள் ஏற்பட்டு இருந்த போதும் சோர்வடையாது தாயக கனவை சுமந்தபடி வீறு நடை போட்ட தளபதி

அம்மான் அவர்களின் முக்கியமான நேரடி பணிகளை செய்து வந்தவர் அத்துடன் அம்மான் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அணிகளை வழிநடத்திய வர்
இவர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் புலனாய்வுத்துறை கொமாண்டோ அணிகளை நகர்த்தி தாக்குதல் நடவடிக்கை மேற் கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்த தளபதி
1998ம் ஆண்டு வவுனியா மன்னார் வீதியில் நடந்த மிக முக்கியமான மற்றும் கொமாண் டோ தொடர்புடைய தாக்குதல் முருங்கன் பகுதியில் இராணுவப் பேரூந்து மீது நடத்த ப்பட்ட தாக்குதல் ஆகும்.
1998ம் ஆண்டு இறுதிப் பகுதியில் வவுனியா மன்னார் நெடுஞ்சாலையில் பயணித்த இலங்கை இராணுவத்தின் நலன்புரி பேரூந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கேணல் கீர்த்தி அண்ணை அவர்கள் தலைமையிலான கொமாண்டோ அணியினர் முருங்கன் பகுதியில் வைத்து இந்த இராணுவ பேரூந்து மீது அதிரடி பதுங்கி தாக்குதல் நடத்தினர்.
இந்த கெரில்லா பாணி தாக்குதலில் இரண்டு பெண் இராணுவத்தினர் உட்பட ஒன்பது இராணுவத்தினர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர் இதில் ஒரு போராளி மலசலகூட குழி உடைந்து குழிக்குள் விழுந்தும் அத்தனை அழுக்குகளை பொறுமையுடன் தாங்கி கொண்டு தாக்குதல் நிறைவடைந்த பின் வெளியில் எடுக்கப்பட்ட சம்பவம் உள்ளது இத் தாக்குதல் எந்த இழப்பும் இன்றி தளம் திரும்பினர் இறுக்கமான பயிற்சி இலகுவான சண்டை அவ்வாறு போராளிகளை திறம்பட வழிநடத்திய தளபதி இவ்வாறான பல வெற்றிகரமான தாக்குதலைகளை நடாத்தி வந்ததால் திரு.தேசியத்தலைவர் அவர்களினால் பாராட்டை பெற்றதுடன் புதிய பில்ட் பைக் வழங்கியிருந்தார்.
2001.07.24 அன்று கட்டுநாயக்க விமான நிலையம் மீதான வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையில் இவரின் செயற் பாடு உள்ளது
2004.04.12 கருணா பிரிந்து எமக்கு எதிராக மட்டக்களப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது கருணா எதிர் பார்க்காத வேளை திரு.தேசியத்தலைவர் அவர்களின் தீர்க்க தரிசனத்துக்கு அமைய அம்மான் அவர்களின் வழிநடத்த கேணல் கீர்த்தி அண்ணை அவர்கள் தலைமையிலான கொமாண்டோ அணியு டன் சென்று மட்டக்களப்பு மாவட்டத்தை மீட்டு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து செயல்வடிவம் கொடுத்த சிறந்த தளபதி
அம்மான் அவர்களின் சிபார்சு அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை தளபதியாகவும் ஜெயந்தன் படையணி சிறப்பு தளபதியாக திரு.தேசியத்தலைவர் அவர்களினால் நியமிக்கப்பட்டார் மட்டக்களப்பு சென்ற கேணல் கீர்த்தி அண்ணை அவர்கள் கட்டமைப்புகளை திருத்தி அமைத்து மீண்டும் வன்னி தளத்திற்கு வந்திருந்தார்

2009 மே மாதம் இறுதிக்கட்ட போரின் போது
முள்ளிவாய்கால் பகுதியில் மூத்த தளபதிகளுடன் இணைந்து செயற்பட்ட இவர் போர்களத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் தீவிரமான எறிகணைகள் மற்றும் துப்பாக்கி சமர்களுக்கு மத்தியில் காயமடைந்த நிலையிலும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் களத்தில் நின்றார் (T.N)
2009.05.15 அன்று பிரிகேடியர் சொர்ணம் அண்ணை உட்பட்ட முக்கிய தளபதிகளுடன் தளபதி கேணல் கீர்த்தி அண்ணை அவர்கள் வீரச்சாவடைந்தார் மாவீரனுக்கு வீரவணக்கம்

1 day ago | [YT] | 19

single reel

ஒரு வேளை கஞ்சிகுடிக்க நான் தவித்த அந்தநாட்கள்
*********************

எட்டுத்திக்கும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபடி இருந்தது.மக்களின் மரண ஓலம் காதுகளை பிளந்தபடிதான் எப்போதும் இருந்தது.

ஆமி மல்ரிசெல் அடிக்கத்தொடங்கிட்டான் என்றால் நிச்சயமாக ஒரே தடவையில் ஜம்பத்து நாங்கு செல் தொடர்ச்சியாக வந்து மக்கள் செறிந்துவாழும் இடம் எல்லாம் வீழும்

பல மக்கள் இறந்தும் சிலர் கால் கை இழந்தும் காயமடைந்தும் இருப்பர்,இதில் பாரிய காயங்கள் பலரிற்கு ஏற்பட்டிருக்கும்.

ஒருநேர சாப்பாடு உண்பதே பெரும் பாடாகிப்போனது.புகைப்படம் எடுக்கும் தானியங்கி விமானம் காலையில் 6-00 மணிக்கு வந்தால் மாலை 4-00 மணியளவில் சென்று மீண்டும் 5-00 மணிக்கு வந்து 7-00 மணிவரை நிற்பதுண்டு

இந்த தானியங்கி விமானத்தினால வெளியில் தலைகாட்ட முடிவதில்லை.பெண் போராளிகளை அடையாளம் காண்பது இலகுவாகவே இருந்தது.தலை காட்டினால்போதும் மறு நிமிடமே அதே இடத்தில் செல் வந்துவிழும்

எல்லா உடமைகளையும் இடம்பெயரும்போது கைவிட்டுவிடுவோம்.அல்லது சண்டைக்கு செல்லும் இடங்களில் கைவிட்டுவிடுவோம்.

ஒரு தேங்காய் 1000 ரூபாய்க்குகூட வாங்க முடியாது,தேங்காய்பால் விடாத கஞ்சிதான் சாப்பாடு.அதாலும் வண்டரிசிக் கஞ்சியும் சில நாட்களால் வந்து சேரும்.

சில நாட்களில் கஞ்சிக்குள் மிதக்கும் வண்டுகளை விரலால் தட்டி எடுத்து எறிந்துவிட்டு கஞ்சியை குடித்து வயிற்றுளைவில் கிடந்ததும் உண்டு

செல்மழை சமைக்க முடியாது.இதனால் ஒருநேரக் கஞ்சிதான் உணவாகிப்போனது.அதுவும் சிலவேளை இருக்காது.

அன்றும் அதேபோல்தான் றோங்காறன் மாலை நான்கு மணியளவில் தனது இருப்பிடம் திரும்பி சென்றுவிட்டான்.முதல்நாள் நான்கு மணிக்கு குடித்த கஞ்சி, பசிவாட்டி எடுத்தது.வேகமாக சென்று கஞ்சி எடுத்துவர வாளியுடன் புறப்பட்டேன்

நான் எப்ப காஞ்சிவாளியுடன் போய் திரும்பி வருவேன் என்று சிறுவர்கள் சிலர் காத்திருப்பார்கள்.அவர்களிற்கும் கொடுத்து கால்வயிற்றை நிரப்பிவிட்டு இருப்பதுண்டு

எப்படியாவது ஒரு நாளைக்காவது வயிறு நிறைய கஞ்சி குடிக்கவேணும் என்று எனக்கு தீராத ஆசை ஒன்று இருந்தது.

றோன் போனதும் ஓட்டமும் நடையுமாக தறப்பாள் கொட்டில்களை விலத்தியபடி ஓடிச்சென்றேன்.ஓரிரு செல் கிட்டவாகரவும் தூரவாகவும் விழுந்தபடி இருந்தது.நிலத்தில் படுத்து எழும்பி ஓடிச்சென்று கஞ்சியுடன் வந்தேன்.

இன்றைக்காவது பசிதீர வயிறு நிரம்ப கஞ்சி குடிக்கவேணும் என்று நினைத்து சிறு பொடிப்பசங்களுக்கு தெரியாமல் பாதைமாற்றி வந்தேன்,

எனக்குத் தெரியும் என் வாளியைக்கண்டாலும் அத்தோடு என்னைக் கண்டாலும் லைனில ஓடிவருவாங்கள் என்று.இப்படி பாதை மாற்றி ஒளித்துப்போக என் மனம் விரும்பாத ஒன்றுதான். ஆனாலும் பசியில் நான் இப்படி நடந்து கொண்டேன்

சிறுவர்களிடம் தென்படாமல் என் இருப்பிடம் வந்து சேர்ந்துவிட்டேன்.இனி என்ன இன்றைக்காவது நிறைய கஞ்சி குடிக்கவேணும் என்று போராளிகள் நாங்கள் அனைவரும் அமர்ந்துகொண்டோம்.

அப்போது யாரோ எம்மை கூப்பிடும் சத்தம்கேட்டு திரும்பி பார்த்தேன்.ஒரு அம்மா அழுதபடி நின்றிருந்தார்.ஏன் "அம்மா அழுகிறீர்கள் என்னென்று சொல்லுங்கோவன்?" என்று கேட்டேன்,

தாங்கள் சாப்பிட்டு இன்றோடு மூன்று நாட்கள் என்றும் தனது குடும்பத்தவர்கள் காயப்பட்டபடியால் இயலாமல் பசி மயக்கத்தில் இருப்பதாக கூறி அழுதார்.எம்மிடம் அரிசி இருந்தால் தரும்படியும் கேட்டார்.

என் ஏழை மனசு சும்மா இருக்குமா.தூக்கி வாளியுடன் கஞ்சியை கொடுத்துவிட்டேன்,

கஞ்சியை கொடுத்துவிட்டு "அம்மா வாளியை கொண்டுவந்து தாங்கோ" என்று கூறினேன்

என்னை நம்பி இருந்த சண்டையில் காயமடைந்து வந்திருந்த ஜீவன்கள் மூவரையும் பட்டினியில்போட்டுவிட்டேன்.அந்த அம்மாவின் அழுகையை பார்த்து மனம் குழம்பிப்போய்,கொஞ்ச கஞ்சிகூட எடுக்காமல் விட்டிட்டன்

இருண்டும்போய் விட்டது.சாப்பாட்டிற்கு ஒரு வழியும் இல்லை என்றானது.பல நாட்கள் ஒருநேர கால்வயிறு கஞ்சி குடித்து உடலும் சோர்ந்துவிட்டது,

பசியால் தூங்க முடியாமல் போனது.வேறு வழி இல்லாமல் எமது இருப்பிடத்தின் அருகில் இருந்த முசுட்டை இலையை ஆய்ந்து வந்து தலைக்கு வைக்கும் எண்ணையை ஊற்றி முசுட்டை இலையை பொரித்து சாப்பிட்டோம்.

அதன் பின்னான நாட்களில் தனிய முசுட்டை இலையே எமக்கு உணவாகிப்போனதும் உண்டு

காயங்கள் ஆறிவிட்டது பட்டவடுக்கள் இன்னும் புதிதாகவே தெரிகிறது.நாம் பட்டதுன்பங்கள் என்றும் மாறாது

#பிரபா அன்பு

2 days ago | [YT] | 13

single reel

2009 மே -16 இன்றை இதே நாளில் பி.ப 3மணி இருக்கும் - அனைத்தையும் இழந்து உயிர்களை மட்டும் தாங்கிய நடைப் பிணங்களாக முள்ளிவாய்க்கால் கப்பலடி றோட்டில் இருந்து நகர்ந்தோம் வாட்டுவாகல் பாலம் நோக்கி.

போகட்டாம், எல்லாரையும் போகட்டாம் குரல்கள் கேட்டன! சோவெனப் பெய்யும் குண்டு மழை நடுவே நடக்கிறோம், முள்ளிவாய்க்கால் தாண்டி வட்டுவாகல் நோக்கி நகர்கிறோம். பற்றி எரியும் ஊரில் இருந்து பற்ற வைத்தவன் இடம் நோக்கி நடந்தோம்.

வட்வாகலுக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட விடத்தல் பற்றைகள் நிறைந்த பகுதியை அடைய எதிரே பாய்ந்து கொண்டருந்த பல்லாயிரம் தஉப்பாக்கிச் சன்னங்களில் ஒன்று இனியும் உங்களை விடமுடயாது என்று பாய்ந்தது கழுத்துக்குள்ளால். கழுத்துக்குள்ளாகச் சென்ற துப்பாக்கி ரவை வாயக்குள்ளால் வெளியேறிப் பாய்ந்து சென்றது.

அவ் விடத்திலேயே வீழ்ந்தாள் மனையாள்! அன்று வீழ்ந்தவள் இன்று வரை எழுந்திருக்கவில்லை.

அன்று இரட்டைக் கருவைச் சுமந்தவள் - இரு பெண் குழந்தைகள் எட்டாவது மாத்த்திலேயே உயிரைப் பறித்துக் கொண்ட துட்டகைமுனுவின் வாரிசுகள்.

காலம் கடந்து 16ஆண்டுகளாகியும் ஓடிவிட்டது, நாமும் ஓடுகிறோம் … ஓடுகிறோம்… கடந்த காலங்கள் இன்னமும் துரத்துகிறது ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

ஓடுமிடமெல்லாம் தேடுகிறோம் நீதி தேவதை என்று ஒருவரைத் தேடி இது வரை காண முடியவில்லை. எம்மைப் போல் இலட்சக் கணக்கான உயிர்க் காவியங்களுடன் பலரது மனங்கள்….ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஆனாலும் எம் தேசம் காணும் வரை எரியும் நெருப்பை அணைந்து விடாது பாதுகாத்து பற்ற வைப்போம்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

2025 மீள் பதிவு: Mathi Suddy

2 days ago | [YT] | 3

single reel

லெப் கேணல் நவம்/டடி
அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்
15.05.1989

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வேளையில் 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த மாவீரர்களில் ஒருவராவார் இவர் மணலாறு பகுதியில் சிறிலங்கா படைகளுக்கு எதிராகச் சிறப்பான பங்காற்றியவர்

போராட்டத்தில் தனது ஒரு கரத்தினை இழந்த நிலையிலும் தாயக மண்மீட்புப் போரில் பங்களித்து மக்களை அணிதிரட்டி அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்

லெப் கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்டது தாயக மண்மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் உருவாகிய ஒன்று


↙️↙️↙️↙️↙️↙️↙️↙️↙️↙️↙️↙️


15.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை சிறப்பு தளபதியும் 2008 காலப்பகுதியில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதியும் ஆகிய கேணல் கீர்த்தி அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

15.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட படைத்துறை வரைபடத் தளபதியும் கரும்புலிகள் அணியின் விசேட பயிற்றுவிப்பாளருமான பிரிகேடியர் சசிக்குமார் அண்ணையின் வீரவணக்க நாள் இன்றாகும்

🔽⬆️🔽⬆️🔽⬆️🔽⬆️🔽⬆️🔽▶️▶️▶️▶️▶️▶️

15.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் கட்டளைத் தளபதியுமான பிரிகேடியர் சொர்ணம் அண்ணையின் வீரவணக்க நாள் இன்றாகும்

2 days ago | [YT] | 5

single reel

தமிழீழ விடுதலை போராட்டத்தில் பன்முகத்தன்மையுடைய மாபெரும் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

தமிழீழ விடுதலையின் மாபெரும் படைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்.
கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்
ஜோசப் அன்ரனிதாஸ்
08.04.1964 - 15.05.2009
திருகோணமலை

தளபதி சொர்ணம் அண்ணா ! இந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு

உலகம் போற்றும் எம் பெருந்தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன்பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றி கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும் பலரையும் கவர்ந்தன. இவரது குரல் கேட்கும் படைகள் களத்தில் அஞ்சிக் கதிகலங்கும்.

வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த கேணல் சங்கர் அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. தமிழீழ வான்படை ஒரு மிகப் பெரும் வளர்ச்சியை நோக்கிப் பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர் அவர்களின் இழப்பு இடியாய் விழுந்தது.

தமிழீழ வான்படையின் துரித வளர்ச்சியில் எந்தவொரு தொய்வுமில்லாமல் அதனைக் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தேசியத்தலைவரின் ஆலோசனைக்கிணங்க ,கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக் கூடிய ஒரு தளபதியாக, வான்படை முன்நகர்த்த உகந்தவராகத் தளபதி சொர்ணம் அவர்கள் வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்படுகிறார். வான்படையின் பணி காடு சார்ந்த இடங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையால், அவரின் காடு சார்ந்த நீண்ட அனுபவம் போராளிகளுக்குப் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.

வான்புலிகள் காட்டில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக போராளிகளுக்கு கற்றுக் கொடுத்தார். நெருக்கடியான காலகட்டத்தை எப்படிக் கையாள்வது என்பதை அருகில் வைத்து, அதைச் செயல் வடிவாக்கிக் கற்றுக் கொடுத்தோடு, வான்படை சீராகச் செப்பனிட்டார்.
பெருந்தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நாடாத்திய வல்லமை மிக்க தளபதியான அவர்,எதிர் காலத்தில் ஆகாய தரைச் சமர்களை ஒழுங்கமைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்து போராளிகளை வழிநடத்தி சீர்பட அதை வளர்த்தெடுத்து ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.
பாதுகாப்பு போராளிகளின் மனங்களைத் தொய்வடையாமல் பாதுகாத்துக் கொள்வது இப் பெரும் இயக்கத்தின் நிர்வாக முறைமை போன்றவற்றைச் செவ்வனக் கற்றுத் தந்தார்.

காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த தளபதி சொர்ணம் அவர்கள் எமது ஓடு தளத்திற்கான பாதையாக இரணமடுவிற்கு கிழக்காகவும் வட்டக்கச்சியிலிருந்து பழைய கண்டி வீதிப் பக்கமாகவும் இடத்தினைத் தேர்ந்தெடுத்தார்.இது சண்டை தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடு தளம் அமைக்கும் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு எற்ப்பட்டது, அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிடம் வழங்கினார். எங்கெல்லாம் தமிழீழத்
தேசியத்தலைவர் அவர்கள், நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் தளபதி சொர்ணம் களமிறங்குவார்.அங்கு 55யின் குரல் முழங்கும்.தடைகள் விலகும் பாதை திறக்கும் அதுதான் சொர்ணம் அண்ணாவின் தனித்திறன்.
தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார்.

தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த, தளபதி சொர்ணம் அவர்களுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.ஏனெனில்,போராளிகளை உறுதியோடு செதுக்கும் சிறந்த சிற்பி.அவரின் பட்டறிவு போராட்டப் பயணத்தின் செல்நெறி.
வாழ்வா சாவா என்று நம் தேசம் களம் கண்கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய் தேசத்திற்காக பெரும் பணியில் இணைத்துவிட்டு, அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையாவர். அப்பாவும் மகளுமாக ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காக பணி செய்து,இறுதிவரை வீரத்தோடு களமாடி வரலாற்றைப் பதியம் செய்து, வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய்நிலம் திகழ்கிறது .இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது வீரப்புதல்விக்கும் தமிழீழ மண் தலைவணங்கும்.

தம் குடும்பத்தை விடுத்து, தேசித்தலைவனையும் மண்ணையும் நேசித்து,முன்னேறி வந்த சிறிலங்காப் படைகளைச் சிதறடித்து, கேப்பாப்புலவில் இடியாக இறங்கி படைவிரட்டி வரலாறு படைத்த மாவீரன்.
தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் குறித்துச் சொல்லக்கூடிய, தரையிறக்கச் சண்டைகளில் குடாரப்புவிற்குப் பின் சாளைத் தரையிறக்கமும் முக்கியத்துவம் பெற்ற தரையிறக்கமாகும்.

ஒளிக்கீற்று

↙️🔽↙️🔽↙️🔽↙️🔽↙️🔽↙️🔽↙️🔽↙️🔽

சொர்ணம் அண்ணை குப்பி கடிச்சிற்றார்.
ஜெயம் அண்ணை வந்து சொல்லித்தான் தெரியும்.சிறிது நேரத்தால் பாஸ்கரனும்(பகுதிக் கட்டளை அதிகாரி), குட்டியண்ணையும்(நிதித்துறை)
வந்து சொர்ணம் அண்ணையின் வீரச்சாவையும் அவரது வித்துடல் விதைப்பு பற்றியும் வேதனையோடு பகிர்ந்துகொண்டனர்.

காலில் விழுப்புண்ணடைந்து லோரன்ஸும் (வடபோர்முனை கட்டளை தளபதி)எமதிடத்திற்கு வந்து சேர்ந்தார்.
ஏற்கனவே விழுப்புண்ணோடு அங்கே *செல்வராசா அண்ணை(சேரா சேரா)*வீமன்(அரசியற்துறை)
*காந்தி(புலனாய்வுத்துறை)
*பாபு (நிதித்துறை) ஆகியோரும் விழுப்புண்ணடைந்த போராளிகள் சிலரும் எம்முடன் கூடவே இருந்தனர்.

சொர்ணம் அண்ணை இறுதியாக கூறிச்சென்ற வார்த்தைகளை கண்கலங்கியபடி பாஸ்கரன் (பப்பா 9) சொல்லிக்கொண்டேயிருந்தான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறுகளைப் படைத்த, தலைவிரின் திமிராக நாம் பார்த்திருந்த மூத்த தளபதி சொர்ணம் அண்ணையின் இழப்பையும், வீரமரணத்தையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.

என்றைக்கும் சோர்ந்திராத கம்பீரமும் மிடுக்கும், இராணுவ ஒழுக்கத்தில் போராளிகளை வளர்த்தெடுக்கும் திறனும், பகைவனை கலங்கடிக்கும் குரலாய் முழங்கும் கொமாண்டும்.
நெருப்பென களங்களில் நேரடியாய் வந்துநின்று எதிரிக்கு பேரிடியை ஏற்படுத்தும் வல்லமையும் ஒரு நொடியில் மூச்சிழந்து போனதுவே என்றெண்ணி மனம் வெதும்பித் தீர்த்தது.

இன்றைக்கும் அவரின் முகம் பளிச்செனவே மின்னி மறைகிறது.

நினைவுகளோடு……
புலவர்.

#பிரிகேடியர்_சொர்ணம்

2 days ago (edited) | [YT] | 43

single reel

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குப் போவோம்
*******************
மகள்...👉 அம்மா

அம்மா👉 ஓம் பிள்ளை என்ன?

மகள் 👉 உங்களுக்கு 18ஆம் திகதி திங்கள் கிழமை கண் கிளினிக் இருக்குது நினைவிருக்கே?

அம்மா👉18ஆம் திகதியோ பிள்ளை.நான் போகமாட்டன் ஆசுப்பத்திரியுக்கு

மகள்👉ஏனம்மா.போனால்தானே கண்ணுக்கு எப்ப ஒப்பிறேசன் செய்யிறதென்று நாள் எடுக்கலாம்

அம்மா👉பிள்ளை என்ர இரண்டு குஞ்சுகளையும் நான் கடைசி யுத்தத்தில பறிகொடுத்திட்டன்.வருசத்தில ஒரு நாள் என்ர பிள்ளைகளை நினைவுகூரும் இடத்துக்கு போகாட்டி பிறகென்னத்துக்கு நான் அம்மா என்று இருப்பான்

மகள்👉 ஓம் அம்மா 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுதினம் எண்டுறதையே நான் மறந்துபோனன்

அம்மா👉 என்ர சின்னவன் குளிக்கப்போன இடத்தில றவுன்ஸ்பட்டு செத்துக்கிடந்த கோலத்தை எப்படி நான் மறப்பன்.என்ர உடம்பில உயிர் இருக்கும்வரை,என்ன நடந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு போகாமல் விடமாட்டன்

மகள்👉 அம்மா இந்த முறை நானும் வாறன்.யாழ்ப்பாணத்தில இருந்து போக நேரம் சரியாக வருமோ.நேரம் போகாதோ?

அம்மா👉 நான் ஒவ்வொரு வருசமும் போய்வாறனான்தானே.அது பிள்ளை யாழ்ப்பாண ரவுனில நின்றாலே "முள்ளிவாய்க்கால்" என்று எழுதின பனருகளோட நிறைய வஸ்சுகள் போகும்.சனம் தனி வஸ்சுகள் பிடிச்சுக்கொண்டெல்லாம் போகுங்கள்.கையக்காட்டி மறிச்சு ஏறிப்போகலாம்.யாரும் ஏத்தாமல் போகமாட்டினம்.

மகள்👉 உண்மையாகவே அம்மா.நான் நினைவேந்தலுக்கு போகாதபடியால் தெரியாமல் போச்சுது

அம்மா👉 யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அங்கால வஸ் தரிப்பிடங்களில நின்றால் தனி வஸ் பிடிச்சு வாறசனம் கேட்டுக்கூட ஏத்திக்கொண்டு போகுங்கள்.நாங்கள் மறிச்சும் ஏறிப்போகலாம்.எல்லா மாவட்டங்களில இருந்தும் முள்ளிவாய்க்காலுக்கு வஸ்சுகள் வாறது

மகள்👉எத்தனை மணிக்கு விளக்கு பொதுச்சுடர் ஏற்றுவினம்

அம்மா👉 அது பிள்ளை 10-30க்குத்தான் விளக்கேற்றுறது. நேரத்தோட 6-00-6-30 மணிக்கு வெளிக்கிட்டம் என்றால் போடுவம்.

மகள்👉அம்மா இந்த முறை கட்டாயம் நான் வாறதுதான்.18ஆம் திகதி கறுப்பு உடுப்புத்தானே போடுறது?

அம்மா👉ஓம் பிள்ளை நான் கறுப்பு சீலைதானே கட்டிக்கொண்டு போறனான். கூடுதலான சனங்கள் கறுப்பிலதான் உடுப்பு போட்டுவாறது.றோட்டோரங்களில கிடாரங்கள் வச்சு கஞ்சி காய்ச்சி போறவாற சனத்துக்கெல்லாம் மறிச்சு கஞ்சி கொடுப்பினம்.நீ வந்து பாரன் எவ்வளவு சனம் மட்டக்களப்பு,கொழும்பு,திருகோணமலை,மன்னார்,வவுனியா என்றிருந்தெல்லாம் வருங்கள் என்று.

மகள்👉ஆ...அப்படி நிறைய சனம் வருமே?

அம்மா👉வெளிநாட்டில இருந்தெல்லாம் எங்கட சனம் வாறது பிள்ளை,சிங்களவர்,வெள்ளைக்காறர்கூட வந்திருக்கினம்.நீ இந்த முறை வந்து பார்.பிறகு மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு போகாமல் நிற்கமாட்டாய்

மகள்👉 ஆ..சரி அம்மா.18ஆம் திகதி நிறைய பூவெல்லாம் ஆய்ந்துகொண்டு போவம் என?

அம்மா👉ஓம் பிள்ளை.போராடினதால எங்களுக்கு விடிவு கிடைச்சுதோ கிடைக்கேலயோ அதுவேறகதை.ஆனால் நாங்கள்பட்ட அவலங்களை அடுத்த தலைமுறைக்கு காட்டவேணும்.அது எங்கட கடமையும்.

#பிரபா அன்பு

3 days ago | [YT] | 20

single reel

Genocide is NOT my identity.
Im Eelamtamil, in spite of the genocide.

The identity of a society develops with its people. language, art, culture and literature expresses the identity of a society. Something that imposed on us by others, whatever its by the Sinhalese or by external powers is not our identity.

Eelamtamil / Tamil from Tamilnadu is our identity. Tamil is my identity. Honourable National leader VP is our identity. Thirukkural is my identity. Maveerar are my identity.

How can the genocide perpetrated by the Sinhalese against tamils become a tamil identity ?

The genocidal horror inflicted on us by the Sinhala state will never be our identity. Quite the opposite, its the resistance to this genocide by our liberation movement that created the society that elevated our identity to its higest point. The physical destruction of the LTTE cannot erase this.

One should be aware of getting afflicted by "trending illnesses" that misuse words.

20.05.2023

3 days ago | [YT] | 15

single reel

The “Vaddukoddai Resolution 50 ( Golden Jubilee) Inaugural Event,” organized to mark the 50th anniversary of the historic Vaddukoddai Resolution, was held this evening near Meikandan Maha Vidyalayam, Pannagam, Vaddukoddai in Jaffna.

The event was organized in remembrance of the historic Vaddukoddai Resolution adopted on May 14, 1976. As part of the programme, a ceremonial flame was lit and the 50th anniversary of the Vaddukoddai Resolution was commemorated by the “Vaddukoddai 50 Uprising Conference” organizing committee.

#vaddukoddairesolution #vaddukoddairesolution50

3 days ago | [YT] | 5