YOGI RAMSURATKUMAR BAGAVAN'S MIRACLES AND LEELA'S
This channel is not for competition, business,advertising purposes. A treasure for devotees to recite the leelas of Lord Yogi Ramsurathkumar's mercy and miracles.
This channel is not Ashram Channel
JAI YOGI RAMSURATKUMAR
DIVINE SATSANG
மகாத்மாக்கள் ஏன் துன்பப்படுகின்றனர்?
மகாத்மாக்கள் ஏன் துன்பப்படுகின்றனர் என்றால் அவருடைய காலில் பலர் விழுந்து அவர்களுடைய பாவங்களை கொட்டுகிறார்கள். ஒரு பகவானுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டுமென்று நாம் விழும்பொழுது ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நம்மிடமிருந்து நம்முடைய பாவங்கள் அவரிடம் செல்கின்றன. சில பாவங்கள் செல்லும் அது என்ன கணக்கு என்று இறைவனுக்குத் தான் தெரியும். அப்பொழுது அவரிடமிருந்து அவருடைய புண்ணியம் அதை அவருடைய அருள் என்று சொல்லுவோம் அது நமக்கு வந்து சேரும். இந்த பரிமாற்றமானது நடந்து கொண்டே இருக்கிறது. சாதாரண மனிதர்களிடையேயும் இது உண்டு நாம் ஒருவருடைய கையைப் பிடித்தோமானால் ஒருவர் நம் காலில் வந்து விழுந்தால் அவருடைய சில பாவங்கள் நம்மிடம் வந்து சேரும். நம்முடைய சில புண்ணியங்கள் அவரிடம் போய் சேரலாம். அல்லது நம்முடைய பாவங்கள் அவரிடம் போய் சேரலாம். சாதாரண மனிதர்களிடையே இந்த பரிமாற்றம் உண்டு.
ஜெய் யோகி ராம்சுரத்குமார்
17 hours ago | [YT] | 77
View 5 replies
DIVINE SATSANG
ஒரு மகாத்மாவை தூய ஆத்மாவை நாம் ஏதேதோ கற்பனை செய்து கண்டபடியெல்லாம் பேசும் பொழுது அந்த தண்டனையை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அது நம்மை துரத்தி துரத்தி அடித்து பழிவாங்கும். இறைவனுக்கு தன்னை சொல்லிவிட்டால் கூட பரவாயில்லை ஆனால் தன்னுடைய பெரும் பக்தர்களை ஏதேனும் சொல்லிவிட்டால் அவரால் தாங்க முடியாது. எதுவாயினும் கர்ம விதி என்ற ஒன்று மிகவும் வலிமையோடு செயல்படும்.
1 day ago | [YT] | 111
View 7 replies
DIVINE SATSANG
ஒரு குருவின் வார்த்தைகளில் வைக்கும் நம்பிக்கை ஒரு தெய்வத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் நாம் அந்த தெய்வத்தை பின்னால் கத்தியால் குத்துவதற்கு சமானம் ஆகும்.
1 day ago | [YT] | 127
View 15 replies
DIVINE SATSANG
ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவலநிலையில் இருந்தால் கூட இறைவனை நம்மால் நினைக்க முடிந்தால் திருப்தியோடு வாழ்க்கையை நடத்த முடிந்தால் பகவான் சொல்வார் அல்லவா இந்த திருப்தி contentment அதுதான் ஒருவருக்கு குபேர செல்வம் என்று சொல்வார்.
ஜெய் யோகி ராம்சுரத்குமார்
1 day ago | [YT] | 91
View 11 replies
DIVINE SATSANG
பகவான் சொல்வார் மகாத்மாக்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வார்கள் அந்த ஒரு நடப்பிற்கு அந்த ஒரு தேவை இருக்கிறது. எந்த இடத்தில் என்ன தேவை இருக்கிறதோ அந்த தேவைக்கு ஏற்றாற்போல் அவர்களுடைய ஆற்றல் வெளிப்பட்டு வேலை செய்யும். அதைத்தான் நாம் மகாத்மாக்களுடைய அருள் ஆசிர்வாதம் என்று சொல்கிறோம்.
ஜெய் யோகி ராம்சுரத்குமார்
5 days ago | [YT] | 167
View 14 replies
DIVINE SATSANG
துன்பங்கள் எல்லாம் நம் கர்மவினைப் பயன் என்றாலும் பகவான் தன் ஆசிர்வாதத்தினால் அதையே நமக்கு ஆன்ம பயிற்சியாக்கி விடுகிறார். துன்பத்தை தாங்கும் பொழுது அனுபவிக்கும் பொழுது நம் உடல் மனம் பக்குவப் படுகிறது... மனம் இறைவனை நோக்கி தள்ளப் படுகிறது. வாழ்வில் வரும் ஒவ்வொரு துன்பத்தையும் இறைவனிடம் இருந்து வரும் ஆசிர்வாதமாக ஏற்றுக் கொண்டு அதற்காக அவரிடம் நன்றியோடு இருக்க வேண்டும்.
பகவான், நாம் செய்த பாவத்துக்கு பலனாக துன்பத்தைக் கொடுத்து அதில் ஆசிர்வாதத்தை வைத்துக் கொடுக்கிறார்
அந்த ஆசிர்வாதம் கஷ்டத்தை மாற்றி நன்மையைக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒருவரை குற்றம் சொன்னாலோ அவமானப் படுத்தினாலோ புதிய கர்மாக்கள் உருவாகி விடும். நாம் யாருக்கு துன்பம் கொடுக்கிறோமோ அந்த துன்பம் நாம் பலகீனமாக இருக்கும் பொழுது நம்மை வந்து அடிக்கும். மஹாத்மாக்களை சாடினால் மன்னிப்பே கிடையாது என்று பகவான் சொல்லுவார்.
நம் மனதின் விகாரம் தான் மற்றவர்களிடம் குற்றமாக தெரியும். இன்பமோ துன்பமோ இறைவனிடம் இருந்து வருகிறது என்பதை உறுதியாக நம்புங்கள்.. அது என் நன்மைக்காக வருகிறது. ஒவ்வொரு கவலையையும் நாமமாக மாற்றுவோம் ஒவ்வொரு துன்பத்தையும் பிரார்த்தனையாக மாற்றுவோம். நாமமும் பிரார்த்தனையும் இருந்தால் மனதில் சஞ்சலம் வராது.
ஜெய் யோகி ராம்சுரத்குமார் 🙏🏻
6 days ago | [YT] | 143
View 15 replies
DIVINE SATSANG
நம் பகவான் சொன்னது...
இறைவனுடைய சங்கல்பம் தான் இந்த உலகத்தை நடத்தி வருகிறது. எல்லோர் மனதில் எழும் எண்ணங்கள் கூட இறைவனுடைய சங்கல்பத்தினால் ஏற்படுபவைகள் தான். இறைவன் தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையின் அத்தனை விவரங்களையும் பார்த்து பார்த்து நடத்தி வருகிறார். ஆகையால் எந்த ஒரு தருணத்தில் என்ன ஒன்று நிகழ்ந்தாலும் அது இறைவனுடைய சங்கல்பத்தினால் மட்டுமே நடக்கிறது. அது எப்படி கோணல் மாணலாக நமக்குத் தெரிந்தால் கூட இறைவன் முழுமையானவர், perfect.. அதனால் இறைவனுடைய லீலையும் பர்பெக்டாகத்தான் இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தி பகவான் சொன்னார். இறைவனுடைய சங்கல்பத்தினால் எந்த ஒரு விபரம் நம் வாழ்க்கையில் நேர்ந்தாலும்அதை இறைவனுடைய ஆசீர்வாதமாக மட்டுமே பார்... என்று சொன்னார். அத்தோடு அல்ல அதை ஆசிர்வாதமாக முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அதற்கு பகவானிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று சொன்னார்.
2 weeks ago | [YT] | 146
View 15 replies
DIVINE SATSANG
நாம் ஒரு பிரார்த்தனையை பகவான் முன் வைக்க வேண்டுமென்றால் இந்த பிரார்த்தனையை வைப்பதற்கு ஒரு விதம் இருக்கிறது. அந்தப் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மனம் வேண்டும். இந்த மனதை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். நம்முடைய மனதில் ஒரு பணிவு வேண்டும். கேட்பவரிடம் மிகுந்த ஒரு நம்பிக்கையும் மரியாதையும் வேண்டும். இந்த மாதிரி ஒரு பாவத்தில் இறைவா எனக்கு வேறு வழியே இல்லை... உன்னைத் தவிர,எனக்கு உன் துணை வேண்டும். நீ என்ன செய்து கொடுத்தாலும் சரி.நீ என்ன செய்கிறாயோ, நீ எப்படி என் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறாயோ அதுவே எனக்கு போதும் நீ செய்வதுதான் எனக்கு சரியாக இருக்கும். என்ற நினைப்பில் அதே சமயம் நமக்கு வேண்டிய பிரார்த்தனையும் நாம் அதற்கு என்ன தீர்வு வேண்டும் என்று நினைப்பதையும் கேட்டுக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால் அதை அடக்க ஒடுக்கமாக பணிவோடு நம்முடைய பிரார்த்தனையும் அதற்கான தீர்வையும் வைக்கும் பொழுது பகவான் என்ன செய்கிறாரோ அதுவே உத்தமம் என்று நினைப்பும் வேண்டும். நாம் பிரார்த்தனை செய்யும் பொழுது அப்படித்தான் செய்ய வேண்டும்.
நான் இக்கட்டான நிலையில் இருக்கிறேன் எனக்கு தீர்வாக இந்த காரியம் எப்படி நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம் அதில் தவறு ஏதும் இல்லை. அதன் பிறகு முடிந்தால் ஒரு வாக்கியம் கூட்டிக் கொள்ளலாம். சுவாமி இதை நான் தீர்வு என்று நினைக்கிறேன் அதனால் உங்களிடம் கேட்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் தெரியும் எனக்கு எது பெரும் நன்மை என்று... தாங்கள் எது சரி என்று நினைக்கிறீர்களோ அதையே நடத்தித் தர வேண்டும், என்ற ஒரு வாக்கியத்தை சேர்த்துக் கொண்டோமானால் அந்தப் பிரார்த்தனை உத்தமமாக இருக்கும்.
பகவானுக்கு தெரியாத விஷயங்கள் இல்லை கேட்க வேண்டும் ஆனாலும் கேட்டால் தான் கிடைக்கும்.அப்படி கேட்கும் போது சரியான விதத்தில் கேட்க வேண்டும்.
காரியத்தில் வெற்றி வரும்
2 weeks ago | [YT] | 129
View 15 replies
DIVINE SATSANG
எத்தனைக்கு எத்தனை நடப்பவைகளுக்கெல்லாம் ஒரு உயர்ந்த விளக்கம் மனது கொடுக்கிறதோ அத்தனைக்கத்தனை நீ இறைவனுக்கு அருகிலேயே இருக்கிறாய் எத்தனைக்கு எத்தனை இறைவனுக்கு அருகிலேயே நீ இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு மகத்தான விளக்கம் ஒரு உயர்ந்த விளக்கமே நம் மனதிற்கு வரும். எத்தனைக்கெத்தனை நாம் கீழ்த்தரமாக நினைக்கிறோமோ எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதை தரக்குறைவாக நினைக்கிறோமோ தரக்குறைவாக அதை பேசுகிறோமோ அத்தனைக்கத்தனை நாம் வணங்கும் தெய்வத்திடமிருந்து நாம் தள்ளி நிற்கிறோம்.,
4 weeks ago | [YT] | 135
View 12 replies
DIVINE SATSANG
நாம் நம்மை பகவானிடம் ஒப்படைத்து விட்டோம் என்பதற்கான அடையாளம் என்ன?
பகவான் நமக்கு சுகத்தை கொடுத்தாலும் சரி துக்கத்தை கொடுத்தாலும் சரி.. நாம் சந்தோஷமாக இருந்தாலும் சரிதான்... ஏனென்றால் பகவானுடைய சங்கல்பத்தினால் வருகிறது. துக்கமாக வைத்தாலும் சரிதான் ஏனென்றால் அந்த சங்கல்பமும் அவரிடமிருந்து தான் வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி ஆரோக்கியம் இல்லாவிட்டாலும் சரி அந்த சங்கல்பமும் பகவானிடமிருந்து தான் வருகிறது. அவர்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒருமுறை பகவானிடம் அடைக்கலம் அடைந்து விட்டால் பிறகு அவருக்கு சொந்தமாகிவிடுகிறோம். அவர்தான் நம்முடைய வாழ்க்கையின் விவரங்களை எல்லாம் நடத்தி வருகிறார். அவர் எப்படி வைத்தாலும் நம்மை அது சரிதான் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்
இதைத்தான் அவர் மறைமுகமாக நாம் தந்தையிடம் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறார்
4 weeks ago | [YT] | 129
View 9 replies
Load more