YOGI RAMSURATKUMAR BAGAVAN'S MIRACLES AND LEELA'S
This channel is not for competition, business,advertising purposes. A treasure for devotees to recite the leelas of Lord Yogi Ramsurathkumar's mercy and miracles.
This channel is not Ashram Channel
JAI YOGI RAMSURATKUMAR
DIVINE SATSANG
பிரார்த்தனைக்கு பிறகு ஒரு அறிவிப்பு
வரும் ஞாயிறு 24/5/2026 அன்று வரும் ஞாயிற்று கிழமையன்று யாரெல்லாம் விஜயலக்ஷ்மி அம்மாவிற்காக ஒரு homage என்று சொல்வோம். அவருக்காக ஒரு மரியாதையோடு அல்லது ஒரு பிரார்த்தனையோடு செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் வேளச்சேரியில் இருக்கும் அவரது வீட்டில் சென்று வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் செல்லலாம். முடிந்தால் 10 மணிக்கு சென்று 10 மணியில் இருந்து 12 மணி வரை அங்கு எல்லோரும் கூடி யோகி ராம்சுரத்குமார் பகவானின் நாமத்தை சொல்லி விஜய லட்சுமி அம்மாவிற்கான மரியாதையை நாம் செலுத்தலாம். ஆக தயவு செய்து இதை குறித்துக் கொள்ளுங்கள். சென்னையில் அவரது வீட்டு அட்ரஸ் ஆஸ்ரமத்தில் கேட்டாலும் கிடைக்கும். அல்லது நீங்களே அதை கண்டு பிடித்துக் கொள்ளலாம் ஒரு சிரமமும் அல்ல . அங்கு கூடி காலை 10 மணிக்கு நாமம். எவ்வளவு பேருக்கு முடிகிறதோ அவ்வளவு பேர் சென்று அதில் கலந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.
இடம்:
யோகி ராம்சுரத்குமார் சத்சங் சமிதி
78 B, குல்மோகர் அவென்யூ. வேளச்சேரி ரோடு, கிண்டி.
சென்னை
11 hours ago | [YT] | 85
View 11 replies
DIVINE SATSANG
குருநாதரை தற்செயலாக பார்க்க முடியாது. நீ குருநாதரை பார்ப்பது தற்செயல் அல்ல.அதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கு.'சாதனா பகுஜன்ம வியாப்த்தா' அப்படின்னு வட மொழியில் ஒரு சொல் இருக்கு. அதாவது சாதனை என்பது நீ இந்த ஜென்மத்தில் செய்தது மட்டும் அல்ல. முக்கியமா குரு நாதரை பார்க்கணும் என்பதற்கு பல ஜென்மங்களாக நீ செய்த சாதனை பரந்து கிடக்கிறது. அதன் பலனாகத்தான் நீ குரு நாதரை சந்திக்கிறாய்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
- ஸ்ரீ கருணாகரன் அய்யா அவர்களின் சத்சங்க குறிப்பு
1 week ago | [YT] | 202
View 14 replies
DIVINE SATSANG
மகான்களோடு இருந்தால் தான் ஆன்மீகமே புரியும். ஆன்மீகத்திலே முன்னேற முடியும். வெறுமனே படிச்சிட்டு புத்தியால்
பகவான் சொல்றார் புரியறதும் தேவை இல்லை. தெரியுறதும் தேவை இல்லை.ஈஸ்வர கடாட்சம் அப்படி இப்படின்னு அதெல்லாம் தேவை இல்லை. தெளிவு தான். தெளிவு என்பது என்ன என்றால் திருமந்திரத்தில் சொல்வது.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்.
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்.
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்.
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
- ரமண ஆஸ்ரம கணேஷண்ணா அவர்களின் சத்சங்க குறிப்பு
2 weeks ago | [YT] | 170
View 15 replies
DIVINE SATSANG
மனசுக்குள்ள இருக்கிற ஒட்டடையை எடுப்பது தான் மகான்களின் வேலை. ஒட்டடை நல்லது இல்லை. அதை எடுத்தே ஆக வேண்டும். ஒருத்தர் உள்ளுக்குள்ள ஒட்டடை எடுக்கிறது என்பது டாக்டரால் முடியாது என்ன பூஜை பண்ணினாலும் முடியாது. மனசுக்குள் உள்ள ஒட்டடை மகான்கள் வந்து தொட்டால் தான் போகும். புணர்ந்த பாவமெல்லாம் பரிபூரண ஞானி விழி பட பறந்தோடுமே என்று சசிவர்ண போதம் சொல்கிறது. புணர்ந்த பாவம் என்றால் நாம் சேர்த்து வைத்த பாவம் நாம் செய்த பாவமெல்லாம் பரிபூரண ஞானி விழி பட பறந்தோடுமே.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
2 weeks ago | [YT] | 172
View 14 replies
DIVINE SATSANG
நீ குருவை தேடி போக வில்லை. குரு உன்னை தேடி வர்ரார் என்பது யோகியை பொருத்தவரை 100 மடங்கு சத்தியம். தேடித் தேடி வந்து ஆட்கொள்ளும் எம் பெருமான் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
2 weeks ago | [YT] | 177
View 15 replies
DIVINE SATSANG
என்ன கேட்டாலும் பகவான் கொடுத்து விடுவார். அருணாச்சலம் கொடுத்து விடும். ஆனால் குருவிடம் என்ன கேட்க வேண்டும்? குரு அனுக்கிரகம் மட்டும் வேணும். வேறு எதுவும் கேட்க கூடாது.அனுக்கிரகம் வேணும் என்றால் குரு சொரூபமே அனுக்கிரகம்.
2 weeks ago | [YT] | 156
View 18 replies
DIVINE SATSANG
இந்த பிச்சைக்காரனை யார் நினைத்தாலும் எந்த உருவத்தில் நினைத்தாலும் என்னுடைய தந்தையானவர் அங்கே போய் என்னென்ன உதவி தேவையோ அத்தனையும் அவர்கள் எதிர்பார்த்த அதே உருவத்தில் சென்று செய்வார். அதனால்தான் இந்த பிச்சைக்காரன் சில சமயங்களில் சொல்கிறேன்
இந்த பிச்சைக்காரனுடைய பெயரை பாடுங்கள் என்று...
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
2 weeks ago | [YT] | 152
View 18 replies
DIVINE SATSANG
மகாத்மாக்களின் சேர்க்கையினால் மனதில் படிந்த அழுக்காகிய பந்த பாசங்கள் என்ற உலகப் பற்றுகள் அனைத்தும் அகன்று விடுகின்றன.
அப்படி பாச பந்தங்களின் பற்று அகன்று போவதினால் மனிதர்களுடைய அஞ்ஞானம் அழிவு பெறுகிறது.
அஞ்ஞான அருள் நீங்கப் பெற்றவர்கள் பிரம்மத்தில் ஒன்றிய சலனமற்ற தன்மையான சொரூப சாட்சாத்கார ஜீவன் முக்தி நிலையைப் பெறுகின்றார்கள். அப்படிப்பட்ட உன்னத மகான்களுடன் இணங்கிப் பழகு.
இந்த இணங்கிப் பழகுதல் மிகவும் முக்கியமானது. மகாத்மாக்கள் ஒரு பெரிய பெரிய உண்மைகளை எல்லாம் மிகவும் சாதாரணமாக சொல்லுவார்கள். ஒரு அழுத்தம் கொடுத்து
இது ஒரு பெரிய உண்மை, இதை மனதில் வாங்கிக் கொள் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். பகவான் மிகவும் கேஷீசுவலாக ஒன்றைச் சொல்வார்கள். அது கேஷுவலாக இருப்பதால் நாம் மனதில் கொள்ளவில்லை என்றால் ஒரு பெரும் நஷ்டத்தில் நம்மைக் கொண்டு போய் விட்டு விடும். ஆக இந்த உன்னத மகான்களுடன் பழகும் பொழுது அவர்களுக்கு இணக்கமாய் அவர்கள் சொல்வதில் ஏதோ ஒரு பெரும் லாபம் இருக்கிறது. ஆத்ம லாபம் இருக்கிறது என்று உணர்ந்தபடி நாம் பழக வேண்டும். அவர்களுக்கு திருப்தி தரும் வகையில் நாம் பழக வேண்டும்.பகவான் சொல்கிறார் மகான்களையே ஆவலுடன் விரும்பி பின்பற்ற வேண்டும்.பகவான் கூறும் வார்த்தைகளை வாழ்வில் சிரமேற்கொண்டு கடைபிடித்து வாழ வேண்டும். நாம் வாழும் வாழ்க்கை பகவான் கூறும் வாக்கை கடைபிடித்து வாழவே பகவானால் கொடுக்க பட்டது.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
2 weeks ago | [YT] | 157
View 17 replies
DIVINE SATSANG
புனித ஆத்மாக்களின் சங்கத்தில் நிறைவில்லாத குறையுள்ள மனிதன்
நிறைவானவன் ஆவான். முழுமையானவன் பூரணத்துவம் பெற்றவனாய் ஆகிறான். புனித ஞானியனுடைய சங்கத்தில் வரக்கூடிய ஆபத்தானது ஒரு ஆசீர்வாதமாக மாறிவிடுகிறது.
அதிர்ஷ்டமாக மாறிவிடுகிறது. அமங்கலங்கள் எல்லாம் மங்களமாகி விடுகிறது. உண்மை உணர்ந்த ஞானிகளின் சங்கமான கங்கையில் மூழ்கி எழுந்தவர்களுக்கு ஹோமம், யாகம், தவம், கொடை செய்தல் அதாவது ஈதல் புனித நதிகளில் குளித்தெழுதல் எல்லாம் தேவையற்றது. அதனால் எல்லா வகையிலும் ஞானிகளின் சங்கத்தை நாடு. அது ஒரு பிறவிப் பெரும் கடலைத் தாண்ட நம்மை எடுத்துச் செல்லும் படகு ஆகும். எப்பேர்ப்பட்ட பாடல் செய்யுள் அது யோகவாசிஷ்டத்தில் இருக்கிறது.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
3 weeks ago | [YT] | 174
View 14 replies
DIVINE SATSANG
ஒரு கோவிலுக்கு சென்றோமானால் அந்த கோவிலில் இருக்கக்கூடிய சிலையானது கல்லினால் ஆகி இருக்கலாம் அல்லது உலோகத்தால் ஆகி இருக்கலாம் , அந்த கோவிலுக்கு நாம் திரும்பத் திரும்ப சென்று கொண்டே இருக்க வேண்டும் விடாது சென்று கொண்டு இருக்க வேண்டும்.
அதேபோல் ஒரு புண்ணிய ஷேத்திரத்தை நாடிச் சென்று அந்த புண்ணிய ஷேத்திரத்தில் காலம் கழிக்க வேண்டும். இப்படி புண்ணிய ஷேத்திரத்திற்கு சொல்வதும் கோயில்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்தியை தரிசிப்பதும் வெகு நாட்களுக்குப் பிறகு நமக்கு தூய்மையைத் தருமாம். விடாது செய்ய வேண்டும் . தீவிரமாக செய்ய வேண்டும். ஆயினும் அவை நேரம் எடுக்கும்.
ஆனால், ஒரு ஞானியின் முன்பு நாம் சென்று அமர்ந்தோமானால் இவையெல்லாம் வெகு விரைவில் நடக்கும். ஒரு சனத்திலேயே நமக்கு நம்மை எத்தனை பெரிய பாவிகளாக சென்றோமானாலும் அந்த சனமே அவர்களுடைய ஒரு அன்புமிகு பார்வையில் ஞானம் நிறைந்த பார்வையில் நம்மிடம் இருக்கும் வேண்டாதவைகள் எல்லாம் பொசிந்து போவதோடு மிகவும் அந்த சனமே நமக்கு தூய்மை வந்து சேரும். தூய்மை மிகவும் முக்கியம் சாதனையின் ஆரம்ப காலத்தில் இந்த தூய்மைக்காகத்தான் நாம் பாடு படவேண்டும்.
அதற்காகத்தான் இந்த கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தை சொல்லி இருக்கிறார்கள். மிகவும் சிறந்த ஒரு சாதனமாக அது திகழ்கிறது
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
3 weeks ago | [YT] | 112
View 14 replies
Load more