21 தலைமுறை பாவமும் கழியும்...இந்த பரிகாரத்தை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் எத்தனையோ தானங்களை நம் கையால் வாங்கி செய்திருப்போம். அன்னதானம் கூட செய்திருப்போம்.
ஆனால், இந்த தானத்தை செய்திருக்க மாட்டோம். அப்படி என்ன ஒரு பெரிய தானம். இந்த தானத்தை கொடுத்தால் 21 தலைமுறை பாவமும் கழியும்.
21 தேங்காய் வாங்கி தானம் கொடுங்கள். மட்டை தேங்காய் கிடையாது. சாதாரண தேங்காய் தான். 21 தேங்காய்களை வாங்கி உங்கள் கையால் அடுத்தவர்களுக்கு நீங்கள் தானம் கொடுக்க வேண்டும்.
கோவில் வாசலில் இருப்பவர்கள் அல்லது கஷ்டப்படுபவர்கள் என்று யாருக்காவது இந்த 21 தேங்காயை உங்கள் கைகளால் தானம் கொடுங்கள். மொத்தமாக வாங்கி ஒரு இடத்தில் கொடுத்து விடக் கூடாது.
ஒவ்வொரு தேங்காயாக 21 நபருக்கு, தேங்காய் தானம் கொடுத்தால், 21 தலைமுறை பாவமும் கழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. (ஒரு தேங்காயை ஒருவருக்கு என்ற வீதம், 21 பேருக்கு 21 தேங்காய்.
கொஞ்சம் தயங்காமல் சிரமப்பட்டு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்காக ஆக கூடிய செலவு கூட மிகவும் குறைவுதான். ஒவ்வொரு தேங்காய் தானம் கொடுக்கும் போதும், ஒவ்வொரு தலைமுறைபாவமும் கழிந்து கொண்டே வரும். பிறகு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக தீரும்.
குறிப்பாக வருமானத்திற்கு தடை போடும் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.
செல்வம் ஏன் உங்ககிட்ட வரமாட்டேங்குது? அந்தப் பரம ரகசியம்!
நம்மில் பலர் ரத்தம் சிந்தி, பகல் இரவு பார்க்காமல் உழைக்கிறோம். ஆனாலும் செல்வம் மட்டும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகிறதா? பணம் உங்களிடம் தங்குவதற்குப் பதில் ஓடிக்கொண்டே இருக்கிறதா?
இதற்குக் காரணம் உங்கள் உழைப்பு குறைவு என்பதல்ல, உங்கள் "உள்மன அதிர்வுகள்" (Inner Vibration) தான்! நினைவில் கொள்ளுங்கள்: செல்வம் என்பது வெறும் காகிதமோ அல்லது எண்களோ அல்ல; அது ஒரு ஆற்றல் (Energy). உங்களுக்குத் தெரியுமா? (Interesting Facts):
* பற்றாக்குறை மனநிலை (Scarcity Mindset): "என்னிடம் பணம் இல்லை" என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதும் பேசுவதும், பிரபஞ்சத்திற்கு நீங்கள் கொடுக்கும் தவறான சிக்னல். இது இன்னும் அதிக வறுமையையே ஈர்க்கும்.
* மனநிறைவு (Inner Completion): ஆன்மீக ரீதியாக, நீங்கள் ஏற்கனவே மனதளவில் "செல்வந்தராக" உணரும்போது மட்டுமே, புற உலகில் செல்வம் உங்களைத் தேடி வரும். இதைத்தான் நம் முன்னோர்கள் "மனமே செல்வம்" என்றனர்.
* பயமும் செல்வமும்: பணத்தை இழந்துவிடுவோம் என்ற பயம் யாரிடம் இருக்கிறதோ, அவரிடம் செல்வம் நிலைப்பதில்லை. பயம் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் இருக்காது. செல்வத்தை ஈர்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
* உங்கள் வறுமை குறித்த பழைய எண்ணங்களை (Root Patterns) கண்டறிந்து அவற்றை நீக்குங்கள்.
* "நான் தகுதியற்றவன்" என்ற எண்ணத்தை மாற்றி, "அனைத்து செல்வங்களும் எனக்கு உரியது" என்ற உயரிய உணர்வை (Cognition) வளர்த்துக்கொள்ளுங்கள்.
பணத்தின் மீது வெறுப்பையோ அல்லது பயத்தையோ காட்டாமல், அதை அன்புடன் அணுகுங்கள்.
விருச்சிக ராசியில் பிறந்தோர் தகப்பனார்க்கு தோஷம் தருவார் குறிப்பாக வாலிபத்தில் தகப்பனாரை இழந்தவராகவோ அல்லது அவரை விட்டு தள்ளியோ ஏதாவது ஒரு பிரிவினை உருவாக்கும்
மனச்சோர்வு அடர்ந்த மூடுபனி போல் சூழும்போது, "அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்" என்று சொல்வது கொடுமையாக கூட உணரலாம். உங்கள் மனம் எதிர்க்கிறது.
உங்கள் உடல் கனமாக உணர்கிறது. எழுந்திருப்பதே கடினமாக இருக்கும்போது, "மனதை காலியாக்குதல்" என்பது சாத்தியமற்றதாக தோன்றுகிறது.
**ஆனால் இதோ ஒரு வித்தியாசமான வழி—மனச்சோர்வை எதிர்த்து போராடாமல், அதனுடன் இணைந்து செயல்படும் முறை.**
நங்கூரமும் அலையும் தியான முறை
இந்த தியானம் நீங்கள் சுமக்கும் பாரத்தை ஏற்றுக்கொள்கிறது, அதைக் கடந்து செல்ல வேண்டும் என்று கேட்காமல்.
எப்படி செய்வது:**
தாங்கக்கூடிய எந்த நிலையிலும் இருங்கள்—உட்கார்ந்து, படுத்து, அல்லது சுருண்டு. இங்கே "சரியான" தோரணை என்று ஏதும் இல்லை.
கண்களை மூடுங்கள் அல்லது பார்வையை மென்மையாக்குங்கள். உங்கள் உடலில் உள்ள கனத்தை கவனியுங்கள். அதை மாற்ற முயற்சிக்காதீர்கள். அது எங்கே வாசம் செய்கிறது என்று கவனியுங்கள்—உங்கள் மார்பில், உறுப்புகளில், தலையில்.
இப்போது இந்த கனத்திற்கு ஒரு நிறம் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். உங்கள் மனச்சோர்வு இன்று என்ன நிறம்? சாம்பல், அடர் நீலம், அல்லது கலங்கிய பழுப்பு நிறமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் அப்படியே விடுங்கள்.
**இதுதான் முக்கிய பகுதி:** உங்கள் உடலில் எங்காவது ஒரு சிறிய ஒளிப்புள்ளி இருப்பதாக கற்பனை செய்யுங்கள்—உங்கள் இதயத்தில், வயிற்றில், அல்லது விரல் நுனியில். அது மிகச்சிறியது, ஊசி முனை அளவு. அதை பிரகாசமாக்க வேண்டியதில்லை. அது இருக்கிறது என்பதை மட்டும் கவனியுங்கள்.
இயல்பாக சுவாசியுங்கள். ஒவ்வொரு மூச்சை வெளியேற்றும்போதும், கனமான நிறம் மெதுவான அலைகளாக வெளியேறுவதாக கற்பனை செய்யுங்கள். ஒவ்வொரு மூச்சை உள்ளிழுக்கும்போதும், அந்த சிறிய ஒளிப்புள்ளி நிலையாக இருக்கிறது—வளரவில்லை, சுருங்கவில்லை, வெறுமனே *இருக்கிறது*.
நீங்கள் நன்றாக உணர முயற்சிக்கவில்லை. இருளுடனும் ஒளியுடனும் ஒரே நேரத்தில் இணைந்திருக்கும் பயிற்சியை மட்டுமே செய்கிறீர்கள்.
**இதை வெறும் 3-5 நிமிடங்கள் செய்யுங்கள்.** அது போதும்.
---
**இது ஏன் பலனளிக்கிறது:** மனச்சோர்வு நாம் இருளில் தனியாக இருக்கிறோம் என்று சொல்கிறது. இந்த தியானம் நமது மிகக் கனமான தருணங்களில் கூட வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை மெதுவாக நினைவூட்டுகிறது—இருளுடன் போராட அல்ல, ஆனால் அது மாறும் வரை நமக்கு நங்கூரமாக இருக்க.
இது உதவும் என்று நீங்கள் நம்ப வேண்டியதில்லை. ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.
மைண்ட்ஃபுல்னெஸ் தியானம் (நினைவாற்றல் தியானம்) என்பது பண்டைய பௌத்த பாரம்பரியத்தில் இருந்து வந்தது.
இது தற்போதைய தருணத்தில் முழு விழிப்புணர்வுடன் இருப்பது—எண்ணங்கள், உணர்வுகள், உடல் உணர்வுகள் ஆகியவற்றை தீர்ப்பு இன்றி கவனிப்பது.
ஹார்வர்ட் போன்ற ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன: இது மன அழுத்தத்தை குறைக்கும், கவனத்தை அதிகரிக்கும், மூளையின் அமைப்பை மாற்றும் (உணர்ச்சி கட்டுப்பாட்டுக்கு உதவும் பகுதிகளை வலுப்படுத்தும்).
இதோ சில முக்கிய மைண்ட்ஃபுல்னெஸ் தியான முறைகள், படிப்படியான வழிகாட்டலுடன்:
1. சுவாசத்தில் கவனம் செலுத்தும் தியானம் (அடிப்படை முறை) இது மனதை தற்போதைய தருணத்தில் நிலைக்கச் செய்ய உதவும். படிகள்:
அமைதியான இடத்தில் வசதியாக உட்கார்ந்து அல்லது படுத்துக்கொள்ளுங்கள்.
கண்களை மூடிக்கொள்ளுங்கள் அல்லது மென்மையாக பார்வையை வைக்கவும். உங்கள் சுவாசத்தின் இயற்கையான தாளத்தை கவனியுங்கள்—மூக்கில் காற்று உள்ளே வருவதை, நுரையீரலை நிரப்புவதை, வெளியே போவதை உணருங்கள்.
மனம் அலைபாய்ந்தால் (நிச்சயம் அலைபாயும்!), அதை தீர்ப்பு இன்றி ஏற்று, மீண்டும் சுவாசத்தில் குவியுங்கள்.
விருப்பப்பட்டால்:
மூச்சை எண்ணுங்கள் (உள்ளே 1, வெளியே 2... 10 வரை) அல்லது "உள்ளே மூச்சு"
"வெளியே மூச்சு" என்று மனதில் சொல்லுங தினமும் 5–10 நிமிடங்கள் தொடங்குங்கள்
ஸ்ரீசக்கரம்:-(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)சீரும் செல்வ யோகமும் சேர்க்கும் ஸ்ரீசக்கர பூஜை
நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார்கள் சித்தர்கள்
‘ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள்.
குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.
ஸ்ரீசக்கரத்தின் மகிமை:
மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.
மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார்.
ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர். சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம்.
அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வருகிறார். லலிதா சகஸ்ரநாமத்தின் 996-வது நாமாவளியான,’ஸ்ரீசக்ரராஜ நிலயாயை’என்ற நாமாவளியினால் அறியலாம். .
அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்: –
சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார். மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார்.
இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகைச் செய்தி வெளியிட அனைவரும் இதன் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர். முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை: ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம். ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.
ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.
வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.
பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.
ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும். சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.
ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே – என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க. (ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)
என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும்.
ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பௌர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.
(இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).
மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.
சக்கர மகிமையைப் பாடுவோம்:
சிவசக்கரம் ஒரு நான்கும் வடதிசையை நோக்க தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய் நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்
வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்களே சேர்ந்திடும்.
பக்தி மார்க்கத்தில் சென்று ஒருவன் பிரம்ம ஞானத்தைப் பெற முடியும். கடவுள் எல்லாம் வல்லவர். அவர் அங்ஙனம் திருவுளம் கொள்ளுவாராகில் தமது பக்தனுக்குப் பிரம்ம ஞானத்தைக் கொடுக்கவும் அவருக்கு இயலும்.
ஆனால் பக்தனோ பொதுவாகப் பிரம்மஞானத்தை நாடுவதில்லை. கடவுளைத் தலைவன் என்று தன்னைத் தொண்டன் என்றும் வைத்துக்கொள்ள அவன் விரும்புகிறான்; அல்லது கடவுளைத் ‘தாய்’ என்றும் தன்னைச் ‘சேய்’ என்றும் அவன் வைத்துக் கொள்கிறான்.
விஜயகிருஷ்ண கோசுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கேள்வி ஒன்று கேட்டார்:
வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி ஆத்மசாதகன் ஒருவன் நித்திய அநித்திய வஸ்து விசாரம் செய்வானாயின் அவன் பிரம்மத்தை அடைகின்றான் அல்லவா?
பரமஹம்ஸர் அதற்குப் பதில் விடுத்தார்: ஆம்; ஒருவன் விசார மார்க்கத்தைக் கடைப்பிடிப்பானாகில் அவன் பரம்பொருளை அடைகிறான்.
அவன் அனுஷ்டிக்கிற முறைக்கு ஞானயோகம் என்று பெயர். ஆனால் சாதாரண மனிதன் ஒருவனுக்கு ஞானயோகம் மிகக் கடினமானது. ஞானபூமி ஏழு இருக்கின்றனவென்று ஏறகனவே உமக்குப் பகரப்பட்டது.
ஏழாவது ஞான்பூமியை அடைகின்ற ஒருவன் சமாதிநிலையில் தனது ஜீவபோதத்தை இழந்துவிடுகிறான். பிரம்மம்தான் மெய்ப்பொருள்.
இப்பிரபஞ்சம் வெறும் தோற்றம் என்கின்ற உறுதி ஞானசாதனம் செய்கின்ற ஒருவனுக்கு வந்துவிடுமாகில் அவனுக்கு சமாதி கூடிவிடுகிறது.
ஆனால் இக்கலியுகத்தில் ஒரு மனிதனுடைய வாழ்வு அன்னத்தை முற்றிலும் ஆதரவாகக் கொண்டது. அப்படி அன்னத்தின் உதவியைச் சார்ந்திருக்கிறவனுக்குப் பிரம்மம் சத்தியம்;
ஜகத் மித்தை என்கின்ற தெளிவு எப்படி வரப்போகிறது? இக்கலியுகத்தில் நான் தேகமல்ல, நான் புத்தியல்ல, மனம் அல்ல, இருபத்து நான்கு தத்துவங்களல்ல, இன்ப துன்பங்கள் எனக்கில்லை; வியாதி, விருத்தியாப்பியம், சோகம், மரணம் ஆகியவைகளுக்கு நான் அப்பாற்பட்டவன் என்னும் ஆத்மபோதம் உண்டாவது மிகக் கடினம்.
எவ்வளவுதான் ஆத்மவிசாரம் செய்தாலும் இந்த உடலை நான் என்று எண்ணுகின்ற எண்ணம் ஏதேனும் ஒருவிதத்தில் மனதில் உதித்துவிடும்.
அரசமரம் ஒன்றை அடியோடு வெட்டிவிடலாம். அது அழிந்துபட்டுப் போய்விட்டதென்று நீர் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் பூமியினுள் மறைந்துகிடக்கின்ற அதனுடைய வேரினின்று புதிய முளை துளிர்த்து வருவதை நீர் இரண்டொரு நாளில் காண்பீர்.
தேகாத்ம புத்தி அல்லது தேகத்தை ‘நான்’ என்று கருதுகிற எண்ணத்தினின்று ஒரு மனிதன் விடுதலையடைய முடியாது. எனவே கலியுகத்தில் வாழ்ந்திருக்கின்றவர்களுக்குப் பக்திமார்க்கம் ஒன்றுதான் மிக எளியது.
மேலும் பக்தன் ஒருவனுடைய மனப்பான்மை எத்தன்மையதெலின் “நான் சர்க்கரையாக விரும்புவதில்லை. அதை அருந்த விரும்புகிறேன்” என்பதுவே அவன் கொண்டுள்ள கொள்கையாகும்.
அதாவது நான் சச்சிதானந்த சொரூபம் என்று உணர்வதற்குப் பதிலாகச் சச்சிதானந்த சொரூபமாகிய தெய்வத்தோடு இணக்கம் கொள்ள அவன் விரும்புகிறான்.
‘அஹம் பிரம்மாஸ்மி’ – ‘நான் பிரம்மம்’ என்று சொல்லுதற்குப் பக்தன் விரும்புவதில்லை. “இறைவா, நீர் என்னை ஆட்கொண்டுள்ள பிரபு.
நான் உமது அடிமை.” இங்ஙனம் உணர பக்தன் ஒருவன் விரும்புகிறான். ஐந்தாவது ஞானபூமி, ஆறாவது ஞானபூமி ஆகிய இவ்விரண்டிற்குமிடையிலே மனதைச் சஞ்சரிக்கவிடுவது மிக நன்று.
இரண்டு இடங்களுக்கிடையிலே படகு ஒன்றை இங்கும் அங்கும் செலுத்துவது போன்று இந்த இரண்டு ஞானபூமிகளுக்கிடையில் மனதைச் செலுத்திக் கொண்டிருப்பது மிக நன்று.
ஆறாவது ஞானபூமியைக் கடந்து ஏழாவது ஞானபூமியில் மனதை நெடிது வைத்திருக்க நான் விரும்புவதில்லை. இறைவனுடைய திருநாமத்தையும் அவனுடைய மகிமையையும் பற்றிப் புகழ்ந்துபாட நான் விரும்புகின்றேன்.
இறைவனைத் தன்னுடைய தலைவன் என்றும் தன்னை அவனுடைய தொண்டன் என்றும் வைத்துக் கொள்வது சிறந்தது. மக்களில் பலர் அலைகள் கங்கா நதிக்கு உரியவைகள் என்று சொல்கிறார்கள்.
ஆனால் கங்காநதி அலைகளுக்கு உரியதென்று பகர்வாரை நாம் காண்பதில்லை. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று சாதாரண மனிதன் ஒருவன் பாவிப்பது நல்லதன்று.
உடலைத்தான் என்று உணர்கிற உணர்ச்சியில் இருக்கும்பொழுது ‘அஹம் பிரம்மாஸ்மி’ என அவன் பாவிப்பானாகில் அவன் தனக்குத் தானே பெரிய தீங்கு விளைவித்துக் கொள்கிறான்.
ஆத்ம சாதனத்தில் அவன் முன்னேற்றமடைய முடியாது. அதற்கு மாறாக அவன் பிற்போக்கு அடைவது திண்ணம். அத்தகையவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான்.
மற்றவர்களையும் ஏமாற்றுகிறான். தன் மனதின் இயல்பையே அவன் நன்கு அறிந்துகொண்டவன் அல்லன்.
பக்தியின் பெயரால் வந்துள்ள ஒவ்வொரு சடங்கும் மனிதன் கடவுளை அடைவதற்குத் துணைபுரியாது. யாரிடத்தில் பிரேமை பக்தி இருக்கின்றதோ அவனே ஈசுவர சாக்ஷாத்காரம் செய்ய வல்லவனாகிறான்.
பிரேமை பக்தியை ராகபக்தி என்று அழைப்பதும் உண்டு. பக்தியும் அருள்தாகமும் இல்லாவிட்டால் மனிதன் கடவுளை அடைய முடியாது. கடவுளிடத்து அன்பு வைக்கக் கற்றுக் கொண்டாலொழிய ஒருவன் கடவுளை அடைய முடியாது. ஜெய்குருதேவர்.
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
சனிதேவனுக்கு உகந்த பரிகாரம், ஏழரை சனி, சனி தசை, புக்தி நடப்பவர்கள், சனி ராசி, லக்னம் தொடர்பு உள்ளவர்கள்...
பரிகாரம் கமெண்ட் பாக்ஸில்
1 hour ago | [YT] | 68
View 10 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
21 தலைமுறை பாவமும் கழியும்...இந்த பரிகாரத்தை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் எத்தனையோ தானங்களை நம் கையால் வாங்கி செய்திருப்போம். அன்னதானம் கூட செய்திருப்போம்.
ஆனால், இந்த தானத்தை செய்திருக்க மாட்டோம். அப்படி என்ன ஒரு பெரிய தானம். இந்த தானத்தை கொடுத்தால்
21 தலைமுறை பாவமும் கழியும்.
21 தேங்காய் வாங்கி தானம் கொடுங்கள். மட்டை தேங்காய் கிடையாது. சாதாரண தேங்காய் தான். 21 தேங்காய்களை வாங்கி உங்கள் கையால் அடுத்தவர்களுக்கு நீங்கள் தானம் கொடுக்க வேண்டும்.
கோவில் வாசலில் இருப்பவர்கள் அல்லது கஷ்டப்படுபவர்கள் என்று யாருக்காவது இந்த 21 தேங்காயை உங்கள் கைகளால் தானம் கொடுங்கள். மொத்தமாக வாங்கி ஒரு இடத்தில் கொடுத்து விடக் கூடாது.
ஒவ்வொரு தேங்காயாக 21 நபருக்கு, தேங்காய் தானம் கொடுத்தால், 21 தலைமுறை பாவமும் கழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. (ஒரு தேங்காயை ஒருவருக்கு என்ற வீதம், 21 பேருக்கு 21 தேங்காய்.
கொஞ்சம் தயங்காமல் சிரமப்பட்டு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்காக ஆக கூடிய செலவு கூட மிகவும் குறைவுதான். ஒவ்வொரு தேங்காய் தானம் கொடுக்கும் போதும், ஒவ்வொரு தலைமுறைபாவமும் கழிந்து கொண்டே வரும். பிறகு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக தீரும்.
குறிப்பாக வருமானத்திற்கு தடை போடும் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.
3 hours ago | [YT] | 125
View 4 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
எந்தவொரு நல்ல விடயத்தையும் தொடங்கும் முன்னர் உங்கள் மூக்கை நன்றாக சுத்தம் செய்தல் சிறப்பான பலனை உடனடியாக தரும்.
- வாசி ரகசியம்.
மூக்கு குருவை குறிக்கும்,
குரு ஜீவனின் தன்மையை நல்வழிபடுத்தும்
5 hours ago | [YT] | 32
View 2 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
செல்வம் ஏன் உங்ககிட்ட வரமாட்டேங்குது? அந்தப் பரம ரகசியம்!
நம்மில் பலர் ரத்தம் சிந்தி, பகல் இரவு பார்க்காமல் உழைக்கிறோம். ஆனாலும் செல்வம் மட்டும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகிறதா? பணம் உங்களிடம் தங்குவதற்குப் பதில் ஓடிக்கொண்டே இருக்கிறதா?
இதற்குக் காரணம் உங்கள் உழைப்பு குறைவு என்பதல்ல, உங்கள் "உள்மன அதிர்வுகள்" (Inner Vibration) தான்!
நினைவில் கொள்ளுங்கள்: செல்வம் என்பது வெறும் காகிதமோ அல்லது எண்களோ அல்ல; அது ஒரு ஆற்றல் (Energy).
உங்களுக்குத் தெரியுமா? (Interesting Facts):
* பற்றாக்குறை மனநிலை (Scarcity Mindset): "என்னிடம் பணம் இல்லை" என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதும் பேசுவதும், பிரபஞ்சத்திற்கு நீங்கள் கொடுக்கும் தவறான சிக்னல். இது இன்னும் அதிக வறுமையையே ஈர்க்கும்.
* மனநிறைவு (Inner Completion): ஆன்மீக ரீதியாக, நீங்கள் ஏற்கனவே மனதளவில் "செல்வந்தராக" உணரும்போது மட்டுமே, புற உலகில் செல்வம் உங்களைத் தேடி வரும். இதைத்தான் நம் முன்னோர்கள் "மனமே செல்வம்" என்றனர்.
* பயமும் செல்வமும்: பணத்தை இழந்துவிடுவோம் என்ற பயம் யாரிடம் இருக்கிறதோ, அவரிடம் செல்வம் நிலைப்பதில்லை. பயம் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் இருக்காது.
செல்வத்தை ஈர்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
* உங்கள் வறுமை குறித்த பழைய எண்ணங்களை (Root Patterns) கண்டறிந்து அவற்றை நீக்குங்கள்.
* "நான் தகுதியற்றவன்" என்ற எண்ணத்தை மாற்றி, "அனைத்து செல்வங்களும் எனக்கு உரியது" என்ற உயரிய உணர்வை (Cognition) வளர்த்துக்கொள்ளுங்கள்.
பணத்தின் மீது வெறுப்பையோ அல்லது பயத்தையோ காட்டாமல், அதை அன்புடன் அணுகுங்கள்.
5 hours ago | [YT] | 88
View 3 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
விருச்சிக ராசியில் பிறந்தோர் தகப்பனார்க்கு தோஷம் தருவார் குறிப்பாக வாலிபத்தில் தகப்பனாரை இழந்தவராகவோ அல்லது அவரை விட்டு தள்ளியோ ஏதாவது ஒரு பிரிவினை உருவாக்கும்
1 day ago | [YT] | 259
View 28 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
மனச்சோர்வு அடர்ந்த மூடுபனி போல் சூழும்போது, "அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்" என்று சொல்வது கொடுமையாக கூட உணரலாம். உங்கள் மனம் எதிர்க்கிறது.
உங்கள் உடல் கனமாக உணர்கிறது. எழுந்திருப்பதே கடினமாக இருக்கும்போது, "மனதை காலியாக்குதல்" என்பது சாத்தியமற்றதாக தோன்றுகிறது.
**ஆனால் இதோ ஒரு வித்தியாசமான வழி—மனச்சோர்வை எதிர்த்து போராடாமல், அதனுடன் இணைந்து செயல்படும் முறை.**
நங்கூரமும் அலையும் தியான முறை
இந்த தியானம் நீங்கள் சுமக்கும் பாரத்தை ஏற்றுக்கொள்கிறது, அதைக் கடந்து செல்ல வேண்டும் என்று கேட்காமல்.
எப்படி செய்வது:**
தாங்கக்கூடிய எந்த நிலையிலும் இருங்கள்—உட்கார்ந்து, படுத்து, அல்லது சுருண்டு. இங்கே "சரியான" தோரணை என்று ஏதும் இல்லை.
கண்களை மூடுங்கள் அல்லது பார்வையை மென்மையாக்குங்கள். உங்கள் உடலில் உள்ள கனத்தை கவனியுங்கள். அதை மாற்ற முயற்சிக்காதீர்கள். அது எங்கே வாசம் செய்கிறது என்று கவனியுங்கள்—உங்கள் மார்பில், உறுப்புகளில், தலையில்.
இப்போது இந்த கனத்திற்கு ஒரு நிறம் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். உங்கள் மனச்சோர்வு இன்று என்ன நிறம்? சாம்பல், அடர் நீலம், அல்லது கலங்கிய பழுப்பு நிறமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் அப்படியே விடுங்கள்.
**இதுதான் முக்கிய பகுதி:** உங்கள் உடலில் எங்காவது ஒரு சிறிய ஒளிப்புள்ளி இருப்பதாக கற்பனை செய்யுங்கள்—உங்கள் இதயத்தில், வயிற்றில், அல்லது விரல் நுனியில். அது மிகச்சிறியது, ஊசி முனை அளவு. அதை பிரகாசமாக்க வேண்டியதில்லை. அது இருக்கிறது என்பதை மட்டும் கவனியுங்கள்.
இயல்பாக சுவாசியுங்கள். ஒவ்வொரு மூச்சை வெளியேற்றும்போதும், கனமான நிறம் மெதுவான அலைகளாக வெளியேறுவதாக கற்பனை செய்யுங்கள். ஒவ்வொரு மூச்சை உள்ளிழுக்கும்போதும், அந்த சிறிய ஒளிப்புள்ளி நிலையாக இருக்கிறது—வளரவில்லை, சுருங்கவில்லை, வெறுமனே *இருக்கிறது*.
நீங்கள் நன்றாக உணர முயற்சிக்கவில்லை. இருளுடனும் ஒளியுடனும் ஒரே நேரத்தில் இணைந்திருக்கும் பயிற்சியை மட்டுமே செய்கிறீர்கள்.
**இதை வெறும் 3-5 நிமிடங்கள் செய்யுங்கள்.** அது போதும்.
---
**இது ஏன் பலனளிக்கிறது:** மனச்சோர்வு நாம் இருளில் தனியாக இருக்கிறோம் என்று சொல்கிறது. இந்த தியானம் நமது மிகக் கனமான தருணங்களில் கூட வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை மெதுவாக நினைவூட்டுகிறது—இருளுடன் போராட அல்ல, ஆனால் அது மாறும் வரை நமக்கு நங்கூரமாக இருக்க.
இது உதவும் என்று நீங்கள் நம்ப வேண்டியதில்லை. ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.
1 day ago | [YT] | 90
View 4 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
மைண்ட்ஃபுல்னெஸ் தியானம் (நினைவாற்றல் தியானம்) என்பது பண்டைய பௌத்த பாரம்பரியத்தில் இருந்து வந்தது.
இது தற்போதைய தருணத்தில் முழு விழிப்புணர்வுடன் இருப்பது—எண்ணங்கள், உணர்வுகள், உடல் உணர்வுகள் ஆகியவற்றை தீர்ப்பு இன்றி கவனிப்பது.
ஹார்வர்ட் போன்ற ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன: இது மன அழுத்தத்தை குறைக்கும், கவனத்தை அதிகரிக்கும், மூளையின் அமைப்பை மாற்றும் (உணர்ச்சி கட்டுப்பாட்டுக்கு உதவும் பகுதிகளை வலுப்படுத்தும்).
இதோ சில முக்கிய மைண்ட்ஃபுல்னெஸ் தியான முறைகள், படிப்படியான வழிகாட்டலுடன்:
1. சுவாசத்தில் கவனம் செலுத்தும் தியானம் (அடிப்படை முறை)
இது மனதை தற்போதைய தருணத்தில் நிலைக்கச் செய்ய உதவும்.
படிகள்:
அமைதியான இடத்தில் வசதியாக உட்கார்ந்து அல்லது படுத்துக்கொள்ளுங்கள்.
கண்களை மூடிக்கொள்ளுங்கள் அல்லது மென்மையாக பார்வையை வைக்கவும்.
உங்கள் சுவாசத்தின் இயற்கையான தாளத்தை கவனியுங்கள்—மூக்கில் காற்று உள்ளே வருவதை, நுரையீரலை நிரப்புவதை, வெளியே போவதை உணருங்கள்.
மனம் அலைபாய்ந்தால் (நிச்சயம் அலைபாயும்!), அதை தீர்ப்பு இன்றி ஏற்று, மீண்டும் சுவாசத்தில் குவியுங்கள்.
விருப்பப்பட்டால்:
மூச்சை எண்ணுங்கள் (உள்ளே 1, வெளியே 2... 10 வரை) அல்லது "உள்ளே மூச்சு"
"வெளியே மூச்சு" என்று மனதில் சொல்லுங
தினமும் 5–10 நிமிடங்கள் தொடங்குங்கள்
1 day ago | [YT] | 85
View 1 reply
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
ஒரு மரம் வளர்வதற்குப் போராடுவதில்லை, ஒரு மேகம் மிதப்பதற்கு முயற்சிப்பதில்லை. அதுபோலவே,
உங்கள் ஆன்மாவும் உங்களைக் கண்டடைய இந்தப் பதற்றமான "பரபரப்பு" தேவையில்லை.
நவீன மனதின் மிகப்பெரிய நோய், சும்மா இருக்கப் பயப்படுவதுதான். நாம் இதை "நேரம் வீணாக்குதல்" என்று நினைக்கிறோம்,
ஆனால் அந்த ஒன்றுமில்லாத மௌனத்தில்தான் பிரபஞ்சம் உங்களுடன் பேசத் தொடங்குகிறது.
ஓடுவதை நிறுத்துங்கள். உங்கள் இலக்குகளின் கனமான சுமையை ஒரு நிமிடம் கீழே இறக்கி வையுங்கள்.
நீங்கள் செதுக்கி முடிக்கப்பட வேண்டிய ஒரு சிலையல்ல; நீங்கள் ஏற்கனவே கொண்டாடப்பட வேண்டிய ஒரு அதிசயம்.
உங்களுக்குள் இருக்கும் அந்த "செய்பவன்" எப்போது மறைகிறானோ, அப்போதுதான் உண்மையான வாழ்க்கை தொடங்குகிறது.
1 day ago | [YT] | 149
View 4 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
ஸ்ரீசக்கரம்:-(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)சீரும் செல்வ யோகமும் சேர்க்கும் ஸ்ரீசக்கர பூஜை
நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார்கள் சித்தர்கள்
‘ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள்.
குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.
ஸ்ரீசக்கரத்தின் மகிமை:
மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.
மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்
விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம்.
மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார்.
ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர்.
சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம்.
அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வருகிறார். லலிதா சகஸ்ரநாமத்தின் 996-வது நாமாவளியான,’ஸ்ரீசக்ரராஜ நிலயாயை’என்ற நாமாவளியினால் அறியலாம். .
அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்: –
சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார். மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார்.
இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகைச் செய்தி வெளியிட அனைவரும் இதன் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.
முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை: ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம். ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.
ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.
வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.
பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.
ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்ததாக,
தீபதேவி மகாதேவி சுபம் பவதுமே ஸதா
யாவத் பூஜா ஸமாப்தி:ஸ்யாத் தாவத் ப்ரஜ்வல ஸுஸ்திரா:
என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும். சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.
அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருத
பாசாங்குசபுஷ்பபாணசாபாம்
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவானீம்
மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
சர்வபூத ஹிதே மாத:
ஏகி யேகி பரமேஸ்வரி
ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே
ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.
சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே
ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே –
என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க. (ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)
ஓம் ஹ்ருதய தேவ்யை நம;
ஓம் சிரோ தேவ்யை நம:
ஓம் சிகா தேவ்யை நம:
ஓம் கவச தேவ்யை நம:
ஓம் நேத்ர தேவ்யை நம:
ஓம் அஸ்திர தேவ்யை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் பகமாலியை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் பேருண்டாயை நம:
ஓம் வன்னிவாசின்யை நம:
ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:
ஓம் சிவதூத்யை நம:
ஓம் த்வரிதாயை நம:
ஓம் குலசுந்தர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நீல பாதகாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் சர்வ மங்களாயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
ஓம் சித்ராயை நம:
ஓம் லலிதா மகாநித்யாயை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா
மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:
நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி
என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும்.
ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பௌர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:
ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா
ஸ்வகீயை ரம்போபி:
ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்
(இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).
அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!
துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து
நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு
உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!
மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.
சக்கர மகிமையைப் பாடுவோம்:
சிவசக்கரம் ஒரு நான்கும் வடதிசையை நோக்க
தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க
பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக
சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்
வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்களே சேர்ந்திடும்.
ஸ்ரீ சக்கரம்
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பூஜித்து,சக்தியூட்டப்பட்ட ஸ்ரீசக்கரம் யந்திரம் மிக அற்புதமான பலன்களை கொடுக்கும் .
1 day ago | [YT] | 104
View 9 replies
ASTRO RAGHAVAN SATHEESH DNA Astrology
பக்தி மார்க்கத்தில் சென்று ஒருவன் பிரம்ம ஞானத்தைப் பெற முடியும். கடவுள் எல்லாம் வல்லவர். அவர் அங்ஙனம் திருவுளம் கொள்ளுவாராகில் தமது பக்தனுக்குப் பிரம்ம ஞானத்தைக் கொடுக்கவும் அவருக்கு இயலும்.
ஆனால் பக்தனோ பொதுவாகப் பிரம்மஞானத்தை நாடுவதில்லை. கடவுளைத் தலைவன் என்று தன்னைத் தொண்டன் என்றும் வைத்துக்கொள்ள அவன் விரும்புகிறான்; அல்லது கடவுளைத் ‘தாய்’ என்றும் தன்னைச் ‘சேய்’ என்றும் அவன் வைத்துக் கொள்கிறான்.
விஜயகிருஷ்ண கோசுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கேள்வி ஒன்று கேட்டார்:
வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி ஆத்மசாதகன் ஒருவன் நித்திய அநித்திய வஸ்து விசாரம் செய்வானாயின் அவன் பிரம்மத்தை அடைகின்றான் அல்லவா?
பரமஹம்ஸர் அதற்குப் பதில் விடுத்தார்: ஆம்; ஒருவன் விசார மார்க்கத்தைக் கடைப்பிடிப்பானாகில் அவன் பரம்பொருளை அடைகிறான்.
அவன் அனுஷ்டிக்கிற முறைக்கு ஞானயோகம் என்று பெயர். ஆனால் சாதாரண மனிதன் ஒருவனுக்கு ஞானயோகம் மிகக் கடினமானது. ஞானபூமி ஏழு இருக்கின்றனவென்று ஏறகனவே உமக்குப் பகரப்பட்டது.
ஏழாவது ஞான்பூமியை அடைகின்ற ஒருவன் சமாதிநிலையில் தனது ஜீவபோதத்தை இழந்துவிடுகிறான். பிரம்மம்தான் மெய்ப்பொருள்.
இப்பிரபஞ்சம் வெறும் தோற்றம் என்கின்ற உறுதி ஞானசாதனம் செய்கின்ற ஒருவனுக்கு வந்துவிடுமாகில் அவனுக்கு சமாதி கூடிவிடுகிறது.
ஆனால் இக்கலியுகத்தில் ஒரு மனிதனுடைய வாழ்வு அன்னத்தை முற்றிலும் ஆதரவாகக் கொண்டது. அப்படி அன்னத்தின் உதவியைச் சார்ந்திருக்கிறவனுக்குப் பிரம்மம் சத்தியம்;
ஜகத் மித்தை என்கின்ற தெளிவு எப்படி வரப்போகிறது? இக்கலியுகத்தில் நான் தேகமல்ல, நான் புத்தியல்ல, மனம் அல்ல, இருபத்து நான்கு தத்துவங்களல்ல, இன்ப துன்பங்கள் எனக்கில்லை; வியாதி, விருத்தியாப்பியம், சோகம், மரணம் ஆகியவைகளுக்கு நான் அப்பாற்பட்டவன்
என்னும் ஆத்மபோதம் உண்டாவது மிகக் கடினம்.
எவ்வளவுதான் ஆத்மவிசாரம் செய்தாலும் இந்த உடலை நான் என்று எண்ணுகின்ற எண்ணம் ஏதேனும் ஒருவிதத்தில் மனதில் உதித்துவிடும்.
அரசமரம் ஒன்றை அடியோடு வெட்டிவிடலாம். அது அழிந்துபட்டுப் போய்விட்டதென்று நீர் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் பூமியினுள் மறைந்துகிடக்கின்ற அதனுடைய வேரினின்று புதிய முளை துளிர்த்து வருவதை நீர் இரண்டொரு நாளில் காண்பீர்.
தேகாத்ம புத்தி அல்லது தேகத்தை ‘நான்’ என்று கருதுகிற எண்ணத்தினின்று ஒரு மனிதன் விடுதலையடைய முடியாது. எனவே கலியுகத்தில் வாழ்ந்திருக்கின்றவர்களுக்குப் பக்திமார்க்கம் ஒன்றுதான் மிக எளியது.
மேலும் பக்தன் ஒருவனுடைய மனப்பான்மை எத்தன்மையதெலின் “நான் சர்க்கரையாக விரும்புவதில்லை. அதை அருந்த விரும்புகிறேன்” என்பதுவே அவன் கொண்டுள்ள கொள்கையாகும்.
அதாவது நான் சச்சிதானந்த சொரூபம் என்று உணர்வதற்குப் பதிலாகச் சச்சிதானந்த சொரூபமாகிய தெய்வத்தோடு இணக்கம் கொள்ள அவன் விரும்புகிறான்.
‘அஹம் பிரம்மாஸ்மி’ – ‘நான் பிரம்மம்’ என்று சொல்லுதற்குப் பக்தன் விரும்புவதில்லை. “இறைவா, நீர் என்னை ஆட்கொண்டுள்ள பிரபு.
நான் உமது அடிமை.” இங்ஙனம் உணர பக்தன் ஒருவன் விரும்புகிறான். ஐந்தாவது ஞானபூமி, ஆறாவது ஞானபூமி ஆகிய இவ்விரண்டிற்குமிடையிலே மனதைச் சஞ்சரிக்கவிடுவது மிக நன்று.
இரண்டு இடங்களுக்கிடையிலே படகு ஒன்றை இங்கும் அங்கும் செலுத்துவது போன்று இந்த இரண்டு ஞானபூமிகளுக்கிடையில் மனதைச் செலுத்திக் கொண்டிருப்பது மிக நன்று.
ஆறாவது ஞானபூமியைக் கடந்து ஏழாவது ஞானபூமியில் மனதை நெடிது வைத்திருக்க நான் விரும்புவதில்லை. இறைவனுடைய திருநாமத்தையும் அவனுடைய மகிமையையும் பற்றிப் புகழ்ந்துபாட நான் விரும்புகின்றேன்.
இறைவனைத் தன்னுடைய தலைவன் என்றும் தன்னை அவனுடைய தொண்டன் என்றும் வைத்துக் கொள்வது சிறந்தது. மக்களில் பலர் அலைகள் கங்கா நதிக்கு உரியவைகள் என்று சொல்கிறார்கள்.
ஆனால் கங்காநதி அலைகளுக்கு உரியதென்று பகர்வாரை நாம் காண்பதில்லை. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று சாதாரண மனிதன் ஒருவன் பாவிப்பது நல்லதன்று.
உடலைத்தான் என்று உணர்கிற உணர்ச்சியில் இருக்கும்பொழுது ‘அஹம் பிரம்மாஸ்மி’ என அவன் பாவிப்பானாகில் அவன் தனக்குத் தானே பெரிய தீங்கு விளைவித்துக் கொள்கிறான்.
ஆத்ம சாதனத்தில் அவன் முன்னேற்றமடைய முடியாது. அதற்கு மாறாக அவன் பிற்போக்கு அடைவது திண்ணம். அத்தகையவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான்.
மற்றவர்களையும் ஏமாற்றுகிறான். தன் மனதின் இயல்பையே அவன் நன்கு அறிந்துகொண்டவன் அல்லன்.
பக்தியின் பெயரால் வந்துள்ள ஒவ்வொரு சடங்கும் மனிதன் கடவுளை அடைவதற்குத் துணைபுரியாது. யாரிடத்தில் பிரேமை பக்தி இருக்கின்றதோ அவனே ஈசுவர சாக்ஷாத்காரம் செய்ய வல்லவனாகிறான்.
பிரேமை பக்தியை ராகபக்தி என்று அழைப்பதும் உண்டு. பக்தியும் அருள்தாகமும் இல்லாவிட்டால் மனிதன் கடவுளை அடைய முடியாது. கடவுளிடத்து அன்பு வைக்கக் கற்றுக் கொண்டாலொழிய ஒருவன் கடவுளை அடைய முடியாது.
ஜெய்குருதேவர்.
2 days ago | [YT] | 137
View 7 replies
Load more