Hi All,

Rightu Vidu channel is for sharing my travel experience and related to temple festival videos.



Rightu Vidu

Tirumala Tirupati June 2026 month quota released from Mar 18 to Mar 24.

2 weeks ago | [YT] | 0

Rightu Vidu

Kandhar Anuboothi All Verse short video playlist link mentioned below.

www.youtube.com/playlist?list...

3 weeks ago | [YT] | 3

Rightu Vidu

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி பாடல் 49

#rightuvidu #murugan #kandharanuboothi

3 weeks ago | [YT] | 0

Rightu Vidu

Tirumala Tirupati Angapradhakshinam Tickets DECEMBER MONTH 2024
Tirumala Tirupati "December Month" Angapradhakshinam Tickets Will Open On Monday (23/09/2024) At 10:00 AM. Available Dates: 01 Dec To 15 December

16 Dec to 31 December Not Available Due To Margazhi Month

18-9-2024 to 20-9-2024 Electronic DIP Open

1 year ago (edited) | [YT] | 1

Rightu Vidu

Thiruvenkadu Budhan Sthalam
#thiruvenkadu #budhansthalam #navagrahakovil

2 years ago | [YT] | 0

Rightu Vidu

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று பன்னிரெண்டாம் நாள் திருவிழா. 4/5/23

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாள் திருவிழாவின் நிறைவாக இன்று உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி மற்றும் தேவேந்திர பூஜை நடைபெறுகிறது மாலை சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர் வருகின்றனர் பதினொரு நாள் திருவிழா வைபவத்தை இதுவரை தரிசிக்காதவர்கள் இன்றைய திருவிழாவில் ரிஷப வாகனத்தை தரிசிப்பது பன்னிரண்டு நாள் திருவிழா தரிசனத்தின் பலன் ஒரே நாளில் பெறலாம் சித்திரை விழாவின் நிறைவு நாளில் வைகையில் நிராடி தரிசித்தால் வாழ்வில் சகல சவுபாக்கியம் உண்டாகும்.

2 years ago | [YT] | 1

Rightu Vidu

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று
பதினோராம் நாள் திருவிழா. 03/05/23

மதுரை சித்திரைத் திருவிழாவின் பதினோறாம் நாள் திருவிழாவில் இன்று திருத்தேரோட்டம்.காலை 5.45 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் திருத்தேரிலும், கோயிலுக்குள் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும்,ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் சப்தாவர்ணச்சப்பரத்தில் திருவீதியுலா.

ஊர் கூடித்தேர் இழுத்தது போல' என்னும் சொல்வர். மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா நம் பண்பாட்டின் அடையாளம். மன்னர் நகர் வலம் வருவது போல, உலகாளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர் பவனி நடந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. 16ம் நுõற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டினார். சுவாமி, அம்மன் தேர்கள் ராணி மங்கம்மாளின் பேரனான விஜய ரெங்க சொக்கநாத நாயக்கரால் செய்யப்பட்டவை. சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் தேரில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தேரில் பவனியின் போது சுவாமிக்கு ஆபரணம் அணிவிப்பதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டுவர். தேர்பவனி முடிந்ததும், சுவாமிக்கு கிரீடம், ஆபரணம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவில் சப்தாவர்ண சப்பர பவனி நடக்கும். தாருகாட்சன், கமலாட்சன்,வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தினர். தேர் மீதேறி புறப்பட்ட சிவன், அசுர வதம் நிகழ்த்தி உலகைக் காத்தார். இதை நினைவூட்டும் விதத்திலும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர்.இன்று அம்மையப்பரை தரிசித்தால் ராஜபோக வாழ்வு அமையும்

2 years ago | [YT] | 1

Rightu Vidu

மதுரை சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள் 02/05/2023 திருவிழாவில் இன்று காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் திருக்கல்யாணம். காலை 6 மணியளவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்திலும் கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நாகப்பச் செட்டியார் கட்டளை மண்டகப்படியிலும் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7.30 மணியளவில் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா மற்றும் ஆனந்தராயர் பூப்பல்லக்கு.

மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சிக்கும், கைலாய நாதர் சிவனுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிவன் தலைமையில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட எல்லா தேவர்களும் மதுரை நகருக்கு வந்தனர். மங்கல தீபங்கள் ஏந்திய சுமங்கலிகள் தேவர்களை வரவேற்றனர். மணமகளின் பெற்றோர் மலையத்
துவஜபாண்டியன், காஞ்சனமாலை இருவரும் சிவனுக்கு சந்தனம் அளித்து, “எங்கள் மகள் மீனாட்சியை ஏற்று அருள்புரிய வேண்டும்” என வேண்டினர். பிரம்மா தலைமையில் யாக வேள்வி நடந்தது. லட்சுமியும், சரஸ்வதியும் மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வர, சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார். கல்யாணக்கோலத்தைக் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர். இன்று மணக்கோலம் தரிசித்தால் விரைவில் திருமண யோகம் உண்டாகும்.

2 years ago | [YT] | 1

Rightu Vidu

சித்திரை திருவிழாவின் 1/5/23 ஒன்பதாம் நாளான இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மரவர்ணச் சப்பரத்திலும் மாலை மீனாட்சி இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் நடந்ததும் மன்னர்கள் வீரத்தை நிலைநாட்ட, எல்லா நாட்டுக்கும் படையெடுத்துச் செல்வர். பாண்டிய இளவரசியான மீனாட்சி திக்விஜயமாகப் போருக்குப் புறப்பட்டாள். அமைச்சர் சுமதியும் உடன் சென்றார். பூலோகம் முழுவதையும் வென்ற அவளின் கவனம் அஷ்டதிக்கு பாலகர் மீது விழுந்தது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வெற்றி கொண்டாள். அதன் பின் சிவனின் கைலாயம் நோக்கி புறப்பட்டாள். நந்தீஸ்வரர் தலைமையில் வந்த சிவகணங்களுடன் போரிட்டு வென்றாள். இறுதியில் சிவனே போர் புரிய வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த பாதம், மழு ஏந்திய கரம், மேனி முழுவதும் வெண்ணீறு, செஞ்சடை, நெற்றிக்கண் என அவரது அழகில் மனதை பறி கொடுத்தாள். நாணத்தால் முகம் சிவந்தாள். ’இவரே உன் மணாளர்’ என அசரீரி ஒலித்தது. திக்விஜயம் திருமண வைபவத்தில் நிறைவு பெற்றது. இன்று மீனாட்சியம்மனைத் தரிசித்தால் தேவையற்ற பயம் நீங்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

2 years ago | [YT] | 3

Rightu Vidu

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று எட்டாம் நாள் திருவிழா. 30/04/23

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று காலை 10 மணி அளவில் தங்கப்பல்லக்கில் கீழச்சித்திரை வீதி தெற்கு ஆவணி மூல வீதி திண்டுக்கல் ரோடு மேல மாசி வீதி விதிகளில் வழியே வலம் வந்து திருஞானசம்பந்தர் ஆதினம் கட்டுசெட்டி மண்டகபடியில் எழுந்தருளிகிறார் பிற்பகல் 3 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடகி கோயிலுக்குள் வருதல் இரவு 8.20 மணி மேல் 8.40 க்குள் விருச்சிக லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி க்கு அம்மன் சன்னிதியில் அறுகால் பிடத்தில் மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி வருகிறாள். மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக அவதரித்தாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தான் மன்னன். வில்,வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்றுத் தர ஏற்பாடு செய்தான். யாருக்கும் அஞ்சாத வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், மன்னன் மகளுக்கு பட்டம் சூட்டி நாட்டின் இளவரசியாக்கினான். இதனால் பாண்டிய நாடுகன்னிநாடு என்று பெயர் பெற்றது. கண்களை இமைக்காமல் குஞ்சுகளைத் தன் பார்வையால் பாதுகாக்கும் மீன் போல, தடாதகையும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியாக நல்லாட்சி புரிந்தாள். இதனால், மீன் போன்ற கண்களைப் பெற்றவள் என்னும் பொருளில் கயற்கண்ணி மீனாட்சி என சிறப்பு பெயர் பெற்றாள். மதுரையும் தூங்கா நகரம் எனப்பட்டது. ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் குறை அனைத்தும் தீரும். நிறைவான வாழ்வு அமையும்.

2 years ago | [YT] | 1