Hindu Tamil Devotional Song

TAMIL BASED HINDU SONG. TAMIL DEVOTIONAL SONG FOR INDIAN JAFFNA MALAYALAM COLOMBO SOUTH INDIAN SONGS.tamil bakthi songs new updates. Trending updates with new relased song. Highly licensed songs. Murugan' Shiva song ' pillaiyar lord ganesha God songs. ஒருவன் இம்மண்ணுலகில் நல்லவனாக வாழவேண்டும் என்று தீர்க்கமான முடிவு எடுக்கும் நேரம் -- தேவி அங்கு இச்சாசக்தி
உருவில் நிலைகொண்டுவிடுவாள் !
உறுதியோடு தன் எண்ணத்தை நிலைநாட்டும் செயல்முறையினை அவன் வகுத்துவைக்கும் பொது -- தேவி அங்கு ஞானசக்தி உருவில்
நிலைகொண்டுவிடுவாள் !
பின் முனைப்போடு செயல்பட்டு தனது வாழ்வை நல்லவண்ணம் அமைத்து கொண்டுவிட்டால் -- தேவி அங்கு வந்து கிரியாசக்தியாக அவனுக்கு துணைநிற்பாள் ! இவ்வாறு மூவகை சக்தியாக அன்னை பராசக்தியே நம்மை வழிநடத்துவாள் !
ஓம் சக்தி பராசக்தி காக்கும் சக்தி ஓம் சக்தி !
#tamilgodsongs #tamildivinesongs #bakthisongssrilanka #sri_lanka_tamil_song kerala songs


Hindu Tamil Devotional Song

🙏🏾🔥🌀#சொர்க்கலோக_வாழ்வை தரும் சொர்க்க வாசல்..🙏🏾
30.12..2025.வைகுண்ட ஏகாதசி

🌀🔥🙏🏾#மார்கழி_மாதம்_சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது
ஏகாதசி எப்படி உருவானது?
சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.
தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.

🔥🙏🏾👉🏽#நீ_தோன்றிய_இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.

🙏🏾🌀🔥#ஏகாதசி_விரதத்தின் மகிமை
ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார். அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள் ராஜதண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள்.
ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.
அரசரால் திண்டாடிய மோகினி
அரசர் ருக்மாங்கதன், தன் நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்டமோகினிக்கு வேலை இல்லாமல் போனது. ஆம். யார் ஏகாதசி விரதம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை தர வேண்டிய துஷ்ட தேவதைக்கு, அரசர் ருக்மாங்கதன் நாட்டில் மட்டும் அதற்கு வேலை இல்லாமல் போனது. காரணம் மக்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில் விஷ்ணுபகவானிடம் ருக்மாங்கதனை பற்றி புகார் சொன்னாள்.
தன் பக்தனான ருக்மாங்கதன், தன் நாட்டுமக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான் என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணுபகவான், ருக்மாங்கதன் முன் தோன்றி,
“நீ யாரையும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.” என்று தன் பக்தனான அரசர் ருக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணுபகவான்.
இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. ஏகாதசி விரதம் யார் இருக்கவில்லையோ அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம்.
நோய்வாய்பட்டவர்கள் விரதத்தை கடைபிடிக்க முடியுமா?
ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்என்கிறது சாஸ்திரம். ஆனால் வியாதியால் அவதிப்படுபவர்கள் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதல்லவா.? ஆகவே நோய்வாய்பட்டு விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் ஏகாதசி விரததன்று உணவு சாப்பிடும் முன்னதாக இறைவனை வணங்கிய விட்டு சாப்பிடலாம் எனகிறது சாஸ்திரம்.
ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவு சாப்பிட்டு இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும் உச்சரிக்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள்முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்க வேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு, ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.🙏🏾

🙇🏾‍♂️🙏🏾#விரதத்தை_கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடும் முன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும்.

🙇🏾‍♂️🔥🌀#சொர்க்கவாசல்_உருவான கதை

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.

“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

இந்த ஏகாதசி திருநாளில் பகவானை தரிசித்து பாவங்கள் நீங்கி, அருளை பெறுவோம்.

🌀#ஓம்_நமோ நாராயணா 🔥🙏🏾

1 month ago | [YT] | 3

Hindu Tamil Devotional Song

காமதேனு
#தேன்கூடு கதைகள் 🍯🐝🍯🐝

ஹரி ஓம் நமோ #நாராயணாய நமஹா
ஹரே #கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

#காமதேனு: வாழும் வேதம் மற்றும் அனைத்திற்கும் தாய்

சாஸ்திரங்கள் அவளை வெறும் பசுவின் வடிவம் என்று பேசவில்லை, அவை அவளை தர்மத்தின் கட்டிடக்கலையாக வெளிப்படுத்துகின்றன.

அவள் சுரபி, மணம் கொண்டவள், அவளுடைய சுவாசம் சொர்க்கத்தின் வாசனை, மற்றும் சபலா, புள்ளிகள் கொண்டவள், அவளுடைய தோலானது விண்மீன்களின் வரைபடமாகும், ஒவ்வொன்றும் ஒரு வேதம், ஒரு நட்சத்திரம், படைப்பின் கதையைக் குறிக்கிறது.

#புராணங்கள் அண்டக் கடலான சமுத்திர மந்தனைக் கலக்கும்போது அவளுடைய மகிமையான பிறப்பைப் பாடுகின்றன. தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பை இழுத்தபோது, முதலில் வெளிப்பட்ட தெய்வீகப் பொருட்கள் கொடிய விஷமான ஹாலாஹலமும், பின்னர் அழியாமையின் அமிர்தமான #அமிர்தமும் ஆகும்.

ஆனால் விரக்திக்கும் பரவசத்திற்கும் இடையில் காமதேனு எழுந்தது. அவள் சமநிலை, போராட்டத்தையும் வெகுமதியையும் அர்த்தமுள்ளதாக்கும் நிலைநிறுத்துபவர். ஏழு பெரிய ஞானிகளான சப்தரிஷிகளுக்கு அவள் பரிசளிக்கப்பட்டாள், அவளை அனைத்து வேத ஞானம் மற்றும் தியாக சடங்குகளின் ஊற்றுக்கண்ணாக மாற்றினாள். அவளை வைத்திருப்பது வெளிப்பாட்டின் சக்தியை வைத்திருப்பதாகும், ஏனெனில் உண்மையாகப் பேசப்படும் ஒவ்வொரு விருப்பமும் அவளுடைய விளைச்சலால் நிறைவேறியது.

அவளுடைய வடிவத்தின் உருவகம்

அவளைப் பார்ப்பது ஒரு உயிருள்ள வேதத்தைப் படிப்பதாகும். அவளுடைய உடல் ஒரு புனிதமான திரைச்சீலை:

· அவளுடைய நான்கு கால்களும் தர்மம், உண்மை, தூய்மை, தவம் மற்றும் இரக்கம் ஆகியவற்றின் அசைக்க முடியாத தூண்கள்.

· அவளுடைய கொம்புகள் மும்மூர்த்திகள், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், புனிதமான AUM கொடுக்கப்பட்ட வடிவம்.

· அவளுடைய தோள்களின் கூம்பு, அனைத்து உலகங்களின் அச்சான மேரு மலையின் கம்பீரமான சிகரங்களைத் தாங்கி நிற்கிறது.

· அவளுடைய வால், நதிகளின் ராணி, கங்கை, அதன் ஓட்டம் ஒரு ஆயிரமாண்டு கால பாவங்களைத் தூய்மைப்படுத்தும். அவளுடைய வாலின் அசைவு பாவமன்னிப்பை வழங்குவதாகும்.

· அவளுடைய கண்கள் சூரியனும் சந்திரனும், நித்திய சாட்சிகள். அவளுடைய நாக்கு அக்னியின் சுடர், காணிக்கைகளை உட்கொண்டு சொர்க்கத்திற்கு கொண்டு செல்கிறது.

· அவளுடைய முதுகில், அவளுடைய கருப்பையில், அனைத்து புனித யாத்திரைகளிலும் வாழ்கிறது. அவளுடைய பால் சோமா, நனவின் அமுதம், தூய இதயத்திற்கு ஞானத்தை அளிக்கும் திறன் கொண்டது.

சாஸ்திரங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து வரும் மகத்துவம்

சூரபியை வழிபடுவது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றைப் போக்க முடியும் என்று மகாபாரதத்தின் அனுஷாசன பர்வம் அறிவிக்கிறது, ஏனெனில் அவள் இறுதித் தாயைக் குறிக்கிறாள், கேட்கப்படாமல் கொடுப்பவள். அவள் அனைத்து பசுக்களின் தாயும், நீட்டிப்பாக, அனைத்து உயிர்களின் தாயும், ஏனென்றால் அவளுடைய தெய்வீக வம்சாவளியிலிருந்துதான் அனைத்து உணவும் பாய்கிறது.

ராமாயணத்தில், வசிஷ்ட முனிவர் அவளைக் கொண்டுள்ளார், மேலும் அவளுடைய அருளால், அவர் தனது ஆசிரமத்தைத் தக்கவைத்து, உலகின் மிக சக்திவாய்ந்த மன்னனின் வலிமையைத் தாங்க முடிகிறது. இது அவளுடைய உருவக சக்தி, அவள் எந்த பூமிக்குரிய படையாலும் வெல்ல முடியாத ஆன்மீக செல்வம்.

லட்சுமி தேவியின் சாரத்தை மறைமுகமாக அழைக்கிறது. காமதேனு நடக்கும் இடத்தில், லட்சுமி வசிக்கிறாள். அவள் செழிப்பு வளரும் வளமான நிலம். அவள் பொருள் உலகம், புனிதப்படுத்தப்பட்டது.

நாங்கள் உங்களை சொந்தமாக்கிக் கொள்ள முயலவில்லை, ஏனென்றால் நீங்கள் பிரபஞ்சத்தின் உடைமை. எங்கள் பக்தியின் அமைதியான விடியலில் உங்கள் புனிதமான தாழ்வைக் கேட்க, நாங்கள் உங்களைப் பராமரிக்க மட்டுமே முயல்கிறோம்.

எங்கள் அபிலாஷைகள் தூய்மையாக இருக்கட்டும், அதனால் அவை உங்கள் காலடியில் நாங்கள் சமர்ப்பிக்கும் மென்மையான புல்லாக மாறட்டும். அதற்கு ஈடாக, ஓ தெய்வீகத் தாயே, நாங்கள் விரும்புவதை மட்டுமல்ல, எங்களுக்கு உண்மையிலேயே தேவையானதையும், கருணையால் நெய்யப்பட்ட தெய்வீக ஞானத்தின் பாலையும், ஆன்மாவின் விளக்கை எரிபொருளாகக் கொண்ட அழியாமையின் நித்திய நெய்யையும் வழங்குவீராக.

ஜெய் ஸ்ரீ காமதேனு மாதா! ஜெய கோலோக வாசினி✨

ஆன்மீகம் (Spirituality)

2 months ago | [YT] | 0

Hindu Tamil Devotional Song

இந்த வித்தைஐ கற்றுகொள்ள வாட்ஸாப்ப் குழுவில் இணைய 8144090509இந்த வாட்சப் நமபர்க்கு
மெசெஜ் செய்க

: மனம் முலம் செய்தி அனுப்புவது

தூரதிருஸ்டி

இல்லாத பொருளை இருப்பது மாதிரி அடுத்தவருக்கு மாயையை உருவாக்குவது

அடுத்தவர் நினைப்பதை தெரிந்துகொள்வது

இறந்தகாலம் நிகழ்காலம் வருங்காலத்தில் நடப்பதை காண்பது

செல்வந்தர் ஆவதற்கான சூட்சும வழிமுறைகள்

வாழ்வில் ஏற்படும் கர்ம பிரச்சனை தீர்க்கும் வழிமுறைகள்

எதிர்வினை கையாளும் முறைகள்

மனம் பற்றிய விளக்கங்கள் அதனை கட்டுபடுத்தும் பயிற்சி முறை

மூச்சுபயிற்சி

உடலின் 7 சக்கரங்களின்பயிற்சி

நோக்குவர்மம்

மனோசக்தியால் பொருட்களை தொடாமல் நகர்த்தும் டெலிகைனஸிஸ் பயிற்சி

law of attraction சுலபமாக பயன்படுத்தி இதுவரை பயன்படுத்தி பலனில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வழிமுறைகளை சொல்லிதருவது

சைக்கோசிம்பாலஜி அதாவது சின்னங்களை பயன்படுத்தி சக்தியை பெறும் பயிற்சிமுறை

டெலிபதி

இவையனைத்தும் கற்றுத்தருப்படும் நமது வாட்ஸாப்ப் குழுவில்

3 months ago | [YT] | 0

Hindu Tamil Devotional Song

திருச்செந்தூர் திருப்புகழ் விளக்கம்
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி

மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி ...... யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன்

கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் ...... குருநாதா

காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர ...... மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர ...... முருகோனே

வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மூப்புற்றுச் செவி கேட்பற்று ... கிழப் பருவத்தை அடைந்து, காது
கேட்கும் தன்மையை இழந்து,

பெரு மூச்சுற்றுச் செயல் தடுமாறி ... பெருமூச்சு விட்டுக்கொண்டு,
செயல்கள் தடுமாற்றம் அடைந்து,

மூர்க்கச் சொற்குரல் காட்டி ... கொடிய கோபத்துடன் கூடிய
சொற்களோடு குரலை வெளிப்படுத்தி,

கக்கிட மூக்குக்கு உள்சளி இளையோடும் கோப்புக் கட்டி ...
வெளிப்படும் மூக்குச்சளியும், நெஞ்சுக்கபமும் கோத்தது போல் ஒன்று
சேர்ந்து

இ(ன்)னாப் பிச்சு எற்றிடு ... துன்ப வெறியை அதிகரிக்கச் செய்து,

கூட்டிற் புக்கு உயிர் அலையாமுன் ... இத்தகைய உடலில் புகுந்து
என் உயிர் தவிப்பதற்கு முன்னம்,

கூற்றத் தத்துவ நீக்கி ... யமன் வந்து என்னுயிரை எடுக்கும் தவிர்க்க
முடியாத செயலை அகற்றி,

பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே ... உன் அழகிய
திருவடியில் சேர்த்து, சிறிது அருள் புரிவாயாக.

காப்புப் பொற்கிரி கோட்டி ... உலகின் அரணாக நிற்கும்
பொன்மலை மேருவை வில்லாக வளைத்து,

பற்றலர்காப்பைக் கட்டவர் குருநாதா ... பகைவராகிய
திரிபுரத்தாருடைய அரண்களை அழித்தவராகிய சிவபிரானின்
குருநாதனே,

காட்டுக்குட் குறவாட்டிக்கு ... கானகத்தில் குறப் பெண் வள்ளி
தேவிக்கு

பல காப்புக் குத்திர மொழிவோனே ... என்னைக் காத்தருள்
என்றெல்லாம் பல நயமொழிகள் கூறியவனே,

வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் ... வாய்ப்புள்ள தமிழின்
அகத்துறையின் உறுதியான பொருளை

வாய்க்குச் சித்திர முருகோனே ... உண்மை இதுவே என
(ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே,

வார்த்தைச் சிற்பர ... சொல்லுக்கும் சித்தத்துக்கும் அப்பாற்பட்டவனே,

தீர்த்தச் சுற்றலைவாய்க்குள் ... புண்ணிய தீர்த்தங்கள் சுற்றியுள்ள
திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்)

பொற்பமர் பெருமாளே. ... அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

3 months ago | [YT] | 0

Hindu Tamil Devotional Song

🌸 பரந்தாமனின் பன்னிரு நாமங்கள் 🌸

தேன்கூடு கதைகள் 🍯🐝🍯🐝



எண்ணற்ற திருநாமங்களில், #ஆயிரம் நாமங்களை விஷ்ணு சகஸ்ர நாமம் என்கிறோம்.



அந்த ஆயிரம் நாமங்களில் சுருக்கமாகக் கூறப்படும் பன்னிரண்டு நாமங்கள் தான் த்வாதச நாமங்கள் 🙏



#வைணவர்கள் மிகவும் முக்கியமாக கருதும் இந்நாமங்கள் ஒவ்வொன்றும் அற்புதமான மகத்துவம் கொண்டவை:



1️⃣ #கேசவ – துன்பத்தைத் தீர்ப்பவன் 🌿



2️⃣ #நாராயண – உயிருக்கு ஆதாரமானவன் 🌊



3️⃣ #மாதவ – திருமகள் மணாளன் 💫



4️⃣ #கோவிந்த – பூமியை காப்பவன் 🌍 / பசுக்களை மேய்த்தவன் 🐄



5️⃣ #விஷ்ணு – அனைத்திலும் நிறைந்தவன் ✨



6️⃣ #மதுஸூதன – மது அரக்கனை வென்றவன் ⚔️



7️⃣ #த்ரிவிக்ரமன் – மூன்றடி கொண்டு உலகம் அளந்தவன் 🌏



8️⃣ #வாமனன் – சிறிய உருவம் உடையவன் 👣



9️⃣ #ஸ்ரீதரன் – திருமகளைத் தாங்குபவன் 🌹



🔟 #ஹ்ருஷிகேசன் – புலன்களை ஆள்பவன் 👀



1️⃣1️⃣ #பத்மநாபன் நாபியில் தாமரை உடையவன் 🌸



1️⃣2️⃣ #தாமோதரன் – உரலில் கட்டப்பட்ட அடையாளம் உடையவன் 🪢



🪔 இந்நாமங்களை தினமும் ஜபித்தால் அனைத்து பாபங்களும் நீங்கி, பகவானின் அருள் கிடைக்கும்.



ஆன்மீகம் (Spirituality) #Divine #Spirituality



#இரவு #Night

4 months ago | [YT] | 1

Hindu Tamil Devotional Song

#நேற்று :::: விஷ்ணுவின் 24 அவதாரங்கள்
#இன்று :::: கதை தொடருவோம்

ஹரி ஓம் நமோ #நாராயணாய நமஹா
ஹரே #கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

ஆறாவதாக உள்ளது #தத்தாத்ரேயர் அவதாரமாகும். அத்ரி முனிவருக்கும், அனுசுயைக்கும் பிள்ளையாகத் தோன்றிய தத்தாத்ரேயர் அலாகா, பிரகலாதா ஆகியோருக்கு உண்மையான பரம்பொருள் யாது என்பதை அறியும் அறிவைப் புகட்டினார்.

ஏழாவது அவதாரம் #யக்ஞன் என்ற பெயருடன் தோன்றியதாகும். சுவயம்புமனு மன்வந்திரத்தில் ருச்சி, அருதி என்பவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த அவதாரம். முதல் மன்வந்திரத்தில் யக்ஞன், இந்திரன் எனப் பெயர் கொண்டிருந்தான்.

எட்டாவது அவதாரம் #ரிஷபர் என்ற பெயருடன் நபிக்கும், மருதேவிக்கும் பிள்ளையாகத் தோன்றியதாகும். மிகப் பெரிய ஞானிகட்கும், கல்விக் கடலைக் கரை கண்டவர்க்கும் தியானம் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்கியதே ரிஷப அவதாரத்தின் நோக்கமாகும்.

முனிவர்களும், ரிஷிகளும் விஷ்ணு ஒர் அரசனாகப் பிறந்து பூமியைப் பயனுள்ள இடமாகச் செய்ய வேண்டும் என வேண்ட, #பிருத்து என்ற மன்னனாகத் தோன்றிய அவதாரம் ஒன்பதாவது அவதாரம் ஆகும்.
இந்த அவதாரத்தில் வெறுந்தரையாக இருந்த பூமி தானியங்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் இடமாகப் பிருத்து மன்னன் செய்தார் என்பதும், அதனால் இந்த பூமிக்குப் பிருத்வி என்ற பெயர் வந்தது என்பதும் சொல்லப் பட்டுள்ளன.

பத்தாவது, #மச்சஅவதாரம் ஆகும். சாக்கூச மன்வந்திரத்தில், வைவஸ்வத மனுவின் காலத்தில் ஜலப் பிரளயத்தால் பூமி முழுவதும் நீரில் மூழ்கி இருந்த பொழுது தோன்றியது மச்ச அவதாரம். இந்த மீன், வைவஸ்வத மனுவிடம், ஒரு பெரிய படகைக் கட்டி அதில் அவனும், ஏனைய மக்களும் ஏறிக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறி உலகைக் காத்தது.

ஆன்மீக கதைகளை படிக்க இந்த குழுவில் நீங்கள் இணையலாம் ஆன்மீகம் (Spirituality)

பதினொன்றாவது #கூர்மஅவதாரம். தேவர்களும், ராட்சசர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுப்பதற் காக வாசுகியை நாணாகவும், மந்திரமலையை மத்தாகவும் பயன்படுத்த முயன்ற பொழுது, மத்தைத் தூக்கிப் பிடிக்க கூர்ம வடிவம் எடுத்துத் தன் முதுகின் மேல் அந்த மத்தைத் தாங்கினார்.

பன்னிரண்டாவது #தன்வந்திரி அவதாரம். பாற் கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருள்களும் போகக் கடைசியாக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்திக் கொண்டு வெளிப்பட்டவர் தன்வந்திரி.

பதின்மூன்றாவது அழகிய பெண்ணாக #மோகினி எடுத்த அவதாரம். பாற்கடலைக் கடையத் தாங்களும் உதவியதால் தங்களுக்கும் அமிர்தத்தில் பங்கு வேண்டும் என்று ராட்சசர்கள் முரண்டு செய்தனர். அவர்கள் எண்ணத்தைத் திசை திருப்ப விஷ்ணு அழகிய பெண் வடிவுடன் ராட்சசர்கள் பக்கம் செல்ல, அமிர்தத்தை மறந்துவிட்டு அவளைப் பார்ப்பதிலேயே அவர்கள் காலம் சென்று விட்டது.

பதினான்காவது #நரசிம்மஅவதாரம். இரண்யகசிபு என்பவனைக் கொல்ல சிங்கத்தின் தலையுடன், மனிதனின் உடம்புடன் தோன்றிய இந்த அவதாரம் இரண்யகசிபு மார்பைத் தன் நகத்தாலேயே பிளந்து விட்டது.

பதினைந்தாவது #வாமன அவதாரம். தைத்திய மன்னனாகிய மகாபலியிடம் குள்ளனாகச் சென்று மூன்றடி மண் தானம் கேட்டு, அவன் தந்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து மூன்று உலகங்களையும் மூவடியால் அளந்த அவதாரம் ஆகும்.

பதினாறாவது #பரசுராமர் அவதாரம், பரம்பரையாக அரசர் பணியை மேற்கொண்ட சத்திரியர்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றால் மதிமயங்கி மக்களுக்குத் தீமை செய்யத் துவங்கிய போது 21தலைமுறை வரை சத்திரிய மன்னர்களே இல்லாமல் செய்த அவதாரம் ஆகும் இது.

பதினேழாவது அவதாரம், #வேதவியாசர் என்று காரணப் பெயர் கொண்ட அவதாரம் ஆகும். பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் கிருஷ்ண துவையம்பாயனர் என்ற இயற் பெயருடன் பிறந்த இவர், மிக விரிந்தும் பரந்தும் யாரும் கற்க முடியாத நிலையிலும் இருந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி நான்கு வேதங்களாக வகுத்தமையால் வேதவியாசர் என்ற பெயர் பெற்றார்.

பதினெட்டாவது #இராமஅவதாரம். பத்தொன்பதாவது #பலராம அவதாரம். இருபதாவது #ஶ்ரீகிருஷ்ண அவதாரம். பதினெட்டாவது இராம அவதாரத்தை இராமாயணத்திலும், பத்தொன்பது, இருபது அவதாரங்கள் பற்றி மகாபாரதத்திலும் விரிவாக அறியலாம்.

இருபத்திஒன்றாவது #புத்தர் அவதாரம் ஆகும். இவர் புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர். இருபத்திரண்டாவது, இனி வரப்போகின்ற #கல்கி அவதாரம். விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகக் கலியுகத்தின் முடிவில் தோன்றப் போகின்றவர் கல்கி ஆவார்.

இருபத்திமூன்று, இருபத்தி நான்கு அவதாரங்களின் பெயர்களை பாகவத புராணம் குறிப்பிடவில்லை.

தொடரும் :::::

#Night #Story #HDPhotos

4 months ago | [YT] | 1

Hindu Tamil Devotional Song

#நேற்று :::; இந்திரன் விமானத்தில் யுதிஷ்டிரன்
#இன்று :::: கதை தொடருவோம்

வியாசரின் #மகாபாரத கதைகள்
#தேன்கூடு கதைகள் 🍯🐝🍯🐝

ஹரி ஓம் நமோ #நாராயணாய நமஹா
ஹரே #கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

இந்திரனுடைய விமானத்தில் சொர்க்கத்திற்குள் சென்ற #யுதிஷ்டிரன் அங்கு பெரும் கும்பலாக கூடி இருந்தவர்களில் தன் சகோதரர்களை தேடினான். சகோதரர்கள் யாரும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை.

அங்கு இருந்தவர்களில் அவனுடைய கவனத்தில் தெரிந்தவன் #துரியோதனன். இது யுதிஷ்டிரனுக்கு சிறிது மனகலக்கத்தை உண்டு பண்ணியது. தன் குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் பேராசை பிடித்தவன். தர்மத்திலிருந்து பெரிதும் பிசகியவன். யுத்த நெறியிலிருந்து பிசகிய பொல்லாதவன். அவன் புரிந்த பெரும் பாவச் செயல்களுக்கு மன்னிப்பு ஏதுமில்லை. யுத்தகுற்றவாளி என துரியோதனனே நரகத்தில் போட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அவன் இந்திரனுக்கு நிகரான பதவியை அங்கு பெற்றிருந்தான்.

அவனுடைய உள்ளத்தில் உதித்த அந்த எண்ணத்தை #நாரதர் அறிந்து கொண்டார். உடனே யுதிஷ்டிரனிடம் சென்ற நாரதர் துரியோதனன் அடைந்திருப்பது வீர சொர்க்கம் என்று விளக்கம் கொடுத்தார். போர்க்களத்தில் மனம் தளராமல் போர்புரிந்து உடலை விடுவது க்ஷத்திரியர்களுக்கு உண்டான தகுதி எனவே துரியோதனனுக்கு சொர்க்கம் வாய்த்தது என்று விளக்கினார்.

யுதிஷ்டிரன் துரியோதனனை பற்றிய ஆராய்ச்சி எதையும் செய்யவில்லை. தன் சகோதரர்களை காண ஆவல் கொண்டிருந்தார். சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் என்று இந்திரனிடம் கேட்டுக்கொண்டான். அவர்கள் இருந்த இடத்திற்கு யுதிஷ்டிரனை அழைத்துச்செல்ல தேவதூதன் ஒருவன் அவனுடன் அனுப்பப்பட்டான். இவரும் நடந்து செல்ல செல்ல #பாதை மேலும் மேலும் #இருள் சூழ்ந்ததாக மாறியது.

அந்தப் பாதை மங்கலமற்றதாகவும், கடினமானதாகவும், பாவச் செயல்களைச் செய்யும் மனிதர்களால் நடக்கப்படுவதாகவும் இருந்தது. அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்த அது, மயிர் மற்றும் பாசி ஆகியவற்றால் மூடப்பட்ட புல்வெளியைப்போல அமைந்தது. பாவிகளின் துர்நாற்றத்தால் மாசடைந்து, தசை மற்றும் குருதிச் சேறுடன் கூடியதாக, காட்டு ஈக்கள் நிறைந்ததாக, கொட்டும் வண்டுகள் மற்றும் கொசுக்களுடன் கூடியதாகப் பயங்கரக் கரடிகளின் அத்துமீறல்களுடன் கூடியதாக அஃது இருந்தது. அழுகும் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தன.

தினமும் #இரவு 9 மணிக்கு இந்த குழுவில் பதிவு செய்யபடும் விருப்பம் உள்ளவர்கள் இங்கு படிக்கலாம் இந்த குழுவில் நீங்கள் இணையலாம்
ஆன்மீகம் (Spirituality)

எலும்புகளும், மயிர்களும் நிறைந்திருந்த அது புழு பூச்சிகளின் கேடு விளைவிக்கக்கூடிய வாடையுடன் கூடியதாக இருந்தது. சுடர்மிக்க நெருப்பால் வழிநெடுகிலும் சூழ்ந்திருந்தது. இரும்பு அலகுகளைக் கொண்ட காக்கைகள், வேறு பறவைகள் மற்றும் கழுகுகளும், ஊசிகள் போன்ற நீண்ட கூரிய வாய்களைக் கொண்ட தீய பிரேதங்களும் அங்கே மொய்த்தன

அங்கே பெரும் வெப்பத்துடன் கூடிய மென்மையான வெண்மணல்களும், இரும்பினால் செய்யயப்பட்ட பாறைகளும் கற்களும் நிறைந்திருந்தன. அங்கே சுற்றிலும் இரும்பினால் செய்யப்பட்ட பல குடுவைகள் கொதிக்கும் எண்ணையுடன் எண்ணெயக்குடங்கள் இருந்தன..அங்கே முட்களுடன் கூடிய முள்ளிலவமரங்கள் பல இருந்தன, எனவே தீண்டுவதற்குத் துன்பம் நிறைந்ததாக இருந்தது. #குந்தியின் மகன் யுதிஷ்டிரன் அங்கே பாவிகளுக்குக் கொடுக்கப்படும் சித்திரவதைகளைக் கண்டான்.

சூழ்நிலை அருவறுப்புக்குப்புக்கு உரியதாக இருந்தது. சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. மலம் நிறைந்ததாக அந்த இடம் அமைந்திருந்தது. நிலத்தில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. தாங்க முடியாதவாறு அனல் காற்று வீசியது. தரையில் முட்கள் கிடந்தன. தனக்கு சிறிதும் பொருத்தமற்ற இந்த இடத்தைப் பற்றிய விவரங்களை தன்னுடன் வந்த தேவதூதனிடம் கேட்டான். அது #நரகத்தின் ஒரு பகுதி என்றும் இனி தாங்கள் திரும்பிப் போகலாம் என்றும் உடன் வந்தவன் விளக்கினான்.

யுதிஷ்டிரன் அங்கிருந்து செல்ல திரும்பியதும் பரிதாபகரமான கூக்குரல்கள் கிளம்பின. திரும்பி போக வேண்டாமென்றும் மிகவும் புண்ணியவானான நீங்கள் வந்ததினால் தாங்கள் பட்ட வேதனை சிறிது தணிந்தது ஆகவே செல்லாதீர்கள் என்று மீண்டும் விண்ணப்பங்கள் செய்தனர். அன்னவர்கள் மீது கருணை கொண்ட யுதிஷ்டிரன் நின்றபடி அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களை பார்த்தான்.

அங்க விண்ணப்பித்தவர்கள் அவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், "நான் #கர்ணன்", "நான் #பீமசேனன்", "நான் #அர்ஜுனன்",(நான் நகுலன்", "நான் சகாதேவன்", "நான் #திருஷ்டத்யும்னன்", "நான் #திரௌபதி", "நாங்கள் திரௌபதியின் மகன்கள்" என்று பதிலளித்தனர். ஓ! மன்னா, இவ்வாறே அந்தக் குரல்கள் பேசின.

அவர்களை கண்டதும் யுதிஷ்டிரன் ஸ்தம்பித்து போனான். மீண்டும் சரியான மனநிலைக்கு வர அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது. அதன் பிறகு உடன் தேவதூதுவனிடம் யுதிஷ்டிரன் உறுதியாகக் கூறினான் தேவலோகத்துக்கு அதிபதியாய் இருக்கும் இந்திரனிடம் நீ போய் நான் சொல்லும் செய்தியை கூறுவாயாக.

பொல்லாங்கே வடிவெடுத்து இருக்கும் துரியோதனன் இருக்கும் சொர்க்க வாழ்க்கையை தனக்கு வேண்டாம் என்றும் அறநெறி சிறிதேனும் பிறழாத என் சகோதரர்கள் இங்கே நரக வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். சொர்க்கத்தில் இது தான் நீதி என்றால் நானும் என் தம்பிமார்களோடு இந்த நரகத்திலேயே மூழ்கி கிடப்பேன் என்று கூறினார்.

தொடரும் :: சுவர்க்க ஆரோஹன பருவம் 18 (1)

#நாளை : பாண்டவர்கள் பரம்பொருளில்ஐக்கியம்

👑நாளை மஹாபாரதம் முற்றும் .👑

5 months ago | [YT] | 2