தமிழ் ஊடகம் செய்திகள்

TNTV International News Network மூத்த பத்திரிகை ஊடகவியலாளர் வளர்மெய்யறிவான் @ விஷ்வா விசுவநாத் அவர்களால் வழிநடத்தப்படும் சுயாதீன தமிழ் ஊடகக் குழுமம்.

+ தமிழ் ஊடகம் வார இதழ் : PRGI Reg.No.: TNTAM/25/A1239

+ தமிழ் ஊடகம் இணைய இதழ் : tamiloodagam.நெட்

+ TNTV தமிழ் ஊடகம் YouTube சேனல் : youtube.com/@TNTVTamilOodagam
+ செய்திகள் : youtube.com/@TNTVNewsTamil
+ வள்ளலார் காணொலி : youtube.com/@tntvIyarkaiUnmai
Social Media : Facebook: www.facebook.com/TNTVNewsTamil,
X (முன்னாள் Twitter): x.com/TNTVNewsTamil
Instagram: www.instagram.com/tntvtamiloodagam

சுயாதீன தமிழ் ஊடகவியலை ஆதரியுங்கள்.
Bank account Name : TAMIL OODAGAM, Current Account Number: 120036757925
Bank : Canara Bank, Edayarpalayam Branch, Coimbatore. IFSC Code: CNRB0005634, SWIFT code : CNRBINBBXXX
UPI / Google Pay / PayTM / PhonePe Numbers 8012271745 and 9487085277, Name : Viswanaath.T.M.
+Email : tntvnetwork@gmail.com and editor.tamiloodagam@gmail.com


தமிழ் ஊடகம் செய்திகள்

விவரமறிந்த இலங்கைத் தமிழர் எவரும் சீமானைக் குறை கூற மாட்டார்கள்

இலங்கை வடக்கில் சீமான் போல ஒரு தலைவராவது நின்று மக்களைத் திரட்டியிருக்கலாமே

ஈ*ழ*த் தமிழர் எனும் பெயரில் போலிக் குரல் பதிவை வைத்து சீமான் குறித்து எதிர்மறை உருட்டல்கள்

இங்கே சீமான் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எந்த அறிவுமே இல்லை

#TNTVTamilOodagam

https://youtu.be/mE3pTAVIJgY

1 year ago | [YT] | 12

தமிழ் ஊடகம் செய்திகள்

கதறிய கொத்தடிமை சுப.வீ | காமெடிக் கட்டப்பா | சொதப்பிய இளவஞ்சி | Expose ஆகும் பலவீனர்கள் | #ntk

1 year ago | [YT] | 2

தமிழ் ஊடகம் செய்திகள்

இப்படி ஒரு ஈன, இழி வாழ்க்கை வாழ வெட்கமாக இல்லையா சுப.வீரபாண்டியன் ?!

தமிழ்த்தேசியத்தை வீழ்த்த கட்டப்பா சத்யராஜை வைத்து காமெடி செய்வதா ?!

சு.ப.வீரபாண்டியன் போன்றவர்கள் தீராவிட கோமாளிகளைத் தொடர்ந்து ஏமாற்றி வயிறு வளர்த்து வருகின்றனர்.

இது அந்தக் கோமாளிகளுக்குத் தெரிவதில்லை. அது தெரிந்தால் அந்தகோமாளிகள் ஏன் இன்னமும் திராவிட மாடல் என்று உளறிக்கொண்டிருக்கப்போகிறார்கள்.

நடிகர் விஜய், தமிழ்த் தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் என்று ஒரு அறியாமையில் கூறினார். அது தவறு, தமிழ்த்தேசியம் வேறு திராவிடம் வேறு என்று சீமான் வகைப்படுத்தி சுமார் ஒரு மணிநேரம் இதற்கு விளக்கம் அளித்தார்.

உண்மையில் இதற்கு விஜய் தரப்புதான் பதில் அளித்திருக்கவேண்டும்.

ஆனால், நெறி வேறு எங்கோ கட்டியதைப்போல தமது ஒட்டுத்திண்ணைப் பிழைப்புக்கு இது பேராபத்து ஆகிவிடுமே, திராவிடக்கூட்டத்திடம் இருந்து வரும் வருவாய் நிறுத்தப்பட்டுவிடுமே என்று பதட்டம் தொற்றிக்கொள்ள கொத்தடிமை குடும்பத்தின் தலைவர் சு.ப.வீரபாண்டியன் நடிகர் சத்யராஜை அழைத்து "திராவிடம் தமிழுக்கு அரண்" எனும் பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகம் நடத்தி ஒட்டுத்திண்ணைப் பிழைப்பைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்து இருக்கிறார்.

அதில், சத்தியராஜ் "மேதகு தலைவர் அவர்களே திராவிடம் எனும் சொல்லை பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி, ஒரு ஆங்கிலக்கடிதத்தில் "ட்ராவிடியன் பேம்லி" Dravidiyan Family என்று குறிப்பிட்டுள்ளார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்" என்று கட்டப்பா சத்யராஜ் பேசி உள்ளார்.

அட....வெட்கமாக இல்லையா ?

ஒரு இடத்தில் அதுவும் ராபர்ட் கால்டுவெல் குறிப்பிட்ட "திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பங்களின் ஒப்பிலக்கணம்" எனும் அந்தப்பொருளில்..தென்னிந்திய மொழிக்குடும்பங்களின் எனும் பொருளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படித்தான் தமிழ் இலக்கியங்களில், சம்ஸ்கிருத வேதங்களில் எங்குமே இல்லாத திராவிடம் எனும் சொல்லைத் தேடிதேடிப் பிடித்து அதை ஆதாரம் என்று கூறி உருட்டுவது திராவிடக் கூட்டத்தின் இழி பிழைப்பு, ஈன வழக்கம்.

அயோத்திதாசப் பண்டிதர் பயன்படுத்தினார், மேதகு தலைவர் பயன்படுத்தினார் என்று ஒன்று இரண்டு இடங்களைத்தவிர வேறு எந்த ஆதாரத்தையும், சான்றையும் தரமுடியாத அவல நிலைதான் திராவிடக்கூட்டதிற்கு.

ஒவ்வொரு முறையும் படு தோல்வி அடைகிறது திராவிட மாடல் கூட்டம்.

கேட்டால் பேராசிரியர்கள், பெரும் பருப்புகள் என்று பீத்திக்கொள்ளும் திராவிடிய கருப்பு சட்டை கூட்டத்தினர் கடைசியில் வடிவேலு போல நகைச்சுவை செய்து ஓடி ஒதுங்குவது இயல்பு.

மேதகு தலைவர் அவர்கள் "திராவிடம்" என்பதை மொழியாகவோ, இனமாகவோ, தேசமாகவோ, கொள்கையையாகவோ எங்காவது குறிப்பிட்டுள்ளாரா ?

அவர் எண்ணியிருந்தால் அதை அவரது தமிழ் *ழ அரசின் முதன்மையாக்கியிருக்க முடியுமே. ஏன் செய்யவில்லை.

"மொழிக்குடும்பம்" எனும் பொருளில்...ராபர்ட் கால்டுவெல் முன் வைத்த தென்னிந்திய மொழிக்குடும்பம் எனும் பொருளில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை உருட்டு உருட்டும் சு.ப.வீ அவர்களே....திராவிடம் என்பது ஒரு வடமொழிச்சொல், சம்ஸ்கிருத நூலில் இருந்த சொல்.

நூல் என்றாலே ஆகாதே எனும் நீங்கள் அந்த பூணூலைப்பிடித்துதான் வயிறு வளர்க்கிறீர்களே.

வெட்கமாக இல்லையா ?!

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை - ஊடகவியலாளர், நிறுவனர் - தமிழியல் ஆய்வு நடுவம். 9/11/2024

1 year ago | [YT] | 9

தமிழ் ஊடகம் செய்திகள்

தமிழ்நாட்டில் தனித் தெலுங்கு நாடு கேட்போம்

சன்னி கண்டவர் போல உளறும் காமாட்சி நாயுடு

40 விழுக்காடு தெலுங்கர்கள் - 2 கோடித் தெலுங்கர்கள் என உருட்டும் அமைப்புகள்

கிழிந்து தொங்கும் திராவிட முகமூடிகள்

சீமான் மீது ஏன் அவதூறு ? ஏன் கட்சியை சிதைக்க சதி ?

காரணம் இதுதான். கவனமாகக் கேளுங்க


https://youtu.be/Q-uF9AsUyTA

1 year ago | [YT] | 11

தமிழ் ஊடகம் செய்திகள்

மேதகு தலைவர் நார்வே நாட்டில் இருக்கிறார்

மிஷன் துவாரகா தோல்வி ஏன் ?

புயல் கிளப்பும் நார்வே பத்திரிகையாளரின் நேர்காணல்

https://youtu.be/adut-zdw7Kc

1 year ago | [YT] | 7

தமிழ் ஊடகம் செய்திகள்

திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலாரின் மறைவு குறித்து பரப்பப்படும் வதந்திகள்.

வள்ளல் பெருமான் அடைந்த நிலை.

பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட விசாணையும் நிறைவு அறிக்கையும்.....

விரிவான விளக்கமான தகவல்களுடன் ஊடகர் தாமரைச் செல்வனுக்கு ஆதன் தமிழ் ஊடகத்திற்காக வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் அளித்த நேர்காணல்.


https://youtu.be/XCI5khiiOG0?si=KhWim...

2 years ago | [YT] | 1

தமிழ் ஊடகம் செய்திகள்

உலகப் புகழ் பெறும் சாகாக் கலை தந்த சாவை வென்ற பெருஞ்சித்தர் வள்ளலார்

பொறாமை, விரக்தியில் மன நோயாளிகளான ஐந்தாம் தமிழர் சங்கத்தினர்.

Aintham Thamilar Sangam

2 years ago | [YT] | 1

தமிழ் ஊடகம் செய்திகள்

உடனடியாக மன நல சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் ஐந்தாம் தமிழர் சங்கக் கூட்டத்தினரே. ஏற்கனவே முற்றி விட்டது.

ஐந்தாம் தமிழர் சங்கம் எனும் பெயரில் ஒரு பிராமணியத் திராவிடப் பித்து விலகாது இருக்கும் ஒரு கூட்டம் தமிழர் சங்கம் எனும் பெயரில் தமிழர் மெய்யியலைத் திட்டமிட்டு சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 150 ஆண்டுகளாக இந்த சிறு பிள்ளை பிச்சுப் பிள்ளைக் கூட்டம் போல பல கூட்டத்தினர் தமிழர் மெய்யியலை குறிப்பாக திரு அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் அவர்களின் சாகாக் கல்வி குறித்து பரப்பிய அவதூறுகள் தவிடு பொடியாகியிருக்கின்றன.

இராமலிங்கப் பெருமானாரின் திருஅருட்பாவை மருட்பா என்று ஏழு ஆண்டுகள் தொடர்ந்து அவதூறு பரப்பிய ஒரு கூட்டம் இருந்த இடம் தெரியாது போனது.

அறிவாளிகள் போல மேடைகளில், புத்தக எழுத்துகள் வாயிலாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள்கூட இராமலிங்க வள்ளல் பெருமானாரின் சாகாக் கலை, சாகாக் கல்வியைப் பற்றிய அறிதலும், புரிதலும், உணர்தலும் இன்றி சறுக்கித் தலை குப்புற விழுந்து விடுகின்றனர்.

முடை நாக்கு நாத்திகர்கள் இராமலிங்கரின் சாதி, மத, உருவ வழிபாடு எதிர்ப்பை மட்டும் எடுத்துக் கொண்டு நின்ற இடத்திலேயே ஆண்டுக்கணக்கில் ஓடுவது போல பாவனை செய்து ஏமாந்து கொள்கின்றனர்.

மத, சமயவாதிகள் இராமலிங்கப் பெருமானாரை சமய, மதக் கூட்டுக்குள் அடைக்கப் பார்த்து தோல்வி அடைகின்றனர்.

இவர்களுக்கு இடையில் தமிழர் பேரறிவாளர்களை மட்டம் தட்டி இருட்டடிப்பு செய்திட ஒரு திருட்டுக் கூட்டம் செயல்படுகிறது.

இந்தக் கூட்டம் தமிழர்களின் இலக்கிய ஆவணங்களில் ஒன்றும் இல்லை, தமிழர்கள் குறிப்பாக பேரறிவாளர்களான சித்தர்கள் தொடங்கி திருஅருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் வரை பிராமணர்களால் கொல்லப்பட்டு விட்டதாகக் கதை கட்டி தமிழர் பேராளுமைகளை சிறுமைப் படுத்துவது என இழி செயலை மனம் கூசாமல் செய்கிறது.

இவர்களிடம் சான்று, ஆதாரம் கேட்டுப் பாருங்கள், நேர்மையற்ற இவர்களால் எந்த உறுதியான சான்றுகளோ அல்லது அறிவால் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் தர்க்கத்தைக் கூட முன் வைக்க முடியாது.

பொய், புரட்டு, கற்பனை, திரிப்பு, அவதூறு என்பது மட்டுமே இவர்களின் "சான்றுகள் ".

இத்தகைய பித்தலாட்டக்காரர்களையும் கடந்து திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் அருட் சித்தியடைந்து 150 ஆண்டுகள் கழித்தும் ஊடகங்களில் அன்றாடம் பேசப்படுகிறார், விவாதிக்கப் படுகிறார், சத் விசாரம் செய்யப்படுகிறார் என்பதைக் கண்டு பொறாமையால் உணர்ச்சி வசப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசி அற்பத் தன்னின்பம் அடைந்து கொள்கின்றனர் இந்தப் பிச்சுப் பிள்ளைக் கூட்டத்தினர்.

தமிழர் மெய்யியலை சிதைத்து அழித்துவிடத் துடித்தவர்கள் சிதைந்து அழிந்து போனதுதான் வரலாறு, புவியியல், அறிவியல் எல்லாம்.

திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் குறித்துத் திட்டமிட்டு அவதூறு பரப்பும் ஐந்தாம் தமிழர் சங்கம் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமான் அவர்களுக்கு விரைவில் இயற்கையுண்யை உணர்த்துவார்.

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், MA Philosophy and Religion
பத்திரிகை - ஊடகவியலாளர்
நிறுவனர் - தமிழியல் நடுவம்
நிறுவனர் - இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை RVIRF

13/04/2024, சென்னை

2 years ago | [YT] | 2

தமிழ் ஊடகம் செய்திகள்

இராமலிங்க வள்ளலாரின் சாகாக் கல்வியை அவதூறு பரப்பி சிதைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கம்

தமிழர் பேரறிவைத் திறன்களை மட்டம் தட்டி அழிக்கும் திட்டமிட்ட துரோகச் செயல் - இனவழிப்பு

சினிமா - டிராமா - சீரியல் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதா ?

வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி வாந்தி எடுப்பதா ?

வெற்று விளம்பரத்திற்கு இவ்வளவு இழி செயலில் இறங்குவதா ?

கடும் கண்டனம்.

@aintham tamilar sangam

2 years ago | [YT] | 1