New channel & News channel


firstnews_tamil

கரூருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கரூர் மாவட்டத்தில் பாயும் அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

1 year ago | [YT] | 0

firstnews_tamil

கரூர் தொழில்பேட்டை அருள்மிகு கல்யாணசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் சரஸ்வதி தேவி மற்றும் ஹயக்ரீவர் சிறப்பு தசமி வழிபாடு

1 year ago | [YT] | 0

firstnews_tamil

2 years ago | [YT] | 3

firstnews_tamil

2 years ago | [YT] | 0

firstnews_tamil

*கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியனுக்கு மெச்சத்தகுந்த நீண்ட சேவைக்கான மாநில சாரணர் உயர் விருது. சென்னை சாரணர் தலைமையகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.*

சென்னை, ஜனவரி 26.

*சென்னையில் உள்ள பாரத சாரணர் இயக்க தமிழ்நாடு மாநில தலைமையகத்தில் 74வது குடியரசு தின விழா மற்றும் மாநில சாரணர் உயர் விருதுகள் வழங்கும் விழா மாநில பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.*

*அப்போது கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியனின் மெச்சத்தகுந்த நீண்ட சேவையைப் பாராட்டி பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவருக்கு மாநில உயர் விருது வழங்கிப் பாராட்டினார்.*

*இவ்விழாவில் தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., மாநில தொடக்கப்பள்ளி இயக்குனர் அறிவொளி, மாநில ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் பழனிச்சாமி, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் லட்சுமி, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் உள்ளிட்ட பல்வேறு கல்வித்துறை உயர் அதிகாரிகள், சாரணர் இயக்க மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*

*முனைவர் ராமசுப்பிரமணியன், கடந்த 19 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மாநில தேசிய உயர் விருதுகள் பெறக் காரணமாக இருந்தமை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சாரணர் பயிற்சியில் ஈடுபடுத்தியமை, சாரணர் இயக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு உலக சாதனை நிகழ்வுகள், இளம் மாணவர்கள் மத்தியில் தாய்நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் பறைசாற்றும் வகையில் சாரண சாரணியர்களை தேசிய அளவில் முன்மாதிரியான நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்து வருதல் உள்ளிட்ட மெச்சத்தகுந்த பல பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.*

*மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நிறுவப்பட்டுள்ள புதிய மாநில சாரணர் கவுன்சிலில் மாநில சாரணர் உதவி ஆணையராக ராமசுப்பிரமணியன் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.*

*திரு ராமசுப்பிரமணியன் மாநில சாரணர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டதற்கும், மெச்சத்தகுந்த நீண்ட சேவைக்காக மாநில உயர் விருது பெற்றதற்கும் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி மற்றும் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர்.*

புகைப்படம்:
*கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும், சாரணர் இயக்க மாநில உதவி ஆணையருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியனின் மெச்சத்தகுந்த நீண்ட கால சிறந்த சேவையைப் பாராட்டி பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவருக்கு மாநில சாரணர் உயர் விருது வழங்கிப் பாராட்டினார். அருகில் தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., மாநில தொடக்கப்பள்ளி இயக்குனர் அறிவொளி, மாநில ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் பழனிச்சாமி, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் லட்சுமி, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் மற்றும் பலர்.*

2 years ago | [YT] | 6

firstnews_tamil

பூமிக்கடியிலிருந்து தோன்றிய அரசு லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷ நிகழ்ச்சி – பால், சந்தனம், விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் பரவச ருத்ரதாண்டவம்

கரூர் அருகே 6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி – திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி


தனிக்குழு அமைக்கப்பட்டு மேலாய்வு நடத்தி வேறு ஏதேனும் தொல்லியல் பொருட்கள் கிடைக்கின்றதா ? என்பதனை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும் கோரிக்கை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கொடையூர் கிராமத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் உள்ள முருங்கை தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள லிங்கம் மற்றும் நந்தி எம்பெருமானுக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அரசம்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த லிங்கத்திற்கு அரசு லிங்கேஸ்வரர் என்றழைத்து பொதுமக்களால் வணங்கப்படும் இடத்திற்கு அரசு லிங்கத்தினை தரிசித்த திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது., கடந்த தொன்மை காலத்து அதாவது 300 வருட காலம் வாய்ந்த இந்த லிங்கம் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 6 அடி லிங்கமும், நந்தி கேஸ்வரர் கண்டெடுக்கப்பட்டு விஷேச அபிஷேக ஆராதனைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தொல்லியல் துறை, வருவாய்த்துறையினராலும் ஆய்வு செய்யப்பட்டு தொல்லியல்துறை ஆணையருக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. மேலும், இதே பகுதியில் அந்த அறிக்கையின் அடிப்படையில் வேறு ஏதேனும் கிடைக்கின்றதா ? என்றும் அகலாய்வு நடத்தப்பட்டு தொல்லியல் சின்னங்கள் வேறு ஏதேனும் கிடைக்குமா ? என்றும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். இங்குள்ள லிங்கம் பெரிய லிங்கம் மகிமை அதிகம், மகிமை குறைவு என்று கூறக்கூடாது உலகில் உள்ள அனைத்து லிங்கத்திற்கும் மகிமை உள்ளது. ஆகவே, பூமிக்கடியில் உள்ள எந்தெந்த காலத்தில் எந்தெந்த லிங்கங்கள் கிடைக்கும் என்று ஒலைச்சுவடியில் எழுதப்பட்டது போல கிடைத்து வருகின்றது. ஆகவே பூமிக்கடியில் கிடைக்கும் லிங்கங்களை காக்க வேண்டுமென்றும் இந்த இடத்தினை சுற்றுலாத்தலமாக்க, தொல்லியல் துறை, வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்றார். முன்னதாக பூமிக்கடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அரசு லிங்கேஸ்வரருக்கு பால் அபிஷேகம், சந்தனம், மஞ்சள், விபூதி அபிஷேகம் செய்யப்பட்டதோடு, நந்தி கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டது. பின்னர் மகா ஆரத்திகளும், கற்பூர ஆரத்திகளும், வேத பாராயணங்களும் செய்யப்பட்டது.

2 years ago | [YT] | 2

firstnews_tamil

கரூர் அருகே 6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி – திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி


தனிக்குழு அமைக்கப்பட்டு மேலாய்வு நடத்தி வேறு ஏதேனும் தொல்லியல் பொருட்கள் கிடைக்கின்றதா ? என்பதனை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும் கோரிக்கை



கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கொடையூர் கிராமத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் உள்ள முருங்கை தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள லிங்கம் மற்றும் நந்தி எம்பெருமானுக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அரசம்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த லிங்கத்திற்கு அரசு லிங்கேஸ்வரர் என்றழைத்து பொதுமக்களால் வணங்கப்படும் இடத்திற்கு அரசு லிங்கத்தினை தரிசித்த திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது., கடந்த தொன்மை காலத்து அதாவது 300 வருட காலம் வாய்ந்த இந்த லிங்கம் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 6 அடி லிங்கமும், நந்தி கேஸ்வரர் கண்டெடுக்கப்பட்டு விஷேச அபிஷேக ஆராதனைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தொல்லியல் துறை, வருவாய்த்துறையினராலும் ஆய்வு செய்யப்பட்டு தொல்லியல்துறை ஆணையருக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. மேலும், இதே பகுதியில் அந்த அறிக்கையின் அடிப்படையில் வேறு ஏதேனும் கிடைக்கின்றதா ? என்றும் அகலாய்வு நடத்தப்பட்டு தொல்லியல் சின்னங்கள் வேறு ஏதேனும் கிடைக்குமா ? என்றும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். இங்குள்ள லிங்கம் பெரிய லிங்கம் மகிமை அதிகம், மகிமை குறைவு என்று கூறக்கூடாது உலகில் உள்ள அனைத்து லிங்கத்திற்கும் மகிமை உள்ளது. ஆகவே, பூமிக்கடியில் உள்ள எந்தெந்த காலத்தில் எந்தெந்த லிங்கங்கள் கிடைக்கும் என்று ஒலைச்சுவடியில் எழுதப்பட்டது போல கிடைத்து வருகின்றது. ஆகவே பூமிக்கடியில் கிடைக்கும் லிங்கங்களை காக்க வேண்டுமென்றும் இந்த இடத்தினை சுற்றுலாத்தலமாக்க, தொல்லியல் துறை, வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்றார்

பேட்டி : ராதாகிருஷ்ணன் – நிறுவனத்தலைவர் – திருத்தொண்டர் சபை

2 years ago | [YT] | 3

firstnews_tamil

2 years ago | [YT] | 2

firstnews_tamil

கரூர் அருகே மதநல்லிணக்க நிகழ்வு!


மெக்கானிக் கடை ஆயுதபூஜையில் ஜெபம் செய்த கிறிஸ்தவ பாதிரியார்



தமிழகம் முழுக்க நேற்று ஆயுதபூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நமக்குப் பல்வேறு வகையில் தொழில் செய்யவும், வாழ்க்கை செழித்தோங்கவும் உதவும் ஆயுதங்களுக்குப் பூஜை செய்து வழிபட்டு, நன்றி பாராட்டுவதுதான் இந்த விழாவின் நோக்கம். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வாகனப் பழுது நீக்கும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டீக்கடை முதல் பெரிய, பெரிய உணவகம் வரை பல்வேறு இடங்களில் நேற்று ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


அதற்குத் தேவைப்படும் பழம், வாழை இலை, வாழை மரம், பொரி, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, மற்றும் சந்தனம், விபூதி, சூடம், சாம்பிராணி, பூ, மாலை மற்றும் அழகு சாதன அலங்காரப் பொருள்களை நேற்று முன்தினம் முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.


இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு எதிர்ப்புறம் திலகவதி மோட்டார்ஸ் என்ற இருசக்கர வாகனம் பழுதுநீக்கு கடையில் கொண்டாடப்பட்ட ஆயுதபூஜை விழா, அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த இருசக்கர வாகனப் பழுதுநீக்கு கடையின் உரிமையாளர் சரவணன் அழைப்பை ஏற்று கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் பூஜையில் கலந்து கொண்டு ஜெபம் செய்தார். பின்னர், சாமிக்குப் படைத்த பொரி, சுண்டல் உள்ளிட்டவற்றை பொதுமக்களோடு சேர்ந்து அந்தப் பாதிரியாரும் உண்டு மகிழ்ந்தார். மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்த நிகழ்வு, அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருக்கிறது.

2 years ago | [YT] | 5

firstnews_tamil

3 years ago | [YT] | 4