பேரரசர் media

Hi to everyone . .we want to learn our community history for perrasar perimpidu mutharaiyar .


பேரரசர் media

RIP குழந்தை புகழேந்தி

4 years ago | [YT] | 31

பேரரசர் media

...நமது முத்தரையர் வரலாறு...

காரியாபட்டியைச் சுற்றியிருக்கும் 131 கிராமங்களின் கதை... உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது.

நூல் முழுமையும் மூப்பமார்கள் உலவிக் கொண்டே இருக்கிறார்கள். கம்பு சுற்றியவர்கள், காவல் காத்தவர்கள், நிலக்கொடை தந்தவர்கள், மருத்துவம் பார்த்தவர்கள், பிடிமண் சுமந்தவர்கள், காவல் தெய்வமானவர்கள் , தடுப்பணை கட்டுவதற்காக ஊர் கடந்து சென்றவர்கள் என்று ஒவ்வொரு கிராமத்தினுள்ளும் வரலாறாக மூப்பர்கள் நிலைகுத்தியிருக்கிறார்கள்.

காதியாமூப்பனின் பெயரிலிருந்துதான் காரியாபட்டி கருக்கொள்கிறது. அந்தக் கரிசல் வெளியின் முதல் குடியேற்றவாதி காதியா மூப்பனாகத்தான் இருக்க வேண்டும்... அவனிலிருந்துதான் அந்நிலத்தின் ஆதிக்குடியாக முத்தரைய மூப்பர்கள் அடையாளமிடப்படுகிறார்கள்.

கரிசல் பூமியின் காவல்காரனாக நந்திக்குண்டு சமையவீர மூப்பன் காவல் கம்பு பிடித்திருக்கிறான்.
கருங்க மூப்பனும், சிலம்ப மூப்பனும் தண்டியனேந்தலின் சிறந்த சிலம்பாட்ட வீரர்கள், பக்கத்து கிராமங்களால் வெல்ல முடியாத வீரர்களாக அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்.

வீரக்குடி முருகன் கோயிலில் பட்டத்து மூப்பனுக்கு இருந்த முதல் மரியாதை மறுக்கப்பட்டவுடன் பிடிமண்ணில் முருகனை மூப்பன் அழைத்து வருகிறார், முருகையாபுரம் என்ற புது ஊர் பிடிமண்ணிலிருந்து உருக்கொள்கிறது. பின்னாளில் பட்டத்து மூப்பனின் வம்சத்தில் சிலர் வேட்டையாடிக் கொண்டே தோதான இடம்தேடி இடம்பெயர்கின்றனர். அவர்கள் தேனூர் என்ற நிலத்தில் நிலைகொண்டு தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
கிழுவ மூப்பன், வேலு மூப்பன், வீர மூப்பன், மேநாட்டு மூப்பன், ஆண்டி மூப்பன், ஊர்க் காவலன் போன்றவர்கள் தன் சிலம்பாட்டத்தால் அந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் , அரசியல் கைது நடவடிக்கைகளால் தலைமறைவாக வாழ்ந்த நேரத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தவராக மந்திரிஓடை வ.மு.வெள்ளைச்சாமி மூப்பர் குறிக்கப்படுகின்றார். மேலும் பூமிதான இயக்கத்திற்காக தன் நிலத்தின் ஒரு பகுதியை கொடையளித்து அதற்கு வினோபாபுரம் என்று பெயரும் வைத்துள்ளார் வெள்ளைச்சாமி மூப்பர். அவரைப்போலவே மணிகட்டி மூப்பன் என்பவரும் பூமிதான இயக்கத்திற்காக நிலக்கொடை அளித்தவராக குறிக்கப்படுகின்றார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் அன்பு கொண்டவராக இருந்து , சசிவர்ணத் தேவரை அழைத்து வந்து தன் கிராமத்தின் சாவடியைத் திறந்து வைத்துள்ளார் வலையங்குளம் வேட்டைய மூப்பர், முத்தரையர் சமூகத்திற்காக அமைப்புக்கட்டி உழைத்ததோடு , ஆங்கிலேயர்கள் அப்பகுதியில் அணைகட்டுவதற்கும் வேட்டைய மூப்பர் காரணமாக இருந்துள்ளார். வேட்டைய மூப்பரின் பெயர் கரிசல் மண்ணில் காலத்திற்கும் நிலைத்திருக்கும் , அவர் ஆற்றியுள்ள அரும்பணிகள் அத்தகையன!

கரிசல் மண்ணின் மீது முத்தரையர்கள் எப்படி காலவெளியில் தன் கால்பதித்து வாழ்வைத் தொடங்கினார்கள் என்பதற்கு "வக்கணாங்குண்டு " கிராமத்தை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்து ( தஞ்சை ? ) வந்து நான்கு பேராகக் குடியேறி இன்று 4 ஊர்களாக பரவியுள்ளனர். இவர்களுள் பூசாரி வகை, அம்பலக்கார வகை, காவல்கார வகை, பனைமரத்தான் வகை என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையினரின் பெயரும் அவர்களது வரலாற்றின் பெயராகவே அமைந்துள்ளது. இவர்கள் இவ்வூர்களில் நிலைகொண்ட பிறகு , மணக் கொள்விணைக்காக கள்ளநாட்டார் வகை ( புறமலை நாட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம்) , ஆனைக்கொட்டம் மூப்பர் வகை உள்ளிட்ட பிரிவினர் குடியேற்றமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

முத்தரையர்களைப் போல அகமுடையார், உழைப்பிற்குப் பெயர்போன நாடார் குடி, தேவேந்திர குல வேளாளர், இடையர், தெலுங்கு நாயக்க ரெட்டியார்கள், கள்ளர் உள்ளிட்ட சமூகங்களைக் குறித்த வரலாறுகளும் நூலில் அடங்கியுள்ளன.
நூலின் தரவுகளைத் திரட்டிக் கொடுத்து வெளிவரக்காரணமாக இருந்த காரியாப்பட்டி மனு நூல் நிலையத்தாருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

6 years ago | [YT] | 18

பேரரசர் media

...நமது முத்தரையர் வரலாறு...

காரியாபட்டியைச் சுற்றியிருக்கும் 131 கிராமங்களின் கதை... உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது.

நூல் முழுமையும் மூப்பமார்கள் உலவிக் கொண்டே இருக்கிறார்கள். கம்பு சுற்றியவர்கள், காவல் காத்தவர்கள், நிலக்கொடை தந்தவர்கள், மருத்துவம் பார்த்தவர்கள், பிடிமண் சுமந்தவர்கள், காவல் தெய்வமானவர்கள் , தடுப்பணை கட்டுவதற்காக ஊர் கடந்து சென்றவர்கள் என்று ஒவ்வொரு கிராமத்தினுள்ளும் வரலாறாக மூப்பர்கள் நிலைகுத்தியிருக்கிறார்கள்.

காதியாமூப்பனின் பெயரிலிருந்துதான் காரியாபட்டி கருக்கொள்கிறது. அந்தக் கரிசல் வெளியின் முதல் குடியேற்றவாதி காதியா மூப்பனாகத்தான் இருக்க வேண்டும்... அவனிலிருந்துதான் அந்நிலத்தின் ஆதிக்குடியாக முத்தரைய மூப்பர்கள் அடையாளமிடப்படுகிறார்கள்.

கரிசல் பூமியின் காவல்காரனாக நந்திக்குண்டு சமையவீர மூப்பன் காவல் கம்பு பிடித்திருக்கிறான்.
கருங்க மூப்பனும், சிலம்ப மூப்பனும் தண்டியனேந்தலின் சிறந்த சிலம்பாட்ட வீரர்கள், பக்கத்து கிராமங்களால் வெல்ல முடியாத வீரர்களாக அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்.

வீரக்குடி முருகன் கோயிலில் பட்டத்து மூப்பனுக்கு இருந்த முதல் மரியாதை மறுக்கப்பட்டவுடன் பிடிமண்ணில் முருகனை மூப்பன் அழைத்து வருகிறார், முருகையாபுரம் என்ற புது ஊர் பிடிமண்ணிலிருந்து உருக்கொள்கிறது. பின்னாளில் பட்டத்து மூப்பனின் வம்சத்தில் சிலர் வேட்டையாடிக் கொண்டே தோதான இடம்தேடி இடம்பெயர்கின்றனர். அவர்கள் தேனூர் என்ற நிலத்தில் நிலைகொண்டு தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
கிழுவ மூப்பன், வேலு மூப்பன், வீர மூப்பன், மேநாட்டு மூப்பன், ஆண்டி மூப்பன், ஊர்க் காவலன் போன்றவர்கள் தன் சிலம்பாட்டத்தால் அந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் , அரசியல் கைது நடவடிக்கைகளால் தலைமறைவாக வாழ்ந்த நேரத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தவராக மந்திரிஓடை வ.மு.வெள்ளைச்சாமி மூப்பர் குறிக்கப்படுகின்றார். மேலும் பூமிதான இயக்கத்திற்காக தன் நிலத்தின் ஒரு பகுதியை கொடையளித்து அதற்கு வினோபாபுரம் என்று பெயரும் வைத்துள்ளார் வெள்ளைச்சாமி மூப்பர். அவரைப்போலவே மணிகட்டி மூப்பன் என்பவரும் பூமிதான இயக்கத்திற்காக நிலக்கொடை அளித்தவராக குறிக்கப்படுகின்றார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் அன்பு கொண்டவராக இருந்து , சசிவர்ணத் தேவரை அழைத்து வந்து தன் கிராமத்தின் சாவடியைத் திறந்து வைத்துள்ளார் வலையங்குளம் வேட்டைய மூப்பர், முத்தரையர் சமூகத்திற்காக அமைப்புக்கட்டி உழைத்ததோடு , ஆங்கிலேயர்கள் அப்பகுதியில் அணைகட்டுவதற்கும் வேட்டைய மூப்பர் காரணமாக இருந்துள்ளார். வேட்டைய மூப்பரின் பெயர் கரிசல் மண்ணில் காலத்திற்கும் நிலைத்திருக்கும் , அவர் ஆற்றியுள்ள அரும்பணிகள் அத்தகையன!

கரிசல் மண்ணின் மீது முத்தரையர்கள் எப்படி காலவெளியில் தன் கால்பதித்து வாழ்வைத் தொடங்கினார்கள் என்பதற்கு "வக்கணாங்குண்டு " கிராமத்தை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்து ( தஞ்சை ? ) வந்து நான்கு பேராகக் குடியேறி இன்று 4 ஊர்களாக பரவியுள்ளனர். இவர்களுள் பூசாரி வகை, அம்பலக்கார வகை, காவல்கார வகை, பனைமரத்தான் வகை என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையினரின் பெயரும் அவர்களது வரலாற்றின் பெயராகவே அமைந்துள்ளது. இவர்கள் இவ்வூர்களில் நிலைகொண்ட பிறகு , மணக் கொள்விணைக்காக கள்ளநாட்டார் வகை ( புறமலை நாட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம்) , ஆனைக்கொட்டம் மூப்பர் வகை உள்ளிட்ட பிரிவினர் குடியேற்றமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

முத்தரையர்களைப் போல அகமுடையார், உழைப்பிற்குப் பெயர்போன நாடார் குடி, தேவேந்திர குல வேளாளர், இடையர், தெலுங்கு நாயக்க ரெட்டியார்கள், கள்ளர் உள்ளிட்ட சமூகங்களைக் குறித்த வரலாறுகளும் நூலில் அடங்கியுள்ளன.
நூலின் தரவுகளைத் திரட்டிக் கொடுத்து வெளிவரக்காரணமாக இருந்த காரியாப்பட்டி மனு நூல் நிலையத்தாருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

6 years ago | [YT] | 13

பேரரசர் media

DNT -awareness #A.oliyarasan#rv.பாலமுருகன்

6 years ago | [YT] | 2

பேரரசர் media

👆பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 3 ம் இடத்தைப் பிடித்த நம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் சிங்கமும் ,Dஆனந்த சீனிவாசன் முத்தரையர் அவர்களின் தவப்புதல்வியுமான, செல்வி.மோகனப்பிரியா அவர்களுக்கு வேலூர் மாவட்ட முத்தரையர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

6 years ago | [YT] | 22

பேரரசர் media

"முத்தரையர் சமுதாயத்தை பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்"

எத்தனை பேருக்கும் தெரியும் முத்தரையர் சமுதாய வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமானது 1959-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த "பாகப்பிரிவினை" திரைப்படம் ஆகும்.

ஆம் இப்படமானது மதுரை மாவட்டம் "அலங்காநல்லூரில் வசிக்கும் மூப்பனார்" பட்டம் உடைய ஓர் குடும்ப உறவுகளுக்குள் குறிப்பாக "வைத்தியலிங்க மூப்பனார்,சுந்தரலிங்கம் மூப்பனார்" என்னும் இரு சகோதரர்களுக்கும் அவர்களின் மகன்களுக்கு உள்ளும் நடக்கும் குடுப்ப பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும் இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன் குடும்பத்தில் வரும் அனைவரின் பெயரும் மூப்பனார் என்று தான் முடியும். ஏன் சிவாஜிகணேசன் அவர்களின் பெயரும் "கண்ணையா மூப்பனார்" தான்.

அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பொருத்தவரை "மூப்பனார் பட்டம்" "வலையர் குல முத்தரையர்களுக்கு" மட்டுமே உண்டு தவிற வேறு எந்த சமுதாயத்திற்க்கும் கிடையவே கிடையாது ஆகும்.

படத்தின் தொடக்கத்தில் "வைத்தியலிங்க மூப்பனார்"-ஆக நடித்திற்க்கும் நடிகர் டி. எஸ். பாலையா அவர்கள் ஓர் வசனம் பேசுவார் அது "பரம்பரை பரம்பரையாக இந்த வட்டாரத்திலே நம் குடும்பம் தான் மிராசுதாரர் குடும்பம்" என்று கூறுவார்.

என் கடந்த பதிவுகளை தொடர்ந்து பார்பவர்களுக்கு தெரிந்திருக்கும் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் "வலையர் மூப்பனார்" பலர் இன்றும் 100 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் வைத்துள்ள உள்ளனர் என்று முன்பே கூறியிருப்பேன்.

இன்றைய நிலையில் 100-ஏக்கர்க்கு மேல் விளை நிலம் வைத்துள்ள "வலையர் மூப்பனார்கள்" இருந்தாலும் கடந்த காலங்களில் பல நூறூ ஏக்கர் வைத்திருந்த "வலையர் மூப்பனார்களும்" அலங்காநல்லூர் சுற்றுவட்டாரத்தில் இருந்துள்ளனர் அவர்களை பற்றியான தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கின்ரேன் விரைவில் வெளியிருகின்ரேன் நன்றி.

(குறிப்பு : இப்படத்தில் சிவாஜிகணேசன் அவர்களின் பெயரான "கண்ணையா" என்ற பெயர் கொண்ட முத்தரையர்கள் இன்றும் அலங்காநல்லூரில் உள்ளனர் ஆக இப்படமானது அலங்காநல்லூரில் நடந்த உண்மை சம்பவங்களை கருவாக கொண்டு இப்படத்தின் இயக்குனரால் எடுக்கப்பட்டிருக்கலாம்)

இவன் : மதுரை மகேஷ் முத்தரையர்
(முத்தரையர் சமுதாய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுக்களம்,தமிழ்நாடு)

6 years ago | [YT] | 18

பேரரசர் media

"""""""ஆடி 18 மன்னர் வல்வில் ஓரி விழா"

வல்வில் வல்லவரே!
வள்ளலாக வழ்தவரே!
கொல்லிமலை காவலரே!
வேட்டுவர்குடி நாயகரே!!
எங்கள்குல மாறனாரே !!!

தெரிந்து கொள்வோம்::::::::::

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார்.

ஒரு முறை வல்வில் ஓரி ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோத்திததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவ பெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மன்னர் வல்வில் ஓரி பற்றிய புலவர்களின்
குறிப்புகள்::::::____------


நற்றிணை 320 இல் கபிலர் இயற்றிய பாடல்
↑ முள்ளுர் மன்னன் கழல் தொடிக்காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்ஒரிக்கொன்று சேரலற்கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழுகொல்லி (அகம்: 209)
↑ நற்றிணை 6, 265
↑ புறம்: 152, 153, 204

போற்றுதலுக்குரிய நம் மன்னரை
வணங்கி வாழ்வில் வளம் பல பெறுவோம்

6 years ago | [YT] | 14

பேரரசர் media

"'""முத்தரையர்குல முத்தரசியின் சாதனை"""

உலக தலைவர்களின் படங்களை ஏழு நாட்களில் வரைந்து உலக சாதனை படைத்தத தங்கை அபிநயா........
இக்கலையில் மேலும் பல சாதனைகள் படைக்க முத்தரையர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

6 years ago | [YT] | 28

பேரரசர் media

சூரிய குல சத்ரியர்களான முதுஅரசகுடி பூர்வீக தமிழ்குடிகளான முத்தரையர் சொந்தங்களுக்கு

"""""""""மார்பிடுகு பெருங்கிணறு:-

திருவெள்ளறை :
மார்பிடுகு பெருங்கிணறு:

திருச்சியில் இருந்து 20 கி.மி. தொலைவில், துறையூர் செல்லும் வழித்தடத்தில், மண்ணச்சநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது திருவெள்ளறை. இங்கு அருள்மிகு புண்டரீகாஷ பெருமாள் திருக்கோவில் உள்ளது. தாயார் பங்கய செல்வி என்னும் திருநாமம் கொண்டு அருள்கிறார். இத்திருத்தலம் திருவரங்கத்திற்கும் முற்பட்டதாதலால், இது 'ஆதி திருவரங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. வெண்பாறைகளால் அமைந்த கோவில் எனப் பொருள்படும் வகையில் 'திருவெள்ளறை' என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் அழகிய கட்டிடக்கலை அமைப்பினைக் கொண்டது இத்திருத்தலம். உயரமான மதிலையும், குடைவரை அமைப்புகளையும், பல்வேறு அழகிய சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது திருவெள்ளறை திருத்தலம்.

இத்திருத்தலத்தில் ஒரு முக்கியமான கல்வெட்டு உள்ளது. பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு , கரிகால சோழர் பதினாறு நூறாயிரம் பொன்னை ஒரு பதினாறு கால் மண்டபத்தில் வைத்து, அம்மண்டபத்தோடு பரிசளித்தார். பிற்காலத்தில் சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, சோழ தேசத்தையே சூறையாடி, தரைமட்டமாக்கி தஞ்சையில் கழுதையை வைத்து உழுது, விஷ கடுகு விதைத்த மாறவர்ம சுந்தர பாண்டியன், உருத்திரங்கண்ணனாருக்கு கரிகால் பெருவளத்தான் கொடுத்த அந்த பதினாறு கால் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் தமிழுக்கு தலை வணங்கிய செய்தி அக்கல்வெட்டில் உள்ளது.

அந்த கல்வெட்டு தகவல் பின்வருமாறு :

வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன் செல் பட்டினப்பாலைக்கன்று நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.

தமிழுக்கு பாண்டிய மன்னன் செலுத்திய மரியாதையை தெரிவிக்கும் இக்கல்வெட்டானது போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

மேலும் அக்கால கலைகளில் ஒன்றான 'குடக்கூத்து' ஆடும் சிற்பம் இருக்கிறது.
இத்திருத்தலத்திற்கு அருகிலேயே ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்றும் உள்ளது. நான்கு துறைகளை உடைய இக்கிணற்றில் ஒரு துறையில் இருந்து பார்த்தால் மற்ற மூன்று துறைகளும் தெரியாதவாறு கட்டப்பட்டுள்ளது. நிறைய அழகிய தெய்வங்களின் சிற்ப வேலைப்பாடுகளும் இக்கிணற்றில் உள்ளன.

இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் பெயர் 'மாற்பிடுகு பெருங்கிணறு' என அக்கிணற்றின் மேலுள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கி.பி. 800-ம் ஆண்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவர், பல்லவ அரசன் தந்திவர்மனின் பெயர் விளங்குமாறு, தந்திவர்மனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான 'மாற்பிடுகு' பெயரில் இக்கிணற்றினை வெட்டியுள்ள செய்தி அக்கல்வெட்டில் உள்ளது.

அக்கல்வெட்டு செய்தி பின்வருமாறு :

ஸ்வஸ்தி ஸ்ரீ பாரத்வாஜ கோத்ரத்தின்வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன்தந்திவர்மற்கு யாண்டு நான்காவதுஎடுத்துக்கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான்அலம்பாக்க விஷையநல்லுளான் தம்பி கம்பன்அரையன் திருவெள்ளரைத் தென்னூர்ப்பெருங்கிணறு இதன் பியர்மார்ப்பிடுங்குப்பெருங்கிணறென்பது இதுரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழுநூற்றுவரோம்

ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் அதே கிணற்றின் பக்கச் சுவரில் ஒரு செய்யுளையும் கல்வெட்டுப் பாடலாக பொறித்துள்ளார்.

அப்பாடல் பின்வருமாறு :

ஸ்ரீ கண்டார் காணார் உலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாதேய்
தண்டார் மூப்பு வந்துன்னை-த்தளரச்செய்து நில்லாமுன் உண்டேல் உண்டு மிக்குது உலகமும் அறைய வைமிந்நேய்

இந்த செய்யுளின் பொருளாவது :

நேற்று ஒருவனைக் கண்டேன். இன்றோ அவனைக் காணமுடியவில்லை. இறந்துவிட்டான். அத்தகைய நிலையாமையுடைய இவ்வுலகத்தில் அனைத்தின் மீதும் ஆசைகொண்டு நிற்காதீர்கள். அன்றொரு நாள் நம்மை இறைவன் படைத்தானே அந்த பிறந்தநாளின் நட்சத்திரம் சாதகம், பலன் இவற்றைப் பார்த்துக்கொண்டு மனம் வருத்தப்பட்டு நைந்து போகாதீர்கள். வயது முதிர்ந்து கையில் கோலூன்றி நம் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே நம்மால் ஈட்டப் பெற்று நமக்குப் பயன் பட்டவை போக மீதம் எஞ்சியிருப்பதை இந்த உலகம் நன்மைபெற மனம் உவந்து அளியுங்கள்.

இந்த கல்வெட்டுகள் மட்டுமின்றி இக்கிணற்றின் ஒரு துறையில் உள்ள படிக்கட்டுகளில் தமிழ் எண்களை படிக்கு ஒன்றாக கல்வெட்டு போல் வெட்டியுள்ளனர்.

தகவல்:_கவிஞர் சிவமாரி அம்பலம்

6 years ago | [YT] | 6