தமிழக வெற்றிக்கழகம்

வணக்கம் மக்களே,

இந்த சேனல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் Whatsapp Group ல் இருந்து தவெக பற்றிய தகவல்களை உடனுக்குடன் வழங்கும் ஒரு Channel.

இந்த சேனலை Subscribe செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் update தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த Channel -ல் வரும் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Subscribe செய்த.. செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி🙏

Support for super thanks 👍🙏




தமிழக வெற்றிக்கழகம்

கவுண்டம்பாளையத்தில் ஒரு பள்ளியில் சத்துணவு திட்டத்தில் மதிய உணவு உண்ட மாணவர்கள் 43 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.....

தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள் யாரும் இதை பெரிதாக எடுத்துப் பேசவில்லை சமூக ஊடகங்களிலும் பேசப்படவில்லை. இன்று மதியம் நடந்த இந்த நிகழ்வு உண்மையாகவே தமிழ்நாட்டில் ஊடகங்கள் இயங்குகிறது என்றால் இன்று இரவு நடந்த அனைத்து நேரலைவிவாதத்திலும் விவாத பொருளாக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நிகழ்வு. நான் இந்த செய்தியை மாத்ருபூமியில் பார்த்து அறிந்து கொண்டேன் தமிழகம் தவிர்த்து மற்ற மாநில மீடியாக்கள் இதை பேசியிருக்கின்றன......

கரூரில் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்களும் துணை முதல்வரும் அந்த இடத்திற்கு போய் சேர்ந்தார்கள் நாடு முழுவதும் செய்தியாக்கப்பட்டது. ஊடகங்கள் திரும்பத் திரும்ப அந்த நிகழ்வை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தன ஆனால் இன்று இத்தனை பெரிய சம்பவம் நடந்து இத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் ஆனால் தமிழக மீடியா அதை கண்டு கொள்ளவில்லை.......

ஒன்று இரண்டு இருநூறு ரூபாய்க்கு தட்டச்சு தட்டும் உடன்பிறப்புகள் இது ஏதோ ஆளுங்கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பிரச்சனை வருவதற்காக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது போன்ற ஒரு நரேட்டிவ் செட் செய்து கொண்டிருக்கிறார்கள்........

கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து போய் கிடைக்கிறது. பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் இறந்து போவது பள்ளி குழந்தைகள் தேர்வு எழுத வராமல் இருப்பது பள்ளிகளுக்குள் சாதி சண்டைகள் மாணவர்களிடம் பெருகிவரும் போதை கஞ்சா சார்ந்த விஷயங்கள் என்று முழுவதுமாக பள்ளி கல்வித்துறை சீரழிந்து போய் கிடக்கிறது........

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை எந்த விதத்திலும் தகுதியற்ற ஒரு காமெடி நடிகரின் ரசிகர் மன்றத்தை நடத்தியவர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் பொறுப்பு கொடுக்கப்பட்ட ஒருவரின் கையில் இயங்குவதும் பேரபத்தம். அன்று கரூரில் நடந்த சம்பவத்தின் போது மீடியாக்கள் முன்பு தன் நடிப்பு திறனை வெளிப்படுத்திய அந்த ரசிகர் மன்ற தலைவர் இன்று முகத்தை எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை........

ஒட்டுமொத்த மீடியாவும் மௌனிக்கப்பட்ட இந்த ஐந்து வருடம் தான் தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களில் நடந்த காட்டாட்சி. இந்த காட்டாட்சி நீடிக்கும் என்றால் அடுத்த ஐந்து வருடத்திற்குள் தமிழகம் ஒரு காலத்தில் பிஹாரில் நடந்த குண்டா ராஜ் போன்ற நிலையை எட்டும்.........

உண்மை சம்பவங்களை மக்கள் அறிந்து கொள்ளாத விதம் அது விவாதத்திற்கு உள்ளாக்கப்படாத விதம் மறைத்து தேவையற்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பேசி மக்களை பதட்டப்படுத்தும் மீடியாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் மனித நேயமற்ற வாழத் தகுதியற்ற எச்சைகள்.........

எல்லா விதங்களிலும் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் அனுப்பப்படும்......

#கிழவனார்
‪@sivaranjanip2995‬

1 hour ago | [YT] | 1

தமிழக வெற்றிக்கழகம்

கோவை 44 குழந்தைகள் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்:
உணவு சமைத்தது 50 பேருக்கு.
உணவு உண்டு 2 மணி நேரம் கழித்து தான் உடல் நிலை மோசமடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உணவு உண்ணாமல் தடுத்தோம் என்பது பொய்!
பின் எதற்கு இந்த பொய் ?
அங்கே தான் விசயமே இருக்கு..
அந்த கவுண்டம்பாளையம் பள்ளியில் தினமும் 250 குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாக அரசு தகவல் கிடைக்கிறது.
ஆனால் சமைப்பது 50 தான். மதிய உணவு உண்பது 50 குழந்தைகள் அளவில் தான். மற்றவர் வீட்டில் இருந்து கொண்டு வருகிறார்கள்.
சரி இதில் என்ன விசயம்?
சுமார் தினமும் 200க்கும் மேல் போலி கணக்கு.
இதில் என்ன மறைக்க இருக்கு பெரிய விசயம்?
தமிழகத்தில் 43,000 அரசு பள்ளிகளில் சுமார் 46,00,000 குழந்தைகள் தினமும் மதிய உணவு உண்பதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் இது 5ல் ஒரு பகுதி மட்டுமே உணவு எடுக்கிறார்கள்.
சுமார் ஆண்டுக்கு 2300 கோடி இதற்காக ஒதுக்கப்படும் நிதியில் - இந்த போலி கணக்கு எழுதி உணவு சாப்பிடாத குழந்தைகளையும் சேர்த்து எழுதுவது மூலம் ஆண்டுக்கு சுமார் 1800 கோடியை திருடியுள்ளது ஒரு கும்பல்?
ஆண்டுக்கு 1800 கோடி எனில் 5 ஆண்டுகளில் சுமார் 9000கோடி அளவிற்கு ஊழலை செய்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்..
வெறும் சத்துணவு மதிய உணவு திட்டத்தில் இவ்வளவு பெரிய முறைக்கேடு நடக்கிறது.
இதை மூடி மறைக்க துடிக்கிறது திமுக அரசு..
உருப்படுமா தமிழகம்...
{கவனிக்க : ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வி துறைக்கு 48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அமைச்சரின் ஊழல் அளவு என்ன என்பதை சிந்திப்பீர்}
‪@sivaranjanip2995‬

5 hours ago | [YT] | 1

தமிழக வெற்றிக்கழகம்

Dear tvkians..

திமுகவின் இன்றைய கட்டுக்கதைகள் என்னவாக இருக்கும்? உங்கள் கற்பனை திறனை, நகைச்சுவை உணர்வை, நாகரீகமாக காட்டுங்கள் 😂

1. பட்டப்பகல் கொலைகள் பற்றி:
"பட்டப்பகலில் அரிவாளால் வெட்டுவதை 'கொலை முயற்சி' என்று சொல்லக் கூடாது. அது ஒரு 'உலோகவியல் பரிசோதனை' (Metallurgical Testing). இரும்பும் மனிதத் தசையும் எவ்வளவு வேகத்தில் மோதுகிறது என்று இளைஞர்கள் செய்யும் 'நேரடிச் செய்முறை விளக்கம்' - உயரதிகாரி கண்டுபிடிப்பு.

2. ரவுடிகளின் அட்டகாசம் பற்றி:
"ரவுடிகள் மாமூல் கேட்பதை 'மிரட்டல்' என்று சொல்லக் கூடாது. அது ஒரு 'தன்னார்வ வரி வசூல் முறை' (Crowdfunding). வணிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான 'பரஸ்பர அன்புப் பரிமாற்றம்' - மூத்த உடன்பிறப்பு கண்டுபிடிப்பு.

3. போதைப்பொருள் புழக்கம் பற்றி:
"கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை 'சட்டவிரோதம்' என்று சொல்லக் கூடாது. இது இளைஞர்களை 'ஆன்மீக நிலைக்கு' அல்லது 'கற்பனை உலகிற்கு' அழைத்துச் செல்லும் 'மனநல ஊக்க மருந்து'. இதை விற்பவர்கள் 'மகிழ்ச்சி விநியோகஸ்தர்கள்' - நவீன நடுநிலையாளர் கண்டுபிடிப்பு.

4. லாக்கப் மரணங்கள் பற்றி:
"விசாரணைக் கைதி உயிரிழப்பதைக் 'கொலை' என்று சொல்லக் கூடாது. அது 'நிர்வாக ரீதியான இயற்கை மரணம்'. லத்தியும் முதுகும் முத்தமிட்டுக் கொண்டதில் ஏற்பட்ட 'உணர்ச்சிப் பெருக்கால்' வந்த மூச்சுத்திணறல் - வாடகை வாய்கள் கண்டுபிடிப்பு.

5. திருட்டு மற்றும் கொள்ளை பற்றி:
"வீடு புகுந்து கொள்ளையடிப்பதை 'திருட்டு' என்று சொல்லக் கூடாது. அது ஒரு 'செல்வப் பகிர்வுத் திட்டம்' (Wealth Redistribution). செல்வந்தர்களிடம் இருக்கும் உபரிப் பொருட்களைத் தேவையுள்ளவர்கள் எடுத்துச் செல்லும் 'சமதர்மப் புரட்சி' - வாரிசு விரும்பி கண்டுபிடிப்பு.

6.விலைவாசி உயர்வு பற்றி:
"விலைவாசி உயர்ந்துவிட்டது என்று சொல்வது தவறு. இது மக்களின் வாங்கும் திறனைச் சோதிக்கும் 'பொருளாதார உடற்பயிற்சி'. விலை ஏறவில்லை, ரூபாயின் மதிப்பு 'யோகா' செய்கிறது - வெண்குடை வேந்தர் கண்டுபிடிப்பு.

7.மின்வெட்டு பற்றி:
"மின்சாரம் போய்விட்டது என்று சொல்லக் கூடாது. அது 'இருள் வழிபாட்டு நேரம்'. தொடர்ச்சியாக மின்சாரம் கொடுத்தால் கம்பிகள் சூடாகிவிடும் என்பதால், கம்பிகளுக்குக் கொடுக்கப்படும் 'சிறு ஓய்வு' - அவதூறு பரப்பாளர் கண்டுபிடிப்பு.

8.சாலைப் பள்ளங்கள் பற்றி:
"சாலையில் பள்ளம் இருக்கிறது என்று சொல்வது அவதூறு. அவை மழைநீரைச் சேமிக்க இயற்கை கொடுத்த 'மினி ஏரிகள்'. வாகன ஓட்டிகள் நிதானமாகச் செல்ல அரசு ஏற்படுத்திய 'இயற்கை வேகத்தடைகள்' - கரைவேட்டி கண்டுபிடிப்பு.

9.வேலைவாய்ப்பின்மை பற்றி:
"வேலையில்லா திண்டாட்டம் என்று சொல்லக் கூடாது. இளைஞர்கள் அனைவரும் 'சுயசிந்தனை நிபுணர்களாக' (Freelancers) மாறிவிட்டார்கள். வேலை தேடாதது சோம்பேறித்தனம் அல்ல, அது 'உழைப்பு சேமிப்புத் திட்டம்' - பவளவிழா பாப்பா கண்டுபிடிப்பு.

10.தேர்தல் வாக்குறுதிகள் பற்றி:
"வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சொல்லக் கூடாது. அவை 'காலாவதியாகாத கனவுகள்'. கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றினால் சுவாரஸ்யம் போய்விடும், அதனால்தான் அதை 'தவணை முறைத் திட்டமாக'மாற்றியுள்ளோம் - காப்பி அடித்து மாநாடு நடத்துவோர் சங்கம் கண்டுபிடிப்பு.
‪@sivaranjanip2995‬

12 hours ago | [YT] | 7

தமிழக வெற்றிக்கழகம்

ஒரு வாரத்தில் மட்டும் திமுக ஆட்சியின் இலட்சணம்!

🔸2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி.

🔸விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய திமுக கவுன்சிலர்.

🔸நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை ஒரே போல் அடுத்தடுத்து அரிவாள் வெ*ட்டு சம்பவங்கள்.

🔸நாமக்கல்லில் 7வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை.

🔸மானாமதுரை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல் மரணம்.

🔸சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் பிறப்புறுப்பிலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.

🔸கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொ*ன்றுவிட்டு அவரது 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை.

🔸சென்னை திரிசூலத்தில் இரட்டைக்கொலை.

இதில் மூன்று சம்பவங்களில் திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‪@sivaranjanip2995‬

1 day ago | [YT] | 15

தமிழக வெற்றிக்கழகம்

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
‪@sivaranjanip2995‬

2 days ago | [YT] | 11

தமிழக வெற்றிக்கழகம்

சமத்துவம், சமூக விடுதலை, சரிநிகர் உரிமை என தங்கள் தேவைகளுக்காக தாங்களே மாபெரும் வரலாற்றுப் போராட்டத்தை நடத்திய மகளிரின் சிறப்புகளை போற்றும் நாளாக உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு நிலை ஒழிய வேண்டும்; எல்லோருக்கும் எல்லாமுமான உலகம் உருவாக வேண்டும்; பெண்களின் உறுதியான பெண்ணுரிமை போராட்டங்களே அவற்றைச் சாத்தியப்படுத்தும்.

சாதி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு விதங்களில் பெண்களை அடிமைப்படுத்திய சமூகத்தை, தங்கள் சுதந்திர ஆற்றலால் வென்றெடுத்தார்கள் பெண்கள். இன்று, சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பேராளுமையாகச் சாதனைப் படைத்து வருகிறார்கள். இந்நிலையில், ஒரு பொறுப்புமிக்க அரசு மற்றும் சமூகத்தின் கடமை என்பது பெண்களின் வெற்றிக்குத் துணை நிற்பதாகும்.

பெண்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தடையாக இருக்கும் சமூகம், நியாயமான சமூகமாக இருக்க முடியாது. எனவே இனிவரும் காலத்தை, பெண்களின் கல்வி தொடங்கி, பொருளாதார சுதந்திரம், அரசியல் அதிகாரம் வரை அனைத்தையும் உறுதிப்படுத்தும் காலமாக வென்றெடுப்போம். சமத்துவ உரிமைக்காகக் களமாடும் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‪@sivaranjanip2995‬

3 days ago | [YT] | 3

தமிழக வெற்றிக்கழகம்

சமத்துவம், சமூக விடுதலை, சரிநிகர் உரிமை என தங்கள் தேவைகளுக்காக தாங்களே மாபெரும் வரலாற்றுப் போராட்டத்தை நடத்திய மகளிரின் சிறப்புகளை போற்றும் நாளாக உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு நிலை ஒழிய வேண்டும்; எல்லோருக்கும் எல்லாமுமான உலகம் உருவாக வேண்டும்; பெண்களின் உறுதியான பெண்ணுரிமை போராட்டங்களே அவற்றைச் சாத்தியப்படுத்தும்.

சாதி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு விதங்களில் பெண்களை அடிமைப்படுத்திய சமூகத்தை, தங்கள் சுதந்திர ஆற்றலால் வென்றெடுத்தார்கள் பெண்கள். இன்று, சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பேராளுமையாகச் சாதனைப் படைத்து வருகிறார்கள். இந்நிலையில், ஒரு பொறுப்புமிக்க அரசு மற்றும் சமூகத்தின் கடமை என்பது பெண்களின் வெற்றிக்குத் துணை நிற்பதாகும்.

பெண்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தடையாக இருக்கும் சமூகம், நியாயமான சமூகமாக இருக்க முடியாது. எனவே இனிவரும் காலத்தை, பெண்களின் கல்வி தொடங்கி, பொருளாதார சுதந்திரம், அரசியல் அதிகாரம் வரை அனைத்தையும் உறுதிப்படுத்தும் காலமாக வென்றெடுப்போம். சமத்துவ உரிமைக்காகக் களமாடும் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‪@sivaranjanip2995‬

3 days ago | [YT] | 3

தமிழக வெற்றிக்கழகம்

Selfie mode tvk thalapathy vijay 🇪🇦🔥

4 days ago | [YT] | 341