தமிழக வெற்றிக்கழகம்

வணக்கம் மக்களே,

இந்த சேனல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் Whatsapp Group ல் இருந்து தவெக பற்றிய தகவல்களை உடனுக்குடன் வழங்கும் ஒரு Channel.

இந்த சேனலை Subscribe செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் update தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த Channel -ல் வரும் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Subscribe செய்த.. செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி🙏

Support for super thanks 👍🙏




தமிழக வெற்றிக்கழகம்

சொறி நாயுடன் வெறி நாய்.! இந்த மாதிரி மட்டும் மானங்கெட்டு போய் வாழக் கூடாது 👌🤡

13 hours ago | [YT] | 16

தமிழக வெற்றிக்கழகம்

2026-27 திமுக ஆட்சியில் கிடுகிடுவென உயர்ந்த தமிழகத்தின் கடன் ₹10.71 லட்சம் கோடி
உனக்கு ஏன் தூக்கம் வராது???
‪@sivaranjanip2995‬

1 day ago | [YT] | 7

தமிழக வெற்றிக்கழகம்

நீதிமன்றத்திற்குள்ளேயே நீதிபதிக்குப் பாதுகாப்பில்லை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி சுதாகர் அவர்கள் மீது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, மிக முக்கியமான பொது இடமான நீதிமன்றத்திலேயே ஒரு நீதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒரு தனிநபர் நீதிமன்றத்திற்குள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதத்துடன் தடையின்றி நுழைந்தார் என்பதே, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. பொதுமக்களின் உரிமைகளைக் காத்து நீதியை நிலைநாட்டும் நீதித்துறைக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்பு பற்றி எண்ணவே அச்சமாக இருக்கிறது.

தலைமை இல்லாத காவல்துறையும், கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பு முறையும் குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத்தான் தரும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இந்த நிர்வாகத் தோல்விக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசு இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, நீதிமன்றங்களுக்கும் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். ஆனால், அதைச் செய்யுமா என்பது கேள்விக்குறியே! மக்கள் நிச்சயம் இந்தத் திறனற்ற அரசுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.
‪@sivaranjanip2995‬

2 days ago | [YT] | 4

தமிழக வெற்றிக்கழகம்

அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு"நல்ல சகுனம்" என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.

அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் "கொத்தடிமை ஊதுகுழலாக" மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் "கள்ளக்கூட்டணி" தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த "கள்ளக்கூட்டணி" மனநிலை அருவருக்கத்தக்கது.

ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள்.

அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாஞ்சில் சம்பத்
பரப்புரைச் செயலாளர்
தமிழக வெற்றிக் கழகம்
‪@sivaranjanip2995‬

2 days ago | [YT] | 2

தமிழக வெற்றிக்கழகம்

Pic of the DAY Actor vijay 🇪🇸🔥🔥‪@sivaranjanip2995‬

5 days ago | [YT] | 184

தமிழக வெற்றிக்கழகம்

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்

6 days ago | [YT] | 4

தமிழக வெற்றிக்கழகம்

அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும். ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி.

#TVKVijayHQ
‪@sivaranjanip2995‬

1 week ago | [YT] | 1