Deepa Senbagam Tamil Audio Novels

Deepa senbagam Tamil audio Novels
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல்
(செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்.)
வணக்கம் மக்களே, தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல், புதிய youtube தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இது தமிழ் நாவல்களுக்கான பிரத்தியேக சேனல்.
இதில் எழுத்தாளர் தீபா செண்பகத்தின் நாவல்கள் மட்டுமின்றி , சக எழுத்தாளர்களின் நாவல்களும் ஒலி, ஒளி வடிவம் பெற்று உங்கள் செவிகளையும் மனங்களையும் நிறைக்கும்.
வாசகர்களுக்கு தேக்கமின்றி தொடர்ந்து கதைகளை கொடுக்க சில எழுத்தாளர்களோடு கை கோர்த்து உள்ளோம். முதற்கட்டமாக கை கோர்த்துள்ள எழுத்தாளர்கள்
தீபா செண்பகம்
நந்தினி சுகுமாரன்
தீபாஸ்
ப்ரதிஷாமணி.
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல் சேனலில்
உறவு, பிரிவு, ஊடல் , கூடல் கொண்ட காதல் கதைகள்
நேசம், பாசம், நட்பு, பகை கலந்த செண்டிமெண்ட் குடும்ப கதைகள்
மண் மணம் மாறாத மதுரை, கொங்கு வட்டார மொழி கதைகள்
ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த அதிரடி கதைகள்.
கேட்டு மகிழலாம்.

#tamilaudionovels #tamilnovelsaudiobooks #ramanichandrantamilnovelsaudio #ramanichandrannovels
#deepasenbagamtamilaudionovels


Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/7UGWukfytw4

அன்பும், நம்பிக்கையும், தியாகமும், தவறான புரிதல்களையும் தாண்டி ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் இரு இதயங்களின் அழகான காதல் பயணமே "அதிரூபனின் புவனம் அவள்". சோதனைகள் பல வந்தாலும் காதல் தோற்கவில்லை என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் இந்த நிறைவுப் பகுதி, மனதை நெகிழச் செய்யும் குடும்ப பாசம், உறவுகளின் அருமை, மற்றும் காதலின் வெற்றியை இனிமையாக நிறைவு செய்கிறது.

1 week ago | [YT] | 109

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/ZFSPf_wtny8

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அதிரூபன் மற்றும் எளிமையான, திறமையான கல்லூரி மாணவி புவனா ஒரு கலாச்சார நிகழ்வில் சந்திக்கிறார்கள். முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் கொள்ளும் அதிரூபன், அவளை மீண்டும் சந்திக்க அதே கல்லூரியில் சேர்கிறான்; ஆனால் புவனாவின் வாழ்க்கையில் குடும்பப் பொறுப்புகளும் எதிர்பாராத சூழ்நிலைகளும் புதிய திருப்பங்களை உருவாக்குகின்றன. காதல், குடும்பம், உணர்வுகள் மற்றும் விதி இணையும் இந்த அழகான பயணமே "அதிரூபனின் புவனம் அவள்!! – பாகம் 1

அன்புடன்,
தீபா செண்பகம்.

1 week ago | [YT] | 115

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/XNgk-aR2YUg
தீபா செண்பகமின், "மங்கை மான் விழியாள்" RJ சுஜா குரலில்...
நேற்று, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கிளம்பும் நேரம் அவசரமாக வந்து வண்டி கிளம்பும் நேரம் ஜஸ்ட் மிஸ் என்பது போல் வண்டியில் ஏற , அவள் லக்கேஜை தூக்கி உள்ளே வர உதவி செய்தவன் அவன் தான். யாரோ என நன்றி நவில வாய் திறந்தவள், “தாங்க்ஸ் எல்லாம் வேணாம், இது கடமை மானு” என இளித்ததில், அப்படியே ரயிலிலிருந்து குதித்து விடலாம் போல் இருந்தது. ஆனாலும், இவனுக்காக எதுக்கு நம்ம குதிக்கனும்? என்ற சிலுப்பலோடு , இருக்கை எண் தேடி சைட் லோயரில் சென்று அமர்ந்தாள்.

இருக்கை உறுதியாகி, இன்னும் படுக்கை கிடைக்காமல் இருக்க, எதிர் சீட்டில் வந்து அமர்ந்தவனும் சாட்சாத் வழுதி தான். அரண்மனைகார வீட்டு தாத்தாவின் பேரன். அவள் அண்ணனின் நண்பன்.

“இங்க எதுக்கு வந்து உட்கார்ந்து இருக்க?” இவள் நெற்றிக்கண்ணை திறக்க,

இவள் கேள்விக்கு பதிலாக “ரொம்ப தாங்க்ஸ் சார், சின்ன பிள்ளையை வச்சுக்குட்டு நைட் பூரா எப்படி உட்கார்ந்துட்டு வர போறோம்னு பயந்தேன், உங்க சீட்டை எனக்கு கொடுத்து, ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கீங்க” என கை பிள்ளையோடு , எதிர் இருக்கை லோயர் பெர்த்தில் இருந்த பெண்மணி நன்றி தெரிவித்தார்.


அன்புடன்,
தீபா செண்பகம்.

2 months ago | [YT] | 34

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/GWMwVMxKvp0
தீபா செண்பகம் எழுதிய "அன்பென்ற மழையிலே
RJ சுபீதா கண்ணனின் குரலில்...
ஃபீல் குட் ஸ்டோரி வகையில் இப்படைப்பு அமைந்திருந்தது. கதை மாந்தர்கள் மண் மனம் உடையோர்களாக இருந்தாலும் தாலி சென்டிமெண்டில் சிக்காமல் பகுத்தரிந்து செயல்படுபவர்களாக உலவவிட்டுள்ளார் ஆசிரியர். எழில, அன்புக்கும் இடையேயுள்ள நேசம் எவ்வகை என்பதற்கு ‘அக்கறையும் காதலும் ஒட்டிப் பிறந்த ரெட்டை பிள்ளைகள்’ தானென ஆசிரியர் அவரின் பாணியில் நேர்த்தியாய் அழகாய் கதையோட்டத்தில் கொடுத்திருக்கிறார்.

5 months ago | [YT] | 37

Deepa Senbagam Tamil Audio Novels

இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் நட்புக்களே

6 months ago | [YT] | 31

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/IGazo1FZR9A
தீபா செண்பகமின், "துள்ளி குதிக்குது நெஞ்சம்" RJ சுபீதா கண்ணன் குரலில் கேட்டு மகிழுங்கள்.

8 months ago | [YT] | 57

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/5fAdJzMBcyc
தீபா செண்பகமின், "மனசு தடுமாறும்" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
மனசு தடுமாறும்:
கிராமத்தில் வாழும் சேகரன் குடும்பத்தில் மூத்தவர்களுக்கு வாரிசு இல்லை. இளைய மகன் சந்திரனுக்கு மூத்த மருமகள் பாலாவின் தங்கை சங்கரியை மணம் முடிக்க, திருமணமான சில மாதங்களில் அவனும் விபத்தில் இறந்து விடுகிறான்.

சங்கரி வயிற்றில் வளரும் குடும்ப வாரிசு மட்டுமே சேகரன் குடும்பத்து நம்பிக்கை, அதற்கும் ஆபத்தாக கருவோடு சங்கரிக்கு மன பயமும் வளர தாய், சேய் உடல் நிலையை பாதிக்கிறது. அவர்களுக்கு மனரீதியான பாதுகாப்பை தரவும், குடும்பத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் , பாலா துணிந்து தன் தங்கையை , கணவனுக்கே மறுமணம் செய்து வைக்கும் முடிவை எடுக்கிறாள்.

ஏக பத்தினி விரதம் பூண்ட சுந்தரனும் , அக்காவுக்காக எதையும் செய்ய துணியும் சங்கரியும் அதை ஏற்றனரா, சேகரன் குடும்பத்துக்கு வாரிசு கிடைத்ததா, என்பதை உணர்பூர்வமாக சொல்லும் கதை.

அன்புடன்,
தீபா செண்பகம்.

To read in kindle: amzn.in/d/hGF4Adg

9 months ago | [YT] | 42

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/DP7v3Pu2Fvk
தீபா செண்பகமின், "ஹாசினி சந்திரா" RJ தாரணி கவிவர்மாவின் குரலில்...

9 months ago | [YT] | 25

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/b7uw_apEZYU
தீபா செண்பகமின், "நீ தான் என் சோட்டுக்காரி" RJ சுபீதா கண்ணனின் குரலில்...

9 months ago | [YT] | 39

Deepa Senbagam Tamil Audio Novels

https://youtu.be/b7uw_apEZYU
தீபா செண்பகமின், "நீ தான் என் சோட்டுக்காரி" RJ சுபீதா கண்ணனின் குரலில்...

9 months ago | [YT] | 42