TNTV இயற்கையுண்மை Natural Truth

TNTV International News Network மூத்த பத்திரிகை ஊடகவியலாளர் வளர்மெய்யறிவான் @ விஷ்வா விசுவநாத் அவர்களால் வழிநடத்தப்படும் சுயாதீன தமிழ் ஊடகக் குழுமம்.

+ தமிழ் ஊடகம் வார இதழ் : PRGI Reg.No.: TNTAM/25/A1239

+ தமிழ் ஊடகம் இணைய இதழ் : tamiloodagam.நெட்

+ TNTV தமிழ் ஊடகம் YouTube சேனல் : youtube.com/@TNTVTamilOodagam
+ செய்திகள் : youtube.com/@TNTVNewsTamil
+ வள்ளலார் காணொலி : youtube.com/@tntvIyarkaiUnmai
Social Media : Facebook: www.facebook.com/TNTVNewsTamil,
X (முன்னாள் Twitter): x.com/TNTVNewsTamil
Instagram: www.instagram.com/tntvtamiloodagam

சுயாதீன தமிழ் ஊடகவியலை ஆதரியுங்கள்.
Bank account Name : TAMIL OODAGAM, Current Account Number: 120036757925
Bank : Canara Bank, Edayarpalayam Branch, Coimbatore. IFSC Code: CNRB0005634, SWIFT code : CNRBINBBXXX
UPI / Google Pay / PayTM / PhonePe Numbers 8012271745 and 9487085277, Name : Viswanaath.T.M.
+Email : tntvnetwork@gmail.com and editor.tamiloodagam@gmail.com


TNTV இயற்கையுண்மை Natural Truth

வள்ளலார் குறித்த பெரியாரிஸ்டுகளின் புரட்டுக் கதைகள்

தமிழர் பேரறிவாளர் திருவருட்பிரகாச வள்ளலாரின் பெருமைகளை சிறுமைப் படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படும் பொய்ப் பரப்புரைகள்.

வீ அரசு
கருணானானந்தன்
செந்தலை கவுதமன்
வாலாசா வல்லவன்

ஆகியோர் வே. ஆனைமுத்துலின் உருட்டலையே மீண்டும் மீண்டும் உருட்டுகின்றனர்.

Periyarist's false propaganda about Vallalar

#tntvtamil
#valarmeyyarivaan
#vishwaa
#viswanaath
#vallalar

2 years ago | [YT] | 1

TNTV இயற்கையுண்மை Natural Truth

தலை கீழாகக் கவிழ்ந்ததா தலைமைப் பொய்ச் சங்கம் ?

சங்கத்தின் நிறுவனர் படப்பை பாலகிருஷ்ணன் விலகல்

திருவண்ணாமலை சாது ஜெயராமன் சங்கம் விலகல்

சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மனோகரன் விலகல்

சங்கத்தின் கவுரவ ஆலோசகர் ஜெயராஜ மூர்த்தி விலகல்

சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் பார்வதிபுரம் பார்த்திபன் விலகல்

32 மாவட்ட சங்கங்களுக்கும் கடிதங்கள் முழுமையாக அனுப்பப்படவில்லை

32 மாவட்ட சங்கங்களின் முழு ஆதரவும் இல்லை

இந்த நிலையில் இதுதான் ஒட்டு மொத்த சன்மார்க்க சங்கங்களின் இராஜாங்கப் பிரதிநிதியா ?

யார் பொய்யர்கள் ?

நன்கொடை என்பது பிச்சை அல்ல

நன்கொடை பெற்றதற்காக வள்ளலாரின் பெருவெளித் தலத்தை அடகு வைப்பதும் விற்பதுமா சன்மார்க்கம் ?

சன்மார்க்க சங்கத்தவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம்.

#vallalar
#vic
#tntvtamil
#tntviyarkaiunmai

2 years ago | [YT] | 3

TNTV இயற்கையுண்மை Natural Truth

திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலாரின் மறைவு குறித்து பரப்பப்படும் வதந்திகள்.

வள்ளல் பெருமான் அடைந்த நிலை.

பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட விசாணையும் நிறைவு அறிக்கையும்.....

விரிவான விளக்கமான தகவல்களுடன் ஊடகர் தாமரைச் செல்வனுக்கு ஆதன் தமிழ் ஊடகத்திற்காக வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் அளித்த நேர்காணல்.


https://youtu.be/XCI5khiiOG0?si=KhWim...

2 years ago | [YT] | 2

TNTV இயற்கையுண்மை Natural Truth

திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் மறைவு குறித்த ஐந்தாம் பொய்யர்கள் சங்கத்தின் தொடரும் புரட்டு உருட்டுகள்

Aintham "Liers" Sangam's false propaganda about Thiruvarutprakasa Ramalinga Vallalar.

திட்டமிட்டு வேண்டுமென்றே பெருமானாரின் மறைவு குறித்த ஆதாரமற்ற குறிப்புகள், நூல், திகில் சினிமா, பேய்க் கதைகளை வைத்து செய்யப்படும் பொய்ப் பரப்புரைகளுக்குக் கடும் கண்டனங்கள்.

#vallalar
#tntvtamil

2 years ago (edited) | [YT] | 0

TNTV இயற்கையுண்மை Natural Truth

வடலூர் பெருவெளித் தலத்தைப் பாதுகாக்க பார்வதிபுரம் மக்களின் அதிரடியான போராட்டங்கள், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டிய அடுத்தடுத்த போராட்டங்கள் மற்றும் பாமக, வள்ளலார் பணியகம் ஆகிய கட்சி / அமைப்புகளின் போராட்டங்கள் ஆகியவற்றால் அதிர்ந்து போன இந்து சமய அறநிலையத் துறை, கடலூர் மாவட்ட ஆட்சித்துறை, காவல் துறையினர் ஆகியோர் ஐந்து மாதங்கள் கழித்து 24 / 4 / 24 அன்று வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நாளுக்கு முதல் நாள் அவசர அவசரமாக ஒரு விளக்கக் கூட்டத்திற்கு 23 / 4 / 24 அன்று வடலூரில் ஏற்பாடு செய்தனர்.

வடலூரில் அதிகாரிகள் கூட்டிய திடீர் கூட்டம்

சன்மார்க்கர்களுக்கு இனி ஆதரவில்லை என மக்கள் முடிவு

எனும் தலைப்பிலான இக்காணொளியில் கூட்டத்தின் விவரங்கள் பற்றி விரிவாக அலைபேசி வழி செவ்வி அளித்திருக்கிறார் பார்வதிபுரம் பார்த்திபன் அவர்கள்.

முழுதும் கேளுங்கள்.

2 years ago | [YT] | 2

TNTV இயற்கையுண்மை Natural Truth

தேர்தல் புறக்கணிப்பு | சமாதானம் செய்த அதிகாரிகள் | அதிரடி கோரிக்கைகள் வைத்த பார்வதிபுரம் மக்கள்

2 years ago | [YT] | 8

TNTV இயற்கையுண்மை Natural Truth

ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் நாகரிக வாழ்வை எட்டிப் பிடிப்பதற்கு முன்பே நரை, மூப்பு, பிணி, சாவு ஆகிய நான்கையும் தவிர்ப்பது எப்படி என்று ஆய்ந்து தீர்வு கண்டவர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகளான் தமிழ் சித்தர்கள்.

நரை என்றால் முடி நரைப்பது
மூப்பு என்றால் வயதாவது
பிணி என்றால் நோய்
சாவு என்றால் இறத்தல்.

இதற்குத் தீர்வு கண்ட சித்தர் பெருமக்கள் இதற்கான வழிமுறைகளை மறைபொருளாக, பரிபாசையில் எழுதி வைத்தனர்.

கடந்த 19 ம் நூற்றாண்டில் தோன்றிய திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் இதற்கான வழி முறைகளை எளிமைப் படுத்தி எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தினார்.

இப்படிப்பட்ட தமிழர் பேரறிவின் தந்தையான, தாயான, குருவான, அடையாளமாக விளங்கும் வள்ளலார் மறைவு குறித்து வதந்தி பரப்புபவர்கள் யார் யார் என்று ஆய்ந்து பார்த்ததில் இவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருப்பதை உணர முடிந்தது.

இதுவரை யாரும் வெளிப்படையாகப் பேசாத உண்மைகளை உடைத்துப் பரிமாறி இருக்கிறோம் இந்தக் காணொளியில் .

முழுதும் பொறுமையாகக் கேளுங்கள்.

TNTV தமிழ் ஊடகம்
TNTV Tamil Oodagam
TNTV இயற்கையுண்மை
TNTV Natural Truth

The speakers who spread rumour about #vallalar

2 years ago | [YT] | 1

TNTV இயற்கையுண்மை Natural Truth

உலகப் புகழ் பெறும் சாகாக் கலை தந்த சாவை வென்ற பெருஞ்சித்தர் வள்ளலார்

பொறாமை, விரக்தியில் மன நோயாளிகளான ஐந்தாம் தமிழர் சங்கத்தினர்.

Aintham Thamilar Sangam

2 years ago | [YT] | 0

TNTV இயற்கையுண்மை Natural Truth

உடனடியாக மன நல சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் ஐந்தாம் தமிழர் சங்கக் கூட்டத்தினரே. ஏற்கனவே முற்றி விட்டது.

ஐந்தாம் தமிழர் சங்கம் எனும் பெயரில் ஒரு பிராமணியத் திராவிடப் பித்து விலகாது இருக்கும் ஒரு கூட்டம் தமிழர் சங்கம் எனும் பெயரில் தமிழர் மெய்யியலைத் திட்டமிட்டு சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 150 ஆண்டுகளாக இந்த சிறு பிள்ளை பிச்சுப் பிள்ளைக் கூட்டம் போல பல கூட்டத்தினர் தமிழர் மெய்யியலை குறிப்பாக திரு அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் அவர்களின் சாகாக் கல்வி குறித்து பரப்பிய அவதூறுகள் தவிடு பொடியாகியிருக்கின்றன.

இராமலிங்கப் பெருமானாரின் திருஅருட்பாவை மருட்பா என்று ஏழு ஆண்டுகள் தொடர்ந்து அவதூறு பரப்பிய ஒரு கூட்டம் இருந்த இடம் தெரியாது போனது.

அறிவாளிகள் போல மேடைகளில், புத்தக எழுத்துகள் வாயிலாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள்கூட இராமலிங்க வள்ளல் பெருமானாரின் சாகாக் கலை, சாகாக் கல்வியைப் பற்றிய அறிதலும், புரிதலும், உணர்தலும் இன்றி சறுக்கித் தலை குப்புற விழுந்து விடுகின்றனர்.

முடை நாக்கு நாத்திகர்கள் இராமலிங்கரின் சாதி, மத, உருவ வழிபாடு எதிர்ப்பை மட்டும் எடுத்துக் கொண்டு நின்ற இடத்திலேயே ஆண்டுக்கணக்கில் ஓடுவது போல பாவனை செய்து ஏமாந்து கொள்கின்றனர்.

மத, சமயவாதிகள் இராமலிங்கப் பெருமானாரை சமய, மதக் கூட்டுக்குள் அடைக்கப் பார்த்து தோல்வி அடைகின்றனர்.

இவர்களுக்கு இடையில் தமிழர் பேரறிவாளர்களை மட்டம் தட்டி இருட்டடிப்பு செய்திட ஒரு திருட்டுக் கூட்டம் செயல்படுகிறது.

இந்தக் கூட்டம் தமிழர்களின் இலக்கிய ஆவணங்களில் ஒன்றும் இல்லை, தமிழர்கள் குறிப்பாக பேரறிவாளர்களான சித்தர்கள் தொடங்கி திருஅருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் வரை பிராமணர்களால் கொல்லப்பட்டு விட்டதாகக் கதை கட்டி தமிழர் பேராளுமைகளை சிறுமைப் படுத்துவது என இழி செயலை மனம் கூசாமல் செய்கிறது.

இவர்களிடம் சான்று, ஆதாரம் கேட்டுப் பாருங்கள், நேர்மையற்ற இவர்களால் எந்த உறுதியான சான்றுகளோ அல்லது அறிவால் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் தர்க்கத்தைக் கூட முன் வைக்க முடியாது.

பொய், புரட்டு, கற்பனை, திரிப்பு, அவதூறு என்பது மட்டுமே இவர்களின் "சான்றுகள் ".

இத்தகைய பித்தலாட்டக்காரர்களையும் கடந்து திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் அருட் சித்தியடைந்து 150 ஆண்டுகள் கழித்தும் ஊடகங்களில் அன்றாடம் பேசப்படுகிறார், விவாதிக்கப் படுகிறார், சத் விசாரம் செய்யப்படுகிறார் என்பதைக் கண்டு பொறாமையால் உணர்ச்சி வசப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசி அற்பத் தன்னின்பம் அடைந்து கொள்கின்றனர் இந்தப் பிச்சுப் பிள்ளைக் கூட்டத்தினர்.

தமிழர் மெய்யியலை சிதைத்து அழித்துவிடத் துடித்தவர்கள் சிதைந்து அழிந்து போனதுதான் வரலாறு, புவியியல், அறிவியல் எல்லாம்.

திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் குறித்துத் திட்டமிட்டு அவதூறு பரப்பும் ஐந்தாம் தமிழர் சங்கம் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமான் அவர்களுக்கு விரைவில் இயற்கையுண்யை உணர்த்துவார்.

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், MA Philosophy and Religion
பத்திரிகை - ஊடகவியலாளர்
நிறுவனர் - தமிழியல் நடுவம்
நிறுவனர் - இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை RVIRF

13/04/2024, சென்னை

2 years ago | [YT] | 1

TNTV இயற்கையுண்மை Natural Truth

இராமலிங்க வள்ளலாரின் சாகாக் கல்வியை அவதூறு பரப்பி சிதைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கம்

தமிழர் பேரறிவைத் திறன்களை மட்டம் தட்டி அழிக்கும் திட்டமிட்ட துரோகச் செயல் - இனவழிப்பு

சினிமா - டிராமா - சீரியல் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதா ?

வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி வாந்தி எடுப்பதா ?

வெற்று விளம்பரத்திற்கு இவ்வளவு இழி செயலில் இறங்குவதா ?

கடும் கண்டனம்.

@aintham tamilar sangam

2 years ago | [YT] | 4