Muthucharamm - முத்துச்சரம்

பாடல்கள்- சொந்த (இயல், இசை) பதிவாக இருந்தால் உரிமையாளரின் அனுமதியோடு
இங்கே தரப்படுகிறது.

பல பழைய பாடல்கள் மறுபதிவு செய்யப்பட்டுள்ளதால் உரிமையாளர்களை கண்டறியவோ அல்லது தொடர்பு கொள்ளவோ இயலவில்லை.

இசை - மனிதர் வாழும் நாடு, பேசும் மொழி, இனம், கலாச்சாரம் என எல்லாம் கடந்து நம்மை இறைவனோடு ஒன்றிக்கச் செய்யும் உன்னத கலை.

"தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக்கருவிகளோடு, யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தனர்" என்று நாம் (2சாமுவேல் 6:5)ல் வாசிக்கிறோம்.

அருள் வாழ்வில் வளர திருஇசை இன்றியமையாதது. இறைவனோடு ஒன்றிக்க பாடல்கள் ஒர் அற்புதமான கருவி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பக்திப் பாடல்களை நாம் பாடுவதன் மூலம் இறைவனைப் புகழ்ந்து அவரில் ஒன்றிக்கவும், மன்றாடவும், மகிழ்ந்திருக்கவும், அருள் வாழ்வில் நாம் நிலைத்து நிற்கவும் வழிசெய்கிறது.

வழிபாட்டில் பொருளுணர்ந்து பங்கேற்க, பாடல்களைக் கேட்டால் மட்டும் போதாது. மாறாக இணைந்து பாடுவதன் மூலம் நாம் இறையனுபவத்தைப் பெறமுடியும்.