பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செம்பியம் காவல் நிலையத்தினர் நியாயமாக விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டி, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும், BSP மாநில பொது செயலாளருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த சகோதரர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொலையில் தொடர்புடைய 'சம்போ' செந்தில் மற்றும் 'மொட்டை' கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை எடுக்கவில்லை என்பதால், விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
News Dappa
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செம்பியம் காவல் நிலையத்தினர் நியாயமாக விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டி, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும், BSP மாநில பொது செயலாளருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த சகோதரர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொலையில் தொடர்புடைய 'சம்போ' செந்தில் மற்றும் 'மொட்டை' கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை எடுக்கவில்லை என்பதால், விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
#ஆர்ம்ஸ்ட்ராங் #Armstrong #bsp #highcourt
5 months ago | [YT] | 1